search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாகை-அக்கரைப்பேட்டை ரெயில்வே மேம்பாலம் பணிகள் விரைவில் தொடங்கப்படும்
    X

    ஷாநவாஸ் எம்.எல்.ஏ.

    நாகை-அக்கரைப்பேட்டை ரெயில்வே மேம்பாலம் பணிகள் விரைவில் தொடங்கப்படும்

    • நாகப்பட்டினம் அக்கரைப்பேட்டை ரயில்வே மேம்பாலம் கட்டி முடிக்கப்ப டாமல் நீண்டகாலமாக பாதியிலேயே நின்றது.
    • ஏற்று ரூபாய் 104 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதற்காக முதலமைச்சர் மற்றும் அமைச்சருக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

    நாகப்பட்டினம்:

    சட்டமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் நாகை எம்.எல்.ஏ முகம்மது ஷா நவாஸ் நாகப்பட்டினம் அக்கரைப்பேட்டை ரயில்வே மேம்பாலம் கட்டி முடிக்கப்ப டாமல் நீண்டகாலமாக பாதியிலேயே நின்றது.

    இந்த ஆட்சி அமைந்ததும் அதை கட்டி முடிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தோம்.

    அதை ஏற்று ரூபாய் 104 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

    அதற்காக முதலமைச்சர் மற்றும் அமைச்சருக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

    பாலம் கட்டும் பணிக்கு நிர்வாக ஒப்புதல் எப்போது அளிக்கப்படும்? பணிகள் எப்போது தொடங்கப்படும் என்பதை அறிய விரும்புகிறேன் என்றார்.

    இது தொடர்பாக அமைச்சர் எ.வ.வேலு கூறியதாவது:-

    நாகப்பட்டினம் அக்கரை ப்பேட்டை வேளாங்கண்ணி சாலையில் கடவு எண் 48-இல் ரயில்வே பாலம் கட்டுவது தொடர்பாகத் தான் எம்.எல்.ஏ கேட்டுள்ளார்.

    ரெயில்வே பாலத்திற்கு அவர் குறிப்பிட்டதைப் போல 104 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு, ஒப்பந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    அநேகமாக இந்த மாதமே அந்த கட்டுமானப் பணிகள் தொடங்கும் நிலையில் இருக்கிறது என்றார்,

    Next Story
    ×