search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Government Exam"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • வாலிபர் வலது காதில் கட்டுடன் தேர்வு அறைக்குள் சென்றார்.
    • சிறிது நேரத்தில் வாலிபர் யாருடனோ பேசுவது போல் தெரிந்தது.

    வேலூர்:

    தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் ஒருங்கிணைந்த பொறியியல் பணிக்கான தேர்வு நேற்று முன்தினம் நடந்தது.

    வேலூரை அடுத்த காட்பாடி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்த தேர்வில் விருதம்பட்டை சேர்ந்த அப்துல் பயாஸ் (வயது 27) என்ற வாலிபர் தேர்வு எழுத சென்றார். அவர் வலது காதில் கட்டுடன் தேர்வு அறைக்குள் சென்றார். அறையின் மேற்பார்வையாளர் கேட்டதற்கு வலது காதில் அடிபட்டதால் கட்டு போடப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

    அவரை தேர்வு எழுத அனுமதித்தனர். ஆனால் சிறிது நேரத்தில் அவர் யாருடனோ பேசுவது போல் தெரிந்தது. உடனே அறை மேற்பார்வையாளர் அவரது காதில் இருந்த கட்டைப் பிரித்து பார்த்தபோது காதில் புளூடூத் ஏர்பட்ஸ் இருந்தது தெரியவந்தது. அதன் வழியாக அவர் யாரிடமோ கேட்டு தேர்வு எழுதியது கண்டு பிடிக்கப்பட்டது.

    இதுகுறித்து காட்பாடி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவு நாளை மறுதினம் வெளியிடப்படும் என்றும், மாணவர்களின் செல்போன் எண்ணுக்கு மதிப்பெண் குறுஞ்செய்தியாக வரும் என்றும் அரசு தேர்வுத்துறை தெரிவித்துள்ளது. #SSLCExam
    சென்னை:

    எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவு நாளை மறுதினம் வெளியிடப்படும் என்றும், மாணவர்களின் செல்போன் எண்ணுக்கு மதிப்பெண் குறுஞ்செய்தியாக வரும் என்றும் அரசு தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.

    இதுதொடர்பாக அரசு தேர்வுகள் இயக்குனர் தண்.வசுந்தராதேவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு கடந்த மாதம் நடந்தது. பள்ளி மாணவர்கள் மற்றும் தனித்தேர்வர்கள் இந்த தேர்வை எழுதினார்கள். தேர்வு முடிவு 29-ந் தேதி (நாளை மறுதினம்) காலை 9.30 மணிக்கு வெளியிடப்படுகிறது.

    தேர்வர்கள் www.tnr-esults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in என்ற இணையதளங்களில் சென்று தங்களுடைய பதிவு எண், பிறந்த தேதி, மாதம், வருடத்தை பதிவு செய்து தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம். மேலும் ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் இயங்கும் தேசிய தகவலியல் மையங்களிலும், அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும் கட்டணமின்றி தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.

    பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும் மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவுகளை அறியலாம். பள்ளி மாணவர்களுக்கு அவர்கள் பயின்ற பள்ளிகளில் சமர்ப்பித்த உறுதிமொழி படிவத்தில் குறிப்பிட்டு இருந்த செல்போன் எண்ணுக்கும், தனித்தேர்வர்களுக்கு ஆன்-லைனில் விண்ணப்பித்தபோது அவர்கள் வழங்கிய செல்போன் எண்ணுக்கும் குறுஞ்செய்தியாக மதிப்பெண் வரும்.

    பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளி தலைமை ஆசிரியர் வழியாகவும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வு எழுதிய தேர்வு மைய தலைமை ஆசிரியர் வழியாகவும் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை அடுத்த மாதம் (மே) 2-ந்தேதி பிற்பகல் முதல் பெற்றுக்கொள்ளலாம். அடுத்த மாதம் 6-ந்தேதி பிற்பகல் முதல் பள்ளி மாணவர்கள், தனித்தேர்வர்கள் www.dge.tn.nic.in என்ற இணையதளத்தில் பிறந்த தேதி மற்றும் பதிவு எண் குறிப்பிட்டு மதிப்பெண் சான்றிதழை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

    தேர்வு எழுதிய விடைத்தாள்களின் மதிப்பெண் மறுகூட்டலுக்கு அடுத்த மாதம் 2-ந்தேதி முதல் 4-ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம். தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களும், தேர்வில் கலந்து கொள்ள முடியாதவர்களுக்கும் சிறப்பு துணை தேர்வு ஜூன் 14-ந்தேதி தொடங்கி 22-ந்தேதி வரை நடக்கிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #SSLCExam
    ×