என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
உளுந்தூர்பேட்டை அருகே வேன் கவிழ்ந்து 13 பேர் படுகாயம்
உளுந்தூர்பேட்டை:
தஞ்சை மாவட்டம் மனோஜ்பட்டியை சேர்ந்த செல்வகுமார் (வயது41) உள்பட 15 பேர் ஒரு வேனில் சென்னையில் நடந்த துக்க நிகழ்ச்சிக்கு சென்று இருந்தனர். வேனை அதே பகுதியை கதிரேசன் என்பவர் ஓட்டி சென்றார்.
துக்க நிகழ்ச்சியை முடித்து விட்டு நேற்று இரவு 9 மணி அளவில் அவர்கள் சொந்த ஊருக்கு புறப்பட்டனர். இன்று அதிகாலை 3 மணி அளவில் வேன் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள ஆசனூர் தொழிற்பேட்டை பகுதியில் வந்து கொண்டிருந்தது.
அப்போது திடீரென்று வேன்டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி சாலை ஓரம் உள்ள தடுப்பு கட்டையில் மோதி கவிழ்ந்தது.
இந்த விபத்தில் வேனில் இருந்த செல்வகுமார், விஜயா(52), லட்சுமி(42), ராணி(52) இலஞ்சியம்(50), கனக வள்ளி((50), கலைசெல்வி(40)வேன் டிரைவர் கதிரேசன் உள்பட 13 பேர் படுகாயம் அடைந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் எடைக்கல் போலீசார் விரைந்து சென்று விபத்தில் காயம் அடைந்தவர்களை மீட்டு உளுந்தூர் பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்