search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Construction works"

    • சென்னை மெட்ரோ ரெயில் கட்டுமானப் பணிகள் செயின்ட் தாமஸ் மவுண்ட் ரெயில் நிலையத்தில் நடைபெற உள்ளது.
    • போக்குவரத்து மாற்றங்கள் ஒரு வார காலத்திற்கு சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்படும்.

    சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    சென்னை மெட்ரோ ரெயில் கட்டுமானப் பணிகள் செயின்ட் தாமஸ் மவுண்ட் ரெயில் நிலையத்தில் நடைபெற உள்ளதால், இப்பணிகளைக் கருத்தில் கொண்டு செயின்ட் தாமஸ் மவுண்ட் பகுதிகளில் பின்வரும் போக்குவரத்து மாற்றங்கள் நாளை (21-ந்தேதி) முதல் ஒரு வார காலத்திற்கு சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்படும்.

    ஜி.எஸ்.டி. சாலையில் இருந்து வரும் வாகனங்கள் வழக்கம் போல் ஆலந்தூர் சுரங்கப்பாதையை நோக்கி இடதுபுறமாக செல்லலாம். இந்த சாலையில் கனரக வாகனங்கள் மட்டும் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. எம்.கே.என். ரோடு மற்றும் ரெயில் நிலைய சாலை சந்திப்பில் இருந்து வரும் வாகனங்கள் நேராக மவுண்ட் போஸ்ட் ஆபிஸ் நோக்கி செல்ல அனுமதி இல்லை.

    ஆலந்தூர் சுரங்கப்பாதையில் இருந்து வரும் வாகனங்கள் ஜி.எஸ்.டி. சாலையில் செல்வதற்கு வலதுபுறமாகவோ அல்லது இடப்புறமாகவோ செல்லலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • போலீஸ் அவுட் போஸ்ட், நேர காப்பாளர் அறை ஆகியன அமையவுள்ளது.
    • அனைத்து வளாகங்களிலும் கழிப்பறைகள், குளியல் அறை வசதி அமைக்கப்படவுள்ளது.

    திருப்பூர்:

    திருப்பூர் மாநகராட்சி சார்பில் கோவில்வழியில் புதிய பஸ் நிலையம் கட்டப்படுகிறது. மாநகராட்சி பகுதியில் 3- வது பஸ் நிலையமாக அமையும் இந்த பஸ் நிலையம் 26 கோடி ரூபாய் செலவில் கட்டப்படுகிறது. திருப்பூருக்கு தாராபுரம் வழியாக வந்து செல்லும் பஸ்கள் இந்த பஸ் நிலையத்தில் வந்து திரும்பும் வகையில் பிரதான வளாகம், தெற்கு, மேற்கு மற்றும் மத்திய வளாகம் ஆகிய பிரிவுகளாக கட்டப்படுகிறது. இதில் மேற்கு வளாகத்தில், 8 பஸ் ரேக்குகள், 15 கடைகள், காத்திருப்பு அறை, போலீஸ் அவுட் போஸ்ட், நேர காப்பாளர் அறை ஆகியன அமையவுள்ளது.

    முதல் தளத்தில் பொருள் பாதுகாப்பு அறை, அறிவிப்பு மையம், கேமரா பதிவு கண்காணிப்பு அறை, நிர்வாக அலுவலகம், ஊழியர் அறை ஆகியன அமையவுள்ளது. தெற்கு வளாகத்தில் 15 பஸ்கள் நிற்கும் வகையிலான ரேக்குகள் மற்றும் 11 கடைகள் அத்துடன் பயணிகள் காத்திருப்பு அறை, ஏ.டி.எம்., அறை, தாய்மார்கள் பாலூட்டும் அறை உள்ளிட்டவை அமைகிறது. மேற்கு பகுதியில் அமையும் வளாகம் 5 பஸ் ரேக்குகள் , ஊழியர்கள் அறை மற்றும் சுகாதார பிரிவு அலுவலகம் ஆகியவற்றுடன் கட்டப்படுகிறது. மைய வளாகம் 14 பஸ் ரேக்குகள், 10 கடைகள், நேரக்காப்பாளர் அறை ஆகியவற்றுடன் அமைகிறது.

    மேலும் அனைத்து வளாகங்களிலும் கழிப்பறைகள், குளியல் அறை வசதி அமைக்கப்படவுள்ளது. இவற்றுடன் இரு சக்கர வாகன பார்க்கிங் வளாகமும் இங்கு அமையவுள்ளது. இதையடுத்து பூமி பூஜை நடத்தி பணிகள் துரிதமாக தொடங்கப்பட்டது. தற்போது இதில் முதல் கட்டமாக மத்திய வளாகம் கட்டுமானம் பெருமளவு நிறைவடையும் தருவாயில் உள்ளது. இந்நிலையில் பயன்பாட்டில் உள்ள பஸ் நிலையம் செயல்பாடு பாதிக்காத வகையில், ஒவ்வொரு கட்டமாக பணிகள் நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது. 

    • சிங்கம்புணரியில் புதிய பேரூராட்சி கட்டிடப்பணிகளை அமைச்சர் தொடங்கி வைத்தார்.
    • சிங்கம்புணரி ஒன்றிய செயலாளர் பாலசுப்பிரமணியம், எஸ்.புதூர் ஒன்றிய செயலாளர் செல்வராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    சிங்கம்புணரி

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி தேர்வுநிலை பேரூராட்சிக்கு ரூ.1 கோடி மதிப்பீட்டில் 374 சதுர மீட்டர் பரப்பளவில் புதிய கட்டிடம் அமைய உள்ளது. இந்த புதிய அலுவலக கட்டிடத்தில் செயல் அலுவலர், தலைவர் அறை, மன்ற கூட்ட அறை, அலுவலர்கள் அறை, கணினி அறை, வசூல் அறை, பதிவு அறை, பொதுமக்கள் காத்திருப்பு அறை, ஜெனரேட்டர், டைனிங் டேபிள், சுகாதார வசதி, இருசக்கர வாகன நிறுத்து மிடம் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் திட்டமிடப்பட்டுள்ளது.

    இதற்கான பூமி பூஜை விழா நடைபெற்றது. அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன், கலெக்டர் ஆஷா அஜித் ஆகியோர் கலந்து கொண்டு புதிய கட்டிட பணிகளை தொடங்கி வைத்தனர். பின்னர் அமைச்சர் பேசியதாவது:-

    சிங்கம்புணரி பேரூராட்சிக்கு ரூபாய் 57 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட் டுள்ளது. ரூ.15 கோடி மதிப்பிலான பணிகள் முடிக்கப்பட்டு பொதுமக்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இன்னும் ரூ.37 கோடி மதிப்பிலான பணிகள் நடைபெற்று வருகிறது. அதில் ரூ.5 கோடி 50 லட்சம் மதிப்பிலான பணிகள் மதிப்பீட்டில் உள்ளது. மேலும் சிங்கம்புணரியை நகராட்சியாக மாற்றுவதற்கான பணிகள் துரிதப்படுத்தப்படும்.

    இவ்வாறு அமைச்சர் பேசினார்.

    நிகழ்ச்சியில் பேரூராட்சி சேர்மன் அம்பலமுத்து, துணை சேர்மன் இந்தியன் செந்தில் குமார், செயல் அலுவலர் சண்முகம், வட்டாட்சியர் சாந்தி, முன்னாள் எம்.எல்.ஏ. அருணகிரி, மாவட்ட ஊராட்சி சேர்மன் பொன் மணி. பாஸ்கரன், சிங்கம்புணரி ஒன்றிய செயலாளர் பாலசுப்பிரமணியம், எஸ்.புதூர் ஒன்றிய செயலாளர் செல்வராஜ், பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் ராஜமாணிக்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • தொழிலாளர் நலத்துறையின் சார்பில் மாவட்ட கலெக்டர் ஷஜீவனா தலைமையில் கண்காணிப்புக் குழுக்கூட்டம் நடைபெற்றது.
    • தேனி மாவட்டத்தில் கட்டிடம், கட்டுமான பணிகள் பதிவு செய்வது அவசியம் என கலெக்டர் தெரிவித்தார்.

    தேனி

    தேனி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், தொழிலாளர் நலத்துறையின் சார்பில் மாவட்ட கலெக்டர் ஷஜீவனா தலைமையில் கண்காணிப்புக் குழுக்கூட்டம் நடைபெற்றது.

    தேனி மாவட்டத்தில் அரசு சார்பாக நேரடியாகவோ அல்லது ஒப்பந்ததாரர்களை கொண்டோ நடைபெற்றுவரும் கட்டுமானப் பணிகளை இச்சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட வேண்டும். மேலும், தனியார் கட்டுமானப் பணியிடங்கள், தனிப்பட்ட பொறியாளர்கள் மூலமாக கட்டப்படும் கட்டுமானங்களும் இச்சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட வேண்டும். பதிவு செய்திருந்தால் மட்டுமே அங்கு பணிபுரியும் கட்டிடத் தொழிலாளர்களுக்கான பாதுகாப்பையும், சுகாதாரத்தையும் நேரடியாக கண்காணித்து ஆலோசனைகள் வழங்கப்படும்.

    மேலும், அவர்களை தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நலவாரியத்தில் பதிவுசெய்து அவர்களுக்கான நலத்திட்ட உதவிகளை முழுமையாக கிடைக்க நடவடிக்கை எடுக்க முடியும். கட்டுமானப் பணியிடத்தில் ஒரு தொழிலாளி விபத்து ஏற்பட்டு இறக்க நேரிட்டால், அத்தொழிலாளியின் குடும்பத்திற்கு இச்சட்டத்தின்படி தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நலவாரியத்தின் மூலமாக ரூ.5,00,000 இழப்பீடு வழங்கப்படும். மேலும் பணிபுரியும் கட்டுமானப் பணியிடத்தில் தொழிலாளிக்கு விபத்து ஏதேனும் ஏற்பட்டால் அவ்விபத்தின் மூலம் ஏற்பட்ட காயங்கள் மற்றும் ஊனங்களின் வீரியத்தைப் பொறுத்து ரூ.1,00,000 இழப்பீட்டு தொகை வழங்கப்படும்.

    கட்டுமானப் பணியிடத்தில் பணிபுரியும் அனைத்து பிற மாநில தொழிலாளர்களையும் தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நலவாரியத்தில் பதிவு செய்வதன் மூலமாக அத்தொழிலாளர்களுக்கும் அனைத்து நலத்திட்ட உதவிகளும் அளிக்கப்படும். ஆகவே தேனி மாவட்டத்தில் நடைபெறும் தனியார் கட்டிடம் மற்றும் இதரகட்டுமானப் பணியிடங்கள், தனிப்பட்ட பொறியாளர் மூலமாக கட்டப்படும் கட்டுமானங்கள் மற்றும் அரசு சார்ந்தகட்டுமானப் பணியிடங்கள் அனைத்தும் இச்சட்டத்தின்கீழ் பதிவு செய்ய அறிவுறுத்தப்படுகிறார்கள்.

    மேலும், இது தொடர்பான விவரங்கள் அறிய துணை இயக்குநர், தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதாரம், நேருஜி நகர், திண்டுக்கல். (திண்டுக்கல், தேனி, கரூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களை உள்ளடக்கியது) என்ற முகவரியை தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் தெரிவித்தார்.

    • அழகாபுரி - அயன்கரிசல்குளம் நெடுஞ்சாலையில் உயர்மட்ட பாலம் அமைக்கும் பணியினை மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
    • நிகழ்ச்சியில் தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    விளாத்திகுளம் அருகே புதூர் ஊராட்சி ஒன்றி யத்துக்கு உட்பட்ட அழகாபுரி - அயன்கரிசல்குளம் நெடுஞ்சாலையில் ரூ.1.90 கோடி மதிப்பீட்டில் புதிய உயர்மட்ட பாலம் அமைக்கும் பணியினை மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் உதவி கோட்ட பொறியாளர் கிறிஸ்டோபர், இளநிலை பொறியாளர்கள் எபனேசர், ஹெப்சிபா ஜோன்ஸ், வட்டார வளர்ச்சி அலுவலர் சசிகுமார், புதூர் மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் மும்மூர்த்தி, மத்திய ஒன்றிய செயலாளர் ராதா கிருஷ்ணன், கிழக்கு ஒன்றிய செயலாளர் செல்வராஜ், விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்ன மாரிமுத்து, மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் ஞானகுருசாமி, ஒப்பந்த தாரர் சுப்பாரெட்டியார், அயன்கரிசல்குளம் ஊராட்சி தலைவர் தங்க பாண்டியம்மாள், வெம்பூர் ஊராட்சி தலைவர் ராஜேஸ்வரி பரமசிவம், ஒன்றிய பிரதிநிதி சர்க்கரை, கிளை செயலாளர்கள் நாக ராஜ், மணி பிரகாசம், வேல் ராஜ், மாரிச்சாமி, பெரிய சாமி, சுப்பையா, குருசாமி, விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி தகவல் தொழில் நுட்ப அணி ஒருங்கிணைப் பாளர் ஸ்ரீதர் மற்றும் அரசு அதிகாரிகள், ஊர் பொது மக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • ரூ.3 கோடி 50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வருகிறது.
    • செங்குட்டுவன், தண்டபாணி மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் உடனிருந்தனர்.

    விழுப்புரம்:

    மேல்மலையனூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிடம் ரூ.3 கோடி 50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வருகிறது. இதன் பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளதால் இதை மாவட்ட கூடுதல் கலெக்டர் ஸ்ருதன் ஜெய் நாராயணன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது வட்டார கல்விக்குழு தலைவர் நெடுஞ்செழியன்,வட்டார வளர்ச்சி அலுவலர்கள் குலோத்துங்கன், சரவண குமார்,உதவி பொறியாளர்கள் நாராய ணசாமி, செங்குட்டுவன், தண்டபாணி மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் உடனிருந்தனர்.

    செஞ்சி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு கூடுதல் கலெக்டர் சுருதன் ஜெய் நாராயணன் ஆய்வு செய்தார். அப்போது அவருக்கு செஞ்சி ஒன்றிய குழு தலைவர் விஜயகுமார், பேரூராட்சி மன்ற தலைவர் மொக்தியார் மஸ்தான், மாவட்ட கவுன்சிலர் அரங்க ஏழுமலை ஆகியோர் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். தொடர்ந்து கூடுதல் கலெக்டர் அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டார். அவர் அலுவலகத்தின் பல்வேறு பகுதிகளை பார்வையிட்டு அலுவலக வளாகத்தில் மரக்கன்றுகளையும் நட்டு வைத்தார். அப்போது வட்டார வளர்ச்சி அலுவல ர்கள் சீத்தாலட்சுமி, வெங்கட சுப்பிரமணியன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பழனி, சுந்தரபாண்டியன், குமார், ஜெகநாதன், கலா, சுரேஷ், அப்துல்லா மற்றும் அலுவலக பணியாளர்கள் உடன் இருந்தனர்.

    • அ.தி.மு.க. ஆட்சியில் ரூ.44 கோடி மதிப்பீட்டில் புதிய வடிகால் வாய்க்கால் கட்டுவதற்கு பணிகள் தொடங்கப்பட்டது.
    • இதனால் பொதுமக்கள் முன்பை விட தற்போது அதிகளவில் பாதிப்படைந்து வருகின்றனர்.

    கடலூர்:

    கடலூர் மாநகராட்சியில் 45 வார்டுகள் உள்ளன. இங்கு கழிவுநீர் செல்வதற்கு வாய்க்கால்கள் இருக்கிறது. கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் ரூ.44 கோடி மதிப்பீட்டில் புதிய வடிகால் வாய்க்கால் கட்டுவதற்கு பணிகள் தொடங்கப்பட்டது. இதனால் மழைக்காலங்களில் கழிவுநீர் வெளியேற முடியாமல் வீடுகளுக்குள் மழை நீர் மற்றும் கழிவு நீர் புகுந்து பெருமளவில் சேதம் ஏற்பட்டது. இதனால் வடிகால் வாய்க்கால் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வந்தது. கடலூர் வில்வ நகர் பகவதி அம்மன் கோவில் தெருவில் வடிகால் வாய்க்கால் கட்டப்பட்டு வந்த நிலையில், இப்பணி பாதியில் நிறுத்தப்பட்டது. இதன் காரணமாக காலியாக உள்ள இடங்களில் கழிவுநீர் குட்டை போல் தேங்கி கடும் துர்நாற்றம் வீசி வருகிறது.

    மேலும், மழைநீர் வடிகால் வாய்க்கால் வழியாக செல்ல முடியாமல் அந்தப் பகுதிகளில் உள்ள வீடுகளை சூழ்ந்து பெரும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றது. இது தொடர்பாக பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு புகார் அளித்தும், நடவடிக்கை எடுக்கவில்லை. இதேபோல கடலூர் மாநகராட்சி பகுதியில் புதிதாக வடிகால் வாய்க்கால் கட்டும் பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் முன்பை விட தற்போது அதிகளவில் பாதிப்படைந்து வருகின்றனர். ஆகையால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இது தொடர்பாக ஆய்வு செய்து, பாதியில் நிறுத்தப்பட்டுள்ள வடிகால் வாய்க்காலை முழுமையாக கட்டி முடிக்க வேண்டும். வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பு இதற்குரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • ராமநாதபுரத்தில் புதிய பஸ் நிலைய கட்டுமான பணிகளை எம்.எல்.ஏ., கலெக்டர் தொடங்கி வைத்தனர்.
    • ராமேசுவரம் உள்ளிட்ட சுற்றுலா தலங்களுக்கு செல்ல போதுமான பஸ் வசதிகளுடன் இந்த பஸ் நிலையம் செயல்படும்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரத்தில் நகராட்சிநிர்வாகம் மூலம் ரூ.20 கோடி மதிப்பீட்டில் புதிய பஸ் நிலையம் கட்டுவதற்கான பூமிபூஜை நடந்தது. காதர்பாட்ஷா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ., கலெக்டர் விஷ்ணு சந்திரன் கலந்து கொண்டு பூமிபூஜையை தொடங்கி வைத்தனர்.

    பின்னர் கலெக்டர் கூறியதாவது:-

    ராமநாதபுரம் வளர்ந்து வரும் நகராட்சியாக உள்ளது. பல்வேறு மாவட்ட மக்கள் வந்து செல்லும் பகுதியாக ராமநாதபுரம் உள்ளதால் பெரிய பஸ் நிலையம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இந்த நிலையில் தற்போது நகராட்சி நிர்வாகம் மூலம் ரூ.20 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு 16909.5 சதுரடி பரப்பில் பஸ் நிலையம் அமைக்கப்பட உள்ளது. இதற்கான கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.

    பல்வேறு மாவட்டங்களில் இருந்து ராமேசுவரம் உள்ளிட்ட சுற்றுலா தலங்களுக்கு செல்ல போதுமான பஸ் வசதிகளுடன் இந்த பஸ் நிலையம் செயல்படும். ஒரு ஆண்டுக்குள் பஸ் நிலைய பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதில் ராமநாதபுரம் நகர்மன்றதலைவர் கார்மேகம், ராமநாதபுரம் நகராட்சி ஆணையாளர் அஜிதாபர்வீன், ராமநாதபுரம் நகர்மன்ற துணைத்தலைவர் பிரவீன் தங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • வாழப்பாடி பேரூராட்சியில், ரூ.8.70 கோடி மதிப்பீட்டில் நவீன ஈரடுக்கு நவீன பஸ் நிலையம் அமைக்கும் பணி ஓராண்டுக்கு மேலாக நடைபெற்று வருகிறது.
    • சேலம் மண்டல பேருராட்சி உதவி இயக்குநர் கணேஷ்ராம் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.

    வாழப்பாடி:

    சேலம் மாவட்டம் வாழப்பாடி பேரூராட்சியில், ரூ.8.70 கோடி மதிப்பீட்டில் நவீன ஈரடுக்கு நவீன பஸ் நிலையம் அமைக்கும் பணி ஓராண்டுக்கு மேலாக நடைபெற்று வருகிறது.

    இதேபோல் ச.வாழப்பாடி மயானத்தில் ரூ.1.50 கோடி மதிப்பீட்டில் நவீன எரிவாயு தகனமேடை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

    இத்திட்டப் பணிகளை, சேலம் மண்டல பேருராட்சி உதவி இயக்குநர் கணேஷ்ராம் நேற்று ஆய்வு மேற்கொண்டார். இரு பணிகளையும் விரைந்து முடித்து, மக்கள் பயன் பட்டிற்கு அர்ப்பணிக்க வேண்டுமென ஒப்பந்ததாரர்களுக்கு அறிவுறுத்தினார்.

    ஆய்வின் போது, வாழப்பாடி பேரூராட்சி செயல் அலுவலர் கணேசன், உதவி பொறியாளர் தினேஷ்குமார், பேரூராட்சி தலைவர் கவிதா சக்கர வர்த்தி, துணைத்தலைவர் எம்.ஜி.ஆர். பழனிசாமி மற்றும் பேரூராட்சி உறுப்பி னர்கள் உடனிருந்தனர்.

    • இளையான்குடியில் புதிய பஸ் நிலைய கட்டுமான பணிகளை கூடுதல் தலைமை செயலாளர் ஆய்வு செய்தார்.
    • இந்தப்பணிகள் கீழ் ரூ.3கோடியே 74 லட்சம் மதிப்பீட்டில் புதிய பஸ் நிலைய கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் இளையான்குடி தேர்வுநிலை பேரூராட்சியில் சிவகங்கை-பரமக்குடி சாலையில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.3கோடியே 74 லட்சம் மதிப்பீட்டில் புதிய பஸ் நிலைய கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது.

    இந்த பணிகளை நகராட்சி நிர்வாக கூடுதல் தலைமை செயலாளர் சிவதாஸ் மீனா, பேரூராட்சிகளின் கூடுதல் இயக்குநர் திருமலைமான் முடிகாரி ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பஸ் நிலைய கட்டுமான பணிகளை விரைந்து முடித்து வருகிற மே மாதத்துக்குள் பயன்பாட்டுக்கு கொண்டுவருமாறு உயர் அதிகாரிகள் அறிவுரை வழங்கினர்.

    மேலும் கூடுதல் தலைமை செயலாளர் தன்னிடமிருந்த பிஸ்கட், முந்திரி, உலர் திராட்சை பழங்களை கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களுக்கு வழங்கி மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார்.

    இந்த ஆய்வின் போது மதுரை மண்டல செயற் பொறியாளர் செல்வராஜ், சிவகங்கை மண்டல உதவி செயற்பொறியாளர் ரங்கராஜ், இளையான்குடி பேரூராட்சி திட்ட பொறி யாளர் சந்திரமோகன், செயல் அலுவலர் கோபிநாத் மற்றும் பலர் பங்கேற்றனர்.

    • ரெயில்வே மேம்பாலம் கட்டுமான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
    • இதைத்தொடர்ந்து கடந்த சில மாதங்களாக மேம்பாலம் வேலைகள் நடந்து வருகிறது.

    சோழவந்தான்

    மதுரை மாவட்டம் சோழ வந்தானில் ரெயில்வே மேம்பாலம் கட்ட கடந்த 2016-ம் ஆண்டில் ரூ.45கோடி நிதி ஓதுக்கீடு செய்து அன்றைய முதல்வர் ஜெயலலிதா அடிக்கல் நாட்டினார். பின்னர் மதுரை கோட்ட நெடுஞ்சாலைதுறை கட்டுமான பிரிவு மூலம் பணிகள் தொடங்கியது.

    தொடர்ந்து சர்வீஸ் சாலை நில ஆர்ஜிதம் உள்ளிட்ட பணிகளுக்காக பாலம் கட்டும் பணியில் தொய்வு ஏற்பட்டது. இதனால் காலக்கெடு முடிந்ததால் பாலம் வேலை கள் பாதியிலே நின்று போனது.

    இதன் பின்னர் பாலம் பணிகளை தொடங்கக்கோரி கம்யூனிஸ்டு கட்சியினர் மற்றும் சமூக ஆர்வலர்கள் பல்வேறு கட்ட போராட்டங் களை நடத்தினர்.

    இதையடுத்து 2020-ம் ஆண்டு தமிழக நெடுஞ் சாலைத்துறை ரூ.17கோடி மதிப்பீட்டில் மறுடெண்டர் விட்டது. அதன்பின் 2021-ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் இருந்து மேம்பால பணிகள் மற்றும் அணுகுசாலை அமைக்கும் பணிகள் தொடங்கியது. நெடுஞ்லை துறை அதிகாரிகள் முன்னி லையில் ஆமை வேகத்தில் பணிகள் நடந்து வந்தது.

    இதுபற்றி புகார் எழுந்ததால் அமைச்சர் மூர்த்தி, வெங்கடேசன் எம்.எல்.ஏ., மாவட்ட கலெக்டர் அனீஷ்சேகர் உள்ளிட்டோர் பாலம் கட்டும் பணிகளை நேரில் சென்று பார்வை யிட்டு ஆய்வு செய்தனர். அப்போது மேம்பாலம் மற்றும் அணுகு சாலை பணிகளுக்கு இடையூராக இருந்து வந்த டிரான்ஸ்பார்மர் மற்றும் மின் கம்பங்கள், பேரூராட்சி குடிநீர் குழாய் உள்ளிட்ட வைகளுக்கு மாற்று ஏற்பாடு செய்ய ஆலோசனைகள் வழங்கினர்.

    இதைத்தொடர்ந்து கடந்த சில மாதங்களாக மேம்பாலம் வேலைகள் நடந்து வருகிறது. இந்த மாதம் முதல் பாலப்பணிகள் மிக வேகமாக நடந்து வருகிறது. மேலும் பாலம் மேல் பகுதி மற்றும் அணுகுசாலை ஆகிய பகுதிகளில் தற்போது தார்ச்சாலை அமைக்கும் பணிகளை நெடுஞ்சாலைத்துறை கோட்ட செயற்பொறியாளர் பிரசன்ன வெங்கடேஷ், கட்டுமான பிரிவு செயற்பொறியாளர் சாருமதி ஆகியோர் பார்வையிட்டனர்.

    வரும் மார்ச் மாதம் பாலம் வேலைகள் முடிந்து அதனை திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அவர்கள் தெரிவித்தனர்.

    • குடியாத்தம்-சித்தூர் சாலை, பரதராமி-பனமடங்கி சாலைகளை பார்வையிட்டார்
    • அதிகாரிகள் உடன் இருந்தனர்

    குடியாத்தம்:

    வேலூர் கோட்டம் குடியாத்தம் பகுதியில் நெடுஞ்சாலைத்துறை சார்பாக நடைபெற்று வரும் பணிகளை நெடுஞ்சாலைத்துறை திருவண்ணாமலை வட்ட கண்காணிப்பு பொறியாளர் நெடுஞ்சாலைகள் மற்றும் கட்டுமானம் பராமரிப்பு பணிகளை எஸ்.பழனிவேல் ஆய்வு செய்தார்.

    பின்னர் குடியாத்தம்-சித்தூர் சாலை, பரதராமி-பனமடங்கி சாலை உள்ளிட்ட பகுதிகளில் அமைக்கப்பட்ட சாலைகளையும் பொறியாளர் பார்வையிட்டார்.

    இந்த ஆய்வின்போது நெடுஞ்சாலைத்துறை வேலூர் கோட்ட பொறியாளர் ஆர்.என். தனசேகரன், குடியாத்தம் உதவி கோட்ட பொறியாளர் ஆர்.எஸ்.சம்பத்குமார், வேலூர் தரக்கட்டுப்பாடு உதவி கோட்ட பொறியாளர் கே.ரவிச்சந்திரன்உதவி பொறியாளர் ப.யோகராஜ் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

    ×