இஸ்லாமியர்களுக்கு எடப்பாடி பழனிசாமி செய்த துரோகங்களின் பட்டியல் மிக நீளமானது- மு.க.ஸ்டாலின்

2019-ல் குடியுரிமை திருத்த சட்டத்திற்கான மசோதாவை ஆதரித்தது அதிமுக.இஸ்லாமியர்களுக்கு எடப்பாடி பழனிசாமி செய்த துரோகங்களின் பட்டியல் மிக நீளமானது.
இஸ்லாமியர்களுக்கு எடப்பாடி பழனிசாமி செய்த துரோகங்களின் பட்டியல் மிக நீளமானது- மு.க.ஸ்டாலின்
Published on

கும்பகோணம் அருகே தாராசுரம் பைபாஸ் மைதானத்தில் நடைபெறும் இந்திய யூனியன் முஸ்லிக் லீக் மாநாட்டில் முதல்வர் உரையாற்றுகிறார்.

சிறுபான்மை உரிமையை காப்போம் எனும் தலைப்பில் நடைபெறும் மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றுள்ளார்.

அப்போது, எடப்பாடி பழனிசாமியை விமர்சித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

அவர் கூறியதாவது:-

இஸ்லாமியர்களுக்கு எடப்பாடி பழனிசாமி செய்த துரோகங்களின் பட்டியல் மிக நீளமானது. அவருக்கு தெரிந்தது காலில் விழுவதும், காலை வாருவதும்தான்.

இஸ்லாமியர்களை காக்கக்கூடிய காவல் அரணாக திமுக ஆட்சி இருப்பதால்தான் தமிழ்நாட்டில் உணவு அரசியல், கும்பல் வன்முறை தலை எடுக்காமல் இருக்கிறது.

2019-ல் குடியுரிமை திருத்த சட்டத்திற்கான மசோதாவை ஆதரித்தது அதிமுக.

இஸ்லாமியர்களுக்கு எடப்பாடி பழனிசாமி செய்த துரோகங்களின் பட்டியல் மிக நீளமானது.

அதிமுக ஆதரவால்தான் குடியுரிமை திருத்த சட்ட மசோதா மாநிலங்களவையில் நிறைவேறியது.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com