search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "van collapsed"

    உளுந்தூர்பேட்டை அருகே வேன் கவிழ்ந்த விபத்தில் 13 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    உளுந்தூர்பேட்டை:

    தஞ்சை மாவட்டம் மனோஜ்பட்டியை சேர்ந்த செல்வகுமார் (வயது41) உள்பட 15 பேர் ஒரு வேனில் சென்னையில் நடந்த துக்க நிகழ்ச்சிக்கு சென்று இருந்தனர். வேனை அதே பகுதியை கதிரேசன் என்பவர் ஓட்டி சென்றார்.

    துக்க நிகழ்ச்சியை முடித்து விட்டு நேற்று இரவு 9 மணி அளவில் அவர்கள் சொந்த ஊருக்கு புறப்பட்டனர். இன்று அதிகாலை 3 மணி அளவில் வேன் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள ஆசனூர் தொழிற்பேட்டை பகுதியில் வந்து கொண்டிருந்தது.

    அப்போது திடீரென்று வேன்டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி சாலை ஓரம் உள்ள தடுப்பு கட்டையில் மோதி கவிழ்ந்தது.

    இந்த விபத்தில் வேனில் இருந்த செல்வகுமார், விஜயா(52), லட்சுமி(42), ராணி(52) இலஞ்சியம்(50), கனக வள்ளி((50), கலைசெல்வி(40)வேன் டிரைவர் கதிரேசன் உள்பட 13 பேர் படுகாயம் அடைந்தனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் எடைக்கல் போலீசார் விரைந்து சென்று விபத்தில் காயம் அடைந்தவர்களை மீட்டு உளுந்தூர் பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

    செம்பனார்கோவிலில் வேன் கவிழ்ந்த விபத்தில் 20 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    தரங்கம்பாடி:

    நாகை மாவட்டம் திருக்கடையூர் கோவிலில் நேற்று திருச்சியை சேர்ந்த மதிவாணன்-ரஞ்சனி ஆகியோரின் 60-ம் கல்யாணம் நடந்தது. இதில் கலந்து கொள்வதற்காக அவரது உறவினர்கள் 19 பேர் ஒரு வேனில் வந்தனர். வேனை திருச்சியை சேர்ந்த டிரைவர் செபஸ்டின்ராஜி என்பவர் ஓட்டி வந்துள்ளார்.

    பின்னர் திருமணம் முடிந்து அனைவரும் திருச்சிக்கு வேனில் திரும்பினர். அப்போது செம்பனார் கோவில் பகுதியில் வேன் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த ஒரு வீட்டின் சுவற்றில் மோதி கவிழ்ந்தது. இதில் வேனில் வந்த கரூரை சேர்ந்த கதிர்வேல், இவரது மனைவி கோமதி, திருச்சி காட்டூரை சேர்ந்த பழனிசாமி, இவரது மனைவி சரோஜா, அதே ஊரை சேர்ந்த பழனிவேல், இவரது மனைவி நாகேஸ்வரி, திண்டுக்கல்லை சேர்ந்த உமாதேவி(60), இவரது கணவர் ஓய்வு பெற்ற போலீஸ் ஏட்டு சுரேஷ், டிரைவர் செபஸ்டின்ராஜி உள்பட 20 பேரும் படுகாயமடைந்தனர்.

    தகவலறிந்து வந்த பொறையார் போலீசார் விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த உமாதேவியை(60) திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வைத்தனர்.

    இச்சம்பவம் குறித்து இன்ஸ்பெக்டர் மணிமாறன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
    அரூர் அருகே முருக பக்தர்கள் சென்ற வேன் நிலை தடுமாறி கவிழ்ந்த விபத்தில் டிரைவர் உள்பட 3 பேர் காயம் அடைந்தனர்.
    அரூர்:

    ஈரோடு மாவட்டம் பெருந்துறை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த முருக பக்தர்கள் அறுபடைவீடு முருகன் கோவில்களுக்கு சுற்றுலா செல்ல முடிவு செய்தனர். இதற்காக ஒரு வேனில் 21 பக்தர்கள் பெருந்துறையில் இருந்து புறப்பட்டு திருத்தணி முருகன் கோவிலுக்கு சென்று கொண்டு இருந்தனர்.

    இன்று அதிகாலை தருமபுரி மாவட்டம் அரூரை அடுத்த தீர்த்தமலை அருகே உள்ள ஆண்டியூர் என்ற பகுதியில் செல்லும்போது வேன் நிலை தடுமாறி கவிழ்ந்தது.

    இந்த விபத்தில் மூர்த்தி (வயது 51) என்ற பக்தருக்கு கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. காளிதாஸ் மற்றும் டிரைவர் ஆகியோர் பலத்த காயம் அடைந்தனர். மற்றவர்களுக்கு லேசான காயம் ஏற்பட்டது. இவர்கள் அரூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் கோட்டப்பட்டி, சின்னாங்குப்பம் மற்றும் திருவண்ணாமலை மாவட்டம் இளங்கோணி ஆகிய பகுதிகளில் இருந்து மூன்று 108 ஆம்புலன்சுகள் வந்து காயம் அடைந்த பக்தர்களை ஏற்றி அரூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
    ஜெயங்கொண்டம் அருகே வேன் கவிழ்ந்த விபத்தில் 25 பேர் படுகாயம் அடைந்தனர். துக்க நிகழ்ச்சிக்கு சென்ற போது இந்த சம்பவம் நடந்துள்ளது.
    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் மாவட்டம்குரு வாலப்பர் கோவில்தெருவை சேர்ந்தவர் ரங்கநாதன். இவரது மகள் மாலதி. இவர் பெரம்பலூர் குன்னம் அருகே உள்ள கல்லை கிராமத்தில் வசித்து வருகிறார். இந் நிலையில் ரங்கநாதன் கடந்த வாரம் இறந்தார். இது தொடர்பாக நேற்று இரவு துக்க நிகழ்ச்சி வைக்கப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சிக்காக மாலதி தனது உறவினர்கள் சுமார் 30 பேரை அழைத்துக் கொண்டு ஓலைப்பாடியைச் சேர்ந்த வேன் ஒன்றில் புறப்பட்டு செந்துறை வழியாக குரு வாலப்பர் கோவிலுக்கு சென்று கொண்டிருந்தனர். 

    அப்போது ஜெயங்கொண்டம் அருகே வாரியங்காவல் - குவாகம் பிரிவு பாதை அருகே செல்லும் போது எதிர்பாராத விதமாக சாலை ஓரத்தில் வேன் கவிழ்ந்தது. இதில் வேனில் பயணம் செய்த கல்லை கிராமத்தை சேர்ந்த மாலதி கணவர் நாராயணசாமி (60), வசந்தா,கொளஞ்சி அம்மாள், ராணி,திலகவதி, ராசாயாள்,சந்திரலேகா, சுகுணா , சின்னம்மாள், சின்ன பிள்ளை , பூங்கொடி உள்ளிட்ட சுமார் 25 பேர் படுகாயமடைந்தனர். 

    இது குறித்து தகவல் அறிந்ததும் ஜெயங்கொண்டம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயம் அடைந்த 25 பேரை மீட்டு சிகிச்சைக்காக ஜெயங் கொண்டம் அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர். அங்கு அனைவரும் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இது குறித்து ஜெயங்கொண்டம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
    திருவையாறு அருகே இன்று காலை ரோட்டில் வேன் கவிழ்ந்த விபத்தில் 40 தொழிலாளர்கள் படுகாயம் அடைந்தனர்.

    திருவையாறு:

    அரியலூர் மாவட்டம் கரைவெட்டி பரதூரை சேர்ந்த 40 விவசாய தொழிலாளர்கள் இன்று காலை திருவையாறுக்கு வேலைக்கு செல்ல ஒரு வேனில் புறப்பட்டனர். கரைவெட்டி பரதூர் கிராமம் திருவையாறுக்கு அருகில் உள்ளது. இதனால் இவர்கள் தினமும் வாகனங்களில் திருவையாறுக்கு வேலைக்கு வந்து செல்வது வழக்கம்.

    இதேபோல் இன்று காலையும் சுமார் 40 பேர் வேனில் திருவையாறுக்கு வந்து கொண்டிருந்தபோது கஸ்தூரிபாய் நகரில் அருகில் சாலையின் குறுக்கே ஒரு நாய் திடீரென ஓடியதால் வேன் டிரைவர் திடீர் பிரேக் போட்டுள்ளார். இதில் வேன் நிலை தடுமாறி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அப்போது வேனில் இருந்த 40 பேரும் வேனுக்குள் சிக்கி படுகாயமடைந்தனர். இதைக்கண்ட அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு உடனடியாக திருவையாறு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதில் முதலுதவி சிகிச்சைக்குப்பின் 10 பேர் மட்டும் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு மேல்சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். தகவலறிந்த திருவையாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    கொடுமுடி அருகே இன்று பக்தர்கள் சென்ற வேன் ரோட்டில் கவிழ்ந்த விபத்தில் 10 பேர் காயம் அடைந்தனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கொடுமுடி:

    ஈரோடு மாவட்டம் சென்னிமலை, நம்பியூர், கீரனூர் ஆகிய பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் ஈரோட்டில் இருந்து ராமேசுவரம் கோவிலுக்கு வேனில் புறப்பட்டு சென்றனர்.

    கோவிலில் தரிசனம் முடித்துவிட்டு அவர்கள் நேற்று ஈரோட்டுக்கு திரும்பி வந்து கொண்டு இருந்தனர். அவர்கள் வந்த வேனை சென்னிமலையை சேர்ந்த சத்யராஜ் (வயது 26) என்பவர் ஓட்டி வந்தார்.

    இன்று அதிகாலை 2 மணி அளவில் அந்த வேன் கொடுமுடி அருகே கரூர்- ஈரோடு நெடுஞ்சாலையில் வாழநாயக்கன்பாளையம் பிரிவில் வந்து கொண்டிருந்தது.

    திடீரென அங்கு வைக்கப்பட்டிருந்த டிவைடர் மீது மோதிய வேன் ரோட்டில் கவிழ்ந்தது. வேனில் தூங்கிக் கொண்டு இருந்த பக்தர்கள் விபத்து காரணமாக வேனுக்குள் சிக்கி சத்தமிட்டனர்.

    அக்கம் பக்கத்தினர் அங்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். கொடுமுடி போலீசாருக்கும் இதுபற்றிய தகவல் தெரியவந்தது. அவர்களும் சம்பவ இடத்துக்கு வந்தனர்.

    வேனின் இடிபாடுகளுக் குள் சிக்கிய பக்தர்கள் மீட்கப்பட்டனர். இந்த விபத்தில் வேனை ஓட்டி வந்த டிரைவர், பக்தர்கள் உள்பட 10 பேர் காயம் அடைந்தனர்.

    1. சத்யராஜ் (26),

    2. குமராயாள் (48),

    3. ஜெயந்தி (28),

    4. கண்ணம்மாள் (20),

    5. அருக்காயி (60),

    6. லட்சுமணன் (23),

    7. சண்முகம் (50),

    8. சாந்தி (40),

    9. மீனா (23).

    இன்னொருவர் பெயர் விவரம் தெரியவில்லை.

    காயம் அடைந்தவர்கள் அனைவரும் கொடுமுடி அரசு ஆஸ்பத்திரிக்கு 108 ஆம்புலன்சு மூலமாக அனுப்பி வைக்கப்பட்டனர்.

    பின்னர் அவர்கள் ஈரோட்டில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து கொடுமுடி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். 

    பண்ருட்டி அருகே வேன் கவிழ்ந்த விபத்தில் 10 பக்தர்கள் படுகாயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    பண்ருட்டி:

    நாகை மாவட்டம் பெருஞ்சேரி பகுதியை சேர்ந்த 30-க் கும் மேற்பட்ட பக்தர்கள் விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலுக்கு ஒரு வேனில் புறப்பட்டனர்.

    அந்த வேன் இன்று காலை 10 மணி அளவில் கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள மேல்மாம்பட்டு பஸ் நிறுத்தம் அருகே வந்து கொண்டிருந்தது. அப்போது அந்த பகுதியில் மொபட்டில் வந்த ஒருவர் திடீரென சாலையை கடக்க முயன்றார்.

    இதை சற்றும் எதிர்பாராத வேன் டிரைவர் அவர் மீத மோதாமல் இருப்பதற்காக திடீர் பிரேக்போட்டார். அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தவேன் ரோட்டில் தாறுமாறாக ஓடி தலைகுப்புற கவிழ்ந்தது.

    இந்த விபத்தில் வேனின் இடிபாடுகளுக்குள் சிக்கி திருவாரூரை சேர்ந்த முரளி (வயது 44), அவரது மனைவி தையல் நாயகி (35), மகள் தனுஸ்ரீ (6), நாகை மாவட்டத்தை சேர்ந்த சுஜாதா (35), அவரது மகள் அனுஸ்ரீ (1), ரேணுகா (27), பத்மாவதி (55) உள்பட 10 பேர் படுகாயம் அடைந்தனர்.

    இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த காடாம்புலியூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விபத்தில் படுகாயம் அடைந்த 10 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    இந்த விபத்தினால் அந்த பகுதியில் சிறிதுநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்துக்குள்ளான வேனை பொக்லைன் எந்திரம் மூலம் போலீசார் அப்புற படுத்தினர். அதன் பின்னர் போக்குவரத்து சீரானது. இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடையம் அருகே இன்று வேன் கவிழ்ந்த விபத்தில் வாலிபர் மற்றும் கைக்குழந்தை பரிதாபமாக உயரிழந்தது. குற்றாலத்துக்கு சுற்றுலா சென்றபோது இந்த துயர சம்பவம் நடந்துள்ளது.

    தென்காசி:

    நெல்லை மேலப்பாளையம் அருகேயுள்ள தருவையை சேர்ந்தவர் முத்துசெல்வம் (வயது25) . கூலி தொழிலாளியான இவர் தனது குடும்பத்தினருடன் இன்று காலை ஒரு வேனில் குற்றாலத்துக்கு சுற்றுலா சென்றார். அந்த வேன் கடையம் அருகேயுள்ள திரவியபுரம் பகுதியில் சென்றபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்து ரோட்டோரம் நின்ற மரத்தில் மோதி கவிழ்ந்தது.

    இதில் வேனில் இருந்த முத்துச்செல்வம் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார். மேலும் வேனில் இருந்த பாலமுருகன் என்பவரின் ஒரு வயது குழந்தை பிரீத்தி பாலா உள்பட 6 பேர் பலத்த காயம் அடைந்தனர். இதுபற்றி கடையம், பாவூர்சத்திரம் போலீஸ் நிலையங்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று காயமடைந்தவர்களை மீட்டு தென்காசி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அவர்களில் குழந்தை பிரீத்தி பாலா ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே பரிதாபமாக இறந்தது. காயம் அடைந்த சுகன்யா(15), புவனேஷ்(13), முத்துச்செல்வி(23), வான்மதி(19), பால்மாரி(10) ஆகிய 5 பேருக்கும் தென்காசி அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    இதில் சுகன்யா உடல்நிலை மோசமாக இருந்ததால் மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைக்கப்பட்டார். பலியான முத்துசெல்வம், பிரீத்திபாலா உடல்களை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தார்கள்.

    இந்த விபத்து குறித்து பாவூர்சத்திரம் போலீசார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×