என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Farmers Protest"
- குண்டர் சட்டத்தை திரும்ப பெறக்கோரி கோஷங்களை எழுப்பினர்
- 20-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்
காவேரிப்பாக்கம்:
ராணிப்பேட்டை மாவட்டம், பனப்பாக்கம் வருவாய் ஆய்வாளர் அலுவலகம் எதிரே நேற்று மேல்மா சிப்காட் திட்டத்தை ரத்து செய்யக்கோரி தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மாவட்ட செயலாளர் வஜ்ஜிரவேலு தலைமை தாங்கினார். மேல்மா சிப்காட் திட்டத்தை ரத்து செய்யக்கோரி அமைதியாக போராடிய விவசாயிகள் மீது பதிவு செய்துள்ள அனைத்து பொய் வழக்குகளையும், போராட்ட ஒருங்கிணைப்பாளர் அருள் மீது உள்ள குண்டர் சட்டத்தை திரும்ப பெறக்கோரி கோஷங்களை எழுப்பினர்.
இதில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிர்வாகிகள் பரமேஸ்வரன், புருஷோத்தமன், ஞானவேல் உட்பட 20-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டனர்.
- கேரள அரசு மற்றும் சில தன்னார்வலர்கள் அணை பலம் இழந்துவிட்டதாக வதந்தி பரப்பி வருகின்றனர்.மேலும் அணையின் நீர்மட்டத்தை உயர விடாமல் சதி செய்து வருகின்றனர்.
- முல்லை ப்பெரியாற்று கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்க விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
கூடலூர்:
முல்லைப்பெரியாறு அணை மூலம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் 14707 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. இருபோக நெல்சாகுபடி நடைபெற்று வருகிறது.
152 அடி உயரம் கொண்ட முல்லைப்பெரியாறு அணையில் உச்சநீதிமன்ற அறிவுறுத்தலின்படி 142 அடி வரை தண்ணீர் தேக்கப்படுகிறது. ஆனால் கேரள அரசு மற்றும் சில தன்னார்வலர்கள் அணை பலம் இழந்துவிட்டதாக வதந்தி பரப்பி வருகின்றனர்.மேலும் அணையின் நீர்மட்டத்தை உயர விடாமல் சதி செய்து வருகின்றனர்.
கடந்த சில நாட்களாக நீர் பிடிப்பு பகுதியில் பெய்த தொடர் மழை காரணமாக அணையின் நீர்மட்டம் 133.75 அடியாக உயர்ந்தது. நீர் இருப்பு 5575 மி.கன அடியாகும். தற்போது மழை ஓய்ந்த நிலையில் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு 105 கன அடியில் இருந்து 1000 கன அடியாக அதிகரிக்க ப்பட்டது.
இதனால் வீரபாண்டி வரை உள்ள முல்லை ப்பெரியாற்று கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்ப ட்டுள்ளது. அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்க விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இது குறித்து பெரியாறு, வைகை பாசன விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் அன்வர்பாலசிங்கம் கூறு கையில், கம்பம் பள்ள த்தாக்கு பாசனத்திற்கு போதுமான அளவு நீர் இருப்பு உள்ளது. வைகை அணையும் முழு கொள்ளளவை எட்டி உள்ளது. தற்போது தண்ணீர் தேவை இல்லாத நிலையில் முல்லைப்பெரியாறு அணையில் இருந்து 1000 கன அடி நீர் திறக்கப்படுவது தேைவயற்றது. ரூல்கர்வ் விதிப்படி வருகிற 30ந் தேதி வரை 142 அடி வரை தண்ணீர் தேக்கலாம். குறைந்தபட்சம் 136 அடி நீர்மட்டத்தை நிலை நிறுத்தி இருக்க வேண்டும். எனவே நீர் திறப்பை குறைக்க வேண்டும் என்றார்.
அணையில் இருந்து 1000 கனஅடி நீர் திறக்கப்படுவ தால் லோயர்கேம்ப் பெரி யாறு நீர் மின் நிலையத்தில் 3 ஜெனரேட்டர்கள் மூலம் 90 மெகாவாட் மின் உற்பத்தி தொடங்கி உள்ளது. அணைக்கு 1146 கன அடி நீர் வருகிறது.
கூடுதல் தண்ணீர் திறப்பு குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறுகையில், 71 அடி உயரம் கொண்ட வைகை அணையில் பாசனத்திற்கு கூடுதல் தண்ணீர் திறக்கப்படுவதால் நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது. எனவே அதனை ஈடுகட்டவே பெரியாறு அணையில் 1000 கனஅடி நீர் திறக்கப்படுகிறது என்ற னர்.
வைகை அணையின் நீர்மட்டம் 67.98 அடியாக உள்ளது. 892 கன அடி நீர் வருகிறது. மதுரை மாநகர குடிநீர் மற்றும் பாசனத்தி ற்காக 2099 கன அடி நீர் திறக்கப்படுகிறது. மஞ்ச ளாறு அணையின் நீர்மட்டம் 55 அடியாக உள்ளது. அணைக்கு வரும் 100 கன அடி நீர் அப்படியே திறக்கப்படுகிறது.
சோத்துப்பாறை அணை யின் நீர்மட்டம் 126.41 அடியாக உள்ளது. 83 கன அடி நீர் வருகிறது. அது முழுவதும் அப்படியே வெளியேற்றப்படுகிறது. மழை எங்கும் இல்லை.
- மின்கோபுரம் மற்றும் மின்கம்பிகள் செல்லும் விவசாய நிலங்களுக்கு தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பில் இழப்பீடு வழங்காமல் பணிகள் நடைபெற்று வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது.
- ஒட்டன்சத்திரம் வட்டாச்சியர் அலுவலகம் முன்பு தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஒட்டன்சத்திரம்:
விருதுநகர் மாவட்டம் முதல் கோயமுத்தூர் வரையிலான 765 கிலோவாட் உயர்மின் கோபுரம் திட்டத்தின் கீழ் திண்டுக்கல் மாவட்டம் தும்பிச்சிபாளையம் உள்ளிட்ட சுற்றுப்புற கிராமப்பகுதிகளில் உயர்மின் கோபுரங்கள் விவசாய நிலங்களில் தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பில் அமைக்கப்பட்டு ள்ளது.
மின்கோபுரங்களுக்கு இடையே மின்சார கம்பி பொறுத்தும் பணி நடைபெற்று வருகிறது.
மின்கோபுரம் மற்றும் மின்கம்பிகள் செல்லும் விவசாய நிலங்களுக்கு தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பில் இழப்பீடு வழங்காமல் பணிகள் நடைபெற்று வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது.
பாதிக்கப்பட்ட விவசாயி களுக்கு முழு இழப்பீட்டை யும் வழங்கிய பின்னரே திட்டப்பணிகளை தொடரக் கோரி ஒட்டன்சத்திரம் வட்டாச்சியர் அலுவலகம் முன்பு தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டி ருந்தது.
இதற்காக தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் நிறுவனர் ஈசன்முருகசாமி, மாநில பொதுச்செயலாளர்கள் நேதாஜி, முத்துவிஸ்வநாதன், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வடிவேல், கோவை மாவட்ட செயலாளர் மந்திராச்சலம், திருப்பூர் கிழக்கு மாவட்ட அமைப்பு செயலாளர் பாலசுப்பிரமணியன், தாராபுரம் ஒன்றிய செயலாளர் ஈஸ்வரன் உள்ளிட்ட விவசாயிகள் ஒட்டன்சத்திரம் வட்டா ச்சியர் அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர்.
இதனையடுத்து ஒட்ட ன்சத்திரம் வட்டாட்சியர் முத்துச்சாமி, போலீஸ் டி.எஸ்.பி. முருகேசன் ஆகியோர் விவசாயிகளை தடுத்து நிறுத்தி போராட்டம் நடத்த அனுமதியில்லை என்றனர். இதனால் அதிர்ச்சியடைந்த விவசாயி கள் கடுமையான வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் கோரிக்கையை மனுவாக எழுதி கொடுத்து விட்டு போராட்டத்தை ஒத்தி வைத்துவிட்டு அங்கிருந்து சென்றனர்.
இதானல் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
- பாசன கால்வாயின் கடைமடை பகுதியான மேலூர் பகுதியில் ஒரு போக பாசத்திற்கு தண்ணீர் திறப்பது குறித்து அதிகாரிகள் எந்தவித பதிலும் தெரிவிக்கவில்லை.
- தேனி, மதுரை ஆகிய மாவட்டங்களுக்கு விவசாய பணிக்காக நாளை வைகை அணை திறக்கப்படவுள்ளது.
மேலூர்:
மதுரை மாவட்ட விவசாயத்திற்கு வைகை அணை தண்ணீர் பிரதானமாக உள்ளது. வருடந்தோறும் அணையில் இருந்து பெரியார் கால்வாயில் திறக்கப்படும் தண்ணீர் மூலம் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெற்று வருகின்றன.
பெரியார் கால்வாய் மூலம் மதுரை மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகளில் இருபோக விவசாயம் நடைபெற்று வரும் நிலையில் கடைமடை பகுதியான மேலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஒரு போக விவசாயமே நடைபெற்று வருகிறது.
பெரியார் கால்வாய் தண்ணீரை நம்பி மேலூர் அருகே வெள்ளலூர் நாடு என அழைக்கப்படும் 65-க்கும் மேற்பட்ட கிராமங்களில் ஆயிரக்கணக்கான விவசாய நிலங்கள் உள்ளன. வருடம் தோறும் இந்த பகுதிக்கு ஆகஸ்டு 15-ந்தேதி வைகை அணையில் இருந்து பெரியாறு கால்வாய் மூலம் தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம்.
ஆனால் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை போதிய அளவு பெய்யாததால் அணையில் நீர்மட்டம் வெகுவாக சரிந்தது. இதனால் மதுரை மாவட்டத்திற்கு தண்ணீர் திறக்கப்படவில்லை. பாசன பரப்பளவும் பாதியாக குறைந்தது.
இந்நிலையில் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் கடந்த இரண்டு வாரங்களாக வைகை அணை நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் அணை நீர்மட்டம் 70 அடியை தாண்டி உள்ளது.
இதையடுத்து தேனி, மதுரை ஆகிய மாவட்டங்களுக்கு விவசாய பணிக்காக நாளை வைகை அணை திறக்கப்படவுள்ளது. வைகை பெரியாறு பாசன கால்வாய் மூலம் 180 நாட்கள் முறை வைத்து மதுரை மாவட்டம் பேரணை முதல் கள்ளந்திரி வரை தண்ணீர் திறக்கப்படும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பாசன கால்வாயின் கடைமடை பகுதியான மேலூர் பகுதியில் ஒரு போக பாசத்திற்கு தண்ணீர் திறப்பது குறித்து அதிகாரிகள் எந்தவித பதிலும் தெரிவிக்கவில்லை.
பருவமழை காரணமாக அணையில் நீர்மட்டம் உயர்ந்த நிலையில் மேலூர் பகுதியில் ஒருபோக பாசனத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டும் என விவசாய சங்கத் தலைவர் முருகன் மற்றும் விவசாயிகள் கலெக்டர் மற்றும் அதிகாரியிடம் கோரிக்கை மனு அளித்தனர். ஆனால் அது தொடர்பாக எந்த பதிலும் தெரிவிக்காமல் கள்ளந்திரி வரை மட்டுமே தண்ணீர் திறக்கப்படும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்து இருப்பது மேலூர் பகுதி விவசாயிகளிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதை கண்டித்தும் மேலூர் பகுதிக்கும் கால்வாயில் இருந்து தண்ணீர் திறக்க வலியுறுத்தியும் இன்று வெள்ளலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கோட்டை நத்தம்பட்டி, உறங்கான்பட்டி, அம்பலக்காரன்பட்டி உட்பட 65-க்கும் மேற்பட்ட கிராமங்களில் கடையடைப்பு போராட்டம் நடந்தது. மேலும் இதே கோரிக்கையை வலியுறுத்தி இப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் ஆயிரக்கணக்கானோர் மேலூரில் உள்ள பொதுப்பணித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
கடையடைப்பு, முற்றுகை போராட்டம் காரணமாக அப்பகுதியில் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது. இதையொட்டி மேலூர் பொதுப்பணித்துறை அலுவலகம் முன்பு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.
- கண்காணிப்புக்குழு உத்தரவின்பேரில் பெங்களூரு நேசனல் இன்ஸ்டியூட் ஆப் ராக் மெக்கானிக்ஸ் குழுவினர் பெரியாறு அணையில் ஆய்வு செய்தனர்.
- இந்த ஆய்விற்கு தமிழக விவசாயிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
கூடலூர்:
முல்லைபெரியாறு அணையை கண்காணித்து பராமரிக்க 3 பேர் கொண்ட கண்காணிப்பு குழுவை உச்சநீதிமன்றம் நியமித்தது. இதனைதொடர்ந்து இருமாநில தொழில்நுட்ப வல்லுநர்களையும் சேர்க்க அறிவுறுத்தியது. தற்போது இந்த ஐவர் குழுவின் தலைவராக மத்திய நீர்வளஆணைய தலைமை பொறியாளர் விஜயசரண் உள்ளார்.
தமிழக பிரதிநிதிகளாக நீர்வளத்துறை கூடுதல் தலைமை செயலாளர் சந்தீப்சக்சேனா, காவிரிதொழில்நுட்பக்குழு தலைவர் சுப்பிரமணியம், கேரளநீர்பாசனத்துறை கூடுதல் தலைமை செயலாளர் வேணு, நீர்பாசனத்துறை நிர்வாக தலைமை பொறி யாளர் அலெக்ஸ் வர்கீஸ் ஆகியோர் இந்த குழுவில் உள்ளனர்.
இவர்கள் கடந்த மார்ச் மாதம் 27-ந்தேதி பெரியாறு அணையில் ஆய்வு மேற்கொண்டனர். கண்காணிப்புக்குழு உத்தரவின்பேரில் பெங்களூரு நேசனல் இன்ஸ்டியூட் ஆப் ராக் மெக்கானிக்ஸ் குழுவினர் தலைமை விஞ்ஞானி டாக்டர் ஸ்ரீபட்நாயக், விஞ்ஞானி பிரவீனாதாஸ், ஜெனிபர் ஆகியோர் தலைமையில் ஆய்வு செய்தனர்.
நிலநடுக்க கருவி, அதிர்வு கருவிகள் ஆகியவற்றின் இயக்கம், கேலரி பகுதியில் கசிவுநீரை கண்காணிக்க வைக்கப்பட்டுள்ள வீநெட்ஜ் கருவிகளையும் ஆய்வு செய்தனர். மேலும் வானிலை கருவிகள் பயன்பாடுகள், மழைமானி அளவீட்டு கருவிகள் ஆகியவற்றையும் ஆய்வு செய்தனர்.
இந்த ஆய்வின்போது பெரியாறு சிறப்பு கோட்ட செயற்பொறியாளர் சாம்இர்வின் உள்பட அதிகாரிகள் உடனிருந்தனர்.
இந்த ஆய்விற்கு தமிழக விவசாயிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் அன்வர் பாலசிங்கம் கூறுகையில், மத்திய நீர்வளஆணையம் மற்றும் உச்சநீதிமன்றம் ஆகியவை முல்லைபெரியாறு அணை பாதுகாப்பாகவும், திருப்திகரமாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
இந்தநிலையில் பெங்களூரை சேர்ந்த மத்திய சுரங்கத்துறை கீழ் வரும் தன்னாச்சிபெற்ற அமைப்பு இங்கு ஆய்வு நடத்தியது கண்டனத்துக்குரியதாகும். கோலார் தங்கவயலில் தங்கம் ேதாண்டி எடுக்கும் போது அதற்காக நிறுவப்பட்டது இந்த அமைப்பு. நாடு முழுவதும் சுரங்கம், நீர்மின்திட்டங்கள், அணுமின்திட்டங்கள், எரிவாயு சார்ந்த திட்டங்களுக்கு ஆலோசனையை வழங்கி வருகிறது.
இவர்கள் திடீரென அணைப்பகுதிக்கு ஆய்வுக்கு வந்திருப்பதன் உள்நோக்கம் தெரியவில்லை. ஒவ்ெவாரு முறையும் அணையின் நீர்மட்டம் உயரும் போது இதுபோன்ற செயல்கள் அரங்கேறி வருகிறது. கேரள அரசு தொடர்ந்து நீர்மட்டத்தை உயர விடாமல் சதிதிட்டம் செய்கிறதோ என சந்தேகம் எழுகிறது.
எனவே இதற்கு அதிகாரிகள் விளக்கம் அளிக்கவேண்டும். என்றார்.
- முக்கொம்பு காவிரி பாலத்தில் 300 க்கும் மேற்பட்ட விவசாயிகள் திரண்டு கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
- விவசாயிகள் போராட்டம் காரணமாக முக்கொம்பில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
திருச்சி:
காவிரி நீர் பங்கிட்டு உரிமையை மறுக்கும் கர்நாடக அரசை கண்டித்தும், நெய்வேலி கூடங்குளம் மின் நிலையங்களில் இருந்து கர்நாடகம் செல்லும் மின்சாரத்தை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும், கிடப்பில் போடப்பட்டுள்ள நதிநீர் இணைப்பு திட்டங்களை விரைந்து செயல்படுத்திட வேண்டும்,
தமிழகத்தில் உள்ள ஆறுகள், ஏரி, குளங்கள் மற்றும் நீர் நிலைகள் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் முக்கொம்பு மேலணையில் இன்று மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.
தொடர்ந்து முக்கொம்பு காவிரி பாலத்தில் 300 க்கும் மேற்பட்ட விவசாயிகள் திரண்டு கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். முன்னதாக விவசாயிகள் காவிரி பாலத்தில் ஊர்வலமாக சென்றனர். இந்த போராட்டத்துக்கு தமிழக விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் சின்னதுரை தலைமை தாங்கினார்.
இந்த மனித சங்கிலி போராட்டத்தில் மாநிலத் தலைவர் சின்னசாமி, மாநில பொதுச்செயலாளர் சுந்தரம், உள்ளிட்ட விவசாய சங்க நிர்வாகிகள் மற்றும் விவசாயிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் என 400-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். விவசாயிகள் போராட்டம் காரணமாக முக்கொம்பில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
- காங்கேயம் டி.எஸ்.பி., மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பாக தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருப்பூர்:
பிஏபி., வாய்க்காலுக்கு இடம் கொடுத்த விவசாயிகளின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் கடந்த 16-ந்தேதி தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் உள்ளிட்ட விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்ட போது , போராட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டதாக கூறி காவல்துறையினர் அவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது காங்கேயம் டிஎஸ்பி., பார்த்திபன் விவசாயிகளை தாக்கியதாகவும், இதில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் நிர்வாகி ஈஸ்வரன் பலத்த காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது.
எனவே காங்கேயம் டி.எஸ்.பி., மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பாக தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் கோரிக்கையை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.
- மண்ணச்சநல்லூர் அருகே உத்தமர்கோவில் ரெயில் நிலையத்தை இன்று விவசாயிகள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
- போராட்டத்தில் சுமார் 50 மேற்பட்டோர் சங்க நிர்வாகிகளும், விவசாயிகளும் கலந்து கொண்டனர்.
மண்ணச்சநல்லூர்:
காவிரி நீர் பிரச்சனையில் கர்நாடக அரசை கண்டித்து டெல்டா மாவட்டங்களில் விவசாயிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். நேற்று டெல்டா மாவட்டங்களை கடைகளை அடைத்து மறியல் போராட்டம் நடந்தது.
திருச்சியை அடுத்த மண்ணச்சநல்லூர் அருகே உத்தமர்கோவில் ரெயில் நிலையத்தை இன்று விவசாயிகள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்க மாநில தலைவர் பூரா.விசுவநாதன் தலைமை தாங்கினார். இப்போராட்டத்தில் சுமார் 50 மேற்பட்டோர் சங்க நிர்வாகிகளும், விவசாயிகளும் கலந்து கொண்டனர்.
தமிழகத்திற்கு குறுவைக்கும், சம்பா சாகுபடிக்கும் கர்நாடகாவிடமிருந்து காவிரி தண்ணீரை பெற்றுத் தராத பா.ஜ.க. அரசை கண்டித்தும், அணையில் தண்ணீர் இல்லை என்றும் தமிழகத்திற்கு தண்ணீர் வழங்க முடியாது என்றும் கபட நாடகமாடும் கர்நாடக முதல்-மந்திரி சீத்தாராமையாவை கண்டித்தும், தமிழகத்திற்கு உண்டா காவிரி நீரை உச்சநீதிமன்றம் உத்தரவுப்படியும், காவிரி மேலாண்மை ஆணையை காவிரி நீர் வழங்க கோரியும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.
- டெல்டா மாவட்டங்களில் சுமார் 5 லட்சம் ஏக்கர் குறுவை நெல் சாகுபடி செய்யப்பட்டது.
- காவிரியில் தண்ணீர் குறைவாக வரும் காரணத்தினால் பல இடங்களில் பயிர்கள் கருக தொடங்கியது.
நாகப்பட்டினம்:
தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் சுமார் 5 லட்சம் ஏக்கர் குறுவை நெல் சாகுபடி செய்யப்பட்டது. இந்நிலையில் காவிரியில் தண்ணீர் குறைவாக வரும் காரணத்தினால் பல இடங்களில் பயிர்கள் கருக தொடங்கியது.
இதைத் தொடர்ந்து விவசாயிகள் மற்ற நீர்நிலைகளை வைத்து காப்பாற்ற போராடி வருகின்றனர். மேலும் பல இடங்களில் குடங்களில் தண்ணீர் கொண்டு சென்று வயல்களில் ஊற்றும் அவலநிலை உள்ளது. காவிரி தண்ணீர் திறந்து விடகோரி விவசாயிகள் பல இடங்களில் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் இன்று குறுவை சாகுபடிக்கு கர்நாடகா அரசு தண்ணீர் கொடுக்க மறுப்பதை கண்டித்தும், காவிரி நீரை பெற்று தர உரிய அழுத்தம் கொடுக்காத மத்திய, மாநில அரசை கண்டித்தும் நாகை மாவட்டம் கீழ்வேளூர் ரெயில் நிலையத்தில் தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கம் சார்பாக ரெயில் மறியல் போராட்டத்தில் விவசாயிகள் ஈடுபட்டனர்.
நாகையில் இருந்து திருச்சிக்கு சென்ற பயணிகள் ரெயிலை மறிக்க முயன்றனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதனால் விவசாயிகளுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இந்த ரெயில் மறியலில் ஈடுபட்ட சுமார் 100-க்கும் மேற்பட்ட விவசாயிகளை போலீசார் கைது செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.