என் மலர்
நீங்கள் தேடியது "Subramanian Swamy"
- கம்யூனிஸ்டுகளுக்கு எதிராக போராடியதில் இருந்தே அவரை நான் அறிவேன்.
- ஒரு காலத்தில் ஜெயலலிதா சக்திவாய்ந்த பெண்மணியாக இருந்தார்.
கொல்கத்தா:
மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தாவில், இந்திய தொழில் வர்த்தக சபை கூட்டமைப்பின் (பிக்கி) சார்பில் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பாஜக மூத்த தலைவரும் முன்னாள் மத்திய மந்திரியுமான சுப்பிரமணியன் சுவாமி கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களால் மிரட்ட முடியாத உண்மையான எதிர்க்கட்சி நாட்டிற்கு தேவை என்று நினைக்கிறேன். தற்போதுள்ள தலைவர்கள் பலரை நான் அறிவேன். தற்போதைய அரசாங்கத்திற்கு எதிராக ஒரு கட்டத்திற்கு மேல் செல்லமாட்டார்கள். ஏனென்றால் அவர்கள் மீது அமலாக்கத்துறையின் பார்வை திரும்பும் அல்லது வேறு ஏதாவது அமைப்பு விசாரணை நடத்தும் என அவர்கள் பயப்படுகிறார்கள். இது ஜனநாயகத்திற்கு நல்லதல்ல. எனவே, இந்தியாவிற்கு ஆளும் கட்சியுடன் நட்பு பாராட்டாத ஒரு எதிர்க்கட்சி தேவை.

மம்தா பானர்ஜி இந்தியாவின் பிரதமராக வேண்டும். அவர் தைரியமான பெண்மணி. அவர் கம்யூனிஸ்டுகளை எப்படி எதிர்த்து போராடினார் என்பதை பார்க்க வேண்டும். நான் அவரை 10 நாட்களுக்கு முன்பு சந்தித்தேன், ஆனால் யாருக்கும் தெரியாது. கம்யூனிஸ்டுகளுக்கு எதிராக போராடியதில் இருந்தே அவரை நான் அறிவேன். அவரை பிளாக்மெயில் செய்வது என்பது சாத்தியமற்றது.
இவ்வாறு அவர் பேசினார்.
இன்றைய சூழ்நிலையில் நாட்டில் மிகவும் சக்திவாய்ந்த பெண்மணி பற்றிய கேள்விக்கு பதிலளித்த சுவாமி, 'ஒரு காலத்தில் ஜெயலலிதா சக்திவாய்ந்த பெண்மணியாக இருந்தார். அப்படி மாயாவதியையும் நினைத்து பார்த்தேன். தற்போதைய சூழ்நிலையில், மம்தா பானர்ஜி அப்படிப்பட்ட தலைவராக இருக்கிறார். தலைநிமிர்ந்து நிற்கும் துணிவு கொண்ட ஒரே பெண் தலைவர் அவர்தான்' என்றார்.
- ராமர் பாலத்தை தேசிய பாரம்பரிய சின்னமாக அறிவிக்கக்கோரி சுப்பிரமணிய சாமி மனு தாக்கல் செய்துள்ளார்.
- மத்திய அரசிடம் 2 வாரங்களுக்குள் கோரிக்கை மனுவை அளிக்க சுப்பிரமணிய சாமிக்கு அனுமதி வழங்கினர்.
புதுடெல்லி :
ராமர் பாலத்தை தேசிய பாரம்பரிய சின்னமாக அறிவிக்கக்கோரி பா.ஜனதா மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி, சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்துள்ளார். அம்மனுவை தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு கடந்த ஜனவரி 19-ந்தேதி விசாரித்தது.
அப்போது, மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, ராமர் பாலத்தை தேசிய பாரம்பரிய சின்னமாக அறிவிக்கும் விவகாரம் ஆய்வில் உள்ளது என்று கூறினார்.
இதைத்தொடர்ந்து நீதிபதிகள், இந்த விவகாரம் தொடர்பாக மத்திய அரசிடம் 2 வாரங்களுக்குள் கோரிக்கை மனுவை அளிக்க சுப்பிரமணிய சாமிக்கு அனுமதி வழங்கினர். மத்திய அரசு எடுக்கும் முடிவு தொடர்பாக கோர்ட்டை நாடுவதற்கும் சாமிக்கு அனுமதி அளித்து, அவருடைய இடையீட்டு மனுவை முடித்து வைத்தனர்.
இந்த நிலையில், நேற்று தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன்பு சுப்பிரமணிய சாமி முறையிட்டார்.
''இந்த விவகாரம் தொடர்பாக மத்திய அரசு எவ்வித முடிவையும் எடுக்கவில்லை என்பதால் பொதுநல மனுவை தாக்கல் செய்துள்ளேன். அந்த மனுவை அவசரமாக விசாரிக்க வேண்டும்'' என்று கேட்டுக்கொண்டார்.
முறையீட்டை பரிசீலித்த தலைமை நீதிபதி, அரசியல்சட்ட அமர்வு முன்பு பட்டியலிடப்பட்டுள்ள வழக்குகள் நிறைவடைந்த பிறகு இந்த பொதுநல மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக தெரிவித்தார்.
- பா.ஜ.க. தி.மு.க., அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்து அரசியல் செய்யக்கூடாது என்றார் சுப்ரமணியன் சுவாமி.
- பிரதமர் வேட்பாளராக மோடியை கட்சி தலைமை அறிவிக்க வேண்டும் என்றார்.
சென்னை:
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் பா.ஜ.க. மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
வேறு மாநிலங்களில் உள்ளதுபோல் தமிழக பாரதிய ஜனதா கட்சி பணிகள் எதுவும் செய்வதில்லை. தி.மு.க., அ.தி.மு.க. கட்சிகளுடன் கூட்டணி வைத்து அரசியல் செய்யக்கூடாது. பா.ஜ.க. தனியாக நிற்க வேண்டும்.
தமிழகத்தில் அனைத்து தொகுதியிலும் வேட்பாளர்களை நிறுத்தி போட்டியிட்டால் தான் பா.ஜ.க. வளர்வதாக அர்த்தம். வரும் பாராளுமன்ற தேர்தலுக்கு பின்னர், மீண்டும் மோடி பிரதமராக வருவார் என்பதை எப்படி சொல்ல முடியும்? பிரதமர் வேட்பாளராக மோடியை கட்சி தலைமை அறிவிக்க வேண்டும். இதுவரை அப்படி எதுவும் முடிவாகவில்லை.
நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியுடன் சேர்ந்தால் இருக்கிற வாய்ப்பும் காங்கிரசின் ராகுல் காந்திக்கு இல்லாமல் போய்விடும் என தெரிவித்தார்.
- ஊழியர்களின் நடத்தையை விசாரிப்பதற்கான ஏற்பாட்டை ரிசர்வ் வங்கி கொண்டுள்ளது.
- சுப்பிரமணியசாமி ஆதாரமின்றி கோருவது ஏற்புடையதல்ல.
புதுடெல்லி :
பல்வேறு வங்கி முறைகேடுகள் தொடர்பாக ரிசர்வ் வங்கி உயரதிகாரிகளிடம் சி.பி.ஐ. விசாரிக்க உத்தரவிடக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் சுப்பிரமணியசாமி பொதுநல மனு தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவை நீதிபதிகள் பி.ஆர்.கவாய் தலைமையிலான அமர்வு விசாரித்து வருகிறது.
இதுதொடர்பாக பதில் அளிக்கும்படி மத்திய அரசுக்கு கடந்த விசாரணையின்போது உத்தரவிட்டது.
இந்த நிலையில் சுப்ரீம் கோர்ட்டில் ரிசர்வ் வங்கி தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:-
ஊழியர்களின் நடத்தையை விசாரிப்பதற்கான ஏற்பாட்டை ரிசர்வ் வங்கி கொண்டுள்ளது. மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையமும் ஊழியர்களை கண்காணித்து வருகிறது.
பல்வேறு வங்கி முறைகேடுகள் தொடர்பாக ரிசர்வ் வங்கி உயரதிகாரிகளிடம் சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என்று சுப்பிரமணியசாமி ஆதாரமின்றி கோருவது ஏற்புடையதல்ல. இதுபோன்ற மனுவை தாக்கல் செய்ய அவருக்கு உரிமையில்லை. எனவே அவரது மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று நடைபெற்ற விசாரணையின்போது சி.பி.ஐ. சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜராகி, சி.பி.ஐ. பதில் மனு தாக்கல் செய்ய வேண்டிய தேவையில்லை என்றும், குறிப்பிட்ட அதிகாரிகளுக்கு எதிராக தனியொரு விசாரணை நடத்த முடியாது என்றும் வாதிட்டார்.
மனுதாரர் சுப்பிரமணியசாமி ஆஜராகி, ரிசர்வ் வங்கியின் பதில் மனு நேற்றுதான் கிடைத்தது. எனவே அதற்கு விளக்கம் அளிக்க அவகாசம் தேவை என வாதிட்டார்.
அதை ஏற்ற சுப்ரீம் கோர்ட்டு, விளக்கமனு தாக்கல் செய்ய 3 வாரம் அவகாசம் அளித்து, விசாரணையை 4 வாரங்களுக்கு தள்ளிவைத்தது.
- நிதியமைச்சரை நீக்க, கேரள முதலமைச்சருக்கு, ஆளுநர் கடிதம்.
- ஆரிப் கோரிக்கையை நிராகரித்தார் பினராயி விஜயன்.
திருவனந்தபுரம்:
கேரளாவில் ஆளுநர் ஆரிப் முகமது கான், மாநில அரசுக்கும் இடையே உச்சகட்ட மோதல் நீடித்து வருகிறது. ஆளுநரை நீக்க வேண்டும் என்று முதலமைச்சர் பினராயி விஜயன் வலியுறுத்தி வருகிறார். இந்நிலையில் கேரள நிதியமைச்சர் கே.என்.பாலகோபாலை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான், முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அக்டோபர் 19 ஆம் தேதி திருவனந்தபுரம் பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாநில நிதியமைச்சர் பாலகோபால் பேசியது இந்தியாவின் ஒற்றுமைக்கு எதிரானதாகவும், பிராந்தியவாதத்தை ஊக்குவிக்கும் வகையிலும் இருப்பதாகவும் தமது கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பதவிப் பிரமாணம் செய்துவைத்தபோது அவர் எடுத்த உறுதிமொழியை மீறுவதாக இது அமைந்துள்ளது. உறுதிமொழியை வேண்டுமென்றே மீறுபவர்கள் பதவியில் இருக்கத் தகுதியானவர்கள் அல்ல. எனவே அவர் மீது கடுமையான நடவடிக்கை அவசியம் என்று தமது கடிதத்தில் ஆளுநர் ஆரிப் முகமது கான் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் அமைச்சர் கே.என்.பாலகோபால் பேச்சில் தவறு இல்லை என்றும், அதனால் அவரை பதவி நீக்கம் செய்ய முடியாது என்றும் முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்து விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதனிடையே, பா.ஜ.க. மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ஆளுநர் என்பவர் குடியரசுத் தலைவரையும், மத்திய அரசையும் பிரதிநிதித்துவப்படுத்துகிறார் என்பதை கேரள கம்யூனிஸ்டுகள் புரிந்து கொள்ள வேண்டும். கேரள ஆளுநரின் ஒரு முடியை தொட்டால் கூட கேரள அரசை கலைக்க மத்திய அரசு தயாராக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- கொழும்புவில் ராஜபக்சே சகோதரர்களை சுப்ரமணிய சாமி நேரில் சந்தித்து பேசினார்.
- அதிபர் பதவியில் இருந்து விலகி வெளிநாடு தப்பி ஓடிய கோத்தபய ராஜபக்சே சமீபத்தில் தாய்நாடு திரும்பினர்.
கொழும்பு:
பா.ஜ.க. மூத்த தலைவர்களில் ஒருவர் சுப்ரமணிய சாமி. இலங்கை முன்னாள் அதிபர்களான மகிந்த மற்றும் கோத்தபய ராஜபக்சேவின் குடும்ப நண்பர் ஆவார். அவர்களை கொழும்புவில் அடிக்கடி சந்தித்தும் வருகிறார்.
இந்நிலையில், கொழும்புவில் நேற்று முன்தினம் மகிந்த ராஜபக்சே வீட்டில் நடந்த நவராத்திரி பூஜையில் சுப்ரமணிய சாமி பங்கேற்றார். அப்போது அவரைச் சந்தித்து பேசினார். இதைத்தொடர்ந்து நேற்று கோத்தபய ராஜபக்சேவையும் சந்தித்துப் பேசினார். இந்த தகவல்களை ராஜபக்சே குடும்ப வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
வெளிநாடு தப்பி ஓடிய கோத்தபய ராஜபக்சே சமீபத்தில்தான் தாய்நாடு திரும்பினார். அவரைச் சந்தித்த முதல் வெளிநாட்டு தலைவர் சுப்ரமணிய சாமி என்பது குறிப்பிடத்தக்கது
- சுப்பிரமணியசாமிக்கு டெல்லியில் 2016-ம் ஆண்டு அரசு பங்களா ஒதுக்கப்பட்டது.
- அரசு பங்களாவை மீண்டும் ஒதுக்கித்தர கோரி சுப்பிரமணியசாமி மனு தாக்கல் செய்தார்.
புதுடெல்லி :
கடந்த ஏப்ரல் மாதம் வரை மாநிலங்களவை உறுப்பினராக இருந்த சுப்பிரமணியசாமிக்கு டெல்லியில் கடந்த 2016-ம் ஆண்டு அரசு பங்களா ஒதுக்கப்பட்டது. பதவிக்காலம் முடிவடைந்ததை தொடர்ந்து, அந்த அரசு பங்களாவை மீண்டும் ஒதுக்கித்தர கோரி சுப்பிரமணியசாமி டெல்லி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.
அந்த மனுவை நீதிபதி யஷ்வந்த் வர்மா விசாரித்தார்.
சுப்பிரமணியசாமி சார்பில் ஆஜரான வக்கீல் ஜெயந்த் மேத்தா, மனுதாரருக்கான இசட் பிரிவு பாதுகாப்பை கருத்தில்கொண்டு மீண்டும் அதே பங்களாவை ஒதுக்கித்தர உத்தரவிட வேண்டும் என வாதிட்டார்.
மத்திய அரசின் சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சஞ்சய் ஜெயின், சுப்பிரமணியசாமிக்கு அளிக்கப்படும் பாதுகாப்பு தொடரும். ஆனால் அதே அரசு பங்களாவை ஒதுக்கித்தர முடியாது என வாதிட்டார்.
இரு தரப்பு வாதங்களையும் பதிவு செய்துகொண்ட நீதிபதி, இசட் பிரிவு பாதுகாப்பு வழங்கப்படும் முக்கிய பிரமுகர்களுக்கு அரசு பங்களா ஒதுக்க வேண்டும் என்ற உத்தரவு எதுவும் இல்லை. எனவே, சுப்பிரமணியசாமிக்கு ஒதுக்கப்பட்ட பங்களாவை 6 வாரங்களுக்குள் எஸ்டேட் அலுவலகரிடம் ஒப்படைக்க வேண்டும் என உத்தரவிட்டார்.
ஜெட் ஏர்வேஸ் விமான நிறுவனம் ரூ.8 ஆயிரம் கோடி கடனில் தத்தளிக்கிறது. நிதி நெருக்கடியால் அனைத்து விமான சேவைகளையும் அந்த நிறுவனம் நிறுத்தி வைத்துள்ளது.
ஜெட் ஏர்வேஸ் விமான நிறுவனத்தின் வீழ்ச்சிக்கு நிதி மந்திரி அருண் ஜெட்லியும், சிவில் விமான போக்குவரத்து ராஜாங்க மந்திரி ஜெயந்த் சின்காவும் தான் காரணம் என பாரதீய ஜனதா கட்சி மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி கூறி உள்ளார்.

ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்துக்கு பார்சல் செய்து கொடுக்கும் வேலையை செய்ய வேண்டாம் என அருண் ஜெட்லிக்கும், ஜெயந்த் சின்காவுக்கும் நரேந்திர மோடி கூற வேண்டும் என்றும் சுப்பிரமணிய சாமி கேட்டுக்கொண்டுள்ளார்.
இதையொட்டி அவர் சிவில் விமான போக்குவரத்து மந்திரி சுரேஷ் பிரபுவுக்கும் அவர் ஒரு கடிதமும் எழுதி உள்ளார்.
இந்த தகவல்களை அவர் டுவிட்டரில் தெரிவித்துள்ளார். #JetAirways #SubramanianSwamy
அவனியாபுரம்:
பா.ஜ.க. மூத்த தலைவர் சுப்பிரமணியசாமி, மதுரை விமான நிலையத்தில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-
மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்க தேவர் பெயரை சூட்டவேண்டும் என்று 2 முறை மத்திய அரசிடம் கூறினேன். 2001ல் சரத்யாதவ் அமைச்சராக இருந்த போது மத்திய அமைச்சரவை முடிவு எடுத்தது. அப்போது தமிழக அரசு ஒப்புதல் அளிக்கவில்லை.
பிரபுல் படேல் விமான நிலைய திறப்பு விழாவில், முத்துராமலிங்க தேவரின் பெயரை கூற முயன்ற போது முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கலவரம் வரும் என தடுத்தார்.
தமிழக முதல்வராக ஓ.பன்னீர் செல்வம் இருந்த போது மதுரை விமான நிலையத்திற்கு முத்து ராமலிங்க தேவர் பெயர் சூட்ட அனுப்பிய திட்டத்தை நிராகரித்தவர் ஓ.பி.எஸ்.தான்.
பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வுக்கு தனி மெஜாரிட்டி கிடைக்கும். பா.ஜ.க.வின் கூட்டணி கொள்கை பிடிக்கவில்லை. தனிப்பட்ட முறையில் போட்டியிடத்தான் எனக்கு விருப்பம்.
ராகுல்காந்தி தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்தபடி ஏழைகளுக்கு ரூ.72 ஆயிரத்தை எங்கிருந்து கொடுப்பார்? வங்கியில் இருந்தா கொடுப்பார்?
இவ்வாறு அவர் கூறினார். #subramanianswamy #bjp #parliamentelection
