search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பண்ருட்டி அருகே கோவிலுக்கு சென்ற வேன் கவிழ்ந்து 10 பக்தர்கள் படுகாயம்
    X

    பண்ருட்டி அருகே கோவிலுக்கு சென்ற வேன் கவிழ்ந்து 10 பக்தர்கள் படுகாயம்

    பண்ருட்டி அருகே வேன் கவிழ்ந்த விபத்தில் 10 பக்தர்கள் படுகாயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    பண்ருட்டி:

    நாகை மாவட்டம் பெருஞ்சேரி பகுதியை சேர்ந்த 30-க் கும் மேற்பட்ட பக்தர்கள் விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலுக்கு ஒரு வேனில் புறப்பட்டனர்.

    அந்த வேன் இன்று காலை 10 மணி அளவில் கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள மேல்மாம்பட்டு பஸ் நிறுத்தம் அருகே வந்து கொண்டிருந்தது. அப்போது அந்த பகுதியில் மொபட்டில் வந்த ஒருவர் திடீரென சாலையை கடக்க முயன்றார்.

    இதை சற்றும் எதிர்பாராத வேன் டிரைவர் அவர் மீத மோதாமல் இருப்பதற்காக திடீர் பிரேக்போட்டார். அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தவேன் ரோட்டில் தாறுமாறாக ஓடி தலைகுப்புற கவிழ்ந்தது.

    இந்த விபத்தில் வேனின் இடிபாடுகளுக்குள் சிக்கி திருவாரூரை சேர்ந்த முரளி (வயது 44), அவரது மனைவி தையல் நாயகி (35), மகள் தனுஸ்ரீ (6), நாகை மாவட்டத்தை சேர்ந்த சுஜாதா (35), அவரது மகள் அனுஸ்ரீ (1), ரேணுகா (27), பத்மாவதி (55) உள்பட 10 பேர் படுகாயம் அடைந்தனர்.

    இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த காடாம்புலியூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விபத்தில் படுகாயம் அடைந்த 10 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    இந்த விபத்தினால் அந்த பகுதியில் சிறிதுநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்துக்குள்ளான வேனை பொக்லைன் எந்திரம் மூலம் போலீசார் அப்புற படுத்தினர். அதன் பின்னர் போக்குவரத்து சீரானது. இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×