search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குமாரபாளையத்தில் ரூ.9 கோடி மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம்
    X

    குமாரபாளையத்தில் ரூ.9 கோடி மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம்

    • குமாரபாளையம் பேருந்து நிலையம் சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது.
    • குமாரபாளையம் நகராட்சிக்கு புதிய பேருந்து நிலையம் சுமார் 9 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும் என அறிவித்தார்.

    குமாரபாளையம்:

    குமாரபாளையம் பேருந்து நிலையம் சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. பேருந்து நிலையத்தின் மேற்கூரை மற்றும் பேருந்து நிலைய கடைகள் மிகவும் பழுதடைந்து காணப்பட்டதை அடுத்து குமாரபாளையத்திற்கு புதிய பேருந்து நிலையம் அமைத்துக் கொடுக்க வேண்டி நாமக்கல் மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் மதுரா செந்தில் ஆலோசனையின் பேரில், நகர மன்ற தலைவர் விஜய்கண்ணன், தமிழக அரசுக்கு நகராட்சி சார்பில் விரிவான திட்ட அறிக்கை மற்றும் புதிதாக அமைய உள்ள பேருந்து நிலையத்தின் மாதிரி வரைபடத்தையும் தயார் செய்து அனுப்பி வைத்தார்.

    புதிய பேருந்து நிலையம் அமைக்க அரசிடம் நகர் மன்ற தலைவர் தொடர்ந்து கேட்டுக் கொண்டதன் பேரில் தமிழ்நாடு முதலமைச்சர் ஆணைக்கிணங்க நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் நேரு, சமீபத்தில் நடந்த சட்டசபை கூட்டத்தொடரில் நகராட்சி நிர்வாக மானிய கோரிக்கையில் குமாரபாளையம் நகராட்சிக்கு புதிய பேருந்து நிலையம் சுமார் 9 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும் என அறிவித்தார்.

    குமாரபாளையத்திற்கு புதிய பேருந்து நிலையம் அமைக்கும் தமிழ்நாடு அரசின் அறிவிப்பிற்கு பொதுமக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.

    Next Story
    ×