என் மலர்
நீங்கள் தேடியது "Traffic congestion"
- போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை தடுக்க நடவடிக்கை
- நெடுஞ்சாலைத் துறையினர் தீவிரம்
அரக்கோணம்:
அரக்கோணம் நகரின் பிரதான பகுதியான காந்தி ரோட்டின் இருபக்கமும் சுமார் 3 கி.மீ.தூரத்திற்கு வணிக நிறுவனங்கள், சாலையோர கடைகள் என ஆக்கிரமிப்புகளால் சாலை குறுகலாகி தினசரி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
சாலையின் இருபக்கமும் உள்ள மின் கம்பங்களால் வணிக நிறுவனங்களின் ஆக்கிரமிப்புகள் அதிகரிக்க காரணமாக இருப்பதாக பொது மக்கள் தெரிவிக்கின்றனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன் மின் வாரியத்தினர் ஜோதி நகர் முதல் தாலுகா அலுவலகம் வரை சாலையின் ஓரத்தில் இருந்த கம்பங்களை 10 அடி தூரத்தில் அகற்றி சாலையின் ஓரத்தில் நட்டனர்.
இந்த நிலையில் நேற்று காலை நெடுஞ்சா லைத் துறையினர் பொக்லைன் மூலம் கடைகளின் ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.
இதனால் மின் கம்பங்கள், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களின் தொலை தொடர்பு கம்பங்கள் சாலையின் நடுவே இருப்பது போல் காட்சியளிக்கிறது.
- பெதப்பம்பட்டியில் பஸ் நிலையம் அமைக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
- விரைவில் இப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
உடுமலை :
பொள்ளாச்சி - தாராபுரம் மாநில நெடுஞ்சாலை மற்றும் உடுமலை - செஞ்சேரிமலை ரோடு சந்திக்கும் நால்ரோடு பெதப்பம்பட்டியில் உள்ளது.குடிமங்கலம் ஒன்றிய அலுவலகம் உட்பட அரசு அலுவலகங்கள், நூற்பாலைகள், கல்வி நிறுவனங்கள், வணிக கடைகள், இப்பகுதியில் அமைந்துள்ளன.பொள்ளாச்சியில் இருந்து பெதப்பம்பட்டிக்கு இயக்கப்படும் பஸ்கள் நால்ரோட்டில் நிறுத்தப்படுகின்றன. அப்போது தாராபுரம் உட்பட பகுதிகளில் இருந்து வரும் வாகனங்கள் விலகிச்செல்ல இடம் இருப்பதில்லை. இதே நிலை உடுமலை, செஞ்சேரிமலை, குடிமங்கலம் உட்பட வழித்தட பஸ்கள் நிற்கும் போதும் ஏற்படுகிறது.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன் நால்ரோட்டில் நெரிசலை குறைக்க நெடுஞ்சாலைத்துறை சார்பில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது. அப்போது அங்கிருந்த நிழற்கூரையும் அப்புறப்படுத்தப்பட்டு இடவசதி ஏற்படுத்தப்பட்டது.ஆனால் ஆக்கிரமிப்புகள் மீண்டும் அதிகரித்துள்ள நிலையில் பயணிகள் நிற்பதற்கு இடமில்லை. மழை மற்றும் வெயில் காலங்களில் கடைகளின் முன்புள்ள இடத்தில் பஸ்சுக்காக காத்திருக்க வேண்டியுள்ளது.
அரசு மேல்நிலைப்பள்ளி உட்பட கல்வி நிறுவனங்கள் இருப்பதால் நால்ரோட்டில் எப்போதும் மாணவர்கள் கூட்டம் அதிகம் காணப்படும். இவர்கள் பஸ்சுக்காக காத்திருக்க போராட வேண்டியுள்ளது.குடிமங்கலம் ஒன்றியக்குழு சார்பில் சில ஆண்டுகளுக்கு முன், பெதப்பம்பட்டியில் பஸ் நிலையம் அமைக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த தீர்மானம் அடிப்படையில் திருப்பூர் மாவட்ட நிர்வாகம் பஸ் நிலையம் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்து கருத்துரு அனுப்ப ஒன்றிய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது.அதிகாரிகள் தரப்பிலும் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. ஆனால், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் நால்ரோட்டில் நெரிசலும், விபத்துகள் தொடர்கதையாக உள்ளது.எனவே நெரிசலை கட்டுப்படுத்த பஸ் நிலையம் அமைப்பதுடன், தற்சமயம் போலீசார் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
முக்கோணம்
கோவை - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை (எண்:209)ல் முக்கோணம் கிராமம் அமைந்துள்ளது. இப்பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் ஆனைமலை ரோடு சேர்கிறது.வாளவாடி, ஆனைமலை மற்றும் சுற்றுப்பகுதிகளிலிருந்து வரும் வாகனங்கள் உடுமலை மற்றும் பொள்ளாச்சிக்கு செல்ல தேசிய நெடுஞ்சாலையில் இணைகின்றன.
அப்போது பொள்ளாச்சி மற்றும் உடுமலை பகுதியிலிருந்து அதிவேகமாக தேசிய நெடுஞ்சாலையில், வரும் வாகனங்கள் மோதி விபத்துகள் ஏற்படுகின்றன. இருசக்கர வாகனங்கள் தேசிய நெடுஞ்சாலையை கடக்க முடியாமல் சந்திப்பு பகுதியில் திணறுகின்றன.
உடுமலை பகுதியிலிருந்து இயக்கப்படும் பஸ்கள், முக்கோணம் பஸ் நிறுத்தத்தில், தேசிய நெடுஞ்சாலையில் இடதுபுறத்திலும், பொள்ளாச்சியிலிருந்து வரும் பஸ்கள் வலது புறத்திலும் நிறுத்தப்படுகின்றன.குறுகலான வளைவு பகுதியில் சாலையின் இருபுறங்களிலும் பஸ்கள் நிறுத்தப்படும் போது அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. பஸ் நிறுத்தம் அருகில் உள்ள குறுகலான பாலமும் நெரிசலை அதிகரிக்கிறது.இவ்வாறு தேசிய நெடுஞ்சாலையில் பொள்ளாச்சி மற்றும் உடுமலை வரும் வாகனங்களுக்கு முக்கோணம் பகுதி அபாய பகுதியாக மாறியுள்ளது.
ஆனைமலை வழித்தடத்தில் செல்லும் பஸ்களும், அங்கு நிறுத்தப்படும் போது போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. இப்பிரச்சினைக்கு தீர்வாக, முக்கோணம் பகுதியில் ரவுண்டானா அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் எதிர்பார்த்துள்ளனர்.
இதனால் ஆனைமலை வழித்தடத்தில் வரும் வாகனங்கள் எளிதாக தேசிய நெடுஞ்சாலையுடன் இணைய முடியும். மேலும் தேசிய நெடுஞ்சாலையில் அதிவேகமாக வரும் வாகனங்களும் வேகத்தை குறைத்து விபத்தை குறைக்க ரவுண்டானா உதவும்.
இது குறித்து தேசிய நெடுஞ்சாலைத்துறை, மாநில நெடுஞ்சாலைத்துறையினர் ஒருங்கிணைந்து நடவடிக்கை எடுக்க நீண்ட காலமாக கோரிக்கை விடுக்கப்பட்டும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.தற்போது நான்கு வழிச்சாலைக்கான பணிகளும் அப்பகுதியில் நடப்பதால் சிக்கல் அதிகரித்துள்ளது. விரைவில் இப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
கடலூர்:
கடலூர் மாவட்டத்தில் உள்ள திட்டக்குடி 30-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு தலைநகராக உள்ளது. இங்கு வயலப்பாடி, அகரம் பாடர், பெறுமுளை, சிறுமுளை, இ.கிரனூர், ஆவினங்குடி, பட்டூர், இடைச்செருவாய், கீழச்செருவாய் போன்ற கிராமங்கள் உள்ளது.இந்த கிராம மக்கள் தங்களுக்கு தேவையான பல்வேறு பொருட்களை வாங்கிச் செல்ல தினமும் திட்டக்குடிக்கு வந்து செல்வர். இது தவிர திட்டக்குடியில் உள்ள அரசு, தனியார் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு ஆயிரக்கணக்காக மாணவ, மாணவியர் தினமும் வந்து செல்கின்றனர்.
மேலும், திட்டக்குடி நகராட்சி, போலீஸ் துணை சூப்பிரண்டு அலுவலகம், அரசு ஆஸ்பத்திரிக்கும் ஏராளமான பொது மக்கள் பல்வேறு பிரச்சனையை தீர்த்துக் கொள்ள வருகின்றனர். இது தவிர முகூர்த்த நாட்களில் வழக்கத்தைவிட கூடுதலான பொதுமக்கள் திட்டக்குடிக்கு வருகை தருகின்றனர்இதனால் திட்டக்குடி நகரம் தினமும் அதிகாலையில் இருந்து இரவு வரை எப்போதும் பரபரப்பாகவே காணப்படும். அதிலும் குறிப்பாக திட்டக்குடி, ராமநத்தம் மாநில நெடுஞ்சாலையில் மாலை நேரங்களில் அதிக அளவில் கனரக வாகனங்கள், கல்லூரி வாகனங்கள், கரும்பு டிராக்டர்கள், ஆட்டோக்கள், மோட்டார் சைக்கிள்கள் அதிகளவில் வருவதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.இதனால் தினமும் அரை மணி முதல் ஒரு மணி நேரம் வரை போக்குவரத்து நெரிசலில் சிக்கி வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. இதனால் பள்ளி, கல்லூரி மாணவர்கள், கூலித் தொழிலாளர்கள் தங்களது வீட்டிற்கு செல்ல பஸ்சிற்காக காத்திருக்கின்றனர். ஆனால் போக்குவரத்து நெரிசலில் சிக்கிவிடும் அரசு பஸ் தினமும் 1 மணி நேரத்திற்கு மேலாக தாமதமாகவே பஸ் நிலையம் வருகிறது.
திட்டக்குடியில் பெருகி வரும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த போக்குவரத்து போலீஸ் பிரிவை தனியாக அமைக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டு வருகிறது. இதனை அமைக்காமல் மாவட்ட நிர்வாகமும், போலீஸ் துறையும் காலங்கடத்தி வருகிறது.
எனவே திட்டக்குடியில் போக்குவரத்து போலீஸ் நிலையம் அமைக்க வேண்டும். போக்குவரத்து போலீசாரை வைத்து போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த வேண்டும் என்பதே பொது மக்கள் மற்றும் வாகன ஒட்டிகளில் கோரிக்கையாக உள்ளது.
- மாநில நெடுஞ்சாலைகள் இணைவதால் வாகன போக்குவரத்து பல மடங்கு அதிகரித்து வருகிறது.
- போக்குவரத்தை ஒழுங்குபடுத்தியும் ரோடுகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
பல்லடம் :
பல்லடம் கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. இந்த நிலையில் கோவை - திருச்சி .தேசிய நெடுஞ்சாலையுடன் திருப்பூர், பொள்ளாச்சி, உடுமலை,அவிநாசி, தாராபுரம் ஆகிய மாநில நெடுஞ்சாலைகள் இணைவதால், பல்லடத்தில் வாகன போக்குவரத்து பல மடங்கு அதிகரித்து வருகிறது.
கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை எண் 81 ல் தினமும் சுமார் 40 ஆயிரத்திற்கும் மேலான வாகனங்கள் செல்கின்றது. திருமணம் போன்ற விசேச நாட்களில் இந்த எண்ணிக்கை 60 ஆயிரத்தைத் தாண்டும்.இந்த நிலையில் நேற்று முன்தினம் சுப முகூர்த்த நாள் என்பதால் கார், மோட்டார் சைக்கிள்களின் எண்ணிக்கை,வழக்கத்தை விட பல மடங்கு அதிகரித்தது. இதனால் கோவை-திருச்சி மெயின் ரோட்டிலும், மங்கலம் ரோட்டில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
அண்ணா நகர் முதல், பனப்பாளையம் தாராபுரம் ரோடு பிரிவு வரை, ஆயிரக்கணக்கான வாகனங்கள் வரிசையாக அணிவகுத்து சென்றன.போக்குவரத்து போலீசார் நெரிசலை கட்டுப்படுத்த தடுப்புகள் வைத்தும், போக்குவரத்தை ஒழுங்குபடுத்தியும் ரோடுகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
- ஆற்றின் கரையில் 2 கி.மீ தூரத்திற்கு சாலை அமைக்க அதிகாரிகள் ஆய்வு
- பணிகள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும்
குடியாத்தம்:
வேலூர் மாவட்டம் குடியாத்தம் கவுண்டன்யா மகாநதி ஆற்றில் குடியாத்தம் நகராட்சி பகுதியில் ஆற்றின் இருபக்கமும் கரைகளிலும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டதை தொடர்ந்து கவுண்டன்யா மகாநதி ஆற்றில் குடியாத்தம் நகராட்சிக்குட்பட்ட பகுதியில் ஆற்றின் இருபுற கரைகளிலும் வெள்ள தடுப்பு சுவர் சுமார் மூன்று கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கும் பணிகள் கடந்த சில தினங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது.
குடியாத்தம் கவுண்டன்யா மகாநதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் குடியாத்தம் நகரில் மையப் பகுதியில் உள்ள காமராஜர் பாலத்தில் மட்டுமே போக்குவரத்து நடைபெறுகிறது.
இதனால் வெள்ளப்பெருக்கு காலங்களில் பல நாட்கள் தொடர்ந்து பல மணி நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது இந்த போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
அதன் ஒரு பகுதியாக குடியாத்தத்தில் போக்குவரத்து நெரிசலை குறைக்க உயர்மட்ட மேம்பாலம் மற்றும் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஆற்றின் கரையில் சாலை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
குடியாத்தம் புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள ராஜகணபதி நகர் வழியாக மேல்ஆலத்தூர் ரோடு செல்லும் வழியில் கவுண்டன்யா மகாநதி ஆற்றின் குறுக்கே உயர்மட்ட மேம்பாலம் அமைக்க அதிகாரிகள் நேற்று ஆய்வு செய்தனர். மேலும் ராஜகணபதி நகர்- மேல்ஆலத்தூர் இடையே நடுவில் செல்லும் கவுண்டன்யா ஆற்றில் தற்போது செயல்படுத்தப்பட உள்ள வெள்ளதடுப்பு கரை மீது அங்கிருந்து நெல்லூர்பேட்டை சேம்பள்ளி கூட்ரோடு வரை வெள்ள தடுப்பு கரை மீது இரண்டு கிலோமீட்டர் நீளத்திற்கு சாலை அமைப்பதற்கான ஆய்வுப்பணிகளையும் நேற்று ஆய்வு செய்தனர்.
இந்த ஆய்வின்போது நீர்வளத் துறை வேலூர் கோட்ட செயற்பொறியாளர் ஆர்.ரமேஷ், உதவி செயற்பொறியாளர் பி.கோபி, குடியாத்தம் நகர் மன்ற தலைவர் எஸ்.சவுந்தரராசன், நெடுஞ்சாலைத்துறை உதவி செயற்யாபொறியாளர் ஆர்.எஸ்.சம்பத்குமார், உதவி பொறியாளர்கள் பி.யோகராஜ், ராஜேஷ் அரசு வழக்கறிஞர் வக்கீல் எஸ்.பாண்டியன், முன்னாள் நகர் மன்ற உறுப்பினர் கண்ணன், மகளிர் மேல்நிலைப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் எம்.எஸ்.அமர்நாத் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
நீர்வளத்துறை செயற்பொறியாளர் ரமேஷ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
கவுண்டன்யா மகாநதி ஆற்றில் குடியாத்தம் நகராட்சிக்குட்பட்ட இரண்டு பக்க கரைகளில் தலா இரண்டரை கிலோ மீட்டர் நீளத்திற்கு வெள்ள தடுப்பு சுவர் அமைக்கப்படுகிறது சுமார் 5 மீட்டர் உயரத்திற்கும் இந்த வெள்ள தடுப்பு சுவர் அமைக்கப்படுகிறது.
தற்போது புதியதாக ராஜகணபதி நகர் மேல்ஆலத்தூர் ரோடு நடுவில் கவுண்டன்யா மகாநதி ஆற்றில் உயர் மட்ட மேம்பாலம் அமைக்க ஆய்வுப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதே போல் வெள்ள தடுப்பு சுவர் மீது ராஜகணபதி நகர் மேல்ஆலத்தூர் ரோடு நடுவே கவுண்டன்யா மகாநதி ஆற்று ஓரம் தொடங்கி சேம்பள்ளி கூட்ரோடு வரை சுமார் 2 கிலோமீட்டர் நீளத்திற்கு அதன் மீது சாலை அமைக்கவும் ஆய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த ஆய்வுப் பணிகள் முடிக்கப்பட்டு இதன் விவரங்கள் தமிழக அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உடனடியாக இப்பணிகள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
- சாலைகளை விரிவு செய்ய வேண்டும்
- அமைச்சர் எ.வ.வேலு தகவல்
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர் மாவட்ட வருவாய்த்துறை அலுவலர்களுக்கான ஆய்வு கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தலைமை தாங்கி பேசியதாவது:-
புதிய பட்டா பெற வேண்டுபவர்கள் அரசு விதிகளுக்குட்பட்டு சரியான முறையில் இருந்தால் தகுதி வாய்ந்த நபர்கபளை செய்து செய்து பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழாவுக்கு 42 லட்சம் பக்தர்கள் வந்தனர். அப்போது பஸ்கள் நிறுத்த போதுமான இடவசதி இல்லாமல் இருந்தது.
புதிய பஸ் நிலையம் வரப்பெற வருவாய்த்துறை பெரும் உதவியாக இருந்தது. தேர்வு செய்யப்பட்ட இடத்தில் உள்ள 19 வீடுகளில் வசிப்பவர்களுக்கு மாற்று இடம் தேர்வு செய்து பட்டா வழங்க வருவாய்துறை அரசு விதிகளுக்குட்பட்டு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
தற்போது உள்ள சூழ்நிலையில் நகர்ப்புற சாலைகளை விரிவுப்படுத்துவது இன்றியமையாதது. சாலைகளை விரிவு செய்தால் மட்டுமே போக்குவரத்து நெரிசலை தவிர்க்க முடியும். அதன் அடிப்படையில் தான் திருவண்ணாமலை முதல் செங்கம், வேலூர் முதல் சித்தூர் சாலை மற்றும் கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களில் சாலை விரிவுபடுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
இதையடுத்து வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் கலந்து கொண்டு பல்வேறு பணிகள் குறித்து ஆய்வு செய்தார்.
- தூத்துக்குடி, விழுப்புரம் மாவட்டங்களில் உதவி போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றினார்.
- போக்குவரத்து நெரிசலை குறைக்கவும், விபத்துகளில் உயிரிழப்பு ஏற்படுவதை தடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்
திருப்பூர் :
திருப்பூர் மாநகர வடக்கு போலீஸ் துணை கமிஷனராக அபிஷேக் குப்தா பொறுப்பேற்றுக்கொண்டார். இவரது சொந்த மாநிலம் பஞ்சாப். பி.காம். எல்.எல்.பி.பட்டப்படிப்பு படித்துள்ளார். 2019-ம் ஆண்டு ஐ.பி.எஸ். தேர்வானார். தூத்துக்குடி, விழுப்புரம் மாவட்டங்களில் உதவி போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றினார்.
தற்–போது பதவி உயர்வு பெற்று திருப்பூர் மாந–கர துணை கமிஷனராக பொறுப்பேற்றுள்ளார். அவர் கூறும்போது, 'பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு நடவடிக்கை மற்றும் குற்றங்களை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும். நடந்த குற்றங்களை விரைவாக கண்டறிந்து குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத்தரப்படும். திருப்பூர் மாநகரின் போக்குவரத்து நெரிசலை குறைக்கவும், விபத்துகளில் உயிரிழப்பு ஏற்படுவதை தடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.
- அரசு மருத்துவமனைக்கு வரும் ஆம்புலன்ஸ் வாகனங்களும் இந்த போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கின்றன.
- நான்கு பக்கங்களிலிருந்து வரும் வாகனங்கள் தாறுமாறாக செல்வதால் தினந்தோறும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகின்றன.
வீரபாண்டி :
திருப்பூரில் இருந்து பல்லடம் செல்லும் சாலையில் தொழில் நிறுவனங்கள், வணிக வளாகங்கள்,கடைகள் ,குடியிருப்புகள் உள்ளிட்டவைகள் அதிகமாக இருக்கின்றன. கோவை மற்றும் கேரளாவை இணைக்கும் முக்கிய வழித்தடம் என்பதாலும் சரக்கு போக்குவரத்து பிரதானமாக இருப்பதாலும் இந்த சாலையில் நாளுக்கு நாள் வாகன போக்குவரத்து அதிகரித்து வருகின்றன.
போக்குவரத்து நிறைந்த இந்த சாலையில் தினந்தோறும் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். குறிப்பாக திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட வீரபாண்டி பிரிவு முதல் டி.கே.டி.மில் வரை அதிகப்படியான போக்குவரத்து நெரிசல் தினந்தோறும் ஏற்பட்டு வருகின்றன.
மேலும் பல்லடம் சாலை வழியாக தினந்தோறும் அரசு மருத்துவமனைக்கு வரும் ஆம்புலன்ஸ் வாகனங்களும் இந்த போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கின்றன.
இது குறித்து வாகன ஓட்டிகளும் சமூக ஆர்வலர்களும் கூறியதாவது:- வீரபாண்டி பிரிவு ,நொச்சிப்பாளையம் பிரிவு,டி.கே.டி.மில் பிரிவு என முக்கிய சாலைகள் செல்லும் சந்திப்புகள் இந்த சாலையில் உள்ளது. மேற்கூறிய இடங்களில் அதிகப்படியான வாகன போக்குவரத்து இருப்பதாலும் போக்குவரத்து நெரிசலும் அதிகமாக உள்ளன.
குறிப்பாக காலை மற்றும் மாலை நேரங்களில் கட்டுக்கடங்காத வாகன நெரிசல் தினந்தோறும் ஏற்பட்டு வருகின்றன. நொச்சிப்பாளையம் பிரிவு மற்றும் டி.கே.டி.மில் பிரிவு இந்த இரண்டு நால்ரோடுகளிலும் பெரும்பாலும் போக்குவரத்தை ஒழுங்குபடுத்த போலீசார் இருப்பதில்லை.
இதனால் இந்த இரண்டு பகுதிகளிலும் நான்கு பக்கங்களிலிருந்து வரும் வாகனங்கள் தாறுமாறாக செல்வதால் தினந்தோறும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகின்றன.
நெரிசலில் சிக்கிய வாகனங்கள் தினந்தோறும் ஊர்ந்து செல்வதால் கடும் மன உளைச்சல் ஏற்படுகின்றன. மேலும் மருத்துவமனைக்கு செல்லும் ஆம்புலன்ஸ் வாகனங்களும் தினந்தோறும் இந்த போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவியாய் தவிக்கின்றன.
மேற்கூறியுள்ள இரண்டு பகுதிகளிலும் உடனடியாக போக்குவரத்து போலீசாரை நியமித்து போக்குவரத்தை ஒழுங்குபடுத்த வேண்டும் என வாகன ஓட்டிகளும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை வைத்துள்ளார்கள்.
- தமிழக முழுவதும் நேற்று தைப்பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இன்று மாட்டுப் பொங்கல் விழா கொண்டாடப்படுகிறது.
- மாட்டு பொங்கலன்று இறைச்சி, மீன் கடைகளில் வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக இருக்கும்.
மதுக்கூர்:
தமிழக முழுவதும் நேற்று தைப்பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
இன்று மாட்டுப் பொங்கல் விழா கொண்டாடப்பட்டு வருகிறது.
இன்றைய தினம் பொதுமக்கள் ஆடு, கோழி, மீன் உள்ளிட்ட இறைச்சிகளை வாங்கி சாப்பிடுவது வழக்கம்.
வீட்டுக்கு வந்த விருந்தினர்களுக்கு இறைச்சிகளை சமைத்து கொடுத்து உபசரிப்பர்.
இதனால் எப்போதும் மாட்டு பொங்கலன்று இறைச்சி, மீன் கடைகளில் வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக இருக்கும்.
அதன்படி தஞ்சை மாவட்டம் மதுக்கூரில் இன்று காலை முதலே இறைச்சி, மீன் கடைகளில் கட்டுகடங்காத கூட்டம் மதுக்கூர் முக்கூட்டுச்சாலை, ஆற்றுப்பாலம், வடக்கு மார்க்கெட், மதுக்கூர் மார்க்கெட் என அனைத்து இடங்களிலும் அதிகளவில் பொதுமக்கள் குவிந்து தேவையான இறைச்சி கறி, மீன்களை வாங்கி சென்றனர்.
பல இடங்களில் நீண்ட வரிசையில் நின்று வாங்கி சென்றதையும் காண முடிந்தது.
மேலும் தற்காலிகமாக இறைச்சி கடைகளும் போடப்பட்டிருந்தன. இதனால் மதுக்கூரில் இறைச்சி கடைகள், மீன் கடைகள் அமைந்திருக்கும் இடங்களில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.
- தொழில் நிறுவனங்கள், வணிக வளாகங்கள்,கடைகள் ,குடியிருப்புகள் உள்ளிட்டவைகள் அதிகமாக இருக்கின்றன.
- வீரபாண்டி பிரிவு முதல் டி.கே.டி.மில் வரை அதிகப்படியான போக்குவரத்து நெரிசல் தினந்தோறும் ஏற்பட்டு வருகின்றன.
வீரபாண்டி :
திருப்பூரில் இருந்து பல்லடம் செல்லும் சாலையில் தொழில் நிறுவனங்கள், வணிக வளாகங்கள்,கடைகள் ,குடியிருப்புகள் உள்ளிட்டவைகள் அதிகமாக இருக்கின்றன. கோவை மற்றும் கேரளாவை இணைக்கும் முக்கிய வழித்தடம் என்பதாலும் சரக்கு போக்குவரத்து பிரதானமாக இருப்பதாலும் இந்த சாலையில் நாளுக்கு நாள் வாகன போக்குவரத்து அதிகரித்து வருகின்றன. போக்குவரத்து நிறைந்த இந்த சாலையில் தினந்தோறும் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். குறிப்பாக திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட வீரபாண்டி பிரிவு முதல் டி.கே.டி.மில் வரை அதிகப்படியான போக்குவரத்து நெரிசல் தினந்தோறும் ஏற்பட்டு வருகின்றன. மேலும் பல்லடம் சாலை வழியாக தினந்தோறும் அரசு மருத்துவமனைக்கு வரும் ஆம்புலன்ஸ் வாகனங்களும் இந்த போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கின்றன.
இது குறித்து வாகன ஓட்டிகளும் சமூக ஆர்வலர்களும் கூறியதாவது :- வீரபாண்டி பிரிவு ,நொச்சிப்பாளையம் பிரிவு,டி.கே.டி.மில் பிரிவு என முக்கிய சாலைகள் செல்லும் சந்திப்புகள் இந்த சாலையில் உள்ளது. மேற்கூறிய இடங்களில் அதிகப்படியான வாகன போக்குவரத்து இருப்பதாலும் போக்குவரத்து நெரிசலும் அதிகமாக உள்ளன.
குறிப்பாக காலை மற்றும் மாலை நேரங்களில் கட்டுக்கடங்காத வாகன நெரிசல் தினந்தோறும் ஏற்பட்டு வருகின்றன. நொச்சிப்பாளையம் பிரிவு மற்றும் டி.கே.டி.மில் பிரிவு இந்த இரண்டு நால்ரோடுகளிலும் பெரும்பாலும் போக்குவரத்தை ஒழுங்குபடுத்த போலீசார் இருப்பதில்லை. இதனால் இந்த இரண்டு பகுதிகளிலும் நான்கு பக்கங்களிலிருந்து வரும் வாகனங்கள் தாறுமாறாக செல்வதால் தினந்தோறும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகின்றன. நெரிசலில் சிக்கிய வாகனங்கள் தினந்தோறும் ஊர்ந்து செல்வதால் கடும் மன உளைச்சல் ஏற்படுகின்றன. மேலும் மருத்துவமனைக்கு செல்லும் ஆம்புலன்ஸ் வாகனங்களும் தினந்தோறும் இந்த போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவியாய் தவிக்கின்றன. மேற்கூறியுள்ள இரண்டு பகுதிகளிலும் உடனடியாக போக்குவரத்து போலீசாரை நியமித்து போக்குவரத்தை ஒழுங்குபடுத்த வேண்டும் என வாகன ஓட்டிகளும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை வைத்துள்ளார்கள்.