search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "driver injured"

    • கடலூர் அடுத்த வரக்கால்பட்டு சேர்ந்தவர் சுந்தரராமன்
    • கடலூர் - பாலூர் சாலையில் சென்று கொண்டிருந்தார்.

    கடலூர்:கடலூர் அடுத்த வரக்கால்பட்டு சேர்ந்தவர் சுந்தரராமன் (வயது 34). டிரைவர். சம்பவத்தன்று காராமணி குப்பத்திலிருந்து சுந்தரவாண்டி வழியாக கடலூர் - பாலூர் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது சாலை ஓரத்தில் இருந்த பெரிய அளவிலான மின்சார டிரான்ஸ்பார்மர் மீது பலத்த சத்தத்துடன் எதிர்பாராமல் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது. இதில் மின்கம்பம் முறிந்து டிரான்ஸ்பார்மர் கார் மீது விழுந்தது.இந்த விபத்து காரணமாக உடனடியாக அந்த பகுதியில் மின்தடை ஏற்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. மேலும் காரில் இருந்த டிரைவர் சுந்தர் ராமனுக்கு காயம் ஏற்பட்டது.

    இதனை தொடர்ந்து சுந்தர்ராமனை பொதுமக்கள் மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்குக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். நேற்று இரவு மின்சாரத்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும் அந்த பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் மின்தடை ஏற்பட்டது. பின்னர் மின் இணைப்பு வழங்கி நடவடிக்கை மேற்கொண்டனர். இது மட்டுமின்றி சேதமடைந்த டிரான்ஸ்பார்மர் மற்றும் மின்கம்பத்தை அகற்றி மின்சார துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இதுகுறித்து நெல்லிக்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தில் பெரும் பரபரப்பாக காணப்பட்டது.

    • திருப்பூர் மாவட்டம் காங்கேய த்துக்கு மற்றொரு லாரி சென்று கொண்டு இருந்தது.
    • 2 லாரிகளும் எதிர்பாராத விதமாக மோதி க்கொண்டன.

    சென்னிமலை, 

    மதுரையில் இருந்து ஒரு லாரி பழைய இரும்பு பொருட்களை ஏற்றி கொண்டு சென்னிமலை அருகே ஈங்கூரில் உள்ள ஒரு தனியார் இரும்பு தொழிற்சாலைக்கு லாரி சென்று கொண்டிருந்தது.

    இந்த லாரியை நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அருகே சோழசிராமணியை சேர்ந்த பழனிசாமி (வயது 39) என்பவர் ஓட்டி வந்தார். சென்னிமலை அருகே காங்கேயம் ரோட்டில் பசுவபட்டி பிரிவு என்ற இடத்தில் லாரி சென்று கொண்டு இருந்தது.

    அப்போது அந்த வழியாக திருப்பூர் மாவட்டம் காங்கேய த்துக்கு மற்றொரு லாரி சென்று கொண்டு இருந்தது. சென்னிமலை அருகே வந்த போது அந்த 2 லாரிகளும் எதிர்பாராத விதமாக மோதி க்கொண்டன.

    இந்த விபத்தில் 2 லாரிகளின் முன் பகுதியும் அப்பளம் போல் நொறுங்கி யது. இதில் இடிபாடுகளுக்கு இடையே லாரி டிரைவர் பழனிசாமியின் கால் சிக்கி கொண்டது. இதனால் காலை வெளியே எடுக்க முடியாமல் அவர் வலியால் அலறி துடித்தார்.

    உடனடியாக அக்கம் பக்கத்தினர் வந்து 20 நிமிடம் போராடி பழனிசாமியை மீட்டனர். காலில் காயம் ஏற்பட்டிருந்ததால் பழனிசாமியை மீட்டு அந்த பகுதியில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் சிகிச்சை க்காக சேர்த்தனர். விபத்து ஏற்பட்டதும் மற்றொரு லாரியின் டிரைவர் அங்கிரு ந்து தப்பி ஓடிவிட்டார்.

    இந்த விபத்து காரணமாக அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்க ப்பட்டது. இதுகுறித்து சென்னிமலை போலீசார் விசாரணை நடத்தி வரு கிறார்கள்.

    • கிராமத்தில் வசிக்கும் உறவினரிடம் இருந்த வைக்கோலை வாகனத்தின் மூலம் எடுத்து வந்தார்.
    • ராஜ் என்பவருக்கு லேசான தீக்காயத்துடன் அதிஷ்ட வசமாக உயிர் தப்பினார்.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள திம்மாபுரம் காட்டுக்கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் பொன்னு சாமி (வயது 50). இவர் வளர்க்கும் மாடு களுக்கு வைக்கோல் தேவைப்படு வதால் கள்ளக்குறிச்சி அருகே உள்ள தண்டலை கிராமத்தில் வசிக்கும் உறவினரிடம் இருந்த வைக்கோலை வாகனத்தின் மூலம் எடுத்து வந்தார். இந்த ஈச்சர் வாகனத்தை தண்ட லை கிராமத்தை சேர்ந்த செல்வராஜ் ஓட்டி வந்தார்.

    இந்நிலையில் பாண்டி யன்குப்பம் அருகே உள்ள திம்மாபுரம் காட்டுக் கொட்டாய் செல்லும் சாலையில் ஈச்சர் வாகனம் சென்று கொண்டிருந்த போது, மேலே சென்ற மின்சார கம்பி மீது எதிர் பாராத விதமாக வைக்கோல் உரசியது. இதில் திடீரென தீ பற்றி வைக்கோல் எரிந்தது.

    இது குறித்து சின்ன சேலம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் 2 மணி நேரத்திற்கு மேலாக போராடி தீயை அணைத்த னர். வைக்கோல் முழுவதும் எரிந்து நாசமாயின. இதன் மதிப்பு ரூ. 30 ஆயிரம் என கூறப்படுகிறது.

    தீயணைப்பு வீரர்கள் உடனடியாக தீயை அணைத்த தால் ஈச்சர் வாகனம் அதிக சேதம் இல்லாமல் தப்பித்தது. இதில் வாக னத்தை ஓட்டி வந்த செல்வ ராஜ் என்பவருக்கு லேசான தீக்காயத்துடன் அதிஷ்ட வசமாக உயிர் தப்பினார். பின்னர் அவர் சின்னசேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப் பட்டார். இதுகுறித்து சின்ன சேலம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • டிரைவர் படுகாயம்
    • போலீசார் விசாரணை

    வாணியம்பாடி:

    திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி, நாட்டறம் பள்ளி, திம்மாம்பேட்டை, அம்பலூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தினசரி டன் கணக்கில் ஆந்திர மாநிலத்திற்கும், கர்நாடக மாநிலத்திற்கும் அரிசி கடத்த பட்டு வருகிறது.

    இந்த அரிசி ரெயில்கள் மூலமாகவும், மினிலாரி, மோட்டார் சைக்கிளில் மூலமாக வெளிமாநிலத்திற்கு கடத்தப்பட்டு வந்தது.

    தற்போது வாணியம்பாடியில் இருந்து தனியார் மினி பஸ்களில் கடத்தல் அதிகரித்து வந்தது, இந்த நிலையில் வாணியம்பாடி அடுத்த தும்பேரி கூட்டு ரோடு பகுதியில் நேற்று காலை ரேசன் அரிசி மூட்டைகளை தனியார் மினி பஸ்ஸில் ஏற்ற ஒரு பிரிவினர் வந்தனர். அப்போது பஸ்ஸின் டிரைவர் நாகலிங்கம் (வயது 25)என்பவர் அரிசி மூட்டைகளை ஏற்ற முடியாது என மறுத்ததாக கூறப்படுகிறது.

    இதனால் ஆத்திரம் அடைந்த அரிசி மூட்டை ஏற்ற வந்த குமார் மற்றும் ஆதரவாளர்கள் நாகலிங்கத்தை சரமாரியாக தாக்கி உள்ளனர். எங்களுடைய அரிசி மூட்டைகளை மற்றும் ஏன் ஏற்ற மறுக்கிறீர்கள், மற்றவர்கள் மூட்டைகளை மட்டும் எப்படி எடுத்துச் செல்லலாம் எனக்கூறி தாக்கியதாக கூறப்படுகிறது.

    இதில் படுகாயம் அடைந்த டிரைவர் நாகலிங்கம் உடனடியாக வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

    இச்சம்பவம் குறித்து அம்பலூர் போலீசில் அவர் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தமிழக ஆந்திர எல்லையில் உள்ள வெலிதிகமாணிபெண்டா வழியாக அதிகமாக அரிசி கடத்தல் தொடர்ந்து வருகிறது. இந்த மலைக்கு போகும் வழியில் வனத்துறை செக் போஸ்ட் ஒன்றும் , காவல்துறை செக்போஸ்ட் 3 இருந்தும், தொடர்ந்து கடத்தல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சம்பந்தப்பட்ட மாவட்ட நிர்வாகம், காவல்துறை நிர்வாகம் இதன்மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • திடிரென கண்டெய்னர் லாரியின் முன்னால் சென்ற லாரியின் டிரைவர் சடன் பிரேக் போட்டார்.
    • கண்டெய்னர் லாரியை ஓட்டிச் சென்ற டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து முன்னால் சென்ற லாரியின் பின்னால் வேகமாக மோதியது.

    கடலூர்:

    விழுப்புரம் மாவட்டம் ஓமந்தூர் பகுதியை சேர்ந்தவர் முருகன் டிரைவர். இவர் நேற்று இரவு திண்டிவனத்தில் இருந்து லாரியில் சவுக்கு மரக்கட்டைகளை ஏற்றிக்கொண்டு திருச்சி செல்லும் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது ராமநத்தம் அருகே சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கண்டெய்னர் லாரி ஒன்று முன்னால் சென்றது. திடிரென கண்டெய்னர் லாரியின் முன்னால் சென்ற லாரியின் டிரைவர் சடன் பிரேக் போட்டார்.

    இதனால் கண்டெய்னர் லாரியை ஓட்டிச் சென்ற டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து முன்னால் சென்ற லாரியின் பின்னால் வேகமாக மோதியது. இதனை தொடர்ந்து அதன் பின்னால் சவுக்கு மர கட்டைகளை ஏற்றி சென்ற லாரி கண்டெய்னர் லாரி மீது மோதியது லாரியின் முன் பக்கம் அப்பளம்போல் நொருங்கியது. 2 லாரிகள் ஒன்றன் மீது ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியது. இந்த விபத்தில் சவுக்கு கட்டைகளை ஏற்றி சென்ற லாரியின் டிரைவர் முருகன் பலத்த படுகாயம் காயங்களுடன் உயிருக்கு போராடிய நிலையில் லாரியின் இடுபாடுகளில் சிக்கிக்கொண்டார்.

    இது குறித்து தகவல் அறிந்த ராமநத்தம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் கோபிநாத் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து லாரிகளின் இடிபாடுகளுக்குள் சிக்கி உயிருக்கு போராடிய லாரி டிரைவர் முருகனை 1 மணி நேரம் போராடி மீட்டு பெரம்பலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் விபத்தில் சிக்கிய லாரிகளை போலீசார் அப்புறப்ப டுத்தினர். இதனால் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்படைந்தது. இதனால் அந்த இடம் பரப்பாக இருந்தது.

    திருப்பூரில் நேற்று நள்ளிரவில் அரசு பஸ் மீது கல்வீசப்பட்டதில் டிரைவர் மற்றும் பயணிகள் காயம் அடைந்தனர்.
    திருப்பூர்:

    திருப்பூர் புதிய பஸ் நிலையத்தில் இருந்து நேற்று நள்ளிரவு 1 மணிக்கு திருச்சிக்கு அரசு பஸ் புறப்பட்டு சென்றது. இந்த பஸ்சை கரூரை சேர்ந்த டிரைவர் வெள்ளைச்சாமி ஓட்டி சென்றார்.

    இதில் 40 பயணிகள் பயணம் செய்தனர். பஸ் நல்லூர் அருகே உள்ள பள்ளக்காட்டு புதூர் பகுதியில் சென்று கொண்டு இருந்தது.

    அப்போது அங்கு நின்று கொண்டிருந்த வாலிபர் திடீரென பஸ் மீது கல் வீசினார். இதில் முன் பக்க கண்ணாடி உடைந்து சிதறியது. இந்த கண்ணாடி டிரைவர் வெள்ளைச்சாமி மற்றும் பஸ்சில் பயணம் செய்த ஒரு பெண், இரு குழந்தைகள் மீது விழுந்தது.

    இதில் அவர்கள் படுகாயம் அடைந்தனர். கண்ணாடி டிரைவர் மீது விழுந்ததும் பஸ் கட்டுப்பாட்டை இழந்தது. சுமார் 500 அடி தூரம் தாறுமாறாக ஓடியது. டிரைவர் சுதாரித்து கொண்டு பஸ் விபத்தில் சிக்காமல் சாதுர்யமாக செயல்பட்டு நிறுத்தினார்.

    இதனால் பஸ்சில் பயணம் செய்த பயணிகள் உயிர் தப்பினார்கள். கண்ணாடி உடைந்ததில் காயம் அடைந்த டிரைவர் உள்பட 4 பேரும் ஆஸ்பத்திரியில் முதலுதவி சிகிச்சை பெற்றனர்.

    விபத்து குறித்து நல்லூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் அங்கு விரைந்து வந்தனர். பஸ் கல் வீசப்பட்ட பகுதியில் ஒரு திருமண மண்டபம் உள்ளது. அங்கு திருமணம் நடைபெற்றது. இதில் கலந்து கொள்ள ஏராளமானோர் வந்து இருந்தனர்.

    அவர்கள் தான் கல் வீசி இருக்கலாம் என போலீசார் சந்தேகித்தனர். இது தொடர்பாக திருமணத்திற்கு வந்த 10 பேரை பிடித்து விசாரித்தனர்.

    அப்போது பஸ் மீது கல் வீசியது திருப்பூர் ராக்கியா பாளையத்தை சேர்ந்த கல்லூரி மாணவர் மனோஜ் குமார் (20) என்பது தெரிய வந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.

    அவர் எதற்காக பஸ் மீது கல்வீசினார். குடிபோதையில் வீசினாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    அரூர் அருகே முருக பக்தர்கள் சென்ற வேன் நிலை தடுமாறி கவிழ்ந்த விபத்தில் டிரைவர் உள்பட 3 பேர் காயம் அடைந்தனர்.
    அரூர்:

    ஈரோடு மாவட்டம் பெருந்துறை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த முருக பக்தர்கள் அறுபடைவீடு முருகன் கோவில்களுக்கு சுற்றுலா செல்ல முடிவு செய்தனர். இதற்காக ஒரு வேனில் 21 பக்தர்கள் பெருந்துறையில் இருந்து புறப்பட்டு திருத்தணி முருகன் கோவிலுக்கு சென்று கொண்டு இருந்தனர்.

    இன்று அதிகாலை தருமபுரி மாவட்டம் அரூரை அடுத்த தீர்த்தமலை அருகே உள்ள ஆண்டியூர் என்ற பகுதியில் செல்லும்போது வேன் நிலை தடுமாறி கவிழ்ந்தது.

    இந்த விபத்தில் மூர்த்தி (வயது 51) என்ற பக்தருக்கு கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. காளிதாஸ் மற்றும் டிரைவர் ஆகியோர் பலத்த காயம் அடைந்தனர். மற்றவர்களுக்கு லேசான காயம் ஏற்பட்டது. இவர்கள் அரூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் கோட்டப்பட்டி, சின்னாங்குப்பம் மற்றும் திருவண்ணாமலை மாவட்டம் இளங்கோணி ஆகிய பகுதிகளில் இருந்து மூன்று 108 ஆம்புலன்சுகள் வந்து காயம் அடைந்த பக்தர்களை ஏற்றி அரூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
    சூளகிரி அருகே இன்று அதிகாலை கிரானைட் ஏற்றி வந்த லாரி பழுதாகி நின்றது. அந்த லாரி மீது மற்றொரு லாரி மோதிய விபத்தில் டிரைவர் படுகாயம் அடைந்தார்.
    சூளகிரி:

    தருமபுரி மாவட்டம் அரூரைச் சேர்ந்தவர் சங்கர் (வயது 40). இவர் திருச்சி மாவட்டம் புதுக்கோட்டையில் இருந்து ஓசூரில் உள்ள டி.வி.எஸ். நிறுவனத்திற்கு வண்டியின் உதிரிபாகங்களை லாரியில் ஏற்றி கொண்டு வந்து கொண்டிருந்தார்.

    இந்த லாரி இன்று அதிகாலை கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி சின்னாறு தேசிய நெடுஞ்சாலை பகுதி அருகே வந்தபோது ஒரே பனி மூட்டமாக இருந்தது. அப்போது ரோட்டோரம் ஜெகதேவியில் இருந்து சூளகிரிக்கு கிரானைட் கற்கள் ஏற்றி வந்த லாரி பழுதாகி நின்றது. அந்த லாரி மீது சங்கர் ஓட்டி வந்த லாரி எதிர்பாராதவிதமாக மோதி விபத்துக்குள்ளானது. இதில் சங்கருக்கு காயம் ஏற்பட்டது. உடனே அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து விபத்தில் காயம் அடைந்த டிரைவர் சங்கரை மீட்டு ஓசூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். 

    இந்த சம்பவம் குறித்து சூளகிரி போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் சூளகிரி பகுதி முழுவதுமாக இன்று காலை வரை சாலையில் எதிரே வருபவர்களை யார் என்ற தெரியாத அளவிற்கு பனி மூட்டமாக காணப்பட்டது. அப்போது சங்கர் ஓட்டி வந்த லாரியில் விளக்கு எரியவிட்டபடி வந்தும், ரோட்டோரத்தில் பழுதாகி நின்ற வாகனம் சரிவர தெரியாமல் அதன் மீது மோதி விபத்து ஏற்பட்டது தெரியவந்தது.
    தொப்பூர் மலைப்பாதையில் இன்று கன்டெய்னர் லாரி கவிழ்ந்த விபத்தில் டிரைவர் காயம் அடைந்தார்.
    தருமபுரி:

    தருமபுரி மாவட்டம் தொப்பூர் மலைப்பாதையில் சமீப காலமாக விபத்துக்கள் அதிக அளவில் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக வளைவாக உள்ள தொப்பூர் கணவாய் பகுதியில் லாரி மற்றும் வாகனங்கள் கவிழ்வது தொடர்கதையாகி விட்டது. சில வாரங்களுக்கு முன்பு கேஸ் டேங்கர் லாரி, 2 கார்கள் மற்றும் இன்னொரு லாரியும் மோதி தீப்பிடித்தது. இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. அதன்பிறகு லாரி கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது. இதனால் விடிய விடிய போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இந்த நிலையில் இன்று காலை கன்டெய்னர் லாரி ஒன்று கவிழ்ந்தது. இதுபற்றிய விவரம் வருமாறு:-

    உத்தரபிரதேசம் மாநிலத்தில் இருந்து கழிப்பறை மற்றும் கண்ணாடியை சுத்தம் செய்யும் திராவகத்தை ஏற்றிக்கொண்டு கன்டெய்னர் லாரி ஒன்று கேரள மாநிலம் கொச்சிக்கு சென்று கொண்டு இருந்தது. இந்த லாரியை உத்தரபிரதேச மாநிலம் பாஸ்பரஅள்ளி பகுதியை சேர்ந்த முதீஷ் (வயது 35) ஓட்டி வந்தார். மாற்று டிரைவராக சத்பீர் இருந்தார்.

    இந்த லாரி இன்று காலை 6.30 மணிக்கு தொப்பூர் கணவாய் பகுதியில் திருப்பத்தில் சென்றபோது டிவைரின் கட்டுப்பாட்டை இழந்து ரோட்டு ஓரத்தில் கவிழ்ந்தது. இதில் டிரைவர் முதீஷ் காயமடைந்து தொப்பூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்று வருகிறார். மாற்று டிரைவர் சத்பீர் காயங்கள் எதுவும் இல்லாமல் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். 

    ரோட்டு ஓரத்தில் லாரி கவிழ்ந்ததால் பெரிய அளவில் போக்குவரத்து பாதிக்கப்படவில்லை. கவிழ்ந்த லாரியில் திராவகம் இருந்தது. நல்லவேளை தீப்பிடிக்கவில்லை. அப்படி தீப்பிடித்து இருந்தால் மிகப்பெரிய அளவில் சேதம் ஏற்பட்டு இருக்கும்.
    ஒரத்தநாடு அருகே நிழற்குடை மீது வேன் மோதி டிரைவர் படுகாயம் அடைந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஒரத்தநாடு:

    மன்னார்குடி ராதாகிருஷ்ணன் நகர் பகுதியை சேர்ந்தவர் சசிகுமார் (வயது 40). இவர் கோழி ஏற்றி செல்லும் லோடு வேன் டிரைவராக வேலை பார்த்து வருகிறார்.

    இந்த நிலையில் நேற்று இரவு ஒரத்தநாட்டில் கோழி ஏற்றுவதற்காக மன்னார்குடியில் இருந்து புறப்பட்டார். அப்போது ஒரத்தநாடு அருகே உள்ள கக்கரை கிராமம் கீழரோடு அருகே அவர் சென்று கொண்டிருந்த போது அவர் ஓட்டி சென்ற லோடு வேன் நிலை தடுமாறி அந்த பகுதியில் இருந்த பயணிகள் நிழற்குடையின் மீது மோதியது.

    இதில் சசிகுமார் காலில் பலத்த காயம் ஏற்பட்டது. மேலும் லோடு ஆட்டோவின் முன்பகுதியில் சேதமானது. உடனே அக்கம் பக்கத்தினர் அங்கு வந்து சசிகுமாரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது குறித்து ஒரத்தநாடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடலூரில் இன்று அதிகாலை தடுப்பு சுவரில் லாரி மோதி டிரைவர் படுகாயம் அடைந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #accident

    கடலூர்:

    சென்னையை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 48). லாரி டிரைவர். இவர் நேற்று மாலை பொருட்களை ஏற்றுவதற்காக காரைக்காலில் இருந்து புதுவை நோக்கி லாரியில் புறப்பட்டார்.

    கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் உள்ள சிதம்பரம் சாலையில் இன்று அதிகாலை லாரி வந்து கொண்டிருந்தது. அப்போது அங்கு சாலையின் நடுவே இருந்த தடுப்பு சுவர் மீது திடீரென லாரி மோதியது.

    இந்த விபத்தில் லாரியின் முன்பக்கம் பலத்த சேதம் அடைந்தது. டிரைவர் ஆறுமுகம் காயம் அடைந்தார். தகவல் அறிந்த திருப்பாதிரிப்புலியூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விபத்து நடந்த இடத்தை பார்வையிட்டனர். விபத்தில் சிக்கிய லாரியை ராட்சத கிரேன் மூலம் மீட்டனர்.

    இந்த விபத்தால் கடலூர்-சிதம்பரம் சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. போலீசார் போக்குவரத்தை சரி செய்தனர். விபத்து குறித்து கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடலூர் சிதம்பரம் சாலையில் உள்ள கோஆப்டெக்ஸ் அலுவலகம் அருகே சாலையின் நடுவே கடந்த சில நாட்களுக்கு முன்பு தேசிய நெடுஞ்சாலைத் துறை சார்பாக புதிதாக தடுப்பு சுவர் அமைக்கப்பட்டது. ஆனால் இந்த தடுப்பு சுவர் மீது எந்த ஒரு பிரதிபலிப்பானும் பொருத்தப்படவில்லை. இதனால் இந்த தடுப்பு சுவரால் ஏராளமான விபத்துக்கள் நடைபெற்று வருகிறது. நேற்று ஒரு லாரியும் தடுப்புசுவர் மீது மோதியது.

    இந்த விபத்துக்களை தடுக்க தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் புதிதாக கட்டப்பட்ட தடுப்பு சுவர் மீது பிரதிபலிப்பான் பொருத்த வேண்டும். கடலூர்- சிதம்பரம் சாலை வழியாக செல்லும் வாகன ஓட்டிகளுக்கு தடுப்பு கட்டை இருப்பதை அறிவுறுத்தவேண்டும் என்று பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    வாணியம்பாடி அருகே ஓடும் பஸ்சின் கண்ணாடி உடைந்து டிரைவர் உள்பட 10 பேர் காயமடைந்தனர்.
    வாணியம்பாடி:

    ஓசூரில் இருந்து சென்னை நோக்கி அரசு பஸ் இன்று காலை பயணிகளுடன் புறப்பட்டது. பஸ்சினை கிருஷ்ணகிரியை சேர்ந்த முரளி வேந்தன் (வயது 40) டிரைவர் ஓட்டி வந்தார்.

    வாணியம்பாடி தேசிய நெடுஞ்சாலையில் செட்டியப்பனூர் கூட்ரோடு அருகே பஸ் வந்து கொண்டிருந்த போது திடீரென பஸ்சின் முன்பக்க கண்ணாடி உடைந்து தூள்தூளாக சிதறியது.

    இதில் பஸ் டிரைவர் முரளி வேந்தன் படுகாயமடைந்தார். பயணிகள் 10 பேர் லேசான காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இது குறித்து தகவலறிந்த வாணியம்பாடி தாலுகா போலீசார் காயமடைந் தவர்களை மீட்டு வாணியம்பாடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ×