என் மலர்
நீங்கள் தேடியது "Traffic congestion"
- குறுக்கும் நெடுக்குமாக செல்லும் ஆட்டோக்கள்
- சுரங்க பாதை பணிகளை தொடங்க பொதுமக்கள் வலியுறுத்தல்
வேலூர்:
வேலூர் ஆற்காடு சாலையில் தற்போது போக்குவரத்து நெரிசல் தீர்க்க முடியாத பிரச்சினையாக உள்ளது.
அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரி முன்பு பொதுமக்கள் ஏராளமானோர் சாலையை கடப்பதால் அதிக நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
சாலையில் சில ஆட்டோக்கள் குறுக்கும் நெடுக்கமாக திரும்புவதால் நெரிசலில் சிக்கி தவிக்கின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆற்காடு சாலையில் இரும்பு தடுப்புகளை போலீசார் அமைத்திருந்தனர்.அப்போது ஓரளவு வாகனங்கள் சீராக சென்றன.
ஆனால் என்ன காரணத்திற்காகவோ சாலை நடுவில் இருந்து தடுப்புகள் அனைத்தும் அகற்றப்பட்டு விட்டன. இதனால் சாலையில் அனைத்து பகுதிகளிலும் பொது மக்கள் குறுக்கே கடந்து செல்கின்றனர். பல வாகனங்கள் சாலை நடுவில் திரும்புகின்றன.
தனியார் ஆஸ்பத்திரியில் இருந்து தற்போது அதிக பஸ்கள் இயக்கப்படுகிறது இதன் காரணமாகவும் ஆற்காடு சாலையில் தற்போது போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளது.
ஆற்காடு சாலையில் நெரிசலை தவிர்க்க சுரங்க நடைபாதை அமைக்கப்படும் என கடந்த சில மாதங்களுக்கு முன்பு கலெக்டர் தலைமையில் ஆய்வு நடத்தி தெரிவித்தனர். ஆனால் அதற்கான வேலை எதுவும் இன்னும் தொடங்கப்படவில்லை.
மழை பெய்யும் நேரங்களில் ஆற்காடு சாலையை கடப்பது என்பது கடினமாகிவிட்டது.
இந்த சாலையில் ஏற்கனவே வைக்கப்பட்டிருந்த இரும்பு தடுப்புகளை மீண்டும் நடுவில் அமைக்க வேண்டும். ஆஸ்பத்திரிக்கு செல்லும் பொதுமக்கள் எளிதாக சென்று வர சுரங்க பாதை பணிகளை உடனடியாக தொடங்க வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
- சாலையில் முள் தடுப்பு வேலி அமைக்கப்பட்டுள்ளது
- பணிகளை விரைந்து முடிக்க பொதுமக்கள் வலியுறுத்தல்
வேலூர்,
வேலூர் ஆற்காடு சாலையில் பாதாள சாக்கடை பணிகள் நடைபெற்று வருகிறது. பொக்லைன் எந்திரம் மூலம் பள்ளங்கள் தோண்டும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள ஆஞ்சநேயர் கோவில் சாலையில் முள் தடுப்பு வேலி அமைக்கப்பட்டுள்ளது.
இதனால் சத்துவாச்சாரி சர்க்கிள் சாலை பகுதியில் வரும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். அவ்வழியாக வரும் வாகனங்களை போக்குவரத்து போலீசார் வேறு வழி பாதையில் அனுப்புகின்றனர்.
இதனால் இன்று காலை போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று ெபாதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
- நெல்லை மாவட்டம் கூடங்குளத்தை அடுத்த விஜயாபதி அருகே தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான காற்றாலை செயல்பட்டு வருகிறது.
- ராதாபுரம் வழியாக கன்னியாகுமரி, நாகர்கோவில், கூடங்குளம், இடிந்தகரை, கூத்தன்குழி, திசையன்விளை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கிராமங்களுக்கு செல்லும் அனைத்து வாகனங்களும் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளன.
நெல்லை:
நெல்லை மாவட்டம் கூடங்குளத்தை அடுத்த விஜயாபதி அருகே தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான காற்றாலை செயல்பட்டு வருகிறது.
இந்த காற்றாலைக்கு நாமக்கல்லில் இருந்து உதிரி பாகங்களை ஏற்றிக்கொண்டு சுமார் 28 டயர்கள் கொண்ட கனரக லாரி இன்று காலை ராதாபுரம் பகுதியில் வந்து கொண்டிருந்தது. அப்போது ராதாபுரம் ஊருக்குள் ஒரு வளைவில் திரும்பும்போது எதிர்பாராதவிதமாக சாலையை விட்டு லாரி இறங்கிவிட்டது.
இதனால் அந்த பகுதி வழியாக செல்லும் வாகனங்கள் அனைத்தும் ஸ்தம்பித்து நின்றன. இன்று அதிகாலை 4 மணி முதலே போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. சுமார் 80 டன் எடை கொண்ட இந்த உதிரி பாகங்களை அகற்றுவதற்கு அதிக திறன் கொண்ட கிரேன் கொண்டு வரப்பட்ட பின்பு தான் அகற்ற முடியும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மாற்றுப்பாதை
இதனால் ராதாபுரம் வழியாக கன்னியாகுமரி, நாகர்கோவில், கூடங்குளம், இடிந்தகரை, கூத்தன்குழி, திசையன்விளை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கிராமங்களுக்கு செல்லும் அனைத்து வாகனங்களும் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளன.
- போக்குவரத்து பாதிப்பதால் ஒரேகட்டமாக பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- மேம்பாலம் கட்டும் பணிக்கான அனுமதியை பெற்று விரைவில் பணிகளை முடிக்க வேண்டும்.
திருப்பூர்:
திருப்பூா் கோட்டம் நெடுஞ்சாலைத் துறை சாா்பில், குறைகேட்புக் கூட்டம் திருப்பூா் கோட்ட பொறியாளா் அலுவலகத்தில் நடைபெற்றது.
இதில் பல்லடம் தாலுகா நுகா்வோா் விழிப்புணா்வு இயக்க தலைவா் மணிக்குமாா் அளித்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-
பல்லடம் நகரப்பகுதியில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்தும் வகையில் பனப்பாளையம் முதல் அண்ணா நகா் வரை தேசிய நெடுஞ்சாலையை அகலப்படுத்த வேண்டும். மேம்பாலம் கட்டும் பணிக்கான அனுமதியை பெற்று விரைவில் பணிகளை முடிக்க வேண்டும். பேருந்து நிலையம் எதிரிலும் அரசு மருத்துவமனை பகுதியிலும் சாலையை கடந்து செல்லும்போது அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. இப்பகுதிகளில் சுரங்க நடைபாதை அமைக்க வேண்டும்.
பல்லடம் - தாராபுரம் சாலை குண்டடம் வழியாக, மாநில நெடுஞ்சாலை 30 கி.மீ. அளவுக்கு, நான்கு வழிப்பாதை திட்டப்பணி நடந்து வருகிறது. முதல்கட்டமாக, புத்தரச்சல் வரை 5 கி.மீ. மட்டுமே பணி நடந்துள்ளது. பணிகள் மந்தமாக நடக்கின்றன. போக்குவரத்து பாதிப்பதால் ஒரேகட்டமாக பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- பிரதான ரோடு என்பதால் போக்குவரத்து சிரமம் ஏற்படாத வகையில் பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகள் அறிவுறுத்தியிருந்தனர்.
- திருப்பூரில் இருந்து காங்கயம் வழியாக கரூர், திருச்சி செல்லும் தேசிய நெடுஞ்சாலை உள்ளது.
திருப்பூர்:
திருப்பூர் - பல்லடம் ரோடு தென்னம்பாளையம், டி.எம்.சி., காலனி அருகே ரோட்டின் குறுக்கில் சிறுபாலம் கட்டி மழை நீர், கழிவு நீர் ஆகியன அருகேயுள்ள ஓடைக்கு செல்லும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் கடந்த 20 நாட்களாக நடந்து வருகிறது. பிரதான ரோடு என்பதால் போக்குவரத்து சிரமம் ஏற்படாத வகையில் பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகள் அறிவுறுத்தியிருந்தனர்.
இச்சூழலில் ரோட்டின் ஒரு புறம் இப்பணிகள் முடிந்து, மறுபுறம் நடந்து வருகிறது.
தற்போது திருப்பூரை நோக்கி செல்லும் ரோடு முழுவதுமாக இப்பணிக்காக பேரிகார்டு தடுப்பு கொண்டு வாகனங்கள் செல்ல தடை செய்யப்பட்டுள்ளது. இதனால், திருப்பூரை நோக்கி வரும் அனைத்து வாகனங்களும் ஏ.பி.டி., ரோடு வழியாக திருப்பி விடப்பட்டு வருகிறது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக அணி வகுத்து சென்று வருகிறது. மாலை, இரவு நேரங்களில் மிகுந்த போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது.எனவே பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
திருப்பூரில் இருந்து காங்கயம் வழியாக கரூர், திருச்சி செல்லும் தேசிய நெடுஞ்சாலை உள்ளது. திருப்பூர் - காங்கயம் கிராஸ் ரோட்டிலிருந்து நல்லூர்,விஜயாபுரம் வழியாக இந்த ரோடு அமைந்துள்ளது.இந்த ரோட்டில் தினமும் பல்லாயிரம் வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த ரோட்டில் நகரப்பகுதியில், ஏராளமான பஸ் நிறுத்தம், முக்கிய ரோடு பிரிவுகள், நான்கு முனை ரோடு சந்திப்புகளில் போக்குவரத்து சிக்னல்களும் அமைந்துள்ளன.
இந்த ரோடு தேசிய நெடுஞ்சாலையாக உள்ள நிலையிலும், அகலமாக அமைந்துள்ளது. இருப்பினும் முக்கிய சாலை சந்திப்பு மற்றும் சிக்னல் பகுதிகளில் இதன் தற்போதைய அகலம் பயன்பாட்டுக்கு ஏற்ற அளவில் இல்லாத நிலை இருந்தது.
இதற்கு தீர்வு காணும் வகையில் இந்த ரோட்டில் வளைவான பகுதி மற்றும் சிக்னல் அமைந்துள்ள இடங்களில் ரோட்டின் இருபுறமும் அகலப்படுத்த முடிவு செய்யப்பட்டது. அவ்வகையில் பள்ளக்காட்டு புதூர்,ராக்கியாபாளையம் பிரிவு, காசிபாளையம் பிரிவு உள்ளிட்ட பகுதிகளில் ரோடு அகலப்படுத்தப்படுகிறது.இதற்காக ரோடு அமையும் இடத்தில் தார் ரோடு போடும் வகையில் பணி மேற்கொள்ளப்படுகிறது.இதனால், சிக்னல் பகுதிகளில் ப்ரீ லெப்ட் முறையில் வாகனங்கள் கடந்து செல்ல ஏதுவாக அமையும் என நெடுஞ்சாலை துறையினர் தெரிவித்தனர்.
- சாலையை சூழ்ந்தபடி நிறுத்தி பயணிகளை ஏற்றி மற்றும் இறக்கி வருகின்றனர்.
- பைபாஸ் சாலையில் மாற்றி அமைத்தால் போக்குவரத்து நெருக்கடி குறையும்.
குனியமுத்தூர்
கோவையில் கடந்த சில ஆண்டுகளாக உக்கடம் மேம்பால பணி நடைபெற்று வருகிறது. இதனால் சாலை முழுவது போக்குவரத்து நெருக்கடியில் திணறுகிறது. குறிப்பாக உக்கடம் பேருந்து நிலையத்திற்கு எதிராக பஸ் நிறுத்தம் ஒன்று உள்ளது.
பாலக்காடு சாலையில் இருந்து கோவைக்கு வரும் அனைத்து பேருந்துகளும் இந்த பஸ் நிறுத்தத்தில் நிறுத்திவிட்டு தான் செல்லும். அதேபோன்று பொள்ளாச்சி ரோட்டில் இருந்து கோவைக்கு வரும் அனைத்து பேருந்துகளும் இந்த பஸ் நிறுத்தத்தில் நிறுத்திவிட்டு தான் செல்லும். காருண்யா, ஆலந்துறை, பேரூர் ,செல்வபுரம் போன்ற பகுதியில் இருந்து வரும் பேருந்துகளும் இந்த பஸ் நிறுத்தத்தில் நிறுத்துவது வழக்கம்.
அனைத்து பேருந்துகளும் சம்பந்தப்பட்ட இந்த ஒரே இடத்தில் குவிந்து வருவதால், கடுமையான போக்குவரத்து நெரிசலும், மக்களின் சலசலப்பு எந்த நேரமும் இப்பகுதியில் காணப்படும். ஒரே இடத்தில் கட்டுக்கடங்காத மக்கள் குவிந்து வருவதால் பதட்டம் ஏற்படுவது போன்ற சூழ்நிலையை காண முடிகிறது.
கோவையில் இருந்து உக்கடம் பகுதியை கடந்து செல்லும் பேருந்துகள், உக்கடம் பேருந்து நிலையத்திற்குள் சென்று விடுவதால் சாலையின் வலது பகுதியில் நெருக்கடியை காண முடிவதில்லை.
ஆனால் சாலையின் இடது பகுதியில் ஒரே நேரத்தில் ஏராளான பேருந்துகள் சாலையை சூழ்ந்தபடி நிறுத்தி பயணிகளை ஏற்றி மற்றும் இறக்கி வருகின்றனர்.
பயணிகளை ஏற்றி இறக்கும் அந்த நேரத்திற்குள் பின்னால் வரிசையாக வாகனங்கள் அணிவகுத்து நிற்கும் காட்சியை காணப்படுகிறது.
எனவே உக்கடம் பேருந்து நிலையத்திற்கு எதிரே உள்ள அந்த பஸ் நிறுத்தத்தை, உக்கடம் பேருந்து நிலையத்திற்கு எதிரே செல்லும் செல்வபுரம் பைபாஸ் சாலையில் மாற்றி அமைத்தால் மட்டுமே இந்த பகுதியில் போக்குவரத்து நெருக்கடி குறையும்.
பொதுமக்களும் நெருக்கடி இல்லாமல் பஸ்சில் இருந்து இறங்கி செல்ல வாய்ப்பு ஏற்படும். இவ்வாறு அன்றாடம் உக்கடம் பகுதியை கடந்து வரும் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
- ஆறுமுகநேரி பேரூராட்சியின் வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்த அனைத்து கட்சிகளின் ஆலோசனை கூட்டம் பேரூராட்சி மன்ற அலுவலகத்தில் நடைபெற்றது.
- திருச்செந்தூர் - தூத்துக்குடி நெடுஞ்சாலையில் அமைந்துள்ள ஆறுமுகநேரி மெயின் பஜார் பகுதியில் மிகுந்த போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
ஆறுமுகநேரி:
ஆறுமுகநேரி பேரூராட்சியின் வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்த அனைத்து கட்சிகளின் ஆலோசனை கூட்டம் பேரூராட்சி மன்ற அலுவலகத்தில் நடைபெற்றது.பேரூராட்சி தலைவர் கலாவதி கல்யாணசுந்தரம் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் கல்யாணசுந்தரம், செயல் அலுவலர் கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
திருச்செந்தூர் - தூத்துக்குடி நெடுஞ்சாலையில் அமைந்துள்ள ஆறுமுகநேரி மெயின் பஜார் பகுதியில் மிகுந்த போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் பள்ளி கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்கள், அரசு பணியாளர்கள் மற்றும் பொதுமக்களின் வசதிக்காக இரண்டு இடங்களில் பஸ் நிறுத்த விரிவாக்கம் செய்யப்பட வேண்டும்.
இதற்காக ஸ்டேட் வங்கி அருகில் உள்ள அரசியல் கட்சிகளின் கொடிக்கம்பங்களையும், பழுதடைந்துள்ள கிணறு ஒன்றையும் அகற்றிவிட்டு அந்த இடத்தில் திருச்செந்தூர் நோக்கி செல்லும் பஸ்களுக்கான நவீன வசதிகளுடன் கூடிய பஸ் நிறுத்தம் அமைக்கவும், தூத்துக்குடி நோக்கி செல்லும் பஸ்கள் நின்று செல்ல காமராஜ் பூங்கா அருகே மற்றொரு பஸ் நிறுத்தம் அமைக்கவும் இந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
மேலும் போக்குவரத்தை சீர் செய்வதற்காக மெயின் பஜார் சந்திப்பு, ஸ்டேட் பாங்கி நிறுத்தம் ஆகிய பகுதிகளில் போக்குவரத்து காவலர்களை நிறுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பஜார் பகுதி சாலை விரிவாக்கம் செய்வதற்காக வியாபாரிகள் ஒத்துழைக்க வேண்டும் என்றும், அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை 24 மணி நேரமும் செயல்படும் வகையில் நவீனப்படுத்த வேண்டும் என்றும் கூட்டத்தில் முடிவுகள் எடுக்கப்பட்டன.
நகர தி.மு.க. செயலாளர் நவநீத பாண்டியன், நிர்வாகிகள் ராதாகிருஷ்ணன், அகஸ்டின், நகர அ.தி.மு.க செயலாளர் ரவிச்சந்திரன், முன்னாள் நகர செயலாளர் அமிர்தராஜ், அ.ம.மு.க ஒன்றிய செயலாளர் பொன்ராஜ், நகர காங்கிரஸ் தலைவர் ராஜாமணி, பாரதீய ஜனதா நகர தலைவர் முருகேச பாண்டியன், நகர்நல மன்ற தலைவர் பூபால் ராஜன், காமராஜர் நற்பணி மன்ற செயலாளர் ராமஜெயம், வியாபாரிகள் ஐக்கிய சங்க தலைவர் தாமோதரன், இந்து வியாபாரிகள் சங்க தலைவர் சிவக்குமார் மற்றும் அனைத்து வியாபாரிகள் சங்க நிர்வாகிகள், வார்டு கவுன்சிலர்கள் உள்பட பலர் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
- வித்தியாலயம் பகுதியில் இருந்து டி.கே.டி., மில் வரை உள்ள சாலையில் ஆக்கிரமிப்பு அதிகரித்துக் கொண்டே வருகின்றன.
- நெடுஞ்சாலைத்துறை சார்பில் பெயரளவுக்கு மட்டுமே ஆக்கிரமிப்புகளை அகற்றி விட்டு சென்றனர்.
வீரபாண்டி :
திருப்பூரில் இருந்து திருப்பூர் கலெக்டர் அலுவலகம் வழியாக பல்லடம் செல்லும் சாலை எப்பொழுதும் போக்குவரத்து நிறைந்த சாலையாகும். இந்த சாலையின் வித்தியாலயம் பகுதியில் இருந்து டி.கே.டி., மில் வரை உள்ள சாலையில் ஆக்கிரமிப்பு அதிகரித்துக் கொண்டே வருகின்றன.
இதனால் தினந்தோறும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகின்றன. மேலும் அடிக்கடி விபத்துகளும் ஏற்பட்டு வருகின்றன. இந்தப் பகுதி உள்ள கடைகளின் முன்பு வாகன நிறுத்துவதும் சாலையை ஆக்கிரமித்து கடைகளையும் வைத்துள்ளனர்.
கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு நெடுஞ்சாலைத்துறை சார்பில் பெயரளவுக்கு மட்டுமே ஆக்கிரமிப்புகளை அகற்றி விட்டு சென்றனர். முழுமையாக அகற்றவில்லை. இதனால் ஆக்கிரமிப்புகள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன.
இதனால் தினந்தோறும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு விபத்துக்கள் ஏற்பட்டு வருகின்றன. மேலும் இந்த வழியாகத்தான் திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் வாகனங்கள் செல்கின்றன.
ஆம்புலன்ஸ் வாகனங்கள் தினந்தோறும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவித்து வருகின்றன. இதனால் பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் கடும் பாதிப்பு அடைந்துள்ளனர் .
எனவே நெடுஞ்சாலைத்துறை, போக்குவரத்துதுறை,வருவாய்த்துறை, மாநகராட்சி ஆகிய துறைகள் ஒன்றிணைந்து ஆக்கிரமிப்புகளை நிரந்தரமாக அகற்றி சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வண்ணம்,விபத்துக்கள் ஏற்படாத வண்ணம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகளும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- தொழில் நிறுவனங்கள், வணிக வளாகங்கள்,கடைகள் ,குடியிருப்புகள் உள்ளிட்டவைகள் அதிகமாக இருக்கின்றன.
- வீரபாண்டி பிரிவு முதல் டி.கே.டி.மில் வரை அதிகப்படியான போக்குவரத்து நெரிசல் தினந்தோறும் ஏற்பட்டு வருகின்றன.
வீரபாண்டி :
திருப்பூரில் இருந்து பல்லடம் செல்லும் சாலையில் தொழில் நிறுவனங்கள், வணிக வளாகங்கள்,கடைகள் ,குடியிருப்புகள் உள்ளிட்டவைகள் அதிகமாக இருக்கின்றன. கோவை மற்றும் கேரளாவை இணைக்கும் முக்கிய வழித்தடம் என்பதாலும் சரக்கு போக்குவரத்து பிரதானமாக இருப்பதாலும் இந்த சாலையில் நாளுக்கு நாள் வாகன போக்குவரத்து அதிகரித்து வருகின்றன. போக்குவரத்து நிறைந்த இந்த சாலையில் தினந்தோறும் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். குறிப்பாக திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட வீரபாண்டி பிரிவு முதல் டி.கே.டி.மில் வரை அதிகப்படியான போக்குவரத்து நெரிசல் தினந்தோறும் ஏற்பட்டு வருகின்றன. மேலும் பல்லடம் சாலை வழியாக தினந்தோறும் அரசு மருத்துவமனைக்கு வரும் ஆம்புலன்ஸ் வாகனங்களும் இந்த போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கின்றன.
இது குறித்து வாகன ஓட்டிகளும் சமூக ஆர்வலர்களும் கூறியதாவது :- வீரபாண்டி பிரிவு ,நொச்சிப்பாளையம் பிரிவு,டி.கே.டி.மில் பிரிவு என முக்கிய சாலைகள் செல்லும் சந்திப்புகள் இந்த சாலையில் உள்ளது. மேற்கூறிய இடங்களில் அதிகப்படியான வாகன போக்குவரத்து இருப்பதாலும் போக்குவரத்து நெரிசலும் அதிகமாக உள்ளன.
குறிப்பாக காலை மற்றும் மாலை நேரங்களில் கட்டுக்கடங்காத வாகன நெரிசல் தினந்தோறும் ஏற்பட்டு வருகின்றன. நொச்சிப்பாளையம் பிரிவு மற்றும் டி.கே.டி.மில் பிரிவு இந்த இரண்டு நால்ரோடுகளிலும் பெரும்பாலும் போக்குவரத்தை ஒழுங்குபடுத்த போலீசார் இருப்பதில்லை. இதனால் இந்த இரண்டு பகுதிகளிலும் நான்கு பக்கங்களிலிருந்து வரும் வாகனங்கள் தாறுமாறாக செல்வதால் தினந்தோறும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகின்றன. நெரிசலில் சிக்கிய வாகனங்கள் தினந்தோறும் ஊர்ந்து செல்வதால் கடும் மன உளைச்சல் ஏற்படுகின்றன. மேலும் மருத்துவமனைக்கு செல்லும் ஆம்புலன்ஸ் வாகனங்களும் தினந்தோறும் இந்த போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவியாய் தவிக்கின்றன. மேற்கூறியுள்ள இரண்டு பகுதிகளிலும் உடனடியாக போக்குவரத்து போலீசாரை நியமித்து போக்குவரத்தை ஒழுங்குபடுத்த வேண்டும் என வாகன ஓட்டிகளும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை வைத்துள்ளார்கள்.
- தமிழக முழுவதும் நேற்று தைப்பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இன்று மாட்டுப் பொங்கல் விழா கொண்டாடப்படுகிறது.
- மாட்டு பொங்கலன்று இறைச்சி, மீன் கடைகளில் வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக இருக்கும்.
மதுக்கூர்:
தமிழக முழுவதும் நேற்று தைப்பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
இன்று மாட்டுப் பொங்கல் விழா கொண்டாடப்பட்டு வருகிறது.
இன்றைய தினம் பொதுமக்கள் ஆடு, கோழி, மீன் உள்ளிட்ட இறைச்சிகளை வாங்கி சாப்பிடுவது வழக்கம்.
வீட்டுக்கு வந்த விருந்தினர்களுக்கு இறைச்சிகளை சமைத்து கொடுத்து உபசரிப்பர்.
இதனால் எப்போதும் மாட்டு பொங்கலன்று இறைச்சி, மீன் கடைகளில் வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக இருக்கும்.
அதன்படி தஞ்சை மாவட்டம் மதுக்கூரில் இன்று காலை முதலே இறைச்சி, மீன் கடைகளில் கட்டுகடங்காத கூட்டம் மதுக்கூர் முக்கூட்டுச்சாலை, ஆற்றுப்பாலம், வடக்கு மார்க்கெட், மதுக்கூர் மார்க்கெட் என அனைத்து இடங்களிலும் அதிகளவில் பொதுமக்கள் குவிந்து தேவையான இறைச்சி கறி, மீன்களை வாங்கி சென்றனர்.
பல இடங்களில் நீண்ட வரிசையில் நின்று வாங்கி சென்றதையும் காண முடிந்தது.
மேலும் தற்காலிகமாக இறைச்சி கடைகளும் போடப்பட்டிருந்தன. இதனால் மதுக்கூரில் இறைச்சி கடைகள், மீன் கடைகள் அமைந்திருக்கும் இடங்களில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.
- அரசு மருத்துவமனைக்கு வரும் ஆம்புலன்ஸ் வாகனங்களும் இந்த போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கின்றன.
- நான்கு பக்கங்களிலிருந்து வரும் வாகனங்கள் தாறுமாறாக செல்வதால் தினந்தோறும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகின்றன.
வீரபாண்டி :
திருப்பூரில் இருந்து பல்லடம் செல்லும் சாலையில் தொழில் நிறுவனங்கள், வணிக வளாகங்கள்,கடைகள் ,குடியிருப்புகள் உள்ளிட்டவைகள் அதிகமாக இருக்கின்றன. கோவை மற்றும் கேரளாவை இணைக்கும் முக்கிய வழித்தடம் என்பதாலும் சரக்கு போக்குவரத்து பிரதானமாக இருப்பதாலும் இந்த சாலையில் நாளுக்கு நாள் வாகன போக்குவரத்து அதிகரித்து வருகின்றன.
போக்குவரத்து நிறைந்த இந்த சாலையில் தினந்தோறும் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். குறிப்பாக திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட வீரபாண்டி பிரிவு முதல் டி.கே.டி.மில் வரை அதிகப்படியான போக்குவரத்து நெரிசல் தினந்தோறும் ஏற்பட்டு வருகின்றன.
மேலும் பல்லடம் சாலை வழியாக தினந்தோறும் அரசு மருத்துவமனைக்கு வரும் ஆம்புலன்ஸ் வாகனங்களும் இந்த போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கின்றன.
இது குறித்து வாகன ஓட்டிகளும் சமூக ஆர்வலர்களும் கூறியதாவது:- வீரபாண்டி பிரிவு ,நொச்சிப்பாளையம் பிரிவு,டி.கே.டி.மில் பிரிவு என முக்கிய சாலைகள் செல்லும் சந்திப்புகள் இந்த சாலையில் உள்ளது. மேற்கூறிய இடங்களில் அதிகப்படியான வாகன போக்குவரத்து இருப்பதாலும் போக்குவரத்து நெரிசலும் அதிகமாக உள்ளன.
குறிப்பாக காலை மற்றும் மாலை நேரங்களில் கட்டுக்கடங்காத வாகன நெரிசல் தினந்தோறும் ஏற்பட்டு வருகின்றன. நொச்சிப்பாளையம் பிரிவு மற்றும் டி.கே.டி.மில் பிரிவு இந்த இரண்டு நால்ரோடுகளிலும் பெரும்பாலும் போக்குவரத்தை ஒழுங்குபடுத்த போலீசார் இருப்பதில்லை.
இதனால் இந்த இரண்டு பகுதிகளிலும் நான்கு பக்கங்களிலிருந்து வரும் வாகனங்கள் தாறுமாறாக செல்வதால் தினந்தோறும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகின்றன.
நெரிசலில் சிக்கிய வாகனங்கள் தினந்தோறும் ஊர்ந்து செல்வதால் கடும் மன உளைச்சல் ஏற்படுகின்றன. மேலும் மருத்துவமனைக்கு செல்லும் ஆம்புலன்ஸ் வாகனங்களும் தினந்தோறும் இந்த போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவியாய் தவிக்கின்றன.
மேற்கூறியுள்ள இரண்டு பகுதிகளிலும் உடனடியாக போக்குவரத்து போலீசாரை நியமித்து போக்குவரத்தை ஒழுங்குபடுத்த வேண்டும் என வாகன ஓட்டிகளும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை வைத்துள்ளார்கள்.
- தூத்துக்குடி, விழுப்புரம் மாவட்டங்களில் உதவி போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றினார்.
- போக்குவரத்து நெரிசலை குறைக்கவும், விபத்துகளில் உயிரிழப்பு ஏற்படுவதை தடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்
திருப்பூர் :
திருப்பூர் மாநகர வடக்கு போலீஸ் துணை கமிஷனராக அபிஷேக் குப்தா பொறுப்பேற்றுக்கொண்டார். இவரது சொந்த மாநிலம் பஞ்சாப். பி.காம். எல்.எல்.பி.பட்டப்படிப்பு படித்துள்ளார். 2019-ம் ஆண்டு ஐ.பி.எஸ். தேர்வானார். தூத்துக்குடி, விழுப்புரம் மாவட்டங்களில் உதவி போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றினார்.
தற்–போது பதவி உயர்வு பெற்று திருப்பூர் மாந–கர துணை கமிஷனராக பொறுப்பேற்றுள்ளார். அவர் கூறும்போது, 'பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு நடவடிக்கை மற்றும் குற்றங்களை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும். நடந்த குற்றங்களை விரைவாக கண்டறிந்து குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத்தரப்படும். திருப்பூர் மாநகரின் போக்குவரத்து நெரிசலை குறைக்கவும், விபத்துகளில் உயிரிழப்பு ஏற்படுவதை தடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.






