என் மலர்
நீங்கள் தேடியது "Railway Flyover"
- நாமக்கல் ரெயில் நிலையம் வரை உள்ள ரெயில் பாதையில், இடைப்பட்ட மரூர்ப்பட்டி கிராமம் வழியாக நாமக்கல் புதிய பை-பாஸ் ரோடு அமைய உள்ளது.
- இந்த ரிங் ரோடு செல்லும் வழியில், அங்கு உள்ள ரெயில்பா தையை கடக்க மேம்பாலம் அமைக்கப்பட வேண்டும்.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டம் களங்காணி ரெயில் நிலையத்தில் இருந்து, நாமக்கல் ரெயில் நிலையம் வரை உள்ள ரெயில் பாதையில், இடைப்பட்ட மரூர்ப்பட்டி கிராமம் வழியாக நாமக்கல் புதிய பை-பாஸ் ரோடு அமைய உள்ளது. இந்த ரிங் ரோடு செல்லும் வழியில், அங்கு உள்ள ரெயில்பா தையை கடக்க மேம்பாலம் அமைக்கப்பட வேண்டும். இந்த மேம்பாலத்தை அமைப்பதற்கு மாநில நெடுஞ்சாலைத்துறைக்கும் தென்னக ரெயில்வே துறைக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தம் பெற வேண்டி உள்ளது. இதுநாள் வரை இதற்கான ஒப்புதலை தென்னக ரெயில்வே வழங்கவில்லை.
இந்த நிலையில் தற்போது நாமக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், ராஜ்யசபா எம்.பி.யுமான ராஜேஷ்குமார் கடந்த பிப்ரவரி மாதம், மத்திய ரெயில்வே அமைச்ச கத்துக்கு, மரூர்ப்பட்டி அருகே புதிய ரயில்வே மேம்பாலம் அமைக்க கோரி ஒரு கடிதம் அனுப்பினார். அவரது கோரிக்கையை ஏற்று நாமக்கல் புதிய பைபாஸ் ரோடு திட்டத்தில், மரூர்ப்பட்டி அருகே ரெயில் பாதையில் மேம்பாலம் அமைக்க மாநில நெடுஞ்சா லைத்துறைக்கும், தென்னக ரயில்வேவுக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டு உள்ளது.
இதன் மூலம் மேம்பாலம் அமைக்க தேவையான திட்ட மதிப்பீட்டை, தென்னக ரயில்வே தயாரித்து, தமிழ்நாடு அரசின் நெடுஞ்சாலைத்துறையிடம் அளிக்கும். அதன்பி றகு மேம்பாலம் கட்டுமான பணியை தென்னக ரயில்வே மேற்கொள்ளும் என்று எம்.பி ராஜேஷ்குமார் தெரிவித்துள்ளார்.
- நாகப்பட்டினம் அக்கரைப்பேட்டை ரயில்வே மேம்பாலம் கட்டி முடிக்கப்ப டாமல் நீண்டகாலமாக பாதியிலேயே நின்றது.
- ஏற்று ரூபாய் 104 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதற்காக முதலமைச்சர் மற்றும் அமைச்சருக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
நாகப்பட்டினம்:
சட்டமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் நாகை எம்.எல்.ஏ முகம்மது ஷா நவாஸ் நாகப்பட்டினம் அக்கரைப்பேட்டை ரயில்வே மேம்பாலம் கட்டி முடிக்கப்ப டாமல் நீண்டகாலமாக பாதியிலேயே நின்றது.
இந்த ஆட்சி அமைந்ததும் அதை கட்டி முடிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தோம்.
அதை ஏற்று ரூபாய் 104 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
அதற்காக முதலமைச்சர் மற்றும் அமைச்சருக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
பாலம் கட்டும் பணிக்கு நிர்வாக ஒப்புதல் எப்போது அளிக்கப்படும்? பணிகள் எப்போது தொடங்கப்படும் என்பதை அறிய விரும்புகிறேன் என்றார்.
இது தொடர்பாக அமைச்சர் எ.வ.வேலு கூறியதாவது:-
நாகப்பட்டினம் அக்கரை ப்பேட்டை வேளாங்கண்ணி சாலையில் கடவு எண் 48-இல் ரயில்வே பாலம் கட்டுவது தொடர்பாகத் தான் எம்.எல்.ஏ கேட்டுள்ளார்.
ரெயில்வே பாலத்திற்கு அவர் குறிப்பிட்டதைப் போல 104 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு, ஒப்பந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அநேகமாக இந்த மாதமே அந்த கட்டுமானப் பணிகள் தொடங்கும் நிலையில் இருக்கிறது என்றார்,
- உழவர் சந்தை விரைவில் இடமாற்றம்
- விவசாயிகள் குறைதீர்வு கூட்டத்தில் கலெக்டர் தகவல்
வேலூர்:
வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைவு தீர்வு கூட்டம் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தலைமையில் இன்று நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி, வன அலுவலர் பிரின்ஸ் குமார் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
வேலூர் மாவட்டத்தில் வனவிலங்குகளால் ஏற்படும் இழப்பீடுகளுக்கு வனத்துறை சார்பில் முறையாக இழப்பீட்டுத் தொகை வழங்கப்படுவதில்லை என விவசாயிகள் குற்றம் சாட்டினர்.
அப்போது வனத்துறை அலுவலர்களுக்கும் விவசாயிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. விவசாயி ஒருவர் அதிகாரிகளை பார்த்து கைநீட்டி பேசினார்.
இதனை கண்ட மாவட்ட வருவாய் அலுவலர் அதிகாரிகளை பார்த்து கைநீட்டிய விவசாயியை வெளியேறும்படி கூறினார்.அவருக்கு ஆதரவாக மற்ற விவசாயிகளும் அரங்கத்தை விட்டு வெளியே செல்வோம் என தெரிவித்தனர்.
பின்னர் விவசாயிகள் சார்பில் வருத்தம் தெரிவித்தனர். இதனால் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
ஒடுகத்தூர் அணைக்கட்டு பகுதியில் காட்டு எருமைகள் தொல்லை அதிக அளவில் உள்ளது.இதனை கட்டுப்படுத்த வேண்டும். குடியாத்தம் பேரணாம்பட்டு பகுதியில் அடிக்கடி காட்டு யானைகள் தொல்லை நீடித்து வருகிறது.
அதனை கட்டுப்படுத்த வனத்துறை அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. யானைகள் வரும்போது வனத்துறையினர் உடனடியாக வருவதில்லை.
சென்னை பெங்களூர் விரைவு சாலை திட்டம் மேல் பாடி பகுதியில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த சாலைக்காக நீர் நிலைகள் மூடப்படுகிறது. கால்வாய்கள் அடைக்கப்படுகின்றன.
அதனை தடுத்து நிறுத்த வேண்டும் தற்போது கோடை காலம் என்பதால் விவசாயத்திற்கு தடையின்றி மின்சாரம் கிடைக்க கூடுதல் மின்மாற்றிகளை அமைக்க வேண்டும்.
உழவர் சந்தைகளுக்கு கொண்டு செல்லும் காய்கறிகளுக்கு அரசு பஸ்களில் டிக்கெட் வசூல் செய்வதை தடை செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.
கூட்டத்தில் பேசிய விவசாயி ஒருவர் காட்பாடி உழவர் சந்தை யில் கீரைகள் விற்பனை செய்வதற்கு வசதி ஏற்படுத்த வேண்டும் என கூறினார்.
இதற்கு பதில் அளித்த கலெக்டர் குமாரவேல் பாண்டியன் காட்பாடி உழவர் சந்தை அமைந்திருக்கக் கூடிய பகுதியில் புதிதாக ரெயில்வே மேம்பாலம் விரைவில் கட்டப்படவுள்ளது.
இதற்கான பூர்வாங்க பணிகள் தொடங்கப்ப ட்டுள்ளன. எனவே காட்பாடி உழவர் சந்தை விரைவில் இடமாற்றம் செய்யப்படும் என தெரிவித்தார்.
- ராஜபாளையத்தில் ரெயில்வே மேம்பாலத்துக்கு 2-ம் கட்டமாக நிலம் கையகப்படுத்த ஆலோசனை கூட்டம் நடந்தது.
- இதில் தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. பங்கேற்றார்.
ராஜபாளையம்
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் வட்டா ட்சியர் அலுவ லகத்தில் ராஜபாளையம்-சத்தி ரப்பட்டி ரோட்டில் நடைபெற்று வரும் ெரயில்வே மேம்பால பணிக்கான 2-ம் கட்ட நில எடுப்புக்கான இறுதி தீர்வுரை தமிழ்நாடு சாலை மேம்பாட்டு திட்டத்தின் தனி மாவட்ட வருவாய் அலுவலர் ஜானகி தலைமையில் நடந்தது. தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் 19 நில உரிமையாளர்கள் கலந்துகொண்டு தங்களது கருத்துக்களை தெரி வித்தனர். மேலும் ஓரிரு நில உரிமையாளர்கள் தங்களது வீடு பாதிக்காதவாறு நிலத்தை கையகப்படுத்துமாறு கூறினார்கள். அதற்கு பதில் அளித்த தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ., நில உரிமையாளர்களுக்கு பாதிப்புகள் இல்லாதவாறு நிலம் கையகப்படுத்தப்படும்.
மேலும் இந்த மாதத்திற்குள் நில உரிமையாளர்களின் வங்கி கணக்கில் பணம் வரவு வைக்கப்பட்டு விரைவில் நிலம் கையகப்படுத்தி மேம்பாலம் அமைக்கும் பணி முடிக்கப்படும் என்றார்.அதனை தொடர்ந்து 2-ம் கட்ட நில எடுப்பில் என்.ஆர்.கே. பங்க் அருகில் உள்ள நில உரிமையாளர்களின் வீடுகளுக்கே நேரில் சென்று, அவர்களிடம் பேசி பொதுமக்களின் சிரமங்களை எடுத்துரைத்து மேம்பாலம் அமைக்கும் பணிக்கு நிலம் எடுக்க நில உரிமையாளர்களிடம் அனுமதி பெற்று கொடுத்தார்.
மேலும் உடனடியாக நிலத்தை கையகப்படுத்தி பணியை துரிதப்படுத்துமாறு ஒப்பந்ததாரரிடம் கூறிய எம்.எல்.ஏ., வரும் ஏப்ரல் மாதத்தில் மேம்பாலம் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வரவேண்டும் என கேட்டுக்கொண்டார்.
கூட்டத்தில் தாசில்தார் ராமச்சந்திரன், தனி தாசில்தார் மாரீஸ்வரன் நெடுஞ்சாலை துறை அலுவலர் ஜெகன் செல்வராஜ், தி.மு.க நகர செயலாளர் (வடக்கு) மணிகண்டராஜா மற்றும் நில உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.
- ரெயில்வே மேம்பாலம் கட்டுமான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
- இதைத்தொடர்ந்து கடந்த சில மாதங்களாக மேம்பாலம் வேலைகள் நடந்து வருகிறது.
சோழவந்தான்
மதுரை மாவட்டம் சோழ வந்தானில் ரெயில்வே மேம்பாலம் கட்ட கடந்த 2016-ம் ஆண்டில் ரூ.45கோடி நிதி ஓதுக்கீடு செய்து அன்றைய முதல்வர் ஜெயலலிதா அடிக்கல் நாட்டினார். பின்னர் மதுரை கோட்ட நெடுஞ்சாலைதுறை கட்டுமான பிரிவு மூலம் பணிகள் தொடங்கியது.
தொடர்ந்து சர்வீஸ் சாலை நில ஆர்ஜிதம் உள்ளிட்ட பணிகளுக்காக பாலம் கட்டும் பணியில் தொய்வு ஏற்பட்டது. இதனால் காலக்கெடு முடிந்ததால் பாலம் வேலை கள் பாதியிலே நின்று போனது.
இதன் பின்னர் பாலம் பணிகளை தொடங்கக்கோரி கம்யூனிஸ்டு கட்சியினர் மற்றும் சமூக ஆர்வலர்கள் பல்வேறு கட்ட போராட்டங் களை நடத்தினர்.
இதையடுத்து 2020-ம் ஆண்டு தமிழக நெடுஞ் சாலைத்துறை ரூ.17கோடி மதிப்பீட்டில் மறுடெண்டர் விட்டது. அதன்பின் 2021-ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் இருந்து மேம்பால பணிகள் மற்றும் அணுகுசாலை அமைக்கும் பணிகள் தொடங்கியது. நெடுஞ்லை துறை அதிகாரிகள் முன்னி லையில் ஆமை வேகத்தில் பணிகள் நடந்து வந்தது.
இதுபற்றி புகார் எழுந்ததால் அமைச்சர் மூர்த்தி, வெங்கடேசன் எம்.எல்.ஏ., மாவட்ட கலெக்டர் அனீஷ்சேகர் உள்ளிட்டோர் பாலம் கட்டும் பணிகளை நேரில் சென்று பார்வை யிட்டு ஆய்வு செய்தனர். அப்போது மேம்பாலம் மற்றும் அணுகு சாலை பணிகளுக்கு இடையூராக இருந்து வந்த டிரான்ஸ்பார்மர் மற்றும் மின் கம்பங்கள், பேரூராட்சி குடிநீர் குழாய் உள்ளிட்ட வைகளுக்கு மாற்று ஏற்பாடு செய்ய ஆலோசனைகள் வழங்கினர்.
இதைத்தொடர்ந்து கடந்த சில மாதங்களாக மேம்பாலம் வேலைகள் நடந்து வருகிறது. இந்த மாதம் முதல் பாலப்பணிகள் மிக வேகமாக நடந்து வருகிறது. மேலும் பாலம் மேல் பகுதி மற்றும் அணுகுசாலை ஆகிய பகுதிகளில் தற்போது தார்ச்சாலை அமைக்கும் பணிகளை நெடுஞ்சாலைத்துறை கோட்ட செயற்பொறியாளர் பிரசன்ன வெங்கடேஷ், கட்டுமான பிரிவு செயற்பொறியாளர் சாருமதி ஆகியோர் பார்வையிட்டனர்.
வரும் மார்ச் மாதம் பாலம் வேலைகள் முடிந்து அதனை திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அவர்கள் தெரிவித்தனர்.
- ரூ. 96 கோடியில் 2 வழி பாதையாக அமைகிறது.
- ரெயில்வே லெவல் கிராசிங்கில் மேம்பாலம் கட்ட மாநகராட்சி அனுமதியளித்து திட்டமதிப்பீடு தயாரிக்கப்பட்டு டெண்டர் விடப்பட்டுள்ளது.
சென்னை:
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியில் மேம்பாலங்கள் கட்டப்பட்டு வருகின்றன. ரெயில்வே பாதை, சுரங்கப் பாதை உள்ள இடங்களிலும் மேம்பாலங்கள் கட்ட முடிவு செய்து டெண்டர் விடப்பட்டு பணிகள் தொடங்கி உள்ளன.
வியாசர்பாடி கணேசபுரம் ரெயில்வே சுரங்கப் பாதையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் மேம்பாலம் கட்ட தீர்மானிக்கப்பட்டும் அந்த பணிகள் தொடங்கி உள்ளன. ரூ.142 கோடி மதிப்பீட்டில் 4 வழி மேம்பாலம் கட்டும் பணி தொடங்கியுள்ளது.
இதற்காக தற்போது அங்கு குடிநீர் குழாய்கள், மின்வாரிய கேபிள்கள் இடமாற்றம் செய்யும் பணி நடைப்பெற்று வருகிறது. இதற்கு தனி மதிப்பீடு தயாரிக்கப்பட்டு கட்டுமானப்பணி தொடங்குவதற்கு ஏதுவாக மின் கேபிள்கள், குடிநீர் குழாய் லைன் மாற்றம் செய்யப்படுகிறது.
இந்நிலையில் கொருக்குப்பேட்டையில் மற்றொரு ரெயில்வே மேம்பாலம் அமைக்க மாநகராட்சி திட்ட அனுமதி அளித்து நிதி ஒதுக்கியுள்ளது. கொடுங்கையூர் குப்பை கிடங்கு எழில்நகர் பகுதியில் இருந்து கொருக்குப்பேட்டை செல்லும் மணலி சாலையில் ரெயில்வே லெவல் கிராசிங் உள்ளது.
அந்த பகுதியில் ரெயில் செல்லும் போது கேட் போடப்படுவதால் இருபுறமும் வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. எண்ணை நிறுவனங்களுக்கு செல்லக்கூடிய லாரிகள், கனரக லாரிகள், ஆட்டோ, கார் உள்ளிட்ட வாகனங்கள் நீண்ட நேரம் காத்து இருக்கின்றன. மோட்டார்சைக்கிளில் செல்லும் பொதுமக்கள் இந்த இடத்தில் காத்து நிற்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. ரெயில்வே கேட்டிற்கு முன் இருபுறமும் நிற்கும் வாகனங்கள் முந்தி செல்ல போட்டி போடுவதால் கடுமையான நெரிசல் ஏற்படுகிறது.
சரக்கு ரெயில் எப்போதாவது ஒருமுறை இந்த பாதையில் சென்றாலும் அந்த நேரத்தில் 15 நிமிடத்திற்கு மேலாக அங்கு கேட் மூடப்படுவதால் நெரிசல் ஏற்பட்டு பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.
சென்னை மாநகராட்சி 4-வது மண்டலம் 41-வது டிவிசனுக்கு உட்பட்ட மணலி சாலையில் ரூ.96.4 கோடியில் ரெயில்வே மேம்பாலம் கட்டுவதற்கு முடிவு செய்து டெண்டர் விடப்பட்டுள்ளது. 840 மீட்டர் நீளம், 8.4 மீட்டர் அகலத்தில் இந்த மேம்பாலம் அமைக்க திட்ட வரைப்படம் தயாரிக்கப்பட்டது. அதனை சென்னை ஐ.ஐ.டி. நிறுவனம் ஆய்வு செய்து அனுமதி அளிக்கும். இந்த மேம்பாலம் 2 வழி பாதையாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாநகராட்சி நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-
கொருக்குப்பேட்டை ரெயில்வே லெவல் கிராசிங்கில் மேம்பாலம் கட்ட மாநகராட்சி அனுமதி யளித்து திட்டமதிப்பீடு தயாரிக்கப்பட்டு டெண்டர் விடப்பட்டுள்ளது. விரைவில் அங்கு பணிகள் தொடங்கப்படும்.
மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் அதற்கான செலவை மாநகராட்சி மேற் கொள்கிறது. ரெயில்வேக்கு சொந்தமான பகுதி செலவை ரெயில்வே ஏற்கிறது. இந்த ரெயில்வே மேம்பாலம் கட்டி முடிக்கப்பட்டால் மணலி பகுதிக்கு செல்லக்கூடிய வாகனங்கள் நெரிசல் இல்லாமல் செல்ல முடியும். தண்டையார் பேட்டை பகுதியில் இருந்து எளிதாக கொடுங்கையூர், மாதவரம், பெரம்பூர், மூலக்கடை, வியாசர்பாடி பகுதிகளுக்கு வர முடியும்.
இந்த பணி முடிந்தவுடன் வைத்திலிங்க மேம்பாலம் அருகில் உள்ள ரெயில்வே லெவல் கிராசிங்கில் மேம் பாலம் கட்டப்படும். இந்த பாலமும் கட்டி முடிக்கப்பட்டுவிட்டால் போக்குவரத்து நெரிசல் ஏற்படாது. வாகனங்கள் எளிதாக கொருக்குப்பேட்டை, மணலி பகுதிகளுக்கு செல்ல முடியும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- ரெயில்வே மேம்பாலத்திற்கு அருகே சர்வீஸ் சாலை அமைக்கும் வரை பழைய பஸ் நிலைய புதுப்பிக்கும் பணியை தொடங்கக்கூடாது.
- மீறி செயல்படுத்தும் பட்சத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மக்களை திரட்டி போராடும்.
ராஜபாளையம்
ராஜபாளையம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் நகர செயலாளர் மாரியப்பன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
ராஜபாளையம் நகராட்சி பழைய பஸ்நிலையத்தில் மேம்படுத்தும் பணி தொடங்க இருப்பதாகவும், அதற்காக இன்று (20-ந் தேதி) முதல் பழைய பஸ் நிலையம் செயல்படாது எனவும், மாற்று வழி த்தடங்கள் குறித்து நகராட்சி ஆணையரும், காவல்துறையும் அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.
ராஜபாளையம் நகராட்சி ரெயில்வே மேம்பால பணி, பாதாள சாக்கடைத்திட்ட பணி, தாமிரபரணி குடிநீர் திட்ட பணி ஆகிய திட்டங்களால் கடந்த 5 ஆண்டுகளாக மக்கள் மிகுந்த துன்பங்களை அனுபவித்து வருகின்றனர். ரெயில்வே மேம்பால பணிகள் கடந்த 5 ஆண்டுகளாக நிறைவு பெறாமல் இருப்பதையொட்டி தென்காசி சாலையில் போக்குவரத்து நெருக்கடி அதிகமாக இருக்கிறது.
இந்த நிலையில் நகராட்சி ஆணையாளரின் அறிவிப்பும், காவல்துறை யின் அறிவி ப்பும் பொருத்த மற்றதாக இருப்பதோடு மக்களை மேலும் துன்பப்படுத்துவதாக உள்ளது.
எனவே சத்திரப்பட்டி சாலையில் நடைபெற்று வரும் ரெயில்வே மேம்பால த்திற்கு அருகே சர்வீஸ் சாலை அமைக்கும் வரை பழைய பஸ் நிலையத்தை புதுப்பிக்கும் பணியை தொடங்கக்கூடாது. மீறி செயல்படுத்தும் பட்சத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மக்களை திரட்டி போராடும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- கொழுமம், பழநி செல்லும் ரோடு,18.80 கி.மீ., தூரம் கொண்டது.
- பொதுமக்கள், வாகனங்கள் என போக்குவரத்து அதிகம் செல்லும் ரோடாக உள்ளது.
உடுமலை :
உடுமலையில் தேசிய நெடுஞ்சாலையிலிருந்து பிரிந்து கொமரலிங்கம், கொழுமம், பழநி செல்லும் ரோடு, 18.80 கி.மீ., தூரம் கொண்டது. உடுமலையிலிருந்து பழனிக்கு மாற்றுப்பாதையாக மாநில நெடுஞ்சாலைத்துறை ரோடு உள்ளது. பொதுமக்கள் வாகனங்கள், சரக்கு வாகனங்கள், பள்ளி, கல்லூரி வாகனங்கள் என போக்குவரத்து அதிகம் செல்லும் ரோடாக உள்ளது.
இந்த ரோட்டில் நகர பகுதியில் ஏராளமான குடியிருப்புகள், தொழிற்சாலைகள் மற்றும் 30க்கும் மேற்பட்ட கிராமங்கள் அமைந்துள்ளது. பிரதான போக்குவரத்து சாலையாக உள்ளதால் போக்குவரத்து நெரிசலும் நிரந்தரமாக உள்ளது. எனவே இந்த ரோட்டை அகலப்படுத்த வேண்டும்.மேலும் திண்டுக்கல்-பாலக்காடு அகல ரெயில்பாதை செல்கிறது. அகல ரெயில்பாதையில் ரெயில்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதால் அவை கடக்கும் போது பல கி.மீ., தூரத்திற்கு வாகனங்கள் காத்திருக்கும் நிலை உள்ளது. எனவே கொழுமம் ரோட்டை அகலப்படுத்தவும், ரெயில்வே கேட் பகுதியில்மேம்பாலம் அமைக்கவும் வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.