search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "trucks collide"

    • டிப்பர் லாரி சாலையில் கவிழ்ந்து. டிரைவர் கோவிந்தராஜின் 2 கால்களும் முறிந்தது.
    • பின்னர் ஜே.சி.பி வாகனம் மூலம் சாலையின் நடுவே இருந்த 2 லாரிகளையும் அப்புற ப்படுத்தினர்.

    குனியமுத்தூர்

    கோவை செட்டிப்பா ளையத்தை சேர்ந்தவர் மேகநாதன் (வயது 26). லாரி டிரைவர். இவரது லாரியில் கிளீனராக வடசித்தூரை சேர்ந்த செந்தில்குமார் என்பவர் வேலை செய்து வருகிறார்.

    இன்று காலை மேகநாதன் மற்றும் செந்தில்குமார் லாரியில் சுந்தராபுரத்தில் இருந்து உக்கடம் நோக்கி வந்தனர். அப்போது சுந்தரா புரத்தை நோக்கி டிப்பர் லாரி ஒன்று வந்தது.டிப்பர் லாரியை திண்டு கல் மாவட்டம் நத்த த்தை சேர்ந்த கோவிந்த ராஜ் (27) என்பவர் ஓட்டி வந்தார்.

    இந்த நிலையில் குறிஞ்சி குளம் அருகே வந்த போது 2 லாரியும் நேருக்கு நேர் மோதியது. இதில் டிப்பர் லாரி சாலையில் கவிழ்ந்து. டிரைவர் கோவிந்தராஜின் 2 கால்களும் முறிந்தது. மற்றொரு லாரி டிரைவர் மேகநாதன் மற்றும் கிளீனர் செந்தில்குமாரும் பலத்த காயம் அடைந்தனர்.

    இதைகண்டு அதிர்ச்சி அடைந்த அந்த வழியாக சென்றவர்கள் அவர்களை மீட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

    இது குறித்து போலீசாருக்கு தக வல் தெரிவிக்கப்பட்டது.இதனையடுத்து போலீசா ர் மற்றும் தீய ணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

    பின்னர் ஜே.சி.பி வாகனம் மூலம் சாலையின் நடுவே இருந்த 2 லாரிகளையும் அப்புற ப்படுத்தினர். சாலையில் லாரி கவிழ்ந்ததால் அந்த பகுதியில் கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    உடனே போலீசார் போக்குவரத்தை சீர் செய்தனர். விபத்து குறித்து கிழக்கு போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தர்மபுரியில் இன்று அதிகாலை 2 லாரிகள் மோதி விபத்துக்குள்ளானதில் 2 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    தர்மபுரி:

    ஆந்திர மாநிலத்தில் இருந்து முலாம் பழம் லோடு ஏற்றிக்கொண்டு மினிலாரி சேலம் நோக்கி சென்று கொண்டிருந்தது.

    இந்த லாரி இன்று அதிகாலை தேசிய நெடுஞ்சாலை பழைய தர்மபுரி அருகேயுள்ள தனியார் பள்ளி முன்பு வரும்போது டிரைவரின் கட்டுபாட்டை இழந்து சாலை நடுவே உள்ள சென்டர் மீடியன் மீது மோதியது.

    அப்போது மோதிய வேகத்தில் மினி லாரி மறு பக்கத்தில் சேலம்-கிருஷ்ணகிரி நோக்கி சென்ற லாரி மீது எதிர்பாராத விதமாக மோதி விபத்துக்குள்ளானது.

    இதில் மினிலாரியில் இருந்த ஆந்திர மாநிலம், சித்தூர் அடுத்துள்ள பகை மாரகுட்டை பகுதியை சேர்ந்த ரமேஷ் (வயது20), சந்தம் (20) ஆகிய 2 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் படுகாயம் அடைந்த லாரி டிரைவர்களான சேலம் மாவட்டம், எடப்பாடி அடுத்துள்ள பூலாம்பட்டி பகுதியை சேர்ந்த சிவக்குமார் (40), அய்யன்துரை (35) ஆகிய 2 பேருக்கும் பலத்த படுகாயம் ஏற்பட்டது.

    இதனை பார்த்த அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே படுகாயம் அடைந்த சிவக்குமார், அய்யன்துரை ஆகிய 2 பேரையும் மீட்டு தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துமனையில் சேர்க்கப்பட்டனர். மினிலாரியில் இருந்த முலாம் பழம் சாலையில் சிதறி கிடந்தது. மேலும் மினிலாரியின் முன்பகுதி சுக்கு நூறாக நொறுங்கியது. லாரியின் முன் பகுதியில் கண்ணாடி உடைந்து சேதம் அடைந்தது.

    இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த தர்மபுரி டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் பலியான ரமேஷ், சந்தம் ஆகிய 2 பேர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த விபத்தால் சேலம்-கிருஷ்ணகிரி சாலையில் இன்று அதிகாலை போக்குவரத்து பாதிக்கப்பட்டது. உடனே போலீசார் விபத்தில் சிக்கிய 2 வாகனத்தையும் மீட்டு அப்புறப்படுத்தினர். பின்னர் போக்குவரத்தை சரி செய்து வைத்தனர். இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இந்த சம்பவம் தொடர்பாக தர்மபுரி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சூளகிரி அருகே இன்று அதிகாலை கிரானைட் ஏற்றி வந்த லாரி பழுதாகி நின்றது. அந்த லாரி மீது மற்றொரு லாரி மோதிய விபத்தில் டிரைவர் படுகாயம் அடைந்தார்.
    சூளகிரி:

    தருமபுரி மாவட்டம் அரூரைச் சேர்ந்தவர் சங்கர் (வயது 40). இவர் திருச்சி மாவட்டம் புதுக்கோட்டையில் இருந்து ஓசூரில் உள்ள டி.வி.எஸ். நிறுவனத்திற்கு வண்டியின் உதிரிபாகங்களை லாரியில் ஏற்றி கொண்டு வந்து கொண்டிருந்தார்.

    இந்த லாரி இன்று அதிகாலை கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி சின்னாறு தேசிய நெடுஞ்சாலை பகுதி அருகே வந்தபோது ஒரே பனி மூட்டமாக இருந்தது. அப்போது ரோட்டோரம் ஜெகதேவியில் இருந்து சூளகிரிக்கு கிரானைட் கற்கள் ஏற்றி வந்த லாரி பழுதாகி நின்றது. அந்த லாரி மீது சங்கர் ஓட்டி வந்த லாரி எதிர்பாராதவிதமாக மோதி விபத்துக்குள்ளானது. இதில் சங்கருக்கு காயம் ஏற்பட்டது. உடனே அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து விபத்தில் காயம் அடைந்த டிரைவர் சங்கரை மீட்டு ஓசூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். 

    இந்த சம்பவம் குறித்து சூளகிரி போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் சூளகிரி பகுதி முழுவதுமாக இன்று காலை வரை சாலையில் எதிரே வருபவர்களை யார் என்ற தெரியாத அளவிற்கு பனி மூட்டமாக காணப்பட்டது. அப்போது சங்கர் ஓட்டி வந்த லாரியில் விளக்கு எரியவிட்டபடி வந்தும், ரோட்டோரத்தில் பழுதாகி நின்ற வாகனம் சரிவர தெரியாமல் அதன் மீது மோதி விபத்து ஏற்பட்டது தெரியவந்தது.
    விருத்தாசலம் அருகே லாரிகள் எதிர்பாராதவிதமாக திடீரென்று நேருக்கு நேர் மோதியதில் டிரைவர்கள் உள்பட 3 பேர் பலியாகினர்.
    விருத்தாசலம்:

    நாமக்கல் மாவட்டத் தில் இருந்து பிராய்லர் கோழிகளை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி நோக்கி புறப்பட்டது. அந்த லாரியை குறிஞ்சிப்பாடியை சேர்ந்த டிரைவர் பழனிவேல்(வயது 40) ஓட்டிவந்தார். அந்த லாரியில் குறிஞ்சிப்பாடியை சேர்ந்த பாபு(22), பிருத்திவிராஜ்(22), சரத்(20) ஆகியோரும் வந்தனர்.

    அந்த லாரி இன்று அதிகாலை 3 மணியளவில் கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள அரசக்குழி பகுதியில் வந்து கொண்டிருந்தது. இதே நேரத்தில் நெய்வேலியில் இருந்து நிலக்கரி ஏற்றிக்கொண்டு மற்றொரு லாரி ஒன்று அதே பகுதியில் வந்தது. அந்த லாரியை அரியலூர் மாவட்டம் கீழபழுர் பகுதியை சேர்ந்த டிரைவர் மகாலிங்கம்(49) ஓட்டிவந்தார்.

    இந்த 2 லாரிகளும் எதிர்பாராதவிதமாக திடீரென்று நேருக்கு நேர் மோதி சாலையில் கவிழ்ந்தன. இந்த விபத்தில் லாரி டிரைவர்கள் மகாலிங்கம், பழனிவேல் மற்றும் பாபு ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தனர்.

    பிருத்திவிராஜ், சரத் ஆகிய 2 பேரும் லாரியின் இடிபாட்டிற்குள் சிக்கி பலத்த காயம் அடைந்தனர். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த ஊ.மங்கலம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து உயிருக்கு போராடி கொண்டிருந்த அவர்கள் 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    மேலும் பிராய்லர் கோழி ஏற்றி வந்த லாரியில் இருந்த 50 கோழிகளும் விபத்தில் சிக்கி இறந்தன. இந்த விபத்தினால் அந்த பகுதியில் 2 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    பின்னர் விபத்தில் சிக்கிய லாரிகளை பொக்லைன் எந்திரம் மூலம் போலீசார் அப்புறப்படுத்தினர். அதன்பின்னர் போக்குரத்து சீராகியது.


    காஞ்சீபுரம் அருகே லாரிகள் மோதலில் ஒருவர் பலியானார். இந்த சம்பவம் குறித்து பாலுசெட்டி சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    காஞ்சீபுரம்:

    சென்னையில் இருந்து வேலூர் நோக்கி இன்று அதிகாலை அலுமினிய பொருட்களை ஏற்றிக் கொண்டு மினி லாரி சென்றது. லாரியில் அதன் உரிமையாளர் வேலூர் சங்கர் பாளையத்தை சேர்ந்த சங்கர் (45) என்பவர் இருந்தார்.

    காஞ்சீபுரத்தை அடுத்த பாலுசெட்டி சத்திரம் கூட்டு ரோடு அருகே அதிகாலை 4 மணியளவில் மினி லாரி வந்து கொண்டு இருந்தது. அப்போது சாலையோரத்தில் நிறுத்தப்பட்டு இருந்த லாரியின் பின் பக்கத்தில் திடீரென மினி லாரி பயங்கரமாக மோதியது.

    இதில் மினி லாரியில் இருந்த சங்கர் சம்பவ இடத்திலேயே பலியானார். லாரியை ஓட்டிய டிரைவர் லேசான காயத்துடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

    இதுகுறித்து பாலுசெட்டி சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபாகரன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    ×