என் மலர்
நீங்கள் தேடியது "Ayodhya Ram Mandir"
- அயோத்தி விமான நிலையம் வந்த அவருக்கு மாவட்ட நிர்வாகம் சிவப்பு கம்பள வரவேற்பு அளித்தது.
- ராமர் கோவில், அனுமன் கோவில் மற்றும் பிற முக்கிய கோவில்களில் டோப்கே தரிசனம் செய்தார்.
லக்னோ:
பூட்டான் பிரதமர் தாஷோ ஷெரிங் டோப்கே, தனது மனைவியுடன் இந்தியா வந்துள்ளார். இந்திய விமானப் படையின் சிறப்பு விமானம் மூலம் அயோத்தி விமான நிலையம் வந்தடைந்த அவருக்கு மாவட்ட நிர்வாகம் சிவப்பு கம்பள வரவேற்பு அளித்தது. உத்தர பிரதேச மந்திரி உள்பட மற்றும் பல்வேறு அரசு அதிகாரிகள் அவரை வரவேற்றனர்.
இந்நிலையில், அயோத்தியில் உள்ள ராமர் கோவிலுக்கு பூட்டான் பிரதமர் தாஷோ ஷெரிங் டோப்கே இன்று வருகை தந்தார். ராமர் கோவிலில் சாமி தரிசனம் செய்த அவர், அயோத்தியில் உள்ள பிற முக்கிய கோவில்களுக்கும் சென்று வழிபாடு செய்தார்.
விமான நிலையத்தில் இருந்து கார் மூலம் அலகாபாத் மற்றும் லக்னோ-கோரக்பூர் நெடுஞ்சாலைகள் வழியாக ராமர் கோவிலை அடைந்த டோப்கே அயோத்தி ராமர் கோவில், அனுமன் கோவில் மற்றும் பிற முக்கிய கோவில்களில் சாமி தரிசனம் செய்தார்.
- நம்முடைய வாழ்க்கையில் கோவில்கள் மையமாக அமைந்துள்ளது.
- தூய்மை பணிகளுக்கு பாரத பிரதமர் மோடி முக்கியத்துவம் அளித்து வருகிறார்.
திருச்சி:
தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி தனது மனைவியுடன் இன்று திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தார். அவருக்கு கோவில் இணை ஆணையர் மாரியப்பன், சுந்தர் பட்டர் தலைமையில் பூரண கும்ப மரியாதை அளித்தனர்.
அதனைத் தொடர்ந்து கவர்னர் ரெங்கநாதர் சந்நிதி, தாயார் சன்னதிகளில் சாமி தரிசனம் செய்தார்.
அதன் பின்னர் தாயார் சன்னதி அருகே உள்ள ஸ்ரீமேட்டழகிய சிங்கர் சன்னதி படிக்கட்டுகளை தனது மனைவியுடன் நீர் கொண்டு கழுவி சுத்தம் செய்தார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
நம்முடைய வாழ்க்கையில் கோவில்கள் மையமாக அமைந்துள்ளது. ஒரு கிராமம் உருவாவதற்கு முன்பாக அங்கு கோவில்கள் அமைக்கப்படும். அதனை மையப்படுத்தியே அந்த கிராமங்களின் வளர்ச்சி இருக்கும்.
அந்த வகையில் ஒரு ஈர்ப்பு விசையாக கோவில்கள் உள்ளது. காலணியாதிக்க காலத்தில் அது மழுங்கடிக்கப்பட்டது. தற்போது மீண்டும் நாடு ராமர் மயமாகி வருகிறது. அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடத்தப்படுவது நாடு முழுவதும் உள்ள மக்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
காரணம் ராம பிரான் ஒவ்வொருவரின் இதயங்களிலும் வாழ்கிறார். கோவில்களை தூய்மையாக பராமரிப்பதில் கோவில் நிர்வாகத்திற்கு மட்டுமல்ல பக்தர்களுக்கும் பெரும்பங்கு உண்டு.
தூய்மை பணிகளுக்கு பாரத பிரதமர் மோடி முக்கியத்துவம் அளித்து வருகிறார். கோவில் மட்டுமல்ல பொது இடங்களிலும், தனியார் இடங்களில் தூய்மை பேண வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதை தொடர்ந்து கவர்னர் ஆர்,என்.ரவி கார் மூலமாக மயிலாடுதுறைக்கு புறப்பட்டு சென்றார்.






