என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
நீங்கள் தேடியது "Arun Jaitley"
- இத்தாலியைப் பற்றி உங்களுக்கு நிறைய தெரியும் என்று மக்கள் அடிக்கடி கூறுகிறார்கள்.
- என்ன சாப்பிட வேண்டும் என்பதை என்னால் தீர்மானிக்க முடியாது.
Zerodha இணை நிறுவனர் நிகில் கமத் தொகுத்து வழங்கிய 'People by WTF' தொடரின் போட்காஸ்ட் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்ற வீடியோ நேற்று வெளியானது.
அதில், தன்னைப் பற்றியும் இத்தாலிய இணை ஜோர்ஜியா மெலோனி பற்றியும் வைரலான மீம்ஸ்களை பற்றி மோடி மனம் திறந்துள்ளார்.
இத்தாலியைப் பற்றி உங்களுக்கு நிறைய தெரியும் என்று மக்கள் அடிக்கடி கூறுகிறார்கள். அதைப் பற்றி ஏதாவது பகிர விரும்புகிறீர்களா? அந்த மீம்ஸை நீங்கள் பார்க்கவில்லையா?" என்று காமத் கேட்டார்.
![](https://media.maalaimalar.com/h-upload/2025/01/11/8063757-saudi15.webp)
அதற்குப் பதிலளித்த பிரதமர் மோடி, மீம்ஸ்கள் எப்போதும் வந்துக்கொண்டேதான் இருக்கும்... மீம்ஸ்கள், சமூகவலைதள விவாதங்களில் நான் கவனம் செலுத்துவதில்லை. நான் உணவுப் பிரியன் அல்ல, எந்த நாட்டுக்கு சென்றாலும் அவர்கள் வழங்கும் உணவை மகிழ்ச்சியுடன் சாப்பிடுவேன்.
எனக்கு ஒரு மெனு கொடுத்தால், என்ன சாப்பிட வேண்டும் என்பதை என்னால் தீர்மானிக்க முடியாது. நான் ஆர்.எஸ்.எஸ்-ல் இருந்தபோது மெனுவில் குறிப்பிடப்பட்டுள்ள உணவும் என் முன் உள்ள உணவும் ஒன்றா என்று கூட எனக்குத் தெரியாது. அதனால் அப்போதெல்லாம் மறைந்த அருண் ஜெட்லியிடம்தான் உணவை ஆர்டர் செய்யக் கூறுவேன் என்று தெரிவித்தார்.
![](https://img.maalaimalar.com/InlineImage/201905291343018045_1_lettr3._L_styvpf.jpg)
தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள், பா.ஜனதா கூட்டணிக்கு பெரும்பான்மை கிடைக்கும் என்று கூறியநிலையில், மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி இதுகுறித்து தனது சமூக வலைத்தள பக்கத்தில் கருத்து வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகளின் துல்லியத்தன்மை, உண்மைத்தன்மை ஆகியவை தொடர்பாக எங்களில் சிலரிடையே சச்சரவு ஏற்படலாம்.
ஆனால், எண்ணற்ற கருத்துக்கணிப்புகளின் முடிவுகள் ஒரே மாதிரி இருக்கும்போது, தேர்தல் முடிவுகளும் அதே மாதிரிதான் இருக்கும். இந்த கருத்துக்கணிப்பு முடிவுகளில், மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களுக்கு எந்த பங்கும் இருக்காது. கருத்துக்கணிப்பு முடிவுகள் போலவே தேர்தல் முடிவுகளும் இருந்தால், இதை வைத்து எதிர்க்கட்சிகள் செய்த பிரச்சினையும் தோல்வி அடையும்.
2014-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் முடிவுகளுடன் இந்த கருத்துக்கணிப்பு முடிவுகளை சேர்த்து பார்த்தால், இந்திய ஜனநாயகம் நன்றாக முதிர்ச்சி அடைந்திருப்பது தெளிவாகும்.
யாருக்கு ஓட்டு போடுவது என்று முடிவு செய்வதற்கு முன்பு, தேசநலனை வாக்காளர்கள் முக்கியமாக கருதி இருக்கிறார்கள் என்று தெரிகிறது. சிந்தனை திறனுள்ள மக்கள் ஒரே மாதிரியாக வாக்களிக்கும்போது, அது அலையை உருவாக்குகிறது.
காங்கிரஸ் கட்சிக்கு சோனியா காந்தி குடும்பம் ஒரு சுமையாக ஆகிவிட்டது. இனிமேல், அந்த குடும்பம், காங்கிரசுக்கு ஒரு சொத்தாக இருக்காது. கழுத்தை பிடித்த ‘அல்பட்ராஸ்’ பறவையாக இருக்கும். அந்த குடும்பம் இல்லாவிட்டால், கூட்டம் சேராது. அந்த குடும்பம் இருந்தால், ஓட்டு கிடைக்காது.
பிரதமர் மோடிக்கு எதிரான தனிப்பட்ட தாக்குதல், 2014-ம் ஆண்டு தேர்தலிலும் எடுபடவில்லை. இந்த தேர்தலிலும் எடுபடவில்லை.
தலைவர்கள் தகுதி அடிப்படையில்தான் தீர்மானிக்கப்படுகிறார்கள். சாதி அல்லது குடும்ப பின்னணி அடிப்படையில் அல்ல. பிரதமர் மோடியின் செயல்பாடு சார்ந்த விஷயங்கள், வாக்காளர்களிடம் ஆதரவை பெற்றுள்ளன. அவர்கள் எதிர்க் கட்சி கூட்டணியை நம்ப தயாராக இல்லை.
இவ்வாறு அருண் ஜெட்லி கூறியுள்ளார்.
பா.ஜனதாவைச் சேர்ந்த குஜராத் மாநில துணை முதல்-மந்திரி நிதின் பட்டேல் கூறியதாவது:-
மோடியை மீண்டும் பதவியில் அமர்த்துவது என்று தேர்தல் அறிவிக்கப்பட்டவுடனே மக்கள் முடிவு செய்து விட்டார்கள். இது எல்லா கருத்துக்கணிப்புகளிலும் தெளிவாக தெரிகிறது. இருப்பினும், கருத்துக்கணிப்பில் கூறியதை விட அதிக தொகுதிகளில் பா.ஜனதா கூட்டணி வெற்றி பெறும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பிரதமர் மோடி, தான் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவன் என்று பேசியதை காங்கிரஸ் தலைவர்கள் ப.சிதம்பரம், பிரியங்கா, ராஷ்டிரீய ஜனதாதள தலைவர் தேஜஸ்வி யாதவ் ஆகியோர் விமர்சித்து இருந்தனர்.
அதற்கு பதிலளித்து, மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி கூறியதாவது:-
பிரதமர் மோடி, ஒருபோதும் சாதி அரசியல் செய்ததில்லை. அவர் வளர்ச்சி அரசியலில்தான் ஈடுபட்டுள்ளார். அவர் தேசியத்தால் கவரப்பட்டவர்.
சாதியின் பெயரால் ஏழைகளை ஏமாற்றியவர்கள் வெற்றிபெற மாட்டார்கள். சாதி அரசியலின் பெயரில் அவர்கள் சொத்துகளை குவித்துள்ளனர். பகுஜன் சமாஜ் கட்சி, ராஷ்டிரீய ஜனதாதளம் ஆகிய கட்சிகளின் தலைமை குடும்பங்களின் சொத்துகளுடன் ஒப்பிடும்போது, பிரதமரின் சொத்து மதிப்பு வெறும் 0.01 சதவீதம்தான்.
இவ்வாறு அருண் ஜெட்லி கூறினார். #ArunJaitley #PMModi
பிரதமர் மோடியை எதிர்த்து வாரணாசி தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியின் சகோதரி பிரியங்கா நிறுத்தப்படுவார் என்று கடந்த சில வாரங்களாக பரபரப்பாக பேசப்பட்டு வந்தது. ஆனால் நேற்று முன்தினம் இத்தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளராக அஜய் ராய் அறிவிக்கப்பட்டார். இதனால் பிரியங்கா போட்டியிடுவார் என்ற எதிர்பார்ப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.
![](https://img.maalaimalar.com/InlineImage/201904270716225934_1_priyanka-gandhi-1._L_styvpf.jpg)
வாரணாசியில் பிரியங்கா போட்டியிடவில்லை என்ற காங்கிரசின் முடிவு ஏமாற்றம் அளிக்கிறது.
பிரியங்காவின் பழங்கதைகள் அழிக்கப்பட்டது. வெற்றிகரமான ஒரு அரசியல் தலைவருக்கு எதிராக புதிதாக அரசியலுக்கு வந்துள்ள வாரிசின் தலை எழுத்தை வாரணாசி எழுதி புதிய இந்தியா உருவாக வாய்ப்பு ஏற்படும் என நம்பினேன். அவர்கள் நாளுக்கு 5 முறை சொல்லிக்கொள்ளும் புதிய இந்தியாவை அவர்களின் படைகள் ஈர்க்க தவறிவிட்டது. அதனால் புதிய இந்தியா அவர்களுக்கு வாய்ப்பளிக்கவில்லை. அனுபவமில்லாத வாரிசுகளை ஏற்றுக்கொள்ள முடியாது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார். #LokSabhaElections2019 #PriyankaGandhi #ArunJaitley
ஜெட் ஏர்வேஸ் விமான நிறுவனம் ரூ.8 ஆயிரம் கோடி கடனில் தத்தளிக்கிறது. நிதி நெருக்கடியால் அனைத்து விமான சேவைகளையும் அந்த நிறுவனம் நிறுத்தி வைத்துள்ளது.
ஜெட் ஏர்வேஸ் விமான நிறுவனத்தின் வீழ்ச்சிக்கு நிதி மந்திரி அருண் ஜெட்லியும், சிவில் விமான போக்குவரத்து ராஜாங்க மந்திரி ஜெயந்த் சின்காவும் தான் காரணம் என பாரதீய ஜனதா கட்சி மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி கூறி உள்ளார்.
![](https://img.maalaimalar.com/InlineImage/201904260151025702_1_wokv7993._L_styvpf.jpg)
ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்துக்கு பார்சல் செய்து கொடுக்கும் வேலையை செய்ய வேண்டாம் என அருண் ஜெட்லிக்கும், ஜெயந்த் சின்காவுக்கும் நரேந்திர மோடி கூற வேண்டும் என்றும் சுப்பிரமணிய சாமி கேட்டுக்கொண்டுள்ளார்.
இதையொட்டி அவர் சிவில் விமான போக்குவரத்து மந்திரி சுரேஷ் பிரபுவுக்கும் அவர் ஒரு கடிதமும் எழுதி உள்ளார்.
இந்த தகவல்களை அவர் டுவிட்டரில் தெரிவித்துள்ளார். #JetAirways #SubramanianSwamy
![](https://img.maalaimalar.com/InlineImage/201904231444386446_1_arun3._L_styvpf.jpg)
காங்கிரஸ் தலைவர்கள் மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானியின் கல்வித்தகுதி பற்றி புகார் கூறிவரும் வேளையில், மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி அந்த சர்ச்சையை காங்கிரஸ் பக்கம் திருப்பியுள்ளார். சமூக வலைத்தளத்தில் அவர் கூறியிருப்பதாவது:-
ஒரு நாள் காங்கிரஸ் தேர்தல் பிரசாரம் பா.ஜனதா வேட்பாளர்கள் கல்வித் தகுதி பற்றியதாக இருக்கிறது. ஆனால் ராகுல் காந்தியின் கல்விச் சான்றுகளை தணிக்கை செய்தால் கிடைக்க வேண்டிய பதில்கள் ஏராளமாக இருப்பதை முற்றிலுமாக மறந்துவிட்டார்கள். இவ்வளவு ஏன், அவர் முதுநிலை பட்டம் பெறாமல் எம்.பில் பட்டம் பெற்றது எப்படி? இந்தியாவின் எதிர்க்கட்சி பிரசாரம் செய்வதற்கான காரணத்தை வாடகைக்கு தேடும் நிலையில் உள்ளது.
![](https://img.maalaimalar.com/InlineImage/201904140141219428_1_axelnj0h._L_styvpf.jpg)
இவ்வாறு அவர் கூறியுள்ளார். #RahulGandhi #ArunJaitley
பா.ஜனதா தேர்தல் அறிக்கை இன்று வெளியிடப்படும் என மத்திய மந்திரி அருண் ஜெட்லி கூறினார். இதில் மக்களை கவரும் அறிவிப்புகள் இருக்குமா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது.
காங்கிரஸ் கட்சி தன்னுடைய தேர்தல் அறிக்கையில் ஏழைகளுக்கு ஆண்டுக்கு ரூ.72 ஆயிரம் வழங்கப்படும் என்பது உள்ளிட்ட பல்வேறு கவர்ச்சிகரமான அறிவிப்புகளை வெளியிட்டது. பா.ஜனதா தேர்தல் அறிக்கை எப்போது வரும்? என்று எதிர்க்கட்சிகள் கிண்டல் செய்து வருகின்றன. அதே சமயம் மக்களை கவரும் அறிவிப்புகள் தேர்தல் அறிக்கையில் வருமா? என எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது.
இந்நிலையில் டெல்லியில் ‘மத்தியில் மீண்டும் மோடி அரசு’ என்ற தலைப்பில் பா.ஜனதாவின் தேர்தல் பிரசார பாடலை மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி நேற்று வெளியிட்டார். இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
எங்களின் பிரசார பாடல் 3 வகையாக பிரிக்கப்பட்டு உள்ளது. அதில் முதல் கருத்தாக, தேர்தல் வாக்குறுதியை முழுமையாக நிறைவேற்றியதை கூறியிருக்கிறோம். 2-வது கருத்தாக ஊழலற்ற, நேர்மையான ஆட்சி நடத்தியதை தெளிவுபடுத்தி உள்ளோம். 3-வது கருத்தாக நாட்டின் வளர்ச்சி மற்றும் பாதுகாப்பை கருத்தில் கொண்டும், ஊழல், கருப்பு பணத்துக்கு எதிராக அதிரடி நடவடிக்கைகளை எடுத்து இருப்பதை சுட்டிக்காட்டி இருக்கிறோம்.
சில கட்சிகள் தங்களின் தேர்தல் அறிக்கையை நம்பியே தேர்தல் களத்தில் இறங்கி உள்ளன. ஆனால் நாங்கள் கடந்த 5 ஆண்டுகள் செய்த சாதனைகள் மற்றும் நிறைவேற்றிய வாக்குறுதிகளை கூறி ஓட்டு கேட்டு வருகிறோம்.
வறுமையை ஒழிப்போம் என கடந்த 1951-ம் ஆண்டு முதல் காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கையில் கூறி வருகிறது. ஆனால் 70 ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்னமும் அதை தேர்தல் அறிக்கையாக வெளியிட்டு வருகிறதே தவிர, வறுமையை இதுவரை அந்த கட்சி ஒழித்தது இல்லை. ஆனால் நாங்கள் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் முன்னேற்றத்துக்காக பாடுபட்டு வருகிறோம்.
நடுத்தர மக்களின் நலனுக்காக வருமான வரி சலுகை அளித்து உள்ளோம். ஜி.எஸ்.டி.யை குறைத்து இருக்கிறோம். இந்திய நடுத்தர மக்களின் முன்னேற்றம் வரும் காலத்தில் சர்வதேச பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும். அதை சீனா ஏற்கனவே செய்து காட்டி உள்ளது. ஆனால் அதே சமயம் நடுத்தர மக்கள் முன்னேற்றம் குறித்து காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் எதுவும் கூறவில்லை என்பதை குறிப்பிட விரும்புகிறேன்.
மத்தியில் தொங்கு பாராளுமன்றம் அமைய வேண்டும் என எதிர்க்கட்சிகள் விரும்புகின்றன. ஒரு கேப்டனை கொண்ட கட்சியின் ஆட்சி வேண்டுமா? 40 கேப்டன்களை கொண்ட கட்சியின் ஆட்சி வேண்டுமா? என்பதில் மக்கள் தெளிவாக உள்ளனர்.
கடந்த 2014-ம் ஆண்டு தேர்தலை போலவே இந்த தேர்தலிலும் பா.ஜனதா பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும். அதன் முன்னோட்டமாக எங்கள் தேர்தல் அறிக்கை இன்று (திங்கட்கிழமை) வெளியிடப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது மத்திய மந்திரி பியூஸ் கோயல் மற்றும் பா.ஜனதா நிர்வாகிகள் உடன் இருந்தனர். #ArunJaitley #BJP
இந்திய கிரிக்கெட் அணி வீரர் கவுதம் காம்பீர், தொடக்க வீரராக களம் இறங்கிய அவர் 2011-ம் ஆண்டு உலக கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா வெற்றி பெற முக்கிய பங்காற்றினார். ஐ.பி.எல். போட்டியில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிக்கு கேப்டனாக செயல்பட்டு கோப்பையையும் வென்று கொடுத்தார்.
![](https://img.maalaimalar.com/InlineImage/201903221240547364_1_gambir._L_styvpf.jpg)
பிரதமர் மோடியின் தொலைநோக்குப் பார்வையால் ஈர்க்கப்பட்டு பாஜகவில் சேர்ந்ததாகவும், பாஜகவில் இணைந்து பணியாற்றுவதற்கு வாய்ப்பு கிடைத்ததால் பெருமைப்படுவதாகவும் காம்பீர் கூறினார்.
பாராளுமன்ற தேர்தலில் காம்பீர் போட்டியிட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. பாஜகவின் அடுத்த வேட்பாளர் பட்டியலில் காம்பீர் பெயர் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. #GautamGambhir #GambhirJoinsBJP #GambhirInBJP
மத்திய நிதி மந்திரியும், பா.ஜனதா விளம்பர குழு பொறுப்பாளருமான அருண் ஜெட்லி சமூக வலைத்தளத்தில் ‘2019 குறிப்பேடு’ என்ற தலைப்பில் கூறியிருப்பதாவது:-
நேரு காங்கிரசில் இருந்த பல்வேறு தேசிய தலைவர்களை புறக்கணித்துவிட்டு தனது மகள் இந்திரா காந்தியை கட்சியின் தலைவராக்கியதன் மூலம் இந்தியாவில் குடும்ப அரசியலுக்கான விதை விதைக்கப்பட்டது. அதிலிருந்து பரம்பரை, பரம்பரையாக காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவி அந்த விருப்பமான குடும்பத்தில் இருக்கும் உறுப்பினர்களுக்கே ஒதுக்கப்படுகிறது.
ஜவகர்லால் நேருவிடம் இருந்து இந்திரா காந்தி, அவரிடமிருந்து சஞ்சய் காந்தி, அவரிடம் இருந்து ராஜீவ் காந்தி. எதிர்பாராத வகையில் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட பிறகு ஒரு குறுகிய காலத்துக்கு (நரசிம்மராவ் காலம்) காங்கிரஸ் தன்னை அந்த குடும்ப அரசியல் விலங்கில் இருந்து விடுவித்துக்கொள்ள முயற்சி செய்தது. ஆனால் அதன் பிடியிலிருந்து நீண்டகாலம் வெளியில் இருக்க முடியவில்லை.
பின்னர் சோனியா காந்தி கட்சியின் தலைவராக பொறுப்பேற்று நீண்டகாலம் பணியாற்றினார். அதன்பின்னர் கட்சி தலைவருக்கான செங்கோலை தனது மகன் ராகுல் காந்திக்கு வழங்கினார். கட்சி இப்போது உற்சாகம் இழந்து இருப்பதால், மற்றொரு குடும்ப உறுப்பினர் (பிரியங்கா காந்தி) அரசியலுக்கு வந்துள்ளார்.
முக்கிய கேள்வி என்னவென்றால், இந்த குடும்ப கட்சிகள் 2014 படுதோல்வியில் இருந்து பாடம் கற்றுள்ளதா? 2019-ல் தோல்வியை தவிர்க்க சாத்தியம் உள்ளதா? சாத்தியம் இல்லை. இந்திய மக்கள் ஒரு மாற்றத்தை கொண்டுவர விரும்புகிறார்கள். இந்தியா ஒரு முடியாட்சி அல்ல. இது என்ன மன்னராட்சியா? அல்லது பரம்பரை ஜனநாயகமா? பரம்பரைவாதிகள் தகுதி, திறமை வாய்ந்த நபர்களை ஏற்றுக்கொள்வதில்லை.
![](https://img.maalaimalar.com/InlineImage/201903160656111247_1_rahul-priyanka-gandhi._L_styvpf.jpg)
தகுதியும், திறமையும் வாய்ந்த ஒரு மனிதரால் இறுதியாக இந்த கட்சிகள் தோற்கடிக்கப்பட்டு, பரம்பரை கதைகள் குழிதோண்டி புதைக்கப்படும்போது தான் ஜனநாயகத்தின் உண்மையான வலிமை தெரியவரும். அதுதான் இந்தியர்களுக்கு சிறந்த வாய்ப்புகளை வழங்கும்.
அடுத்த தலைமுறையில் ஒன்றுக்கு மேற்பட்ட வாரிசுகள் இருக்கலாம். அனைத்து வாரிசுகளுக்கும் தலைவராகும் ஆசை வரும். அப்போது பெற்றோர் பெருந்தன்மையாக வழங்குவார்கள். சமீபத்திய வரலாறு இதனை வேறுவழியில் நிரூபித்துள்ளது.
அதிகாரத்தை வாரிசுகள் பங்கிடும்போது யார் பெரிய மன்னர்? என்ற கேள்வி எழும். உத்தரபிரதேசம், பீகார், அரியானா, ஆந்திரா போன்ற சில மாநிலங்களில் இதுபோன்ற குடும்ப அரசியல் நிலவுகிறது. ஒரு சோதனையாக கர்நாடகாவில் மகன்கள் மாநிலத்தில் பங்கேற்பதும், பேரன்கள் மத்தியில் பங்கேற்பதும் நடைபெறுகிறது. மராட்டியத்திலும் இது தொடங்கி ஆரம்பநிலையில் உள்ளது.
காங்கிரஸ் சில சோதனை களையும் செய்துள்ளது. ஒரு உரிமையாளரைவிட 2 உரிமையாளர்கள் சிறந்தது என அக்கட்சி நம்புகிறது. ஒன்று தோற்றுவிட்டது, மற்றொன்று இன்னும் புறப்படவில்லை.
இவ்வாறு அருண் ஜெட்லி கூறியுள்ளார். #ArunJaitley #Congress #BJP