search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    பூடான் பிரதமர் நாளை இந்தியா வருகை: ஜனாதிபதி, பிரதமரை சந்திக்கிறார்
    X

    பூடான் பிரதமர் நாளை இந்தியா வருகை: ஜனாதிபதி, பிரதமரை சந்திக்கிறார்

    • ஐந்து நாள் பயணமாக பூடான் பிரதமர் நாளை இந்தியா வருகிறார்.
    • ஷேரிங் டோப்கோ ஜனாதிபதி மற்றும் பிரதமரை சந்தித்துப் பேசுகிறார்.

    புதுடெல்லி:

    பூடான் பிரதமராக கடந்த ஜனவரி மாதம் ஷேரிங் டோப்கே பதவியேற்றார். தனது முதல் வெளிநாட்டுப் பயணமாக ஷேரிங் டோப்கோ நாளை இந்தியா வருகிறார்.

    தலைநகர் டெல்லி வரும் ஷேரிங் டோப்கோ ஜனாதிபதி திரவுபதி முர்மு மற்றும் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.

    ஐந்து நாள் பயணமாக இந்தியா வரும் டோப்கோ தனது பயணத்தின்போது மும்பைக்கு செல்கிறார். டோப்கேவுடன் மந்திரிகள் மற்றும் உயரதிகாரிகள் உள்ளிட்ட உயர்மட்டக் குழுவும் வருகிறது.

    இந்தியாவும் பூடானும் அனைத்து மட்டங்களிலும் நம்பிக்கை, நல்லெண்ணம் மற்றும் பரஸ்பர புரிதல் ஆகியவற்றின் அடிப்படையில் நட்பு கொண்டு இருப்பதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    Next Story
    ×