என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
திருவையாறு அருகே ரோட்டில் வேன் கவிழ்ந்து 40 தொழிலாளர்கள் படுகாயம்
திருவையாறு:
அரியலூர் மாவட்டம் கரைவெட்டி பரதூரை சேர்ந்த 40 விவசாய தொழிலாளர்கள் இன்று காலை திருவையாறுக்கு வேலைக்கு செல்ல ஒரு வேனில் புறப்பட்டனர். கரைவெட்டி பரதூர் கிராமம் திருவையாறுக்கு அருகில் உள்ளது. இதனால் இவர்கள் தினமும் வாகனங்களில் திருவையாறுக்கு வேலைக்கு வந்து செல்வது வழக்கம்.
இதேபோல் இன்று காலையும் சுமார் 40 பேர் வேனில் திருவையாறுக்கு வந்து கொண்டிருந்தபோது கஸ்தூரிபாய் நகரில் அருகில் சாலையின் குறுக்கே ஒரு நாய் திடீரென ஓடியதால் வேன் டிரைவர் திடீர் பிரேக் போட்டுள்ளார். இதில் வேன் நிலை தடுமாறி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அப்போது வேனில் இருந்த 40 பேரும் வேனுக்குள் சிக்கி படுகாயமடைந்தனர். இதைக்கண்ட அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு உடனடியாக திருவையாறு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதில் முதலுதவி சிகிச்சைக்குப்பின் 10 பேர் மட்டும் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு மேல்சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். தகவலறிந்த திருவையாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்