என் மலர்
நீங்கள் தேடியது "தி நகர்"
- தி.நகரில் மட்டும் புதிதாக 90 கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
- தீயணைப்பு வாகனங்கள், ஆம்புலன்ஸ் போன்றவையும் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கிறது.
சென்னை:
தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 5 நாட்களே இருக்கும் நிலையில் சென்னை மாநகரில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.
சென்னையில் மற்ற பகுதிகளைவிட தி.நகர் பகுதியில்தான் அதிக அளவில் பொதுமக்கள் ஜவுளி மற்றும் பொருட்களை வாங்குவதற்காக கூடுவார்கள். இதனை கருத்தில் கொண்டு ஒவ்வொரு ஆண்டும் தீபாவளியையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுவது வழக்கம்.
அந்த வகையில் இந்த ஆண்டும் தி.நகரில் தீபாவளிக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளன. தி.நகர் ரங்கநாதன் தெருவில் 5 இடங்களில் கண்காணிப்பு கோபுரங்களும் மற்ற இடங்களில் 3 கண்காணிப்பு கோபுரங்களும் அமைக்கப்பட்டுள்ளது.
தி.நகரில் மட்டும் புதிதாக 90 கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே அந்த பகுதிகளில் 28 கேமராக்கள் உள்ள நிலையில் பாண்டி பஜார் மாம்பலம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் மட்டும் 155 கேமராக்கள் மூலமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.
3 டிரோன் கேமராக்கள் மூலமாக தீபாவளி திருடர்களைப் பிடிப்பதற்கு வலை விரிக்கப்பட்டுள்ளது. புரசைவாக்கம், வண்ணாரப்பேட்டை ஆகிய பகுதிகளிலும் தீபாவளி நெருங்கும் நேரங்களில் டிரோன் கேமராக்களை பயன்படுத்த போலீசார் திட்டமிட்டு உள்ளனர்.
தி.நகர் பகுதியில் தினமும் 200 போலீசார், 100 ஊர்க்காவல் படையினர், 100 ஆயுதப் படை காவலர்கள் ஆகியோர் சுழற்சி முறையில் பணியாற்றி வருகிறார்கள்.
வண்ணாரப்பேட்டை பகுதியில் 150 போலீசாரும், புரசைவாக்கத்தில் 120 போலீசாரும், தாம்பரம் பகுதியில் 250 காவலர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தி.நகர் பகுதியில் 16 ஒலி பெருக்கிகள் மூலமாகவும் போலீசார் பொதுமக்களை உஷார்படுத்திக் கொண்டே இருக்கிறார்கள். நீங்கள் கொண்டு வந்துள்ள பொருட்களை பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள். உடமைகளை தவறவிட்டு விடாதீர்கள் என்பது போன்ற எச்சரிக்கை தகவல்களை திரும்பத் திரும்ப கூறிக் கொண்டே உள்ளனர். மக்களின் வசதிக்காக 4 காவல் உதவி மையங்கள், 2 தற்காலிக உதவி மையங்களும் ஏற்படுத்தப்பட்டு உள்ளன.
தீயணைப்பு வாகனங்கள், ஆம்புலன்ஸ் போன்றவையும் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கிறது.
தி.நகர் பகுதியில் வாகனங்களை நிறுத்துவதற்கு வெங்கட் நாராயணா சாலையில் உள்ள சோமசுந்தரம் மைதானம், ராமகிருஷ்ணா பள்ளி மைதானம், தி.நகர் மேம்பாலத்துக்கு கீழே என இடங்களும் ஒதுக்கி கொடுக்கப்பட்டு உள்ளன.
பொதுமக்களின் வசதிக்காக அவர்களின் அவசர தேவையை கருத்தில் கொண்டு 8939977649, 91504 72278 ஆகிய செல்போன் எண்களும் அவசர உதவி எண்களாக அறிவிக்கப்பட்டு உள்ளன.
ஒவ்வொரு தீபாவளி பண்டிகையின் போதும் குற்றவாளிகள் கூட்டத்துக்குள் புகுந்தால் அவர்களை அடையாளம் காணும் நவீன தொழில்நுட்பத்தையும் மாம்பலம் போலீசார் கையாண்டு வருகிறார்கள். இந்த ஆண்டும் அது போன்ற குற்றவாளிகளை அடையாளம் காண நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பிக்பாக்கெட், செயின் பறிப்பு போன்ற குற்ற செயல்களில் ஈடுபடுபவர்களை தடுப்பதற்கு வணிகப் பகுதிகள் அனைத்திலும் சாதாரண உடையிலும் போலீசார் கண்காணித்து வருகிறார்கள்.
வருகிற 18, 19 ஆகிய தேதிகளில் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால் அந்த 2 நாட்களும் தற்போது இருப்பதைவிட கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும் என்று போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவின் பேரில், கூடுதல் கமிஷனர் கண்ணன் மேற்பார்வையில், தி.நகர் துணை கமிஷனர் குத்தா லிங்கம், உதவி கமிஷனர் சுரேஷ், இன்ஸ்பெக்டர் விமல் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். சென்னை மாநகர பகுதியில் மட்டும் 18 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.
- ரெங்கநாதன் தெரு பகுதியில் இருந்து தி.நகர் பஸ் நிலையத்தை தாண்டி மேம்பாலம் செல்லும் வகையில் இந்த இணைப்பு மேம்பாலம் இரும்பால் உருவாக்கப்பட்டு உள்ளது.
- மேம்பாலத்திற்கு மறைந்த முன்னாள் எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் பெயர் சூட்டப்பட்டு உள்ளது.
சென்னை:
சென்னையின் மையப் பகுதியாக விளங்கும் தியாகராய நகரில் மிகப் பெரிய ஜவுளிகடைகள், நகைக்கடைகள் உள்ளிட்ட ஏராளமான கடைகள் உள்ளதால் எப்போதும் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும்.
இதனை கருத்தில் கொண்டு தி.நகர் உஸ்மான் சாலையில் ஏற்கனவே ஒரு மேம்பாலம் கட்டப்பட்டு இருந்தது. இந்த மேம்பாலம் ரெங்கநாதன் தெரு அருகே இறங்கும் வகையில் இருந்ததால் அங்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது.
இதற்கு தீர்வு காணும் வகையில் தெற்கு உஸ்மான் சாலையையும், சி.ஐ.டி. நகர் முதல் பிரதான சாலையை இணைக்கும் வகையிலும் 1¼ கிலோ மீட்டர் நீளத்துக்கு தி.நகர் பாலத்தை நீட்டித்து புதிய மேம்பாலம் கட்டப்பட்டு உள்ளது.
அதாவது ரெங்கநாதன் தெரு பகுதியில் இருந்து தி.நகர் பஸ் நிலையத்தை தாண்டி மேம்பாலம் செல்லும் வகையில் இந்த இணைப்பு மேம்பாலம் இரும்பால் உருவாக்கப்பட்டு உள்ளது.
இது 3,800 மெட்ரிக் டன் இரும்பினால் வடிவமைக்கப்பட்டு 164.92 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள முதல் இரும்பு மேம்பாலம் ஆகும்.
இந்த புதிய மேம்பாலத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். மேம்பாலத்திற்கு மறைந்த முன்னாள் எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் பெயர் சூட்டப்பட்டு உள்ளது.
இந்த புதிய மேம்பாலம், 1200 மீட்டர் நீளம் மற்றும் 8.40 மீட்டர் அகலத்தில் 53 இரும்பு தூண்களுடன் இருவழிப்பாதையாக அமைக்கப்பட்டு தெற்கு உஸ்மான் சாலையில் ஏற்கனவே உள்ள 800 மீட்டர் நீள கான்கிரீட் மேம்பாலத்துடன், உயரிய தொழில் நுட்பத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த மேம்பாலம் 2 கிலோ மீட்டர் நீளத்திலும் தியாகராய நகர் பஸ் நிலையத்தில் இருந்து இந்தப் பாலத்தில் ஏறுவதற்கு 120 மீட்டர் நீளத்திலும், தெற்கு உஸ்மான் சாலை பாலத்தில் இருந்து தியா கராய நகர் பகுதிக்கு இறங்குவதற்கு 100 மீட்டர் நீளத்திலும் அணுகு சாலைகள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இதன் இருபுறமும் நடைபாதைகளுடன் 6 மீட்டர் அகல சேவை சாலைகளும் அமைக்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சியின் மிக நீண்ட பாலமாக 2 கிலோ மீட்டர் நீளத்தில் கட்டமைக்கப்பட்டுள்ள இந்த பாலத்தில் தினசரி சராசரியாக 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் பயணித்து, சுமார் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் பயன்பெறுவார்கள்.
சிங்காரச் சென்னையை நோக்கிய பயணத்தில் புதிய பெருமைமிகு அடையாளமாக புதிய தொழில் நுட்பத்தில் கட்டப்பட்டுள்ள இம்மேம்பாலத்தின் தடுப்புச் சுவர்களில் தியாகராய நகர் மற்றும் சுற்றுப்புறங்களின் வாழ்வியல் காட்சிகள் அழகிய ஓவியங்களாக சித்தரிக்கப்பட்டு, அப்பகுதி மக்களின் உழைப்பையும் மரபையும் சிறப்பிக்கின்றன.
சி.ஐ.டி நகர் முதல் பிரதான சாலையிலுள்ள தெற்கு உஸ்மான் சாலை மேம்பாலத்தின் சாய்வுதளப் பகுதியிலிருந்து சி.ஐ.டி நகர் நான்காவது பிரதான சாலை சந்திப்பை இணைக்கும் வகையில் கட்டப்பட்டுள்ள இந்த மேம்பாலம் மூலம், தெற்கு உஸ்மான் சாலை - பர்கிட் சாலை - மேட்லி சாலை ஆகியவற்றின் சந்திப்பு, தெற்கு உஸ்மான் சாலை - தென்மேற்கு போக்சாலை - நியூ போக் சாலை ஆகியவற்றின் சந்திப்பு, தெற்கு உஸ்மான் சாலை - சி.ஐ.டி நகர் வடக்கு சாலை சந்திப்பு ஆகியவற்றில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் குறைந்திட வழிவகை செய்யப்பட்டுள்ளது.
மேம்பால திறப்பு விழா நிகழ்ச்சியில், அமைச்சர்கள் கே.என். நேரு, மா. சுப்பிரமணியன், பி.கே. சேகர்பாபு, மேயர் பிரியா, ஆ. ராசா எம்.பி., சட்டமன்ற உறுப்பினர்கள் ஜெ.கருணாநிதி, த. வேலு, தாயகம் கவி, துணை மேயர் மு. மகேஷ் குமார், உயர் அதிகாரிகள் கார்த்திகேயன், ஆணையர் குமரகுருபரன், வினய், தமிழ்நாடு வீட்டுவதி வாரியத்தின் தலைவர் பூச்சி எஸ். முருகன், தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் தலைவர் துறைமுகம் காஜா, திண்டுக்கல் ஐ.லியோனி, பெருநகர சென்னை மாநகராட்சி நிலைக்குழு தலைவர் சிற்றரசு,
தியாகராய நகர் மேற்கு பகுதி செயலாளர் கே.ஏழுமலை, கோ.சு.மணி, எம்.எஸ்.பழனி, ஜெ.ஜானகிராமன், ராஜா அன்பழகன், தியாகராய நகர் மேற்கு பகுதி துணைச் செயலாளர் பாண்டிபஜார் பாபா சுரேஷ், தி.நகர் கிழக்கு பகுதி பொருளாளர் ஜி.மோகன் ராஜ், வட்டச் செயலாளர் பி.மாரி, மாவட்ட மகளிர் தொண்டர் அணி அமைப்பாளர் மோனிஷா கருணாநிதி, வனிதாபுரம் துரை, இ.சஞ்சீவ் குமார்(எ) கார்த்தி, 133-வது வட்ட துணை செயலாளர் ஆர்.கலா ராஜா, என்.வெங்கடேசன், கனிமொழி வெங்கடேசன் மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
- கோடம்பாக்கம், தி.நகர், அரும்பாக்கம் மற்றும் தி. நகர் பஸ் வழித்தடங்களுக்கு புதிய பஸ் நிலையம் ஒரு முக்கிய மையமாக திகழும்.
- பல்வேறு வசதிகள் செய்யப்படுவதால் 5 மாடிகளை கொண்ட பிரம்மாண்ட பஸ் முனையமாக விரைவில் செயல்பட தொடங்கும்.
சென்னை மாநகரில் எப்போதும் பரபரப்பாக காணப்படும் பகுதிகளில் ஒன்று தி.நகராகும். பல்வேறு ஜவுளி கடைகள், வணிக நிறுவனங்கள் என தி.நகரில் ஏராளமான தொழில் சார்ந்த கடைகள் வரிசை கட்டி நிற்கின்றன. இதன் காரணமாக மாம்பலம் பகுதிக்கு ஒவ்வொரு நாளும் பல்லாயிரக்கணக்கானோர் வந்து செல்கிறார்கள்.
ஆனால் அங்கு பயணிகளுக்கும் மாநகரப் போக்குவரத்து கழக டிரைவர் மற்றும் கண்டக்டர்களுக்கும் போதுமான வசதிகள் செய்து கொடுக்கப்படாமலேயே உள்ளன.
பஸ் நிலையத்தில் போதிய இட வசதி இல்லாததால் பஸ் நிலையத்துக்கு வெளியேயும் மாநகரப் பஸ்களை நிறுத்த வேண்டிய நிலையே நீடித்து வருகிறது.
இதன் காரணமாக தி.நகர் பகுதியில் போக்குவரத்து நெரிசல் அதிகமாகவே இருந்து வருகிறது.
இதனை குறைக்கும் வகையிலும், பயணிகளுக்கு சிறந்த வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்திலும் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் தி.நகரில் ஒரு புதிய ஒருங்கிணைந்த பஸ் முனையத்தை அமைக்க திட்டமிட்டுள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் இந்த திட்டத்தை நிறைவு செய்து அதன் பிறகு பணிகளை தொடங்குவதற்கு முடிவு செய்யப்பட்டு இருக்கிறது.
இந்த புதிய பஸ் முனையம் சுமார் 1.97 ஏக்கர் பரப்பளவில், ரூ.254 கோடியில் தி.நகரில் உள்ள சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகத்தின் தற்போதைய பணிமனையிலேயே அமைக்கப்பட உள்ளது. விசாலமாக கட்டப்பட உள்ள புதிய பஸ் நிலையத்தில் 97 பஸ்கள் மற்றும் 235 வாகனங்களை நிறுத்தும் அளவுக்கு இட வசதி செய்து கொடுக்கப்பட இருக்கிறது.
இது தவிர, தினமும் 300-க்கும் மேற்பட்ட பஸ்கள் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட மினி பஸ்களையும் கையாளும் திறன் கொண்டதாக இந்த புதிய பஸ் நிலையம் செயல்பட இருப்பது கூடுதல் சிறப்பு அம்சமாகும்.
கோடம்பாக்கம், தி.நகர், அரும்பாக்கம் மற்றும் தி. நகர் பஸ் வழித்தடங்களுக்கு புதிய பஸ் நிலையம் ஒரு முக்கிய மையமாக திகழும். பல்வேறு வசதிகள் செய்யப்படுவதால் 5 மாடிகளை கொண்ட பிரம்மாண்ட பஸ் முனையமாக விரைவில் செயல்பட தொடங்கும்.
தரைத்தளத்தில் பஸ்களை நிறுத்தி வைப்பதற்கு தேவையான அனைத்து வசதிகளும் மேற்கொள்ளப்பட இருக்கின்றன. மேல் தளங்களில் கடைகள், அலுவலகங்கள், மருத்துவ மையங்கள், உணவகங்கள், குழந்தைகள் பராமரிப்பு மையங்கள், காத்திருப்பு பகுதிகள் மற்றும் கழிப்பறைகள் கட்டப்படுகிறது. ஒரு தளத்தில் 50,471 சதுர அடியில் வாகன நிறுத்துமிடமும் பிரம்மாண்டமான முறையில் அமைக்கப்பட இருக்கிறது.
இந்த முனையத்தில் 75 பஸ்களுக்கான நிறுத்தம் மற்றும் 9 அடுக்குகள் கொண்ட 945 நான்கு சக்கர வாகன நிறுத்தம் மற்றும் 1.09 ஏக்கரில் 60 அடுக்குகள் கொண்ட 87 இருசக்கர வாகன நிறுத்தம் ஆகியவையும் இருக்கும்.
தற்போது தி.நகரில் 60-க்கும் மேற்பட்ட பஸ் வழித்தடங்கள் உள்ளதால், இங்குள்ள பஸ் முனையங்கள் மற்றும் சாலைகள் கடுமையான போக்குவரத்து நெரிசலுக்கு உள்ளாகின்றன. புதிய முனையம் அமைப்பதன் மூலம் போக்குவரத்து நெரிசலைக் குறைத்து, பயணிகளுக்கு தடையற்ற மற்றும் பாதுகாப்பான பயணம் உறுதி செய்யப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த முனையத்தில் வாகன நிறுத்தம், டிக்கெட் கவுண்டர்கள், தகவல் மையங்கள், பயணிகள் காத்திருப்புப் பகுதிகள், உணவகங்கள், மருத்துவ மையங்கள், மருந்தகங்கள் மற்றும் குழந்தைகள் பராமரிப்பு வசதிகள் போன்ற பல்வேறு வசதிகளும் ஒரே இடத்தில் ஏற்படுத்தப்படுவதால் பயணிகளுக்கும் பொதுமக்களுக்கும் இந்த மையம் மிகவும் பயனுள்ளதாகவே இருக்கும்.
புதிய முனையம் கட்டி முடிக்கப்பட்ட பிறகு வணிகம் மற்றும் பார்க்கிங் வருவாய் மூலம் ஐந்து ஆண்டுகளில் ரூ.29.52 கோடி வருவாய் ஈட்ட முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய பஸ் நிலையம் மூலம் போக்குவரத்து வசதிகள் மேம்படுவதுடன், வணிக ரீதியாகவும் கணிசமான வருவாய் கிடைக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தற்போதைய தி.நகர் பஸ் நிலையத்தில் இருந்து வெளியேறும் பஸ்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. புதிய முனையம் இந்த நெரிசலை முழுமையாக சரிசெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
போக்குவரத்து கழக ஊழியர்கள் நீண்ட நேரம் பணிபுரிவது ஒரு சவாலாக உள்ளது. புதிய முனையம் இது போன்ற பிரச்சனைகளை குறைப்பதுடன் டிரைவர் மற்றும் கண்டக்டர்கள் பயன் அடைவார்கள் என்பதும் அதிகாரிகளின் நம்பிக்கையாக உள்ளது.
இதை தொடர்ந்து புதிய முனையம் அமைக்கும் முடிவை அவர்கள் வரவேற்றுள்ளனர். இது தங்களுக்கு சிறந்த ஓய்வு மற்றும் பணிச்சூழலை வழங்கும் என நம்புகிறார்கள்.
இந்த புதிய திட்டம் தி.நகர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளின் போக்குவரத்து உள்கட்டமைப்பை மேம்படுத்துவதோடு, சென்னை மாநகர வளர்ச்சியில் முக்கிய பங்களிப்பை ஏற்படுத்துவதாகவே அமையும் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.
- 2 மாடிகள் கொண்ட துணிக்கடையில் தீ விபத்து நிகழ்ந்ததால் ரங்கநாதன் தெரு பரபரப்பாக காணப்பட்டது.
- விரைந்து வந்த தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன.
சென்னை தியாகராய நகர் ரங்கநாதன் தெருவில் அமைந்துள்ள பிரபல துணிக்கடையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 2 மாடிகள் கொண்ட துணிக்கடையில் தீ விபத்து நிகழ்ந்ததால் ரங்கநாதன் தெரு பரபரப்பாக காணப்பட்டது.
துணிக்கடையில் ஏற்பட்ட தீ பரவி மளமளவென எரிந்ததால் அப்பகுதி முழுவதும் புகையாக காணப்பட்டது.
தீ விபத்து குறித்து தகவல் அறிந்ததும் தேனாம்பேட்டை, சைதாப்பேட்டை, தியாகராக நகர் பகுதிகளில் இருந்து விரைந்து வந்த தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன.
மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது.
- உஸ்மான் சாலை மேம்பாலம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மூடப்பட்டது.
- பாலத்தில் 80 கார்கள், 1000 பைக்குகள் வரை நிறுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.ஓ
தீபாவளி பண்டிகைக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், தி.நகர் உள்ளிட்ட கடை வீதிகளில் விற்பனை படுஜோராக உள்ளது.
வழக்கம்போல தி.நகரில் தினமும் மக்கள் குவிந்து வருகின்றனர். இதனால், கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டுள்ளது.
வாகனங்களில் வரும் மக்கள், வாகனங்களை பல கிலோ மீட்டருக்கு வெளியேவிட்டு நடந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், பொது மக்களுக்கு வசதியாகவும், தீபாவளி கூட்ட நெரிசலையொட்டியும் பல மாதங்களாக மூடப்பட்டுள்ள உஸ்மான் சாலை மேம்பாலத்தில் வாகனங்களை நிறுத்த அனுமதிக்கப்பட்டுள்ளது.
உஸ்மான் சாலை மேம்பாலம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மூடப்பட்டது. இந்த பாலத்தில் 80 கார்கள், 1000 பைக்குகள் வரை நிறுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை:
மதுரை மேலூரை சேர்ந்த மாணவர், ஷாருக்கான். இவர் மதுரையில் உள்ள மத்திய அரசு தொழில் நுட்ப கல்லூரியில் படித்து வந்தார்.
இந்த கல்லூரி தொடர்பான விழா கடந்த சில தினங்களாக சென்னையில் நடந்து வருகிறது. இதில் கலந்து கொள்வதற்காக ஷாருக்கான் சென்னை வந்தார்.
சென்னை தி.நகர் நடேசன் பூங்காவின் பின்புறம் உள்ள ஒரு அடுக்கு மாடி குடியிருப்பில் தங்கி இருந்தார். இங்கிருந்து தினமும் கல்லூரி விழாவுக்கு சென்று வந்தார்.
இந்த நிலையில், இன்று அதிகாலை மாணவர் ஷாருக்கான், அவர் தங்கி இருந்த அடுக்குமாடி குடியிருப்பின் 3-வது மாடியில் இருந்து கீழே குதித்தார். ரத்த வெள்ளத்தில் துடிதுடித்த அவர் அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து தி.நகர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். தற்கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது. மாணவர் ஷாருக்கான் தற்கொலை குறித்து மதுரையில் உள்ள உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சென்னை வருகிறார்கள்.
தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 3 நாட்களே உள்ளதால் சென்னையில் உள்ள பிரபல ஜவுளி மற்றும் நகைக்கடைகளில் கூட்டம் அலைமோதுகிறது.
இன்று முதல் தீபாவளி பண்டிகை வரை தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை விடப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரிகள் அனைத்திற்கும் விடுமுறை விடப்பட்டதால் தீபாவளி துணிமணிகள் வாங்க மக்கள் குவிந்தனர்.
சென்னை தி.நகரில் உள்ள ரெங்கநாதன் தெரு, பாண்டிபஜார் உள்ளிட்ட அனைத்து முக்கிய விதிகளும் மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிகின்றன. குடும்பம் குடும்பமாக மக்கள் பஸ், ரெயில்களில் பயணம் செய்து இறுதி கட்ட கொள்முதலில் ஈடுபட்டு வருகின்றனர்.
2 நாட்கள் மழை இல்லாமல் இருந்ததால் தீபாவளி விற்பனை மும்முரமாக இருந்தது. ஜவுளி மட்டுமின்றி வீட்டிற்கு தேவையான எலக்ட்ரானிக் பொருட்கள், தங்க நகைகள் உள்ளிட்ட பொருட்கள் வாங்க தி.நகரை நோக்கி மக்கள் படையெடுக்கிறார்கள். சிறிய சிறிய துணிக்கடைகள், பிளாட்பார கடைகளிலும் மக்கள் கூட்டம் அதிகமாக உள்ளது.
நகை, ஜவுளி, எலக்ட்ரானிக் பொருட்கள் விற்பனையாளர்கள் போட்டி போட்டுக் கொண்டு சலுகைகளை அறிவித்து உள்ளதால் ஒவ்வொரு கடைகளிலும் கூட்டம் நிரம்பி காணப்படுகின்றன. தற்போது அரசு நிறுவனங்களுக்கு போனஸ் அறிவிக்கப்பட்டு இருப்பதால் தீபாவளி ஜவுளி வாங்குவதற்காக சாரை சாரையாக தி.நகர் மட்டுமின்றி புரசைவாக்கம், வண்ணாரப்பேட்டை, பாரிமுனை, அண்ணாநகர், பெரம்பூர், வேளச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் கூட்டம் திரண்டு வருவதால் போலீசார் கூடுதலாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
தீபாவளி நெரிசலை பயன்படுத்தி சமூக விரோதிகள், பிக்பாக்கெட் திருடர்கள் கைவரிசை காட்டக்கூடும் என்பதால் பாதுகாப்பு முன் ஏற்பாடுகள் சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவின் பேரில் நகரம் முழுவதும் செய்யப்பட்டுள்ளன. பிரதான வணிக நிறுவனங்கள், கடைகள் நிறைந்த பகுதியான தி.நகரில் மட்டும் 500 போலீசாரும் 100 ஆயுதப் படை போலீசாரும் குவிக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு வீதியிலும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.
மேலும் கண்காணிப்பு கேமராக்கள், ஹெலிகேம் மூலமும் பிக்பாக்கெட் திருடர்கள் கண்காணிக்கப்படுகிறார்கள். மக்கள் கூட்டம் அதிகமுள்ள பகுதியில் போலீசார் கட்டுப்பாட்டு அறையில் இருந்து கடை விதியை கண்காணிக்கிறார்கள்.
பாரிமுனை, வண்ணாரப்பேட்டை, தாம்பரம், புரசைவாக்கம் போன்ற பகுதியிலும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். போக்குவரத்து நெரிசல் இல்லாமல் வாகனங்கள் செல்லவும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். சென்னையில் தீபாவளி பாதுகாப்பு பணியில் 3 ஆயிரம் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து பயணிகள் பாதுகாப்பாக பயணம் மேற்கொள்ள வசதியாக விரிவான ஏற்பாடுகளை செய்துள்ளனர். பஸ் நிலையத்தில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருப்பதால் பாதுகாப்பு பணியில் 700 போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
ஆம்னிபஸ்கள், அரசு பஸ்கள் கோயம்பேடு பகுதியில் இருந்து பல்வேறு நகரங்களுக்கு புறப்பட்டு சென்றதால் நேற்றிரவு கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வட பழனி 100 அடி சாலை, மதுர வாயல் சாலை, பூந்தமல்லி சாலை உள்ளிட்ட முக்கியமான சாலைகளில் நெரிசல் ஏற்பட்டது.
கோயம்பேட்டில் இருந்து மதுரவாயல் வரை போக்குவரத்து நெரிசல் இல்லாமல் வாகனங்கள் செல்ல 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
கோயம்பேடு பஸ் நிலையத்தில் திருடர்களை கண்காணிப்பு கேமராக்கள் மூலம் கண்காணித்து வருகின்றனர். பஸ் நிலையம் முழுவதும் போலீசார் இரவு பகலாக ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். #Diwali






