search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Traffic congestion"

    • மேற்கு ராஜ வீதி வழியாக வடக்கு நோக்கி வரும் வாகனங்கள் ஸ்தம்பித்து நிற்கிறது.
    • பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர்.

    சென்னிமலை:

    சென்னிமலை வழியாக தினமும் நூற்றுக்கணக்கான லாரிகள் தென் மாவட்டங்களுக்கும், அதேபோல் அங்கிருந்து வரும் லாரிகள் வட மாநிலங்களுக்கும் சென்று வருகிறது. இதனால் எப்போதும் சென்னிமலை நகரத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது உண்டு.

    சென்னிமலை பஸ் நிலையத்தை கடந்து பெருந்துறை மற்றும் வெள்ளோடு ரோடு வழியாக செல்லும் வாகனங்கள் அனைத்தும் தெற்கு ராஜ வீதி, மேற்கு ராஜ வீதி வழியாக குமரன் சதுக்கத்தை அடைந்து செல்லும் வகையில் ஒரு வழி பாதையாக உள்ளது. அதேபோல் குமரன் சதுக்கம் வழியாக பஸ் நிலையம் நோக்கி செல்லும் வாகனங்கள் அனைத்தும் வடக்கு ராஜ வீதி மற்றும் கிழக்கு ராஜ வீதி வழியாக செல்லும் வகையில் ஒரு வழி பாதையாக உள்ளது.

    ஆனால் சென்னிமலை முருகன் கோவிலுக்கு கார்களில் வரும் பக்தர்கள் வடக்கு ராஜ வீதி மற்றும் தெற்கு ராஜ வீதி வழியாக பார்க் ரோட்டை அடைந்து முருகன் கோவிலுக்கு செல்லாமல் குமரன் சதுக்கத்தில் இருந்து ஒரு வழிப்பாதையாக உள்ள மேற்கு ராஜவீதி வழியாக நுழைகின்றனர்.

    இதனால் மேற்கு ராஜ வீதி வழியாக வடக்கு நோக்கி வரும் வாகனங்கள் ஸ்தம்பித்து நிற்கிறது. குறிப்பாக செவ்வாய்க்கிழமை மற்றும் விசேஷ நாட்களில் உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்கள் நூற்றுக்கணக்கான கார்களில் சென்னிமலை முருகன் கோவிலுக்கு வருவது உண்டு. அப்போது ஒரு வழிப்பாதையான மேற்கு ராஜ வீதி வழியாக கார்கள் நுழைவதால் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது.

    தினமும் காலை நேரங்களில் 100-க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி செல்லும் வாகனங்கள் மேற்கு ராஜ வீதி வழியாக செல்லும்போது மலைக்கோவிலுக்கு செல்லும் வாகனங்கள் எதிரே வருவதால் மேற்கொண்டு செல்ல முடியாமல் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது.

    இதனால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். மாலை நேரத்திலும் இதே பிரச்சனை தான் ஏற்படுகிறது.

    சென்னிமலை போலீஸ் நிலையத்தில் இருந்து சுமார் 100 மீட்டர் தூரத்திலேயே மேற்கு ராஜ வீதி இருப்பதால் குமரன் சதுக்கத்தில் இருந்து மேற்கு ராஜ வீதி வழியாக கார்கள் உள்ளிட்ட கனரக வாகனங்கள் எதுவும் செல்லாமல் இருக்க போலீசார் அங்கு கண்காணித்து போக்குவரத்தை ஒழுங்குபடுத்த வேண்டும். மேலும் கனரக வாகனங்கள் நகருக்குள் வரால் இருக்க புற வழி சாலை ரிங் ரோடு அமைக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • போக்குவரத்து நெரிசலால் பள்ளி மாணவர்கள், பணிக்கு செல்வோர் என அனைத்து தரப்பினரும் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
    • தனியார் வாகன டிரைவர்கள் போலீசாருடன் இணைந்து, வாகனங்களை மாற்று பாதையில் அனுப்பி வைத்தனர்.

    கண்டமங்கலம்:

    விழுப்புரம்-புதுச்சேரி நெடுஞ்சாலையில் கண்டமங்கலத்தில் ரெயில்வே கேட் சர்வீஸ் சாலை உள்ளது. மகாராஷ்டிராவில் இருந்து புதுச்சேரிக்கு சொகுசு ரக கார்களை ஏற்றி வந்த கனரக கண்டெய்னர் லாரி ரெயில்வே பாதையை கடக்க முற்பட்டது. கண்டமங்கலம் ரெயில்வே கிராசிங்கில் அமைக்கப்பட்டு இருக்கும் உயர் மின்னழுத்த பாதுகாப்பு தடுப்பு கட்டையை கடந்து செல்ல முடியாமல் கனரக வாகனம் பாதியிலேயே நின்றது. இதனால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    அந்த நேரத்தில் ரெயில்வே கேட் மூடப்பட்டதால் சுமார் 2 கிலோ மீட்டர்களுக்கு மேலாக மோட்டார் சைக்கிள், கார், பஸ், லாரி மற்றும் கனரக வாகனங்கள் அணிவகுத்து நின்றன. காலை நேரம் என்பதால் தனியார் பள்ளி, கல்லூரிகள் பஸ்களும் நெரிசலில் சிக்கியது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கண்டமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் நடராஜன் தலைமையிலான போலீசார் போக்குவரத்து நெரிசலை சரி செய்ய முற்பட்டனர்.

    கண்டமங்கலம் பகுதியில் உள்ள தனியார் வாகன டிரைவர்கள் போலீசாருடன் இணைந்து, வாகனங்களை மாற்று பாதையில் அனுப்பி வைத்தனர். இதனால் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் ஒரு புற வாகனங்களை மாற்று வழியில் திருப்பப்பட்டு சொகுசு கார்களை ஏற்றி வந்த கண்டெய்னர் லாரியை விழுப்புரத்திற்கு திருப்பி அனுப்பினர். பின்னர் கண்டமங்கலம் ரெயில்வே கேட் சாலை இயல்பு நிலைக்கு திரும்பியது. ஒரு மணி நேரத்திற்கு மேலாக நீடித்த இந்த திடீர் போக்குவரத்து நெரிசலால் பள்ளி, கல்லூரி மாணவர்கள், பணிக்கு செல்வோர் என அனைத்து தரப்பினரும் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

    • சுற்றுலா பயணிகளின் வாகனங்களால் நகருக்குள் போக்குவரத்து இடையூறு ஏற்படாத வகையில் போலீசார் ஒருவழி பாதையாக மாற்றி இருந்தனர்.
    • பல இடங்களில் சுற்றுலா பயணிகளுக்கும் நுழைவு கட்டணம் வசூலிக்கும் நபர்களுக்கும் இடையே வாக்கு வாதங்கள் ஏற்பட்டது.

    மாமல்லபுரம்:

    கிறிஸ்துமஸ் பண்டிகை மற்றும் பள்ளிகளுக்கு அரையாண்டு தேர்வு விடுமுறை விடப்பட்டு உள்ளதால் மாமல்லபுரத்தில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது.

    அங்குள்ள புராதன சின்னங்களான கடற்கரை கோயில், அர்ச்சுனன்தபசு, வெண்ணெய் உருண்டை பாறை, ஐந்துரதம் உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அப்பகுதிக்கு செல்லும் சுற்றுலா பயணிகளின் வாகனங்களால் நகருக்குள் போக்குவரத்து இடையூறு ஏற்படாத வகையில் போலீசார் ஒருவழி பாதையாக மாற்றி இருந்தனர். எனினும் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகம் காரணமாக மாமல்லபுரம் நகரில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதற்கு முக்கிய காரணமாக கோவளம் சாலை, திருக்கழுக்குன்றம் சாலை இருவழி நுழைவு வாயில்களில் நுழைவு கட்டணம் வசூலி க்கும் ஒப்பந்ததார ஊழியர்கள் சிலர், நகருக்குள் நுழைந்த வாகனங்களை வழி மறித்து நுழைவு கட்டணம் வசூல் செய்தது காரணமாக கூறப்படுகிறது.

    இதனால் பல இடங்களில் சுற்றுலா பயணிகளுக்கும் நுழைவு கட்டணம் வசூலிக்கும் நபர்களுக்கும் இடையே வாக்கு வாதங்கள் ஏற்பட்டது.

    ஏற்கனவே செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத், வாகனங்களில் மாமல்லபுரம் வரும் சுற்றுலா பயணிகளுக்கு இடையூறு இல்லாமல் இரண்டு இடங்களில் மட்டுமே நுழைவு கட்டணம் வசூலிக்க வேண்டும், ரசீது வாங்கிய வாகனத்தில் அடையாள ஸ்டிக்கர் ஒட்ட வேண்டும், ஊழியர்கள் சீருடை மற்றும் போட்டோவுடன் கூடிய அடையாள அட்டை அணிய வேண்டும் என்று உத்தரவிட்டு இருந்தார். ஆனால் இந்த நடைமுறைகள் இதுவரை கடைபிடிக்கவில்லை என்று தெரிகிறது.

    • தனியார் கண்டெய்னர் யார்டு அருகே கிராமமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    • சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    பொன்னேரி:

    மீஞ்சூர் அடுத்த நாலூர் ஊராட்சிக்கு உட்பட்ட நாலூர் அண்ணாநகர், கம்மார்பாளையம், தெலுங்கு காலனி, கிராமத்தில் 500க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.

    இப்பகுதி பொதுமக்கள் போக்குவரத்திற்காக பொன்னேரி-மீஞ்சூர் நெடுஞ்சாலையில் இருந்து கிராமத்திற்கு செல்லும் சாலையை பயன்படுத்தி வருகின்றனர். அப்பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் கண்டெய்னர் யார்டு,குளிர்பதன கிடங்குகளுக்கு வரும் கனரக வாகனங்களால் இந்த சாலை மிகவும் சேதமடைந்து குண்டும் குழியுமாக மாறி உள்ளது. மேலும் கடந்த சில தினங்களாக பெய்து வரும் கனமழையில் சேதமடைந்த சாலை தண்ணீர் தேங்கி போக்குவரத்துக்க லாயக்கற்று மிகவும் மோசமான நிலையில் காணப்படுகிறது. இதனால் அப்பகுதியில் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகின்றன.

    இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை வைத்தும் நடவடிக்கை எடுக்க வில்லை என்று தெரிகிறது. இந்த நிலையில் 12 வருடத்திற்கு முன்பு போடப்பட்ட சாலையை சீரமைக்க கோரியும், கண்டெய்னர் யார்டில் இருந்து வெளியேறும் கழிவு நீர் ஏரியில் விடப்படுவதை கண்டித்தும், உயர்மின் கோபுரத்தில் பொருத்தப்பட்டிருக்கும் கேமராவை அகற்ற கோரியும்,தனியார் கண்டெய்னர் யார்டு அருகே கிராமமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    அப்போது அவ்வழியே வந்த லாரியை சிறைபிடித்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. மீஞ்சூர் வட்டார வளர்ச்சி அலுவலர் குமார், வட்டாட்சியர் மதிவாணன் மறியலில் ஈடுபட்டுவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். ஒரு வாரத்தில் சாலை அமைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதையடுத்து கிராமமக்கள் மறியில் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த மறியல் போராட்டம் காரணமாக அப்பகுதியில் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    • போக்குவரத்து நெரிசலால் பொது மக்கள் அவதி
    • அடிக்கடி வாகனங்கள் விபத்து ஏற்படுவதாக புகார்

    ஜோலார்பேட்டை:

    ஆந்திர மாநிலம், நெல்லூர் பகுதியில் இருந்து கர்நாடக மாநிலம் பெங்களூருக்கு காற்றாலை ஏற்றிக்கொண்டு கடந்த 5 நாட்களுக்கு முன்பு லாரி ஒன்று வந்தது. கடந்த 6 நாட்களுக்கு முன்பு நாட்டறம்பள்ளி தண்ணீர் பந்தல் அருகே உள்ள சர்வீஸ் சாலையில் நிறுத்தப்பட்டது.

    போக்குவரத்துக்கு இடை யூறாக, காற்றாலையுடன் லாரி நிற்ப்பதால், அங்கு அடிக்கடி வாகனங்கள் விபத்து ஏற்படுகிறது.

    சில சமயங்களில் சர்வீஸ் சாலை வழியாக லாரி உள்ளிட்ட வாகனங்கள் வரும்போது, கடந்த செல்ல வழி இல்லாமல் அடிக்கடி வாகன நெரிசல் ஏற்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதி அடைகின்றனர்.

    இது குறித்து காற்றாலை ஏற்றி வந்த லாரி டிரைவரிடம் விசாரித்த போது, கர்நாடக மாநிலத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டிய இடத்தில் சாலை பணிகள் நடை பெறுவதால் எங்களால் குறிப்பிட்ட இடத்திற்கு கொண்டு செல்ல முடியாமல் தவித்து வருகிறோம்.

    சாலை சீரமைக்கப்பட்ட பிறகு தான் எங்களுக்கு அனுமதி கிடைக்கும். இதனால் வேறு வழியின்றி இதே இடத்தில் நிற்க வேண்டிய சூழல் உள்ளது என்றார். எனவே அதிகாரிகள் சர்வீஸ் சாலையில் நிற்க்கும் லாரியை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.

    • திருப்பூர் மாவட்டம் பல்லடம் நகரமானது கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது.
    • திருமணம் போன்ற விஷேச நாட்களில் இந்த வாகன போக்குவரத்து எண்ணிக்கை 60 ஆயிரத்தை எட்டுகிறது.

    பல்லடம்:

    திருப்பூர் மாவட்டம் பல்லடம் நகரமானது கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. மேலும் கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையுடன், திருப்பூர், பொள்ளாச்சி, உடுமலை, அவிநாசி, தாராபுரம் ஆகிய மாநில நெடுஞ்சாலைகள் இணைவதால், பல்லடத்தில் வாகன போக்குவரத்து பல மடங்கு அதிகரித்து வருகிறது. இந்த கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை எண் 81- ல் தினமும் சுமார் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்ற வண்ணம் உள்ளது. இதற்கிடையே திருமணம் போன்ற விஷேச நாட்களில் இந்த வாகன போக்குவரத்து எண்ணிக்கை 60 ஆயிரத்தை எட்டுகிறது. இந்த நிலையில் நேற்று (வியாழக்கிழமை) சுப முகூர்த்த நாள் என்பதால் கார் உள்ளிட்ட வாகனங்களின் எண்ணிக்கை, வழக்கத்தை விட பல மடங்கு அதிகரித்த வண்ணம் சென்றது. இதனால் கோவை-திருச்சி மெயின் ரோட்டிலும், மங்கலம் ரோட்டிலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அண்ணா நகர் முதல், பனப்பாளையம் தாராபுரம் ரோடு பிரிவு வரை, ஆயிரக்கணக்கான வாகனங்கள் வரிசையாக அணிவகுத்து சென்றன. இதற்கிடையே போக்குவரத்து போலீசார் மற்றும் சட்டம் -ஒழுங்கு போலீசார் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினர். அப்படி இருந்தும் அதிகமான வாகன போக்குவரத்தால் பல்லடம் நகரை கடந்து செல்வதற்கு சுமார் 20 நிமிடங்களுக்கு மேலானது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டனர்.

    • மெட்ரோ ரெயில் பணி நடைபெற்று வருவதால் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
    • ஈக்காட்டுதாங்கல் பகுதியில் மழைநீர் கால்வாய் பணிகள் நீண்ட நாட்களாக நடந்து வருகிறது.

    சென்னை:

    சென்னையில் போக்கு வரத்து நெரிசலை குறைக்க பல்வேறு திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆனாலும் ஒரு சில இடங்களில் காலை மற்றும் மாலை, இரவு நேரங்களில் நெரிசல் ஏற்படுகிறது.

    தற்போது ஒரு சில பகுதிகளில் மெட்ரோ ரெயில் பணி நடைபெற்று வருவதால் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. இதனால் ஒரு சில பகுதிகளில் வாகனங்கள் எளிதாக செல்ல முடியாமல் நெரிசல் ஏற்படுகிறது.

    மேலும் ஒரு சில இடங்களில் மழை நீர் கால்வாய் பணிகள் நிறைவடையாமல் இருப்பதால் பீக் அவர்சில் நெரிசல் ஏற்படுகிறது.

    இந்த நிலையில் கிண்டி கத்திப்பாரா மேம்பாலத்தின் கீழ் பகுதியில் இன்று காலை 9 மணி முதல் 10 மணி வரை கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கத்திபாராவில் இருந்து கோயம்பேடு நோக்கி வாகனங்கள் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு அணிவகுத்து நின்றன. இருசக்கரம் மற்றும் கார்கள் நகராமல் நெரிசலில் சிக்கி வாகன ஓட்டிகள் பாதிக்கப்பட்டனர்.

    ஈக்காட்டுதாங்கலில் இருந்து கத்திபாரா பாலம் பகுதி வரை வாகனங்கள் வரிசையில் நின்றன. அலுவலகங்களுக்கு செல்லக் கூடியவர்கள் நெரிசலில் சிக்கி சிரமப்பட்டனர்.

    இதுகுறித்து போக்குவரத்து நெரிசலில் சிக்கிய வாகன ஓட்டிகள் கூறும்போது, ஈக்காட்டுதாங்கல் பகுதியில் மழைநீர் கால்வாய் பணிகள் நீண்ட நாட்களாக நடந்து வருகிறது. அதனை விரைவாக முடித்தால் அந்த பகுதியில் நெரிசல் ஏற்படாது. ஒவ்வொரு நாளும் இந்த சாலையை கடந்து செல்வதற்கு மணிகணக்கில் காத்து நிற்க வேண்டிய நிலை உள்ளது என்றனர்.

    • .வாகனங்கள் மிதமான வேகத்தில் சென்றதால் யாருக்கும் அசம்பாவிதம் ஏற்படவில்லை.
    • பிரதான சாலைகளில் மேற்கொள்ளப்படும் பணிகளை விரைந்து முடித்தால் இது போன்ற விபத்துக்கள் நிகழாது என்று தெரிவித்தனர்.

    உடுமலை:

    உடுமலையில் இருந்து பல்வேறு கிராமங்கள் வழியாக திருமூர்த்தி மலைக்கு செல்வதற்கு பிரதான சாலை அமைக்கப்பட்டு உள்ளது.இதன் மூலமாக சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள், விவசாயிகள்,வாகன ஓட்டிகள் பயனடைந்து வருகின்றனர். இதில் உடுமலை திருமூர்த்தி மலை சாலையில் யூனியன் ஆபீஸ் பஸ் நிலையத்தின் அருகே பாதாள சாக்கடை தொட்டி சேதம் அடைந்தது. அதைத் தொடர்ந்து அந்த தொட்டி சீரமைக்கப்பட்டது.இதற்காக அதன் இருபுறங்களிலும் சாலையின் பகுதி அளவிற்கு ஆக்கிரமிப்பு செய்து டிவைடர்கள் வைக்கப்பட்டு உள்ளது.

    இந்த சூழலில் நேற்று அந்தப் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் நிலவியது. டிவைடர் இருந்த காரணத்தினால் வாகன ஓட்டிகளுக்குள் தடுமாற்றம் ஏற்பட்டது. அப்போது உடுமலை நோக்கி சென்ற மூன்று கார்கள் ஒன்றன் மீது ஒன்று மோதி விபத்து ஏற்பட்டது.வாகனங்கள் மிதமான வேகத்தில் சென்றதால் யாருக்கும் அசம்பாவிதம் ஏற்படவில்லை. ஆனால் கார்கள் சேதம் அடைந்தது. இது குறித்து வாகன ஓட்டிகள் கூறுகையில், இந்த சாலையில் பாதாள சாக்கடை தொட்டிகள் சேதம் அடைவது தொடர்கதையாக உள்ளது. ஒரு முறை அமைக்கும் போதே அவற்றை தரமானதாக அமைத்தால் இதுபோன்ற நிகழ்வுகள் ஏற்படாது. கட்டுமானத்திற்காக வைக்கப்பட்ட டிவைடரால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு விபத்து நிகழ்ந்தது. இதனால் வாகன ஓட்டிகளுக்கு பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது.பிரதான சாலைகளில் மேற்கொள்ளப்படும் பணிகளை விரைந்து முடித்தால் இது போன்ற விபத்துக்கள் நிகழாது என்று தெரிவித்தனர்.

    • பொதுமக்கள் அவதி
    • சாலையின் இரு புறமும் வாகனங்கள் நிறுத்தப்பட்டி ருந்ததால் வாகனங்கள் செல்ல முடியவில்லை

    வேங்கிக்கால்:

    திருவண்ணாமலையில் புரட்டாசி மாத பவுர் ணமியை முன்னிட்டு சுமார் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் குவிந்தனர்.

    பக்தர்களின் வசதிக்காக சிறப்பு பஸ் மற்றும் சிறப்பு ெரயில்கள் இயக்கப்பட்டன.

    கிரிவலம் செல்லும் பக்தர்களுக்கு இடையூறு ஏற்படாத வண்ணம் வாகனங்கள் அனைத்தும் நகரத்திற்கு வெளியே போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டன.

    வெளியூர் வாகன ஓட்டிகள் சாலை ஓரங்களிலேயே பார்க்கிங் இடமாக பயன்படுத்தி, ஆங்காங்கே நிறுத்தி வைத்திருனர்.

    சாலையின் இரு புறமும் வாகனங்கள் நிறுத்தப்பட்டி ருந்ததால், வாகனங்கள் எளிதில் கடந்து செல்ல முடியாத சூழல் நிலவியது.

    அதேபோல் கிரிவல பாதை மற்றும் நகர பகுதிக்குள் செல்ல ஆட்டோ, பைக் உள்ளிட்ட வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டது. மேலும் குறிப்பிட்ட இடங்களுக்கு மட்டுமே ஆட்டோ செல்ல வேண்டும் என அனுமதி வழங்கப்ப ட்டுள்ளது.

    ஆனால் விதிமுறைகளை ஏதும் பின்பற்றாமல் ஒருசில ஆட்டோக்கள் கிரிவல பாதையில் பொது மக்களுக்கு இடையூறாக ஆங்காங்கே சுற்றி திரிந்தன.

    நினைத்த இடத்தில் ஆட்டோவை நிறுத்தி பயணிகளை ஏற்றுவது, மற்றும் இறக்குவது போன்ற போக்குவரத்து அத்து மீறல்களில் ஈடுபட்டனர்.

    கடும் போக்குவரத்து நெரிசல்

    பவுர்ணமி தினத்தை ஒட்டி திருவண்ணாமலை நகர பகுதியில் ஏராள மானோர் குவிந்ததால், வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    பக்தர்கள் அதிகம் பயன்படுத்தும் சன்னதி தெரு, மாடவீதி, திருமஞ்ச கோபுர வீதி, சின்ன கடைத்தெரு, கொச மடத்தெரு, கோபால் பிள்ளையார் கோவில் தெரு, அய்யங்குளத் தெரு உள்ளிட்ட அருணாசலேஸ்வரர் கோவிலை சுற்றியுள்ள தெருக்களிலும் போக்கு வரத்தில் கடுமையான நெரிசல் ஏற்பட்டது.

    இது குறித்து போக்குவரத்து போலீஸ் துறையினர் தனிக் கவனம் செலுத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    • இது தினமும் தொடர்கதையாக உள்ளதால் விபத்துகள் ஏற்படுகின்றன.
    • போக்குவரத்தை சீர் செய்ய போக்குவரத்து போலீசாரை நியமனம் செய்ய வேண்டு

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் திட்டக்குடி- விருத்தாசலம் மாநில நெடுஞ்சாலையில் திட்டக்குடியில் காலை மற்றும் மாலை நேரங்களில் கல்லூரி வாகனங்கள், பள்ளி வாகனங்கள், இருச க்கர வாகனங்கள், கனரக வாகனங்கள், விவசா ய டிராக்டர்கள் என அதிக அளவில் வாகனங்கள் சாலையில் செல்வதால் சில நேரத்தில் அவசரத் தேவைக்கு 108 மற்றும் தனியார் ஆம்புலன்ஸ்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவிக்கிறது.

    இது தினமும் தொடர்க தையாக உள்ளது. இதனால் விபத்துகள் ஏற்படுகின்றன. முதியவர்கள், பெண்கள், பள்ளி சிறுவர்கள், கல்லூரி மாணவர்கள் சாலையோரம் செல்ல முடியாமல் ஆபத்தா ன நிலையில் செல்கின்றனர் .திட்டக்குடியில் போக்குவ ரத்து போலீசார் நியமனம் செய்ய வேண்டும் என்று நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது. ஆனால் இதுவரை போக்குவரத்து போலீசார் நியமிக்கப்படவில்லை. எனவே மாவட்டபோலீஸ் சூப்பிரண்டு திட்டக்குடியில் போக்குவரத்தை சீர் செய்ய போக்குவரத்து போலீசாரை நியமனம் செய்ய வேண்டும் என சமூக பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    • ஆரஞ்சு, சாத்துக்குடி, மாதுளை, விளாம்பழம், பேரிக்காய், கம்பு உள்ளிட்ட பூஜை பொருட்கள் 150 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டன.
    • கடலூரை சுற்றி உள்ள பகுதிகளில் விற்பனைக்காக விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு இருந்தன.

    கடலூர்:

    விநாயகர் சதுர்த்தி விழா நாளை (திங்கட்கிழமை) கோலகலாமாக கொண்டா டப்பட உள்ளது. கடலூர் மாநகரில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு இன்று கடலூர் மஞ்சக்குப்பம், திருப்பா திரிப்புலியூர் உழவர் சந்தை, முதுநகர், கூத்தப்பாக்கம் பாதிரிக்குப்பம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பூஜை பொருட்கள் வாங்க கடைவீதியில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. இதனை தொடர்ந்து சதுர்த்தி விழாவுக்கு பூஜை பொருட்கள் விற்பனை மும்முரமாக நடைபெற்று வந்தது. வீடுகளில் வைத்து வழிபடும் விநாயகருக்கு படையல் இடுவதற்காக வாழைப்பழம், ஆப்பிள், ஆரஞ்சு, சாத்துக்குடி, மாதுளை, விளாம்பழம், பேரிக்காய், கம்பு உள்ளிட்ட பூஜை பொருட்கள் 150 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டன. கடந்த ஆண்டு 100 ரூபாய்க்கு விற்பனையானது குறிப்பிடத்தக்கதாகும்

    இதனை தொடர்ந்து பொரி, கடலை, சுண்டல் உள்ளிட்டவற்றையும் பொதுமக்கள் கடைகளில் ஆர்வமுடன் வாங்கி சென்றனர். விநாயகர் சதுர்த்தி வழிபாட்டுக்கு பயன்படும் வகையில் சிறிய அளவிலான விநாயகர் சிலைகள் விற்பனையும் தீவிரமாக நடந்தது. கடலூரை சுற்றி உள்ள பகுதிகளில் விற்பனைக்காக விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு இருந்தன. சிலையின் அளவை யொட்டி விற்பனை செய்யப்பட்டது. வீட்டில் வைத்து வழிபட சிறிய அளவிலான விநாயகர் சிலைகளுடன் அலங்கார வண்ண குடைகளையும் சிலர் ஆர்வமுடன் வாங்கி சென்றனர். மேலும், அருகம்புல் மற்றும் எருக்கம்பூ மாலைகள் விற்பனையும் நடந்தது. இதனை பெண்கள் ஆர்வத்துடன் வாங்கிச்சென்றனர். பூஜை பொருட்கள் வாங்கு வதற்காக கடலூர் மஞ்சக்குப்பம், திருப்பா திரிப்புலியூர், முதுநகர் கடை வீதியில் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் அங்கு வழக்கத்தை விட போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    • சாத்தான்குளத்தை சுற்றியுள்ள கிராமப்புற மக்கள் சாத்தான்குளம் பஜாரில் உள்ள கடைகளில் பொருட்கள் வாங்கிட தினமும் வாகனங்களில் வந்து செல்கின்றனர்.
    • விதிமுறைகளை மீறி எதிரே வரும் லாரி உள்ளிட்ட வாகனங்களால் அடிக்கடி போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவதாக வியாபாரிகள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

    சாத்தான்குளம்:

    சாத்தான்குளத்தை சுற்றியுள்ள கிராமப்புற மக்கள் சாத்தான்குளம் பஜாரில் உள்ள கடைகளில் பொருட்கள் வாங்கிட தினமும் வாகனங்களில் வந்து செல்கின்றனர். மேலும் அரசு திட்ட உதவிகள் பெறுவது தொடர்பாக தாசில்தார் அலுவலகம், ஒன்றிய அலுவலகங்கள் உள்ளிட்ட அரசு அலுவலகங்களுக்கும் வந்து செல்கின்றனர். இதனால் சாத்தான்குளம் பஜார் பகுதியில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வருகிறது.

    எனவே கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு வழிபாதை கடைபிடிக்க அறிவுறுத்தப்பட்டனர். ஆனால் அதற்கென முறையான போக்குவரத்து போலீசார் நியமிககப்படா ததால் அது செயல்படாமல் உள்ளது. அரசு பஸ்கள், மினி பஸ்கள் முறையாக பயன்படுத்தினாலும், விதிமுறைகளை மீறி எதிரே வரும்லாரி உள்ளிட்ட வாகனங்களால் அடிக்கடி போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவதாக வியாபாரிகள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

    முகூர்த்த நாள், விழா காலங்களில் அதிக வாகனங்கள் பஜார் பகுதியில் வருவதால் போக்குவரத்து நெருக்கடி அதிகரித்து காணப்படுகிறது. எனவே இதனை தடுகக வாகனங்களை சாலை ஓரங்களிலும், ஒதுக்குப்பு றான இடங்க ளிலும் நிறுத்த போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வியா பாரிகளும், பொதுமக்களும் வலியுறுத்தி உள்ளனர்.

    ×