என் மலர்
நீங்கள் தேடியது "அயோத்தி ராமர் கோவில்"
- அயோத்தியில் சாலையோர வியாபாரிகளுக்கு அதிகாரிகள் தண்டனை கொடுத்தனர்.
- தோப்புக்கரணம் போட வைத்ததோடு, சுவரில் தலைகீழாக நிற்க வைத்தது சர்ச்சையை கிளப்பியது.
லக்னோ:
உத்தர பிரதேச மாநிலம் அயோத்தி ராமர் கோவிலுக்கு அருகே சாலையோர வியாபாரிகள் சிலர் பூஜை பொருட்கள் விற்பனை செய்து வருவதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், மாநகராட்சி அதிகாரிகள் ஆக்கிரமிப்பு செய்துள்ளவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வந்தனர்.
அவர்கள் அங்கிருந்த வியாபாரிகளை கோவில் பாதையை ஆக்கிரமித்ததாகக் கூறி தோப்புக்கரணம் போட வைத்தனர். மேலும் சுவரில் தலைகீழாக நிற்க வைத்தனர்.
இதுதொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோ காட்சிகள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
- ஒரு துறவி சமூகத்தை தனது குடும்பமாகவும், தேசத்தை தனது குலமாகவும் கருதுவார், அவரது ஒரே அடையாளம் சனாதன தர்மம் தான்.
- ராமர் கோவில், இரு மகான்களின் உறுதியான போராட்டத்திற்கு சான்றாக நிற்கிறது.
அயோத்தி ராமர் கோயில் குறித்து ஒருவர் பெருமையடையவில்லை என்றால், அவர் இந்தியர் என்பதே சந்தேகம்தான் என உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.
நேற்று, கோரக்நாத் கோவிலில் மகான் திக்விஜய்நாத்தின் 56-வது நினைவு நாளையும், மகான் அவைத்தியநாத்தின் 11-வது நினைவு நாளையும் முன்னிட்டு நடைபெற்ற விழாவில் யோகி ஆதித்யநாத் கலந்துகொண்டார்.
அப்போது பேசிய அவர், "இன்று, இந்தியாவில் ராமர் கோவிலை கண்டு பெருமைப்படாதவர்கள் யார்? அப்படிப் பெருமை கொள்ளாதவர்கள் இந்தியர்களாக இருப்பது சந்தேகத்திற்குரியது" என்று தெரிவித்தார்.
மேலும், "ஒரு துறவி சமூகத்தை தனது குடும்பமாகவும், தேசத்தை தனது குலமாகவும் கருதுவார், அவரது ஒரே அடையாளம் சனாதன தர்மம் தான். ராமர் கோவில், இரு மகான்களின் உறுதியான போராட்டத்திற்கு சான்றாக நிற்கிறது" என்று தெரிவித்தார்.
- அயோத்தி விமான நிலையம் வந்த அவருக்கு மாவட்ட நிர்வாகம் சிவப்பு கம்பள வரவேற்பு அளித்தது.
- ராமர் கோவில், அனுமன் கோவில் மற்றும் பிற முக்கிய கோவில்களில் டோப்கே தரிசனம் செய்தார்.
லக்னோ:
பூட்டான் பிரதமர் தாஷோ ஷெரிங் டோப்கே, தனது மனைவியுடன் இந்தியா வந்துள்ளார். இந்திய விமானப் படையின் சிறப்பு விமானம் மூலம் அயோத்தி விமான நிலையம் வந்தடைந்த அவருக்கு மாவட்ட நிர்வாகம் சிவப்பு கம்பள வரவேற்பு அளித்தது. உத்தர பிரதேச மந்திரி உள்பட மற்றும் பல்வேறு அரசு அதிகாரிகள் அவரை வரவேற்றனர்.
இந்நிலையில், அயோத்தியில் உள்ள ராமர் கோவிலுக்கு பூட்டான் பிரதமர் தாஷோ ஷெரிங் டோப்கே இன்று வருகை தந்தார். ராமர் கோவிலில் சாமி தரிசனம் செய்த அவர், அயோத்தியில் உள்ள பிற முக்கிய கோவில்களுக்கும் சென்று வழிபாடு செய்தார்.
விமான நிலையத்தில் இருந்து கார் மூலம் அலகாபாத் மற்றும் லக்னோ-கோரக்பூர் நெடுஞ்சாலைகள் வழியாக ராமர் கோவிலை அடைந்த டோப்கே அயோத்தி ராமர் கோவில், அனுமன் கோவில் மற்றும் பிற முக்கிய கோவில்களில் சாமி தரிசனம் செய்தார்.
- உத்தரபிரதேசம் மாநிலம் அயோத்தியில் உள்ள ராமர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.
- அனுமர் கோவிலிலும் பிரார்த்தனையில் ஈடுபட்டார்.
உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேனான இந்திய வீரர் விராட் கோலி சமீபத்தில் டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றார்.
ஐ.பி.எல். போட்டியில் பெங்களூரு அணிக்காக விளையாடி வரும் விராட் கோலி இன்று மனைவி அனுஷ்கா சர்மாவுடன் உத்தரபிரதேசம் மாநிலம் அயோத்தியில் உள்ள ராமர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.
இதேபோல அனுமர் கோவிலிலும் பிரார்த்தனையில் ஈடுபட்டார். அப்போது விராட்கோலி நிருபர்கள் சந்திப்பை தவிர்த்தார்.
- மொபைல் போனில் பத்து ஆபாச வீடியோக்களைக் கண்டறிந்தனர்.
- கெஸ்ட் ஹவுஸை மூடிய போலீசார் சௌரப்-ஐ கைது செய்தனர்.
உத்தரப் பிரதேசத்தில் உள்ள அயோத்தி ராமர் கோவிலுக்கு வந்த பெண் பக்தர் குளிக்கும்போது படம்பிடித்த கெஸ்ட் ஹவுஸ் ஊழியர் கைது செய்யப்பட்டார்.
நேற்று (ஏப்ரல் 11) லை 6:30 மணியளவில் அயோத்தி ராமர் கோயிலின் கேட் எண் 3 க்கு முன்னால் உள்ள கெஸ்ட் ஹவுஸ் ஒன்றில் குளியறையில் 30 வயது பெண் பக்தர் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது அந்த விடுதியின் சமையல்காரர் சௌரப் ரகசியமாக அவரை படம்பிடித்துக்கொண்டிருந்தபோது கையும் களவுமாக சிக்கினார்.
தொடர்ந்து தகவலின்பேரில் அங்கு வந்த போலீசார் நடத்திய விசாரணையில் அவரின் மொபைல் போனில் பத்து ஆபாச வீடியோக்களைக் கண்டறிந்தனர்.
அந்த கெஸ்ட் ஹவுசில் தங்கும் பெண்களை ஆபாசமாக படம் பிடிப்பதை அவர் வாடிக்கையாக வைத்திருக்கிறார். மேலும் அந்த கெஸ்ட் ஹவுஸ் முறையான பதிவு இன்றி செயல்பட்டு வந்ததும் தெரியவந்தது. இதைதொடர்ந்து கெஸ்ட் ஹவுஸை மூடிய போலீசார் சௌரப்-ஐ கைது செய்தனர்.
முன்னதாக உத்தரப் பிரதேசத்தில் பிரயாக்ராஜில் கடந்த முதல் பிப்ரவரி இறுதி வரை நடந்த மகா கும்பமேளாவின் போது பெண்கள் குளித்து உடை மாற்றும்போது பதிவு செய்யப்பட்ட வீடியோக்கள் சமூக ஊடகங்களில் விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
- அயோத்தியில் வழக்கத்தை விட பக்தர்களின் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.
- 2 லட்சத்திற்கும் மேற்பட்ட தீபங்கள் ஏற்ற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அயோத்தி:
நாடு முழுவதும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) ராம நவமி திருநாள் விமரிசையாக கொண்டாடப்படுகிறது. ராமா் பிறந்த இடமான அயோத்தியில் வழக்கத்தை விட பக்தர்களின் கூட்டம் பல்லாயிரக்கணக்கில் அதிகரித்து காணப்படுகிறது.
அயோத்தியில் சமீபத்திய நாள்களில் சுட்டெரிக்கும் அதிக வெயில் காராணமாக பொது பக்தா்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில், ராமா் கோவிலில் இன்று நண்பகல் வரை சிறப்பு அனுமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
வெயில் தாக்கத்தில் இருந்து பக்தர்களை மீட்க அவர்கள் மீது சரயு நதிநீரை டிரோன்கள் மூலம் தெளித்து வருகிறார்கள்.இன்று இரவு 2 லட்சத்திற்கும் மேற்பட்ட தீபங்கள் ஏற்ற ஏற்பாடு செய்யப்பட் டுள்ளது.
அயோத்தி நகரில் ஆங்காங்கே நிறுவப்பட் டுள்ள எல்.இ.டி. திரைகள் மூலம் கோவிலில் நடைபெறும் சிறப்புப் பூஜைகள் நேரடியாக ஒளிபரப்பப்படுகின்றன.
பக்தா்களுக்கு எந்த சிரமமும் ஏற்படாமல் இருக்க கனரக வாகனங்கள் பூா்வாஞ்சல் விரைவுச்சாலை வழியாக நகருக்கு வெளியே திருப்பி விடப்பட்டுள்ளது.
- தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் தாலுகாவில் உள்ள ஏரல் என்ற சிறிய நகரத்திற்கு அயோத்தியில் ‘உயர்ந்த கவுரவம்’ கிடைக்க உள்ளது.
- வெண்கலத்தால் 650 கிலோ எடை மற்றும் 4 அடி உயரம் கொண்ட பிரமாண்டமான மணி தயாரிக்கும் பணியை கடந்த 2020ம் ஆண்டு தொடங்கிய ராமநாதன் இதற்காக தொழில்முறை கைவினைஞர்கள் 20 பேரை ஈடுபடுத்தினார்.
செய்துங்கநல்லூர்:
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படையான திருச்செந்தூர், இந்தியாவில் மைசூருக்கு அடுத்தபடியாக கோலாகலமான தசரா நடைபெறும் குலசேகரன்பட்டினம், நவதிருப்பதி தலங்கள், தமிழகத்தின் எல்லோரா என அழைக்கப்படும் கயத்தாறு கோவில் என பல்வேறு ஆன்மீக தலங்களை கொண்டுள்ளது தூத்துக்குடி மாவட்டம்.
இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் தாலுகாவில் உள்ள ஏரல் என்ற சிறிய நகரத்திற்கு அயோத்தியில் 'உயர்ந்த கவுரவம்' கிடைக்க உள்ளது. ஏனெனில் இந்த ஊரில் செய்யப்பட்ட மணி அங்குள்ள ராமர் கோவில் கருவறைக்கு மேலே தொங்கவிடப்படுகிறது.
ஏரலில் 2 தலைமுறையாக செயல்பட்டு வருகிறது ராமகிருஷ்ணா நாடார் பாத்திரக்கடை. இதன் உரிமையாளராக ராமநாதன் என்பவர் உள்ளார். இவர் பாத்திரம் தயாரிப்பில் கடந்த 35 ஆண்டுகளாக ஈடுபட்டு வருகிறார்.
இவர் உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோவில் கருவறைக்கு மேலே தொங்கவிடுவதற்காக பிரமாண்ட மணி ஒன்றை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டார்.
வெண்கலத்தால் 650 கிலோ எடை மற்றும் 4 அடி உயரம் கொண்ட பிரமாண்டமான மணி தயாரிக்கும் பணியை கடந்த 2020ம் ஆண்டு தொடங்கிய ராமநாதன் இதற்காக தொழில்முறை கைவினைஞர்கள் 20 பேரை ஈடுபடுத்தினார்.
இந்த பிரமாண்ட மணி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சென்னையை சேர்ந்த சட்ட உரிமைக் குழுவைச் சேர்ந்த குழு, கேட்டு கொண்டதற்கு இணங்க உருவாக்கப்பட்டது.
அப்போது அயோத்திக்கு கொண்டு செல்லப்படுவதற்கு முன்பு 2020-ம் ஆண்டு செப்டம்பரில் ராமேஸ்வரத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இது தொடர்பாக பாத்திரக்கடை உரிமையாளர் ராமநாதன் கூறியதாவது:-
உலோக பாத்திரங்கள் தயாரிப்புத் துறையில் 35 வருடமாக ஈடுபட்டு வருகிறேன். 2 தலைமுறையாக இந்த தொழில் செய்து வருகிறோம்.
எனது 35 ஆண்டு பணியில் அயோத்திக்கு மணி என்பது எனது தொழில் வாழ்க்கையில் மிகப்பெரிய தயாரிப்பு. பிரமாண்ட மணி தயாரிப்பிற்காக தொழிலாளர் செலவு மட்டும் ரூ. 2 லட்சம் செலவிடப்பட்டது.
எங்களது கடையில் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான விளக்குகள் (குத்து விளக்கு) உட்பட அதிகமான கோவில் பாத்திரங்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது.
அயாத்தி ராமர் கோவிலுக்கு மணி தயாரிப்பிற்கு பின்னர் திருச்செந்தூர் மற்றும் தஞ்சாவூர் கோவில்களில் இருந்து ஆர்டர் கிடைக்கும்.
கோவில்கள் மட்டுமின்றி கேரளாவில் உள்ள தேவாலயங்களுக்கு ஏரலில் மணிகள் தயாரிக்கப்படுகின்றன. பாத்திரங்கள் மற்றும் கப்பல்கள் உற்பத்திக்கு தாயகமாக விளங்கும் ஏரல், கடல் மார்க்கமாக இலங்கையின் கொழும்புக்கு ஏற்றுமதி செய்வதில் குறிப்பிடத்தக்க இடத்தைப் பெற்றுள்ளது. இன்னும், சில நூறு ஆண்டுகள் பழமையான பாத்திரங்கள் கடைகள் ஏரலில் உள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.
- அயோத்தியை சர்வதேச சுற்றுலா தலமாக மேம்படுத்தும் பணிகள் நடந்து வருகின்றன.
- இந்த கோவில் 2024-ம் ஆண்டு திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
லக்னோ :
உத்தரபிரதேசத்தின் அயோத்தியில் ராமபிரான் பிறந்த இடத்தில் அவருக்கு பிரமாண்ட கோவில் கட்டும் பணிகள் நடந்து வருகின்றன. 3 தளங்களுடன் 161 அடி உயரம் கொண்ட இந்த கோவில் 2024-ம் ஆண்டு தொடக்கத்தில் பக்தர்களின் வழிபாட்டுக்கு திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த கோவில் கட்டுமான பணிகள் ஒருபுறம் நடந்து கொண்டிருக்க, கோவிலை ஒட்டியுள்ள பகுதிகளை மேம்படுத்தும் பணிகளை மாநில அரசு மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக அயோத்தியை சர்வதேச சுற்றுலா தலமாக மேம்படுத்தும் பணிகள் நடந்து வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக, பல்வேறு இடங்களில் இருந்து ராமர் கோவிலை எளிதாக அடையும் வகையில் சாலை கட்டமைப்பை மேம்படுத்த அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக ரூ.1,000 கோடியில் மெகா திட்டம் வகுக்கப்பட்டு உள்ளது.
நிலம் கையகப்படுத்தல், குடியிருப்பாளர்கள், கடை உரிமையாளர்களின் மறுவாழ்வு மற்றும் புதிய கட்டிடங்கள் கட்டுதல், சாலை அமைத்தல் உள்ளிட்ட பணிகளுக்காக இந்த திட்டம் தயாரிக்கப்பட்டு உள்ளது.
இந்த திட்டத்துக்கு உத்தரபிரதேச அரசு ஒப்புதல் அளித்து உள்ளது. முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் தலைமையில் நடந்த உயர்மட்டக்குழு கூட்டத்தில் இதற்கான ஒப்புதல் வழங்கப்பட்டது.
இது குறித்து அரசின் செய்தி தொடர்பாளர் ஒருவர் கூறுகையில், 'இந்த திட்டத்தின் மூலம், ராம ஜென்மபூமிக்கு செல்லும் அனைத்து சாலைகளும் விரிவுபடுத்தப்பட்டு, அழகுபடுத்தப்பட்டு, ராமபிரானை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு அழகிய சூழல் உருவாக்கப்படும்' என்று கூறினார்.
இதில் முக்கியமாக, சுக்ரீவா கோட்டையில் இருந்து ராம ஜென்மபூமி வரையான 566 மீட்டருக்கு பக்தர்களின் வசதிக்காக நான்கு வழிச்சாலை அமைக்கப்படுகிறது. இதற்கு ஜென்மபூமி பாதை என்று பெயரிடப்பட்டுள்ளது.
இதற்காக ரூ.83.33 கோடிக்கு யோகி ஆதித்யநாத் ஒப்புதல் அளித்து இருப்பதாக அரசு வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.
- பிரதமர் மோடியின் கைகளில் நாடு பாதுகாப்பாக உள்ளது.
- திரிபுராவில் ஓரிரு மாதங்களில் சட்டசபை தேர்தல் நடக்கிறது.
அகர்தலா :
பா.ஜனதா ஆட்சி நடக்கும் திரிபுராவில், ஓரிரு மாதங்களில் சட்டசபை தேர்தல் நடக்கிறது. இதையொட்டி, அங்கு சப்ரூம் என்ற இடத்தில் பா.ஜனதா ரத யாத்திரையை மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தொடங்கி வைத்தார்.
மாநில அரசின் சாதனைகளை விளம்பரப்படுத்தும் நோக்கத்தில் இந்த யாத்திரை நடத்தப்படுகிறது.
பின்னர் நடந்த பொதுக்கூட்டத்தில் அமித்ஷா பேசியதாவது:-
காங்கிரசும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியும் ராமஜென்மபூமி வழக்கை நீண்ட காலமாக கோர்ட்டிலேயே வைத்து இழுத்தடித்தன.
ஆனால், சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு அளித்தவுடன் பிரதமர் மோடி பிரமாண்ட ராமர் கோவில் கட்ட அடிக்கல் நாட்டினார்.
நான் சொல்வதை ராகுல்காந்தி கேட்டுக் கொள்ளட்டும். அடுத்த ஆண்டு ஜனவரி 1-ந் தேதிக்குள் அயோத்தியில் ராமர் கோவில் தயாராகி விடும்.
பிரதமர் மோடியின் கைகளில் நாடு பாதுகாப்பாக உள்ளது. 2019-ம் ஆண்டு, காஷ்மீரில் புல்வாமாவில் பயங்கரவாத தாக்குதல் நடந்தது. 10 நாட்கள் கழித்து, இந்திய வீரர்கள் பாகிஸ்தானுக்குள் புகுந்து துல்லிய தாக்குதல் நடத்தினர்.
இவ்வாறு அவர் பேசினார்.
- ராமர் கோவில் கட்டுமான பணி உரிய நேரத்தில் முடிவடையும்.
- டிசம்பர் மாதமே கோவில் திறப்பு கொண்டாட்டங்கள் தொடங்கி விடும்.
லக்னோ :
அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோவில் அடுத்த ஆண்டு ஜனவரி 1-ந்தேதிக்குள் தயாராகி விடும் என்று மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா நேற்று முன்தினம் கூறியிருந்தார். இந்தநிலையில், ராமஜென்மபூமி அறக்கட்டளை பொதுச்செயலாளர் சம்பத் ராய் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது:-
ராமர் கோவில் கட்டுமான பணி உரிய நேரத்தில் முடிவடையும். வருகிற டிசம்பர் மாதம் பணியை முடித்துவிட்டு, அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் கோவிலை திறக்க இலக்கு நிர்ணயித்துள்ளோம். அடுத்த ஆண்டு ஜனவரி 14-ந்தேதி மகர சங்கராந்தியன்று கோவில் கருவறையில் ராமர் சிலை நிறுவப்படும். அதைத்தொடர்ந்து கோவில் திறக்கப்படும். டிசம்பர் மாதமே கோவில் திறப்பு கொண்டாட்டங்கள் தொடங்கி விடும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- அயோத்தி ராமர் கோவில் கட்டுமான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
- ஒவ்வொரு ஆண்டும் ராமர் பிறந்த நாளையும், ராமர் -சீதையின் திருமண நாளையும் ஜனக்பூர் மக்கள் கொண்டாடுகின்றனர்.
புதுடெல்லி:
அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் பணிகளுக்கு கடந்த 2020-ம் ஆகஸ்ட் மாதம் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.
அதனை தொடர்ந்து கோவில் கட்டுமான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 500-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தினமும் 2 ஷிப்டுகளாக பணிபுரிந்து வருகின்றனர். கட்டுமான பணிகளை மேற்பார்வையிட ராம ஜென்ம பூமி அறக்கட்டளை அமைக்கப்பட்டுள்ளது.
கோவிலின் முதல் தள பணிகள் இந்த ஆண்டு முடிவடைய உள்ளது. கோவிலின் கீழ் தளத்தில் 160 தூண்களும், முதல் தளத்தில் 132 தூண்களும், 2-வது தளத்தில் 74 தூண்களும் அமைக்கப்படுகிறது. மேலும் 5 மண்டபங்களும் அமைக்கப்படுகிறது. கோவிலின் அருகே குபேர் திலா மற்றும் சீதா கூப் போன்ற பாரம்பரிய கட்டிடங்களை உருவாக்கவும் திட்ட மிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் கோவிலில் அமையும் ராமர், சீதா சிலை தயாரிப்பதற்காக நேபாளத்தில் கண்டகி நதிக்கரையில் இருந்து 2 பெரிய பாறைகளை நேபாளம் அனுப்ப உள்ளதாக நேபாளத்தின் முன்னாள் துணை பிரதமர் பிமலேந்திர நிதி கூறினார்.
இதுகுறித்து அவர் கூறிய தாவது:-நேபாளத்தை சேர்ந்த ஜனக் மன்னனின் மகள் சீதை என்று புராணங்கள் கூறுகின்றன. ஒவ்வொரு ஆண்டும் ராமர் பிறந்தநாளையும், ராமர் - சீதையின் திருமண நாளையும் ஜனக்பூர் மக்கள் கொண்டாடுகின்றனர்.
அயோத்தியுடன் எங்களுக்கு பல நூற்றாண்டுகள் பழமையான பந்தம் உள்ளது. எனவேதான் ராமர், சீதை சிலைகளுக்காக 2 பெரிய பாறைகளை அனுப்ப முடிவு செய்தோம். அதன்படி ராம ஜென்ம பூமி அறக்கட்டளை தலைவர் மற்றும் நிர்வாகிகளை கடந்த ஆண்டு சந்தித்தோம். பின்னர் கடந்த டிசம்பரில் நேபாள அரசிடம் இருந்து பாறைகளை அனுப்புவதற்காக அனுமதி கிடைத்தது.
இதைத்தொடர்ந்து ராமர், சீதை சிலைகள் தயாரிக்க 18 டன் மற்றும் 12 டன் எடை கொண்ட 2 பெரிய பாறைகளை தேர்வு செய்தோம். பின்னர் அந்த பாறைகளை கடந்த 15-ந் தேதி முதல் பூஜை செய்யப்பட்டு வருகிறது. இந்த பாறைகள் வருகிற 1-ந் தேதி அயோத்திக்கு கொண்டு செல்லப்படும்.
இதன்மூலம் நேபாளத்திற்கும் இந்தியாவிற்கும் இடையிலான மத உறவுகள் வலுப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- இந்த பாறைகள் 6 கோடி ஆண்டுகள் பழமையானவை.
- பாறைகளுக்கு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.
அயோத்தி :
அயோத்தியில் பிரமாண்டமான ராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது. அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் மகர சங்கராந்தி நாளில் கோவிலை திறக்கும்வகையில், பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.
கோவில் கர்ப்பகிரகத்தில் ராமரின் குழந்தை வடிவ சிலை நிறுவப்பட உள்ளது. அதை செதுக்குவதற்கான 2 அபூர்வ பாறைகள், நேபாள நாட்டின் முஸ்டாங் மாவட்டம் முக்திநாத் அருகே உள்ள கண்டாகி ஆற்றில் கண்டெடுக்கப்பட்டன.
இவை 6 கோடி ஆண்டுகள் பழமையானவை. ஒரு பாறை 26 டன் எடையும், இன்னொரு பாறை 14 டன் எடையும் கொண்டவை.
இந்த பாறைகள், 2 சரக்கு லாரிகளில் ஏற்றப்பட்டு, கடந்த மாதம் 25-ந் தேதி நேபாளத்தில் இருந்து புறப்பட்டன. விசுவ இந்து பரிஷத் தேசிய செயலாளர் ராஜேந்திரசிங் பங்கஜ் உடன் பயணித்தார்.
இந்த பாறைகள், நேற்று முன்தினம் இரவு அயோத்திக்கு வந்து சேர்ந்தன. நேற்று பாறைகளுக்கு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. 51 வேத விற்பன்னர்களும் வழிபட்டனர்.
நேபாளத்தில் உள்ள ஜானகி கோவில் நிர்வாகி மகந்த் தபேஸ்வர் தாஸ், அந்த பாறைகளை ராமஜென்மபூமி அறக்கட்டளை செயலாளர் சம்பத் ராயிடம் ஒப்படைத்தார்.
இந்த பாறைகளில் இருந்து செதுக்கப்படும் குழந்தை வடிவ ராமர் சிலை, கோவில் கர்ப்பகிரகத்தில் நிறுவப்படும்.






