என் மலர்
நீலகிரி
ஊட்டி
நீலகிரி மாவட்டம், கூடலூா் நகராட்சிக்குள்பட்ட முதல்மைல் மற்றும் மூலவயல் பகுதிகளில் அவ்வப்போது ராட்சத உடும்பு நடமாட்டம் இருந்து வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனா். இது தொடா்பாக வனத் துறையினருக்கும் தகவல் அளித்துள்ளனா். இரைதேடி வரும் உடும்பால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனா். குடியிருப்புப் பகுதியில் நடமாடும் உடும்பைப் பிடித்துசென்று வனத்தில் விட பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா். இந்நிலையில், வனச் சரக அலுவலா் ராஜேந்திரன் தலைமையில் வனத் துறையினா் உடும்பை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனா்.
- கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை கிலோ ரூ.25 வரை கொள்முதல் செய்யப்பட்டது
- அறுவடையும் செய்யும் தனியார் நிறுவனங்களுக்கு குறைந்த விலைக்கு கொடுக்கின்றனர்.
அரவேணு,
நீலகிரி மாவட்டத்தில் கேரட், பீட்ரூட், உருளைக்கிழங்கு, முட்டைகோஸ், மேரக்காய், பீன்ஸ், காலிபி ளவர் உள்ளிட்ட மலைக்காய்கறிகள் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. இங்கு விளையும் காய்கறிகளை விவசாயிகள் அறுவடை செய்து, மேட்டுப்பாளையம் காய்கறி மண்டிகளில் விற்பனை செய்து வருகின்றனர்.
அங்கு இருந்து தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களுக்கும் விற்பனைக்காக அனுப்பப்பட்டு வருகிறது. கோத்தகிரியில் உள்ள ஈளாடா, கதவுத்தொரை, கட்டபெட்டு, குடுமனை, காக்காசோலை, குருக்குத்தி, நெடுகுளா உள்ளிட்ட பகுதிகளில் முட்டைகோஸ் அதிகளவில் பயிரிடப்பட்டு உள்ளது. இங்கு கடந்த சில நாட்களாக போதிய மழை பெய்து வருகிறது. எனவே காய்கறி பயிர்கள் செழித்து வளர்ந்து உள்ளன.
மலை காய்கறிகளில் முட்டைகோஸ் 90 முதல் 100 நாட்களில் அறுவடைக்கு தயாராகி விடும். இங்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை கிலோவுக்கு ரூ.25 வரை கொள்முதல் செய்யப்பட்டது. ஆனால் தற்போது முட்டை கோசுக்கு கிலோ ரூ.9-க்கு மட்டுமே கொள்முதல் விலை கிடைத்து வருகிறது. இந்த விலை வீழ்ச்சியால் அதை பயிரிட்ட விவசாயிகள் நஷ்டம் அடைந்து உள்ளனர்.
இதுகுறித்து ஈளாடா கதவுத்தொரை கிராமத்தை சேர்ந்த விவசாயிகள் கூறுகையில், ஒரு கிலோ முட்டைகோஸ் விளைவிக்க ரூ.6 செலவாகிறது. இதனை அறுவை செய்து மேட்டுப்பாளையம் காய்கறி மண்டிகளுக்கு அனுப்ப போக்குவரத்து செலவு, தொழிலாளர் கூலி உள்பட எக்கச்சக்கமாக செலவாகிறது. எனவே முட்டைக்கோஸ் பயிரிட்ட விவசாயிகளுக்கு போதிய லாபம் கிடைக்கவில்லை. எனவே, நேரடியாக தோட்டங்களுக்கே வந்து கொள்முதல் மற்றும் அறுவடையும் செய்து வரும் தனியார் நிறுவனங்களுக்கு முட்டைகோசை கிலோ ரூ.8க்கு விற்பனை செய்து வருகிறோம் என்று தெரிவித்தனர்.
- கன்னேரி முக்கில் உள்ள ஜான் சலிவன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்
- பச்சை தேயிலை மற்றும் தேயிலைத்தூளுக்கு போதிய விலை கிடைப்பது இல்லை.
நீலகிரி,
கோவை மாவட்டம் கோத்தகிரிக்கு மேற்கு ஆஸ்திரேலிய சபாநாயகர் மிஷேல் ராபர்ட்ஸ் தலைமையில் எம்.எல்.ஏக்கள் குழுவினர் கோத்தகிரியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.
அந்த குழுவில் டாக்டர் ஜெகதீஷ், டேவிட் ஹனி, டேவிட் ஸ்கைப் உள்ளிட்டோர் இடம்பெற்று உள்ளனர். இந்த நிலையில் ஆஸ்திரேலிய எம்.எல்.ஏக்கள் குழுவினர் நேற்று கன்னேரி முக்கில் உள்ள ஜான் சலிவன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். அப்போது அவர்களுக்கு படுகர் இன மக்கள் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து ஆஸ்திரேலிய எம்.எல்.ஏக்கள் குழுவினர் கோத்தகிரியில் உள்ள தேயிலை தொழிற்சாலைகளை பார்வையிட்டனர். அங்கு உள்ள பல்வேறு வகை தேயிலை தூளின் ரகங்களை அறிந்த அவர்கள், தேநீர் குடித்து வித்தியாசம் அறிந்து கொண்டனர். அதன்பிறகு மேற்கு ஆஸ்திரேலிய சபாநாயகர் மிஷேல் ராபர்ட்ஸ் நிருபர்க ளிடம் கூறியதாவது:-
தமிழகம்- ஆஸ்திரேலியா இடையே நல்லுறவை ஏற்படுத்தும் வகையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளோம். நீலகிரி மாவட்டத்தில் தேயிலை தொழில் பிரதானமாக உள்ளது. ஆனால், இங்கு விளையும் பச்சை தேயிலை மற்றும் தேயிலைத்தூளுக்கு போதிய விலை கிடைப்பது இல்லை. எனவே இங்கு உற்பத்தியாகும் தேயிலைத்தூளை இடைத்தரகர் இன்றி நேரடியாக ஆஸ்திரேலியாவிற்கு ஏற்றுமதி செய்வது குறித்து ஆராய்ந்து வருகிறோம். இதுதவிர தேயிலை ஆலைகளுக்கான தொழில்நுட்ப உதவிகளையும் வழங்க தயாராக உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார். இந்த நிகழ்ச்சியில் கோத்தகிரியை சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட சிறு, குறு விவசாயிகள் கலந்து கொண்டனர். இதனை தொடர்ந்து படுகர் இன மக்களின் கலாச்சார நிகழ்வு நடத்தப்பட்டது. இதில் ஆஸ்திரேலிய எம்.எல்.ஏக்கள் படுகர் இன பாரம்பரிய உடை அணிந்து, இசைக்கேற்ப நடனமாடி பார்வையாளர்களை உற்சாகப்படுத்தினார்கள். அப்போது ஆஸ்திரேலிய சபாநாயகர் மிஷேல் ராபர்ட்ஸ் படுகா மொழி யில், அனைவரும் நல்லா இருக்கீங்களா என்று கேட்டு ஆச்சரியப்படுத்தினார். இதனை கேட்ட பழங்குடி மக்கள் கைதட்டி வரவேற்ற னர். இதனை தொடர்ந்து மேற்கு ஆஸ்திரேலியஎம்.எல்.ஏக்கள் குழுவினர், பழங்கு டியின மக்கள் வாழ்க்கை மேம்பாட்டுக்காக பல்வேறு நலத்திட்டங்கள் செய்ய உள்ளதாகவும் தெரிவித்து உள்ளனர்.
- மலர்க் கண்காட்சி நடைபெற்ற 5 நாட்களில் மட்டுமே 1 லட்சத்து 30 ஆயிரம் சுற்றுலாப் பயணிகள் தாவரவியல் பூங்காவுக்கு வருகை தந்தனர்.
- சுற்றுலாபயணிகள் வருகை மூலம் ரூ.4 கோடியே 73 லட்சம் வருவாயாக கிடைத்துள்ளது.
ஊட்டி:
சர்வதேச சுற்றுலா நகரமான ஊட்டிக்கு ஆண்டுதோறும் சுமார் 35 லட்சம் சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். குறிப்பாக, கோடை சீசன் காலமான ஏப்ரல், மே மாதங்களில் அதிகளவில் சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர்.
சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் கோடை காலத்தில் மாவட்ட நிர்வாகம், சுற்றுலாத்துறை மற்றும் தோட்டக்கலை துறை சார்பில் கோடை விழா நடத்தப்படுகிறது.
அதன்படி, இந்த ஆண்டு மே 6-ந் தேதி கோத்தகிரி நேரு பூங்காவில் காய்கறி கண்காட்சியுடன் கோடை விழா ஆரம்பமானது. தொடர்ந்து, கூடலூரில் வாசனை திரவிய கண்காட்சி, ஊட்டி ரோஜா பூங்காவில் 18-வது ரோஜா கண்காட்சி, தாவரவியல் பூங்காவில் 125-வது மலர்க் கண்காட்சி, குன்னூரில் பழக் கண்காட்சி ஆகியவை நடைபெற்றன.
மலர்க் கண்காட்சி நடைபெற்ற 5 நாட்களில் மட்டுமே 1 லட்சத்து 30 ஆயிரம் சுற்றுலாப் பயணிகள் தாவரவியல் பூங்காவுக்கு வருகை தந்தனர். ரோஜா கண்காட்சியை 50 ஆயிரம் பேரும், பழக் கண்காட்சியை சுமார் 25 ஆயிரம் பேரும் கண்டு ரசித்துள்ளனர்.
தோட்டக்கலைத் துறை அதிகாரிகள் கூறும் போது, இந்தாண்டு ஏப்ரல், மே ஆகிய இரு மாதங்களில் மட்டும் 8 லட்சத்து 61 ஆயிரத்து 214 சுற்றுலாபயணிகள் அரசு தாவரவியல் பூங்காவுக்கு வருகை தந்துள்ளனர். இதன் மூலம் ரூ.4 கோடியே 73 லட்சம் வருவாயாக கிடைத்துள்ளது.
ஏப்ரல் மாதத்தில் மட்டும் 3 லட்சத்து 33 ஆயிரத்து 752 பேரும், மே மாத்தில் 3 லட்சத்து 97 ஆயிரத்து 283 பேரும், மலர் கண்காட்சியின் போது 1 லட்சத்து 30 ஆயிரத்து 179 சுற்றுலாபயணிகளும் வந்துள்ளனர். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 1 லட்சத்து 27 ஆயிரத்து 161 சுற்றுலாபயணிகள் அதிகம் வருகை தந்துள்ளனர் என்றனர்.
இந்நிலையில், சுமார் ஒரு மாதம் நடைபெற்ற கோடை விழா நேற்றுடன் நிறைவு பெற்றது. ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் நடைபெற்ற நிகழ்வுக்கு கோட்டாட்சியர் துரைராஜ் தலைமை வகித்தார். பள்ளி மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இவற்றை சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசித்தனர்.
- போலீசார் உடலை கைப்பற்றி குன்னூர் அரசு லாலி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
- போலீஸ் இன்ஸ்பெக்டர் சதீஷ் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
குன்னூர்,
குன்னூர் கன்னிமாரியம்மன் கோவில் தெரு அருகே உள்ள வனப்பகுதியில் மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் ஆண் பிணம் கிடப்பதாக குன்னூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குன்னூர் அரசு லாலி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
விசாரணையில் தற்கொலை செய்தவருக்கு 65 வயது இருக்கும், எதற்காக தற்கொலை செய்தார், அவர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது தெரியவில்லை.
பிரேத பரிசோதனைக்கு பின்னர் உடல் அடையாளம் தெரிவதற்காக வைக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சதீஷ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- குன்னூர் நகரசபை மாதாந்திர கூட்டம் தலைவர் ஷீலா கேத்ரின் தலைமையில் நடந்தது.
- குன்னூர் நகரசபை கூட்டத்தில் அனைத்து தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.
குன்னூர்,
குன்னூர் நகரசபை மாதாந்திர கூட்டம் தலைவர் ஷீலா கேத்ரின் தலைமையில் நடந்தது. இந்த கூட்டத்தில் துணைத் தலைவர் வாஷிம் ராஜா, நகராட்சி கமிஷனர் (பொறுப்பு) ஏகநாதன் உள்பட நகரசபை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
அப்போது நகர்மன்ற உறுப்பினர் ராமசாமி பேசுகையில், அதிகாரிகள் மன்றத்தில் பொய்யான தகவல்களை அளிக்க வேண்டாம். என்ன நடந்ததோ அதை பற்றி மட்டும் பேசுங்கள் என்றார்.
அடுத்தபடியாக நகராட்சி கமிஷனர் ஏகநாதன் பேசும் போது, தூய்மை பணியாளர்கள் அனைத்து பகுதிகளும் சென்று பணிகளை சரிவர செய்ய வேண்டும்.
இதனை நகர சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர்கள் கண்காணிக்க வேண்டும். இல்லையென்றால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்தார்.
திமுக நகர மன்ற உறுப்பினார் ஜெகநாதன் பேசும் போது, வண்ணார் பேட்டையில் கடந்த அ.தி.மு.க. ஆட்சியின்போது பணிகள் எதுவும் செய்யாமல், வேலை நடந்ததாக கூறி ரூ. 3 லட்சத்துக்கான தொகை அனுமதிக்கப்பட்டு உள்ளது. எனவே சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டு கொண்டார். அடுத்த படியாக தி.மு.க. கவுன்சிலர் ஜாகீர் பேசும்போது, சிங்கார பகுதியில் நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் 2 கடைகள் கட்டப்பட்டு உள்ளது.
அதற்கு நகராட்சி அனுமதி அளித்து உள்ளதா, அதற்கான வரி வசூலிக்கப்படுகிறதா என்று கேள்வி எழுப்பினார். இதனை தொடர்ந்து குன்னூர் நகரசபை கூட்டத்தில் அனைத்து தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.
- கலைஞர் கருணாநிதியின் 100-வது பிறந்தநாள் வருகிற ஜூன் 3-வது தேதி கொண்டாடப்பட உள்ளது.
- கலைஞர் புகைப்படத்திற்கு அனைவரும் மலர்தூவி மரியாதை செலுத்த வேண்டும்.
ஊட்டி,
நீலகிரி மாவட்ட திமுக செயலாளர் பா.மு. முபாரக் வெளியிட்டு உள்ள ஒரு அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
முத்தமிழ் அறிஞர் தலைவர் கலைஞர் 100-வது பிறந்தநாள் வருகிற ஜூன் 3-வது தேதி நடக்க உள்ளது.
இதனை அனைவரும் சிறப்பாக கொண்டாட வேண்டும் என்று தமிழக முதல்வர் தலைமையில் நடந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திலும், கழக உயர்நிலை செயல்திட்ட குழு கூட்டத்திலும் அறிவுரை வழங்கி உள்ளனர்.
திராவிட இயக்கத்தை கண் இமைப்போல பாதுகாத்து, ஒடுக்கப்பட்ட மக்களின் உயர்வுக்காக கடைசி மூச்சு வரை பாடுபட்ட மகத்தான தலைவர் கலைஞரின் நூற்றாண்டு விழா, கழக தோழர்கள் வெகு சிறப்புடன் கொண்டாட வேண்டிய பொன்நாள். கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, அவரது புகழுக்கு மேலும் பெருமை சேர்க்கும் வகையில், தமிழக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் அகில இந்திய அரசியல் கட்சி தலைவர்கள் கலந்துகொள்ளும் பொதுக் கூட்டத்தை சென்னையில் நடத்த ஏற்பாடு செய்து உள்ளார்.
நீலகிரி மாவட்டத்தில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, மாவட்டத்திலுள்ள அனைத்து நகர-ஒன்றிய-பேரூர் –ஊராட்சி பகுதிகளிலும் கல்வெட்டுகள் அமைத்து, கட்சிக்கொடியேற்றறி பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க வேண்டும்.
பொது இடங்களில் கலைஞர் புகைப்படத்தை அலங்கரித்து வைத்து, கழக நிர்வாகிகள், செயல்வீரர்கள் அனைவரும் மலர்தூவி மரியாதை செலுத்தும் வகையில் ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.
ஜூன் 3-ந்தேதி மாவட்டம் முழுவதும் விழாக்கோலம் காணும் வகையில் அனைத்து ஏற்பாடுகளையும் செய்து அதில் நகர-ஒன்றிய-பேரூர் கழக நிர்வாகிகள் மற்றும் சார்பு அணி நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும்.
கலைஞருக்கு மலர் அஞ்சலி செய்வதோடு, அன்னாரின் அடிச்சுவட்டை பின்பற்றி, கழகத்தை காத்து வரும் தமிழக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கழகம் உயர உழைப்போம் என்ற உறுதி மொழியை நாம் அனைவரும் ஏற்க வேண்டும்.
இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் கூறி உள்ளார்.
- இடி, மின்னலுடன் மழை பெய்ய தொடங்கியது.
- மரம் முறிந்து ஒரு வீட்டின் மீது விழுந்ததில் மேற்கூரை சேதம்
பந்தலூர்
நீலகிரி மாவட்டத்தில் கோடை மழை அவ்வப்போது பரவலாக பெய்து வருகிறது. இந்தநிலையில் நேற்று காலை முதலே பந்தலூர் பகுதியில் வெயில் அடித்தது. பின்னர் மதியத்துக்கு மேல் வாகனம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. தொடர்ந்து இடி, மின்னலுடன் மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை ஒரு மணி நேரத்துக்கும் மேல் பலத்த மழையாக பெய்தது.
பந்தலூர், உப்பட்டி, பொன்னானி, பிதிர்காடு, நெலாக்கோட்டை, பாட்டவயல், அம்பலமூலா, அய்யன்கொல்லி, கொளப்பள்ளி, குறிஞ்சி நகர், சேரம்பாடி, எருமாடு, சேரங்கோடு உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதனால் முக்கிய சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.
மேலும் கால்வாய்களில் வெள்ளம் ஆறுபோல் ஓடியது. கொளப்பள்ளி குறிஞ்சி நகரில் உள்ள பகவதி அம்மன் கோவிலையொட்டி உள்ள மரம் முறிந்து ஒரு வீட்டின் மீது விழுந்தது. அப்போது வீட்டில் இருந்த செவ்வந்தி என்பவர் சத்தம் கேட்டு உடனே வெளியே ஓடி வந்தார். இதில் வீட்டின் மேற்கூரைகள் உடைந்தன. அதிர்ஷ்டவசமாக பெண் உயிர் தப்பினார். தகவல் அறிந்த கூடலூர் தீயணைப்பு நிலைய அலுவலர் மார்ட்டின் மற்றும் வீரர்கள் மரத்தை வெட்டி அகற்றினர்.
இதேபோல் புஞ்சகொல்லியில் ஒரு வீட்டின் மீது மரக்கிளை முறிந்து விழுந்தது. பலத்த மழையால் பிதிர்காடு அருகே ஆணையப்பன் சோலையில் சாலையின் குறுக்கே மரம் முறிந்து விழுந்தது. இதனால் வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் மின் கம்பிகள் மீது மரம் சாய்ந்ததால், மின்தடை ஏற்பட்டது. இதன் காரணமாக அப்பகுதி பொதுமக்கள் அவதியடைந்தனர். தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
ஊட்டியில் நேற்று மதியம் 12 மணியளவில் மழை பெய்தது. 3 மணி நேரம் விட்டு, விட்டு மழை பெய்தது. இதனால் சுற்றுலா தலங்களுக்கு வந்த சுற்றுலா பயணிகள், வேலைக்கு சென்ற பொதுமக்கள் அவதிப்பட்டனர். மழை காரணமாக ஆங்காங்கே போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
- கோடை விழாவையொட்டி போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது
- ரூ.45 ஆயிரத்து 500 அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்தனர்.
கோத்தகிரி
நீலகிரி மாவட்டத்தில் கோடை விழாவையொட்டி போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது. அதன்படி, ஊட்டியில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் வாகனங்கள் கோத்தகிரி வழியாக செல்கிறது. இதனால் கோத்தகிரி பகுதியில் போக்குவரத்து போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு, போக்குவரத்து விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகள் மீது வழக்குப்பதிவு செய்து அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இந்தநிலையில் கோத்தகிரி போக்குவரத்து இன்ஸ்பெக்டர் பதி தலைமையில் போலீசார் கோத்தகிரி-மேட்டுப்பாளையம் சாலை, குன்னூர் சாலையில் வாகன தணிக்கை மேற்க்கொண்டனர். அப்போது ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனங்களில் சென்றவர்கள், போக்குவரத்து விதிமுறைகளை மீறியவர்கள், ஓட்டுனர் உரிமம், வாகனங்களின் உரிய ஆவணங்கள் இல்லாதவர்கள் என 48 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அவர்களுக்கு மொத்தம் ரூ.45 ஆயிரத்து 500 அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்தனர்.
- கடந்த சில மாதங்களாக நிலையான கொள்முதல் விலையும் கிடைத்து உள்ளது.
- மேரக்காய் கிலோ ரூ.15-க்கு கொள்முதல் கிடைப்பது சிறப்பு என விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
அரவேனு,
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி மற்றும் கக்குச்சி,உயிலட்டி, கூக்கல், நெடுகுளா, எரிசிபெட்டா, இந்திராநகர், வ.உ.சி நகர், கூக்கல்தொரை, மசக் கல்,மானியட் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் விவசாயிகள் நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் மேரக்காய் (சவ்சவ்) பயிரிட்டு உள்ளனர்.
இந்த நிலையில் அந்த பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து நீர்நிலைகள் நிரம்பி வருகிறது. எனவே காய்கறி தோட்டங்கள் மீண்டும் பசுமைக்கு திரும்பி, மேரக்காய் விளைச்சலும் அதிகரித்து வருகிறது. இதற்கு கடந்த சில மாதங்களாக நிலையான கொள்முதல் விலையும் கிடைத்து உள்ளது.
இதனால் விவசாயிகள் உற்சாகமாக அறுவடை செய்து விற்பனைக்கு அனுப்பி வைக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். கோத்தகிரி காய்கறி மண்டிகளில் மேரக்காய் கிலோவுக்கு ரூ.15, ரூ.16 வரையும் தரத்திற்கு தக்கவாறு கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.
இது விவசாயிகளுக்கு போதுமான விலையாக உள்ளது. கடந்த ஆண்டு கிலோவுக்கு அதிகபட்சமாக ரூ.25முதல் 30 வரை கொள்முதல் விலை கிடைத்தது. அதே போல கொள்முதல் விலை உயர வாய்ப்பு உள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர். மேரக்காய் கிலோ ரூ.15-க்கு கொள்முதல் கிடைப்பது சிறப்பு என விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.