என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
ஒரத்தநாடு அருகே நிழற்குடை மீது வேன் மோதி டிரைவர் படுகாயம்
ஒரத்தநாடு:
மன்னார்குடி ராதாகிருஷ்ணன் நகர் பகுதியை சேர்ந்தவர் சசிகுமார் (வயது 40). இவர் கோழி ஏற்றி செல்லும் லோடு வேன் டிரைவராக வேலை பார்த்து வருகிறார்.
இந்த நிலையில் நேற்று இரவு ஒரத்தநாட்டில் கோழி ஏற்றுவதற்காக மன்னார்குடியில் இருந்து புறப்பட்டார். அப்போது ஒரத்தநாடு அருகே உள்ள கக்கரை கிராமம் கீழரோடு அருகே அவர் சென்று கொண்டிருந்த போது அவர் ஓட்டி சென்ற லோடு வேன் நிலை தடுமாறி அந்த பகுதியில் இருந்த பயணிகள் நிழற்குடையின் மீது மோதியது.
இதில் சசிகுமார் காலில் பலத்த காயம் ஏற்பட்டது. மேலும் லோடு ஆட்டோவின் முன்பகுதியில் சேதமானது. உடனே அக்கம் பக்கத்தினர் அங்கு வந்து சசிகுமாரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து ஒரத்தநாடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்