என் மலர்

    நீங்கள் தேடியது "தேர்வு"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தேசிய ஜிம்னாஸ்டிக் போட்டிக்கு சி.இ.ஓ.ஏ. பள்ளி மாணவி தேர்வு செய்யப்பட்டார்.
    • இதற்கான தேர்வு மதுரையில் நடைபெற்றது.

    மதுரை

    இந்திய பள்ளிகள் விளை யாட்டு குழுமத்தின் சார்பில் (எஸ்.ஜி.எப்.ஐ.) சார்பில் தேசிய அளவிலான ஜிம் னாஸ்டிக் போட்டிகள் நடக் கிறது. இதற்கான தேர்வு மதுரையில் நடைபெற்றது. இதில் கோசாகுளம் சி.இ. ஓ.ஏ. பள்ளி மாணவி பவஸ்ரீ தனது திறமையை வெளிப்ப டுத்தி தேசிய போட்டிக்கு தமிழக அணிக்காக தேர்வு ஆனார்.

    இதன் மூலம் அவர் நவம்பர் 3-ந்தேதி டெல்லி யில் நடக்கும் தேசிய போட் டியில் பங்கேற்க உள்ளார். தேசிய போட்டிக்கு தேர் வான மாணவியை, சி.இ. ஓ.ஏ. கல்வி குழும நிறுவன தலைவர் ராசா கிளைமாக்சு, தலைவர் சாமி, துணைத்த லைவர் ஜெயச்சந்திர பாண்டி, அசோகராஜ், முதன்மை தலைவர் கவுரி, மற்றும் உடல் கல்வி இயக்கு னர் செல்ல முருகன் ஆகி யோர் பாராட்டி வாழ்த்தி னர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • வருகிற 3-ந்தேதி மாலை 4 மணிக்கு நடைபெறுகிறது.
    • இதில் பங்குபெற விரும்பும் விளையாட்டு வீரர்கள் ஆதார் அட்டையுடன் கலந்துகொள்ள வேண்டும்.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்ட கால்பந்து சங்க செயலாளர் குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- கன்னியாகுமரி மாவட்டத்தில் 20 வயதுக்குட்பட்ட இளையோர் கால்பந்து அணிக்கான விளையாட்டு வீரர்கள் தேர்வு நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கத்தில் வைத்து வருகிற 3-ந்தேதி மாலை 4 மணிக்கு நடைபெறுகிறது.

    இதில் பங்குபெற விரும்பும் விளையாட்டு வீரர்கள் ஆதார் அட்டையுடன் கலந்துகொள்ள வேண்டும். அடுத்த மாதம் (அக்டோபர்) 11-ந் தேதி முதல் 15ந் தேதி வரை தஞ்சாவூர் மாவட்டத்தில் தமிழ்நாடு கால்பந்து கழகம் நடத்தும் மாவட்டங்களுக்கு இடையேயான போட்டிகள் நடைபெற உள்ளது. தேர்வு செய்யப்பட்ட குமரி மாவட்ட கால்பந்து விளையாட்டு வீரர்கள் இந்த போட்டியில் பங்கு பெறுவார்கள். விளையாட்டு வீரர்களுக்கான தேர்வு குமரி மாவட்ட கால்பந்து கழக பொருளாளர் ஆனந்த் ஏ.வில்சன் தலைமையில் நடைபெறுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • அரியலூர் மாவட்டஊர்க்காவல் படைக்கு ஆள்தேர்வு
    • 28 காலி பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெற உள்ளது.

    அரியலூர், 

    அரியலூர் மாவட்ட ஊர்க்காவல் படையில் பணிப்புரிய தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள செய்தி குறிப்பில், ஊர்க்காவல் படையில் காலியாக உள்ள 27 ஆண்கள், 1 பெண் என மொத்தம் 28 காலி பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெற உள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் வரும் 28,29,30 ஆகிய தேதிகளில் காலை 10 முதல் மாலை 4 மணி வரை அரியலூர் மாவட்ட ஊர்க்காவல் படை அலுவலகத்தில் வழங்கப்படுகிறது. இதற்கான தேர்வு அக்டோபர் 6, 7 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. ஊர்க்காவல் படையில் சேர விருப்பம் உள்ளவர்கள் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் அல்லது தேர்ச்சி பெறாதவர்களாக இருக்கலாம். தேர்வு நடைபெறும் நாள்களில் 20 வயது நிறைந்தவராகவும், 45 வயது நிறைவ டையாதவராகவும், உடல் ஆரோக்கியமாகவும் இருக்க வேண்டும். கல்விச்சான்றிதழ், சாதி சான்றிதழ், ஆதார் அட்டை ஆகியவற்றின் அசல் மற்றும் நகல்களை எடுத்து வர வேண்டும். தற்போது எடுக்கப்பட்ட பாஸ்போர்ட் அளவு புகைப்படம்-2 எடுத்து வர வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • அரியலூர் ஆதிதிராவிடர் நலப் பள்ளிகளில் காலியாக உள்ள இடைநிலை ஆசிரியர் பணிக்கு ஆள் தேர்வு
    • விண்ணப்பிக்க கலெக்டர் ஆனிமேரி சொர்ணா அழைப்பு

    அரியலூர்,  

    அரியலூர் மாவட்ட ஆதிதிராவிடர் நல பள்ளிகளில் காலியாக உள்ள இடைநிலை ஆசிரியர் பணிக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் ஜா.ஆனிமேரி ஸ்வர்ணா அறிவித்து உள்ளார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ரூ.12 ஆயிரம் ஊதியத்தில் தற்காலிகமாக பள்ளி மேலான்மைக்குழுவின் மூலம் நிரப்படவுள்ள மேற்கண்ட பணியிடத்துக்கு கீழ்காணும் தகுதிகளை பெற்றிருக்க வேண்டும். இடைநிலை ஆசிரியர்கள் வரையறுக்கப்பட்ட கல்வி தகுதிகளுடன் ஆசிரியர் தகுதி தேர்விலும் தேர்ச்சி பெற்று இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தில் தன்னார்வலராக பணிபுரிந்து வருபவர்கள் (இல்லையெனில்). வரையறுக்கப்பட்ட கல்வி தகுதிகளுடன் ஆசிரியர் தகுதி தேர்விலும் தேர்ச்சி, இடைநிலை ஆசிரியர் நியமனத்தில் பட்டியலினத்தவர்களுக்கு முன்னுரிமை. பள்ளி அமைந்துள்ள பகுதி மற்றும் அதன் அருகில் உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

    கீழ்காணும் பகுதியிலுள்ள அரசு ஆரம்ப தொடக்கப் பள்ளிகளில் காலிப்பணியிட விவரம்:

    தா.பழூர்-1, மணக்கால்-2, விளந்தை-1, ஜெயங்கொண்டம்-1, த.கீழவெளி-1, இளையபெருமாள் நல்லூர்-2, வடவீக்கம்-1, வெத்தியார்வெட்டு-2, பாப்பாகுடி-1, கங்கை கொண்டசோழபுரம்-1, கொல்லாபுரம்-1, இளந்தைக்கூடம்-1, தூத்தூர்-1, கீழகொளத்தூர்-1, பூவாணிப்பட்டு-2.

    தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் காலிப்பணியிட விவரம்: இலைக்கடம்பூர்-1, ஜெயங்கொண்டம்-1, வடவீக்கம்-1. விண்ணப்பங்கள் அரியலூர் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில்

    நேரடியாகவோ அல்லது பதிவஞ்சல் மூலமாகவோ 29.9.2023 மாலை 5 மணிக்குள் ஒப்படைக்கலாம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கட்சி நிர்வாகிகளை சந்தித்து பொன்னாடை அணிவித்து வாழ்த்து பெற்றார்
    • மாநில விளையாட்டு மேம்பாட்டு அணி துணைசெயலாளரும், நகரமன்ற துணைத் தலைவருமான வாஷிம்ராஜாவை சந்தித்தார்.

    அருவங்காடு,

    நீலகிரி மாவட்ட தி.மு.க மகளிர் அணி துணை அமைப்பாளராக பிரபாவதி தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார். இந்த நிலையில் அவர் குன்னூர் நகரசெயலாளர் ராமசாமி, மாநில சிறுபான்மை பிரிவு துணைசெயலாளர் அன்வர்கான், மாநில விளையாட்டு மேம்பாட்டு அணி துணைசெயலாளரும், நகரமன்ற துணைத் தலைவருமான வாஷிம்ராஜா, பொதுக்குழு உறுப்பினர் சதக்கத்துல்லா மற்றும் நகரமன்ற தலைவர் சீலாகேத்ரின், நகர அவைதலைவர் தாஸ் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகளை சந்தித்து பொன்னாடை அணிவித்து வாழ்த்து பெற்றார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தேர்வுக்கான வினாத்தாள்கள், லீக் ஆகாமல் இருக்க, உரிய பாதுகாப்பு மேற்கொள்ள முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
    • பள்ளிகளில், தொடர்ச்சியாக ஒருவாரம் விடுப்பு எடுக்கும் மாணவர்களின் நிலையை அறிய, ஆசிரியர்கள் நேரடியாக அவர்களின் குடியிருப்புகளுக்கே சென்று விசாரிக்கின்றனர்.

    திருப்பூர்:

    பொது வினாத்தாள் பாணியில் காலாண்டு தேர்வு நடப்பதால், அனைத்து மாணவர்களையும் கட்டாயம் தேர்வெழுத வைக்க வேண்டுமென, தலைமையாசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் 6 முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு வருகிற 19-ந் தேதி முதல் 27-ந்தேதி வரை காலாண்டு தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இயக்குனரகத்தில் இருந்து வினாத்தாள் தயாரித்து, அந்தந்த மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.இதை நகலெடுத்து பள்ளிகளுக்கு அனுப்பி தேர்வு நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. தேர்வுக்கான வினாத்தாள்கள், லீக் ஆகாமல் இருக்க, உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ள முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இத்தேர்வில் மாணவர்கள் பெறும் மதிப்பெண்களை, எமிஸ் இணையதளத்தில் பதிவேற்ற வேண்டும். கொரோனா தொற்றுக்கு பின், கடந்த கல்வியாண்டு முழுமையாக நடந்ததால், மாணவர்களின் கற்றல் திறன் அறிய முடிவு செய்யப்பட்டுள்ளது.

    எனவே இத்தேர்வுக்கு அனைத்து மாணவர்களும் கட்டாயம் பங்கேற்க செய்ய வேண்டுமென, பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.இது குறித்து அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் சிலர் கூறியதாவது:-

    பள்ளிகளில், தொடர்ச்சியாக ஒருவாரம் விடுப்பு எடுக்கும் மாணவர்களின் நிலையை அறிய, ஆசிரியர்கள் நேரடியாக அவர்களின் குடியிருப்புகளுக்கே சென்று விசாரிக்கின்றனர்.

    தற்போது தொடர் விடுப்பு எடுப்போர் எண்ணிக்கை, கணிசமாக குறைந்துள்ளது. இருப்பினும் காலாண்டு தேர்வில், 100 சதவீத வருகைப்பதிவுக்கு உறுதி செய்யுமாறு, தலைமையாசிரியர்களுக்கு சமீபத்தில் நடந்த கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இத்தேர்வுக்கு பின் கல்வியில் பின்தங்கிய மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சிகள் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • விநாயகர் சதுர்த்தி விழா நாளை மறுநாள் (18-ந் தேதி) கொண்டாடப்படுகிறது.
    • விநாயகர் சிலைகளை மாசுகட்டுப்பாட்டு வாரியத்தின் விதிமுறைகளுக்கு உட்பட்டு விசர்ஜனம் செய்ய வேண்டும்.

    கோவை,

    விநாயகர் சதுர்த்தி விழா நாளை மறுநாள் (18-ந் தேதி) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பிரதிஷ்டை செய்யப்படும் விநாயகர் சிலைகளை கரைக்க 16 இடங்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளது.

    இதுகுறித்து கோவை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கோவையில் விநாயகர் சிலைகளை வைக்க உரிய அதிகாரிகளிடம் முன்அனுமதி பெறவேண்டும். அதன்பிறகு தான் சம்பந்தப்பட்ட இடங்களில் சிலைகளை வைக்க வேண்டும். சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்களை கொண்டு உருவாக்கப்படும் விநாயகர் சிலைகளை கரைப்பதற்காக, கோவையில் 16 இடங்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளன.

    அதன்படி முத்தண்ணன்குளம், பவானி ஆறு (சிறுமுகை, எலகம்பாளையம், மேட்டுப்பாளையம் சுப்ரமணியர் கோவில் மற்றும் தேக்கம்பட்டி), அம்பராம்பாளையம் ஆறு, நொய்யல் ஆறு, உப்பாறு, நடுமலை ஆறு, ஆனைமலை முக்கோணம் ஆறு, சிறுமுகை பழத்தோட்டம், சாடிவயல், வாளையார் அணை, ஆழியாறு ஆத்துப்பாறை, குறிச்சிகுளம், குனியமுத்தூர் குளம், சிங்காநல்லூர் குளத்தேரி, வெள்ளக்கிணறு குளம் மற்றும் நாகராஜபுரம் குளம் ஆகிய பகுதிகளில் விநாயகர் சிலைகளை மாசுகட்டுப்பாட்டு வாரியத்தின் விதிமுறைகளுக்கு உட்பட்டு விசர்ஜனம் செய்ய வேண்டும்.

    இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • நான் முதல்வன் ஊக்கத்தொகைக்கான தேர்வு அரியலூரில் 233 பேர் எழுதினர்
    • 233 பேர் தேர்வெழுதிய நிலையில் 140 பேர் எழுத வரவில்லை

    அரியலூர்,

    மத்திய மற்றும் மாநில பணியாளர் தேர்வாணைய தேர்வு எழுதவுள்ள மாணவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் நான் முதல்வன் திட்டத்தின் மூலமாக ஊக்கத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதில் பயன்பெறுவதற்கான தேர்வு அரியலூரில் நடைபெற்றது.தேர்வு எழுதுவதற்காக அரியலூர் மாவட்டத்தில் 373 பேர் பதிவு செய்திருந்தனர். இதையடுத்து அரியலூர் மான்போர்ட் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற தேர்வில் 233 பேர் கலந்து கொண்டனர். 140 பேர் எழுத வரவில்லை. அரியலூர் மாவட்ட கலெக்டர்ஆனிமேரி ஸ்வர்ணா தேர்வின்போது ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது, அரியலூர் வருவாய் கோட்டாட்சியர் ராமகிருஷ்ணன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் விஜயலட்சுமி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தென்காசியில் 3 இடங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
    • தேர்வர்கள் காலை 8.30 மணிக்கு தேர்வு மையங்களுக்கு கண்டிப்பாக வர வேண்டும்.

    தென்காசி:

    தென்காசி மாவட்டத்தில் ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் 2023-ம் ஆண்டு வட்டாரக் கல்வி அலுவலர் தேர்வு நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது.

    இத்தேர்வுக்காக தென்காசியில் உள்ள இ.சி.ஈ. அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, மஞ்சம்மாள் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மற்றும் புனித மிக்கேல் மகளிர் மேல்நிலைப்பள்ளி ஆகிய 3 இடங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த மையங்களில் மொத்தம் 974 தேர்வர்கள் தேர்வு எழுதுகின்றனர்.

    தேர்வெழுத வருகை தரும் தேர்வர்கள் அனைவரும் காலை 8.30 மணிக்கு தேர்வு மையங்களுக்கு கண்டிப்பாக வருகை தர வேண்டும். தேர்வர்கள் அனைவரும் தீவிர பரிசோதனைக்கு பிறகே தேர்வு மையங்களின் உள்ளே அனுமதிக்கப்படுவார்கள். காலை 9.30 மணிக்கு பின்னர் வரும் தேர்வர்கள் தேர்வு மையத்திற்குள் கண்டிப்பாக அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

    மேலும் தேர்வர்கள் செல்போன், லேப்டாப் மற்றும் கால்குலேட்டர்கள் போன்ற உபகரணங்களை தேர்வு மையங்களின் உள்ளே கொண்டு செல்ல அனுமதி கிடையாது.

    தேர்வில் முறைகேடு களில் ஈடுபட்டால் ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் தேர்வுகளை தொடர்ந்து 3 ஆண்டுகளுக்கு எழுத தடை விதிக்கப்படும் என மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • 8 பேர் நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்
    • தமிழ்நாடு அரசு கவுரவித்து வருகிறது.

    அரியலூர்:

    மறைந்த முன்னாள் ஜனாதிபதி டாக்டர் எஸ்.ராதாகிருஷ்ணனின் பிறந்த தினமான செப்டம்பர் 5-ம் நாள் ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது. இந்நாளில், சிறந்த கல்வி தொண்டாற்றும் நல்லாசிரியர்களுக்கு "டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது" வழங்கி தமிழ்நாடு அரசு கவுரவித்து வருகிறது.

    அதன்படி இந்த ஆண்டிற்கு அரியலூர் மாவட்டத்தில் நல்லாசிரியர் விருதுக்கு தொடக்கக்கல்வி, பள்ளி கல்வியில் தலா 3 ஆசிரியர்களும், மெட்ரிக் பள்ளியில் ஒரு ஆசிரியை, ஆசிரியர் பயிற்சி நிறுவன விரிவுரையாளர் ஒருவர் என மொத்தம் 8 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் விவரம் வருமாறு:-

    தொடக்க கல்வியில் முல்லையூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் புவனேஸ்வரி, இடையார் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் தங்கையன், பெரிய திருக்கோணம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் பாலசுப்பிரமணியம், பள்ளி கல்வியில் தா.பழூர் அரசு மேல்நிலைப்பள்ளி சமூக அறிவியல் பட்டதாரி ஆசிரியர் குணசேகரன், ஜெயங்கொண்டம் பாத்திமா பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை அமலோற்பவம், சோழன் குடிக்காடு அரசு உயர்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியை சுகுணா, மெட்ரிகுலேஷன் பள்ளியில் அரியலூர் மான்போர்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் ராஜேந்திரன், கீழப்பழுவூர் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன விரிவுரையாளர் ராஜேந்திரன் ஆகிய 8 பேருக்கு தமிழக அரசு நல்லாசிரியர் விருது அறிவித்துள்ளது. இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணிக்கு சென்னையில் கலைவாணர் அரங்கில் நடைபெறும் விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியில் இவர்கள் கலந்து கொண்டு நல்லாசிரியர் விருதுகளை பெற்றுக் கொள்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print