search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஓடும் பஸ்சின் கண்ணாடி திடீரென உடைந்து நொறுங்கியது- டிரைவர் உள்பட 10 பேர் படுகாயம்
    X

    ஓடும் பஸ்சின் கண்ணாடி திடீரென உடைந்து நொறுங்கியது- டிரைவர் உள்பட 10 பேர் படுகாயம்

    வாணியம்பாடி அருகே ஓடும் பஸ்சின் கண்ணாடி உடைந்து டிரைவர் உள்பட 10 பேர் காயமடைந்தனர்.
    வாணியம்பாடி:

    ஓசூரில் இருந்து சென்னை நோக்கி அரசு பஸ் இன்று காலை பயணிகளுடன் புறப்பட்டது. பஸ்சினை கிருஷ்ணகிரியை சேர்ந்த முரளி வேந்தன் (வயது 40) டிரைவர் ஓட்டி வந்தார்.

    வாணியம்பாடி தேசிய நெடுஞ்சாலையில் செட்டியப்பனூர் கூட்ரோடு அருகே பஸ் வந்து கொண்டிருந்த போது திடீரென பஸ்சின் முன்பக்க கண்ணாடி உடைந்து தூள்தூளாக சிதறியது.

    இதில் பஸ் டிரைவர் முரளி வேந்தன் படுகாயமடைந்தார். பயணிகள் 10 பேர் லேசான காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இது குறித்து தகவலறிந்த வாணியம்பாடி தாலுகா போலீசார் காயமடைந் தவர்களை மீட்டு வாணியம்பாடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×