search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Railway Flyover"

    • அரசு விரைவு பஸ்களில் பெரும்பாலான பஸ்கள் மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ளன.
    • போதிய உபகரணங்கள் இல்லாததால் பஸ்களை பழுது பார்க்கவும் முடியவில்லை என கூறப்படுகிறது.

    பண்ருட்டி:

    பண்ருட்டி ரெயில்வே மேம்பாலத்தில்நேற்றிரவு அரசு பஸ் பழுதடைந்து நடு வழியில் நின்றது. இதனால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.

    பண்ருட்டி பகுதி வழியாக இயக்கப்படும் அரசு விரைவு பஸ்களில் பெரும்பாலான பஸ்கள் மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ளன. தொடர்ந்து பராமரிப்பு பணிகள் முறையாக மேற்கொள்ளப்படாததால் அடிக்கடி பழுதடைந்து நடுவழியில் நின்று விடுகிறது. போதிய உபகரணங்கள் இல்லாததால் பஸ்களை பழுது பார்க்கவும் முடியவில்லை என கூறப்படுகிறது.

    இந்நிலையில் கும்பகோணத்தில் இருந்து இருந்து பண்ருட்டி வழியாக சென்னைக்கு செல்லும் அரசு பஸ் ஒன்று நேற்று பிற்பகல் 2.15 மணிக்கு கும்பகோணத்திலிருந்து புறப்பட்டு வந்தது. அதில் 40-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தனர். கடலூர் மாவட்டம் பண்ருட்டி ரெயில்வே மேம்பாலம் பகுதியில் பஸ் வந்து கொண்டிருந்த போது திடீரெனபழுதானது.

    இதனை தொடர்ந்து நடுவழியில் அரசு பஸ் நிறுத்தப்பட்டது. இதனால் அதில் பயணம் செய்த பயணிகள் தவித்தனர்.

    • 1933-ம் ஆண்டு சென்ட்ரலில் இருந்து பேசின்பிரிட்ஜ் நோக்கி செல்லும் ரெயில்வே வழித்தடத்துக்கு மேலே யானைக்கவுனி ரெயில்வே மேம்பாலம் கட்டப்பட்டிருந்தது.
    • பேசின்பிரிட்ஜ் மற்றும் வால்டாக்ஸ் ரோடு பகுதியில் இருந்து எழும்பூர், புரசைவாக்கம் பகுதிக்கு செல்பவர்கள் இந்த பாலத்தின் வழியாக சிரமமின்றி விரைவாக சென்று விடலாம்.

    சென்னை:

    சென்னை யானைக் கவுனியில் கடந்த 4 ஆண்டுகளாக நடைபெற்று வந்த ரெயில்வே மேம்பால பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன.

    இந்த மாத இறுதிக்குள் அனைத்து பணிகளும் முடிவடைந்து புதிய பாலம் திறக்கப்பட உள்ளது. 1933-ம் ஆண்டு சென்ட்ரலில் இருந்து பேசின்பிரிட்ஜ் நோக்கி செல்லும் ரெயில்வே வழித்தடத்துக்கு மேலே யானைக்கவுனி ரெயில்வே மேம்பாலம் கட்டப்பட்டிருந்தது. வலது புறத்தில் பேசின் பிரிட்ஜ் டிப்போவையும் இடது புறத்தில் சால்ட் சரக்கு கூடத்தையும் இணைக்கும் வகையில் கட்டப்பட்டிருந்த இந்த மேம்பாலத்தை புதுப்பித்து புதிதாக கட்டுவதற்கு முடிவு செய்யப்பட்டது. பழமையான பாலத்தால் ரெயில்கள் பாலத்துக்கு கீழே செல்வதில் பல்வேறு இடையூறுகள் இருந்து வந்தன. தற்போது புதிய பாலப்பணிகள் 90 சத வீதத்துக்கும் மேல் முடிவடைந்து விட்டதால் ரெயில்கள் பாலத்துக்கு கீழே கடந்து செல்லும் போது, இனி சிரமம் இன்றி வேகமாக கடந்து செல்ல முடியும்.

    இந்த பாலப்பணிகளுக்காக யானைக்கவுனி ரெயில்வே மேம்பாலம் 2017-ம் ஆண்டு மூடப்பட்டு 4 சக்கரவாகனங்களுக்கு முழுமையாக தடை விதிக்கப்பட்டது. 2019-ம் ஆண்டு முதல் இரு சக்கர வாகனங்கள் உள்பட அனைத்து வாகனங்களுக்கும் தடை போடப்பட்டது. 2020-ம் ஆண்டில் ஆகஸ்ட் மாதம் பாலத்தை புதுப்பித்து முழுமையாக கட்டும் பணிகள் தொடங்கின. இந்த புதிய பாலத்தில் பிரமாண்டமான 7 தூண்கள் பொருத்தப்பட்டு பணிகள் இறுதிக்கட்டத்தில் உள்ளன. பாலத்தின் மேலே நடந்து செல்பவர்களுக்கான பாதையும் உருவாக்கப்பட்டன. ரூ.30.78 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள இந்த பாலப்பணிகள் 95 சதவீதம் அளவுக்கு முடிந்திருப்பதாக ரெயில்வே உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

    இதைத்தொடர்ந்து இன்னும் சில நாட்களிலோ அல்லது இந்த மாத இறுதியிலோ பாலத்தின் திறப்பு விழா நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புதிய பாலம் திறக்கப்பட்டுவிட்டால் பேசின்பிரிட்ஜ் மற்றும் வால்டாக்ஸ் ரோடு பகுதியில் போக்குவரத்து நெரிசல் வெகுவாக குறையும். பேசின்பிரிட்ஜ் மற்றும் வால்டாக்ஸ் ரோடு பகுதியில் இருந்து எழும்பூர், புரசைவாக்கம் பகுதிக்கு செல்பவர்கள் இந்த பாலத்தின் வழியாக சிரமமின்றி விரைவாக சென்று விடலாம். வால்டாக்ஸ் சாலையில் நெரிசல் குறையும் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.

    • திண்டுக்கல் மாவட்டம் பழனி, ஆண்டிப்பட்டி என சுற்றுவட்டாரத்தில் உள்ள பல்வேறு பகுதிகளுக்கு உடுமலையில் இருந்து பேருந்துகள் இயக்கப்படுகின்றன
    • உடுமலையிலிருந்து பழனி மார்க்கமாக மதுரை, திருச்செந்தூர், சென்னை உள்பட பல நகரங்களுக்கு பயணிகள் மற்றும் எக்ஸ்பிரஸ் ெரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இருந்து பழனி செல்லும் சாலையில் பிரிந்து செல்லும் கொழுமம் ரோட்டில் அகல ெரயில்வே பாதை உள்ளது. இந்த வழியாக எஸ்.வி.புரம், கண்ணமநாயக்கனூர், உரல்பட்டி, மலையாண்டி கவுண்டனூர், பாப்பான் குளம், பெருமாள் புதூர், சாமராய பட்டி, குமரலிங்கம், கொழுமம், ருத்ராபாளையம், திண்டுக்கல் மாவட்டம் பழனி, ஆண்டிப்பட்டி என சுற்றுவட்டாரத்தில் உள்ள பல்வேறு பகுதிகளுக்கு உடுமலையில் இருந்து பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மேலும் உடுமலையில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள் ெரயில்வே கேட்டை கடந்து தான் செல்ல வேண்டும். உடுமலையிலிருந்து பழனி மார்க்கமாக மதுரை, திருச்செந்தூர், சென்னை உள்பட பல நகரங்களுக்கு பயணிகள் மற்றும் எக்ஸ்பிரஸ் ெரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இப்பகுதியில் அடிக்கடி ெரயில்கள் கடந்து செல்வதால் கேட் மூடப்பட்டு பல மணி நேரம் பொதுமக்கள் காத்திருக்க வேண்டிய சூழல் நிலவுகிறது. இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, உடுமலையிலிருந்து தளி ரோட்டில் மேம்பாலம் கட்டும் போதே கொழுமம் ரோட்டிலும் மேம்பாலம் கட்ட வேண்டுமென பல்வேறு தரப்பினர்களும் கோரிக்கை விடுத்தனர். ஆனால் இதுவரை ெரயில்வே நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. அகல ெரயில்வே பாதை அமைக்கப்பட்டதால் மக்களின் வசதிக்காக கூடுதல் ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது வரவேற்கத்தக்கது. அதே சமயம் உடுமலை- கொழுமம் ரோட்டில் ெரயில்வே மேம்பாலம் கட்டவும் ெரயில்வே நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினர்.

    • கிளீனர் உடல் நசுங்கி சாவு
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    வேலூர்:

    பீகார் மாநிலம், கான்புராவை சேர்ந்தவர் மோதிலால் குமார் (வயது 35).இவர் லாரி கிளினியராக வேலை செய்து வந்தார்.

    நேற்று மாலை சென்னையில் இருந்து லாரியில் கம்ப்யூட்டர் உதிரி பாகங்களை ஏற்றிக் கொண்டு பீகாரை சேர்ந்த டிரைவர் ஒருவர் லாரியை பெங்களூருக்கு ஓட்டி வந்தார்.

    இந்த லாரியில் மோதிலால் குமார் கிளீனராக இருந்தார்.

    இன்று அதிகாலை 2.30 மணி அளவில் சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் சேண்பாக்கம் ரெயில்வே மேம்பாலத்தில் லாரி சென்று கொண்டு இருந்தது.

    அப்போது எதிர்பாராத விதமாக முன்னாள் சென்ற கன்டெய்னர் லாரியின் பின்புறத்தில் லாரி மோதியது.

    இந்த விபத்தில் கிளீனியர் மோதிலால் குமார் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். விபத்து ஏற்படுத்திய லாரி டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடினார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த வடக்கு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விபத்தில் இருந்த மோதிலால் குமார் பிணத்தை மீட்டு பரிசோத னைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    லாரியை பறிமுதல் செய்த போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்து ஏற்படுத்திய லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.

    • வேப்பம்பட்டு, செவ்வாப்பேட்டை ஆகிய ரெயில் நிலையம் அருகே உள்ள ரெயில்வே கேட்டுகள் அடிக்கடி மூடப்பட்டு வந்தது.
    • வேப்பம்பட்டு ரெயில் நிலையம் அருகே ரெயில்வே மேம்பாலம் அமைக்க கடந்த 2008-ம் ஆண்டு முடிவு செய்யப்பட்டது.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் அருகே செவ்வாப்பேட்டை, வேப்பம்பட்டு, பட்டாபிராம் ஆகிய 3 இடங்களில் ரெயில்வே மேம்பால பணி 10 ஆண்டுகளாக கிடப்பில் உள்ளது. இதனால் பொதுமக்கள், மாணவ மாணவிகள், நோயாளிகள், முதியவர்கள், ஊன முற்றவர்கள், ரெயில் பயணிகள் பல்வேறு இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர்.

    சென்னை- அரக்கோணம் ரெயில்வே மார்க்கத்தில், தினந்தோறும் 100-க்கும் மேற்பட்ட மின்சார ரெயில்கள், விரைவு ரெயில்கள், சரக்கு ரெயில்கள் சென்று வருகின்றன.

    இதன் காரணமாக திருவள்ளூர் அருகே உள்ள வேப்பம்பட்டு, செவ்வாப்பேட்டை ஆகிய ரெயில் நிலையம் அருகே உள்ள ரெயில்வே கேட்டுகள் அடிக்கடி மூடப்பட்டு வந்தது.

    இதனால், வேப்பம்பட்டு பகுதியில் இருந்து பெருமாள்பட்டு, அயத்தூர், சிவன்வாயில் உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்லும் பொது மக்கள், கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்கள், ரெயில்கள் மற்றும் பஸ்கள் உள்ளிட்டவை மூலம் குறித்த நேரத்தில் சென்னை மற்றும் திருவள்ளூர், திருத்தணி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பணியிடங்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு செல்ல முடியாத நிலை இருந்து வந்தது.

    இதைத்தொடர்ந்து வேப்பம்பட்டு, செவ்வாப்பேட்டை ஆகிய ரெயில் நிலையம் அருகே ரெயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் நீண்டகாலமாக கோரிக்கை விடுத்து வந்தனர்.

    அந்த கோரிக்கையை ஏற்று தெற்கு ரெயில்வே நிர்வாகமும், மாநில நெடுஞ்சாலைத் துறையும் இணைந்து சென்னை பெருநகர வளர்ச்சி திட்டத்தின் கீழ், வேப்பம்பட்டு ரெயில் நிலையம் அருகே ரெயில்வே மேம்பாலம் அமைக்க கடந்த 2008-ம் ஆண்டு முடிவு செய்யப்பட்டது. ரூ.29.50 கோடி மதிப்பிலான இந்த மேம்பால பணிக்காக ரெயில்வே கேட் பாதை அகற்றப்பட்டு, ரெயில்வேக்கு சொந்தமான பகுதியில் மேம்பாலம் அமைக்கும் பணியை கடந்த 2009 - 2010-ம் ஆண்டுகளில் ரெயில்வே நிர்வாகம் மேற்கொண்டு முடித்தது.

    இதைத்தொடர்ந்து மாநில நெடுஞ்சாலைத் துறைக்கு உட்பட்ட பகுதியில், கடந்த 2011-ம் ஆண்டு மேம்பாலப் பணிகள் தொடங்கப்பட்டன. இந்த பணியில் முதல் கட்டமாக ரெயில்வே கேட் பாதையின் ஒரு புறமான பெருமாள்பட்டு பகுதியில் சுமார் 1 கி.மீ. தூரத்துக்கு மேம்பாலப் பணிகள் நடந்தன.

    ரெயில்வே கடவுப் பாதையின் மற்றொரு புறமான வேப்பம்பட்டு, சென்னை- திருப்பதி நெடுஞ்சாலை பகுதியில் மேம்பாலத்தின் இரண்டாம் கட்டப் பணிகளை கடந்த 2012-ம் ஆண்டு நெடுஞ்சாலைத் துறை தொடர்ந்தது.

    பணிகள் நடைபெற்று வந்த நிலையில் ரெயில்வே மேம்பால பணிக்கு எதிராக வேப்பம்பட்டு பகுதிகளைச் சேர்ந்த 2 பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடர்ந்தனர்.

    அந்த வழக்கு விசாரணை அடிப்படையில் கடந்த 2013-ம் ஆண்டு வேப்பம்பட்டு ரெயில்வே மேம்பால பணிக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது. இதையடுத்து, மேம்பால பணி நிறுத்தப்பட்டது.

    இதற்கிடையே ரெயில்வே மேம்பால பணிக்கு எதிராக வழக்குத் தொடர்ந்தவர்கள் கடந்த 2014-ம் ஆண்டு வழக்கை வாபஸ் பெற்றனர். மேலும் கடந்த 2021-ம் ஆண்டு இறுதியில் ரெயில்வே மேம்பால பணிக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை சென்னை உயர்நீதிமன்றம் நீக்கியது.

    இடைக்கால தடை நீக்கம் செய்யப்பட்டு சுமார் ஒன்றரை ஆண்டுகளாகியும் வேப்பம்பட்டு ரெயில்வே மேம்பாலம் அமைக்கும் பணியை நெடுஞ்சாலை துறை தொடராமல் உள்ளது.

    இப்படி 10 ஆண்டுகளாக கிடப்பில் உள்ள ரெயில்வே மேம்பாலம் பணி முழுமை பெறாமல் பாதியாக அந்தரத்தில் நிற்கிறது.

    இதேபோல் செவ்வாப்பேட்டை ரெயில்வே மேம்பாலம் அமைக்க கடந்த 2011-ம் ஆண்டு முடிவு செய்யப்பட்டது. அந்த ஆண்டே அங்கிருந்த ரெயில்வே கேட் அகற்றப்பட்டு ரெயில்வேக்கு சொந்தமான பகுதியில் மேம்பாலம் அமைக்கும் பணியை தொடங்கியது. இந்த பணியை 2 ஆண்டுக்குள் ரெயில்வே நிர்வாகம் முடித்ததாக கூறப்படுகிறது.

    ஆனால் மாநில நெடுஞ்சாலைத் துறையால் செவ்வாப்பேட்டை மற்றும் திருவூர் பகுதியை இணைக்கும் வகையில் கடந்த 2015-ம் ஆண்டு சுமார் ரூ.20 கோடி மதிப்பில் மேம்பாலம் கட்டும் பணி தொடங்கப்பட்டது.

    அப்பணியில் ரெயில்வே பாதையின் ஒரு புறமான திருவூர் பகுதியில் மேம்பாலம் அமைக்கும் பணி பெருமளவில் முடிந்தது. மற்றொரு புறமான செவ்வாப்பேட்டை ரோடு பகுதியில் மேம்பாலப் பணிக்கு தேவையான நிலத்தின் உரிமையாளர்கள் கையகப்படுத்தப்படும் தங்கள் நிலத்துக்கான இழப்பீடுத் தொகை குறைவாக உள்ளதாக கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.

    இதனால் அப்பகுதியில் சுமார் 60 சதவீத பணிகள் முடிந்த நிலையில் மேம்பாலம் அமைக்கும் பணி கிடப்பில் போடப்பட்டன. இந்தநிலையில் கடந்த ஓராண்டுக்கு முன்பு மேம்பால பணிக்கு எதிரான வழக்குகள் முடிவுக்கு வந்தும் நெடுஞ்சாலைத் துறை இன்னும் மேம்பால பணியை தொடங்காமல் உள்ளது.

    இதே போல் பட்டாபிராம் வழியாக சென்னை- திருப்பதி நெடுஞ்சாலையின் குறுக்காக அமைக்கப்பட்டுள்ள ரெயில் பாதை வழியாக சென்னையில் இருந்து பட்டாபிராம் மிலிட்டரி சைடிங் செல்லும் புறநகர் மின்சார ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

    கடந்த 2010-11-ம் ஆண்டு ரூ.33 கோடி செலவில் நான்கு வழிச்சாலை ரெயில்வே மேம்பாலம் அமைக்க திட்டமிடப்பட்டது. இதற்காக மாநில நெடுஞ்சாலைத் துறை மற்றும் ரெயில்வே துறை நிதி ஒதுக்கீடு செய்தது.

    இதற்கிடையே சென்னை- திருப்பதி நெடுஞ்சாலை 6 வழிச் சாலையாக மாற்றி அமைக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது.

    இதனால் ரெயில்வே துறை மற்றும் மாநில நெடுஞ்சாலைத் துறை இந்த திட்டத்தை மறுமதிப்பீடு செய்தது. இதன்படி திட்ட மதிப்பீடு ரூ.52.11 கோடியாக உயர்ந்தது. திருத்திய மதிப்பீட்டின்படி கடந்த 2018-ம்ஆண்டு பணிகள் தொடங்கப்பட்டன.

    தொடங்கப்பட்ட இரண்டு ஆண்டுக்குள் பணிகள் முடிக்க தீர்மானிக்கப்பட்டது. இதற்காக அப்பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது.

    இதன்படி சென்னையில் இருந்து அம்பத்தூர், ஆவடி, பட்டாபிராம் வழியாக திருவள்ளூர், திருத்தணி, திருப்பதிக்கு இயக்கப்படும் வாகனங்கள் தற்போது மாற்றுப் பாதையில் இயக்கப்படுகின்றன. பட்டாபிராம் காவல் நிலையம் அருகே தண்டுரை, அன்னம்பேடு வழியாக மீஞ்சூர்-வண்டலூர் வெளிவட்டச் சாலை வழியாக சென்று அங்கிருந்து நெமிலிச்சேரி ரவுண்டானாவை கடந்து சென்னை- திருத்தணி நெடுஞ்சாலையில் செல்ல வேண்டும்.

    இதனால் வாகனங்கள் சுமார் 10 கி.மீ. தூரம் வரை மாற்றுப் பாதையில் சுற்றிச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

    வாகனங்கள் சுற்றிச் செல்வதால் எரிபொருள் மற்றும் பயண நேரமும் அதிகரிக்கிறது. ஆண்டுகள் உருண்டோடினாலும் மேம்பால பணி இன்னும் முடியாமல் நீண்டு கொண்டே செல்கிறது.

    எனவே ஆமை வேகத்தில் நடைபெற்று வரும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • நாமக்கல் ரெயில் நிலையம் வரை உள்ள ரெயில் பாதையில், இடைப்பட்ட மரூர்ப்பட்டி கிராமம் வழியாக நாமக்கல் புதிய பை-பாஸ் ரோடு அமைய உள்ளது.
    • இந்த ரிங் ரோடு செல்லும் வழியில், அங்கு உள்ள ரெயில்பா தையை கடக்க மேம்பாலம் அமைக்கப்பட வேண்டும்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டம் களங்காணி ரெயில் நிலையத்தில் இருந்து, நாமக்கல் ரெயில் நிலையம் வரை உள்ள ரெயில் பாதையில், இடைப்பட்ட மரூர்ப்பட்டி கிராமம் வழியாக நாமக்கல் புதிய பை-பாஸ் ரோடு அமைய உள்ளது. இந்த ரிங் ரோடு செல்லும் வழியில், அங்கு உள்ள ரெயில்பா தையை கடக்க மேம்பாலம் அமைக்கப்பட வேண்டும். இந்த மேம்பாலத்தை அமைப்பதற்கு மாநில நெடுஞ்சாலைத்துறைக்கும் தென்னக ரெயில்வே துறைக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தம் பெற வேண்டி உள்ளது. இதுநாள் வரை இதற்கான ஒப்புதலை தென்னக ரெயில்வே வழங்கவில்லை.

    இந்த நிலையில் தற்போது நாமக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், ராஜ்யசபா எம்.பி.யுமான ராஜேஷ்குமார் கடந்த பிப்ரவரி மாதம், மத்திய ரெயில்வே அமைச்ச கத்துக்கு, மரூர்ப்பட்டி அருகே புதிய ரயில்வே மேம்பாலம் அமைக்க கோரி ஒரு கடிதம் அனுப்பினார். அவரது கோரிக்கையை ஏற்று நாமக்கல் புதிய பைபாஸ் ரோடு திட்டத்தில், மரூர்ப்பட்டி அருகே ரெயில் பாதையில் மேம்பாலம் அமைக்க மாநில நெடுஞ்சா லைத்துறைக்கும், தென்னக ரயில்வேவுக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

    இதன் மூலம் மேம்பாலம் அமைக்க தேவையான திட்ட மதிப்பீட்டை, தென்னக ரயில்வே தயாரித்து, தமிழ்நாடு அரசின் நெடுஞ்சாலைத்துறையிடம் அளிக்கும். அதன்பி றகு மேம்பாலம் கட்டுமான பணியை தென்னக ரயில்வே மேற்கொள்ளும் என்று எம்.பி ராஜேஷ்குமார் தெரிவித்துள்ளார்.

    • நாகப்பட்டினம் அக்கரைப்பேட்டை ரயில்வே மேம்பாலம் கட்டி முடிக்கப்ப டாமல் நீண்டகாலமாக பாதியிலேயே நின்றது.
    • ஏற்று ரூபாய் 104 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதற்காக முதலமைச்சர் மற்றும் அமைச்சருக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

    நாகப்பட்டினம்:

    சட்டமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் நாகை எம்.எல்.ஏ முகம்மது ஷா நவாஸ் நாகப்பட்டினம் அக்கரைப்பேட்டை ரயில்வே மேம்பாலம் கட்டி முடிக்கப்ப டாமல் நீண்டகாலமாக பாதியிலேயே நின்றது.

    இந்த ஆட்சி அமைந்ததும் அதை கட்டி முடிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தோம்.

    அதை ஏற்று ரூபாய் 104 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

    அதற்காக முதலமைச்சர் மற்றும் அமைச்சருக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

    பாலம் கட்டும் பணிக்கு நிர்வாக ஒப்புதல் எப்போது அளிக்கப்படும்? பணிகள் எப்போது தொடங்கப்படும் என்பதை அறிய விரும்புகிறேன் என்றார்.

    இது தொடர்பாக அமைச்சர் எ.வ.வேலு கூறியதாவது:-

    நாகப்பட்டினம் அக்கரை ப்பேட்டை வேளாங்கண்ணி சாலையில் கடவு எண் 48-இல் ரயில்வே பாலம் கட்டுவது தொடர்பாகத் தான் எம்.எல்.ஏ கேட்டுள்ளார்.

    ரெயில்வே பாலத்திற்கு அவர் குறிப்பிட்டதைப் போல 104 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு, ஒப்பந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    அநேகமாக இந்த மாதமே அந்த கட்டுமானப் பணிகள் தொடங்கும் நிலையில் இருக்கிறது என்றார்,

    • உழவர் சந்தை விரைவில் இடமாற்றம்
    • விவசாயிகள் குறைதீர்வு கூட்டத்தில் கலெக்டர் தகவல்

    வேலூர்:

    வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைவு தீர்வு கூட்டம் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தலைமையில் இன்று நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி, வன அலுவலர் பிரின்ஸ் குமார் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

    வேலூர் மாவட்டத்தில் வனவிலங்குகளால் ஏற்படும் இழப்பீடுகளுக்கு வனத்துறை சார்பில் முறையாக இழப்பீட்டுத் தொகை வழங்கப்படுவதில்லை என விவசாயிகள் குற்றம் சாட்டினர்.

    அப்போது வனத்துறை அலுவலர்களுக்கும் விவசாயிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. விவசாயி ஒருவர் அதிகாரிகளை பார்த்து கைநீட்டி பேசினார்.

    இதனை கண்ட மாவட்ட வருவாய் அலுவலர் அதிகாரிகளை பார்த்து கைநீட்டிய விவசாயியை வெளியேறும்படி கூறினார்.அவருக்கு ஆதரவாக மற்ற விவசாயிகளும் அரங்கத்தை விட்டு வெளியே செல்வோம் என தெரிவித்தனர்.

    பின்னர் விவசாயிகள் சார்பில் வருத்தம் தெரிவித்தனர். இதனால் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    ஒடுகத்தூர் அணைக்கட்டு பகுதியில் காட்டு எருமைகள் தொல்லை அதிக அளவில் உள்ளது.இதனை கட்டுப்படுத்த வேண்டும். குடியாத்தம் பேரணாம்பட்டு பகுதியில் அடிக்கடி காட்டு யானைகள் தொல்லை நீடித்து வருகிறது.

    அதனை கட்டுப்படுத்த வனத்துறை அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. யானைகள் வரும்போது வனத்துறையினர் உடனடியாக வருவதில்லை.

    சென்னை பெங்களூர் விரைவு சாலை திட்டம் மேல் பாடி பகுதியில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    இந்த சாலைக்காக நீர் நிலைகள் மூடப்படுகிறது. கால்வாய்கள் அடைக்கப்படுகின்றன.

    அதனை தடுத்து நிறுத்த வேண்டும் தற்போது கோடை காலம் என்பதால் விவசாயத்திற்கு தடையின்றி மின்சாரம் கிடைக்க கூடுதல் மின்மாற்றிகளை அமைக்க வேண்டும்.

    உழவர் சந்தைகளுக்கு கொண்டு செல்லும் காய்கறிகளுக்கு அரசு பஸ்களில் டிக்கெட் வசூல் செய்வதை தடை செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.

    கூட்டத்தில் பேசிய விவசாயி ஒருவர் காட்பாடி உழவர் சந்தை யில் கீரைகள் விற்பனை செய்வதற்கு வசதி ஏற்படுத்த வேண்டும் என கூறினார்.

    இதற்கு பதில் அளித்த கலெக்டர் குமாரவேல் பாண்டியன் காட்பாடி உழவர் சந்தை அமைந்திருக்கக் கூடிய பகுதியில் புதிதாக ரெயில்வே மேம்பாலம் விரைவில் கட்டப்படவுள்ளது.

    இதற்கான பூர்வாங்க பணிகள் தொடங்கப்ப ட்டுள்ளன. எனவே காட்பாடி உழவர் சந்தை விரைவில் இடமாற்றம் செய்யப்படும் என தெரிவித்தார்.

    • ராஜபாளையத்தில் ரெயில்வே மேம்பாலத்துக்கு 2-ம் கட்டமாக நிலம் கையகப்படுத்த ஆலோசனை கூட்டம் நடந்தது.
    • இதில் தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. பங்கேற்றார்.

    ராஜபாளையம்

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் வட்டா ட்சியர் அலுவ லகத்தில் ராஜபாளையம்-சத்தி ரப்பட்டி ரோட்டில் நடைபெற்று வரும் ெரயில்வே மேம்பால பணிக்கான 2-ம் கட்ட நில எடுப்புக்கான இறுதி தீர்வுரை தமிழ்நாடு சாலை மேம்பாட்டு திட்டத்தின் தனி மாவட்ட வருவாய் அலுவலர் ஜானகி தலைமையில் நடந்தது. தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார்.

    கூட்டத்தில் 19 நில உரிமையாளர்கள் கலந்துகொண்டு தங்களது கருத்துக்களை தெரி வித்தனர். மேலும் ஓரிரு நில உரிமையாளர்கள் தங்களது வீடு பாதிக்காதவாறு நிலத்தை கையகப்படுத்துமாறு கூறினார்கள். அதற்கு பதில் அளித்த தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ., நில உரிமையாளர்களுக்கு பாதிப்புகள் இல்லாதவாறு நிலம் கையகப்படுத்தப்படும்.

    மேலும் இந்த மாதத்திற்குள் நில உரிமையாளர்களின் வங்கி கணக்கில் பணம் வரவு வைக்கப்பட்டு விரைவில் நிலம் கையகப்படுத்தி மேம்பாலம் அமைக்கும் பணி முடிக்கப்படும் என்றார்.அதனை தொடர்ந்து 2-ம் கட்ட நில எடுப்பில் என்.ஆர்.கே. பங்க் அருகில் உள்ள நில உரிமையாளர்களின் வீடுகளுக்கே நேரில் சென்று, அவர்களிடம் பேசி பொதுமக்களின் சிரமங்களை எடுத்துரைத்து மேம்பாலம் அமைக்கும் பணிக்கு நிலம் எடுக்க நில உரிமையாளர்களிடம் அனுமதி பெற்று கொடுத்தார்.

    மேலும் உடனடியாக நிலத்தை கையகப்படுத்தி பணியை துரிதப்படுத்துமாறு ஒப்பந்ததாரரிடம் கூறிய எம்.எல்.ஏ., வரும் ஏப்ரல் மாதத்தில் மேம்பாலம் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வரவேண்டும் என கேட்டுக்கொண்டார்.

    கூட்டத்தில் தாசில்தார் ராமச்சந்திரன், தனி தாசில்தார் மாரீஸ்வரன் நெடுஞ்சாலை துறை அலுவலர் ஜெகன் செல்வராஜ், தி.மு.க நகர செயலாளர் (வடக்கு) மணிகண்டராஜா மற்றும் நில உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.

    • ரெயில்வே மேம்பாலம் கட்டுமான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
    • இதைத்தொடர்ந்து கடந்த சில மாதங்களாக மேம்பாலம் வேலைகள் நடந்து வருகிறது.

    சோழவந்தான்

    மதுரை மாவட்டம் சோழ வந்தானில் ரெயில்வே மேம்பாலம் கட்ட கடந்த 2016-ம் ஆண்டில் ரூ.45கோடி நிதி ஓதுக்கீடு செய்து அன்றைய முதல்வர் ஜெயலலிதா அடிக்கல் நாட்டினார். பின்னர் மதுரை கோட்ட நெடுஞ்சாலைதுறை கட்டுமான பிரிவு மூலம் பணிகள் தொடங்கியது.

    தொடர்ந்து சர்வீஸ் சாலை நில ஆர்ஜிதம் உள்ளிட்ட பணிகளுக்காக பாலம் கட்டும் பணியில் தொய்வு ஏற்பட்டது. இதனால் காலக்கெடு முடிந்ததால் பாலம் வேலை கள் பாதியிலே நின்று போனது.

    இதன் பின்னர் பாலம் பணிகளை தொடங்கக்கோரி கம்யூனிஸ்டு கட்சியினர் மற்றும் சமூக ஆர்வலர்கள் பல்வேறு கட்ட போராட்டங் களை நடத்தினர்.

    இதையடுத்து 2020-ம் ஆண்டு தமிழக நெடுஞ் சாலைத்துறை ரூ.17கோடி மதிப்பீட்டில் மறுடெண்டர் விட்டது. அதன்பின் 2021-ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் இருந்து மேம்பால பணிகள் மற்றும் அணுகுசாலை அமைக்கும் பணிகள் தொடங்கியது. நெடுஞ்லை துறை அதிகாரிகள் முன்னி லையில் ஆமை வேகத்தில் பணிகள் நடந்து வந்தது.

    இதுபற்றி புகார் எழுந்ததால் அமைச்சர் மூர்த்தி, வெங்கடேசன் எம்.எல்.ஏ., மாவட்ட கலெக்டர் அனீஷ்சேகர் உள்ளிட்டோர் பாலம் கட்டும் பணிகளை நேரில் சென்று பார்வை யிட்டு ஆய்வு செய்தனர். அப்போது மேம்பாலம் மற்றும் அணுகு சாலை பணிகளுக்கு இடையூராக இருந்து வந்த டிரான்ஸ்பார்மர் மற்றும் மின் கம்பங்கள், பேரூராட்சி குடிநீர் குழாய் உள்ளிட்ட வைகளுக்கு மாற்று ஏற்பாடு செய்ய ஆலோசனைகள் வழங்கினர்.

    இதைத்தொடர்ந்து கடந்த சில மாதங்களாக மேம்பாலம் வேலைகள் நடந்து வருகிறது. இந்த மாதம் முதல் பாலப்பணிகள் மிக வேகமாக நடந்து வருகிறது. மேலும் பாலம் மேல் பகுதி மற்றும் அணுகுசாலை ஆகிய பகுதிகளில் தற்போது தார்ச்சாலை அமைக்கும் பணிகளை நெடுஞ்சாலைத்துறை கோட்ட செயற்பொறியாளர் பிரசன்ன வெங்கடேஷ், கட்டுமான பிரிவு செயற்பொறியாளர் சாருமதி ஆகியோர் பார்வையிட்டனர்.

    வரும் மார்ச் மாதம் பாலம் வேலைகள் முடிந்து அதனை திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அவர்கள் தெரிவித்தனர்.

    • ரூ. 96 கோடியில் 2 வழி பாதையாக அமைகிறது.
    • ரெயில்வே லெவல் கிராசிங்கில் மேம்பாலம் கட்ட மாநகராட்சி அனுமதியளித்து திட்டமதிப்பீடு தயாரிக்கப்பட்டு டெண்டர் விடப்பட்டுள்ளது.

    சென்னை:

    சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியில் மேம்பாலங்கள் கட்டப்பட்டு வருகின்றன. ரெயில்வே பாதை, சுரங்கப் பாதை உள்ள இடங்களிலும் மேம்பாலங்கள் கட்ட முடிவு செய்து டெண்டர் விடப்பட்டு பணிகள் தொடங்கி உள்ளன.

    வியாசர்பாடி கணேசபுரம் ரெயில்வே சுரங்கப் பாதையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் மேம்பாலம் கட்ட தீர்மானிக்கப்பட்டும் அந்த பணிகள் தொடங்கி உள்ளன. ரூ.142 கோடி மதிப்பீட்டில் 4 வழி மேம்பாலம் கட்டும் பணி தொடங்கியுள்ளது.

    இதற்காக தற்போது அங்கு குடிநீர் குழாய்கள், மின்வாரிய கேபிள்கள் இடமாற்றம் செய்யும் பணி நடைப்பெற்று வருகிறது. இதற்கு தனி மதிப்பீடு தயாரிக்கப்பட்டு கட்டுமானப்பணி தொடங்குவதற்கு ஏதுவாக மின் கேபிள்கள், குடிநீர் குழாய் லைன் மாற்றம் செய்யப்படுகிறது.

    இந்நிலையில் கொருக்குப்பேட்டையில் மற்றொரு ரெயில்வே மேம்பாலம் அமைக்க மாநகராட்சி திட்ட அனுமதி அளித்து நிதி ஒதுக்கியுள்ளது. கொடுங்கையூர் குப்பை கிடங்கு எழில்நகர் பகுதியில் இருந்து கொருக்குப்பேட்டை செல்லும் மணலி சாலையில் ரெயில்வே லெவல் கிராசிங் உள்ளது.

    அந்த பகுதியில் ரெயில் செல்லும் போது கேட் போடப்படுவதால் இருபுறமும் வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. எண்ணை நிறுவனங்களுக்கு செல்லக்கூடிய லாரிகள், கனரக லாரிகள், ஆட்டோ, கார் உள்ளிட்ட வாகனங்கள் நீண்ட நேரம் காத்து இருக்கின்றன. மோட்டார்சைக்கிளில் செல்லும் பொதுமக்கள் இந்த இடத்தில் காத்து நிற்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. ரெயில்வே கேட்டிற்கு முன் இருபுறமும் நிற்கும் வாகனங்கள் முந்தி செல்ல போட்டி போடுவதால் கடுமையான நெரிசல் ஏற்படுகிறது.

    சரக்கு ரெயில் எப்போதாவது ஒருமுறை இந்த பாதையில் சென்றாலும் அந்த நேரத்தில் 15 நிமிடத்திற்கு மேலாக அங்கு கேட் மூடப்படுவதால் நெரிசல் ஏற்பட்டு பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.

    சென்னை மாநகராட்சி 4-வது மண்டலம் 41-வது டிவிசனுக்கு உட்பட்ட மணலி சாலையில் ரூ.96.4 கோடியில் ரெயில்வே மேம்பாலம் கட்டுவதற்கு முடிவு செய்து டெண்டர் விடப்பட்டுள்ளது. 840 மீட்டர் நீளம், 8.4 மீட்டர் அகலத்தில் இந்த மேம்பாலம் அமைக்க திட்ட வரைப்படம் தயாரிக்கப்பட்டது. அதனை சென்னை ஐ.ஐ.டி. நிறுவனம் ஆய்வு செய்து அனுமதி அளிக்கும். இந்த மேம்பாலம் 2 வழி பாதையாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து மாநகராட்சி நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

    கொருக்குப்பேட்டை ரெயில்வே லெவல் கிராசிங்கில் மேம்பாலம் கட்ட மாநகராட்சி அனுமதி யளித்து திட்டமதிப்பீடு தயாரிக்கப்பட்டு டெண்டர் விடப்பட்டுள்ளது. விரைவில் அங்கு பணிகள் தொடங்கப்படும்.

    மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் அதற்கான செலவை மாநகராட்சி மேற் கொள்கிறது. ரெயில்வேக்கு சொந்தமான பகுதி செலவை ரெயில்வே ஏற்கிறது. இந்த ரெயில்வே மேம்பாலம் கட்டி முடிக்கப்பட்டால் மணலி பகுதிக்கு செல்லக்கூடிய வாகனங்கள் நெரிசல் இல்லாமல் செல்ல முடியும். தண்டையார் பேட்டை பகுதியில் இருந்து எளிதாக கொடுங்கையூர், மாதவரம், பெரம்பூர், மூலக்கடை, வியாசர்பாடி பகுதிகளுக்கு வர முடியும்.

    இந்த பணி முடிந்தவுடன் வைத்திலிங்க மேம்பாலம் அருகில் உள்ள ரெயில்வே லெவல் கிராசிங்கில் மேம் பாலம் கட்டப்படும். இந்த பாலமும் கட்டி முடிக்கப்பட்டுவிட்டால் போக்குவரத்து நெரிசல் ஏற்படாது. வாகனங்கள் எளிதாக கொருக்குப்பேட்டை, மணலி பகுதிகளுக்கு செல்ல முடியும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • ரெயில்வே மேம்பாலத்திற்கு அருகே சர்வீஸ் சாலை அமைக்கும் வரை பழைய பஸ் நிலைய புதுப்பிக்கும் பணியை தொடங்கக்கூடாது.
    • மீறி செயல்படுத்தும் பட்சத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மக்களை திரட்டி போராடும்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் நகர செயலாளர் மாரியப்பன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    ராஜபாளையம் நகராட்சி பழைய பஸ்நிலையத்தில் மேம்படுத்தும் பணி தொடங்க இருப்பதாகவும், அதற்காக இன்று (20-ந் தேதி) முதல் பழைய பஸ் நிலையம் செயல்படாது எனவும், மாற்று வழி த்தடங்கள் குறித்து நகராட்சி ஆணையரும், காவல்துறையும் அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

    ராஜபாளையம் நகராட்சி ரெயில்வே மேம்பால பணி, பாதாள சாக்கடைத்திட்ட பணி, தாமிரபரணி குடிநீர் திட்ட பணி ஆகிய திட்டங்களால் கடந்த 5 ஆண்டுகளாக மக்கள் மிகுந்த துன்பங்களை அனுபவித்து வருகின்றனர். ரெயில்வே மேம்பால பணிகள் கடந்த 5 ஆண்டுகளாக நிறைவு பெறாமல் இருப்பதையொட்டி தென்காசி சாலையில் போக்குவரத்து நெருக்கடி அதிகமாக இருக்கிறது.

    இந்த நிலையில் நகராட்சி ஆணையாளரின் அறிவிப்பும், காவல்துறை யின் அறிவி ப்பும் பொருத்த மற்றதாக இருப்பதோடு மக்களை மேலும் துன்பப்படுத்துவதாக உள்ளது.

    எனவே சத்திரப்பட்டி சாலையில் நடைபெற்று வரும் ரெயில்வே மேம்பால த்திற்கு அருகே சர்வீஸ் சாலை அமைக்கும் வரை பழைய பஸ் நிலையத்தை புதுப்பிக்கும் பணியை தொடங்கக்கூடாது. மீறி செயல்படுத்தும் பட்சத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மக்களை திரட்டி போராடும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×