என் மலர்
தஞ்சாவூர்
- ஒருமுறை மட்டும் லாபம் என்று ரூ.8860 மட்டும் அனுப்பி வைத்துள்ளனர்.
- பணம் அனுப்பிய வங்கி கணக்குகள் குஜராத் மாநிலத்தை சேர்ந்தவை என்பது தெரிய வந்தது.
தஞ்சாவூர்:
தஞ்சை மாவட்டம் பாபநாசம் பகுதியை சேர்ந்த 26 வயது நபர் சாப்ட்வேர் என்ஜினீயராக பணியாற்றி வருகிறார்.
இவரது செல்போனிற்கு டெலிகிராம் செயலி வாயிலாக ஒரு லிங்க் வந்தது. பின்னர் சலீம் முகமதுவை தொடர்பு கொண்டு பேசிய பெண் ஒருவர் ஆன்லைன் டிரேடிங்கில் பணம் முதலீடு செய்தால் நிறைய லாபம் கிடைக்கும் என்று தெரிவித்துள்ளார். பின்னர் இதற்காக பதிவு செய்து கொள்ள டெலிகிராமில் ஒரு லிங்கையும் அனுப்பி உள்ளார். இதனை உண்மை என்று நம்பிய என்ஜினீயர் கடந்த 15.11.2025 முதல் 20.11.2025 வரை 31 ஆன்லைன் பரிவர்த்தனைகள் மூலம் ரூ.9.63 லட்சத்தை அனுப்பியுள்ளார்.
இதில் ஒருமுறை மட்டும் லாபம் என்று ரூ.8860 மட்டும் அனுப்பி வைத்துள்ளனர். பல நாட்கள் கடந்த நிலையில் எவ்வித லாபத் தொகை வரவில்லை. இதுகுறித்து சலீம் முகமது அந்த டெலிகிராம் லிங்கில் தொடர்பு கொள்ள முயன்றுள்ளார். ஆனால் எவ்வித பதிலும் கிடைக்கவில்லை. இதையடுத்து சலீம் முகமது ரூ.9.54 லட்சத்தை தன்னிடம் இருந்து மோசடி செய்து விட்டனர் என்பதை உணர்ந்துள்ளார்.
இதுகுறித்து அவர் தஞ்சை மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். இதன் பேரில் இன்ஸ்பெக்டர் அறிவழகன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
இதில் பணம் அனுப்பிய வங்கி கணக்குகள் குஜராத் மாநிலத்தை சேர்ந்தவை என்பது தெரிய வந்தது. தொடர்ந்து அந்த வங்கிகளுக்கு தஞ்சாவூர் சைபர் கிரைம் போலீசார் மெயில் அனுப்பி விசாரித்ததில் 11 வங்கிகளில் இருந்து சம்பந்தப்பட்ட வங்கி கணக்கில் பணம் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- முத்துப்பேட்டை, தாமரங்கோட்டை, பெரியகோட்டை
- காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.
மதுக்கூர்:
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையை அடுத்த மதுக்கூர் பகுதியில் உள்ள துணை மின் நிலையத்தில் நாளை 18-ந்தேதி (புதன்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதை முன்னிட்டு இங்கிருந்து மின்சாரம் பெறும் பகுதிகளான மதுக்கூர் நகர், அத்திவெட்டி, கன்னியாகுறிச்சி, காடந்தகுடி, மூத்தாக்குறிச்சி, முத்துப்பேட்டை, தாமரங்ேகாட்டை, பெரியகோட்டை ஆகிய ஊர்களுக்கும் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கும் மின் விநியோகம் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை இருக்காது.
இத்தகவலை மதுக்கூர் மின்வாரிய உதவி செயற் பொறியாளர் சங்கரகுமார் தெரிவித்துள்ளார்.
- இன்றைய நவீன தமிழ்நாட்டை உருவாக்கியவர் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி.
- ஆட்சிக்கு வந்ததும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் போட்ட முதல் கையெழுத்து மகளிருக்கான அந்த ‘விடியல் பயண திட்டம்’.
பட்டுக்கோட்டை:
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் இன்று காலை நடைபெற்ற நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு முன்னாள் முதலமைச்சர்கள் அறிஞர் அண்ணா, கருணாநிதி சிலைகளை திறந்து வைத்தார். பின்னர் அவர் பேசியதாவது:-
இன்றைக்கு இந்த பட்டுக்கோட்டை நகரத்திலே இந்த அற்புதமான வாய்ப்பு கிடைத்ததற்கு உண்மையிலேயே நான் மிகுந்த பெருமை அடைகின்றேன், மகிழ்ச்சி அடைகின்றேன். கடந்த 10 நாட்களுக்கு முன்பு இதே தஞ்சை செங்கிப்பட்டியிலே முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி சிலையை திறந்து வைக்கின்ற வாய்ப்பையும் பெற்றேன்.
தஞ்சை மாவட்டம் தி.மு.க.வின் கோட்டை என்று சொன்னால் அது மிகையாகாது. இந்த டெல்டா பகுதி கருணாநிதி மனசுக்கும் சரி, அண்ணாவுடைய மனசுக்கும் மிகுந்த நெருக்கமான ஒரு பகுதி. நம்முடைய முதலமைச்சர் 'நானும் ஒரு டெல்டாக்காரன்' தான் என்று அடிக்கடி பெருமையாக சொல்வார். டெல்டா மாவட்டத்தில் கருணாநிதி செல்லாத இடங்களே இல்லை. திராவிட இயக்கத்துடைய போர்ப்படை தளபதியாக இருந்த பட்டுக்கோட்டை அழகிரியை தந்த மண் இந்த பட்டுக்கோட்டை மண். பட்டுக்கோட்டை அழகிரியின் பேச்சுகளையெல்லாம் கேட்டு திராவிட இயக்கத்திற்கு வந்தவர் தான் கருணாநிதி. கருணாநிதிக்கு 'கலைஞர்' என்ற அந்த பட்டப் பெயரை கொடுத்ததே. பட்டுக்கோட்டை அழகிரி தான்.
அண்ணா, கருணாநிதி சிலைகளை தமிழ்நாடு முழுவதும் நாம் திறக்கிறோம் என்றால் அவர்களுடைய கொள்கைகளை, லட்சியங்களை தமிழ்நாடு முழுக்க கொண்டு போய் சேர்க்கிறோம் என்று அர்த்தம்.
இன்றைய நவீன தமிழ்நாட்டை உருவாக்கியவர் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி. அவரது வழியில் நமது முதலமைச்சர் திராவிட மாடல் ஆட்சியை நடத்தி வருகிறார். ஆட்சிக்கு வந்ததும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் போட்ட முதல் கையெழுத்து மகளிருக்கான அந்த 'விடியல் பயண திட்டம்'. இதன் மூலம் தினமும் ஏராளமான மகளிர் பயனடைந்து வருகின்றனர்.
அதுமட்டுமின்றி மாணவர்களுக்கு காலை உணவு திட்டம், தமிழ் புதல்வன் திட்டம், புதுமைப்பெண் திட்டம், விலையில்லா மடிக்கணினி திட்டம் என்று பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார் முதலமைச்சர்.
தமிழ்நாட்டில் 1.31 கோடி மகளிர் மாதம் தோறும் ரூ.1,000 உரிமைத்தொகை பெற்று வருகின்றனர். சட்டமன்ற தேர்தலை காரணம் காட்டி மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை தடுத்து நிறுத்த சதி நடைபெறுவதை உணர்ந்து தான் முதலமைச்சர் முன்பணமாகவே கோடைக்கால சிறப்பு நிதியையும் சேர்த்து ரூ.5,000 ஆயிரம் வழங்கி உள்ளார். பொங்கல் பண்டிகைக்கும் ரூ.3,000 கொடுத்தார்.
மேலும் மீண்டும் தி.மு.க. ஆட்சி அமைந்ததும் மகளிர் உரிமைத்தொகையை ரூ.2,000 உயர்த்தி கொடுப்பேன் என வாக்குறுதி அளித்துள்ளார்.
இப்படி தமிழ்நாட்டு மக்களுக்காக திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறார் முதலமைச்சர். இதனால் தான் நமது மாநிலம் நம்பர் ஒன் மாநிலமாக உள்ளது. தமிழகத்தின் வளர்ச்சிக்கு மத்திய பா.ஜ.க. அரசு முட்டுக்கட்டை போட நினைக்கிறது. நமக்கான நிதியை தர மறுக்கிறது.
மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிக்கப்படுகிறது. ஆனால் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இதைப்பற்றி எல்லாம் மத்திய பா.ஜ.க. அரசிடம் கேள்வி கேட்க மறுக்கிறார்.
அவர் மத்திய அரசுக்கு அடிமையாக இருக்கிறார். அ.தி.மு.க. மற்றும் பா.ஜ.க. கூட்டணியை தமிழக மக்கள் நம்ப தயாராக இல்லை.
எனவே 200-க்கும் மேற்பட்ட தொகுதிகள் நமது கூட்டணி வென்று மீண்டும் தி.மு.க. ஆட்சி அமைவது உறுதி. அதற்கு கட்சியினர் வீடு வீடாக சென்று நமது ஆட்சியின் சாதனைகளை மக்களிடம் எடுத்து கூறி வாக்குகள் சேகரிக்க வேண்டும். அடுத்து வருகிற 50 நாட்கள் நாம் களத்தில் இறங்கி மக்களை சந்தித்து பிரசாரம் செய்ய வேண்டும். அதற்கு நாம் அனைவரும் அண்ணா, கருணாநிதி சிலைகள் முன்பு நின்று இன்று சபதம் ஏற்போம் என்பார்.
- மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
- நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது.
தஞ்சாவூர்:
தமிழ்நாடு மின்பகிர்மான கழக தஞ்சை புறநகர் உதவி செயற்பொறியாளர் ராஜமனோகரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தஞ்சை அருகே ஈச்சங்கோட்டை துணை மின் நிலையத்தில் நாளை (புதன்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மருங்குளம், ஈச்சங்கோட்டை, நடுவூர், சூரியம்பட்டி, இனாத்துக்கான்பட்டி, கொ.வல்லுண்டாம்பட்டு, கொல்லாங்கரை, வேங்கராயன்குடிகாடு, வடக்கூர், சாமிபட்டி, பொய்யுண்டார்கோட்டை, பாச்சூர், செல்லம்பட்டி, துறையூர், வாண்டையார் இருப்பு மடிகை, காட்டூர், காசாநாடுபுதூர், வாழமர்கோட்டை கரைமீண்டார்கோட்டை, சொக்கலை, மேல உளூர், கீழஉளூர், கோவிலூர், பொன்னாப்பூர்கிழக்கு மற்றும் மேற்கு, ஆழி வாய்க்கால், பஞ்சநதிக்கோட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களுக்கு மின்வினியோகம் இருக்காது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- நெல் உற்பத்தியில் இதுவரை செய்யாத சாதனையைச் செய்து காட்டியது தி.மு.க அரசு.
- தி.மு.க அரசு அமைந்ததற்கு பிறகு நெல் கொள்முதல் எவ்வளவு?
தஞ்சாவூா்:
தஞ்சையில் இன்று உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
நகர்ப்புற வளர்ச்சித்துறை சார்பில் பல்வேறு நலத்திட்டங்களை உருவாக்கி, தமிழக அரசுக்கு பெருமை சேர்க்கிற பணிகளைச் செய்து கொண்டிருந்தாலும், இன்றைய தினம் முதலமைச்சருடைய கருணை உள்ள திட்டமாக தூய்மைப் பணியாளர்களுக்கு காலை உணவுத் திட்டத்தை திருவள்ளூர் மாவட்டத்தில் முதலமைச்சர் தொடங்கி இருக்கிறார். தொடர்ந்து தமிழகம் முழுவதும் இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
இந்த நலத்திட்டம் மூலம் அனைத்து மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி தூய்மைப் பணியாளர்கள், தூய்மை காவலர்கள், டெங்கு நோய் பரவுவதைத் தடுப்பதற்குப் பணியாற்றுகிற உறுப்பினர்கள், ஓட்டுநர்கள் பயன்பெறுவர்.
இந்த மகிழ்வான திட்டத்தை அறிவித்து செயல்படுத்தி தூய்மை பணியாளர்கள், காவலர்களுக்கு 'வயிற்றில் பால் வார்த்ததை போல' என்று சொல்லுவார்கள். பால் வார்க்கவில்லை, உணவையும் வழங்கி அந்த மக்களுடைய உழைப்பின் திறனை ஊக்குவிக்கிற முயற்சி எடுத்திருக்கிற முதலமைச்சருக்கு அனைத்து தரப்பு மக்கள் சார்பாக என்னுடைய மனமார்ந்த நன்றியை, பாராட்டை, வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
நேற்று எடப்பாடி பழனிசாமி தஞ்சாவூரில் நெற்பயிர்கள் காய்கிறது என்று கூறியது வடிகட்டிய பொய். வடிகட்டிய பொய் என்று சொல்லுவதை விட வடிகட்டியதிலும் வடிகட்டிய பொய் என்று கூறினால் பொருத்தமாக இருக்கும். நெல் உற்பத்தியில் இதுவரை செய்யாத சாதனையைச் செய்து காட்டியது தி.மு.க அரசு.
வேண்டுமென்றால் அ.தி.மு.க ஆட்சியில் நெல் கொள்முதல் எவ்வளவு? தி.மு.க அரசு அமைந்ததற்கு பிறகு நெல் கொள்முதல் எவ்வளவு? அ.தி.மு.க ஆட்சியில் விளைவிக்கப்பட்ட நெல் அளவு எவ்வளவு? தி.மு.க அரசு அமைந்த பிறகு நெல் பயிரிடப்பட்ட அளவு எவ்வளவு? என்பதையெல்லாம் கணக்கிட்டுப் பார்த்தால் அபரிமித வளர்ச்சி அடைந்து தஞ்சை மாவட்டம் நெல் உற்பத்தியில் சாதனை படைத்திருக்கிறது என்பது தெரியும்.
இந்தத் தருணத்தில் எடப்பாடி பழனிசாமி சொல்லியிருப்பது வடிகட்டிய பொய். இதனை விவசாயிகளும், பொதுமக்களும் நம்ப மாட்டார்கள். பொய்யையே சொல்லிப் பழக்கப்பட்ட பழனிசாமி வேறு விதத்தில் பொய் சொல்லலாம். ஆனால் விவசாயிகளை ஏமாற்ற முடியாது என்றார்.
- திருப்பதி நகர், செல்வம் நகர், அண்ணமலை நகர், ஜெ.ஜெ.நகர், டிபிஎஸ் நகர், சுந்தரம் நகர்,
- மின்தடை தொடர்பாக பொதுமக்கள் 94987 94987 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
தஞ்சாவூா்:
தஞ்சாவூர் நகரிய மின்வாரிய உதவி செயற்பொறியாளர் விஜய் ஆனந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தஞ்சாவூர் மணிமண்டபம் துணை மின் நிலையத்தில் வருகிற 10-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதன் காரணமாக அருளானந்த நகர், பிலோமினா நகர், காத்தூண் நகர், சிட்கோ, அண்ணா நகர், காமராஜ் நகர், பாத்திமா நகர், அன்பு நகர், திருச்சி ரோடு, வ.உ.சி. நகர், பூக்கார தெரு, இருபது கண் பாலம், கோரி குளம், கணபதி நகர், ராஜப்பா நகர், மகேஸ்வரி நகர், திருப்பதி நகர், செல்வம் நகர், அண்ணமலை நகர், ஜெ.ஜெ.நகர், டிபிஎஸ் நகர், சுந்தரம் நகர்,
பாண்டியன் நகர், மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகம், கலெக்டர் பங்களா ரோடு, டேனியல் தாமஸ் நகர், ராஜராஜேஸ்வரி நகர், என்.எஸ்.போஸ் நகர், தென்றல் நகர், துளசியாபுரம், தேவன் நகர், பெரியார் நகர், இந்திரா நகர், கூட்டுறவு காலனி, நடராஜபுரம் காலனி தெற்கு, புதிய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, எலிசா நகர், முல்லை நகர், மருதம், நெய்தல், நட்சத்திரா நகர், வி.பி. கார்டன், ஆர்.ஆர்.நகர், சேரன் நகர், காவேரி நகர், நிர்மலா நகர், யாகப்பா நகர், குழந்தை இயேசு கோவில், பிஷப் காம்ப்ளக்ஸ் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது. மின்தடை தொடர்பாக பொதுமக்கள் 94987 94987 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- பள்ளி மாணவனிடன் போதைப்பொருள் இருக்கிறது.
- சட்டசபை தேர்தலில் என்.டி.ஏ. கூட்டணியில் அ.தி.மு.க. தலைமையில், 200 இடங்களில் வெற்றி பெற்று அம்மாவின் ஆட்சி அமையும்.
சுவாமிமலை:
கும்பகோணத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
சட்டசபை தேர்தலில் விஜய் கண்டிப்பாக தி.மு.க. கூட்டணிக்கு பாதிப்பை ஏற்படுத்துவார். விஜய்யின் வருகை தி.மு.க. கூட்டணிக்கு மிகப் பெரிய பாதிப்பாகவும், அ.தி.மு.க. தலைமையிலான என்.டி.ஏ. கூட்டணிக்கு சாதகமாகவும் அமையும்.
தமிழகம் தற்போது போதை வஸ்துக்களின் சர்வதே சந்தையாகவும், சர்வதேச துறைமுகமாகவும் மாறி விட்டது. பள்ளி மாணவனிடன் போதைப்பொருள் இருக்கிறது. கடந்த சட்டசபை தேர்தலில் நாங்கள் தனித்து போட்டியிட்டதால், அது தி.மு.க.விற்கு சாதகமாக போனது. இம்முறை அ.தி.மு.க. தலைமையிலான என்.டி.ஏ. கூட்டணி அ.ம.மு.க. இணைந்துள்ளதால் அந்த வாய்ப்பு தி.மு.க.விற்கு கிடைக்காது
எனவே வரும் தமிழக சட்டசபை தேர்தலில் என்.டி.ஏ. கூட்டணியில் அ.தி.மு.க. தலைமையில், 200 இடங்களில் வெற்றி பெற்று அம்மாவின் ஆட்சி அமையும்.
திடீர் சாம்பார், துரித உணவுகளை போல, சில கட்சிகள் 2026 தேர்தலில் போட்டியிடுவதற்காக மாற்று கட்சியில் இருந்து கோடிக்கணக்கில் பணம் கொடுத்து வேட்பாளர்களை தேடி வருகின்றனர்.
கடந்த 10 ஆண்டுகளாக தி.மு.க. கூட்டணி ஒற்றுமையாக இருப்பது போல் வெளியில் காட்டிக் கொண்டாலும் உள்ளுக்குள் அவர்களுக்குள் ஒற்றுமை இல்லை என்பது தற்போது வெட்ட வெளிச்சமாகி வருகிறது. கொள்கை கூட்டணி என்கிறார்கள். கொள்கை ஒன்றாக இருந்தால் அவர்களுக்கு தனித்தனி கட்சி தேவை இல்லை. காங்கிரசை எதிர்த்து தான் தி.மு.க. உருவாக்கப்பட்டது. அதுபோல் கேரளாவில் கம்யூனிஸ்டும் காங்கிரசும் நேரடி மோதலில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே இவர்களுக்குள் ஒற்றுமை என்பது இல்லை என்றார்.
- விவசாயிகளுக்கு பிரச்சனை ஏற்படும் போதெல்லாம் அவர்களுக்கு உற்றதோழனாக இருந்து காப்பாற்றியது அ.தி.மு.க. அரசு.
- கொரானா காலக்கட்டத்தில் நிதிநெருக்கடியிலும் விலைவாசி உயரவில்லை.
தஞ்சாவூர்:
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திருவையாறில் நடந்த கட்சி நிர்வாகி திருமண விழாவில் கலந்து கொண்டு திருமணத்தை நடத்தி வைத்தார். பின்னர் அவர் பேசியதாவது:-
இந்த விழா நமது குடும்பவிழா. இதில் கலந்து கொண்டு வாழ்த்தியதில் மகிழ்ச்சி அடைகிறேன். ஒவ்வொருவருக்கும் பொன்னான நாள் என்றால் அது திருமண நாள் தான். அ.தி.மு.க. ஒரு வலிமையான இயக்கம். டெல்டா மாவட்டங்கள் விவசாயம் நிறைந்த மாவட்டம். தஞ்சை மாவட்ட விவசாயிகளுக்கு இயற்கை சீற்றங்களால் பாதிப்பு ஏற்படும் போதெல்லாம் அ.தி.மு.க. அரசு துணை நின்றது.
இங்கு மீத்தேன், ஈத்தேன் திட்டங்களை தி.மு.க. அரசு கொண்டு வந்தது. அப்போது விவசாயிகள் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்து நின்றனர். ஆனால் இந்த திட்டங்களை எனது தலைமையிலான அ.தி.மு.க. அரசு தடுத்து நிறுத்தியதோடு டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்தது. அது மட்டுமின்றி குடிமராமத்து திட்டத்தை கொண்டு வந்தோம். இதனால் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்தது.
ஒவ்வொரு காலக்கட்டத்திலும் விவசாயிகளுக்கு பிரச்சனை ஏற்படும் போதெல்லாம் அவர்களுக்கு உற்றதோழனாக இருந்து காப்பாற்றியது அ.தி.மு.க. அரசு. விவசாய தொழிலாளர்களுக்கு பசுமை வீடுகள், விலையில்லா ஆடு, மாடுகள் கொடுத்து உதவினோம்.
தி.மு.க. ஒரு குடும்ப கட்சி. அங்கு கருணாநிதி குடும்பத்தினர் தான் தலைமை பொறுப்புக்கு வருவார்கள். ஆனால் அ.தி.மு.க. தொண்டர்களுக்கான கட்சி. இங்கு கடைகோடி தொண்டன் கூட தலைமை பொறுப்புக்கு வர முடியும். எத்தனையோ சோதனைகளை எல்லாம் முன்னாள் முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் சாதனைகளாக மாற்றினார்கள்.
கொரானா காலக்கட்டத்தில் நிதிநெருக்கடியிலும் விலைவாசி உயரவில்லை. அப்போது தமிழக அரசுக்கு வரிவருவாய் கிடையாது. இருப்பினும் சிறப்பான நிர்வாக திறமையால் விலைவாசியை கட்டுக்குள் வைத்திருந்தோம். ஆனால் கடந்த 4½ ஆண்டு தி.மு.க. ஆட்சியில் ரூ.5 லட்சம் கோடி கடன் வாங்கியுள்ளனர். இது தான் தி.மு.க. அரசின் சாதனை.
இவ்வாறு அவர் பேசினார்.
- மாடுபிடி வீரர்கள் 8 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பிரிவாக களமிறக்கப்பட்டனர்.
- இந்த போட்டியில் ஏராளமான வீரர்கள் கலந்து கொண்டு சீறிப்பாய்ந்து வந்த காளைகளை வீரத்துடன் அடக்கினர்.
தஞ்சாவூர்:
தஞ்சை அருகே மாதாக்கோட்டையில் லூர்து மாதா ஜல்லிக்கட்டு பேரவை சார்பில் ஆண்டுதோறும் ஜல்லிக் கட்டு போட்டி நடந்து வருகிறது.
அந்த வகையில் இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டி இன்று காலை விறுவிறுப்பாக தொடங்கியது.
இந்த போட்டியை கோட்டாட்சியர் நித்யா, தாசில்தார் சிவக்குமார் ஆகியோர் உறுதிமொழி வாசித்து தொடங்கி வைத்தனர். இந்த உறுதிமொழியை மாடுபிடி வீரர்கள் வாசித்து ஏற்றுக் கொண்டனர்.
அதைத்தொடர்ந்து, வாடிவாசலில் இருந்து தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருச்சி, மதுரை, அரியலூர், பெரம்பலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து அழைத்து வரப்பட்ட 700 காளைகள் ஒவ்வொன்றாக அவிழ்த்து விடப்பட்டன. இந்த காளைகளை பிடிக்க சுற்றுக்கு மொத்தம் 40 பேர் அனுமதிக்கப்பட்டனர். மாடுபிடி வீரர்கள் 8 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பிரிவாக களமிறக்கப்பட்டனர்.
அப்போது வாடிவாசலில் இருந்து அவிழ்க்கப்பட்டு சீறிப்பாய்ந்த காளைகளை அடக்கி இளம் காளையர்கள் பார்வையாளர்களிடம் பாராட்டுக்களை பெற்றனர்.
மாடுபிடி வீரர்கள் தடுமாறி கீழே விழுந்தால் காயம் ஏற்படாமல் இருக்கும் வகையில் வாடிவாசலில் இருந்து சுமார் 100 மீட்டர் தொலைவுக்கு தரையில் தேங்காய் நார் போடப்பட்டிருந்தது.
இந்த போட்டியில் ஏராளமான வீரர்கள் கலந்து கொண்டு சீறிப்பாய்ந்து வந்த காளைகளை வீரத்துடன் அடக்கினர்.
அதேபோல் காளைகளும் சிறப்பாக களமாடி வீரர்களை பந்தாடின. இதில் சிறந்த மாடுபிடி வீரர்கள் மற்றும் காளைகளின் உரிமையாளர்களுக்கு சைக்கிள், டைனிங் டேபிள், சில்வர் அண்டா, பேன் போன்றவை பரிசுகளாக வழங்கப்பட்டன.
முன்னதாக, மாடுபிடி வீரர்களை சுகாதாரத்துறையை சேர்ந்த மருத்துவக் குழுவினர் உடல்பரி சோதனை செய்து தகுதியான வீரர்களை மட்டுமே களத்துக்குள் செல்ல அனுமதித்தனர்.
இதேபோல, காளைகளையும் கால்நடை பராமரிப்புத்துறையினர் பரிசோதனை செய்தனர்.
தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் உத்தரவின் பேரில் வல்லம் துணை போலீஸ் சூப்பிரண்டு காயத்ரி தலைமையில் 400-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் நடைபெறும் முதல் ஜல்லிக்கட்டு போட்டி இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.
- மேட்டூர் அணை மூடப்பட்டு விட்டதால் விவசாயிகள் அவதி அடைந்தனர்.
- வண்ணாரப்பேட்டை பகுதியில் திருவையாறு புறவழிச்சாலையில் காய்ந்த பயிர்களுடன் விவசாயிகள் திரண்டனர்.
தஞ்சாவூா்:
டெல்டா மாவட்ட சாகுபடிக்காக மேட்டூர் அணை கடந்த ஆண்டு ஜூன் 12-ந்தேதி திறக்கப்பட்டு கடந்த மாதம் 28-ந்தேதி மூடப்பட்டது.
இந்த நிலையில் தஞ்சை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் தொடர் மழையால் அறுவடை பாதிக்கப்பட்டு சம்பா, தாளடி சாகுபடி காலதாமதமாக நடவு செய்யப்பட்டது.
இதனால் நெற்பயிர்களுக்கு போதிய தண்ணீர் கிடைக்காமல் விவசாயிகள் அவதிப்பட்டு வந்தனர். தண்ணீர் இன்றி பயிர்கள் காய்வதால் மேட்டூர் அணையில் இருந்து இந்த மாதம் இறுதி வரை தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.
ஆனால் மேட்டூர் அணை மூடப்பட்டு விட்டதால் விவசாயிகள் அவதி அடைந்தனர். இந்த நிலையில் இன்று காலை கல்லணையில் இருந்து கல்லணை கால்வாயில் 15 தினங்களுக்கு தண்ணீர் திறக்க வலியுறுத்தி தஞ்சாவூர் அருகே வண்ணாரப்பேட்டை பகுதியில் திருவையாறு புறவழிச்சாலையில் காய்ந்த பயிர்களுடன் விவசாயிகள் திரண்டனர்.
பின்னர் டிராக்டரை சாலையில் மறித்து வைத்து சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தண்ணீரை திறந்து பயிரைக் காப்பாற்ற வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
இது குறித்து தகவல் அறிந்த அதிகாரிகள், போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது விவசாயிகள், ஏக்கருக்கு 30 ஆயிரம் ரூபாய் செலவு செய்து நடவு செய்தோம். தற்போது தண்ணீர் இன்றி பயிர்கள் காய்வதால் பெரும் நஷ்டத்தை சந்திக்கும் நிலையில் உள்ளோம். உடனடியாக தண்ணீர் திறந்தால் மட்டுமே இந்த பகுதியில் சுமார் 5,000 ஏக்கர் சாகுபடியை காப்பாற்ற முடியும் என்றனர். இதையடுத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர் .
இதனைத் தொடர்ந்து விவசாயிகள் மறியல் போராட்டத்தை கைவிட்டனர்.
இந்த சாலை மறியல் போராட்டத்தால் அந்தப் பகுதியில் கடும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- எல்லா தரவுகளும் வந்த பிறகு, பேச்சுவார்த்தை முடிந்த பிறகு விவரமாக நாங்கள் பத்திரிகையாளர்களிடம் கூறுவோம்.
- கூட்டணி தொகுதி உடன்பாடு குறித்து மாநிலத்தலைவர் நான் கூற வேண்டும்.
தஞ்சாவூா்:
தஞ்சையில் இன்று காங்கிரஸ் கட்சி மாநில தலைவர் செல்வப்பெருந்தகை நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
தி.மு.க.வுடன் நல்ல முறையில் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது. இந்த கூட்டணிக்கான நிறைவான முடிவு எடுக்கப்படும் என்று நான் முழுமையாக நம்புகிறேன். வதந்திகள் எல்லாவற்றிற்கும் தி.மு.க. துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார். இது ஒரு இயற்கையான கூட்டணி என்பதை மீண்டும், மீண்டும் அவர் நிரூபித்திருக்கிறார்.
ஆகவே, எல்லா தரவுகளும் வந்த பிறகு, பேச்சுவார்த்தை முடிந்த பிறகு விவரமாக நாங்கள் பத்திரிகையாளர்களிடம் கூறுவோம்.
தேர்தலைப் பற்றி எண்ணிக்கைகள், உடன்பாடுகள் அனைத்தும் எங்கள் அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி முடிவெடுப்பார்கள்.
கூட்டணி தொகுதி உடன்பாடு குறித்து மாநிலத்தலைவர் நான் கூற வேண்டும். இல்லையென்றால் அகில இந்திய தலைமை கூறுவார்கள். மீதி பேர் நினைக்கிற கருத்துக்கள் எங்ககிட்ட வந்து சொல்லலாம். பொதுவெளியில் சொல்வதைத் தவிர்க்க வேண்டும் என்று பலமுறை நானும் சொல்லியிருக்கிறேன். அகில இந்திய தலைமையும் சொல்லியிருக்கிறது. பொதுவெளியில் கூட்டணியைப் பற்றி பேசுவதைத் தவிர்க்க வேண்டும் என்பதுதான் என்னுடைய வேண்டுகோள் என்றார்.
- 2019-ல் குடியுரிமை திருத்த சட்டத்திற்கான மசோதாவை ஆதரித்தது அதிமுக.
- இஸ்லாமியர்களுக்கு எடப்பாடி பழனிசாமி செய்த துரோகங்களின் பட்டியல் மிக நீளமானது.
கும்பகோணம் அருகே தாராசுரம் பைபாஸ் மைதானத்தில் நடைபெறும் இந்திய யூனியன் முஸ்லிக் லீக் மாநாட்டில் முதல்வர் உரையாற்றுகிறார்.
சிறுபான்மை உரிமையை காப்போம் எனும் தலைப்பில் நடைபெறும் மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றுள்ளார்.
அப்போது, எடப்பாடி பழனிசாமியை விமர்சித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
அவர் கூறியதாவது:-
இஸ்லாமியர்களுக்கு எடப்பாடி பழனிசாமி செய்த துரோகங்களின் பட்டியல் மிக நீளமானது. அவருக்கு தெரிந்தது காலில் விழுவதும், காலை வாருவதும்தான்.
இஸ்லாமியர்களை காக்கக்கூடிய காவல் அரணாக திமுக ஆட்சி இருப்பதால்தான் தமிழ்நாட்டில் உணவு அரசியல், கும்பல் வன்முறை தலை எடுக்காமல் இருக்கிறது.
2019-ல் குடியுரிமை திருத்த சட்டத்திற்கான மசோதாவை ஆதரித்தது அதிமுக.
இஸ்லாமியர்களுக்கு எடப்பாடி பழனிசாமி செய்த துரோகங்களின் பட்டியல் மிக நீளமானது.
அதிமுக ஆதரவால்தான் குடியுரிமை திருத்த சட்ட மசோதா மாநிலங்களவையில் நிறைவேறியது.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.






