search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Commencement"

    • வருகிற 30-ந்தேதி முதல் மாணவர்களின் விடைத்தாள்கள் 101 மண்டல சேகரிப்பு மையங்களுக்கு எடுத்துச் செல்லப்படும்.
    • பணிகளில சுமார் 46 ஆயிரம் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

    சென்னை:

    தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் பிளஸ்-1 வகுப்புக்கான பொதுத் தேர்வு மார்ச் 4-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

    இந்த தேர்வை சுமார் 8 லட்சம் மாணவர்கள் எழுதுகின்றனர். அதன்படி தமிழ், வேதியியல், இயற்பியல் உள்பட பெரும்பாலான பாடங்களுக்கான தேர்வுகள் முடிந்துவிட்டன. தொடர்ந்து பிளஸ்-1 பொதுத்தேர்வு நாளை (திங்கட்கிழமை) நிறைவு பெற உள்ளது. இறுதி நாளில் கணிதம், விலங்கியல், வணிகவியல் உள்ளிட்ட பாடங்களுக்கான தேர்வுகள் நடைபெற உள்ளன. இதையடுத்து விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யும் பணி வருகிற 6-ந்தேதி முதல் தொடங்க உள்ளது.

    இது குறித்து தேர்வுத்துறை அதிகாரிகள் சிலர் கூறியதாவது:-

    பொதுத்தேர்வு நிறைவடைந்ததும் வருகிற 30-ந்தேதி முதல் மாணவர்களின் விடைத்தாள்கள் 101 மண்டல சேகரிப்பு மையங்களுக்கு எடுத்துச் செல்லப்படும். அங்கிருந்து மதிப்பீட்டு மையங்ளுக்கு 4-ந்தேதி முதல் அனுப்பி வைக்கப்படும்.

    தொடர்ந்து ஏப்ரல் 6-ந்தேதி முதல் 25-ந்தேதி வரை விடைத்தாள்களை திருத்தும் பணிகள் நடை பெற உள்ளன. முதலில் அரியர் மாணவர்களுக்கான விடைத்தாள்கள் 6-ந்தேதி முதல் 13-ந்தேதிக்குள் மதிப்பீடு செய்யப்படும்.

    தொடர்ந்து மற்ற மாணவர்களுக்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி அடுத்த மாதம் 15-ந்தேதி முதல் 25-ந்தேதி வரை மேற்கொள்ளப்படும். இதற்காக தமிழகம் முழுவதும் 83 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த பணிகளில சுமார் 46 ஆயிரம் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

    தொடர்ந்து மதிப்பெண் பதிவேற்றம் உள்ளிட்ட பணிகளை முடித்து திட்டமிட்டபடி தேர்வு முடிவுகள் மே 14-ந்தேதி வெளியிடப்படும். மதிப்பீட்டு பணிகளின் பொது ஆசிரியர்கள் உரிய வழிமுறைகளை பின்பற்றி கவனத்துடன் செயல்பட அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தொடக்க விழா மின்ட் தங்க சாலை பகுதியில் இன்று மாலை நடைபெறுகிறது.
    • நிகழ்ச்சியில் அமைச்சர்கள், மேயர், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்கின்றனர்.

    சென்னை:

    ரூ.4,181 கோடி மதிப்பீட்டில், வடசென்னை வளர்ச்சித் திட்ட விரிவாக்கப் பணிகள் தொடக்க விழா மின்ட் தங்க சாலை பகுதியில் இன்று மாலை நடைபெறுகிறது.

    பல்வேறு துறைகளின் சார்பில் செயல்படுத்தப்படும் வளர்ச்சித் திட்டங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் சென்று தொடங்கி வைக்கிறார்.

    இதில் மாநகராட்சி சார்பில் மேற்கொள்ளப்படும் திட்டங்கள், சி.எம்.டி.ஏ., பள்ளிக் கல்வித்துறை, சுகாதாரத்துறை, மீன் வளத்துறை, விளையாட்டு மேம்பாட்டுத் துறை சார்பில் நடைபெறும் திட்டங்களை தொடங்கி வைக்கிறார்.

    சென்னை நகரின் அடையாளங்களில் ஒன்றாக விளங்கும் விக்டோரியா ஹால் புதுப்பிப்பு, நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரி யம் சார்பில் கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி வீடுகள், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி உள்பட முடிவுற்ற எண்ணற்ற பணிகளையும் திறந்து வைக்கிறார்.

    நிகழ்ச்சியில் அமைச்சர்கள், மேயர், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்கின்றனர்.

    • நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி மாபெரும் கையெழுத்து இயக்கம்.
    • இன்று காலை சென்னையில் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

    தஞ்சாவூர்:

    நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி தி.மு.க. மருத்துவர் அணி, இளைஞரணி சார்பில் மாபெரும் கையெழுத்து இயக்கத்தை இன்று சென்னையில் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அதனை தொடர்ந்து தமிழகம் முழுவதும் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.

    அதன்படி தஞ்சையில் தி.மு.க. மருத்துவர் அணி, இளைஞரணி சார்பில் மாபெரும் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. இதில் மத்திய மாவட்ட செயலாளர் துரை.சந்திரசேகரன் எம்.எல்.ஏ., தலைமை செயற்குழு உறுப்பினர் டி.கே.ஜி.நீலமேகம் எம்.எல்.ஏ, மாநகர செயலாளரும் மேயருமான சண்.ராமநாதன், மருத்துவர் அணி அமைப்பாளரும் துணை மேயருமான அஞ்சுகம் பூபதி, மாநில மகளிர் ஆணைய தலைவி குமாரி, மாவட்ட பொருளாளர் அண்ணா, ஒன்றிய செயலாளர்கள் முரசொலி, செல்வகுமார், மாவட்ட துணை செயலாளர் கனகவள்ளி பாலாஜி, முன்னாள் மாவட்ட பொறுப்பாளர் து .செல்வம், முன்னாள் நகர்மன்ற தலைவர் இறைவன், கவுன்சிலர் மேத்தா மற்றும் பலர் கலந்து கொண்டு நீட் தேர்வுக்கு எதிராக கையெழுத்து போட்டனர். மேலும் பொதுமக்கள், இளைஞர்கள் கையெழுத்து போட்டனர்.

    • தேசிய குடும்ப நல கணக்கெடுப்பு பணிகள் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் தொடங்கப்பட்டுள்ளது.
    • இந்த பணிக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என பேரூராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    முதுகுளத்தூர்

    மத்திய அரசு மற்றும் மாநில அரசுகளின் சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்ச கத்தின் வழிகாட்டுதலின் பேரில் மக்களியல் ஆராய்ச்சி மையம், திண்டுக்கல் காந்தி கிராமம், சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணைந்து நடத்தும் தேசிய குடும்ப நல கணக்கெடுப்பு பணிகள் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களி லும் தொடங்கப்பட்டுள்ளது.

    அதன்படி ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் பேரூராட்சி பகுதிகளில் சுகாதார கணக்கெடுப்பு பணி தொடங்கியது. பேரூ ராட்சி தலைவர் ஷாஜகான் தலைமை தாங்கினார். செயல் அலுவலர் மாலதி முன்னிலை வகித்தார். சுகாதார ஆய்வாளர்கள் நேதாஜி, கருணாகரசேதுபதி, கிராமப்புற செவிலியர்கள் இந்திரா, சந்தியா மற்றும் களப்பணியாளர்கள் கணக்கெடுப்பு பணியை மேற்கொண்டனர்.

    இதில் குடிநீர் வடிகால், வீட்டின் தன்மை, மக்களின் வாழ்வியல், தாய் சேய் நலம், குழந்தை பிறப்பு, இறப்பு, தடுப்பூசி, ஊட்டச்சத்து, கருவறுதல், குடும்ப கட்டுப் பாடு சேவைகள், ரத்த அழுத்தம், ரத்தத்தில் சர்க்கரை அளவு, சுகா தாரம் மற்றும் சமூக நல திட்டங்களின் மதிப்பீடு பற்றிய தகவல்கள் சேகரிக்கப்படுகிறது.

    இந்த பணிகள் 4 நாட்கள் நடைபெற உள்ளது. இந்த பணிக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என பேரூராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    • 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு தேர்வு நாளை தொடங்கி 27-ந்தேதி வரை நடைபெறுகிறது.
    • 28-ந்தேதி முதல் அக்டோபர் 2-ந்தேதி வரை காலாண்டு தேர்வு விடுமுறை விடப்படுகிறது.

    சென்னை:

    தமிழக அரசு பாடத் திட்டத்தில் படிக்கும் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு நாளை (செவ்வாய்க்கிழமை) முதல் தொடங்குகிறது.

    6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு தேர்வு நாளை தொடங்கி 27-ந்தேதி வரை நடைபெறுகிறது.

    முன்னதாக கடந்த 15-ந்தேதி 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. 28-ந்தேதி முதல் அக்டோபர் 2-ந்தேதி வரை காலாண்டு தேர்வு விடுமுறை விடப்படுகிறது.

    மாநில பாடத்திட்டத்தில் படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் பொதுவான ஒரே வினாத்தாள் முறை மீண்டும் கொண்டு வரப்பட்டுள்ளது. அந்தந்த மாவட்ட கல்வி அலுவலகங்கள் மூலம் தயாரிக்கப்பட்டு வந்த வினாத்தாள் முறையால் மாணவர்களை மதிப்பீடு செய்வதில் வேறுபாடு ஏற்படுகிறது.

    அதனால் அனைத்து பள்ளி மாணவர்களும் ஒரே மாதிரியான வினாத்தாள்களை பின்பற்றி தேர்வு எழுதினால் ஏற்றத்தாழ்வு ஏற்படாது என்று கருதி மீண்டும் பொதுவான வினாத்தாள் திட்டம் நடை முறைப்படுத்தப்பட்டு உள்ளது.

    அரசு தேர்வுத்துறையால் தயாரிக்கப்படும் இந்த வினாத்தாள்களை அந்தந்த மாவட்ட கல்வி அதிகாரிகள் பதிவிறக்கம் செய்து பாதுகாப்பாக வைத்து தேர்வு நாளில் வினியோகிக்க வேண்டும். தேர்வுக்கு முன்னதாக வினாத்தாள் கசிந்தால் சம்பந்தப்பட்ட கல்வி அதிகாரிகள், தொடர்புடைய ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்ச ரிக்கை செய்யப்பட்டுள்ளது.

    அந்த அடிப்படையில் நாளை நடுநிலை மற்றும் உயர்நிலை பள்ளி மாணவர்களுக்கு பொதுவான வினாத்தாள் முறையில் தேர்வு நடைபெறுகிறது.

    ஏற்கனவே இருந்த இந்த தேர்வு முறையால் வினாத்தாள் தேர்வுக்கு முன்பே கசிந்து பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டது. தற்போது அதுபோன்ற தவறுகள் எதுவும் எங்கும் நடைபெறாமல் மிகுந்த கவனத்துடன் வினாத்தாள்களை கையாள வேண்டும் என்று கல்வித்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு உள்ளது.

    • திருச்செங்கோடு மண்டல அளவிலான இளையோர் மாணவர்களுக்கான தடகளப் போட்டி திருச்செங்கோடு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் தொடங்கியது.
    • வெற்றி பெறும் மாணவர்கள் மாவட்ட அளவில் நடக்க உள்ள தடகளப் போட்டிகளில் கலந்து கொண்டு விளையாடுவார்கள் என நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    திருச்செங்கோடு:

    நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு மண்டல அளவிலான இளையோர் மாணவர்களுக்கான தடகளப் போட்டி திருச்செங்கோடு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் தொடங்கியது.

    திருச்செங்கோடு ஈஸ்வரன் எம்.எல்.ஏ., பி.ஆர்.டி நிறுவனங்களின் மேலாண்மை இயக்குனர் மற்றும் நாமக்கல் மாவட்ட தடகள சங்க துணைத் தலைவர் பரந்தாமன் ஆகியோர் போட்டிகளை தொடங்கி வைத்தனர்.

    17 மற்றும் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான 1500, 800 மீட்டர் ஓட்டப்பந்தயம், 14 வயதுக்கு உட்பட்டோ ருக்கான 600 மீட்டர் ஓட்டப்பந்தயம், 14, 17, 19 வயதுக்கு உட்பட்டோ ருக்கான 100, 200, 400 மீட்டர் ஓட்டம் மற்றும் 400 மீட்டர் தடை தாண்டுதல் ஓட்டம், வட்டு எறிதல், 19 வயதுக்கு உட்பட்டோ ருக்கான நீளம் தாண்டுதல், 400 மீட்டர் தடை தாண்டுதல் ஓட்டம், 14, 17 வயதுக்கு உட்பட்டோருக்கான நீளம் தாண்டுதல் என்பது போன்ற 14 பிரிவுகளில் போட்டிகள் நடக்க உள்ளது.

    இந்தப் போட்டிகளில் மண்டல அளவில் உள்ள 32 பள்ளிகளை சேர்ந்த 1,258 மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    இதில் வெற்றி பெறும் மாணவர்கள் மாவட்ட அளவில் நடக்க உள்ள தடகளப் போட்டிகளில் கலந்து கொண்டு விளையாடுவார்கள் என நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    • நேரடியாக விற்பனை செய்வதற்கு வசதியாக வாழப்பாடியில் உழவர் சந்தை அமைக்க வேண்டுமென விவசாயிகள்,
    • பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.

    வாழப்பாடி:

    வாழப்பாடி பகுதி கிரா மங்களில் விளை விக்கப்ப டும் தக்காளி, தேங்காய் உள்ளிட்ட அனைத்து ரக காய்கறிகள், வாழைத்தார் மற்றும் பல்வேறு வகையான பூக்கள் உள்ளிட்ட விவசாய விளைபொருட்களை வாழப்பாடியில் இயங்கும் தனியார் ஏல மண்டிகளிலேயே விற்பனை செய்து வருகின்றனர்.

    எனவே விவசாயிகள் அன்றாடம் அறுவடை செய்யும் காய்கறிகளை , நுகர்வோரிடம் நேரடியாக விற்பனை செய்வதற்கு வசதியாக வாழப்பாடியில் உழவர் சந்தை அமைக்க வேண்டுமென விவசாயிகள், பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இதனையடுத்து அரசு வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை வாழப்பாடி யில் உழவர் சந்தை அமைக்க முன் வந்தது. விவசாயிகள் மற்றும் நுகர்வோர்கள் வந்து செல்வதற்கு பொருத்தமான இடத்தை தேர்வு செய்ய வாழப்பாடியில் பல இடங்களை அதிகாரிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் குழுவினர் பார்வையிட்ட னர். இறுதியாக, வாழப்பாடி கிழக்கு பள்ளக்காடு பகுதி யில் கடலுார் சாலையில் தனியார் பள்ளிக்கு அருகிலுள்ள அரசு பாதை புறம்போக்கு நிலத்தில் உழவர் சந்தை அமைக்க முடிவு செய்யப்பட்டு திட்ட முன்வரைவு தயாரிக்கப்பட்டது.

    நிதி ஒதுக்கீடு

    இதற்கு வேளாண் விற்பனை மற்றும் வணிக வரித்துறை இசைவு தெரி வித்ததால், கட்டுமானப்பணி களுக்கு நிதி ஒதுக்கப்பட்டது.

    இதனையடுத்து, வாழப்பாடியில் உழவர் சந்தை கட்டுமானப்பணிகள் முழுவீச்சில் தொடங்கி யுள்ளது. இதனால், வாழப்பாடி மற்றும் சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகளும், நுகர்வோர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    உழவர் சந்தை அமைப்ப தற்கு வழிவகை செய்த முன்னாள் எம்.எல்.ஏ.

    எஸ்.ஆர்.சிவலிங்கம், வட்டார ஆத்மா குழு தலை வர் எஸ்.சி. சக்கரவர்த்தி, பேரூராட்சி மன்ற தலைவர் கவிதா உள்ளிட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள், சேலம் மாவட்ட கலெக்டர் கார்மே கம், வாழப்பாடி தாசில்தார் கோபாலகிருஷ்ணன் மற்றும் அரசுத்துறை அதிகாரிகளுக்கும், விவ சாயிகளும், பொதுமக்களும் நன்றி தெரிவித்துள்ளனர்.  

    • ஸ்ரீ ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. ஒரே கல்லினால் 18 அடி உயரத்தில் உருவான ஸ்ரீ ஆஞ்சநேயர், சாந்த சொரூபியாக வணங்கிய நிலையில் பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார்.
    • அலங்கரிக்கப்பட்ட தங்கத் தேரில் எழுந்தருளி கோவில் உட்பிரகாரம் வலம் வந்து தேரோட்டம் நடைபெறும். தங்கத்தேர் இழுப்பதற்காக நாள் ஒன்றுக்கு ஒரு பக்தர் மட்டுமே, ரூ.2 ஆயிரம் கட்டணம் செலுத்தி முன் பதிவு செய்ய வேண்டும்.

    நாமக்கல்:

    நாமக்கல் கோட்டை பகுதியில் ஸ்ரீ ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. ஒரே கல்லினால் 18 அடி உயரத்தில் உருவான ஸ்ரீ ஆஞ்சநேயர், சாந்த சொரூபியாக வணங்கிய நிலையில் பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார்.

    இந்தியா முழுவதும் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் நாமக்கல் வந்து ஆஞ்சநேயரை தரித்து செல்கின்றனர்.

    பதிவு செய்துள்ள கட்டளைதாரர்கள் மூலம், தினசரி காலை 9.30 மணிக்கு சுவாமிக்கு 1,008 வடைமாலை அணிவிக்கப்பட்டு சிறப்பு தீபாராதனையும், தொடர்ந்து பால், தயிர், மஞ்சள், திருமஞ்சள், நல்லெண்ணை, பஞ்சாமிர்தம் போன்ற வாசனை திரவியங்களால் சுவாமிக்கு அபிசேகமும் நடைபெற்று வருகிறது.

    மதியம் 1 மணியளவில் அபிசேகம் நிறைவு பெற்று சுவாமிக்கு அலங்காரம் நடைபெறும். கட்டளை தாரர்கள் பதிவு செய்வதன் அடிப்படையில் சுவாமிக்கு வெள்ளிக்கவசம், தங்க கவசம், முத்தங்கி, மலர் அங்கி போன்ற அலங்காரம் நடைபெறும். பின்னர் தீபாராதணை நடைபெற்று பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படும்.

    மாலை 6 மணிக்கு சுவாமி உற்சவர், அலங்கரிக்கப்பட்ட தங்கத் தேரில் எழுந்தருளி கோவில் உட்பிரகாரம் வலம் வந்து தேரோட்டம் நடைபெறும். தங்கத்தேர் இழுப்பதற்காக நாள் ஒன்றுக்கு ஒரு பக்தர் மட்டுமே, ரூ.2 ஆயிரம் கட்டணம் செலுத்தி முன் பதிவு செய்ய வேண்டும். நாமக்கல் ஸ்ரீ ஆஞ்சநேயர் கோவிலில் திருப்பணிகள் செய்து, கும்பாபிசேகம் நடத்துவதற்கு இந்து சமய அறநிலையத்துறை அனுமதி அளித்துள்ளது.

    இதையொட்டி கடந்த ஜனவரி மாதம் முதல் திருப்பணி வேலைகள் நடைபெற்று வருகிறது. கோவில் உட்பிரகாரத்தில் தடுப்புகள் மற்றும் சாரங்கள் அமைக்கப்பட்டு திருப்பணி வேலைகள் மற்றும் கோவில் சுவர்கள் மற்றும் மேற்கூரையில் வர்ணம் தீட்டும் பணிகள் நடைபெற்று வந்தது. இதனால் தங்கத் தேரோட்டம் கடந்த 5 மாதங்களாக நடைபெறவில்லை.

    தற்போது கோவில் உட்பிரகாரத்தில் திருப்பணி வேலைகள் நிறைவு பெற்று சாரங்கள் மற்றும் தடுப்புகள் அகற்றப்பட்டுவிட்டன. இதனால் 9-ந் தேதி முதல் தங்கத்தேர் இழுப்பதற்காக பக்தர்கள் முன்பதிவு தொடங்கப்பட்டு உள்ளது. விருப்பமுள்ள பக்தர்கள் கோவில் அலுவலகத்தில் முன்பதிவு செய்து தங்கத்தேர் இழுக்கலாம் என கோவில் உதவி கமிஷனர் இளையராஜா தெரிவித்துள்ளார்

    • மதுரையில் தொடக்கப்பள்ளி வகுப்புகள் இன்று தொடங்கின.
    • ஆசிரியர்கள் இனிப்புகள் வழங்கி வரவேற்றனர்.

    மதுரை

    தமிழ்நாட்டில் வெயில் தாக்கத்தால் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறப்பில் தாமதமானது. இந்நிலையில் வெயிலின் தாக்கம் ஓரளவுக்கு குறைந்ததால் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளி வகுப்புகள் கடந்த 12-ந்தேதி தொடங்கின.

    1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரையிலான தொடக்கப் பள்ளிகள் இன்று திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி 1 முதல் 5 வரையிலான வகுப்புகள் இன்று திறக்கப்பட்டன. அனைத்து பள்ளிகளிலும் காலை 8 மணி முதல் குழந்தைகள் புத்தகப்பையுடன் பள்ளிகளுக்கு வந்தனர்.

    பள்ளிக் கூட வாசலில் முன்பு நின்றிருந்த ஆசிரியர்கள், இனிப்புகள் வழங்கியும் மலர் தூவியும் மாணவ-மாணவிகளை இன்முகத்துடன் உற்சாகமாக வரவேற்றனர். குழந்தைகளை பள்ளிகளுக்கு அனுப்ப வந்த பெற்றோர்கள், அவர்களை வாழ்த்தி அனுப்பி வைத்தனர்.

    மதுரை மாவட்டத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், மாநகராட்சி பள்ளிகள், கள்ளர் சீரமைப்பு துறை சார்பில் நடத்தப்படும் பள்ளிகளில் முதல் நாளான இன்றே பாடபுத்தகங்களும் வழங்கப்பட்டன.

    தனியார் பள்ளிகளிலும் இன்று முதல் 1-5 தொடக்க வகுப்புகள் தொடங்கியுள்ளது. இன்று முதல் 1 முதல் 12-ம் வகுப்பு வரை பள்ளிகள் முழுவதுமாக செயல்பட தொடங்கி உள்ளதால் மதுரையின் பல்வேறு இடங்களில் காலையில் வாகனங்கள் அதிகளவில் சென்றன. இதனால் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

    அரசு பள்ளிகளில் மாணவ-மாணவிகளுக்கு பாடபுத்தகங்கள் கொடுக்கப்பட்ட நிலையில் பல தனியார் பள்ளிகளில் இன்னும் பாட புத்தகங்கள் வழங்கப்படவில்லை. அரசு தரப்பில் இருந்து பாடப் புத்தகங்களை தனியார் பள்ளிகளுக்கு வழங்குவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளதாக தனியார் பள்ளிகள் தெரிவித்துள்ளன.

    எனவே உடனடியாக தனியார் பள்ளி மாணவர்களுக்கும் பாட புத்தகங்களை வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று பெற்றோர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

    • ம.தி.மு.க. 30-வது ஆண்டு தொடக்க விழா நடந்தது.
    • பொது மக்களுக்கு இனிப்பு வழங்கினர்.

    பசும்பொன்

    ராமநாதபுரம் மாவட்டம் கமுதி ம.தி.மு.க. ஒன்றியம் சார்பில் கட்சியின் 30-வது ஆண்டு தொடக்க நடந்தது. பஸ் நிலையம் முன்பு பொங்கல் வைத்து பொது மக்களுக்கு இனிப்பு வழங்கினர்.

    தெற்கு ஒன்றிய செயலாளர் கதிர்வேல் தலைமை தாங்கினார். வடக்கு ஒன்றிய செயலாளர் நாகபாண்டி, பொதுக்குழு உறுப்பினர் சந்திரன், மாவட்ட பிரதிநிதிகள் பொன்ராஜ், திம்மநாதபுரம் வெயில்முத்து, மாயக் கண்ணன், நகரச் செயலாளர்முத்துப்பாண்டி, ஒன்றிய துணைச் செயலாளர்கள் புதுக்குளம் போஸ், வழிவிட்டான், தேனிச்சாமி, சாந்தி நாகராஜ், மாவட்ட தொண்டரணி அமைப்பாளர்கள் முருகன், பெருமாள், கிருஷ்ணன், கிளைச் செயலாளர்கள் சின்ன முனியாண்டி மோகன் குமார், ராமமூர்த்தி ஜெகன், அய்யரப்பன், கிளாமரம் கிருஷ்ணன், சேதுராஜபுரம் மாரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • மேலூரில் ரூ.3.45 கோடியில் புதிய யூனியன் அலுவலக கட்டிட பணிகளை அமைச்சர் மூர்த்தி தொடங்கி வைத்தார்.
    • சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

    மேலூர் யூனியன் அலுவலகத்தில் புதிய கட்டிடம் கட்ட பூமி பூஜையை அமைச்சர் மூர்த்தி தொடங்கி வைத்தார். அருகில் மாவட்ட கலெக்டர் அனீஸ் சேகர், எம்.எல்.ஏ.க்கள் பெரியபுள்ளான், வெங்கடேசன், பூமிநாதன் மற்றும் பலர் உள்ளனர்.

    மதுரை மாவட்டம் மேலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ரூ. 3.45 கோடி மதிப்பில் புதிய யூனியன் கட்டிடம் கட்டும் பணிக்கான பூமி பூஜை நடந்தது. இதில் அமைச்சர் மூர்த்தி கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்தார்.

    இதில் மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் அனீஷ் சேகர், மேலூர் சட்ட மன்ற உறுப்பினர் பெரிய புள்ளான் என்ற செல்வம், சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன், தெற்கு சட்டமன்ற உறுப்பி னர் பூமிநாதன், கூடுதல் ஆட்சியர் சரவணன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் சூரியகலா, மாவட்ட கவுன்சிலர் நேரு பாண்டியன், மேலூர் யூனியன் சேர்மன் பொன்னுச்சாமி, முன்னாள் எம்.எல்.ஏ தமிழரசன், வள்ளாலபட்டி பேரூராட்சி சேர்மன் குமரன், மேலூர் யூனியன் வைஸ் சேர்மன் பாலகிருஷ்ணன், மேலூர் நகராட்சி சேர்மன் முகமது யாசின், மேலூர் வட்டார வளர்ச்சி அலுவலர் பாலச்சந்தர், மேலூர் வட்டாட்சியர் சரவண பெருமாள், மேலூர் நகராட்சி ஆணையாளர் ஆறுமுகம், யூனியன் முன்னாள் சேர்மன்கள் செல்வராஜ், வெற்றிச்செழியன், முன்னாள் துணைச் சேர்மன் குலோத்துங்கன், தி.மு.க. மாநில பொதுக்குழு உறுப்பினர் சுபைத அப்பாஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    மேலூர் வட்டம் தெற்கு தெரு மற்றும் கருத்த புளியம்பட்டி கிராமத்தில் வீட்டுவசதி மற்றும் நகர்புற வளர்ச்சித் துறையின் தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் ரூ. 84.20 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு உள்ள அடுக்கு மாடி குடியிப்பு கட்டிடங்களை சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

    அதனை தொடர்ந்து அமைச்சர் மூர்த்தி குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்து பயனாளிகளுக்கு குடியிருப்புக்கான ஆணை களை வழங்கினார்.

    • பரமக்குடியில் சவுராஷ்டிரா மேல்நிலைப்பள்ளியில் கலைத்திருவிழா நடந்தது.
    • இதனை முருகேசன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

    பரமக்குடி

    ஒருங்கிணைந்த பள்ளி கல்வி ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி வட்டார வள மையம் சார்பாக வட்டார அளவிலான கலைத்திருவிழா சவுராஷ்டிரா மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.

    ராமநாதபுரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மாரிமுத்து தலைமையில், நகர் மன்ற தலைவர் சேது கருணாநிதி முன்னிலையில், பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் முருகேசன் தொடங்கி வைத்தார். இந்த கலைத் திருவிழாவில் மாணவ, மாணவிகள் அழிந்து வரும் கலை வடிவங்களை மீட்டெடுக்கும் வகையில் கலைநிகழ்ச்சிகளை நடத்தினர்.

    இந்த நிகழ்ச்சியில், பரமக்குடி மாவட்ட கல்வி அலுவலர் முருகம்மாள், வட்டார கல்வி அலுவலர்கள் ரவிக்குமார், சுதாமதி, சவுராஷ்டிரா மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் நாகராஜன், வட்டார வளமைய ஒருங்கிணைப்பா ளர்கள் மற்றும் ஆசிரியர் ஆசிரியைகள் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    ×