என் மலர்
நீங்கள் தேடியது "Construction works"
- ராமநாதபுரத்தில் புதிய பஸ் நிலைய கட்டுமான பணிகளை எம்.எல்.ஏ., கலெக்டர் தொடங்கி வைத்தனர்.
- ராமேசுவரம் உள்ளிட்ட சுற்றுலா தலங்களுக்கு செல்ல போதுமான பஸ் வசதிகளுடன் இந்த பஸ் நிலையம் செயல்படும்.
ராமநாதபுரம்
ராமநாதபுரத்தில் நகராட்சிநிர்வாகம் மூலம் ரூ.20 கோடி மதிப்பீட்டில் புதிய பஸ் நிலையம் கட்டுவதற்கான பூமிபூஜை நடந்தது. காதர்பாட்ஷா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ., கலெக்டர் விஷ்ணு சந்திரன் கலந்து கொண்டு பூமிபூஜையை தொடங்கி வைத்தனர்.
பின்னர் கலெக்டர் கூறியதாவது:-
ராமநாதபுரம் வளர்ந்து வரும் நகராட்சியாக உள்ளது. பல்வேறு மாவட்ட மக்கள் வந்து செல்லும் பகுதியாக ராமநாதபுரம் உள்ளதால் பெரிய பஸ் நிலையம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்த நிலையில் தற்போது நகராட்சி நிர்வாகம் மூலம் ரூ.20 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு 16909.5 சதுரடி பரப்பில் பஸ் நிலையம் அமைக்கப்பட உள்ளது. இதற்கான கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.
பல்வேறு மாவட்டங்களில் இருந்து ராமேசுவரம் உள்ளிட்ட சுற்றுலா தலங்களுக்கு செல்ல போதுமான பஸ் வசதிகளுடன் இந்த பஸ் நிலையம் செயல்படும். ஒரு ஆண்டுக்குள் பஸ் நிலைய பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
இதில் ராமநாதபுரம் நகர்மன்றதலைவர் கார்மேகம், ராமநாதபுரம் நகராட்சி ஆணையாளர் அஜிதாபர்வீன், ராமநாதபுரம் நகர்மன்ற துணைத்தலைவர் பிரவீன் தங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- வாழப்பாடி பேரூராட்சியில், ரூ.8.70 கோடி மதிப்பீட்டில் நவீன ஈரடுக்கு நவீன பஸ் நிலையம் அமைக்கும் பணி ஓராண்டுக்கு மேலாக நடைபெற்று வருகிறது.
- சேலம் மண்டல பேருராட்சி உதவி இயக்குநர் கணேஷ்ராம் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.
வாழப்பாடி:
சேலம் மாவட்டம் வாழப்பாடி பேரூராட்சியில், ரூ.8.70 கோடி மதிப்பீட்டில் நவீன ஈரடுக்கு நவீன பஸ் நிலையம் அமைக்கும் பணி ஓராண்டுக்கு மேலாக நடைபெற்று வருகிறது.
இதேபோல் ச.வாழப்பாடி மயானத்தில் ரூ.1.50 கோடி மதிப்பீட்டில் நவீன எரிவாயு தகனமேடை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இத்திட்டப் பணிகளை, சேலம் மண்டல பேருராட்சி உதவி இயக்குநர் கணேஷ்ராம் நேற்று ஆய்வு மேற்கொண்டார். இரு பணிகளையும் விரைந்து முடித்து, மக்கள் பயன் பட்டிற்கு அர்ப்பணிக்க வேண்டுமென ஒப்பந்ததாரர்களுக்கு அறிவுறுத்தினார்.
ஆய்வின் போது, வாழப்பாடி பேரூராட்சி செயல் அலுவலர் கணேசன், உதவி பொறியாளர் தினேஷ்குமார், பேரூராட்சி தலைவர் கவிதா சக்கர வர்த்தி, துணைத்தலைவர் எம்.ஜி.ஆர். பழனிசாமி மற்றும் பேரூராட்சி உறுப்பி னர்கள் உடனிருந்தனர்.
- இளையான்குடியில் புதிய பஸ் நிலைய கட்டுமான பணிகளை கூடுதல் தலைமை செயலாளர் ஆய்வு செய்தார்.
- இந்தப்பணிகள் கீழ் ரூ.3கோடியே 74 லட்சம் மதிப்பீட்டில் புதிய பஸ் நிலைய கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது.
மானாமதுரை
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி தேர்வுநிலை பேரூராட்சியில் சிவகங்கை-பரமக்குடி சாலையில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.3கோடியே 74 லட்சம் மதிப்பீட்டில் புதிய பஸ் நிலைய கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த பணிகளை நகராட்சி நிர்வாக கூடுதல் தலைமை செயலாளர் சிவதாஸ் மீனா, பேரூராட்சிகளின் கூடுதல் இயக்குநர் திருமலைமான் முடிகாரி ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பஸ் நிலைய கட்டுமான பணிகளை விரைந்து முடித்து வருகிற மே மாதத்துக்குள் பயன்பாட்டுக்கு கொண்டுவருமாறு உயர் அதிகாரிகள் அறிவுரை வழங்கினர்.
மேலும் கூடுதல் தலைமை செயலாளர் தன்னிடமிருந்த பிஸ்கட், முந்திரி, உலர் திராட்சை பழங்களை கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களுக்கு வழங்கி மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார்.
இந்த ஆய்வின் போது மதுரை மண்டல செயற் பொறியாளர் செல்வராஜ், சிவகங்கை மண்டல உதவி செயற்பொறியாளர் ரங்கராஜ், இளையான்குடி பேரூராட்சி திட்ட பொறி யாளர் சந்திரமோகன், செயல் அலுவலர் கோபிநாத் மற்றும் பலர் பங்கேற்றனர்.
- ரெயில்வே மேம்பாலம் கட்டுமான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
- இதைத்தொடர்ந்து கடந்த சில மாதங்களாக மேம்பாலம் வேலைகள் நடந்து வருகிறது.
சோழவந்தான்
மதுரை மாவட்டம் சோழ வந்தானில் ரெயில்வே மேம்பாலம் கட்ட கடந்த 2016-ம் ஆண்டில் ரூ.45கோடி நிதி ஓதுக்கீடு செய்து அன்றைய முதல்வர் ஜெயலலிதா அடிக்கல் நாட்டினார். பின்னர் மதுரை கோட்ட நெடுஞ்சாலைதுறை கட்டுமான பிரிவு மூலம் பணிகள் தொடங்கியது.
தொடர்ந்து சர்வீஸ் சாலை நில ஆர்ஜிதம் உள்ளிட்ட பணிகளுக்காக பாலம் கட்டும் பணியில் தொய்வு ஏற்பட்டது. இதனால் காலக்கெடு முடிந்ததால் பாலம் வேலை கள் பாதியிலே நின்று போனது.
இதன் பின்னர் பாலம் பணிகளை தொடங்கக்கோரி கம்யூனிஸ்டு கட்சியினர் மற்றும் சமூக ஆர்வலர்கள் பல்வேறு கட்ட போராட்டங் களை நடத்தினர்.
இதையடுத்து 2020-ம் ஆண்டு தமிழக நெடுஞ் சாலைத்துறை ரூ.17கோடி மதிப்பீட்டில் மறுடெண்டர் விட்டது. அதன்பின் 2021-ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் இருந்து மேம்பால பணிகள் மற்றும் அணுகுசாலை அமைக்கும் பணிகள் தொடங்கியது. நெடுஞ்லை துறை அதிகாரிகள் முன்னி லையில் ஆமை வேகத்தில் பணிகள் நடந்து வந்தது.
இதுபற்றி புகார் எழுந்ததால் அமைச்சர் மூர்த்தி, வெங்கடேசன் எம்.எல்.ஏ., மாவட்ட கலெக்டர் அனீஷ்சேகர் உள்ளிட்டோர் பாலம் கட்டும் பணிகளை நேரில் சென்று பார்வை யிட்டு ஆய்வு செய்தனர். அப்போது மேம்பாலம் மற்றும் அணுகு சாலை பணிகளுக்கு இடையூராக இருந்து வந்த டிரான்ஸ்பார்மர் மற்றும் மின் கம்பங்கள், பேரூராட்சி குடிநீர் குழாய் உள்ளிட்ட வைகளுக்கு மாற்று ஏற்பாடு செய்ய ஆலோசனைகள் வழங்கினர்.
இதைத்தொடர்ந்து கடந்த சில மாதங்களாக மேம்பாலம் வேலைகள் நடந்து வருகிறது. இந்த மாதம் முதல் பாலப்பணிகள் மிக வேகமாக நடந்து வருகிறது. மேலும் பாலம் மேல் பகுதி மற்றும் அணுகுசாலை ஆகிய பகுதிகளில் தற்போது தார்ச்சாலை அமைக்கும் பணிகளை நெடுஞ்சாலைத்துறை கோட்ட செயற்பொறியாளர் பிரசன்ன வெங்கடேஷ், கட்டுமான பிரிவு செயற்பொறியாளர் சாருமதி ஆகியோர் பார்வையிட்டனர்.
வரும் மார்ச் மாதம் பாலம் வேலைகள் முடிந்து அதனை திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அவர்கள் தெரிவித்தனர்.
- குடியாத்தம்-சித்தூர் சாலை, பரதராமி-பனமடங்கி சாலைகளை பார்வையிட்டார்
- அதிகாரிகள் உடன் இருந்தனர்
குடியாத்தம்:
வேலூர் கோட்டம் குடியாத்தம் பகுதியில் நெடுஞ்சாலைத்துறை சார்பாக நடைபெற்று வரும் பணிகளை நெடுஞ்சாலைத்துறை திருவண்ணாமலை வட்ட கண்காணிப்பு பொறியாளர் நெடுஞ்சாலைகள் மற்றும் கட்டுமானம் பராமரிப்பு பணிகளை எஸ்.பழனிவேல் ஆய்வு செய்தார்.
பின்னர் குடியாத்தம்-சித்தூர் சாலை, பரதராமி-பனமடங்கி சாலை உள்ளிட்ட பகுதிகளில் அமைக்கப்பட்ட சாலைகளையும் பொறியாளர் பார்வையிட்டார்.
இந்த ஆய்வின்போது நெடுஞ்சாலைத்துறை வேலூர் கோட்ட பொறியாளர் ஆர்.என். தனசேகரன், குடியாத்தம் உதவி கோட்ட பொறியாளர் ஆர்.எஸ்.சம்பத்குமார், வேலூர் தரக்கட்டுப்பாடு உதவி கோட்ட பொறியாளர் கே.ரவிச்சந்திரன்உதவி பொறியாளர் ப.யோகராஜ் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
- மேலூரில் ரூ.3.45 கோடியில் புதிய யூனியன் அலுவலக கட்டிட பணிகளை அமைச்சர் மூர்த்தி தொடங்கி வைத்தார்.
- சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
மேலூர் யூனியன் அலுவலகத்தில் புதிய கட்டிடம் கட்ட பூமி பூஜையை அமைச்சர் மூர்த்தி தொடங்கி வைத்தார். அருகில் மாவட்ட கலெக்டர் அனீஸ் சேகர், எம்.எல்.ஏ.க்கள் பெரியபுள்ளான், வெங்கடேசன், பூமிநாதன் மற்றும் பலர் உள்ளனர்.
மதுரை மாவட்டம் மேலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ரூ. 3.45 கோடி மதிப்பில் புதிய யூனியன் கட்டிடம் கட்டும் பணிக்கான பூமி பூஜை நடந்தது. இதில் அமைச்சர் மூர்த்தி கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்தார்.
இதில் மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் அனீஷ் சேகர், மேலூர் சட்ட மன்ற உறுப்பினர் பெரிய புள்ளான் என்ற செல்வம், சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன், தெற்கு சட்டமன்ற உறுப்பி னர் பூமிநாதன், கூடுதல் ஆட்சியர் சரவணன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் சூரியகலா, மாவட்ட கவுன்சிலர் நேரு பாண்டியன், மேலூர் யூனியன் சேர்மன் பொன்னுச்சாமி, முன்னாள் எம்.எல்.ஏ தமிழரசன், வள்ளாலபட்டி பேரூராட்சி சேர்மன் குமரன், மேலூர் யூனியன் வைஸ் சேர்மன் பாலகிருஷ்ணன், மேலூர் நகராட்சி சேர்மன் முகமது யாசின், மேலூர் வட்டார வளர்ச்சி அலுவலர் பாலச்சந்தர், மேலூர் வட்டாட்சியர் சரவண பெருமாள், மேலூர் நகராட்சி ஆணையாளர் ஆறுமுகம், யூனியன் முன்னாள் சேர்மன்கள் செல்வராஜ், வெற்றிச்செழியன், முன்னாள் துணைச் சேர்மன் குலோத்துங்கன், தி.மு.க. மாநில பொதுக்குழு உறுப்பினர் சுபைத அப்பாஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
மேலூர் வட்டம் தெற்கு தெரு மற்றும் கருத்த புளியம்பட்டி கிராமத்தில் வீட்டுவசதி மற்றும் நகர்புற வளர்ச்சித் துறையின் தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் ரூ. 84.20 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு உள்ள அடுக்கு மாடி குடியிப்பு கட்டிடங்களை சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
அதனை தொடர்ந்து அமைச்சர் மூர்த்தி குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்து பயனாளிகளுக்கு குடியிருப்புக்கான ஆணை களை வழங்கினார்.
- அலங்காநல்லூரில் பாலம் கட்டும் பணிகளால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்து.
- இதனால் பயணிகள் மிகவும் அவதிக்குள்ளாகினர்.
அலங்காநல்லூர்
அலங்காநல்லூர், பஸ் நிலையத்திலிருந்து கேட்டுக்கடை செல்லும் சாலையில் முனியாண்டி கோவில் முன்பு மழைநீர், கழிவுநீர் செல்வதற்கான பாலம் கட்டும் பணி நடந்து வருகிறது.
அலங்காநல்லூர் பகுதியில் மழைக்காலங்க ளில் கழிவுநீர் செல்லும் வாய்க்கால்களில் அடைப்பு ஏற்பட்டு சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதன் காரணமாக அங்கு பாலம் கட்ட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
தற்போது மழை நீர் தேங்காமல் செல்வதற்கு பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக அலங்காநல்லூர் பஸ் நிலையத்திற்கு வரும் அரசு பஸ்கள் போக்குவரத்து நெரிசல் காரணமாக குறைக்கப்பட்டது.
பஸ் நிலையத்தை தாண்டி செல்லும் ஓரிரு அரசு பஸ்கள் மட்டுமே இந்த வழித்தடத்தில் இயக்கப்பட்டது. மேலும் பால வேலைகள் நடைபெறுவதால் அவ்வப்போது அந்த இடத்தில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
இதனால் வாகன ஓட்டிகளும், அந்த வழியாக நடந்து செல்லும் பொது மக்களும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். கிராமப்புற பகுதியிலிருந்து வரும் அரசு பஸ்கள் பஸ் நிலையத்திற்குள் வராமல் கேட்டுக்கடை வழியாக மதுரை செல்வதால் பயணிகள் கேட்டுக்கடையில் இருந்து அலங்காநல்லூர் பஸ் நிலையத்திற்கு நடந்தே செல்கின்றனர்.
அரசு மருத்துவமனை இந்த வழித்தடத்தில் உள்ளதால் மருத்துவமனைக்கு வரும் கர்ப்பிணி பெண்கள், முதியோர்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.
பால வேலையும் தாமதமாக நடைபெற்று வருவதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்தனர். எனவே அதிகாரிகள் பாலம் கட்டுமான பணிகளை விரைந்து முடித்து போக்குவரத்து தடைபடாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
- ரூ. 14 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட உள்ள பால் கொள்முதல் நிலையம்.
- துவக்கப்பள்ளியின் பவள விழா மற்றும் காலை உணவு திட்டம் உள்ளரங்கம் திறப்பு விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்
வெள்ளகோவில் :
வெள்ளகோவில் ஊராட்சி ஒன்றியம், நாகமநாயக்கன்பட்டி ஊராட்சியில் ரூ. 14 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட உள்ள பால் கொள்முதல் நிலைய கட்டிட பணி துவக்க விழா நடைபெற்றது.
புதிய பால் கொள்முதல் நிலைய கட்டிட பணியை தமிழக செய்தி துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் துவக்கி வைத்தார். பிறகு சிலம்பகவுண்டன்வலசு ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியின் பவள விழா மற்றும் காலை உணவு திட்டம் உள்ளரங்கம் திறப்பு விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்பீம், வெள்ளகோவில் நகர் மன்ற தலைவி மு.கனியரசி, நாகமநாயக்கன்பட்டி ஊராட்சி மன்ற தலைவி கவிதா.திமுக பொதுக்குழு உறுப்பினர் எம்.எஸ்.மோகன செல்வம், வெள்ளகோவில் திமுக ஒன்றிய செயலாளர் மோளக்கவுண்டன்வலசு கே. சந்திரசேகரன், வெள்ளகோவில் நகர செயலாளர் சபரி.எஸ்.முருகானந்தன், ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் லோகநாதன். முன்னாள் நகரச் செயலாளர் கே.ஆர். முத்துகுமார், இளைஞர் அணி ஆதவன் ஜெகதீஷ் மற்றும் ஊராட்சி பிரதிநிதிகள், பாசன சபை தலைவர்கள் கலந்து கொண்டனர்.சிலம்பகவுண்டன் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் நடந்த பள்ளி பவள விழா நிகழ்ச்சியில் வெள்ளகோவில் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் ஆர்.வெங்கடேசசுதர்சன். பச்சாபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் எம்.வரதராஜன் ,ஆணையாளர் ஜெயக்குமார் மற்றும் ஆசிரியைகள் கலந்து கொண்டனர்.
- இரட்டைகுளம், நீடூர் பெரியமது ஆகிய பஸ் நிறுத்தங்களில் காலை, மாலை வேலைகளில் அரசு பஸ்கள் நிற்காமல் செல்கிறது.
- அனைத்து வீடுகளுக்கும் கொள்ளிடம் கூட்டுகுடிநீர் திட்டத்தின் கீழ் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை ஒன்றியக்குழு கூட்டம் தலைவர் காமாட்சிமூர்த்தி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு துணைத்தலைவர் மகேஸ்வரி, ஒன்றிய ஆணையர் அன்பரசு, வட்டார வளர்ச்சி அலுவலர் மீனா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மேலாளர் ஜெயராமன் வரவேற்றார்.
கூட்டத்தில் கவுன்சி லர்கள் பேசியதாவது:-
வடவீரபாண்டியன் (காங்.):-
பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டம், கலைஞர் வீடு கட்டும் திட்டத்தில் பல முறைகேடுகள் நடந்துள்ளது.
பயனாளிகளுக்கு பணம் வழங்காமல் அலைகழிக்க ப்படுகின்றனர். இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சந்தோஷ்குமார் (அ.தி.மு.க):-
பிரதம மந்திரி வீடுகட்டும் திட்டத்தில் பயனாளிகளுக்கு 2 வருடமாக பணம் வழங்கப்படாமல் உள்ளது.
நிதி இல்லை என்று கூறுகிறார்கள்.
எப்போது பணம் கிடைக்கும். பல வீடுகள் லிண்டல் மட்டத்தில் நிற்கிறது.
மேற்கொண்டு கட்டுமான பணிகள் தொடங்க பணம் கிடைக்காமல் பயனாளிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.
கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தில் வீடு வழங்கினீர்கள்.
பயனாளிகள் வீடு கட்ட முடியாமல் பாதியிலயே நிறுத்தப்பட்டு இருந்தது. அவர்களுக்கு அ.தி.மு.க. ஆட்சியில் தான் வீடு கட்டி கொடுத்தோம்.
பல்லவராயன்பேட்டை, இரட்டைகுளம், நீடூர் பெரியமது ஆகிய பஸ் நிறுத்தங்களில் காலை, மாலை வேலைகளில் அரசு பஸ்கள் நிற்காமல் செல்கிறது.
இதனால் பெண்கள், பள்ளி மாணவிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
அனைத்து பஸ் நிறுத்தத்திலும் அரசு பஸ்கள் நின்றுசெல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.
காந்தி (தி.மு.க):-
காளி ஆரம்ப சுகாதார நிலையத்தில் இரவு நேரங்களில் டாக்டர்கள் பணியில் இருப்பதில்லை.
காளி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கான ஆம்புலன்ஸ் எங்கு செல்கிறது என்றே தெரியவில்லை.
அவசர தேவைக்கு ஆம்புலன்ஸ் இல்லாமல் நோயாளிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாக வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ் பணிகளை ஒன்றிய கவுன்சிலர்களுக்கு பிரித்துகொடுக்க வேண்டும்.
அரசு வீடுகட்டும் திட்டத்திற்கான ஓர்க் ஆர்டர் பலருக்கு வழங்கப்படாமலேயே இருந்து வருகிறது.
மோகன் (தி.மு.க):-
மயிலாடுதுறை நகரை ஒட்டியுள்ள ஊராட்சிகளில் அனைத்து வீடுகளுக்கும் கொள்ளிடம் கூட்டுகுடிநீர் திட்டத்தின் கீழ் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சிவக்குமார்:-
மாப்படுகை கங்கை அம்மன் தெரு, பண்ணைத்தெரு, அழகர் நகர் பகுதிகளில் சாலை அமைத்து கொடுக்க வேண்டும்.
மழைகாலம் தொடங்கியுள்ளதால் டெங்கு காய்ச்சல் போன்ற தொற்றுநோய் பரவாமல் இருப்பதற்கும், கொசுவை கட்டுப்படுத்த கொசுமருந்து தெளிக்க வேண்டும்.
ஆணையர் அன்பரசு:
பொறியியல் துறையில் திட்ட மதிப்பீடு தயார் செய்து கொடுப்பதில் காலதாமதம் ஏற்படுவதால் பல பிரச்சனைகள் ஏற்பட்டு வருகிறது.
அதனை சரிசெய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
- சரவணன் எம்.எல்.ஏ. ஆய்வு
- மேம்பாட்டு திட்டத்தின் மூலம் ரூ.15 லட்சம் நிதி ஒதுக்கீடு
திருவண்ணாமலை:
கலசப்பாக்கம் அடத்த ஜவ்வாதுமலையில் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டு திட்டத்தில்ரூ.30 லட்சத்தில் கட்டப்பட்டு வரும் புதிய பஸ் நிலைய கட்டுமான பணிகளை பெ.சு.தி. சரவணண் எம்.எல்.ஏ. நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து பணிகளை விரைந்து முடிக்க ஆலோசனை வழங்கினார்.
ஜவ்வாதுமலையில் வாழும் பழங்குடியின மலைவாழ் மக்கள் ஜமுனாமரத்தூரில் புதிய பஸ் நிலையம் அமைக்க வேண்டி பெ.சு.தி.சரவணன் அவர்களிடம் கோரிக்கை வைத்தனர்.
இதனை தொடர்ந்து திருவண்ணாமலை தொகுதி சி.என்.அண்ணாதுரை எம்.பி. தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் மூலம் ரூ.15 லட்சமும், கலசப்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் மூலம் ரூ.15 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு மொத்தம் 30 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஜமுனாமரத்தூரில் புதிய பஸ் நிலையம் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த புதிய பஸ் நிலைய கட்டுமான பணிகளை கலசப்பாக்கம் பெ.சு.தி.சரவணன் எம்.எல்.ஏ. இன்று காலை ஜவ்வாதுமலையில் உள்ள ஜமுனாமரத்தூர் சென்று கட்டுமான பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் ஜவ்வாது மலையில் வாழும் பழங்குடியின மலைவாழ் மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.
இந்த ஆய்வின் போது ஊரக உள்ளாட்சி துறை அதிகாரிகளும், உள்ளாட்சி பிரதிநிதிகளும், பொது மக்களும் கலந்து கொண்டனர்.