search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ukkadam"

    • கரும்புக்கடை அருகே தொடங்கி ஆத்துப்பாலம் வரை 2-வது கட்டமாகவும் நடக்கிறது.
    • கடைகள் இடித்து அகற்றப்பட்டன

    கோவை

    கோவை உக்கடம் முதல் ஆத்துப்பாலம் வரை 2.4 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரூ.430 கோடியில் மேம்பாலம் கட்டும் பணி கடந்த 2018-ம் ஆண்டு தொடங்கியது.

    இந்த மேம்பாலம் உக்கடம் லட்சுமி நரசிம்மர் கோவில் அருகே தொடங்கி கரும்புகடை வரை முதல் கட்டமாகவும், கரும்புக்கடை அருகே தொடங்கி ஆத்துப்பாலம் வரை 2-வது கட்டமாகவும் நடக்கிறது. இதில் முதல் கட்ட மேம்பால பணிகள் 90 சதவீதம் வரை முடிந்து விட்டது.

    இந்த மேம்பாலத்தின் குறுக்கே உயரழுத்த மின்சாரம் செல்கிறது. இதனை புதைவட மின்சார கேபிள் மூலம் உக்கடம் துணை மின் நிலையத்திற்கு கொண்டு செல்ல ரூ.9 கோடியில் பணிகள் நடைபெற்றது.

    இதுதவிர லட்சுமி நரசிம்மர் கோவில் அருகே வட்ட வடிவில் அமையும் இறங்கு தளம் பகுதியில் பூங்கா அமைக்கப்பட உள்ளது. இதனையடுத்து உக்கடம் பகுதியில் மேம்பால போக்குவரத்து வசதிக்காக உக்கடம் பஸ் நிலையம் மாற்றி அமைக்கபட உள்ளது. இன்று காலையில் உக்கடம் பஸ் நிலைய கட்டிடத்தின் வெளிபுறம் செயல்பட்டு வந்த 20-க்கும் மேற்பட்ட கடைகள் இடிக்கப்பட்டு வருகிறது.

    மேலும் அந்த கட்டிடத்தின் பஸ் நிலையம் உள்புறம் உள்ள கேரள மாநிலம் செல்லும் பஸ் நிறுத்த பிளாக்குகளும் இடித்து அகற்றப்பட்டு வருகிறது. இதன் காரணமாக கேரள மாநிலத்துக்கு செல்லும் பஸ்கள் அடுத்த பிளாக்கில் நிற்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கட்டிட இடிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ள பகுதியில் பொதுமக்கள் யாரும் வரக்கூடாது என போலீசார் ஒலிப்பெருக்கி மூலம் எச்சரித்து வருகின்றனர்.தொடர்ந்து உக்கடம் பஸ் நிலைய கட்டி டம் ஒவ்வொரு பகுதியாக இடிக்கப்பட உள்ள தாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • சாலையை சூழ்ந்தபடி நிறுத்தி பயணிகளை ஏற்றி மற்றும் இறக்கி வருகின்றனர்.
    • பைபாஸ் சாலையில் மாற்றி அமைத்தால் போக்குவரத்து நெருக்கடி குறையும்.

    குனியமுத்தூர்

    கோவையில் கடந்த சில ஆண்டுகளாக உக்கடம் மேம்பால பணி நடைபெற்று வருகிறது. இதனால் சாலை முழுவது போக்குவரத்து நெருக்கடியில் திணறுகிறது. குறிப்பாக உக்கடம் பேருந்து நிலையத்திற்கு எதிராக பஸ் நிறுத்தம் ஒன்று உள்ளது.

    பாலக்காடு சாலையில் இருந்து கோவைக்கு வரும் அனைத்து பேருந்துகளும் இந்த பஸ் நிறுத்தத்தில் நிறுத்திவிட்டு தான் செல்லும். அதேபோன்று பொள்ளாச்சி ரோட்டில் இருந்து கோவைக்கு வரும் அனைத்து பேருந்துகளும் இந்த பஸ் நிறுத்தத்தில் நிறுத்திவிட்டு தான் செல்லும். காருண்யா, ஆலந்துறை, பேரூர் ,செல்வபுரம் போன்ற பகுதியில் இருந்து வரும் பேருந்துகளும் இந்த பஸ் நிறுத்தத்தில் நிறுத்துவது வழக்கம்.

    அனைத்து பேருந்துகளும் சம்பந்தப்பட்ட இந்த ஒரே இடத்தில் குவிந்து வருவதால், கடுமையான போக்குவரத்து நெரிசலும், மக்களின் சலசலப்பு எந்த நேரமும் இப்பகுதியில் காணப்படும். ஒரே இடத்தில் கட்டுக்கடங்காத மக்கள் குவிந்து வருவதால் பதட்டம் ஏற்படுவது போன்ற சூழ்நிலையை காண முடிகிறது.

    கோவையில் இருந்து உக்கடம் பகுதியை கடந்து செல்லும் பேருந்துகள், உக்கடம் பேருந்து நிலையத்திற்குள் சென்று விடுவதால் சாலையின் வலது பகுதியில் நெருக்கடியை காண முடிவதில்லை.

    ஆனால் சாலையின் இடது பகுதியில் ஒரே நேரத்தில் ஏராளான பேருந்துகள் சாலையை சூழ்ந்தபடி நிறுத்தி பயணிகளை ஏற்றி மற்றும் இறக்கி வருகின்றனர்.

    பயணிகளை ஏற்றி இறக்கும் அந்த நேரத்திற்குள் பின்னால் வரிசையாக வாகனங்கள் அணிவகுத்து நிற்கும் காட்சியை காணப்படுகிறது.

    எனவே உக்கடம் பேருந்து நிலையத்திற்கு எதிரே உள்ள அந்த பஸ் நிறுத்தத்தை, உக்கடம் பேருந்து நிலையத்திற்கு எதிரே செல்லும் செல்வபுரம் பைபாஸ் சாலையில் மாற்றி அமைத்தால் மட்டுமே இந்த பகுதியில் போக்குவரத்து நெருக்கடி குறையும்.

    பொதுமக்களும் நெருக்கடி இல்லாமல் பஸ்சில் இருந்து இறங்கி செல்ல வாய்ப்பு ஏற்படும். இவ்வாறு அன்றாடம் உக்கடம் பகுதியை கடந்து வரும் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    • பொதுக்கூட்டத்துக்காக கொடிக்கம்பம் நடப்பட்டது
    • கொடிக்கம்பத்தை அகற்றியதால் போராட்டம்

    கோவை, 

    தமிழக முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் 20 ஆண்டுகளுக்கு மேலாக சிறைவாசம் அனுபவித்து வரும் முஸ்லிம் சிறை கைதிகள் உட்பட அனைவரையும் விடுவிக்க கோரி பொதுக்கூட்டம் இன்று மாலை கோவை கோட்டைமேடு வின்சென்ட் ரோட்டில் நடைபெற உள்ளது.

    இதனையொட்டி த.மு.மு.க.வினர் கோவை உக்கடம் ஆத்துப்பாலம் குனியமுத்தூர் உள்ளிட்ட பல பகுதிகளில் சாலையோரம் கொடிக்கம்பம் நட்டு வைத்தனர்.

    இந்த கொடிகளை போலீசார் அகற்றினர். இதனால் ஆத்திரமடைந்த த.மு.மு.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் 100-க்கும் மேற்பட்டோர் திரண்டனர். பின்னர் அவர்கள் கொடிகளை அகற்றிய போலீசாரை கண்டித்து உக்கடம் பைபாஸ் ரோட்டில் திடீரென சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்ட து.

    இந்த தகவல் கிடைத்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் உக்கடம் பைபாஸ் ரோட்டில் அரை மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.  

    • பஸ்நிலையத்தில் கூச்சலிட்டபடி குடிமகன்கள் ஓடுகிறார்கள்
    • பயணிகள் அச்சம் அடைந்துள்ளனர்

     குனியமுத்தூர்,

    கோவையில் உக்கடம் பஸ்நிலையம் மிகவும் பழமை வாய்ந்த பஸ்நிலையமாகும். பாலக்காடு, மதுரை, ஒட்டன்சத்திரம், பழனி, பொள்ளாச்சி செல்லும் பஸ்களும், ஏராளமான டவுன் பஸ்களும் இந்த பஸ் நிலையத்திலிருந்து புறப்படுகிறது. எனவே ஏராளமான பயணிகள் இந்த பஸ் நிலையத்தை பயன்படுத்தி வருகின்றனர்.

    தினமும் மாலை 6 மணியிலிருந்து 8 மணி வரை வேலைக்கு சென்று விட்டு வீடு திரும்பும் பெண்கள் அதிகமாக நிற்பதை இப்பகுதியில் காணலாம். எனவே அந்த சமயம் பெண்களின் கூட்டம் நிரம்பி வழியும்.

    இந்நிலையில் கூட்டத்தோடு கூட்டமாக குடிமகன்களின் ஆக்கிரமிப்புகளும், தொல்லைகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக பயணிகள் குற்றம் சாட்டுகின்றனர். கூட்டத்தில் பெண்கள் நிற்பதை கண்டுகொள்ளாமல் புகை பிடிக்கின்றனர் என்றும் ஒருவருக்கு ஒருவர் ஆபாசமாக பேசி கொண்டு நிற்பதாகவும் பயணிகள் குறை கூறி வருகின்றனர்.

    இது பஸ்சுக்காக காத்து நிற்கும் பயணிகளின் முகம் சுளிக்கும் நிலையை ஏற்படுத்துகிறது. திடீரென்று போதை நபர்கள் மனநலம் பாதிக்கப்பட்டவர்களை போன்று கூச்சல் போட்டுக்கொண்டு ஓடும்போது பயணிகளின் மனம் பதற வைக்கிறது. இரவு நேரங்களில் மது குடித்து விட்டு ஆங்காங்கே காலி பாட்டில்களையும் வீசிவிட்டு செல்கின்றனர்.

    மேலும் பஸ் நிலையத்திற்குள் இருக்கும் இருக்கைகளிலும் படுத்துக் கொள்கின்றனர். இதனால் பயணிகள் அமர முடியாமல் கால்கடுக்க நிற்க வேண்டிய கட்டாயம் உள்ளது. இதுபற்றி பயணிகள் கூறுகையில், உக்கடம் பஸ் நிலையத்தை ஒட்டி போலீஸ்நிலையம் உள்ளது. போலீசார் அவ்வப்போது, பஸ் நிலையத்திற்குள் ரோந்து வந்தால் போதை நபர்களின் தொல்லையிலிருந்து விடுபடலாம். இவ்வாறு அவர்கள் கூறினர். 

    • கடந்த 2 நாட்களாக மின்சார கேபிளில் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது.
    • முதல் கட்ட மேம்பால பணிகள் 80 சதவீதம் வரை முடிந்து விட்டது.

    கோவை:

    கோவை உக்கடம் முதல் ஆத்துப்பாலம் வரை 2.4 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரூ.430 கோடியில் மேம்பாலம் கட்டும் பணி கடந்த 2018-ம் ஆண்டு தொடங்கியது.

    இந்த மேம்பாலம் உக்கடம் லட்சுமி நரசிம்மர் கோவில் அருகே தொடங்கி கரும்புகடை வரை முதல் கட்டமாகவும், கரும்புகடை அருகே தொடங்கி ஆத்துப்பாலம் வரை 2-வது கட்டமாகவும் நடக்கிறது. இதில் முதல் கட்ட மேம்பால பணிகள் 80 சதவீதம் வரை முடிந்து விட்டது.

    இந்த மேம்பாலத்தின் குறுக்கே உயரழுத்த மின்சாரம் செல்கிறது. இதனை புதைவட மின்சார கேபிள் மூலம் உக்கடம் துணை மின் நிலையத்திற்கு கொண்டு செல்ல ரூ.9 கோடியில் பணிகள் நடைபெற்று வந்தது.

    இந்த பணிகள் முடிந்ததை தொடர்ந்து கடந்த 2 நாட்களாக இந்த மின்சார கேபிளில் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. இதில் மின்கசிவு எதுவும் இல்லை என்பது தெரியவந்ததை தொடர்ந்து நேற்று மின் இணைப்பு வழங்கும் பணி நிறைவு பெற்றது. இதற்காக அந்த பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது.இதுகுறித்து நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் கூறியதாவது:-

    உக்கடம் பெரிய குளத்தில் இருந்து உக்கடம் துணை மின் நிலையம் வரை 600 மீட்டர் தூரத்திற்கு புதை வட மின்சார கேபிள் அமைக்கும் பணி நிறைவு பெற்றதை தொடர்ந்து மின் இணைப்பு வழங்கப்பட்டு விட்டது.

    இதனைத்தொடர்ந்து துணை மின்நிலையம் முதல் மேம்பாலம் வரை உள்ள மின் கோபுரங்கள் படிப்படியாக அகற்றப்படும்.

    தொடர்ந்து உக்கடம் மேம்பாலம் முதல்கட்ட மேம்பால பணி இன்னும் சில மாதங்களில் முழுமையாக முடிக்கப்படும்.

    இதுதவிர லட்சுமி நரசிம்மர் கோவில் அருகே வட்ட வடிவில் அமையும் இறங்கு தளம் பகுதியில் பூங்கா அமைக்கப்பட உள்ளது.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் தடை செய்யப்படுகிறது.
    • அரசு மருத்துவமனை, உக்கடம் பகுதிகளில் மின் தடை செய்யப்பட உள்ளது.

    கோவை,

    கோவை மாவட்டத்தில் வருகிற 20-ந் தேதி (சனிக்கிழமை) பராமரிப்பு பணி காரணமாக சில இடங்களில் மின் தடை செய்யப்பட உள்ளது. அதன் விவரம் வருமாறு:-

    முத்துக்கவுண்டன் புதூர் துணை மின் நிலையத்தில் வருகிற 20-ந் தேதி பராமரிப்பு பணி நடைபெறுவதால் அங்கிருந்து மின் வினியோகம் பெறும் பகுதிகளுக்கு காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் வினியோகம் தடை செய்யப்படுகிறது. அதன்படி நீலாம்பூர், அண்ணா நகர், லட்சுமி நகர், குளத்தூர், முத்துக்கவுண்டன் புதூர் ரோடு, பைபாஸ் ரோடு ஒரு பகுதி, குரும்ப பாளையம் ஒரு பகுதி ஆகிய இடங்களில் மின் வினியோகம் தடை செய்யப்படுகிறது.

    உக்கடம் துணை மின் நிலையத்தில் இருந்து மின் வினியோகம் பெறும் பகுதிகளுக்கு 20-ந் தேதி காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் தடை செய்யப்படுகிறது. அதன்படி வெரைட்டி ஹால் ரோடு பகுதி, டவுன்ஹால் பகுதி, தியாகி குமரன் மார்க்கெட், ஒப்பணக்கார வீதி, செல்வபுரம், கெம்பட்டி காலனி பகுதிகள், கரும்புக்கடை, ஆத்துப்பாலம், உக்கடம், சுங்கம் பைபாஸ் ரோடு, சண்முகா நகர், ஆல்வின் நகர், இந்திரா நகர், பாரி நகர் மற்றும் டாக்டர் முனிசாமி நகர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள், ஸ்டேட் பேங்க் ரோடு, கலெக்டர் அலுவலகம், ரெயில் நிலையம் பகுதிகள், அரசு மருத்துவமனை, லாரிப்பேட்டை, உக்கடம் பகுதிகளில் மின் தடை செய்யப்பட உள்ளது.

    நெடுஞ்சாலைத்துறை மூலம் உக்கடத்தில் நடைபெறும் மேம்பால பணிகள் விரைவாக முடிக்கும் பொருட்டு உயர் அழுத்த மின் கோபுரம் மற்றும் மின் பாதைகளை அகற்றி புதியதாக அமைக்கப்பட்டு உள்ள 110 கி.வோ. புதைவட கேபிள் பணிகள் மேற்கொள்ள வேண்டியுள்ளதால் மின் வினியோகம் நிறுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    சூலூர் துணை மின் நிலையத்தில் இருந்து மின் வினியோகம் பெறும் பகுதிகளுக்கு 20-ந் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் வினியோகம் தடை செய்யப்பட உள்ளது. சூலூர், டி.எம். நகர், ரங்கநாதபுரம், எம்.ஜி.புதூர், பி.எஸ். நகர், கண்ணம் பாளையம், காங்கேயம் பாளையம், ராவத்தூர் பகுதிகளில் அன்று மின் தடை செய்யப்பட உள்ளது. 

    • டிப்பர் லாரி சாலையில் கவிழ்ந்து. டிரைவர் கோவிந்தராஜின் 2 கால்களும் முறிந்தது.
    • பின்னர் ஜே.சி.பி வாகனம் மூலம் சாலையின் நடுவே இருந்த 2 லாரிகளையும் அப்புற ப்படுத்தினர்.

    குனியமுத்தூர்

    கோவை செட்டிப்பா ளையத்தை சேர்ந்தவர் மேகநாதன் (வயது 26). லாரி டிரைவர். இவரது லாரியில் கிளீனராக வடசித்தூரை சேர்ந்த செந்தில்குமார் என்பவர் வேலை செய்து வருகிறார்.

    இன்று காலை மேகநாதன் மற்றும் செந்தில்குமார் லாரியில் சுந்தராபுரத்தில் இருந்து உக்கடம் நோக்கி வந்தனர். அப்போது சுந்தரா புரத்தை நோக்கி டிப்பர் லாரி ஒன்று வந்தது.டிப்பர் லாரியை திண்டு கல் மாவட்டம் நத்த த்தை சேர்ந்த கோவிந்த ராஜ் (27) என்பவர் ஓட்டி வந்தார்.

    இந்த நிலையில் குறிஞ்சி குளம் அருகே வந்த போது 2 லாரியும் நேருக்கு நேர் மோதியது. இதில் டிப்பர் லாரி சாலையில் கவிழ்ந்து. டிரைவர் கோவிந்தராஜின் 2 கால்களும் முறிந்தது. மற்றொரு லாரி டிரைவர் மேகநாதன் மற்றும் கிளீனர் செந்தில்குமாரும் பலத்த காயம் அடைந்தனர்.

    இதைகண்டு அதிர்ச்சி அடைந்த அந்த வழியாக சென்றவர்கள் அவர்களை மீட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

    இது குறித்து போலீசாருக்கு தக வல் தெரிவிக்கப்பட்டது.இதனையடுத்து போலீசா ர் மற்றும் தீய ணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

    பின்னர் ஜே.சி.பி வாகனம் மூலம் சாலையின் நடுவே இருந்த 2 லாரிகளையும் அப்புற ப்படுத்தினர். சாலையில் லாரி கவிழ்ந்ததால் அந்த பகுதியில் கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    உடனே போலீசார் போக்குவரத்தை சீர் செய்தனர். விபத்து குறித்து கிழக்கு போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பெரியகுளத்தில் 4 இருக்கைகள் கொண்ட 2 படகுகள், 2 இருக்கைகள் கொண்ட 1 படகு, 8 இருக்கைகள் கொண்ட மோட்டார் படகுடன் கூடிய படகு சவாரி மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.
    • குளத்திற்கு வரும் கழிவுநீரை சுத்தம் செய்ய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் என பல் வேறு சிறப்பு அம்சங்கள் ரூ.62.17 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ளது.

    கோவை:

    கோவை மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புனரமைக்கப்பட்டு நவீனப்படுத்தப்பட்ட உக்கம் பெரியகுளம், செல்வசிந்தாமணி குளம், வாலாங்குளத்தின் ஒரு பகுதி புரைமைக்கப்பட்டு வரும் குமாரசாமி மற்றும் செல்வம்பதி குளத்தின் ஒரு பகுதி ஆகியவற்றை மாதகராட்சி நிர்வாகம் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தது.

    இதில் உக்கடம் பெரிய குளத்தின் கரையின் மீது நடைபயிற்சி பாதை, இருக்கைகள், நிழற்குடைகள். விளையாட்டுத் திடல், உணவுக்கூடங்கள், படகுத்துறை, மிதவை உணவகம், குளத்திற்கு வரும் கழிவுநீரை சுத்தம் செய்ய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் என பல் வேறு சிறப்பு அம்சங்கள் ரூ.62.17 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ளது.

    செல்வசிந்தாமணி குளம் ரூ.31.47 கோடி மதிப்பீடடிலும், வாலாங்குளம் குறுக்கே உள்ள சாலை பகுதி ரூ.24.31 கோடி மதிப்பீட்டில் புனரமைத்து மேம்படுத்தப்பட்டுள்ளது. வாலாங்குளத்தின் கரையானது ரூ.67.86 கோடி மதிப்பீட்டில் புனரமைத்து மேம்படுத்தப்பட்டுள்ளது.

    செல்வம்பதி மற்றும் குமாரசாமி குளங்கள் ரூ.31.25 கோடி மதிப்பீட்டில் புனரமைத்து மேம்படுத்தப்பட்டுள்ளது அனைத்து குளங்களிலும் பல்வேறு வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    இதில் உக்கடம் பெரியகுளத்தில் படகு சவாரி சோதனை ஓட்டம் நடைபெற்றது. அதன் பின்னர் நிரந்தரமாக பட சவாரி மேற்கொள்ள மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது:- உக்கடம் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தில் படகு சவாரி விரைவில் தொடங்கப்படும். இதற்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

    பெரியகுளத்தில் 4 இருக்கைகள் கொண்ட 2 படகுகன், 2 இருக்கைகள் கொண்ட 1 படகு, 8 இருக்கைகள் கொண்ட மோட்டார் படகு ஆகியவற்றுடன் படகு சவாரி மக்கள் பயன்பாட்டிற்கு இன்னும் ஒரு மாதத்தில் கொண்டு வரப்படும். இதில் மோட்டார் படகு தற்போது தயார் நிலையில் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

    ×