என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மேம்பாலம்"

    • அடையாறு மத்திய கைலாஷ் பகுதியில் சமீபத்தில் எல்-வடிவ மேம்பாலம் திறக்கப்பட்டது.
    • தமிழ்நாட்டில் மாநில நெடுஞ்சாலைத்துறை சார்பில் கட்டப்பட்ட எந்த பாலமும் தரமானதாக இல்லை.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

    சென்னை அடையாறு மத்திய கைலாஷ் பகுதியில் அண்மையில் திறக்கப்பட்ட எல்-வடிவ மேம்பாலம் மிக மோசமான தரத்தில் அமைக்கப்பட்டிருக்கிறது. சற்று நேரத்திற்கு முன் அந்தப் பாலத்தில் பயணம் செய்தபோது அதன் மோசமான தரத்தை நானே அனுபவித்து தெரிந்து கொண்டேன். ரூ.61 கோடி மக்கள் பணத்தைக் கொட்டி அமைக்கப்பட்டுள்ள பாலம் சிறுவர்களால் விளையாட்டுக்கு கட்டப்பட்டதை விட மிக மோசமான தரத்துடன் அமைக்கப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது.

    மத்திய கைலாஷ் பாலத்தை கடந்த 15-ம் தேதி ஞாயிற்றுக்கிழமைதான் முதல்வர் திறந்துவைத்தார். ஆனால், 652 மீட்டர் நீளம் கொண்ட இந்தப் பாலத்தில் 100க்கும் மேற்பட்ட இடங்களில் வாகனங்களை தூக்கித் தூக்கி போடும் அளவுக்கு மேடும் பள்ளமுமாக பாலம் அமைக்கப்பட்டுள்ளது.

    அந்தப் பாலத்தில் பயணிக்கும்போது W வடிவத்தில் அமைக்கப்பட்ட பாலத்தில் பயணித்த உணர்வுதான் ஏற்பட்டது. சாலையே அமைக்கப்படாத மலைப்பாதைகளில் பயணிப்பதை விட மிக மோசமான அனுபவத்தை இந்தப் பாலம் மக்களுக்கு அளிக்கும். இதற்கு காரணம் மிக மோசமான வடிவமைப்பும், கட்டுமானமும்தான்.

    மொத்தம் 652 மீட்டர் நீளம் கொண்ட இந்தப் பாலத்தை கட்டுவதற்கான ஒப்பந்தத் தொகையாக ரூ.60.68 கோடி , அதாவது ஒரு கிலோ மீட்டருக்கு ரூ.100 கோடி என்ற அளவில் வழங்கப்பட்டுள்ளது. இந்தத் தொகையைக் கொண்டு உலகத்தரத்தில் பாலத்தை அமைக்க முடியும்.

    ஆனால், இந்தப் பாலம் உள்ளூர் தரத்தில் கூட இல்லை. தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கட்டி முடிக்கப்பட்ட 3-வது மாதத்தில் அடித்துச் செல்லப்பட்ட பாலத்தைக் கட்டிய நெடுஞ்சாலைத்துறை அமைச்சரின் மேற்பார்வையில் கட்டப்பட்ட பாலம் இந்த லட்சணத்தில் தான் இருக்கும்.

    தமிழ்நாட்டில் மாநில நெடுஞ்சாலைத்துறை சார்பில் கட்டப்பட்ட எந்தப் பாலமும் தரமானதாக இல்லை. அதற்குக் காரணம் பாலம் கட்டுவதற்கான ஒப்பந்தங்களை வழங்குவதில் நடைபெறும் ஊழல்கள்தான். இத்தகைய ஊழல்களை சென்னை உயர் நீதிமன்றமே சுட்டிக்காட்டியிருக்கிறது. மத்திய கைலாஷ் பாலம் இவ்வளவு மோசமான தரத்தில் கட்டப்பட்டிருப்பதற்கும் ஊழல் தான் காரணமாக இருக்க முடியும்.

    எனவே, மத்திய கைலாஷ் பாலத்தைக் கட்டுவதில் ஊழல்கள் நடந்ததா என்பது குறித்து விசாரணைக்கு ஆணையிட வேண்டும். மிக மோசமான தரத்தில் இந்தப் பாலத்தைக் கட்டிய ஒப்பந்ததாரர் நிறுவனம்மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

    • இந்த வளைவில் வாகனங்கள் 30 கிலோ மீட்டர் வேகத்தில் தான் பயணிக்க வேண்டும் என்ற வேக கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
    • இரவு நேரங்களில் பாதுகாப்பான பயணத்தை கருத்தில் கொண்டு மின் விளக்குகளும் பொருத்தப்பட்டுள்ளன.

    சென்னை:

    சென்னை அடையாறு மற்றும் கிண்டியை இணைக்கும் பிரதான சாலையாக சர்தார் படேல் சாலை உள்ளது. 3.2 கிலோ மீட்டர் தூரம் கொண்ட இந்த சாலையில் கவர்னர் மாளிகை, சென்னை ஐ.ஐ.டி. நிறுவனம், அண்ணா பல்கலைக்கழகம், அடையாறு புற்றுநோய் நிறுவனம், மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம், காந்தி மண்டபம், காமராஜர் நினைவிடம், கிண்டி சிறுவர் பூங்கா போன்றவை உள்ளன.

    சர்தார் படேல் சாலையின் மத்திய கைலாஷ் பகுதியில் இருந்து ராஜீவ்காந்தி சாலை (ஓ.எம்.ஆர். சாலை) தொடங்குகிறது.

    போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியான இங்கு வாகனங்கள் எளிதாக செல்லும் வகையில் ரூ.61 கோடியில் 'எல்' வடிவ இருவழிச் சாலை மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த மேம்பாலத்தில் ஒருவழி வாகன போக்குவரத்து மட்டுமே அனுமதிக்கப்படும். அதாவது, சர்தார் படேல் சாலையில் இருந்து ஓ.எம்.ஆர். சாலைக்கு செல்பவர்கள் மட்டும் 652 மீட்டர் (அணுகு சாலை உள்பட) நீளம் கொண்ட இந்த 'எல்' வடிவ மேம்பாலத்தை பயன்படுத்த வேண்டும்.

    அதேநேரத்தில், அடையாறு பகுதியில் இருந்து கிண்டி நோக்கி செல்லும் அனைத்து வாகனங்களும் தங்குதடையின்றி செல்வதற்கு ஏதுவாகவும் இந்த பாலம் இருக்கும். கிண்டியிலிருந்து அடையாறுக்கும், ஓ.எம்.ஆர். சாலையிலிருந்து கிண்டிக்கும் செல்லும் வாகனங்களும் தடையின்றி செல்லலாம்.

    வாகன ஓட்டிகளின் கூடுதல் பாதுகாப்புக்காக பாலத்தின் இருபுறமும் தடுப்புசுவரின் உயரம் அதிகரிக்கப்பட்டுள்ளது. வாகனங்கள் இந்த வளைவில் செல்லும் போது சிரமமின்றி கடந்து செல்லும் வகையில் குறுக்குவெட்டு சாய்வுடன் இருக்கும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது.

    இந்த வளைவில் வாகனங்கள் 30 கிலோ மீட்டர் வேகத்தில் தான் பயணிக்க வேண்டும் என்ற வேக கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

    வேக கட்டுப்பாட்டுக்கான எச்சரிக்கை பலகைகள் பாலத்தின் தடுப்புச் சுவரில் பொருத்தப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் பாதுகாப்பான பயணத்தை கருத்தில் கொண்டு மின் விளக்குகளும் பொருத்தப்பட்டுள்ளன.

    இந்த 'எல்' வடிவ மேம்பால பணிகள் நிறைவடைந்த நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த மேம் பாலத்தை இன்று பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார். மேலும் மேம்பாலத்தில் நடந்து சென்று ஆய்வு மேற்கொண்டார்.

    இந்த மேம்பாலம் அந்த வழியாக செல்லும் ஆயிரக்கணக்கான வாகன ஓட்டிகளுக்கு மிகப்பெரிய நிம்மதியை தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • பிப்ரவரி முதல் வாரத்தில் மக்கள் பயன்பாட்டிற்கு திறக்க திட்டமிடப்பட்டுள்ளது.
    • 35 மீட்டர் நீளமுள்ள இறுதி டெக்ஸ்லாப் பாக்ஸ் அமைக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.

    சென்னை:

    சென்னையில் மத்திய கைலாஷ் சந்திப்பு போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியாக காணப்படுகிறது. அங்கு ஒரு மணி நேரத்திற்கு சுமார் 11 ஆயிரம் வாகனங்கள் கடந்து செல்வதாக கணக்கிடப்பட்டுள்ளது.

    கிண்டியில் இருந்து ஓஎம்ஆர் வரை வழித்தடத்தில் மட்டும் 3762 வாகனங்கள் செல்கின்றன. இதனால் ஏற்படுகின்ற போக்குவரத்து நெரிசலை குறைக்க 650 மீட்டர் நீளமுள்ள எல் வடிவிலான மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது.

    பருவமழை மற்றும் இரும்பு கொள்முதலில் ஏற்பட்ட தாமதத்தின் காரணமாக கட்டுமான பணியில் சுணக்கம் ஏற்பட்டது. தற்போது இறுதி கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

    மேம்பாலத்தின் மத்திய பகுதியில் ஒரு தளம் அமைக்கப்பட்டு பணிக்கான இடம் சீர் செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக போக்குவரத்து போலீசார் தற்போது அடையாரில் இருந்து கிண்டிக்குச் செல்லும் வாகனங்களை சர்தார் படேல் சாலை வழியாக நேராக செல்ல அனுமதிக்க உள்ளனர்.

    சர்தார் படேல் சாலையை ராஜீவ் காந்தி சாலையுடன் இணைக்கும் எல் வடிவ மேம்பாலத்தின் கட்டுமான பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளன. பிப்ரவரி முதல் வாரத்தில் மக்கள் பயன்பாட்டிற்கு திறக்க திட்டமிடப்பட்டுள்ளது. 35 மீட்டர் நீளமுள்ள இறுதி டெக்ஸ்லாப் பாக்ஸ் அமைக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.

    இந்த மேம்பாலம் திறக்கப்பட்டால் ஐ.ஐ.டி, அடையார் புற்றுநோய் நிறுவனம் பகுதியில் போக்குவரத்து நெரிசல் கணிசமாக குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடையாறில் இருந்து துரைப்பாக்கம் நோக்கி பயணிக்கும் வாகனங்களுக்கு டைடல் பார்க் சந்திப்பில் போக்குவரத்து நெரிசல் அதிகரிக்க கூடும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    சர்தார் படேல் சாலையில் இருந்து ராஜீவ் காந்தி சாலைக்கு, நெரிசலான மத்திய கைலாச சந்திப்பை தவிர்த்து தடையில்லாமல் செல்ல அனுமதிக்கும் வகையில் ஒருங்கிணைந்த மூன்று வழி மேம்பாலம் கட்ட கையெழுத்திடப்பட்டுள்ளது. திறப்பு விழாவை தொடர்ந்து சர்தார் படேல் சாலை, காந்தி மண்டபம் சாலை, ராஜீவ் காந்தி சாலை ஆகிய மூன்று சாலைகளிலும் போக்குவரத்து நெரிசலை குறைக்க சுழற்சி முறையில் மாற்றங்களை செய்ய மாநில நெடுஞ்சாலை மற்றும் போக்குவரத்து போலீசார் திட்டமிட்டுள்ளன.

    புதிய மேம்பாலம் திறக்கப்பட்டதும், காந்தி மண்டபம் சாலையிலிருந்து (கோட்டூர்புரம்) கிண்டி நோக்கி செல்லும் வாகனங்கள் புதிய மேம்பாலத்தின் கீழ் யு வடிவ திருப்பம் செய்து இடது புறமாக திருப்பி விடப்படும்.

    அடையாறு, திருவான்மியூரில் இருந்து கோட்டூர்புரம் நோக்கி செல்லும் வாகனங்கள் அடையாறு மேம்பாலத்திற்கு முன்னால் சிக்னல் இல்லாத வலது புறம் திரும்பும் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    தற்போது சர்தார் படேல் சாலையில் இருந்து (அண்ணா பல்கலைக்கழகம் பக்கம்) கோட்டூர்புரம் நோக்கி செல்லும் வாகனங்கள் அடையாறு மற்றும் திருவான்மியூர் நோக்கி செல்லும் வாகனங்கள் அடையாறு மேம்பாலத்தை பயன்படுத்த வேண்டும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இந்த மேம்பாலம் 652 மீட்டர் நீளமும் 7.5 மீட்டர் அகலமும் கொண்டது. புதிய மேம்பாலத்தில் போக்குவரத்து தொடங்கிய பிறகு மாற்றங்கள் கொண்டு வரப்படுகிறது.

    சர்தார் படேல் சாலையில் இருந்த நடைபாதை அளவு குறைக்கப்பட்டு உள்ளது. அந்த சாலை அகலப்படுத்த பணிகள் நடந்து வருகின்றன. சர்தார் படேல் சாலை அகலப்படுத்தும் திட்டத்திற்காக மாநில நெடுஞ்சாலைத்துறை விரைவில் டெண்டர் வெளியிட உள்ளது.

    பல லட்சம் ஊழியர்கள் பயணம் செய்யும் இந்த சாலையின் மேம்பாட்டிற்கு ரூ.45 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இரு கூடுதல் பாதைகள் அமைத்தல், பாதசாரிகளுக்கான நடைபாதை மேம்படுத்துதல் மற்றும் ஐ.ஐ.டி.க்கு அருகில் உள்ள புற்றுநோய் மையத்தை சுற்றி ஒலி தடுப்பு சுவர் கட்டுதல் ஆகியவை திட்டத்தின் முக்கிய அம்சங்கள் ஆகும்.

    புதிய மேம்பாலம் கட்டப்பட உள்ளதால் அதன் கீழ் உள்ள சாலை சுமார் 400 மீட்டர் தூரத்திற்கு ஏற்கனவே அகலப்படுத்தப்பட்டுள்ளது. ஐ.ஐ.டி முதல் அண்ணாசாலை வரையிலான பகுதி விரிவுபடுத்தப்பட்டு அதிக வாகனங்கள் செல்ல அனுமதிக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இந்தத் திட்டப் பணிகள் இரண்டு கட்டங்களாக மேற்கொள்ளப்படும் முதல் கட்டமாக ஐ.ஐ.டி. முதல் ராஜ்பவன் வரையிலான 1.70 கிலோ மீட்டர் தூர பணிகள் தொடங்கும். அதனை தொடர்ந்து ராஜ் பவன் முதல் அண்ணா சாலை வரையிலான 0.80 இரண்டாம் கட்ட பணிகள் மேற்கொள்ளப்படும்.

    புதிய மேம்பாலம் திறக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வரும் நிலையில் நீண்டகால போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு ஏற்படும். 

    • ரெங்கநாதன் தெரு பகுதியில் இருந்து தி.நகர் பஸ் நிலையத்தை தாண்டி மேம்பாலம் செல்லும் வகையில் இந்த இணைப்பு மேம்பாலம் இரும்பால் உருவாக்கப்பட்டு உள்ளது.
    • மேம்பாலத்திற்கு மறைந்த முன்னாள் எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் பெயர் சூட்டப்பட்டு உள்ளது.

    சென்னை:

    சென்னையின் மையப் பகுதியாக விளங்கும் தியாகராய நகரில் மிகப் பெரிய ஜவுளிகடைகள், நகைக்கடைகள் உள்ளிட்ட ஏராளமான கடைகள் உள்ளதால் எப்போதும் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும்.

    இதனை கருத்தில் கொண்டு தி.நகர் உஸ்மான் சாலையில் ஏற்கனவே ஒரு மேம்பாலம் கட்டப்பட்டு இருந்தது. இந்த மேம்பாலம் ரெங்கநாதன் தெரு அருகே இறங்கும் வகையில் இருந்ததால் அங்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது.

    இதற்கு தீர்வு காணும் வகையில் தெற்கு உஸ்மான் சாலையையும், சி.ஐ.டி. நகர் முதல் பிரதான சாலையை இணைக்கும் வகையிலும் 1¼ கிலோ மீட்டர் நீளத்துக்கு தி.நகர் பாலத்தை நீட்டித்து புதிய மேம்பாலம் கட்டப்பட்டு உள்ளது.

    அதாவது ரெங்கநாதன் தெரு பகுதியில் இருந்து தி.நகர் பஸ் நிலையத்தை தாண்டி மேம்பாலம் செல்லும் வகையில் இந்த இணைப்பு மேம்பாலம் இரும்பால் உருவாக்கப்பட்டு உள்ளது.

    இது 3,800 மெட்ரிக் டன் இரும்பினால் வடிவமைக்கப்பட்டு 164.92 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள முதல் இரும்பு மேம்பாலம் ஆகும்.

    இந்த புதிய மேம்பாலத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். மேம்பாலத்திற்கு மறைந்த முன்னாள் எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் பெயர் சூட்டப்பட்டு உள்ளது.

    இந்த புதிய மேம்பாலம், 1200 மீட்டர் நீளம் மற்றும் 8.40 மீட்டர் அகலத்தில் 53 இரும்பு தூண்களுடன் இருவழிப்பாதையாக அமைக்கப்பட்டு தெற்கு உஸ்மான் சாலையில் ஏற்கனவே உள்ள 800 மீட்டர் நீள கான்கிரீட் மேம்பாலத்துடன், உயரிய தொழில் நுட்பத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த மேம்பாலம் 2 கிலோ மீட்டர் நீளத்திலும் தியாகராய நகர் பஸ் நிலையத்தில் இருந்து இந்தப் பாலத்தில் ஏறுவதற்கு 120 மீட்டர் நீளத்திலும், தெற்கு உஸ்மான் சாலை பாலத்தில் இருந்து தியா கராய நகர் பகுதிக்கு இறங்குவதற்கு 100 மீட்டர் நீளத்திலும் அணுகு சாலைகள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இதன் இருபுறமும் நடைபாதைகளுடன் 6 மீட்டர் அகல சேவை சாலைகளும் அமைக்கப்பட்டுள்ளது.

    சென்னை மாநகராட்சியின் மிக நீண்ட பாலமாக 2 கிலோ மீட்டர் நீளத்தில் கட்டமைக்கப்பட்டுள்ள இந்த பாலத்தில் தினசரி சராசரியாக 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் பயணித்து, சுமார் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் பயன்பெறுவார்கள்.

    சிங்காரச் சென்னையை நோக்கிய பயணத்தில் புதிய பெருமைமிகு அடையாளமாக புதிய தொழில் நுட்பத்தில் கட்டப்பட்டுள்ள இம்மேம்பாலத்தின் தடுப்புச் சுவர்களில் தியாகராய நகர் மற்றும் சுற்றுப்புறங்களின் வாழ்வியல் காட்சிகள் அழகிய ஓவியங்களாக சித்தரிக்கப்பட்டு, அப்பகுதி மக்களின் உழைப்பையும் மரபையும் சிறப்பிக்கின்றன.

    சி.ஐ.டி நகர் முதல் பிரதான சாலையிலுள்ள தெற்கு உஸ்மான் சாலை மேம்பாலத்தின் சாய்வுதளப் பகுதியிலிருந்து சி.ஐ.டி நகர் நான்காவது பிரதான சாலை சந்திப்பை இணைக்கும் வகையில் கட்டப்பட்டுள்ள இந்த மேம்பாலம் மூலம், தெற்கு உஸ்மான் சாலை - பர்கிட் சாலை - மேட்லி சாலை ஆகியவற்றின் சந்திப்பு, தெற்கு உஸ்மான் சாலை - தென்மேற்கு போக்சாலை - நியூ போக் சாலை ஆகியவற்றின் சந்திப்பு, தெற்கு உஸ்மான் சாலை - சி.ஐ.டி நகர் வடக்கு சாலை சந்திப்பு ஆகியவற்றில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் குறைந்திட வழிவகை செய்யப்பட்டுள்ளது.

    மேம்பால திறப்பு விழா நிகழ்ச்சியில், அமைச்சர்கள் கே.என். நேரு, மா. சுப்பிரமணியன், பி.கே. சேகர்பாபு, மேயர் பிரியா, ஆ. ராசா எம்.பி., சட்டமன்ற உறுப்பினர்கள் ஜெ.கருணாநிதி, த. வேலு, தாயகம் கவி, துணை மேயர் மு. மகேஷ் குமார், உயர் அதிகாரிகள் கார்த்திகேயன், ஆணையர் குமரகுருபரன், வினய், தமிழ்நாடு வீட்டுவதி வாரியத்தின் தலைவர் பூச்சி எஸ். முருகன், தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் தலைவர் துறைமுகம் காஜா, திண்டுக்கல் ஐ.லியோனி, பெருநகர சென்னை மாநகராட்சி நிலைக்குழு தலைவர் சிற்றரசு,

    தியாகராய நகர் மேற்கு பகுதி செயலாளர் கே.ஏழுமலை, கோ.சு.மணி, எம்.எஸ்.பழனி, ஜெ.ஜானகிராமன், ராஜா அன்பழகன், தியாகராய நகர் மேற்கு பகுதி துணைச் செயலாளர் பாண்டிபஜார் பாபா சுரேஷ், தி.நகர் கிழக்கு பகுதி பொருளாளர் ஜி.மோகன் ராஜ், வட்டச் செயலாளர் பி.மாரி, மாவட்ட மகளிர் தொண்டர் அணி அமைப்பாளர் மோனிஷா கருணாநிதி, வனிதாபுரம் துரை, இ.சஞ்சீவ் குமார்(எ) கார்த்தி, 133-வது வட்ட துணை செயலாளர் ஆர்.கலா ராஜா, என்.வெங்கடேசன், கனிமொழி வெங்கடேசன் மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் (NHAI) சுமார் 998 கோடி ரூபாய் செலவில் இந்த மேம்பாலம் கட்டப்பட்டது.
    • எந்த ஆட்சேபனையும் கூறவில்லை என்பதால் பாலம் டிப் டாப்பாக கட்டி முடிக்கப்பட்டுள்ளது.

    மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் அசோக் சவுக் பகுதி பக்கம் செல்பவர்களுக்கு தலையை சொரிந்து யோசிக்கும் ஒரு காட்சி காணக்கிடைக்கும்.

    அங்கு வீட்டின் பால்கனி வழியாக கட்டப்பட்டுள்ள மேம்பாலம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இதுதொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வைரலாகி வருகின்றன.

    தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் (NHAI) சுமார் 998 கோடி ரூபாய் செலவில் இந்தோரா- திகோரி இடையே கட்டப்பட்டுள்ள இந்த மேம்பாலம் மோசமான திட்டமிடலுக்கு சிறந்த உதாரணமாக அமைந்துள்ளதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    இதுகுறித்து விளக்கம் அளித்த NHAI அதிகாரிகள், அந்த வீட்டின் பகுதி சட்டவிரோத ஆக்கிரமிப்பில் அமைந்துள்ளதாகவும், மேம்பால கட்டுமானத்தில் போதே இதுபற்றி நாக்பூர் நகராட்சியிடம் தெரிவித்ததாகவும் கூறுகின்றனர்.

    இருப்பினும் நாக்பூர் நகராட்சி அதிகாரிகள் அந்த வீட்டின் உரிமையாளருடன் பேசி ஒரு ஒப்பந்தத்துக்கு வந்தனர். அந்த நபர் தனது வீட்டின் பால்கனி வழியாக மேம்பாலம் செல்ல எந்த ஆட்சேபனையும் கூறவில்லை என்பதால் பாலம் டிப் டாப்பாக கட்டி முடிக்கப்பட்டுள்ளது.

    இதேபோல் அண்மையில் மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் 90 டிகிரி மேம்பாலம் வைரலானது குறிப்பிடத்தக்கது. 

    • இலகுரக வாகனங்களை சோதனைக்காக இயக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
    • டெல்லியிலிருந்து நிபுணர் குழுவினர் வந்து ஆய்வு செய்த பின்னர் சீரமைப்பு பணி தொடங்கப்படும்.

    ஓசூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் பேருந்து நிலையம் அருகே பெங்களூரு-கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலம் உள்ளது.

    இந்த மேம்பாலத்தின் இணைப்பு பகுதி கடந்த 21-ந் தேதி விரிசல் ஏற்பட்டதால், பாலத்தில் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது. கடந்த 2 நாட்களாக தேசிய நெடுஞ்சாலை ஆணைய பொறியாளர்கள் ஆய்வு செய்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    மேலும், வாகனங்கள் மாற்று பாதையில் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

    இந்நிலையில், நேற்று காலை தேசிய நெடுஞ்சாலை ஆணைய பொறியாளர்கள் மேம்பாலத்தில் இணைப்பு பகுதி மேலும் விலகாமல் தடுக்க பாலத்தின் தூணின் மேல் பகுதியில் மரக்கட்டைகளை அடுக்கி முட்டு கொடுத்தனர்.

    பின்னர் பாலத்தில் சோதனைக்காக இலகு ரக வாகனங்களை இயக்க அனுமதித்து, தொடர்ந்து 2-வது நாளாக பொறியாளர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதுதொடர்பாக தேசிய நெடுஞ்சாலை ஆணைய பொறியாளர்கள் கூறியதாவது:-

    கடந்த 23 ஆண்டுகளுக்கு முன்னர் இப்பாலம் கட்டப்பட்டது. தொடக்கத்தில் பாலத்தில் வாகனங்கள் குறைந்த எண்ணிக்கையில் சென்று வந்தன.

    தற்போது வாகனங்கள் எண்ணிக்கை பல மடங்கு உயர்ந்துள்ளன. மேலும், ஒரே நேரத்தில் ஏராளமான வாகனங்கள் பாலத்தின் மீது செல்வதால் பாலத்தில், பால்பேரிங்கி சேதமாகி உள்ளது.

    இதுபோல வாகனங்கள் அதிகம் செல்லும் தேசிய நெடுஞ்சாலை மேம்பாலங்களில் பேரிங் சேதம் இருக்கிறதா என்பது தொடர்பாக விரைவில் ஆய்வு செய்யப்படும்.

    ஓசூர் பாலத்தில் இணைப்பு விலகியபகுதி மேலும் விலகாமல் இருக்க மரக்கட்டைகளை அடுக்கி வைத்து, தடுப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    தொடர்ந்து இலகுரக வாகனங்களை சோதனைக்காக இயக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

    டெல்லியிலிருந்து நிபுணர் குழுவினர் வந்து ஆய்வு செய்த பின்னர் சீரமைப்பு பணி தொடங்கப்படும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • 90 டிகிரி வளைவில் திரும்பும் வகையில் மேம்பாலம் அமைக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
    • இந்த மேம்பாலத்தால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது என்று நெட்டிசன்கள் தெரிவித்தனர்.

    மத்தியப் பிரதேசம் போபாலில் கட்டப்பட்டுள்ள ரயில்வே மேம்பாலம் ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது.

    ரூ.18 கோடியில் கட்டப்பட்ட, 648 மீட்டர் நீளம், 8.5 மீட்டர் அகலம் கொண்ட இந்த மேம்பாலம் திரும்புவதற்கு 45 டிகிரி வளைவாக இல்லாமல் 90 டிகிரி வளைவில் திரும்பும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    இணையத்தில் பலரும் இந்த மேம்பால புகைப்படங்களை பகிர்ந்து இந்த மேம்பாலத்தால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது அம்மாநில பாஜக அரசுக்கு எதிராக கருத்து தெரிவித்தனர்.

    இந்த மேம்பாலத்தை காங்கிரஸ் கட்சி தனது சமூக ஊடகங்களில் கடுமையாக விமர்சித்த நிலையில், மாநில பொதுப்பணித்துறை அமைச்சர் ராகேஷ் சிங் இந்த பிரச்சினையை குறித்து ஆராய்வதாக உறுதியளித்தார்.

    இந்நிலையில், விமர்சனத்திற்கு உள்ளான 90 டிகிரி L வடிவ ரயில்வே மேம்பாலம், மாற்றியமைக்கப்பட உள்ளதாக ரயில்வே துறை அறிவித்துள்ளது

    • இணையத்தில் பலரும் இந்த மேம்பால புகைப்படங்களை பகிர்ந்து விமர்சித்து வருகின்றனர்.
    • இந்த மேம்பாலத்தால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது

    மத்தியப் பிரதேசம் போபாலில் கட்டப்பட்டுள்ள ரயில்வே மேம்பாலம் ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது.

    ரூ.18 கோடியில் கட்டப்பட்ட, 648 மீட்டர் நீளம், 8.5 மீட்டர் அகலம் கொண்ட இந்த மேம்பாலம் திரும்புவதற்கு 45 டிகிரி வளைவாக இல்லாமல் 90 டிகிரி வளைவில் திரும்பும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    இணையத்தில் பலரும் இந்த மேம்பால புகைப்படங்களை பகிர்ந்து இந்த மேம்பாலத்தால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது அம்மாநில பாஜக அரசுக்கு எதிராக கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    இந்த மேம்பாலத்தை காங்கிரஸ் கட்சி தனது சமூக ஊடகங்களில் கடுமையாக விமர்சித்த நிலையில், மாநில பொதுப்பணித்துறை அமைச்சர் ராகேஷ் சிங் இந்த பிரச்சினையை குறித்து ஆராய்வதாக உறுதியளித்தார்.

    • சுமார் ஒரு அடிக்கு மேல் துளை போல் காட்சி அளித்தது.
    • பள்ளம் ஏற்பட்ட பகுதியில் சிமெண்டு கலவை ஊற்றி சரிசெய்யப்பட்டது.

    தாம்பரம்:

    தாம்பரத்தில் மேற்கு, கிழக்கு பகுதியை இணைக்கும் வகையில் மேம்பாலம் உள்ளது. முடிச்சூர், பெருங்களத்தூர், பல்லாவரம், வேளச்சேரி ஆகிய சுற்று வட்டார பகுதிகளுக்கு செல்லும் வாகன ஓட்டிகள் எளிதாக செல்வதற்காக இந்த பாலத்தை பயன்படுத்தி வருகிறார்கள். இதனால் வாகன போக்குவரத்து நெரிசலால் எப்போதும் பரபரப்பாக இருக்கும்.

    புதுபெருங்களத்தூரில் இருந்து முடிச்சூர் சாலை மற்றும் வேளச்சேரி சாலைக்கு செல்லும் வாகன ஓட்டிகள் பெரும்பாலும் மேம்பாலத்தின் மேல் உள்ள பாதையில் செல்வது வழக்கம்.

    இந்த நிலையில் இன்று அதிகாலை இந்த பாதையில் மேம்பாலத்தின் மேல் உள்ள சாலையில் திடீரென பள்ளம் ஏற்பட்டது. சுமார் ஒரு அடிக்கு மேல் துளை போல் காட்சி அளித்தது. இதுகுறித்து போக்குவரத்து போலீசாருக்கு வாகன ஓட்டிகள் தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து பள்ளம் ஏற்பட்ட பகுதியில் இரும்பு தடுப்புகள் அமைத்து அதில் வாகனங்கள் செல்லாதவாறு தடுத்தனர்.

    இதனால் அவ்வழியே சென்ற வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்தனர். பின்னர் இன்று காலை பள்ளம் ஏற்பட்ட பகுதியில் சிமெண்டு கலவை ஊற்றி சரிசெய்யப்பட்டது. பின்னர் மேம்பாலத்தில் வாகனங்கள் வழக்கம்போல் சென்றன.

    • பள்ளிப்பாளையத்தில் நடைபெற்று வரும் உயர்மட்டம் மேம்பாலம் கட்டுமான பணிகளை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்தனர்.
    • மேம்பாலம் கட்டுமான பணியை தரமாகவும், விரைவாக முடிக்க வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    பள்ளிப்பாளையம்:

    பள்ளிப்பாளையத்தில் ஆசிரியர் காலனி பகுதியில் இருந்து 3 கீ.மீட்டர் துாரத்திற்கு 98 பில்லருடன் உயர் மட்ட மேம்பாலம், மற்றும் சாலை விரிவாக்கம் ரூ.200 கோடியில் அமைக்கும் பணி நடந்து வருகிறது.

    தற்போது மேம்பாலம் பணிகள் 40 சதவீதம் முடிந்து விட்டது. பில்லர் மேற்பரப்பில் நேற்று கான்கீரிட் தளம் அமைக்கும் பணி தொடங்கியது. இந்த பணியை நெடுஞ்சாலைதுறை சேலம் கோட்ட பொறியாளர் சசிகுமார் நேரில் ஆய்வு செய்தார். பணியை தரமாக நடக்க வேண்டும் எனவும், விரைவாக முடிக்க வேண்டும் என தெரிவித்தார். பின்னர் பணிகள் குறித்து ஆலோசனை வழங்கினர்.

    அப்போது, திருச்செங்கோடு உதவி பொறியாளர் கபில் மற்றும் திட்ட மேற்பார்வையாளர்கள் உடனிருந்தனர்.

    • போக்குவரத்து பாதிப்பதால் ஒரேகட்டமாக பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    • மேம்பாலம் கட்டும் பணிக்கான அனுமதியை பெற்று விரைவில் பணிகளை முடிக்க வேண்டும்.

     திருப்பூர்:

    திருப்பூா் கோட்டம் நெடுஞ்சாலைத் துறை சாா்பில், குறைகேட்புக் கூட்டம் திருப்பூா் கோட்ட பொறியாளா் அலுவலகத்தில் நடைபெற்றது.

    இதில் பல்லடம் தாலுகா நுகா்வோா் விழிப்புணா்வு இயக்க தலைவா் மணிக்குமாா் அளித்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-

    பல்லடம் நகரப்பகுதியில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்தும் வகையில் பனப்பாளையம் முதல் அண்ணா நகா் வரை தேசிய நெடுஞ்சாலையை அகலப்படுத்த வேண்டும். மேம்பாலம் கட்டும் பணிக்கான அனுமதியை பெற்று விரைவில் பணிகளை முடிக்க வேண்டும். பேருந்து நிலையம் எதிரிலும் அரசு மருத்துவமனை பகுதியிலும் சாலையை கடந்து செல்லும்போது அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. இப்பகுதிகளில் சுரங்க நடைபாதை அமைக்க வேண்டும்.

    பல்லடம் - தாராபுரம் சாலை குண்டடம் வழியாக, மாநில நெடுஞ்சாலை 30 கி.மீ. அளவுக்கு, நான்கு வழிப்பாதை திட்டப்பணி நடந்து வருகிறது. முதல்கட்டமாக, புத்தரச்சல் வரை 5 கி.மீ. மட்டுமே பணி நடந்துள்ளது. பணிகள் மந்தமாக நடக்கின்றன. போக்குவரத்து பாதிப்பதால் ஒரேகட்டமாக பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • இலந்தவிளை-வன்னி யன்தரை கிராமங்களை இணைக்கும் வகையில் ரெயில்வே மேம்பாலம் கட்ட வேண்டும்
    • பங்குதந்தை போஸ்கோ, வட்டார காங் கிரஸ் தலைவர் டென்னிசன், ஊர் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.

    நாகர்கோவில் :

    கப்பியறை அருகே இலந்தவிளை-வன்னி யன்தரை கிராமங்களை இணைக்கும் வகையில் ரெயில்வே மேம்பாலம் கட்ட வேண்டும் என்று அந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்திருந்தனர்.

    பொதுமக்களின் ஆலோசனைகளை கேட்டறிந்து ரெயில்வே மேம்பாலம் அமைக்க வேண் டிய இடத்தை விஜய்வசந்த் எம்.பி பார்வையிட்டார். ரெயில்வே அமைச்சகம் மற்றும் துறைக்கு கோரிக்கை வைப்பதாக தெரிவித்தார்.

    அவருடன் பங்குதந்தை போஸ்கோ, வட்டார காங் கிரஸ் தலைவர் டென்னிசன், ஊர் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.

    ×