என் மலர்
நீங்கள் தேடியது "tag 96107"
கொரோனா தொற்று காரணமாக ஆன்லைனில் வகுப்புகள், தேர்வுகள் நடத்தப்பட்டு வந்தன. பின்னர் நோய்ப் பாதிப்பு சற்று குறைந்ததை தொடர்ந்து, நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டன.
அதனைத் தொடர்ந்து செமஸ்டர் தேர்வு உள்பட அனைத்து தேர்வுகளும் ஆப்லைன் (நேரடி முறையில்) மூலம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இதற்கு மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய நிலையில், நேரடி தேர்வு தான் கண்டிப்பாக நடக்கும் என திட்டவட்டமாக தெரிவித்ததோடு, அதற்கு மாணவர்கள் தயாராவதற்கு ஏதுவாக கால அவகாசம் வழங்கியும் உயர்கல்வித்துறை உத்தரவிட்டது.
இந்த நிலையில் அது தொடர்பாக உயர்கல்வித்துறை சார்பில் நேற்று ஒரு அரசாணை வெளியிடப்பட்டு இருக்கிறது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-
உயர்கல்வித்துறை அமைச்சர் தலைமையில் அதிகாரிகள், பல்கலைக்கழகங்களின் பிரதிநிதிகள் மற்றும் மாணவர்களுடன் கூடிய கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில் சில அறிவுறுத்தல்களை கல்வி நிறுவனங்கள் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும்.
அதன்படி, உயர்கல்வித்துறையின் கீழ் உள்ள மாநில பல்கலைக்கழகங்கள், நிகர்நிலை பல்கலைக்கழகங்கள், தன்னாட்சி நிறுவனங்கள் மர்றும் சுயநிதி கல்வி நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து கல்வி நிறுவனங்களும் இனிமேல் வாரத்தில் 6 நாட்களும் (சனிக்கிழமை உள்பட) அனைத்து வகுப்புகளும் ஆப்லைன் (நேரடி) முறையில் நடத்தப்பட வேண்டும்.
அடுத்த ஆண்டு (2022) ஜனவரி 20-ந் தேதிக்கு பிறகு செமஸ்டர் தேர்வுகளை மீண்டும் திட்டமிட வேண்டும்.

செமஸ்டர், இறுதி தேர்வுகளுக்கு முன்பு மாணவர்களுக்கு மாதிரி தேர்வுகளை நடத்த வேண்டும். மாணவர்களுக்கு தயாரிப்புக்கான பாடப்பொருட்களை வழங்க வேண்டும். பாடத்திட்டம் முழுமையாக உள்ள நிறுவனங்களில் குறிப்பாக ஆன்லைன் முறையில் நடத்தப்பட்ட பாடங்களை மாணவர்களுக்கு மீண்டும் நினைவுபடுத்துவதன் மூலம் பாடங்களை முழுமையாக புரிந்து கொள்ள முடியும்.
தொழில்நுட்ப கல்வி இயக்குனர் மற்றும் கல்லூரி கல்வி இயக்குனர் ஆகியோர் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து நிறுவனங்களுக்கும், அனைத்து மாநில பல்கலைக்கழகங்கள், தன்னாட்சி பெற்ற நிகர்நிலை பல்கலைக்கழகங்களுக்கும் மேற்கண்ட அறிவுறுத்தல்களை வழங்குவதோடு, முறையாக பின்பற்றப்படுகிறதா? என்பதையும் உறுதி செய்ய வேண்டும்.
உயர்கல்வித்துறையின் கீழ் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களின் பதிவாளர்களும் ஏற்கனவே திட்டமிடப்பட்ட தேர்வு தேதிகள் மாற்றியமைக்கப்படுவதை உறுதிசெய்து, திருத்தப்பட்ட அட்டவணையை இந்த அலுவலகத்துக்கு அனுப்ப வேண்டும்.
அனைத்து மாவட்ட கலெக்டர்களும் தங்கள் அதிகார வரம்பில் செயல்படும் மாநில பல்கலைக்கழகங்கள், நிகர்நிலை பல்கலைக்கழகங்கள், தன்னாட்சி நிறுவனங்கள் மற்றும் சுயநிதி நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து உயர்கல்வி நிறுவனங்களும் இந்த அறிவுறுத்தல்களை கவனமாக பின்பற்றுவதை உறுதி செய்யுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதனை பின்பற்றும்போது அரசின் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளையும் சேர்த்து கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்றும் அதில் அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது.
சேதராபபட்டு:
புதுவையை அடுத்த தமிழக பகுதியான கோட்டக்குப்பம் மொரராஜ் வீதியை சேர்ந்தவர் பாலமுருகன். இவரது மனைவி உமாமகேஸ்வரி. இவர்களது 2-வது மகள் அபர்ணா (வயது19). இவர் கடந்த ஆண்டு அங்குள்ள தனியார் பள்ளியில் 9ம் வகுப்பு பயின்று தோல்வி அடைந்ததால் டூடோரியலில் சேர்ந்து எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுதினார். ஆனால் அந்த தேர்வில் அபர்ணா தோல்வி அடைந்தார்.
இதையடுத்து நர்சாக வேண்டுமானால் எஸ்.எஸ்.எல்.சி. தேர்ச்சி பெற வேண்டும் என்பதால் மீண்டும் டூடோரியலில் சேர்ந்து எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுத விரும்பினார். ஆனால் இதற்கு அவரது தாய் உமாமகேஸ்வரி சம்மதிக்க வில்லை. இதனால் மனமுடைந்த அபர்ணா தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார்.
சம்பவத்தன்று கடையில் இருந்து எலிமருந்து (விஷம்) வாங்கி வந்து அபர்ணா வீட்டில் சாப்பிட்டார். இதில் மயங்கி விழுந்த அபர்ணாவை அவரது தாய் உமாமகேஸ்வரி மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அங்கு தீவிர சிகிச்சையளித்தும் பலனின்றி அபர்ணா பரிதாபமாக இறந்து போனார்.
இதுகுறித்த புகாரின்பேரில் கோட்டக்குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவு நாளை மறுதினம் வெளியிடப்படும் என்றும், மாணவர்களின் செல்போன் எண்ணுக்கு மதிப்பெண் குறுஞ்செய்தியாக வரும் என்றும் அரசு தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக அரசு தேர்வுகள் இயக்குனர் தண்.வசுந்தராதேவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு கடந்த மாதம் நடந்தது. பள்ளி மாணவர்கள் மற்றும் தனித்தேர்வர்கள் இந்த தேர்வை எழுதினார்கள். தேர்வு முடிவு 29-ந் தேதி (நாளை மறுதினம்) காலை 9.30 மணிக்கு வெளியிடப்படுகிறது.
தேர்வர்கள் www.tnr-esults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in என்ற இணையதளங்களில் சென்று தங்களுடைய பதிவு எண், பிறந்த தேதி, மாதம், வருடத்தை பதிவு செய்து தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம். மேலும் ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் இயங்கும் தேசிய தகவலியல் மையங்களிலும், அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும் கட்டணமின்றி தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.
பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும் மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவுகளை அறியலாம். பள்ளி மாணவர்களுக்கு அவர்கள் பயின்ற பள்ளிகளில் சமர்ப்பித்த உறுதிமொழி படிவத்தில் குறிப்பிட்டு இருந்த செல்போன் எண்ணுக்கும், தனித்தேர்வர்களுக்கு ஆன்-லைனில் விண்ணப்பித்தபோது அவர்கள் வழங்கிய செல்போன் எண்ணுக்கும் குறுஞ்செய்தியாக மதிப்பெண் வரும்.
பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளி தலைமை ஆசிரியர் வழியாகவும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வு எழுதிய தேர்வு மைய தலைமை ஆசிரியர் வழியாகவும் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை அடுத்த மாதம் (மே) 2-ந்தேதி பிற்பகல் முதல் பெற்றுக்கொள்ளலாம். அடுத்த மாதம் 6-ந்தேதி பிற்பகல் முதல் பள்ளி மாணவர்கள், தனித்தேர்வர்கள் www.dge.tn.nic.in என்ற இணையதளத்தில் பிறந்த தேதி மற்றும் பதிவு எண் குறிப்பிட்டு மதிப்பெண் சான்றிதழை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
தேர்வு எழுதிய விடைத்தாள்களின் மதிப்பெண் மறுகூட்டலுக்கு அடுத்த மாதம் 2-ந்தேதி முதல் 4-ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம். தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களும், தேர்வில் கலந்து கொள்ள முடியாதவர்களுக்கும் சிறப்பு துணை தேர்வு ஜூன் 14-ந்தேதி தொடங்கி 22-ந்தேதி வரை நடக்கிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #SSLCExam
தேர்வு முடிவு வருகிறது என்றாலே மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் பெரும் பதற்றம் தொற்றிக்கொள்கிறது. தேர்வில் தேர்ச்சி பெறுவோமா? அதிக மதிப்பெண் கிடைக்குமா? நினைத்த உயர்கல்வி படிப்பில் சேர முடியுமா? என்று மாணவர்கள் எண்ணிக் கொண்டு இருப்பர். பெற்றோருக்கும் இதே தவிப்புதான் இருக்கும். வெற்றி பெற்றவர்கள் கொண்டாடட்டும் தவறில்லை. ஆனால் தோல்வியடைந்தவர்கள் முடங்கிக்கிடக்கத்தான் வேண்டுமா? ஒரு தோல்வி மனரீதியாக ஒருவனுக்கு ஏற்படுத்தும் அழுத்தத்தைவிட புறச்சூழலான பெற்றோர் மற்றும் நண்பர்களால் ஏற்படும் அழுத்தமே கூடுதல் சோர்வை அளிக்கிறது என்கிறார்கள் உளவியல் அறிஞர்கள்.
சிறு குழந்தைகளையே எடுத்துக்கொள்ளுங்கள் அது கீழே விழுந்துவிட்டால் நாம் அதைக் காணாத மாதிரி இருந்துவிட்டால் அது தான் விழுந்தது குறித்து அலட்டிக் கொள்ளாமல் எழுந்து போய்க் கொண்டே இருக்கும். நாம் அதைப் பெரிதுபடுத்தி ஐயோ..செல்லம் விழுந்துட்டியா? என்று கொஞ்ச ஆரம்பித்தால் அது தனக்குப் பெரிய பாதிப்பு ஏற்பட்டதாய் நினைத்து வீறிட்டு அழத் தொடங்கும். சிறுகுழந்தை கொஞ்சும்போதே அழுகிறதென்றால், ஓரளவு உலகம் தெரிந்த மாணவனை அவனது தேர்வுத் தோல்விக்காக கடும் சொல் கூறினால், அவன் எந்த மாதிரி வருத்தமுறுவான்? தான் வாழத் தகுதியற்றவன் என்கிற விபரீத முடிவுகளுக்கும் அவன் செல்லக்கூடுமே. தேர்வில் தோல்வி தரும் வலியைவிட பெற்றோர்கள் திட்டுவது, குறை கூறுவது, மற்றவர்களுடன் ஒப்பிட்டுப் பேசுவது ஆகியவையே இன்றைய பிள்ளைகளை பெரும் மனவருத்தம் கொள்ள வைக்கிறது.
தேர்வு முடிவு என்பது எந்த விதத்திலும் ஒரு மனிதனின் வெற்றி, தோல்வியை முடிவு செய்வது இல்லை என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். இந்த உலகில் வெற்றி பெற்ற பெரும்பான்மையான வெற்றியாளர்கள் எல்லோருமே ஒரு கட்டத்தில் தோல்வி அடைந்தவர்கள்தான். தோல்வியை கூட அவர்களால் ஒரு புதிய வெற்றியாக மாற்ற முடிந்தது. அப்படி ஒரு புதிய வெற்றியை பெற்றவர்தான் பிரான்ஸ் நாட்டைச் சார்ந்த லூயிஸ் பிரெய்லி. ஐயோ கடவுளே, என்ற அலறல் சத்தம் கேட்டு செருப்புத் தைத்துக் கொண்டிருந்த தந்தை ஓடி வந்தார். மகன் கண்ணிலிருந்து ரத்தம் வழிவதைக் கண்டு பதறினார், துடித்தார். சிறுவன் விளையாட்டாக செருப்பு தைத்த அந்த ஊசியால் கண்ணைக் குத்திக்கொண்டான்.
குத்துண்ட கண்ணுக்குச் சிகிச்சை மேற்கொண்ட போது துரதிருஷ்டவசமாக மறுக்கண்ணும் பாதிக்கப்பட்டு, இரு கண்ணுமே பார்வை இழந்தார் பரிதாபத்திற்குரிய அந்த சிறுவன். ஆனால் பிற்காலத்தில் பார்வையிழந்தோரின் கல்விக்கண் திறந்த கண்ணாளன் ஆனார். பார்வையிழந்த பலர் கைகளால் தடவிப் படிக்கும் பிரெய்லி முறையை கண்டுபிடித்தார். இந்த புதிய மொழியின் மூலம் பார்வையிழந்த பலர் பட்டதாரிகளாகி வேலைவாய்ப்புகளையும் பெற்றுள்ளார்கள். லூயிஸ் பிரெய்லி கண்களில் பார்வை போய்விட்டதே என்று துவண்டு போயிருந்தால் இப்படியொரு கண்டுபிடிப்பு நமக்கு கிடைத்திருக்குமா? என்பதை சிந்தித்து பாருங்கள்.
பிளஸ்-2 வகுப்பில் தேர்ச்சி பெறவில்லையா? மனஉறுதியுடன் ஒரு சில வாரங்களில் வரும் சிறப்பு துணைத்தேர்வு எழுதி தேர்ச்சி பெறலாம். எத்தனையோ மாணவர்கள் இன்றைய காலகட்டத்தில் சிறப்பு துணைத்தேர்வு எழுதி பொறியியல், கலை அறிவியல் மற்றும் இதர படிப்புகளில் சேர்ந்து உயர்கல்வியை சிறப்பாக படித்து நல்ல வேலைவாய்ப்பை பெற்றுக்கொண்டுதான் இருக்கிறார்கள் என்பதை தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களும் பெற்றோர்களும் புரிந்து கொள்ள வேண்டும். அந்த நம்பிக்கையை கொடுக்கக்கூடிய பொறுப்பு பெற்றோருக்கு உள்ளது. அது போன்ற பெற்றோர் அமைந்துவிட்டால் எந்தத் தோல்விக்கும் மாணவர்கள் சோர்வடைய மாட்டார்கள்.
பெற்றோர்கள் சிறுவயதிலிருந்தே தங்களது குழந்தைகளுக்கு தோல்வியை தாங்கும் சக்தியை கற்றுத்தர வேண்டும். ஒவ்வொரு தோல்விக்கும் பிறகு ஒரு வெற்றி கிடைக்கும் என்ற நம்பிக்கையை குழந்தைகளுக்குள் வளர்க்க வேண்டும். இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் மாணவர்களுக்கு சொன்னது, கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே, அது உன்னைக் கொன்றுவிடும். கண்ணை திறந்து பார் நீ அதை வென்றுவிடலாம்” என்கிறார். அந்த நம்பிக்கை விதைகளை மாணவர்கள் தங்கள் மனதில் விதைத்துக் கொள்ள வேண்டும்.
21 வயது இளைஞர் ஒருவர் கல்லூரிக்கு செல்லும் போது ஷூ லேஸ் கட்டுவதற்கு சிரமப்பட்டார், அன்றாடம் செய்யக்கூடிய சாதாரண வேலைக்கு எல்லாம் தனது மகன் சிரமப்படுவதை கவனித்த அவரது தந்தை அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். மருத்துவர் பரிசோதனை செய்துவிட்டு சொன்னார், உங்களது மகனுக்கு நரம்பு குறைபாடு தொடர்பான ஒரு கொடிய நோய் தாக்கி உள்ளது. உடல் தசைகளை பாதிக்கும் இந்த நோய் உடலிலுள்ள ஒவ்வொரு பாகங்களையும் பாதிக்கும் இரண்டே வருடங்களில் உயிருக்கே ஆபத்து ஏற்படலாம் என்று தெரிவித்தார்.
அப்போது அதை கேட்டு கொண்டிருந்த அந்த இளைஞர் சிறிதும் அச்சமின்றி இந்த நோய் எனது உடலை பாதிக்கும், ஆனால் என்னுடைய மூளையை பாதிக்குமா? என்று கேட்டார். அதற்கு மருத்துவர் மூளையை பாதிக்காது என்றார். உடனே அந்த இளைஞர் சொன்னார் என்னுடைய இயற்பியல் ஆராய்ச்சியை என் உடலா செய்யப்போகிறது, எனது மூளைதான் ஆராய்ச்சிக்கு உதவப்போகிறது என்றார் தன்னம்பிக்கையுடன். ஆனால் ஒரு சில ஆண்டுகளில் நடக்க முடியாமல் வீல் சேரில் இருக்க வேண்டிய சூழல். கழுத்துக்கு கீழே அத்தனை உறுப்புகளும் செயலிழந்து இரண்டு விரல்கள் மட்டும் செயல்பட்டு கொண்டு இருந்தது. அப்போதும் தனது தன்னம்பிக்கையை அவர் விடவில்லை. இரண்டு விரல்கள் மூலமாக கணினி உதவியுடன் தனது கருத்துகளை பரிமாறிக் கொண்டார். தனது நவீன அறிவியல் பற்றி தான் மேற்கொண்ட ஆய்வுகளை சுவாரசியமான புத்தகங்களாக வெளியிட்டார். மக்களிடம் அவற்றுக்கு நல்ல வரவேற்பு.
இரண்டே வருடத்தில் இறந்துவிடுவார் என்று மருத்துவர்களால் கணிக்கப்பட்ட அந்த மனிதர் பல ஆண்டுகள் உயிருடன் இருந்தார். அதற்கு மிக முக்கிய காரணம் அவர் மரணத்தை பற்றி பயம் கொள்ளாமல் தனது மனஉறுதியின் மேல் நம்பிக்கை கொண்டிருந்ததே. அவர் தான் நவீன அறிவியலின் தந்தை என்று போற்றப்பட்ட இயற்பியல் விஞ்ஞானி ஸ்டீபன் ஹக்கிங்ஸ்.
காலத்தை வென்ற மாமனிதர் ஸ்டீபன் ஹக்கிங்ஸிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டிய பாடம், வாழப்பழகு, போராடு, தோல்விகளை தூக்கி எறி, தொடர்ந்து முயற்சி செய், வெற்றியை நோக்கிப் புறப்படு என்பது தான்.
தேர்வு முடிவு எதுவாக இருந்தாலும் அதை நீங்கள் நம்பிக்கையுடன் எதிர்கொள்ள தயாராக இருங்கள். உங்களை சுற்றி உங்களை ஊக்கப்படுத்தக்கூடிய உற்சாகப்படுத்தக்கூடிய நேர்மறையாளர்களை சேர்த்துக் கொள்ளுங்கள். நீங்கள் எப்போதுமே எதிர்மறையாளர்களை தவிர்த்துவிடுங்கள்.
பெற்றோர்களே உங்கள் பிள்ளை மீது நீங்கள் நம்பிக்கை இழக்காதீர்கள். அவர்களது ஆர்வத்தையும் விருப்பத்தையும் புரிந்து கொண்டு அவர்களுக்கு விருப்பப்பட்ட துறைகளில் அவர்களை ஈடுபட உதவுங்கள். தேர்வு தோல்விகள், குறைந்த மதிப்பெண்கள் என்பவை தற்காலிகம் தான். அவற்றை உளவியல் ரீதியாக உங்கள் பிள்ளைகள் கடந்து வர நீங்கள் உதவியாக இருங்கள். தேர்வு முடிவு ஒரு முடிவல்ல, அது ஒரு ஆரம்பமே என்பதை மட்டும் புரிந்து கொண்டால், அதற்கு பின்னான நிகழ்வுகள் அனைத்தும் சிறப்பானதாகவே அமையும் என்பதில் ஐயமில்லை.
முனைவர் அ.முகமது அப்துல்காதர்,
முதல்வர், தனியார் என்ஜினீயரிங் கல்லூரி,
மதுராந்தகம்.
இந்திய பெருங்கடலில், ஆப்பிரிக்காவின் கிழக்கு கரையில் வடக்கு மடகாஸ்கருக்கும், வடகிழக்கு மொசாம்பிக்கிற்கும் இடையில் உள்ள தீவு நாடு கோமரோஸ். இந்த நாட்டின் ஜனாதிபதி அஜாலி அசோமணி, கடந்த ஆண்டு அரசியலமைப்பு சட்டத்தில் திடீரென ஒரு மாற்றம் கொண்டு வந்தது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதாவது ஜனாதிபதியின் பதவிக்காலம் 5 ஆண்டுகளில் இருந்து 10 ஆண்டுகளாக உயர்த்தும் வகையில் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டது. அஜாலி அசோமணியின் பதவிக்காலம் முடிவதற்கு முன்பாகவே முன்கூட்டியே, அதாவது 2019 மார்ச் மாதம் தேர்தல் நடத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டது.
2019ல் நடக்கும் தேர்தலில் வெற்றி பெற்று 2029ம் ஆண்டு வரை பதவியில் நீடிக்கும் வகையில் அஜாரி, சட்டத்தை மாற்றியிருப்பதாக எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்தனர். நாடு முழுவதும் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டங்களுக்கு மத்தியில் தேர்தல் பணிகள் நடைபெற்றன.

வன்முறை போராட்டங்கள், வேட்பாளர்கள் மீது தாக்குதல், எதிர்க்கட்சி ஆதரவாளர்கள் கைது போன்ற பரபரப்பான சூழ்நிலைக்கு மத்தியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஜனாதிபதி தேர்தல் நடைபெற்றது. இதில் அஜாலி அசோமணி 60.77 சதவீத வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். மகமூது அகமதா 14.62 சதவீத வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளார். இதர 11 வேட்பாளர்களும் மிகவும் குறைந்த அளவிலான வாக்குகளே பெற்றனர்.
இந்த தேர்தல் முடிவினை எதிர்க்கட்சிகள் ஏற்கவில்லை. மறுதேர்தல் நடத்த வேண்டும் என வலியுறுத்தி வருகின்றன. #ComorosElection #ComorosPresident






