search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    பிரதமர் மோடியுடன் பூடான் பிரதமர் சந்திப்பு
    X

    பிரதமர் மோடியுடன் பூடான் பிரதமர் சந்திப்பு

    • பூடான் பிரதமர் ஷேரிங் டோப்கே இன்று இந்தியா வந்தடைந்தார்.
    • பிரதமர் மோடியை பூடான் பிரதமர் ஷேரிங் டோப்கே சந்தித்துப் பேசினார்.

    புதுடெல்லி:

    பூடான் பிரதமராக கடந்த ஜனவரி மாதம் ஷேரிங் டோப்கே பதவியேற்றார். அவர் தனது முதல் வெளிநாட்டுப் பயணமாக இன்று இந்தியா வந்தடைந்தார். அவரை மத்திய மந்திரி அஸ்வினி குமார் சவுபே வரவேற்றார்.

    ஜனாதிபதி திரவுபதி முர்மு மற்றும் பிரதமர் நரேந்திர மோடியை பூடான் பிரதமர் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்துவார் என தெரிவிக்கப்பட்டது.தனது பயணத்தில் டோப்கே மும்பைக்கும் செல்கிறார்.

    பூடான் பிரதமராக பதவியேற்ற ஷேரிங் டோப்கேவின் முதல் வெளிநாட்டு பயணம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில், தலைநகர் டெல்லியில் பிரதமர் மோடியை பூடான் பிரதமர் ஷேரிங் டோப்கே இன்று இரவு சந்தித்தார். இரு நாட்டு உறவுகளை மேம்படுத்துவது குறித்து தலைவர்கள் ஆலோசனை நடத்தினர். இந்தச் சந்திப்பின்போது இருதரப்பு அதிகாரிகளும் உடனிருந்தனர்.

    Next Story
    ×