search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "classes"

    • பெண்ணை திருமணம் செய்வதாக கர்ப்பமாக்கி ஏமாற்றிய வகுப்பு தோழன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
    • காதலனை நம்பி கணவருடன் விவாகரத்து

    திருச்சி 

    திருச்சி குமரன் நகர் அவ்வையார் தெரு பகுதியை சேர்ந்தவர் அனிதா (வயது 31) இவருக்கும் கோபிநாத் என்பவருக்கும் கடந்த 2010ல் திருமணம் நடந்தது. பின்னர் கணவன் மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தனர். அதன் பின்னர் அனிதா தனது தாய் வீட்டுக்கு வந்து விட்டார்.

    இந்த நிலையில் தன்னுடன் பள்ளியில் படித்த திருச்சி உறையூர் சின்ன சௌராஷ்ட்ரா

    தெரு பகுதியைச் சேர்ந்த ரகுநாதன்( 31 )என்பவர் உடன் தொடர்பு ஏற்பட்டது. பின்னர் இருவரும் தனிமையில் நெருக்கமாக இருந்து வந்தனர்.

    புதிய நட்பு மலரவும் அனிதா 2021 ல் தனது கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்றார்.

    அதன் பின்னர் ரகுநாதன் அவரை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி உல்லாசமாக இருந்து வந்தார். இதில் அனிதா கர்ப்பம் அடைந்தார்.

    அதைத்தொடர்ந்து தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி ரகு நாதனை வலியுறுத்தினார். ஆனால் அதற்கு அவர் ஒப்புக்கொள்ள மறுத்தார். மேலும் காதலியை சந்திப்பதை தவிர்த்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அனிதா காதலனை தேடி அவரது வீட்டுக்குச் சென்றார். அப்போது வீட்டில் இருந்த ரங்கநாதனின் பெற்றோர் அனிதாவை கெட்ட வார்த்தையால் திட்டி அடித்து கர்ப்பத்தை கலைக்கச் சொல்லி மிரட்டி துரத்தியதாக கூறப்படுகிறது.

    இதை அடுத்து பாதிக்கப்பட்ட அனிதா ஸ்ரீரங்கம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் வனிதா திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி பெண்ணை ஏமாற்றிய ரகுநாதன் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

    • கீழக்கரை முஹம்மது சதக் பொறியியல் கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் தொடக்க விழா நடந்தது.
    • இதற்கான ஏற்பாடுகளை துறைத்த லைவர்கள் முனைவர் சேக் யூகம் மற்றும் முனைவர் கார்த்தியாயினி செய்திருந்த னர்.

    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை முஹம்மது சதக் பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்க ளுக்கான வகுப்புகள் தொடக்க விழா கல்லூரி முதல்வர் முனைவர் செந்தில்குமார் தலைமையில் நடைபெற்றது. கல்லூரி திட்டமிடல் அதிகாரி முனை வர் திராவிடச்செல்வி வர வேற்றார்.

    விழாவில், சிறப்பு விருந் தினராக தனியார் டி.வி. புகழ் மதுரை முத்து கலந்து கொண்டு பேசியதாவது:-

    மாணவர்கள் நேர்மறை யான சிந்தனையு டன் கல்வி பயின்று அதன்மூலம் சிறந்த வேலைவாய்ப்பினை பெற்று வீட்டிற்கும், நாட்டிற் கும் பெருமை சேர்க்க வேண்டும். வாழ்க்கையை கஷ்டப்பட்டு வாழாமல் இஷ்டப்பட்டு எந்த செயலை யும் செய்தால் தான் அதில் வெற்றியடைய முடியும்.

    வாழ்க்கையில் சிரிப்பதற் கும் நேரம் ஒதுக்குங்கள், அப்பொழுது தான் ஆரோக் கியமான உடல் நலத்துடன் வாழ முடியும். தங்களை பெற்ற தாய், தந்தையரை வயதான காலத்தில் அவர்க ளுக்கு உறுதுணையாக இருப்பது அனைவருடைய அத்தியாவசிய கடமை. அதை நாம் அனைவரும் மனதில் நிலை நிறுத்த வேண்டும் என்றார்.

    கல்லூரியின் முன்னாள் மாணவி பத்மபிரியா பேசு கையில், நான் இந்த கல்லூரி யில் படிக்கும்போது எனக்கு பேராசிரியர்கள் ஊக்கத்து டனும், தன்னம்பிக்கையுட னும் கூடிய கல்வியை கற்று தந்ததனால் நான் இந்த அளவுக்கு உயர்ந்துள்ளேன். ஆகவே மாணவர்களாகிய நீங்கள் உங்களது பேராசிரி யர்கள் வழிகாட்டுதல்களை பின்பற்றி வாழ்வில் உயர்ந்த நிலையை அடைய வேண்டும் என்றார்.முன்னாள் மாணவர் ராஜேஷ் குமார் பேசுகையில், இன்று முதலாம் ஆண்டு பொறியியல் படிப்பை துவங்க உள்ள மாணவர்கள் அனைவரும் செய்முறை பயிற்சியுடன் கூடிய கல்வி தான் உங்களுக்கு வேலை வாய்ப்பை பெறுவதற்கு உறுதுணையாக இருக்கும். ஆகவே நீங்கள் புரிந்து படித்து பல ஆராய்ச்சிகளை மேற்கொண்டு இயற்கைக்கு உகந்த புதுமையான கண்டு பிடிப்புகளை உருவாக்கி நமது நாட்டிற்கு பெருமை சேர்க்க வேண்டும் என்றார்.

    இந்நிகழ்ச்சியில் 15 குழுக் களாக பிரிந்து முதலாம் ஆண்டு மாணவர்கள் பல ஆராய்ச்சி படைப்புகளை கண்காட்சியாக வைத்திருந்த னர். இதனை விழாவில் பங்கேற்ற பெற்றோர்கள், மாணவர்கள், விருந்தினர் கள் பார்வையிட்டு மாண வர்களை பாராட்டினர்.

    இதில் முஹம்மது சதக் அறக்கட்டளையின் கீழ் இயங்கும் அனைத்து கல்லூ ரிகள், பள்ளிகளின் முதல் வர்கள் சேக் தாவூத், ராஜ சேகர், சோமசுந்தரம், சேகர், ஆலியா, சுமதி மற்றும் முஹம்மது சதக் பொறியியல் கல்லூரியின் டீன் முனை வர், செல்வபெருமாள், அனைத்து துறைத்தலை வர்கள், பேராசிரியர்கள், முதலாமாண்டு மாணவர் கள் அவர்களின் பெற்றோர் கள் அனைவரும் கலந்து கொண்டனர். கல்லூரியின் முதலாம் ஆண்டு துறைத்த லைவர் முனைவர் கணேசன் நன்றி கூறினார். இதற்கான ஏற்பாடுகளை துறைத்த லைவர்கள் முனைவர் சேக் யூகம் மற்றும் முனைவர் கார்த்தியாயினி செய்திருந்த னர்.

    • விண்ணப்பித்தவர்களுக்கான தரவரிசை பட்டியல் கடந்த மாதம் (மே) 25-ந் தேதி வெளியிடப்பட்டது.
    • இம்மாதம் 30-ந்தேதி வரை மாணவர் சேர்க்கை நடக்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

    சேலம்:

    தமிழ்நாட்டில் உள்ள 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பல்வேறு பாடப்பிரிவுகளில் இருக்கும் 1 லட்சத்து 7 ஆயிரத்து 299 இடங்களுக்கு நடப்பாண்டு 2 லட்சத்து 46 ஆயிரத்து 295 பேர் விண்ணப்பித்தனர்.

    விண்ணப்பித்தவர்களுக்கான தரவரிசை பட்டியல் கடந்த மாதம் (மே) 25-ந் தேதி வெளியிடப்பட்டது. 2 கட்ட கலந்தாய்வு முடிவில், 31 ஆயிரத்து 621 மாணவர்கள், 44 ஆயிரத்து 190 மாணவிகள் என மொத்தம் 75 ஆயிரத்து 811 பேர் இடங்களை தேர்வு செய்து இருக்கின்றனர். மொத்தம் உள்ள 1 லட்சத்து 7 ஆயிரத்து 299 இடங்களில், 75 ஆயிரத்து 811 இடங்கள் நிரம்பியுள்ளது. இந்த நிலையில், முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு இன்று வகுப்புகள் தொடங்கும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது, மீதமுள்ள இடங்களுக்கு மாணவர் சேர்க்கை தொடர்கிறது. இம்மாதம் 30-ந்தேதி வரை மாணவர் சேர்க்கை நடக்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

    எனவே, முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு அடுத்த மாதம் 3-ந்தேதி முதல் வகுப்புகள் தொடங்கப்படும் என உயர்கல்வி த்துறை அறிவித்துள்ளது.

    சேலத்தில் உள்ள பெரியார் பல்கலைக் கழகத்தின் மேற்பார்வையில் சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் 22 அரசு கல்லூரிகள், 4 அரசு உதவி பெறும் கல்லூரிகள், 91 சுயநிதி கல்லூரிகள் என மொத்தம் 117 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் செயல்படுகின்றன. இதில் 22 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 77 சதவீத இடங்கள் நிரம்பியது. மீதமுள்ள 23 சதவீதம் இடங்கள் கலந்தாய்வு மூலம் நிரப்பப்பட உள்ளது.

    • கலந்–தாய்–வில் இடங்–களை தேர்வு செய்–தி–ருக்–கும் முத–லாம் ஆண்டு மாணவ-மாண–வி–க–ளுக்–கான வகுப்–பு–கள் நாளை (வியா–ழக்–கி–ழமை) தொடங்க உள்–ளன.
    • அரசு கல்லூரிகளில் முதலாம் ஆண்டு வகுப்புகள் நாளை திறக்கப்பட உள்ளதையொட்டி கல்லூரி வளாகங்கள் சீரமைக்கப்பட்டு, வகுப்பறைகள் சுத்தம் செய்யப்பட்டு வருகிறது.

    சேலம்:

    தமிழ்–நாட்–டில் உள்ள 164 அரசு கலை மற்–றும் அறி–வி–யல் கல்–லூ–ரி–களில் உள்ள பல்–வேறு பாடப்–பி–ரி–வு–களில் சேரு–வ–தற்–கான மாண–வர் சேர்க்கை கலந்–தாய்–வுக்கு விண்–ணப்–பிக்க அறி–வு–றுத்–தப்–பட்–டது. அதன்–படி, 164 கல்–லூ–ரி–களில் பல்–வேறு பாடப்–பி–ரி–வு–களில் இருக்–கும் 1 லட்–சத்து 7 ஆயி–ரத்து 299 இடங்–க–ளுக்கு 2 லட்–சத்து 46 ஆயி–ரத்து 295 பேர் விண்–ணப்–பங்–கள் பெறப்–பட்டு இருந்–தன.

    விண்–ணப்–பித்–த–வர்–க–ளுக்–கான தர–வ–ரிசை பட்–டி–யல் கடந்த மாதம் (மே) 25-ந் தேதி வெளி–யி–டப்–பட்–டது. அத–னைத் தொடர்ந்து முதல்–கட்ட கலந்–தாய்வு கடந்த 1-ந் தேதி முதல் 10-ந் தேதி வரை நடந்து முடிந்–தது.

    முதல்–கட்ட கலந்–தாய்வு நிறைவு பெற்ற நிலை–யில், ஒரு நாள் இடை–வெ–ளிக்கு பிறகு, கடந்த 12-ந் தேதி முதல் 20-ந் தேதி (நேற்று) வரை 2-ம் கட்ட கலந்–தாய்வு நடத்தி முடிக்–கப்–பட்டு இருக்–கிறது.

    முத–லாம் ஆண்டு வகுப்–பு–கள்

    அந்த வகை–யில் 164 அரசு கலை மற்–றும் அறி–வி–யல் கல்–லூ–ரி–களில் சேரு–வ–தற்கு நடத்–தப்–பட்ட இந்த 2 கட்ட கலந்–தாய்வு முடி–வில், 31 ஆயி–ரத்து 621 மாண–வர்–கள், 44 ஆயி–ரத்து 190 மாண–வி–கள் என மொத்–தம் 75 ஆயி–ரத்து 811 பேர் இடங்–களை தேர்வு செய்து இருக்–கின்–ற–னர். இவர்–களில் அரசு பள்ளி மாண–வி–கள் 21 ஆயி–ரம் பேர் வரு–கின்–ற–னர். அவர்–க–ளுக்கு அர–சின் புது–மைப் பெண் திட்–டத்–தின் கீழ் ஒவ்–வொரு மாத–மும் ரூ.1,000 நிதி–யு–தவி கிடைக்–கும்.

    மொத்–தம் உள்ள 1 லட்–சத்து 7 ஆயி–ரத்து 299 இடங்–களில், 75 ஆயி–ரத்து 811 இடங்–கள் நிரம்–பி–யுள்ள நிலை–யில், மீத–முள்ள இடங்–கள் நிரம்–பும் வரை கலந்–தாய்வு நடத்–தப்–படும் என கல்–லூரி கல்வி இயக்–க–கம் அறி–வித்–துள்–ளது.

    இந்த நிலை–யில் கலந்–தாய்–வில் இடங்–களை தேர்வு செய்–தி–ருக்–கும் முத–லாம் ஆண்டு மாணவ-மாண–வி–க–ளுக்–கான வகுப்–பு–கள் நாளை (வியா–ழக்–கி–ழமை) தொடங்க உள்–ளன.

    சேலம் கருப்பூரில் உள்ள அரசு பெரியார் பல்கலைக் கழகத்தின் மேற்பார்வையில் சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் 22 அரசு கல்லூரிகள், 4 அரசு உதவி பெறும் கல்லூரிகள், 91 சுயநிதி கல்லூரிகள் என மொத்தம் 117 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் செயல்படுகின்றன. இதில் அரசு கல்லூரிகளில் முதலாம் ஆண்டு வகுப்புகள் நாளை திறக்கப்பட உள்ளதையொட்டி கல்லூரி வளாகங்கள் சீரமைக்கப்பட்டு, வகுப்பறைகள் சுத்தம் செய்யப்பட்டு வருகிறது. இதற்கான முன்னேற்பாடுகளை கல்லூரி முதல்வர்கள் செய்து வருகிறார்கள்.

    • மதுரையில் தொடக்கப்பள்ளி வகுப்புகள் இன்று தொடங்கின.
    • ஆசிரியர்கள் இனிப்புகள் வழங்கி வரவேற்றனர்.

    மதுரை

    தமிழ்நாட்டில் வெயில் தாக்கத்தால் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறப்பில் தாமதமானது. இந்நிலையில் வெயிலின் தாக்கம் ஓரளவுக்கு குறைந்ததால் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளி வகுப்புகள் கடந்த 12-ந்தேதி தொடங்கின.

    1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரையிலான தொடக்கப் பள்ளிகள் இன்று திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி 1 முதல் 5 வரையிலான வகுப்புகள் இன்று திறக்கப்பட்டன. அனைத்து பள்ளிகளிலும் காலை 8 மணி முதல் குழந்தைகள் புத்தகப்பையுடன் பள்ளிகளுக்கு வந்தனர்.

    பள்ளிக் கூட வாசலில் முன்பு நின்றிருந்த ஆசிரியர்கள், இனிப்புகள் வழங்கியும் மலர் தூவியும் மாணவ-மாணவிகளை இன்முகத்துடன் உற்சாகமாக வரவேற்றனர். குழந்தைகளை பள்ளிகளுக்கு அனுப்ப வந்த பெற்றோர்கள், அவர்களை வாழ்த்தி அனுப்பி வைத்தனர்.

    மதுரை மாவட்டத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், மாநகராட்சி பள்ளிகள், கள்ளர் சீரமைப்பு துறை சார்பில் நடத்தப்படும் பள்ளிகளில் முதல் நாளான இன்றே பாடபுத்தகங்களும் வழங்கப்பட்டன.

    தனியார் பள்ளிகளிலும் இன்று முதல் 1-5 தொடக்க வகுப்புகள் தொடங்கியுள்ளது. இன்று முதல் 1 முதல் 12-ம் வகுப்பு வரை பள்ளிகள் முழுவதுமாக செயல்பட தொடங்கி உள்ளதால் மதுரையின் பல்வேறு இடங்களில் காலையில் வாகனங்கள் அதிகளவில் சென்றன. இதனால் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

    அரசு பள்ளிகளில் மாணவ-மாணவிகளுக்கு பாடபுத்தகங்கள் கொடுக்கப்பட்ட நிலையில் பல தனியார் பள்ளிகளில் இன்னும் பாட புத்தகங்கள் வழங்கப்படவில்லை. அரசு தரப்பில் இருந்து பாடப் புத்தகங்களை தனியார் பள்ளிகளுக்கு வழங்குவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளதாக தனியார் பள்ளிகள் தெரிவித்துள்ளன.

    எனவே உடனடியாக தனியார் பள்ளி மாணவர்களுக்கும் பாட புத்தகங்களை வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று பெற்றோர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

    • 7500 -க்கும் மேற்பட்ட குரூப்- பி மற்றும் குரூப்- சி ஆகிய பதவி களுக்கான ஒருங்கிணைந்தப் பட்டப்படிப்பு அளவிலான தேர்வுக்கான அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது.
    • தேர்வுக் கட்டணமாக ரூ. 10/- நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    சேலம்:

    சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்து ள்ளதாவது:-

    மத்தியப் பணியாளர் தேர்வாணையத்தால் (எஸ்.எஸ்.சி) 7500 -க்கும் மேற்பட்ட குரூப்- பி மற்றும் குரூப்- சி ஆகிய பதவி களுக்கான ஒருங்கிணைந்தப் பட்டப்படிப்பு அளவிலான தேர்வுக்கான அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது.

    தேர்வுக்கு ssc.nic.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க கடைசி நாள் 03.05.2023 ஆகும்.

    இத்தேர்விற்கான கல்வித்தகுதி, குறைந்தபட்சம் ஏதாவது ஒரு பாடத்தில் அங்கீகரிக்கப்பட்ட பட்டப்படிப்புடன் 01.08.2023 அன்றைய நிலையில் எஸ்.சி. எஸ்.டி பிரிவினர் 35 வயதுக்குள்ளும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 33 வயதுக்குள்ளும் இருத்தல் வேண்டும். மேலும், முன்னாள் ராணுவத்தினர் மற்றும் மாற்றுதிறனாளிகளுக்கு நடைமுறைவிதிகளின் படி வயது வரம்பில் சலுகை வழங்கப்பட்டுள்ளது. தேர்வுக் கட்டணமாக ரூ. 10/- நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதில் பெண்கள், எஸ்.சி, எஸ்.டி, வகுப்பினர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணம் செலுத்துவதி லிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

    மேலும், இத்தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு 04.05.2023 அன்று சேலம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் இலவச பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட உள்ளன. வகுப்புகள் தொடர்பான விவரங்களுக்கு 0427-2401750 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

    சேலம் மாவட்டத்தைச் சார்ந்த இளைஞர்கள் அதிக அளவில் இத்தேர்விற்கு விண்ணப்பித்து, இலவசப் பயிற்சி வகுப்பில் கலந்துகொண்டு பயன்பெறலாம். இவ்வாறு அவர், அதில் கூறியுள்ளார்.

    • 7,500-க்கும் மேற்பட்ட பணிக்காலி யிடங்களை அறி வித்துள்ளது.
    • இத்தேர்வில் நாட்டில் உள்ள தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் அனை வரும் விண்ணப்பிக்கலாம்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா பி.சிங் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார் அதில் அவர் குறிப்பிட்டு உள்ளதாவது :-

    மத்திய பணியாளர்கள் தேர்வாணையம் நடத்தும் ஒருங்கிணைந்த பட்டதாரி நிலையிலானத் தேர்வு - 2023 தொடர்பான அறிவிப்பினை கடந்த 3-ந் தேதி வெளியிட்டுள்ளது.

    அதில் மத்திய அரசின் பல்வேறு துறைகள்,நிறு வனங்கள் மற்றும் பல்வேறு அரசியலமைப்பு சார்ந்த அமைப்புகள், சட்டப்பூர்வ அமைப்புகள், தீர்ப்பாயங்கள் போன்றவற்றில் உள்ள குரூப் பி மற்றும் குரூப் சி நிலையில், 7,500-க்கும் மேற்பட்ட பணிக்காலி யிடங்களை அறி வித்துள்ளது. இத்தேர்வில் நாட்டில் உள்ள தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் அனை வரும் விண்ணப்பிக்கலாம்.

    இப்பணிக்காலி யிடங்க ளுக்கு www.ssc.nic.in என்ற பணியாளர் தேர்வா ணையத்தின் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும். கணினி அடிப்ப டையிலான இத்தேர்வு களுக்கு உரிய கட்டணத்து டன் இணைய வழியாக விண்ணப்பிக்க கடைசி நாள் 03.05.2023 மற்றும் ஆன்லைனில் கட்டணம் செலுத்துவதற்கான கடைசி நாள் 04.05.2023 ஆகும். கணினி அடிப்படையிலான தேர்வு, ஜூலை 2023-ல் தமிழ்நாட்டில் 7 மையங்களில் நடைபெற உள்ளது.

    நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்படும் தன்னார்வப் பயிலும் வட்டங்களில் பணியாளர் தேர்வாணைய போட்டித் தேர்வுகளுக்கான கட்டண மில்லா பயிற்சி வகுப்புகள் நேரடியாக நடத்தப்படவுள்ளன.

    இத்தேர்விற்கான பாடத்திட்டங்கள் மற்றும் பாடக்குறிப்புகள் தமிழ்நாடு அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் மெய்நிகர் கற்றல் இணையதளத்தில் (https://tamilnaducareerservices.tn.gov.in/) பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

    மேலும், பயற்சி வகுப்பு கள் இணையதளத்தில் மற்றும் பதிவேற்ற செய்யப் பட்டு காணொளிகளை கண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்ப டுகிறது.

    எனவே. இத்தேர்விற்கு விண்ணப்பித்த மற்றும் விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தினைத் தொடர்பு கொண்டு இப்பயிற்சி வகுப்புகளில் கலந்துகொண்டு பயனடையுமாறு நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா பி.சிங் தெரிவித்துள்ளார்.

    • 1-9 ம் வகுப்பு மாணவர்களுக்கு நாளை முதல் அரை நாள் வகுப்புகள் நடத்தப்பட உள்ளது.
    • காலை 7.45 மணி முதல் மதியம் 12.30 மணி வரை வகுப்புகள் நடைபெறும்.

    அமராவதி:

    ஒவ்வொரு ஆண்டும் கோடை காலத்தில் பின்பற்றப்படும் நடைமுறையைப் போன்று இந்த ஆண்டும் ஆந்திராவில் வரும் 3-ம் தேதி முதல் ஏப்ரல் 30-ம் தேதி வரை அனைத்துப் பள்ளிகளிலும் 1 முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு அரை நாள் வகுப்புகள் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    காலை 7.45 மணி முதல் மதியம் 12.30 மணி வரை வகுப்புகள் நடைபெறும். இந்த மாதம் 30-ம் தேதி பள்ளி கடைசி வேலை நாளாகும். ஏப்ரல் 2-வது சனிக்கிழமை வழக்கமாக விடுமுறை விடப்படும். ஆனால் இந்த ஆண்டு 2-வது சனிக்கிழமை வேலை நாளாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கோடைக்காலத்தை முன்னிட்டு பள்ளிகளில் கிராம பஞ்சாயத்துகளின் ஆதரவுடன் போதுமான குடிநீர் விநியோகம் செய்ய அதிகாரிகளுக்கு பள்ளிக் கல்வி ஆணையர் எஸ் சுரேஷ்குமார் உத்தரவிட்டுள்ளார்.

    திறந்த வெளியிலோ அல்லது மரத்தடியிலோ வகுப்புகளை நடத்துவதைத் தவிர்க்குமாறும் எச்சரித்துள்ள அவர் மதிய உணவுடன் மோர், பால் வழங்குமாறும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

    • போட்டி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெறுகிறது
    • வேலை வாய்ப்பு அலுவலகத்தில் நடைபெறுகிறது

    பெரம்பலூர்

    பெரம்பலூர் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் இயங்கி வரும் தன்னார்வ பயிலும் வட்டம் சார்பாக பல்வேறு போட்டி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. தற்போது தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ள இரண்டாம் நிலை காவலர் (ஆயுதப்படை மற்றும் தமிழ்நாடு சிறப்பு காவல் படை), இரண்டாம் நிலை சிறை காவலர் மற்றும் தீயணைப்பாளர் பணியிடத்திற்கும், தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ள குரூப் 1-க்கான இலவச பயிற்சி வகுப்புகள் கடந்த மாதம் 17-ந்தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. மேலும் தற்போது மருத்துவ தேர்வாணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ள மருந்தாளுனர் மற்றும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் வெளியிடப்பட்டுள்ள பீல்டு சர்வேயர், டிராப்ட் மேன் சிவில், உதவி வரைவாளர் ஆகிய பணியிடங்களுக்கு விரைவில் இலவச பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட உள்ளன. எனவே மேற்கண்ட இலவச பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் தங்களுடைய ஆதார் அட்டை, புகைப்படங்களுடன் பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரில் தொடர்பு கொண்டு பயனடையலாம் என பெரம்பலூர் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்."

    • இதற்கான கல்வி தகுதி ஏதேனும் ஒரு பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
    • தேர்வுக்கு தயார் செய்யும் விதம் தேர்வுக்கான பாட குறிப்புகள், தேர்வில் வெற்றி பெறுவதற்கான ஆலோசனைகள் வழங்கப்பட உள்ளது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்டகலெ க்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது :-

    தமிழ்நாடுஅரசு பணியாளர் தேர்வாணையத்தால் குரூப்-1 தேர்வின் வாயிலாக 92 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலம் பல்வேறு அரசு துறைகளில் காலியாக உள்ள துணை கலெக்டர், துணை போலீஸ் சூப்பிரண்டு, வணிகவரித்துறை உதவி ஆணையர், கூட்டுறவு சங்கங்களின் துணைப் பதிவாளர், ஊரக வளர்ச்சி துறை உதவி இயக்குனர் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

    இதற்கான கல்வி தகுதி ஏதேனும் ஒரு பட்டப் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

    இந்த தேர்வு அக்டோபர் மாதம் 30 ஆம் தேதி நடக்கிறது. தஞ்சை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தின் தன்னார்வ பயிலும் வட்டத்தின் வாயிலாக இந்த தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு நாளை (வியாழக்கிழமை ) காலை 10:30 மணிக்கு தொடங்கி நடத்தப்பட உள்ளது. அன்றைய தினம் தேர்வுக்கு தயார் செய்யும் விதம் தேர்வுக்கான பாட குறிப்புகள், தேர்வில் வெற்றி பெறுவதற்கான ஆலோசனைகள் வழங்கப்பட உள்ளது.

    தொடர்ந்து பயிற்சி வகுப்பானது அனுபவமிக்க சிறப்பு வல்லுனர்களை கொண்டு நடத்தப்படுகிறது. பாடக் குறிப்புகள் வழங்கப்பட்டு மாதிரி தேர்வுகளும் நடத்தப்பட உள்ளன.

    தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த போட்டி தேர்வுக்கு தயாராகும் இளைஞர்கள் தங்களது பெயர் மற்றும் கல்வி தகுதியை குறிப்பிட்டு 8110919990 என்ற வாட்ஸ் அப் எண்ணில் தகவல் அனுப்பி தங்களது பெயரை பதிவு செய்ய வேண்டும். போட்டித் தேர்வு எழுதுபவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • உயர்கல்வி கற்பது குறித்து வாரந்தோறும் சிறப்பு வகுப்புகள் நடத்த பள்ளி ஆசிரியா்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தல்.
    • மாவட்ட கல்வி அலுவலர் பாலதிரிபுரசுந்தரி, உதவித்திட்ட அலுவலர் சீத்தாலட்சுமி, தலையாசிரியர் கலாநிதி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி ஆய்வு செய்தார்.

    அங்குள்ள வகுப்பறை, சமையற்கூடம், தொழிற்பயிற்சி கூடம், ஆய்வகக்கூடம், பணியாளர்கள் அறை, பதிவறை போன்றவற்றை பார்வையிட்டு, மாணவர்களுக்கு தயாரிக்கப்பட்ட உணவை சாப்பிட்டு பரிசோதனை செய்தார். பின்னர் மாணவ-மாணவிகளை சந்தித்து கலந்துரையாடினார்.

    இந்த ஆய்வின்போது கலெக்டர் மதுசூதன்ரெட்டி கூறியதாவது:-

    பள்ளிப்படிப்பை முடித்து உயர்கல்வி பாடங்களில் சேரும் தருணத்தில் மதிப்பெண் அடிப்படையில் சிறந்த கல்வி நிலையங்களில் படிப்பதற்கான வாய்ப்பு ஏற்படுகிறது. ஆசிரியர்கள் நடத்தும் பாடங்கள் சரியாக புரியவில்லை என்றால் மீண்டும் அதற்குரிய விளக்கத்தை கேட்டு அறிந்து புரிந்து படிக்க வேண்டும். பாடங்களை மனப்பாடம் செய்வது நீண்ட நாட்களுக்கு பயன்படாது. சிவகங்கை மாவட்டத்தில் மருத்துவப் படிப்பில் சேருவதற்காக நீட் பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டு வருகிறது. தேர்வு காலங்களில் மட்டுமே படிப்பது என்ற எண்ணத்தை தவிர்த்து தினந்தோறும் பாடங்களை படிக்க வேண்டும். மாணவர்கள் படிக்க விரும்பும் பட்டப்படிப்பினை திட்டமிட்டு விடாமுயற்சியுடன் கல்வி கற்கும் பட்சத்தில் வெற்றி எளிதாகும்.

    அரசுப்பள்ளிகளில் பயிற்றுவிக்கும் ஆசிரியர்கள் சிறந்த முறையில் தேர்வு செய்யப்பட்டு பணியாற்றி வருகிறார்கள். அவர்களது திறமையினை மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

    ஆசிரியர்கள் பிளஸ்-2 மாணவர்களுக்கு ஐ.ஐ.டி., என்.ஐ.டி., மருத்துவம், பொறியியல் மற்றும் பிற கல்லூரிகளில் உள்ள பாடத்திட்டங்கள் குறித்து விளக்கம் அளிக்க வேண்டும். ஒரு பாடத்தில் உள்ள உயர்கல்வி என்ன என்பது குறித்தும், சிறந்த கல்வி நிலையங்கள் உள்ள இடங்கள் குறித்தும், மாணவர்கள் அறியும் வகையில் வாரத்திற்கு 20 நிமிடம் முதல் 30 நிமிடங்கள் வரை சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்த வேண்டும்.

    ஒவ்வொரு மாணவர்களுக்கும் அவர்களது வீட்டுச்சூழ்நிலை வேறுபடும். ஆகையால் ஆசிரியர்கள் அனைவ ரையும் அர வணைத்து புரியும்படியான பாடத்திட்டங்களை தொகுத்து வழங்க வேண்டும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    இந்த நிகழ்வில் மாவட்ட கல்வி அலுவலர் பாலதிரிபுரசுந்தரி, உதவித்திட்ட அலுவலர் சீத்தாலட்சுமி, தலையாசிரியர் கலாநிதி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    உடன்குடி ஒன்றிய இந்து முன்னணி மற்றும் இந்து அன்னையர் முன்னணி சார்பில் இந்து சமய பண்பாடு வகுப்புகள் நடந்தது.
    உடன்குடி:

    உடன்குடி ஒன்றிய இந்து முன்னணி மற்றும் இந்து அன்னையர் முன்னணி ஆகியோர் இணைந்து நடத்தும் 7-ம் ஆண்டு கோடை கால இந்து சமய பண்பாடு வகுப்புகள் உடன்குடி ஒன்றிய கிராமப்புறங்களில் நடந்து வருகிறது. 

    இந்து அன்னையர் முன்னணி ஏற்பாட்டில் நடைபெறும் கோடை கால பயிற்சி முகாமில் ராமாயணம், மகாபாரதம் போன்ற பல்வேறு இந்து சமய புராணங்கள் பற்றிய விளக்கம் கொடுக்கப்படுகிறது.

    மேலும் சுவாமி விவேகானந்தர், சுவாமி திருவள்ளுவர், கர்ணன் ஆகியோர்களின் வாழ்க்கையையும், தியானம், தினசரி இந்து கோவிலுக்கு செல்லும் அவசியம் ஆகியவற்றை சிறுவர்களுக்கு இந்து முன்னணி ஒன்றிய பொதுச் செயலாளர் கேசவன் கிராமம் கிராமமாக சென்று விழிப்புணர்வு பிரசாரம் செய்து வருகிறார்.
    ×