என் மலர்

    தஞ்சாவூர்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 365 மனுக்கள் பெறப்பட்டது.
    • மனுக்கள் மீது மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளை மனுதாரருக்கு தெரிவிக்க வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டர் தீபக் ஜேக்கப் தலைமையேற்று பேசியதாவது:-தஞ்சாவூர் மாவட்டத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, குடும்ப அட்டை, பட்டா மாற்றம், கல்வி கடன் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 365 மனுக்கள் பெறப்பட்டது. இந்த மனுக்களை விசாரணை செய்து உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும் மனுக்கள் மீது மேற்கொள்ளப்படும் நடவடிக்கை குறித்த விவரத்தை உடனடியாக மனுதாரருக்கு தெரிவிக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    அதனை தொடர்ந்து அவர் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்ட அடையாள அட்டையினை சமூக பாதுகாப்பு துறையின் கீழ் பதிவு பெற்று செயல்படும் டி.இ.எல்.சி நாசரேத் குழந்தைகள் இல்லத்தில் தங்கி பயிலும் குழந்தைகளுக்கு வழங்கினார்.

    இக்கூட்டத்தில் கூடுதல் கலெக்டர் (வருவாய்) சுகபுத்ரா, கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) ஸ்ரீகாந்த், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) தவவளவன், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் குளோரி குணசீலி, மாவட்ட திட்ட அலுவலர் விஜய் ஆனந்த் (முதலமைச்சர் விரிவான மருத்துவ காப்பீடு திட்டம்) மற்றும் அனைத்து அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தி.மு.க.வுக்கு துணை போகிறவர்களை அ.தி.மு.க. தொண்டர்கள் ஒருபோதும் ஏற்று கொள்ளமாட்டார்கள்.
    • முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினும், அமைச்சர் செந்தில்பாலாஜியும் பதவி விலக வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தமிழகத்தில் தொடரும் ஊழல் முறைகேடுகள், கள்ளச்சாராயம், போலி மதுபானங்களால் இறப்பு உள்ளிட்ட சட்டம்-ஒழுங்கு சீர்கேடுகளை கட்டுப்படுத்த தவறிய தி.மு.க. அரசை கண்டித்து தஞ்சை தெற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் தஞ்சை ரெயிலடியில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

    இதற்கு அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான காமராஜ் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். தெற்கு மாவட்ட அவைத் தலைவர் திருஞானசம்பந்தம், மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் துரை.திருஞானம், அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளர் ராமச்சந்திரன், மாவட்ட பால்வளத் தலைவர் காந்தி, மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் சி.வி.சேகர், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளர் ராஜமாணிக்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிக்கல்சன் கூட்டுறவு வங்கி தலைவர் சரவணன் வரவேற்றார்.

    யாராலும் வீழ்த்த முடியாது

    ஆர்ப்பாட்டத்தில் அமைப்பு செயலாளர் காமராஜ் எம்.எல்.ஏ. பேசியதாவது:-

    எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அ.தி.மு.க.வை அழிக்க பலர் நினைத்தனர். அ.தி.மு.க.வை வழிநடத்தக்கூடிய தகுதியோடு எடப்பாடி பழனிசாமி பொதுச் செயலாளராக ஆகி இருக்கிறார். எடப்பாடி பழனிசாமியையும், அ.தி.மு.க.வையும் வீழ்த்த முடியாது.

    தி.மு.க.வுக்கு துணை போகிறவர்களை அ.தி.மு.க. தொண்டர்கள் ஒருபோதும் ஏற்று கொள்ளமாட்டார்கள். அதனால் தான் ஓ.பன்னீர்செல்வம் போன்றவர்கள் வெளியேற்றப்பட்டார்கள்.

    தமிழகத்தில் கள்ளச்சாராயம் குடித்து 25 பேர் பலியாகி இருக்கிறார்கள். சாராய சாவுக்கு பொறுப்பு ஏற்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினும், அமைச்சர் செந்தில்பாலாஜியும் பதவி விலக வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

    கலந்து கொண்டவர்கள்

    இதில் ஒரத்தநாடு பேரூராட்சி தலைவர் மா.சேகர், மாவட்ட இணைச் செயலாளர் சாவித்திரி கோபால், மாவட்ட துணைச் செயலாளர் பொன்.முத்துவேல், மாவட்ட பொருளாளர் மகாலிங்கம், ஒன்றிய செயலாளர்கள் மதியழகன், துரை.செந்தில், துரைமாணிக்கம், தண்டாயுதபாணி, கல்யாணசுந்தரம், கோவி.இளங்கோ, மலை.முருகேசன், முருகானந்தம், அருணாச்சலம், சாமிவேல், கலியமூர்த்தி, முன்னாள் கோட்டை பகுதி செயலாளர் புண்ணியமூர்த்தி, முன்னாள் நகர செயலாளர் பஞ்சாபிகேசன், ஜெயலலிதா பேரவை மாவட்ட துணைத் தலைவர் பாலைரவி, 51-வது வட்ட செயலாளர் மனோகர், முன்னாள் விளார்ஊராட்சி மன்ற தலைவர் தம்பி என்ற சோமரத்தின சுந்தரம், கவுன்சிலர்கள் கோபால், தட்சிணாமூர்த்தி, கேசவன், கலைவாணி, காந்திமதி, எம்.ஜி.ஆர் மன்ற மாவட்ட ஒன்றிய பொருளாளர் தம்பிதுரை, அண்ணா தொழிற்சங்க கும்பகோணம்அரசு போக்குவரத்து கழக மண்டல செயலாளர் திரு நீலகண்டன் , அதிமுக பிரதிநிதிகள் ஏடி சண்முகசுந்தரம், நடராஜன்,மோகன் ,தங்க கண்ணன், முன்னாள் கவுன்சிலர் ஹேமா பூபதி, மாணவரணி முருகேசன், மாநில மருத்துவ அணி இணைச் செயலாளர் துறை கோ. கருணாநிதி, ஒன்றிய செயலாளர்கள் கோவிதனபால், ஆசைத்தம்பி, முன்னாள் ஒன்றிய செயலாளர் சிவ.ராஜேஷ் கண்ணன், விவசாய அணி துணை செயலாளர் சிவராமன், தொண்டராம்பட்டு முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினர் ஆசைத்தம்பி, பேரூராட்சி துணை தலைவர் மகேந்திரன் , தெலுங்கன் குடிக்காடு முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பஞ்சு, ராமச்சந்திரன், மாவட்ட பொருளாளர் மனோகரன், முன்னாள் நகரச் செயலாளர் செல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட அமைப்புசாரா ஓட்டுனர் அணி செயலாளர் நாகராஜன் நன்றி கூறினார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பொருளாதாரத்தில் பின்தங்கியிருக்கும் பெண்களுக்கு கற்றுக்கொடுத்து வருகிறார்.
    • மாதம் ரூ 20 ஆயிரம் வரை வருமானம் கிடைக்க தொடங்கியது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள பாலக்கரையை சேர்ந்தவர் சரவணன். அவரது மனைவி நாகலெட்சுமி (வயது 38). இவர்களுக்கு தீபஸ்ரீ என்ற மகள், சந்தோஷ் என்ற மகன் உள்ளனர். இந்த நிலையில் 10 ஆண்டுகளுக்கு முன்பு மின் விபத்து ஒன்றில் சரவணன் இறந்து விட்டார். குடும்பத்திற்கான வாழ்வாதாரமாக இருந்த கணவர் சரவணன் இறந்தது நாகலெட்சுமியை நிலை குலைய செய்தது.

    எதிர்காலம் என்னவாகும் என்ற துயரத்தில் தவித்தவரை கரை சேர்த்திருக்கிறது தஞ்சாவூர் ஓவியம். முறைப்படி தஞ்சாவூர் ஓவியம் செய்வதற்கு கற்றுக் கொண்டவருக்கு அதுவே வாழ்வாதாரமாகவும் மாறியது.

    தஞ்சாவூரின் அடையாளங்களில் ஒன்றான, அழியும் நிலையில் இருக்க கூடிய பாரம்பரிய கலையான தஞ்சாவூர் ஓவியம் செய்வதை தன்னை போல் பொருளாதாரத்தில் பின்தங்கியிருக்கும் பெண்களுக்கு முறையாக பயிற்சி தந்து கற்றுக் கொடுத்து வருகிறார். வருமானத்திற்கு வழியின்றி தவித்து நின்ற பல பெண்கள் இதன் மூலம் பலனடைந்து வருகின்றனர்.

    இது குறித்து நாகலெட்சுமி கூறியதாவது :-

    பத்து வருடங்களுக்கு முன்பு கணவர் இறந்து விட்டார். அவர் இருந்த வரை வீட்டு வாசலை கூட நான் தாண்டியதில்லை. திடீரென ஒரு நாள் எங்களை தவிக்க வைத்து மறைந்து விட்டார். ஆதரவாக இருக்க எந்த உறவும் முன்வரவில்லை. அனைத்தையும் பொறுத்து கொண்டு பிள்ளைகளுக்காக வாழத் தொடங்கினேன். அப்போது தான் கும்பகோணத்தில் தஞ்சாவூர் ஓவியம் செய்து வரும் சக்கரபாணி ஆர்ட்ஸ் உரிமையாளரான பன்னீர்செல்வம் என்பவரின் அறிமுகம் கிடைத்தது. பெண்களுக்கு தஞ்சாவூர் ஓவியம் வரைவதற்கு கற்றுத் தருகிறார். அவர் கம்பெனியில் என்னை போல் கணவரை இழந்த, கணவரால் கைவிடப்பட்ட பல பெண்களுக்கு பயிற்சி கொடுப்பதுடன், அவர்களுக்கு வேலை வாய்ப்பையும் உருவாக்கி தந்தார்.

    என் நிலையை அறிந்து கலை உலகிற்குள் அழைத்து சென்றார். எனக்கு முறைப்படி தஞ்சாவூர் ஓவியம் வரைவதற்கு கற்றுத் தந்தார். சில ஆண்டுகள் அங்கு வேலை செய்து வந்த நான் பின்னர் வீட்டிலேயே தனியாக தஞ்சாவூர் ஓவியம் தயாரிக்க தொடங்கினேன். மாதம் ரூ 20,000 வரை வருமானம் கிடைக்கத் தொடங்கியது. தற்போது மகள் 10-ம் வகுப்பும், மகன் 8-வதும் படிக்கின்றனர்.

    என்னைப் போல் கணவரை இழந்த, சரியான வாய்ப்பு கிடைக்காமல் வறுமையுடன் போராடி கொண்டிருப்ப வர்களுக்கு தஞ்சாவூர் ஓவியம் பயிற்சி கொடுக்க தொடங்கினேன். அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இது வரை ஐம்பதுக்கும் மேற்பட்ட பெண்களுக்கு கற்றுக் கொடுத்துள்ளேன். அவர்கள் பலரும் இன்றைக்கு கை நிறைய சம்பாதிக்கின்றனர். சொந்தக்காலில் நிற்க நினைக்கும் பெண்களுக்கு தஞ்சாவூர் ஓவியம் சிறந்த முறையில் கை கொடுக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கான்கிரீட் வீடுகளும் கட்டி கொடுத்து இலவச மின் இணைப்பும் வழங்கி நடவடிக்கை எடுத்தார்.
    • முன்னாள் கலெக்டர் தொடக்கி வைத்த செந்தமிழ் நகா் திட்டம் தொடர ஏற்பாடு செய்ய வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூா் மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப்பிடம், அம்மையகரம் ஏ.கே.ஆா். ரவிச்சந்தா் தலைமையில் தஞ்சாவூா் கலைஞா் நகரைச் சோ்ந்த விளிம்பு நிலை மக்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: தஞ்சாவூா் மாவட்டத்தில் விளிம்பு நிலை மக்களுக்காகச் செந்தமிழ் நகா் திட்டத்தை முன்னாள் மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் கொண்டு வந்து வீடுகள் கட்டிக் கொடுத்தாா். இந்த திட்டத்தில் இடம் தேர்வு செய்து இலவசமாக வீட்டு மனைப்பட்டா, சாலைவசதி, குடிநீர் வசதி, மின்சார வசதி ஆகியவை தயார் செய்து கான்கிரீட் வீடுகளும் கட்டி கொடுத்து இலவச மின் இணைப்பும் வழங்கி நடவடிக்கை எடுத்தார்.

    இதேபோல, கலைஞா் நகரைச் சோ்ந்த வீடு இல்லாத 48 குடும்பங்களைச் சோ்ந்த எங்களுக்கு திருக்கானூா்பட்டியில் தயாா் நிலையில் உள்ள செந்தமிழ்நகா் திட்டம் மூலம் இலவச மனைப் பட்டா வழங்கி இலவசமாக வீடுகள் கட்டித் தர வேண்டும். முன்னாள் கலெக்டர் தொடக்கி வைத்த செந்தமிழ் நகா் திட்டம் தொடர ஏற்பாடு செய்ய வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • எனது மகன், மருமகள் ஆகியோர் சேர்ந்து கொண்டு எங்களை அடித்து துன்புறுத்துகின்றனர்.
    • அரசால் வழங்கப்படும் மாத உதவி தொகையையும் அபகரித்து கொள்கின்றனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மானோஜிப்பட்டியை சேர்ந்த தாமஸ் மனைவி மலர்கொடி அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது :-

    எங்களுக்கு மனவளர்ச்சி குன்றிய மகள் உள்பட 3 மகள்கள், 1 மகன் உள்ளனர். எனது கணவர் தாமஸ் இறந்து 40 நாள் ஆகிறது. அவருக்கு செய்ய வேண்டிய சடங்குகளை கூட செய்யவில்லை. இந்நிலையில் எனது மகன், மருமகள் ஆகியோர் சேர்ந்து கொண்டு எங்களை அடித்து துன்புறுத்துகின்றனர். அரசால் வழங்கப்படும் மாத உதவி தொகையையும் அபகரித்து கொள்கின்றனர்.

    மேலும் வீட்டையும் அபகரித்து விட்டனர். எனவே மகனிடம் இருந்து வீட்டை மீட்டு தன்னிடம் ஒப்படைக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • திருவிழா கடந்த 15-ந்தேதி காலையில் கணபதி ஹோமமும், சக்தி பூஜையுடன் தொடங்கியது.
    • பக்தர்கள் சக்தி கரகம் எடுத்து முக்கிய வீதி வழியாக கோவிலை வந்தடைந்தனர்.

    மெலட்டூர்:

    பாபநாசம் தாலுக்கா கோடுகிழி திரவுபதி அம்மன் கோவிலில் தீமிதி திருவிழா நடைபெற்றது. 15 நாட்கள் நடைபெறும் கோயில் திருவிழா கடந்த 15-ந்தேதி காலையில் கணபதி ஹோமமும், சக்தி பூஜையுடன் தொடங்கியது .

    தீ மிதி விழாவை முன்னிட்டு நேற்று இரவு வெட்டாற்றின் கரையில் இருந்து பக்தர்கள் சக்தி கரகம் எடுத்து முக்கிய வீதி வழியாக கோவிலை வந்தடைந்தனர். பின்னர் கோவில் அருகே அமைக்கப்பட்டிருந்த தீக்குண்டத்தில் ஆண், பெண் பக்தர்கள் ஏராளமானோர் பக்தி பரவத்துடன் தீக்குழியில் இறங்கி தீமிதித்து நேர்த்தி கடன் செலுத்தினர்.

    அதனை தொடர்ந்து அம்பாள் ஊர்வலம் நடைபெற்றது. தீமிதி திருவிழாவுக்கான ஏற்பாடுகளை கோடுகிளி கிராமவாசிகள் செய்து இருந்தனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • 18 முதல் 30 வயதிற்கு உட்பட்டவர்கள் சுமார் 25 அணிகளாக கலந்து கொண்டனர்.
    • முதலிடம் பிடித்த அணியினருக்கு ரூ.50 ஆயிரம் ரொக்கம் மற்றும் கோப்பை வழங்கப்பட்டது.

    சுவாமிமலை:

    கும்பகோணம் கால்பந்து கழகம், சிட்டி யூனியன் வங்கி ஆகியவை இணைந்து நடத்திய மாநில அளவிலான எழுவர் கால்பந்தாட்ட போட்டி கும்பகோணம் நகர மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் 3 நாட்களாக நடைபெற்றது. கும்பகோணம் மாநகர தி.மு.க. செயலாளர் சு.ப.தமிழழகன், துணை போலீஸ் சூப்பிரண்டு மகேஷ்குமார் ஆகியோர் போட்டியை தொடங்கி வைத்தனர். இதில் தஞ்சாவூர், திருச்சி, கடலூர், புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 18 முதல் 30 வயதிற்கு உட்பட்டவர்கள் சுமார் 25 அணிகளாக கலந்து கொண்டு விளையாடினர்.

    போட்டியின் நிறைவு நாளில் பரிசளிப்பு விழா நடந்தது. விழாவிற்கு தஞ்சை வடக்கு மாவட்ட தி.மு.க. விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் பொறியாளர் சிவகுமார் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக கல்யாணசுந்தரம் எம்.பி., கும்பகோணம் மாநகர தி.மு.க. செயலாளர் சு.ப.தமிழழகன் ஆகியோர் கலந்து கொண்டு முதலிடம் பிடித்த சென்னை எண்ணூர் நடராஜ் மெமோரியல் கிளப் அணியினருக்கு ரூ.50 ஆயிரம் மற்றும் கோப்பை, 2-ம் இடம் பிடித்த கும்பகோணம் முரட்டு சிங்கிள் புட்பால் கிளப் அணியினருக்கு ரூ.30 ஆயிரம் மற்றும் கோப்பை, 3-ம் இடம் பிடித்த தஞ்சாவூர் அத்லெடிக்ஸ் புல்ஸ் அணியினருக்கு ரூ.20 ஆயிரம் மற்றும் கோப்பை, 4-ம் இடம் பிடித்த பாண்டிச்சேரி செலக்டேடு செவன்ஸ் அணியினருக்கு ரூ.10 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை வழங்கி வெற்றி பெற்றவர்களை பாராட்டினர்.

    விழாவில் ஓய்வு பெற்ற வருமான வரித்துறை ஊழியர் அசோக்குமார், தனியார் தொண்டு நிறுவனத்தை சேர்ந்த பாபு, லியோன் சேவியர், சென்னை போக்குவரத்து உதவி ஆய்வாளர் மூர்த்தி, தீயணைப்புத்துறை இளங்கோவன், நகர மேல்நிலைப்பள்ளி பழைய மாணவர்கள் சங்க செயற்குழு உறுப்பினர்கள் ரவிச்சந்திரன்,

    கண்ணன், பரமகுரு, தி.மு.க. தலைமை பொதுக்குழு உறுப்பினர் ராஜேந்திரன், சங்கர் மற்றும் பாலகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர். முன்னதாக முன்னாள் உடற்கல்வி ஆசிரியர் பாலகுரு போட்டியை தொகுத்து வழங்கினார்.

    முடிவில் உதயகுமார் நன்றி கூறினார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • லாரியுடன் தாலுகா போலீஸ் நிலையத்துக்கு வருமாறு அதனை ஓட்டி வந்த பழஞ்சூர் கிராமத்தை சேர்ந்த டிரைவர் நிஷாந்த்திடம் கூறினர்.
    • அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பட்டுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    பட்டுக்கோட்டை:

    தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை தாலுகா காவல் நிலைய போலீஸ்காரர்களான சரவணன், சதீஷ்குமார் ஆகிய இருவரும் மோட்டார் சைக்கிளில் சென்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். பட்டுக்கோட்டையில் இருந்து சேதுபாவாசத்திரம் செல்லும் வழியில் கார்காவயல் என்ற பகுதியில் செல்லும் போது சந்தேகத்திற்கிடமான வகையில் ஒரு மினி லாரியில் மணல் கடத்தி சென்றது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து அவர்கள் இருவரும் அந்த மினி லாரியின் முன்னால் மோட்டார் சைக்கிளை நிறுத்தி வழி மறித்தனர்.

    பின்னர் லாரியுடன் தாலுகா போலீஸ் நிலையத்துக்கு வருமாறு அதனை ஓட்டி வந்த பழஞ்சூர் கிராமத்தை சேர்ந்த டிரைவர் நிஷாந்த்திடம் கூறினர். ஆனால் இதனை கேட்காத நிஷாந்த் திடீரென லாரியை போலீசாரின் மோட்டார் சைக்கிளில் மோதி அவர்களை கொல்ல முயன்றார். பின்னர் அங்கிருந்து லாரியுடன் தப்பினார்.

    இந்த மோதலில் மோட்டார் சைக்கிளில் இருந்து போலீசார் சரவணன், சதீஷ்குமார் இருவரும் தடுமாறி விழுந்ததில் பலத்த காயம் ஏற்பட்டது. அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பட்டுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

    இது குறித்து சரவணன் கொடுத்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் புகழேந்தி வழக்குப்பதிவு செய்து லாரியின் உரிமையாளர் பண்ணவயல் கிராமத்தை சேர்ந்த ராஜாவை (வயது31) கைது செய்து லாரியை பறிமுதல் செய்தனர்.

    லாரியை ஓட்டி வந்த நிஷாந்தை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • 12-ம் நாள் கண்ணாடி பல்லக்கில் சுவாமியும், அம்பாளும், ஏழூர் பல்லக்கு புறப்படுவது வழக்கம்.
    • விசாக நட்சத்திரம் வரை 10 நாட்கள் வைகாசி மகா உற்சவம் நடைபெறும்.

    தஞ்சை அரண்மனை தேவஸ்தானத்துக்குட்பட்ட 88 கோவில்களில் ஒன்று கரந்தை கருணாசாமி கோவில் என்றழைக்கப்படும் வசிஷ்டேஸ்வரர் கோவில் ஆகும். பல்லவர் கால கரந்தை வசிஷ்டேஸ்வரர் கோவில், திருநாவுக்கரசரின் அடைவுத் திருத்தாண்டகப் பாடலில் குறிப்பிட பெற்ற சிறப்புடைய தலமாகும்.

    முதலாம் பராந்தக சோழன், உத்தம சோழன், முதலாம் ராஜராஜசோழன் காலத்திய கல்வெட்டுகள், இக்கோவிலில் காணப்படுகிறது. கரிகாலச்சோழனுக்கு கருணை பாலித்த இக்கோவிலில் இறைவனை சப்தரிஷிகளில் ஒருவரான வசிஷ்டர் வழிபட்டதால் வசிஷ்டேஸ்வரர் என்றும் கருணாசாமி, கருந்திட்டை மகாதேவன் என்றும் அழைக்கப்படுகிறார்.

    இந்த கோவிலில் தஞ்சையை ஆண்ட நாயக்க மன்னர்கள், மராட்டிய மன்னர்களால் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் வைகாசி மாதம் புனர்பூச நட்சத்திரம் தொடங்கி விசாக நட்சத்திரம் வரை 10 நாட்கள் வைகாசி மகா உற்சவம் நடைபெறும். உற்சவம் முடிந்து 11-வது நாளில் பிச்சாடனார் கரந்தையில் நான்கு வீதிகளில் வலம் வருவார்.

    பின்னர் 12-ம் நாள் கண்ணாடி பல்லக்கில் சுவாமியும், அம்பாளும், ஏழூர் பல்லக்கு புறப்படுவது வழக்கம். இந்த விழா கடந்த 1988-ம் ஆண்டு வரை அரண்மனை தேவஸ்தானத்தால் நடத்தப்பட்டு வந்தது. காலப்போக்கில் பல்வேறு காரணங்களால் இவ்விழா நடைபெறவில்லை. இதையடுத்து மீண்டும் ஏழூர் பல்லக்கு விழாவை நடத்திட வேண்டும் என பக்தர்கள் விடுத்த கோரிக்கையை ஏற்று கடந்த 24-ந் தேதி இவ்விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    தொடர்ந்து கண்ணாடி பல்லக்கில் சோமாஸ்கந்தர், பெரியநாயகிஅம்மன், சுந்தரர், தனி அம்மன், வெட்டிவேர் பல்லக்கில் வசிஷ்டர், அருந்ததி அம்மன் ஆகியோர் எழுந்தருளுகிறார்கள். இந்த பல்லக்குகள் வருகிற 4-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) கருந்தட்டான்குடி, வெண்ணாற்றங்கரை, பள்ளியக்ரஹாரம், திட்டை, குலமங்கலம், கூடலூர், குருங்கலூர், கடகடப்பை, உதாரமங்கலம், சித்தர்காடு, மாரியம்மன் கோவில், சின்ன அரிசிகாரத் தெரு, கீழவாசல், அரண்மனை, கீழவீதி, தெற்கு, மேலவீதி, வடக்கு வீதி, சிரேஸ் சத்திரம், பூக்குளம், செல்லியம்மன்கோவில் வழியாக கோவிலை சென்றடையும்.

    இந்த பல்லக்குகள் சப்தஸ்தான தலங்களான கரந்தை வசிஷ்டேஸ்வரர் கோவில், வெண்ணாற்றங்கரை தஞ்சபுரீஸ்வரர் கோவில், திட்டை வசிஷ்டேஸ்வரர் கோவில், கூடலூர் திருக்கூடலம்பதியான சொக்கநாதர் கோவில், கடகடப்பை ராஜராஜேஸ்வரர் கோவில், புன்னைநல்லூர் கைலாசநாதர் கோவில், கீழவாசல் பூமாலை வைத்தியநாதர் கோவில் ஆகிய ஏழு ஊர்களில் உள்ள கோவில்கள் வழியாக வலம் வரும். 34 ஆண்டுகளுக்குப்பிறகு இந்த ஏழூர் பல்லக்கு புறப்பாடு நடைபெறுகிறது.

    இவ்விழாவை சிறப்பாக நடத்துவது தொடர்பாக நேற்று வசிஷ்டேஸ்வரர் கோவிலில் ஆலோசனைக் கூட்டம் தஞ்சை அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா போன்ஸ்லே தலைமையில் நடைபெற்றது. இதில் குலமங்கலம் ரவி, சுங்கான்திடல் பாபு, பள்ளியக்ரஹாரம் ராஜ்குமார் மற்றும் அந்தந்த கிராம முக்கியஸ்தர்கள், கோவில் பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தமிழ்நாட்டில் மீன் குஞ்சு தேவைக்கு இன்னமும் ஆந்திரா உள்ளிட்ட பல மாநிலங்களை நம்பி இருக்க வேண்டிய நிலை உள்ளது.
    • எங்கேயாவது ரசாயன பொருட்களை பயன்படுத்தி மீன்களை பதப்படுத்தினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் .

    தஞ்சாவூர்:

    தஞ்சை கரந்தையில் உள்ள அரசு மீன் குஞ்சு உற்பத்தி மையத்தின் செயல்பாடுகள் மற்றும் மீன் குஞ்சுகளை பார்வையிட்டு அவற்றின் செயல்பாடுகளை மீன்வளம், மீனவர் நலத்துைறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பார்வையிட்டு கேட்டறிந்தார்.

    பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் மீன் குஞ்சு தேவைக்கு இன்னமும் ஆந்திரா உள்ளிட்ட பல மாநிலங்களை நம்பி இருக்க வேண்டிய நிலை உள்ளது. உள்நாட்டு மீன் உற்பத்தியை தமிழ்நாட்டில் உள்ள மீன் குஞ்சு பண்ணைகளை மேம்படுத்தி உற்பத்தியை அதிகரித்து மக்களுக்கு வழங்கும் வகையில் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. தற்போது 75 சதவீத மீன் குஞ்சுகளை தமிழகத்திலேயே உற்பத்தி செய்து விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

    மேலும் கடல் மீன்களும் சேர்த்து ரூ.6500 கோடி அளவிற்கு வெளிநாடுகளுக்கு மீன் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. மீன்பிடி தடை காலத்தில் மீனவர் குடும்பத்திற்கு தலா ரூ.5000 நிவாரணம் தரக்கூடிய திட்டத்தை முதலமைச்சர் கொடுத்துக் கொண்டுள்ளார். இன்னும் அதிகரித்து தர வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. இது குறித்து முதலமைச்சர் பரிசீலித்து நடவடிக்கை எடுப்பார்.

    எங்கேயாவது ரசாயன பொருட்களை பயன்படுத்தி மீன்களை பதப்படுத்தினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் .

    தஞ்சையில் கடல் பசு பாதுகாப்பு மையம் அமைப்பதற்கான ஆய்வு நடைபெற்று வருகிறது. அதற்கான நிதி பெறப்பட்டு பணிகள் தொடங்கப்படும். மல்லிப்பட்டினத்தில் தூண்டில் வளைவு அமைப்பது குறித்து அதிகாரிகளுடன் ஆய்வு செய்து அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo