search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ரூ.3.45 கோடியில் புதிய யூனியன் அலுவலக கட்டிட பணிகள்
    X

    மேலூர் யூனியன் அலுவலகத்தில் புதிய கட்டிடம் கட்ட பூமி பூஜையை அமைச்சர் மூர்த்தி தொடங்கி வைத்தார். அருகில் மாவட்ட கலெக்டர் அனீஸ் சேகர், எம்.எல்.ஏ.க்கள் பெரியபுள்ளான், வெங்கடேசன், பூமிநாதன் மற்றும் பலர் உள்ளனர்.

    ரூ.3.45 கோடியில் புதிய யூனியன் அலுவலக கட்டிட பணிகள்

    • மேலூரில் ரூ.3.45 கோடியில் புதிய யூனியன் அலுவலக கட்டிட பணிகளை அமைச்சர் மூர்த்தி தொடங்கி வைத்தார்.
    • சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

    மேலூர் யூனியன் அலுவலகத்தில் புதிய கட்டிடம் கட்ட பூமி பூஜையை அமைச்சர் மூர்த்தி தொடங்கி வைத்தார். அருகில் மாவட்ட கலெக்டர் அனீஸ் சேகர், எம்.எல்.ஏ.க்கள் பெரியபுள்ளான், வெங்கடேசன், பூமிநாதன் மற்றும் பலர் உள்ளனர்.

    மதுரை மாவட்டம் மேலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ரூ. 3.45 கோடி மதிப்பில் புதிய யூனியன் கட்டிடம் கட்டும் பணிக்கான பூமி பூஜை நடந்தது. இதில் அமைச்சர் மூர்த்தி கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்தார்.

    இதில் மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் அனீஷ் சேகர், மேலூர் சட்ட மன்ற உறுப்பினர் பெரிய புள்ளான் என்ற செல்வம், சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன், தெற்கு சட்டமன்ற உறுப்பி னர் பூமிநாதன், கூடுதல் ஆட்சியர் சரவணன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் சூரியகலா, மாவட்ட கவுன்சிலர் நேரு பாண்டியன், மேலூர் யூனியன் சேர்மன் பொன்னுச்சாமி, முன்னாள் எம்.எல்.ஏ தமிழரசன், வள்ளாலபட்டி பேரூராட்சி சேர்மன் குமரன், மேலூர் யூனியன் வைஸ் சேர்மன் பாலகிருஷ்ணன், மேலூர் நகராட்சி சேர்மன் முகமது யாசின், மேலூர் வட்டார வளர்ச்சி அலுவலர் பாலச்சந்தர், மேலூர் வட்டாட்சியர் சரவண பெருமாள், மேலூர் நகராட்சி ஆணையாளர் ஆறுமுகம், யூனியன் முன்னாள் சேர்மன்கள் செல்வராஜ், வெற்றிச்செழியன், முன்னாள் துணைச் சேர்மன் குலோத்துங்கன், தி.மு.க. மாநில பொதுக்குழு உறுப்பினர் சுபைத அப்பாஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    மேலூர் வட்டம் தெற்கு தெரு மற்றும் கருத்த புளியம்பட்டி கிராமத்தில் வீட்டுவசதி மற்றும் நகர்புற வளர்ச்சித் துறையின் தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் ரூ. 84.20 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு உள்ள அடுக்கு மாடி குடியிப்பு கட்டிடங்களை சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

    அதனை தொடர்ந்து அமைச்சர் மூர்த்தி குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்து பயனாளிகளுக்கு குடியிருப்புக்கான ஆணை களை வழங்கினார்.

    Next Story
    ×