என் மலர்
நீங்கள் தேடியது "bhutan PM"
- அயோத்தி விமான நிலையம் வந்த அவருக்கு மாவட்ட நிர்வாகம் சிவப்பு கம்பள வரவேற்பு அளித்தது.
- ராமர் கோவில், அனுமன் கோவில் மற்றும் பிற முக்கிய கோவில்களில் டோப்கே தரிசனம் செய்தார்.
லக்னோ:
பூட்டான் பிரதமர் தாஷோ ஷெரிங் டோப்கே, தனது மனைவியுடன் இந்தியா வந்துள்ளார். இந்திய விமானப் படையின் சிறப்பு விமானம் மூலம் அயோத்தி விமான நிலையம் வந்தடைந்த அவருக்கு மாவட்ட நிர்வாகம் சிவப்பு கம்பள வரவேற்பு அளித்தது. உத்தர பிரதேச மந்திரி உள்பட மற்றும் பல்வேறு அரசு அதிகாரிகள் அவரை வரவேற்றனர்.
இந்நிலையில், அயோத்தியில் உள்ள ராமர் கோவிலுக்கு பூட்டான் பிரதமர் தாஷோ ஷெரிங் டோப்கே இன்று வருகை தந்தார். ராமர் கோவிலில் சாமி தரிசனம் செய்த அவர், அயோத்தியில் உள்ள பிற முக்கிய கோவில்களுக்கும் சென்று வழிபாடு செய்தார்.
விமான நிலையத்தில் இருந்து கார் மூலம் அலகாபாத் மற்றும் லக்னோ-கோரக்பூர் நெடுஞ்சாலைகள் வழியாக ராமர் கோவிலை அடைந்த டோப்கே அயோத்தி ராமர் கோவில், அனுமன் கோவில் மற்றும் பிற முக்கிய கோவில்களில் சாமி தரிசனம் செய்தார்.
- ஐந்து நாள் பயணமாக பூடான் பிரதமர் நாளை இந்தியா வருகிறார்.
- ஷேரிங் டோப்கோ ஜனாதிபதி மற்றும் பிரதமரை சந்தித்துப் பேசுகிறார்.
புதுடெல்லி:
பூடான் பிரதமராக கடந்த ஜனவரி மாதம் ஷேரிங் டோப்கே பதவியேற்றார். தனது முதல் வெளிநாட்டுப் பயணமாக ஷேரிங் டோப்கோ நாளை இந்தியா வருகிறார்.
தலைநகர் டெல்லி வரும் ஷேரிங் டோப்கோ ஜனாதிபதி திரவுபதி முர்மு மற்றும் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.
ஐந்து நாள் பயணமாக இந்தியா வரும் டோப்கோ தனது பயணத்தின்போது மும்பைக்கு செல்கிறார். டோப்கேவுடன் மந்திரிகள் மற்றும் உயரதிகாரிகள் உள்ளிட்ட உயர்மட்டக் குழுவும் வருகிறது.
இந்தியாவும் பூடானும் அனைத்து மட்டங்களிலும் நம்பிக்கை, நல்லெண்ணம் மற்றும் பரஸ்பர புரிதல் ஆகியவற்றின் அடிப்படையில் நட்பு கொண்டு இருப்பதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
- ஐந்து நாள் பயணமாக பூடான் பிரதமர் இன்று இந்தியா வந்துள்ளார்.
- ஷேரிங் டோப்கே ஜனாதிபதி மற்றும் பிரதமரை சந்தித்துப் பேசுகிறார்.
புதுடெல்லி:
பூடான் பிரதமராக கடந்த ஜனவரி மாதம் ஷேரிங் டோப்கே பதவியேற்றார்.
இந்நிலையில், தனது முதல் வெளிநாட்டுப் பயணமாக ஷேரிங் டோப்கே இன்று மாலை இந்தியா வந்தடைந்தார். அவரை மத்திய மந்திரி அஸ்வினி குமார் சவுபே வரவேற்றார்.
ஜனாதிபதி திரவுபதி முர்மு மற்றும் பிரதமர் நரேந்திர மோடியை பூடான் பிரதமர் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்துகிறார். தனது பயணத்தில் டோப்கே மும்பைக்கும் செல்கிறார்.
பூடான் பிரதமராக பதவியேற்ற ஷேரிங் டோப்கேவின் முதல் வெளிநாட்டு பயணம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
- பூடான் பிரதமர் ஷேரிங் டோப்கே இன்று இந்தியா வந்தடைந்தார்.
- பிரதமர் மோடியை பூடான் பிரதமர் ஷேரிங் டோப்கே சந்தித்துப் பேசினார்.
புதுடெல்லி:
பூடான் பிரதமராக கடந்த ஜனவரி மாதம் ஷேரிங் டோப்கே பதவியேற்றார். அவர் தனது முதல் வெளிநாட்டுப் பயணமாக இன்று இந்தியா வந்தடைந்தார். அவரை மத்திய மந்திரி அஸ்வினி குமார் சவுபே வரவேற்றார்.
ஜனாதிபதி திரவுபதி முர்மு மற்றும் பிரதமர் நரேந்திர மோடியை பூடான் பிரதமர் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்துவார் என தெரிவிக்கப்பட்டது.தனது பயணத்தில் டோப்கே மும்பைக்கும் செல்கிறார்.
பூடான் பிரதமராக பதவியேற்ற ஷேரிங் டோப்கேவின் முதல் வெளிநாட்டு பயணம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், தலைநகர் டெல்லியில் பிரதமர் மோடியை பூடான் பிரதமர் ஷேரிங் டோப்கே இன்று இரவு சந்தித்தார். இரு நாட்டு உறவுகளை மேம்படுத்துவது குறித்து தலைவர்கள் ஆலோசனை நடத்தினர். இந்தச் சந்திப்பின்போது இருதரப்பு அதிகாரிகளும் உடனிருந்தனர்.
#WATCH | Delhi | Prime Minister of Bhutan, Dasho Tshering Tobgay calls on Prime Minister Narendra Modi at 7, Lok Kalyan Marg (LKM). pic.twitter.com/Zj6QFVFNms
— ANI (@ANI) March 14, 2024
ஒரு வீட்டின் தலைவர் பொறுப்பில் இருப்பவர், அன்றாடம் செய்யும் பணிகளில் அடையும் கஷ்டங்கள், பணத்தை செலவு செய்யும்முன் சேமிக்க வேண்டும் எனும் முனைப்பு, குழந்தைகள், உறவினர்கள் என அனைவரும் எந்த வித குறைகளும் சொல்லக்கூடாது என்பதற்காக அவர்கள் செய்யும் தியாகம் இவற்றை தாங்கிக் கொண்டு அன்றாடம் பணிகளை தொடர்கின்றனர்.

இப்படிபட்ட பணிகளுக்கு நடுவில், பூடான் நாட்டின் பிரதமர் லோட்டே ஷெரிங் சிறிதும் மன கசப்பின்றி வார இறுதியான சனிக்கிழமைகளில் டாக்டராக பணிபுரிகிறார். 41 வயதாகும் லோட்டே கடந்த 2018ம் ஆண்டு நவம்பர் மாதம் 7ம் தேதி, 7 லட்சத்து 50 ஆயிரம் மக்களால் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஜிக்ம் டோரிஜி வாங்ட்ச் தேசிய மருத்துவமனையில் கடந்த வாரம் ஒரு நோயாளிக்கு சிறுநீரக அறுவை சிகிச்சை செய்துள்ளார். அந்த நபர் தற்போது நலமுடன் இருக்கிறார். இந்த சேவை குறித்து பிரதமர் லோட்டே கூறுகையில், ‘மருத்துவமனையில் நான் ஒரு டாக்டராக வருகின்ற நோயாளிகளையும், அவர்களது பிரச்சனைகளையும் ஸ்கேன் செய்கிறேன். ஒரு பிரதமராக ஆரோக்கியமான அரசியலையும், அவற்றை மேலும் முன்னேற்றும் வழிமுறைகளையும் ஸ்கேன் செய்கிறேன்.
என் உயிர் இருக்கும் வரை இந்த பணியை தொடர்வேன். வாரத்தில் 7 நாட்களும் இந்த மகிழ்ச்சி கிடைப்பதில்லை என வருந்துகிறேன். இதனை பணியாகவோ, கடமையாகவோ நினைத்து மட்டும் செய்யவில்லை. என் மன நிம்மதிக்காகவும் செய்து வருகிறேன்’ என கூறினார். #LotayTshering #BhutanPM
பூட்டானின் புதிய பிரதமர் லோதே ஷெரிங், தனது முதல் வெளிநாட்டுப் பயணமாக இந்தியா வந்துள்ளார். இந்தியா மற்றும் பூடான் இடையேயான உறவின் பொன்விழா ஆண்டை சிறப்பிக்கும் வகையில் இந்தியாவில் 3 நாட்கள் அவர் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை லோதே ஷெரிங் இன்று சந்தித்து பேசினார். #BhutanPM #LotayTshering #BhutanPMmeetsRahul #RahulGandhi

பூடான் பிரதமர் ஷேரிங் டோப்கே மூன்று நாட்கள் சுற்றுப்பயணமாக கடந்த 5 ஆம் தேதி இந்தியா வருகை தந்தார். இந்தியா வருகை தந்த டோப்கேவை, வெளியுறவுத்துறை இணை மந்திரி விகே சிங் வரவேற்றார். அதன்பின்னர் டெல்லியில் நேற்று பிரதமர் மோடியை சந்தித்து டோப்கே ஆலோசனை நடத்தினார்.







