search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "New Bus Stand"

    • பயணிகளுக்கு இடையூறாக இருந்த கடைகளை அப்புறப்படுத்துமாறு மேயர் அறிவுரை வழங்கினார்.
    • பயணிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படும் என மேயர் சரவணன் தெரிவித்தார்.

    நெல்லை:

    நெல்லை புதிய பஸ் நிலையத்தில் மேயர் பி.எம். சரவணன் ஆய்வு செய்தார். அப்போது பிளாட்பாரங்களில் பயணிகளுக்கு இடையூறாக இருந்த கடைகளை அப்புறப்படுத்துமாறு அறிவுரை வழங்கினார்.

    மேலும், அருகில் இருந்த கட்டண சுகாதார வளாகங்களை ஆய்வு செய்தார். தொடர்ந்து பஸ் நிலையத்தில் பயணிகளிடம் குறைகளை கேட்டார். பின்னர் பயணிகள் வேண்டுகோளை ஏற்று பயணிகள் அமரும் இருக்கைகள் அருகிலேயே சுத்திகரிப்பு குடிநீரை வைக்க உத்தரவிட்டார்.

    மேலும் இனிவரும் காலங்களில் புதிய பஸ் நிலையத்தில் ஆய்வு செய்து பயணிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படும் என்றார். அப்போது துணை மேயர் கே.ஆர். ராஜு மற்றும் கவுன்சிலர்கள், மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் உள்பட பலர் உடன் இருந்தனர். 

    • தலைமை தபால் நிலையம் அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    • வெங்கடேசன் தலைமை தாங்கினார்.

    கடலூர்:

    கடலூர் புதிய பஸ் நிலையத்தை கடலூரின் மையப்பகுதியில் அமைக்க வலியுறுத்தி அனைத்து குடியிருப்போர் நலச் சங்கங்களின் கூட்டமைப்பினர் கருப்பு பட்டை அணிந்து கடலூர் மஞ்சக்குப்பம் தலைமை தபால் நிலையம் அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஆர்ப்பாட்டத்திற்கு கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். கூட்டமைப்பு நிர்வாகிகள் மாயவேல், முனுசாமி, ராஜேந்திரன், கல்யாண குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இணை பொது செயலாளர் தேவநாதன் வரவேற்றார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் மாதவன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். பொதுநல இயக்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் ரவி, திருமார்பன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநகர செயலாளர் அமர்நாத் ஆகியோர் கோரிக்கையை வலியுறுத்தி கண்டன உரையாற்றினர்.

    தலைவர் பாலு பச்சையப்பன் தீர்மானங்களை வாசித்தார். கூட்டமை ப்பின் சிறப்பு தலைவர் மருதவாணன் பேசினார். இதில் கூட்டமைப்பு நிர்வாகிகள் ராஜசேகரன், பன்னீர்செல்வம், செல்வகணபதி, கோமதிநாயகம், கோபால், பாஸ்கர், காசிநாதன், தில்லைநாயகம், வீராசாமி நடராஜன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் பொருளாளர் ரமணி நன்றி கூறினார். 

    • ராமநாதபுரத்தில் புதிய பஸ் நிலைய கட்டுமான பணிகளை எம்.எல்.ஏ., கலெக்டர் தொடங்கி வைத்தனர்.
    • ராமேசுவரம் உள்ளிட்ட சுற்றுலா தலங்களுக்கு செல்ல போதுமான பஸ் வசதிகளுடன் இந்த பஸ் நிலையம் செயல்படும்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரத்தில் நகராட்சிநிர்வாகம் மூலம் ரூ.20 கோடி மதிப்பீட்டில் புதிய பஸ் நிலையம் கட்டுவதற்கான பூமிபூஜை நடந்தது. காதர்பாட்ஷா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ., கலெக்டர் விஷ்ணு சந்திரன் கலந்து கொண்டு பூமிபூஜையை தொடங்கி வைத்தனர்.

    பின்னர் கலெக்டர் கூறியதாவது:-

    ராமநாதபுரம் வளர்ந்து வரும் நகராட்சியாக உள்ளது. பல்வேறு மாவட்ட மக்கள் வந்து செல்லும் பகுதியாக ராமநாதபுரம் உள்ளதால் பெரிய பஸ் நிலையம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இந்த நிலையில் தற்போது நகராட்சி நிர்வாகம் மூலம் ரூ.20 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு 16909.5 சதுரடி பரப்பில் பஸ் நிலையம் அமைக்கப்பட உள்ளது. இதற்கான கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.

    பல்வேறு மாவட்டங்களில் இருந்து ராமேசுவரம் உள்ளிட்ட சுற்றுலா தலங்களுக்கு செல்ல போதுமான பஸ் வசதிகளுடன் இந்த பஸ் நிலையம் செயல்படும். ஒரு ஆண்டுக்குள் பஸ் நிலைய பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதில் ராமநாதபுரம் நகர்மன்றதலைவர் கார்மேகம், ராமநாதபுரம் நகராட்சி ஆணையாளர் அஜிதாபர்வீன், ராமநாதபுரம் நகர்மன்ற துணைத்தலைவர் பிரவீன் தங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • நெல்லை புதிய பஸ் நிலையத்தில் இருந்து தினமும் சென்னை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு அரசு விரைவு போக்குவரத்து கழகத்தால் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.
    • இங்கு ஒரே ஒரு கவுண்டர் மட்டுமே இருப்பதால் உடனடியாக டிக்கெட் எடுக்க முடிவ தில்லை.

    நெல்லை:

    நெல்லை புதிய பஸ் நிலையத்தில் இருந்து தினமும் சென்னை, மதுரை, கோவை, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங் களுக்கும், பெங்களூரு, புதுச்சேரி உள்ளிட்ட இடங்களுக்கும் அரசு விரைவு போக்குவரத்து கழகத்தால் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.

    இந்த பஸ்களில் செல்வதற்காக பயணிகள் முன்பதிவு செய்வதற்கு வசதியாக புதிய பஸ் நிலையத்தில் கவுண்டர் அமைக்கப்பட்டுள்ளது. இங்கிருந்து சென்னை, பெங்களூர், ஓசூர், திருப்பதி, பாண்டிச்சேரி, ஈரோடு, வேளா ங்கண்ணி, ஊட்டி, திருத்தணி உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கும் செல்வதற்கான பஸ்களில் முன்பதிவு செய்யப்பட்டு வருகிறது. இங்கு ஒரே ஒரு கவுண்டர் மட்டுமே இருப்பதால் உடனடியாக டிக்கெட் எடுக்க முடிவ தில்லை. டிக்கெட் எடுப்பத ற்காக நீண்ட வரிசையில் காத்தி ருக்க வேண்டி உள்ளது. பண்டிகை மற்றும் தொடர் விடுமுறை காலகட்டங்களில் இங்கே முன்பதிவு செய்வதற்காக பயணிகள் மணிக் கணக்கில் காத்துக் கிடக்க வேண்டிய சூழ்நிலையும் ஏற்படுகிறது என்று பயணிகள் புகார் தெரிவித்துள்ளனர்.

    எனவே புதிய பஸ் நிலையத்தில் டிக்கெட் முன்பதிவு செய்வதற்கு கூடுதலாக மேலும் ஒரு கவுண்டரை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • பிற்பகல் 12.30 மற்றும் 1.15 மணிக்கு மணிக்கு புறப்படும் பஸ்கள் கடந்த ஒரு மாதமாக சரியாக இயக்கப்படவில்லை
    • வியாழக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை களில் பஸ்கள் வருவதே கிடையாது.

    நெல்லை:

    நெல்லை புதிய பஸ் நிலையத்தில் இருந்து தினமும் நெல்லையின் புறநகர் பகுதிகளுக்கு மட்டுமின்றி தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி, மதுரை, திருச்சி, சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கும் பஸ்கள் சென்று வருகிறது. இதனால் புதிய பஸ் நிலையம் எப்போதும் பரபரப்பாக காணப்படும்.

    நெல்லை புதிய பஸ் நிலையத்தில் இருந்து தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூருக்கு காலை, மதியம் மற்றும் மாலை நேரங்களில் பஸ்கள் சென்று வருகிறது. செய்துங்கநல்லூர், ஸ்ரீவைகுண்டம், ஏரல் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் இந்த பஸ்கள் மூலம் பயன் பெற்று வருகின்றனர்.

    இந்நிலையில் பிற்பகல் 12.30 மற்றும் 1.15 மணிக்கு மணிக்கு புறப்படும் பஸ்கள் கடந்த ஒரு மாதமாக சரியாக இயக்கப்படவில்லை என பயணிகள் புகார் தெரிவிக்கின்றனர். நேற்றும் பிற்பகலில் இந்த பஸ்கள் வரவில்லை. இதனால் அந்த பஸ்சுக்காக காத்திருந்த ஏராளமான பயணிகள் அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் புதிய பஸ் நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது.

    இது தொடர்பாக ஆத்தூர் பயணிகள் கூறியதாவது:-

    நாங்கள் ஆத்தூரில் இருந்து பல்வேறு காரணங்களுக்கு நெல்லைக்கு காலையில் வருவோம். பின்னர் எங்கள் பணிகள் முடிந்த பின்னர் மதியம் மீண்டும் பிற்பகல் 12.30 மணிக்கு செல்லும் பஸ்சில் புறப்பட்டு செல்வோம். அந்த பஸ்சை விட்டால் அதன்பின்னர் 1.15 மணிக்கு செல்லும் அரசு பஸ்சில் ஆத்தூர் செல்வோம். ஆனால் கடந்த ஒரு மாதமாக இந்த 2 பஸ்களும் சரிவர இயக்கப்படவில்லை.

    குறிப்பாக வியாழக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பஸ்கள் வருவதே கிடையாது. இது குறித்து போக்குவரத்துதுறை அதிகாரிகளிடம் கேட்டால் சரியாக பதில் அளிப்பதில்லை. மதியம் 12 மணிக்கு புதிய பஸ் நிலையம் வந்தால் இந்த 2 பஸ்களும் வராததால் அங்கேயே கால்கடுக்க காத்திருந்து அடுத்து 2.30 மணிக்கு ஆத்தூர் செல்லும் பஸ்சில்தான் செல்ல வேண்டி உள்ளது.

    சில நேரங்களில் அந்த பஸ்சும் வராது. இதனால் மாலை 4 மணிக்கு செல்லும் பஸ்சில் ஊருக்கு புறப்பட்டு செல்வோம். இதனால் சுமார் 4 மணி நேரத்திற்கு மேலாக பஸ் நிலையத்தில் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே பயணிகள் நலன் கருதி, முன்பு போல 12.30 மற்றும் 1.15 மணிக்கு இயக்கப்பட்ட அரசு பஸ்சை சீரான முறையில் இயக்க போக்குவரத்து துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • குமாரபாளையம் பேருந்து நிலையம் சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது.
    • குமாரபாளையம் நகராட்சிக்கு புதிய பேருந்து நிலையம் சுமார் 9 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும் என அறிவித்தார்.

    குமாரபாளையம்:

    குமாரபாளையம் பேருந்து நிலையம் சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. பேருந்து நிலையத்தின் மேற்கூரை மற்றும் பேருந்து நிலைய கடைகள் மிகவும் பழுதடைந்து காணப்பட்டதை அடுத்து குமாரபாளையத்திற்கு புதிய பேருந்து நிலையம் அமைத்துக் கொடுக்க வேண்டி நாமக்கல் மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் மதுரா செந்தில் ஆலோசனையின் பேரில், நகர மன்ற தலைவர் விஜய்கண்ணன், தமிழக அரசுக்கு நகராட்சி சார்பில் விரிவான திட்ட அறிக்கை மற்றும் புதிதாக அமைய உள்ள பேருந்து நிலையத்தின் மாதிரி வரைபடத்தையும் தயார் செய்து அனுப்பி வைத்தார்.

    புதிய பேருந்து நிலையம் அமைக்க அரசிடம் நகர் மன்ற தலைவர் தொடர்ந்து கேட்டுக் கொண்டதன் பேரில் தமிழ்நாடு முதலமைச்சர் ஆணைக்கிணங்க நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் நேரு, சமீபத்தில் நடந்த சட்டசபை கூட்டத்தொடரில் நகராட்சி நிர்வாக மானிய கோரிக்கையில் குமாரபாளையம் நகராட்சிக்கு புதிய பேருந்து நிலையம் சுமார் 9 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும் என அறிவித்தார்.

    குமாரபாளையத்திற்கு புதிய பேருந்து நிலையம் அமைக்கும் தமிழ்நாடு அரசின் அறிவிப்பிற்கு பொதுமக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.

    • நெல்லை புதிய பஸ் நிலையத்தில் சமீப காலமாக பயணிகளிடம் பிக்பாக்கெட், செல்போன் திருடி செல்வது, நூதன முறையில் நகை பறிப்பது போன்ற சம்பவங்கள் நடைபெற்றன.
    • இதனை தடுக்கும் பொருட்டு புதிய பஸ் நிலையத்தில் போலீசார் தீவிர ரோந்து சுற்றி வருகின்றனர்.

    நெல்லை:

    நெல்லை புதிய பஸ் நிலையத்தில் சமீப காலமாக பயணிகளிடம் பிக்பாக்கெட், செல்போன் திருடி செல்வது, நூதன முறையில் நகை பறிப்பது போன்ற சம்பவங்கள் நடைபெற்றன.

    போலீசார் ரோந்து

    இதனை தடுக்கும் பொருட்டு புதிய பஸ் நிலை யத்தில் போலீசார் தீவிர ரோந்து சுற்றி வருகின்றனர்.

    இந்த நிலையில் நேற்று பஸ் நிலையத்தில் பஸ்சுக்காக காத்திருந்த வியாபாரி கண்ணன் என்பவரிடம் இருந்து 2 பேர் ரூ.300 பிக்பாக்கெட் அடித்த னர். அப்போது அங்கு ரோந்து சென்ற போலீசார் பிக்பாக்கெட் அடித்த 2 பேரையும் மடக்கி பிடித்து கைது செய்தனர்.

    போலீசார் நடத்திய விசா ரணையில் அவர்கள் மேலப் பாளையம் குறிச்சியை சேர்ந்த சக்தி வேல் (வயது57), கல்லிடைக் குறிச்சியை சேர்ந்த அருள் துரை (33) என்பது தெரிய வந்தது.

    இவர்கள் இதற்கு முன்பு வேறு பயணிகளிடம் கைவரிசை காட்டி னார்களா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • பயணிகள் வசதிக்காக பஸ்நிலையத்தில் கடைகளுக்கு முன்பாக நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது.
    • பஸ்சுக்காக காத்து நிற்கும் பயணிகள் கடும் வெயிலும், மழையிலும் தவித்து வருகிறார்கள்.

    நெல்லை:

    நெல்லை மாநகராட்சி மேலப்பாளையம் மண்டலத்திற்குட்பட்ட புதிய பஸ்நிலையம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் புதுப்பிக்கப்ப ட்டுள்ளது. கீழ்தளத்தில் பெரும்பாலான கடைகள் வாடகை அடிப்படையில் இயங்கி வருகிறது.

    பயணிகள் வசதிக்காக பஸ்நிலையத்தில் கடைகளுக்கு முன்பாக நடை பாதை அமைக்கப்பட்டு ள்ளது. ஆனால் இந்த நடை பாதைகளில் பெரும்பாலான வியாபாரிகள் ஆக்கிரமிப்பு செய்து வியாபாரம் செய்து வருகிறார்கள்.

    இதனால் பயணிகள் நடந்து செல்ல இடமின்றி அவதி அடைந்து வருகிறார்கள். மேலும் பஸ்சுக்காக காத்து நிற்கும் பயணிகள் கடும் வெயிலும், மழையிலும் தவித்து வருகிறார்கள்.

    இதைத்தொடர்ந்து பஸ்நிலைய நடைபாதையில் ஆக்கிரமிப்பு செய்துள்ள வியாபாரிகள் மீது நடவடிக்கை எடுக்க பயணிகள் மாநகராட்சி அலுவலகத்தில் தொடர்ந்து புகார் தெரிவித்து வந்தனர்.

    இதையடுத்து கமிஷனர் சிவகிருஷ்ணமூர்த்தி உத்தரவின்பேரில் நகர்நல அலுவலர் டாக்டர் சரோஜா அறிவுறுத்தலின் பேரில் இன்று மாநகராட்சி அதி காரிகள் பஸ்நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.

    அப்போது சில வியாபாரிகள் ஆகிரமிப்பு செய்திருப்பது தெரியவந்துள்ளது.

    உடனடியாக இன்றுக்குள் ஆக்ரமிப்புகள் அகற்ற வேண்டும் என்றும், இல்லையென்றால் வியாபாரிகள் மீது அபராதம் உள்ளிட்ட கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.

    மேலும் விதிமுறைகளை மீறி பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்திய கடைகளில் இருந்து 16 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    ஆய்வின் போது சுகாதார அலுவலர் அரசகுமார், சுகாதார ஆய்வாளர் முருகன், மேற்பார்வை யாளர்கள் ஆறுமுகம், முருகன், மற்றும் மாநகராட்சி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    • வார்டுக்கு 15 லட்சம் ஒதுக்கி, பணியை தேர்வு செய்து வழங்க அறிவுறுத்தப்பட்டது.
    • 6 பேர் பணி விவரம் வழங்காமல் இருப்பதால் ஒட்டுமொத்த பணியை துவக்க முடியவில்லை.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்ட ஊராட்சி குழு கூட்டம் தலைவர் சத்தியபாமா தலைமையில் நடைபெற்றது. இதில் அவர் பேசியதாவது :- மாவட்ட திட்டக்குழு அமைக்க மாவட்ட கவுன்சிலர்கள் 8 பேர் தேர்வு செய்யப்படுவர். தனியாக கூடி விவாதித்து, கவுன்சிலர்களில் இருந்து 8 பேர் உறுப்பினராக தேர்வு செய்யலாம். குறிப்பாக மாவட்ட ஊராட்சி கூட்டங்களில் அதிகம் பங்கேற்ற கவுன்சிலர்களை தேர்வு செய்ய உத்தேசித்துள்ளோம்.

    கடந்த கூட்டத்தில் வார்டுக்கு 15 லட்சம் ஒதுக்கி, பணியை தேர்வு செய்து வழங்க அறிவுறுத்தப்பட்டது. இதுவரை 6 பேர் பணி விவரம் வழங்காமல் இருப்பதால் ஒட்டுமொத்த பணியை துவக்க முடியவில்லை. விரைவாக பணியை தேர்வு செய்து கொடுக்க வேண்டும். அடுத்த நிதி வரும் போதும் வார்டுக்கு 15 லட்சம் ரூபாய் அளவுக்கு ஒதுக்கப்படும்.

    கவுன்சிலர்கள் குறித்த அவகாசத்துக்குள் பணி பரிந்துரையை வழங்காவிட்டால் கவுன்சிலர் பணியை வழங்கவில்லை என்று பதிவு செய்துவிட்டு மற்ற வார்டுகளுக்கு ஒதுக்கிய நிதியில் பணியை துவங்குவோம். இவ்வாறு அவர் பேசினார்.

    திருப்பூர் புதிய பஸ் நிலையத்திற்கு சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை பெயரை சூட்ட வேண்டுமென, மாவட்ட கவுன்சிலர் ராஜேந்திரன் முன்மொழிந்தார். நம் மாவட்டத்தை சேர்ந்த முதல் சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் பெயரை புதிய பஸ் நிலையத்திற்கு சூட்ட வேண்டுமென மாவட்ட குழுவில் தீர்மானம் நிறைவேற்றி அரசுக்கும், மாநகராட்சிக்கும் பரிந்து ரைக்கப்படும் என மாவட்ட ஊராட்சி தலைவர் அறிவித்தார்.

    • சுரண்டை நகராட்சியில் அடிப்படை வசதிகள் வேண்டி தமிழக நகர்ப்புற வளர்ச்சிதுறை அமைச்சர் நேருவிடம் தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவபத்மநாதன் மனு கொடுத்தார்.
    • சுரண்டைக்கு புதிய பஸ் நிலையம், சுரண்டை நகராட்சியின் வளர்ச்சியின் அடிப்படையில் அமைத்திட வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

    சுரண்டை:

    சுரண்டை நகராட்சியில் அடிப்படை வசதிகள் வேண்டி தமிழக நகர்ப்புற வளர்ச்சிதுறை அமைச்சர் நேருவிடம் தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவபத்மநாதன் மனு கொடுத்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    வியாபார தலம்

    சுரண்டை மிகப்பெரிய வியாபார ஸ்தலமாகும். சுற்றுப்புற விவசாயிகள், விவசாய பொருட்களை கொண்டு வந்து போகும் பகுதியாகும். மேலும் மதுரை, நெல்லை போன்ற பெரிய நகரங்களில் இருக்கிற அளவிற்கு சுரண்டையில் மருத்துவ வசதி மிகச் சிறப்பாக இருந்து வருகிறது. இதனால் சுரண்டைக்கு வரக்கூடிய பொதுமக்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.

    தி.மு.க. ஆட்சி காலத்தில் ஏற்கனவே பழைய பஸ் நிலையம் புதுப்பிக்கப்பட்டது. ஆனால் தற்போது அந்த பஸ் நிலையத்தில் கழிவறை வசதிகள் இல்லாமல் இருந்தது.இதைத்தொடர்ந்து கலைஞர் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ. 35 லட்ச செலவில் கழிவறை கட்டப்பட்டுள்ளது.

    பொதுமக்கள் சிரமம்

    பஸ்கள் வந்து நிற்பதற்கு இடமில்லாமல், பொதுமக்கள் பஸ் ஏறுவதற்கு மிகவும் சிரமப்படுகிறார்கள்.

    பஸ் நிலையம் அமைந்துள்ள சாலை கடைகள் அதிகமாக உள்ள பகுதி. அதனால் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு பொதுமக்கள் பாதிக்கப்படுகிறார்கள்.

    எனவே இந்தக் காரணங்களை ஆய்வு செய்து சுரண்டைக்கு புதிய பஸ் நிலையம், சுரண்டை நகராட்சியின் வளர்ச்சியின் அடிப்படையில் அமைத்திட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    அப்போது மாவட்ட அவை தலைவர் சுந்தர மகாலிங்கம், பொதுக்குழு உறுப்பினர் சாமிதுரை, முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் காசி தர்மதுரை, முன்னாள் மாவட்ட பிரதிநிதி ஹசன், கீழப்பாவூர் மேற்கு ஒன்றிய செயலாளர் சீனித்துரை, ஓணம்பீடி பாலகிருஷ்ணன், மாவட்ட பிரதி ஸ்டீபன் சத்யராஜ், விவசாய அணி துணை அமைப்பாளர் மகேந்திரன், தொழிலதிபர் சண்முகவேல், மாவட்ட உதயநிதி நற்பணி மன்ற துணைச் செயலாளர் சிவ அருணன் பரமசிவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


    • தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான இடம் மணக்குடியில் தேர்வு செய்யப்பட்டு 5 வருடங்களுக்கு முன் வாங்கப்பட்டது.
    • மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான புதிய பஸ் நிலையம் அமைப்பதற்கான பணி தொடங்கியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறையில் ரூ.24 கோடி மதிப்பீட்டில் புதிதாக அமையவுள்ள ஒருங்கிணைந்த பஸ் நிலையத்துக்கான பூமி பூஜையில் தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சந்நிதானம் அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார்.

    மயிலாடுதுறையில் புதிய பஸ் நிலையம் அமைப்பதற்காக தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான இடம் மணக்குடியில் தேர்வு செய்யப்பட்டு 5 வருடங்களுக்கு முன் வாங்கப்பட்டது.

    இந்நிலையில் புதிய பஸ் நிலையம் அமைப்பதற்கு உட்கட்டமைப்பு மற்றும் வசதிகள் திட்டம் 2021-2022-ன் கீழ்
    தமிழக அரசு ரூ.24 கோடி மதிப்பீட்டில் நிதி ஒதுக்கீடு செய்தது.

    புதிய ஒருங்கிணைந்த பஸ் நிலையம் அமைப்பதற்காக டெண்டர் விடப்பட்டு நகராட்சி அலுவலகத்தில் நகராட்சித் தலைவர் செல்வராஜ் தலைமையில் அண்மையில் கூட்டம் நடத்தி ஒப்புதல் பெறப்பட்டது.

    இதையடுத்து, புதிய பஸ் நிலையத்துக்கான பூமிபூஜை அடிக்கல் நாட்டு விழா இன்று காலை வாஸ்துபடி 6 லிருந்து 7 மணிக்குள் நடைபெற்றது. சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜகுமார், நிவேதா முருகன், நகராட்சி நகர மன்ற தலைவர் செல்வராஜ், நகராட்சி ஆணையர் செல்வபாலாஜி முன்னிலையில், திருக்கடையூர் மகேஷ் குருக்கள், பாலச்சந்திர சிவாச்சாரியார் ஆகியோர் பூஜை செய்ய தருமபுர ஆதீனம் 27-வது குருமா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் கலந்துகொண்டு ஒருங்கிணைந்த புதிய பஸ் நிலையத்திற்கான பணிகளை அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.

    இவ்விழாவில் மாவட்ட குழு உறுப்பினரும் மயிலாடுதுறை வடக்கு ஒன்றிய செயலாளர் இளையபெருமாள், தெற்கு ஒன்றிய செயலாளர் ஞான இமயநாதன், ஒன்றிய குழு தலைவர் காமாட்சி மூர்த்தி, தி.மு.க. இளைஞர் அணி அமைப்பாளர் விஜய், மணக்குடி ஊராட்சி மன்ற தலைவர் வீரமணி, நகர மன்ற துணைத் தலைவர் சிவக்குமார், மற்றும் நகர மன்ற உறுப்பினர்கள் மற்றும் நகராட்சி துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    மயிலாடுதுறை மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான புதிய பஸ் நிலையம் அமைப்பதற்கான பணி தொடங்கியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • உடன்குடி, சாத்தான்குளம், நாசரேத், திருச்செந்தூர் உள்ளிட்ட இடங்களுக்கு அதிக அளவில் பஸ்கள் இயக்கப்படும்
    • நடைமேடையில் உடன்குடி சுற்றுவட்டார பயணிகள் கூட்டம் அலைமோதியது

    நெல்லை:

    நெல்லை புதிய பஸ் நிலையத்தில் இருந்து தினமும் காலை முதல் இரவு வரை உடன்குடி, சாத்தான்குளம், நாசரேத், திருச்செந்தூர் உள்ளிட்ட இடங்களுக்கு அதிக அளவில் பஸ்கள் இயக்கப்படும்.

    உடன்குடி பஸ்

    இதன் மூலம் தொழில் நிமித்தமாகவும், கல்லூரிகளுக்கு வருவதற்காகவும் ஏராளமானோர் நெல்லைக்கு வந்து செல்வார்கள். ஆனால் கடந்த சில மாதங்களாக நெல்லையில் இருந்து உடன்குடிக்கு செல்லும் பஸ்கள் எண்ணிக்கை படிப்படியாக குறைக்கப்பட்டு வருவதாக பயணிகள் புகார் தெரிவித்துள்ளனர்.

    இதற்கு முன்பு காலை 11.50 மணி, மதியம் 12.30 மணி, 1.15 மணி அதனை தொடர்ந்து 2.30 மணிகளில் உடன்குடிக்கு பஸ் இயக்கப்படும். இந்த பஸ் ஸ்ரீவைகுண்டம், நாசரேத் வழியாக உடன்குடி செல்வதால் அந்த வழிகளில் உள்ள ஏராளமான கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் பயன் அடைந்து வந்தனர்.

    பயணிகள் புகார்

    இந்நிலையில் கடந்த சில மாதங்களாக 11.50 மணிக்கு இயக்கப்படும் பஸ்கள் அடிக்கடி நிறுத்தப்பட்டு விடுகிறது.தொடர்ந்து மதியம் 1.15 மணிக்கு இயக்கப்பட்ட பஸ் முழுமையாக ரத்து செய்யப்பட்டு விட்டது. தற்போது பயணிகள் 12.30 மணிக்கு இயக்கப்படும் பஸ்சை மட்டுமே நம்பி இருக்கும் நிலையில் சில நாட்களாக அந்த பஸ்சும் மாயமாகி விட்டதாக பயணிகள் புகார் தெரிவிக்கின்றனர்.

    நேற்றும் அந்த பஸ் வராததால், அந்த நடைமேடையில் உடன்குடி சுற்றுவட்டார பயணிகள் கூட்டம் அலைமோதியது. பஸ்கள் அடிக்கடி மாயமாவது குறித்து அதிகாரிகளிடம் தெரிவித்து மாற்று பஸ் வசதி கேட்டாலும், அவர்கள் செய்து கொடுப்பதில்லை என்றும், பயணிகள் பரிதவிக்கின்றனர் என்றும் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

    ×