search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "valentines day"

    • ஐபோன் 15 ப்ரோ மாடல்கள் ஆடம்பரமாக கஸ்டமைஸ் செய்யப்பட்டுள்ளன.
    • அதிக விலை கொண்ட வெர்ஷனாக இருக்கிறது.

    ஆப்பிள் மற்றும் சாம்சங் நிறுவன சாதனங்களை ஆடம்பரமாக கஸ்டமைசேஷன் செய்வதில் புகழ் பெற்ற நிறுவனம் கேவியர். காதலர் தினத்தை ஒட்டி கேவியர் நிறுவனம் ஐபோன் 15 வேலன்டைன்ஸ் டே எடிஷன் மற்றும் இதய வடிவம் கொண்ட ஏர்டேக் என விசேஷமான சாதனங்களை அறிமுகம் செய்துள்ளது.

    புதிய ஸ்பெஷல் எடிஷன்களை அந்நிறுவனம் "கார்டன் ஆஃப் ஈடன்" என அழைக்கிறது. இதில் ஐபோன் 15 ப்ரோ மாடல்கள் ஆடம்பரமாக கஸ்டமைஸ் செய்யப்பட்டுள்ளன. இதில் பேந்தர் கோல்டு 18K மாடலின் (ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ்) விலை 60 ஆயிரத்து 350 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 50 லட்சத்து 11 ஆயிரத்து 273 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

     


    அந்த வகையில், இது தற்போது கிடைப்பதிலேயே அதிக விலை கொண்ட வெர்ஷனாக இருக்கிறது. இந்த எடிஷனில் ஐபோன் முழுக்க 18K தங்கத்தால் ஆன பாடி மற்றும் 159 கருப்பு வைர கற்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. புதிய கார்டன் ஆஃப் ஈடன் சீரிசில் மொத்தம் ஐந்து விதமான ஐபோன் 15 ப்ரோ மாடல்கள் இடம்பெற்றுள்ளன.

    இவை ஒவ்வொன்றிலும் ஆடம்பர பொருட்களான வைரங்கள், ரத்தின கற்கள் மற்றும் படிகங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. பிளாக்ஷிப் பேந்தர் கோல்டு 18K மட்டுமின்றி வொன்டர்ஃபுல் ஆர்சிட் ஐபோன் 15 ப்ரோ மாடல்களின் விலை 9 ஆயிரத்து 630 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 7 லட்சத்து 99 ஆயிரத்து 577 என துவங்குகிறது.

    கார்டன் ஆஃப் ஈடன் கலெக்ஷன் வாங்கும் போது இதய வடிவம் கொண்ட ஏர்டேக் வழங்கப்படுகிறது. இதனை தனியாகவும் வாங்கிக் கொள்ளும் வசதி வழங்கப்படுகிறது. இந்த மாடல்கள் அனைத்தும் லிமிடெட் எடிஷன் என்பதால் மொத்தத்தில் 14 யூனிட்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட உள்ளன. மற்ற மாடல்கள் அனைத்தும் 99 யூனிட்கள் உள்ளன.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • காதலர்கள் இந்த சிறப்பு தினத்தை உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்து வருகிறார்கள்.
    • சென்னை உள்பட தமிழ்நாடு முழுவதும் சில தியேட்டர்களில் இப்படம் திரையிடப்பட்டுள்ளது.

    பிப்ரவரி 14ம் தேதி (இன்று) 'காதலர் தினம்'. உலகம் முழுவதும் உள்ள காதல் ஜோடிகள், தம்பதிகள் இந்த சிறப்பு தினத்தை உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்து வருகிறார்கள்.

    காதலர் தினத்தை சிறப்பிக்கும் வகையில் திரைப்பட தயாரிப்பாளர்களும் காதலர் தினத்தில் தங்களது காதல் படங்களை திரையரங்குகளில் வெளியிட்டு காதலர்களை உற்சாகப்படுத்தி வருகிறார்கள்.

    இந்நிலையில், த்ரிஷா மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் 2018ம் ஆண்டு வெளியான திரைப்படம் '96'. இந்த படம் அனைத்து தரப்பினரிடமும் மிகுந்த வரவேற்பை பெற்றது.

    இந்த நிலையில் விஜய்சேதுபதி -த்ரிஷா நடித்த '96' திரைப்படம் காதலர் தினத்துக்குக்காக இன்று மீண்டும் திரையரங்குகளில் மறுவெளியீடு செய்யப்பட்டுள்ளது.

    சென்னை உள்பட தமிழ்நாடு முழுவதும் சில தியேட்டர்களில் இப்படம் திரையிடப்பட்டுள்ளது.

    • காதல் ஜோடியினர் ஒருவரை ஒருவர் கரம் கோர்த்தபடியும், தோளில் கை போட்டபடியும் கடற்கரை பகுதியை வலம் வந்தனர்.
    • காதலர் தினத்தையொட்டி கன்னியாகுமரியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

    கன்னியாகுமரி:

    ஆண்டுதோறும் பிப்ரவரி மாதம் 14-ந்தேதி உலகம் முழுவதும் காதலர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அதேபோல இந்த ஆண்டு பிப்ரவரி 14-ந்தேதியான இன்று உலகம் முழுவதும் காதலர் தினம் கோலாகலமாக மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது.

    குமரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களில் இன்று காதல் ஜோடிகளின் கூட்டம் அலைமோதியது. கன்னியாகுமரியிலும் இன்று காதல் ஜோடிகள் குவிந்தனர். கன்னியாகுமரி கடற்கரையில் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலி துறை கடற்கரைப் பகுதியில் உள்ள சுனாமி நினைவுப் பூங்கா, கடற்கரை சாலையில் உள்ள பேரூராட்சிக்கு சொந்தமான பொழுதுபோக்கு பூங்கா, சன்செட் பாயிண்ட் கடற்கரைப் பகுதி, கன்னியாகுமரி அரசு பழத்தோட்டத்தில் உள்ள சுற்றுச்சூழல் பூங்கா, வட்டக்கோட்டை பீச் உள்பட அனைத்து சுற்றுலா தலங்களிலும் காதல் ஜோடியினர் இன்று காலையிலிருந்தே வந்து குவிய தொடங்கினர்.

    காதல் ஜோடியினர் ஒருவரை ஒருவர் கரம் கோர்த்தபடியும், தோளில் கை போட்டபடியும் கடற்கரை பகுதியை வலம் வந்தனர். கடற்கரையில் நின்றவாறு காதல் ஜோடிகள் விவேகானந்தர் மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலையின் பின் பகுதியை கவர் செய்து தாங்கள் கன்னியாகுமரிக்கு வந்ததை நினைவுகூரும் வகையில் செல்போன் மூலம் செல்பி மற்றும் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். கன்னியாகுமரி கடற்கரை பகுதி, காந்தி மண்டபம் பஜார், கடற்கரை சாலை, சன்னதி தெரு, விவேகானந்தராக் ரோடு, ஆகிய பகுதிகளில் உள்ள சங்கு கடைகளில் காதலர்கள் பலரும் கூடி நின்று தங்கள் பெயர்களை கடல் சங்கில் பதிவு செய்து வாங்கிச் சென்றனர்.

    இதேபோல ஒரே அரிசியில் காதல் ஜோடியினர் இருவர் பெயரையும் பதிவு செய்தனர். அவற்றை ஒருவருக்கொருவர் பரிசுப் பொருட்களை வழங்கி மகிழ்ந்தனர். இதனால் பரிசுப்பொருட்கள் கடைகளில் காதல் ஜோடி கூட்டம் அலைமோதியது.

    கடற்கரையிலுள்ள காட்சி கோபுரம் மற்றும் கடற்கரையோரம் அமைக்கப்பட்டுள்ள பூங்காக்களிலும் காதலர்கள் பலர் ஜோடியாக அமர்ந்து கடலின் அழகை பார்த்து ரசித்துக் கொண்டிருந்தனர். அண்டை மாநிலமான கேரளாவில் இருந்து இன்று ஏராளமான காதல் ஜோடிகள், மோட்டார் சைக்கிளில் கன்னியாகுமரிக்கு வந்திருந்தனர். அவர்கள் மோட்டார் சைக்கிளில் கடற்கரை சாலையில் ரேஸ் செய்தபடி வலம் வந்தனர்.

    மறைவான இடங்களில் அமர்ந்து அத்துமீறிய சில காதல் ஜோடிகளை போலீசார் பிடித்து எச்சரித்து அனுப்பி வைத்தனர். ஒரு சில காதல் ஜோடிகள் மறைவான இடங்களில் அமர்ந்து தங்கள் காதல் லீலைகளை அரங்கேற்றினர். கடற்கரை பகுதியில் காதலர்கள் ஒருவருக்கு ஒருவர் கட்டிப்பிடித்து முத்தமழை பொழிந்தனர். காதல் ஜோடியினர் ரோஜா மலர்களை ஒருவருக்கொருவர் பரிமாறி காதலர் தின வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனர்.

    காதலர் தினத்தையொட்டி கன்னியாகுமரியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. கன்னியாகுமரி போலீஸ் டி.எஸ்.பி.மகேஷ்குமார் தலைமையில் போலீசார் கடற்கரை பகுதியில் ரோந்து சென்று தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். நாகர்கோவில் வேப்பமூடு பூங்காவிலும் காதல் ஜோடிகள் அதிகமானோர் வந்திருந்தனர்.

    • பூங்காவுக்கு வந்த வாலிபர்கள் மற்றும் காதலர்களை திரும்பிச் செல்லுமாறு கூறி அனுப்பி வைத்தனர்.
    • காதலர் தினத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்த வந்த இந்து முன்னணி நிர்வாகிகளை போலீசார் தடுத்து நிறுத்தி அனுப்பினர்.

    ஆண்டிபட்டி:

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே வைகை அணை அமைந்துள்ளது. இதன் அருகே அமைந்துள்ள பூங்கா சுற்றுலா பயணிகளுக்கு மிகவும் பொழுதுபோக்கு அம்சமாக உள்ளது. மேலும் உள்ளூர் மக்களுக்கும் இது சிறந்த பொழுதுபோக்கு இடமாக உள்ளது.

    இங்கு வாரம் தோறும் தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்கள் வருகை தருகின்றனர். இது தவிர விடுமுறை நாட்களில் அதிக அளவு நபர்கள் வருகை தருவதுண்டு.

    இன்று காதலர் தினம் என்பதால் காதல் ஜோடிகள் வைகை அணை பூங்காவுக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நுழைவு வாயில் முன்பு அதிக அளவு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர்.

    அவர்கள் பூங்காவுக்கு வந்த வாலிபர்கள் மற்றும் காதலர்களை திரும்பிச் செல்லுமாறு கூறி அனுப்பி வைத்தனர். பொது இடங்களில் காதல் ஜோடிகளைப் பார்த்தால் அவர்களுக்கு மஞ்சள் கயிறு கொடுத்து திருமணம் செய்து வைக்கப்போவதாக பல்வேறு அமைப்புகள் தயார் நிலையில் இருந்தன.

    மேலும் காதல் ஜோடிகளை படம் பிடித்து சமூக வலைதளங்களில் வெளியிடுவதாகவும், அவர்கள் அறிவித்திருந்தனர். இது போன்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் பாதுகாப்பு நடவடிக்கையாக பூங்காவுக்கு வந்தவர்களை தொடர்ந்து போலீசார் திருப்பி அனுப்பினர். இதனால் சந்தோஷமாக பொழுதை கழிக்க வந்த காதல் ஜோடிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். இதே போல தேனி மாவட்டத்தின் மற்றொரு சுற்றுலா தலமாக குரங்கணி பகுதி உள்ளது. அங்கும் காதல் ஜோடிகள் குவியத் தொடங்கியதால் போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதன் காரணமாக காதலர்கள் சினிமா தியேட்டர்கள் உள்ளிட்ட பிற இடங்களுக்கு செல்லும் நிலை ஏற்பட்டது.

    இதனிடையே காதலர் தினத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்த வந்த இந்து முன்னணி நிர்வாகிகளை போலீசார் தடுத்து நிறுத்தி அனுப்பினர். இதனால் வைகை அணை பூங்கா பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    • காதலர் தினத்தையொட்டி மேட்டூர் அணை பூங்காவுக்கு இன்று காலை முதலே ஏராளமான காதல் ஜோடிகள் வந்தனர்.
    • சேலம் அண்ணா பூங்காவிலும் காலை முதலே காதல் ஜோடிகள் அதிக அளவில் குவிந்தனர்.

    சேலம்:

    காதலர் தினம் இன்று உலகம் முழுவதும் உள்ள காதலர்களால் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி காதலர்கள் தங்களது காதலர்களுக்கு பிடித்ததை வாங்கி கொடுத்தும், வாழ்த்து தெரிவித்தும் காதலை பரிமாறிக்கொண்டனர். மேலும் காதலர்கள் இன்றைய பொழுதை மகிழ்ச்சியாக கழிக்க தங்களுக்கு பிடித்த சுற்றுலா தலங்களுக்கு காலை முதலே படையெடுத்தனர்.

    ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படும் ஏற்காட்டிற்கு சேலம் மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களில் இருந்து அதிக அளவில் காதல் ஜோடிகள் வந்தனர். இன்று காலை முதலே ஏற்காட்டிற்கு மோட்டார் சைக்கிள்களிலும், கார்களிலும், சாரையாக காதல் ஜோடிகள் வந்தனர். மேலும் காதல் திருமணம் செய்தவர்களும் அங்கு குவிந்தனர். இதனால் ஏற்காட்டில் காதல் ஜோடிகள் மற்றும் இளம் ஜோடிகள் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது.

    ஏற்காட்டில் குவிந்த காதல் ஜோடிகள் அங்குள்ள மான் பூங்கா, அண்ணா பூங்கா, படகு குழாம், சேர்வராயன் கோவில் , பக்கோடா பாயிண்ட, லேடீஸ் சீட், ஜென்ஸ் சீட், மீன் பண்ணை உள்பட அனைத்து பகுதிகளையும் ஆனந்தமாக சுற்றி பார்த்து மகிழ்ந்தனர். மேலும் முக்கியமான பகுதிகளில் நின்று செல்பி எடுத்தும் மகிழ்ந்தனர். இதனால் கடைகளிலும் வியாபாரம் களை கட்டியதால் வியாபாரிகளும் மகிழ்ச்சி அடைந்தனர்.

    சேலம் குரும்பப்பட்டியில் இயற்கை சூழலில் அனைவரையும் கவரும் வகையில், உயிரியல் பூங்கா செயல்பட்டு வருகிறது. இங்கு பறவையினங்கள், பாலூட்டி இனங்கள், ஊர்வன, நீந்துவன என 200-க்கும் மேற்பட்ட உயிர் இனங்கள் உள்ளன. இயற்கை சூழலில் இந்த பூங்கா உள்ளதால் காதல் ஜோடிகள் இன்று காலை முதலே அதிக அளவில் அங்கு வந்தனர்.

    மேலும் வண்ணத்து பூச்சி பூங்கா, செயற்கை நீர் வீழ்ச்சிகள் முன்பும் நின்று காதல் ஜோடிகள் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். குறிப்பாக அங்குள்ள மான்கள், பாம்புகள், குரங்குகள், மயில்கள், மற்றும் பறவையினங்களை பார்த்து மகிழ்ந்ததுடன் உற்சகாமாக பொழுதை கழித்தனர்.

    காதலர் தினத்தையொட்டி மேட்டூர் அணை பூங்காவுக்கு இன்று காலை முதலே ஏராளமான காதல் ஜோடிகள் வந்தனர். அவர்கள் அங்குள்ள காவிரியில் நீராடி மகிழ்ந்தனர். தொடர்ந்து அங்குள்ள ஊஞ்சல் மற்றும் சறுக்கு விளையாட்டுகளில் ஆனந்தமாக விளையாடி மகிழ்ந்தனர். மேலும் அணையின் பவள விழா கோபுரத்தில் ஏறிய அவர்கள் அணையின் அழகையும் பார்த்து ரசித்தனர். தொடர்ந்து தங்களுக்கு பிடித்த மீன்கள் மற்றும் உணவுகளையும் வாங்கி ருசித்து மகிழ்ந்தனர்.

    இதே போல சேலம் அண்ணா பூங்காவிலும் காலை முதலே காதல் ஜோடிகள் அதிக அளவில் குவிந்தனர். அவர்கள் அங்குள்ள புல் தரையில் அமர்ந்தும், செயற்கை நீரூற்று முன்பு நின்றும் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். இதனால் காலை முதலே அண்ணா பூங்காவில் காதல் ஜோடிகள் கூட்டம் அலைமோதியது. இதே போல சேலம் மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள தியேட்டர்களிலும் காதல் ஜோடிகள் திரண்டு தங்களுக்கு பிடித்த சினிமாக்களை பார்த்து மகிழ்ந்தனர்.

    • அனைத்து மாநிலங்களிலுமே டேட்டிங் செயலிகளை பயன்படுத்தி மோசடி செய்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
    • சுமார் 40 சதவீத பேர் ஆன்லைன் மூலமாக காதல் டேட்டிங்குகளில் ஈடுபட்டு வருவதும் கண்டறியப்பட்டு உள்ளது.

    இறு காதலர் தினம்.

    உலகம் முழுவதிலும் உள்ள காதலர்கள் பிப்ரவரி 14-ந்தேதி காதலர் தினத்தை உற்சாகமாக கொண்டாடுவதை வழக்கமாக வைத்துள்ளனர்.

    இதன்படி இன்று காதலர்கள் கடற்கரை, பொழுதுபோக்கு பூங்காக்கள், தியேட்டர்கள், மால்கள் ஆகியவற்றில் திரண்டு காதலர் தினத்தை கொண்டாடி மகிழ்ந்தனர்.

    காதலர் தினத்தில் தங்களது மனதை கொள்ளை கொண்ட மங்கையர்களுக்கு பிடித்தமான பரிசுப் பொருட்களை வாங்கி கொடுத்து அவர்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கடித்த வாலிபர்கள் பலர் இந்த நாளை மறக்க முடியாத நாளாக எப்போதும் மனதில் வைத்திருக்கும் வகையிலும் பல்வேறு மகிழ்ச்சியான விஷயங்களில் ஈடுபட்டனர்.

    இப்படி காதலர் தினத்தைப் பற்றி ரசனையோடு சொல்லிக்கொண்டே செல்லலாம். அந்த வகையில் நேரில் பார்த்து பழகி காதலிப்பவர்களுக்கு மத்தியில் பார்க்காமலேயே ஆன்லைனில் பழகி காதலிப்பவர்களும் தற்போது அதிகரித்து வருகிறார்கள்.


    ஆனால் இதுபோன்ற காதல் கடைசியில் மோசடி காதலாகவே முடிந்து விடுவதாக போலீசார் எச்சரித்துள்ளனர். டேட்டிங் செயலிகள் மூலமாக பேசி பழகுவது என்பது இன்றைய இளைஞர்கள், இளம்பெண்கள் மத்தியில் ஒருவித போதையாகவே மாறிப் போய் இருக்கிறது.

    டேட்டிங் செயலிகளை பதிவிறக்கம் செய்து கொண்டு அதன் மூலமாக பெண்களுக்கு வலை விரிப்பதற்காகவே ஒரு கும்பல் இணைய தளங்களை 24 மணி நேரமும் பயன்படுத்தி வருகிறது.

    அதே நேரத்தில் பெண் குரலில் பேசி வாலிபர்களை மயக்கி அவர்களிடமிருந்து பணம் பறிக்கும் சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன. பரிசுப் பொருட்களை அனுப்பி வைத்திருப்பதாக கூறிவிட்டு பின்னர் சுங்கஇலாகா அதிகாரி போல பேசி மிரட்டி பணத்தை பறித்து விடுகிறார்கள்.

    குறிப்பிட்ட தொகையை லட்சங்களில் சொல்லி இந்த பணத்தை அனுப்பாவிட்டால் நீங்கள் சிறை செல்வது உறுதி. உங்களுக்கு வந்திருக்கும் பார்சலில் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் உள்ளன. நாங்கள் சொல்லும் வங்கி கணக்கில் இத்தனை லட்சங்களை நீங்கள் உடனடியாக அனுப்ப வேண்டும்.

    இல்லையென்றால் உங்கள் வீட்டுக்கு அடுத்த சில நிமிடங்களில் போலீஸ் வரும் என்று கூறியதைக் கேட்டு இன்று பல இளைஞர்களும் இளம்பெண்களும் லட்சங்களை வாரி இறைத்து விட்டு அதனைத் திரும்பப் பெறுவதற்கு வழி தெரியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

    இதுபோன்ற சம்பவங்கள் அரங்கேறிய பிறகே டேட்டிங்கில் நம்மோடு பழகிய நபர் மோசடி ஆசாமி என்பது சம்பந்தப்பட்ட வாலிபர்களுக்கோ இளம்பெண்களுக்கோ தெரிய வருகிறது. இதனால் டேட்டிங்கில் யாருடன் பழகுகிறோம் என்பதை நேரில் சந்தித்து உறுதி செய்து கொண்ட பின்னரே தங்களது காதலை இன்றைய வாலிபர்களும் இளம்பெண்களும் தொடர வேண்டும் என்றும் போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    நாம் பின்னர் சந்திக்கலாம் சில மாதங்கள் என்னால் நேரில் வர இயலாது. அதன் பிறகு நாம் இருவரும் சந்தித்து பேசிக் கொள்ளலாம் என்று ஆன்லைனில் பழகும் ஆணோ, பெண்ணோ கூறினால் அதனை முழுமையாக நம்பி விட வேண்டாம் என்றும் அது போன்ற நபர்கள் நிச்சயம் பணம் பறிக்கும் கும்பலை சேர்ந்தவர்களாகவே இருப்பார்கள் என்றும் சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    இது தொடர்பாக சைபர் கிரைம் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும் போது டேட்டிங் செயலிகள் இன்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. விதவிதமான பெயர்களில் பல்வேறு டேட்டிங் செயலிகள் இன்று பயன்பாட்டில் உள்ளன. இந்த செயலிகள் மூலமாகவே மோசடி பேர் வழிகள் காதலன் போலவோ அல்லது காதலி போலவோ போலியான புகைப்படங்களை உருவாக்கி வைத்துக் கொண்டு மோசடியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    குறிப்பாக மோசடியில் ஈடுபடும் வாலிபர்கள் பெண் குரலில் பேசுவதுடன் அழகான புகைப்படங்களை டி.பி.யாக வைத்துக் கொண்டும் இளம்பெண்களுக்கு வலை விரிக்கிறார்கள். இதுபோன்று தமிழகத்திலும் பல்வேறு மோசடி சம்பவங்கள் அரங்கேறி உள்ளன. அனைத்து மாநிலங்களிலுமே டேட்டிங் செயலிகளை பயன்படுத்தி மோசடி செய்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.


    70 சதவீதத்திற்கும் மேற்பட்ட இந்தியர்கள் டேட்டிங் செயலிகளை பயன்படுத்தி அதன் மூலமாக பாதிக்கப்பட்டு இருப்பதும் தெரிய வந்து உள்ளது. தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட புகைப்படங்களை நம்பி பலர் ஏமாந்து இருப்பதும் தெரியவந்துள்ளது. 26 சதவீத இந்தியர்களில் ஒருவர் இது போன்ற மோசடியை எதிர்கொண்டுள்ளார்.

    காதலர் தினத்தை ஒட்டி காதலர் தின பரிசு தருவதாக கூறி மோசடி கும்பல் டேட்டிங் செயலிகள் மூலமாக வலை விரித்து இருப்பதும் அதன் மூலமாக பலர் தங்களது பணத்தை இழந்திருப்பதும் தெரிய வந்துள்ளது. அனைவரும் 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட நபர்களை குறி வைத்து இந்த ஆன்லைன் டேட்டிங் செயலி செயல்படுவதும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

    ஆன்லைன் பாதுகாப்பு மற்றும் இணையதள பாதுகாப்பு தொடர்பாக சமீபத்தில் வெளியிடப்பட்ட அறிக்கை ஒன்று ஏ.ஐ. எனப்படும் செயற்கை நுண்ணறிவு மூலமாகவே இந்த காதல் மோசடிகள் அரங்கேற்றப்பட்டு வருவது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

    சுமார் 40 சதவீத பேர் ஆன்லைன் மூலமாக காதல் டேட்டிங்குகளில் ஈடுபட்டு வருவதும் கண்டறியப்பட்டு உள்ளது. வரும் காலங்களில் இந்த ஏ.ஐ தொழில்நுட்பமும் டேட்டிங் செயலிகளும் மேலும் பல்வேறு மோசடிகளை அரங்கேற்றலாம் என்றும் சைபர் கிரைம் போலீசார் எச்சரித்துள்ளனர்.

    இதுபோன்ற டேட்டிங் செயலிகள் மூலமாக அரங்கேறும் மோசடிகள் 400 சதவீத அளவுக்கு அதிகரித்து இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இப்படி டேட்டிங் செயலிகளை பயன்படுத்தி மூன்று விதமான மோசடிகளை திரை மறைவில் இருந்தபடியே மோசடிக்காரர்கள் அரங்கேற்றி வருகிறார்கள்.

    ஆன்லைனில் உருகி உருகி காதலிப்பதாக கூறிவிட்டு தான் காதலிக்கும் பெண்ணுக்கு அவரது முகவரியில் பரிசு பொருள்களையும் அனுப்பி விட்டு பின்னர் சுங்கத்துறையில் இருந்து பேசுவதாக கூறி பார்சலில் வந்திருப்பது தடை செய்யப்பட்ட பொருள் எனக் கூறி அடுத்த நிமிடமே ஆன்லைன் காதலன் வில்லனாக மாறிவிடும் சம்பவங்களும் அரங்கேறி உள்ளன.

    டேட்டிங் செயலிகளை பயன்படுத்தும்போது மிகவும் உஷாராக இருப்பது அவசியம் என்று எச்சரிக்கிறார்கள் போலீசார். இந்த மோசடி ஒருபுறம் நடைபெற்றுக் கொண்டிருக்க... வேறு வகையான மோசடியையும் போலீசார் குறிப்பிடுகிறார்கள்.

    சில சேமிப்பு திட்டங்களை கூறி அதில் நீங்கள் முதலீடு செய்தால் பணம் கொட்டும் என்றும் மனதுக்கு பிடித்தவர்களிடம் ஆசைவார்த்தைகளை கூறி பின்னர் இரக்கமின்றி பழகியவர்களை அதில் சிக்க வைக்கும் சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன.

    இப்படி மோசடி சம்பவங்கள் ஆன்லைனில் அரங்கேறி வரும் நிலையில் பல பெண்கள் தங்களது கற்பையும் பறிகொடுத்து விட்டு நிற்கிறார்கள் என்பதே வேதனையின் உச்சமாகும். ஆன்லைன் மூலமாக பேசி பழகும் வாலிபர்கள் பலர் தங்களது வேலை முடிந்ததும் இளம்பெண்களை கழற்றி விட்டு விட்டு தலைமறைவாகிவிடும் சம்பவங்களும் அரங்கேறி இருப்பதாக பாதிக்கப்பட்டவர்கள் கூறுகிறார்கள்.

    இதுபோன்று பாதிக்கப்பட்ட பெண்கள் சிலர் புகார் அளித்து மோசடி பேர்வழிகள் மீது கற்பழிப்பு வழக்குகளும் பதிவு செய்யப்பட்டு உள்ளன. இப்படி டேட்டிங் செயலிகள் பல நேரங்களில் வேட்டு வைப்பதாகவே மாறி இருக்கின்றன.

    ஆன்லைனில் காதலிப்பவரா நீங்கள்? நிச்சயம் உஷாராக இருக்க வேண்டும் என்பது சைபர் கிரைம் போலீசாரின் வேண்டுகோளாக உள்ளது.

    காதலர் தினமான இன்று யாருடன் பழகுகிறோம் என்பதை இளம்பெண்கள் பலமுறை யோசித்து பார்க்க வேண்டும் அப்போதுதான் காதல் மோசடி வலையை விரித்திருக்கும் கும்பலில் பிடியில் இருந்து தப்ப முடியும் என்றும் போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

    • காதலர் தினத்தில் ஒற்றை ரோஜா பூ கொடுத்து அன்பை பரிமாறிக்கொள்ளும் பழக்கம் காலம் காலமாக இருந்து வருகிறது.
    • மொத்தமாகவும் சில்லறையாகவும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.

    திருப்பூர்:

    காதலர் தினம் நாளை (பிப்ரவரி 14-ந்தேதி) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி காதலர்கள் தங்கள் காதலை வெளிப்படுத்த பல்வேறு பரிசுப்பொருட்கள் வழங்குவது வழக்கம். பரிசு பொருட்களை பரிமாறி கொள்ளும்போது அதனுடன் ரோஜா பூவையும் சேர்த்து கொடுத்து அன்பை வெளிப்படுத்துவார்கள்.

    பரிசு பொருட்கள் கொடுக்க முடியாமல் இருந்தாலும் காதலர் தினத்தில் ஒற்றை ரோஜா பூ கொடுத்து அன்பை பரிமாறிக்கொள்ளும் பழக்கம் காலம் காலமாக இருந்து வருகிறது.

    இதையடுத்து காதலர்தின ஸ்பெஷல் ரோஜா பூக்கள் திருப்பூர் ஈஸ்வரன் கோவில் அருகே உள்ள பூ மார்க்கெட்டில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. மொத்தமாகவும் சில்லறையாகவும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. ஓசூர், பெங்களூர் போன்ற பகுதிகளில் இருந்து பட்டர்ரோஜா, சிவப்பு ரோஜா, மஞ்சள் ரோஜா, வெள்ளை ரோஜா, காஷ்மீர் ரோஜா என பல வகைகளிலும், பல வண்ணங்களிலும் ரோஜா பூக்கள் விற்பனைக்கு வந்துள்ளன.

    சில்லரை வியாபாரிகள் இந்த ரோஜாக்களை பொக்கே தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர். ஒரு கட்டு ரோஜா பூக்கள் ரூ.250 முதல் ரூ.300 வரை விற்பனை செய்யப்படுகிறது. ஒரு ரோஜா பூ ரூ.20 முதல் ரூ.30 வரை விற்பனை செய்யப்படுகிறது. அதனை காதலர்கள் ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர். பனிப்பொழிவு காரணமாக ரோஜாப்பூக்கள் வரத்து குறைந்துள்ளதால் விலை அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    • சிறைக்கு வந்து உணவு சாப்பிட முடியும்.
    • சிறை உணவை விட சிறப்பான உணவை சாப்பிடலாம்.

    இங்கிலாந்தில் உள்ள மிக பழைமையான சிறை காதலர்களுக்கு மிகவும் வித்தியாசமான அனுபவத்தை வழங்க ஆயத்தமாகி வருகிறது. காதலர் தினத்தன்று காதலர்கள் இந்த சிறைக்கு வந்து உணவு சாப்பிட முடியும்.

    காதலர்கள் தங்கள் இணையுடன் இந்த பழைமை மிக்க சிறையில் தங்களை அடைத்துக் கொண்டு உள்ளிருந்த படி தாங்கள் விரும்பிய உணவை ஆர்டர் செய்து சாப்பிட முடியும். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு செயல்பட்டு வந்த சிறை காதலர் தினத்தை சிறப்பாக மாற்றுவதற்கு தயாராகி வருகிறது. இங்கு காதலர்கள் வழக்கமான சிறை உணவை விட சிறப்பான உணவை சாப்பிட முடியுமாம்.

     


    சிறையில் உணவு சாப்பிடுவதற்கான கட்டணம் 215 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 17 ஆயிரம் என துவங்குகிறது. இதுதவிர 900 ஆண்டுகள் பழமையான நார்மன் க்ரிப்ட் வளாகத்திலும் டின்னர் செல்லலாம். இதற்கான கட்டணம் 230 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 19 ஆயிரம் என நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது.

    காதலர் தினத்தை ஒட்டி மிக பழமையான வளாகத்தில் உள்ள ஆறு பிரத்யேக லொகேஷன்களில் ஒன்றை தேர்வு செய்து காதலர்கள் அங்கு தங்களது நேரத்தை செலவழிக்கலாம். 

    • தனது மனைவியின் பெயரை டேக் செய்வதற்குப் பதிலாக வேறொரு பெண்ணை டேக் செய்து அவருக்கு காதலர் தின வாழ்த்து கூறியுள்ளார்.
    • ஸ்டீவ் சுமித் மற்றும் டேனி வில்லீஸ் இருவரும் 8 ஆண்டுகளாக காதலித்து கடந்த 2018 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.

    புதுடெல்லி:

    ஆஸ்திரேலியா அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் தொடர் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதற்காக இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலியா அணியில் ஸ்டீவ் சுமித் இடம் பெற்று உள்ளார்.

    ஏற்கனவே நாக்பூர் மைதானத்தில் நடந்து முடிந்த முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. இதைத் தொடர்ந்து 2-வது டெஸ்ட் போட்டி டெல்லியில் வரும் 18-ம் தேதி நடக்கிறது.

    இந்த நிலையில், தனது மனைவிக்கு காதலர் தின வாழ்த்து கூறுவதாக நினைத்து வேறொரு பெண்ணிற்கு ஸ்டீவ் சுமித் வாழ்த்து கூறி பிரச்சனையில் சிக்கியுள்ளார்.

    டுவிட்டரில் அழகான மனைவி டேனி வில்லீஸூக்கு காதலர் தின வாழ்த்துக்கள்...! உன்னை பார்க்காமல் என்னால் இருக்க முடியவில்லை. இன்னும் சிறிது நாட்களில் உன்னை பார்ப்பதற்கு ஆவலுடன் காத்திருக்கிறேன் என்று தனது காதலை வெளிப்படுத்தியுள்ளார்.

    ஆனால், அவர் டேக் செய்தவர் தான் தவறு. ஸ்டீவ் சுமித்தின் மனைவி டேனி வில்லீஸ் (Danielle Willis நிக் நேம் Dani), Dani_willis இன்ஸ்டாவில் ஆக்டிவாக இருக்கிறார். ஆனால், டுவிட்டரில் டி.குயீன் என்ற வேறு ஒருவர் தான் இருக்கிறார். இதனை சற்றும் யோசிக்காத ஸ்டீவ் சுமித், தனது மனைவியின் பெயரை டேக் செய்வதற்குப் பதிலாக வேறொரு பெண்ணை டேக் செய்து அவருக்கு காதலர் தின வாழ்த்து கூறியுள்ளார்.

    ஸ்டீவ் சுமித் மற்றும் டேனி வில்லீஸ் இருவரும் 8 ஆண்டுகளாக காதலித்து கடந்த 2018 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். தனது கணவரை பார்ப்பதற்காக டேனி வில்லீஸ் விரைவில் இந்தியா வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • 5 ஆண்டுகளுக்கும் மேல் சிங்கிளாக இருக்கும் ஊழியர்களுக்கு தங்களது தினசரி ஊதியத்தை மூன்று மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது.
    • மேயர் புளோரிடோ தனது ஊழியர்களுக்கு காதலர் தின போனஸை தொடர்ச்சியாக மூன்று ஆண்டுகளாக வழங்கி வருகிறார்.

    பிலிப்பைன்ஸில் உள்ள ஜெனரல் லூனா நகரத்தின் மேயர் மாட் புளோரிடோ காதலர்கள் இல்லாமல் சிங்கிளாக இருக்கும் ஊழியர்களுக்கு காதலர் தின பரிசாக போனஸ் வழங்கி அசத்தி உள்ளார். சிங்கிள் ஊழியர்கள் கூடுதல் நேரம் பணிபுரிந்ததற்காக மேயர் தனது பாராட்டுக்களுடன் போனசும் வழங்கியுள்ளார்.

    குறிப்பாக, 5 ஆண்டுகளுக்கும் மேல் சிங்கிளாக இருக்கும் ஊழியர்களுக்கு தங்களது தினசரி ஊதியத்தை மூன்று மடங்காகவும், மற்ற ஊழியர்களுக்கு இரட்டிப்பு ஊதியமும் வழங்கப்படுகிறது. அல்லது ஒரு நாள் விடுப்பு எடுத்துக் கொள்ளவும் வாய்ப்பு வழங்கப்படுகிறது.

    இதுகுறித்து மேயர் மாட் புளோரிடோ கூறுகையில், " காதலர் தினத்தன்று சிங்கிள்கள் என்ன செய்கிறார்கள் என்பது எனக்குத் தெரியும். நான் அவர்களின் நிலையை உணர்கிறேன். காதலர் தினத்தன்று யாரும் அவர்களுக்கு சாக்லேட், பூக்கள் கொடுக்க மாட்டார்கள். அதனால் அவர்களுக்கு இதுபோன்ற ஊக்கத்தொகையை வழங்க நினைத்தோம். இதன் மூலம்,யாராவது தங்களைக் கவனித்துக்கொள்கிறார்கள், யாரோ தங்களை நேசிக்கிறார்கள் என்பதை அவர்களால் உணர முடியும்" என்றார்.

    மேயர் புளோரிடோ தனது ஊழியர்களுக்கு காதலர் தின போனஸை தொடர்ச்சியாக மூன்று ஆண்டுகளாக வழங்கி வருகிறார். 289 டவுன்ஹால் ஊழியர்களில், 37 பேர் தாங்கள் சிங்கிள் தான் என்பதை உறுதி செய்த பிறகு இழப்பீட்டிற்கு தகுதி பெற்றனர். மேலும், தகுதியான ஊழியர்களிடம் அவர்களது கடைசி உறவு, பிரிந்ததற்கான காரணம் மற்றும் அவர்கள் ஏன் இன்னும் தனிமையில் இருக்கிறார்கள் என்பது குறித்தும் கேள்விகள் கேட்கப்பட்டன.

    • இந்த ஜோடிக்கு திருமணம் நடந்த போது இந்தியாவில் கொரோனா தாக்குதல் உச்சகட்டத்தில் இருந்தது.
    • திருமணத்திற்காக ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் உள்ள பிரமாண்ட அரண்மனை ஒன்றை முழுவதுமாக வாடகைக்கு எடுத்துள்ளார்.

    உதய்பூர்:

    இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்ட்யா மற்றும் நடாஷா ஸ்டான்கோவிக் ஆகியோருக்கு மீண்டும் பிரமாண்ட முறையில் திருமணம் நடக்கவிருப்பதால் ரசிகர்கள் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர். இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் கே.எல்.ராகுல் சமீபத்தில் பாலிவுட் நடிகர் சுனில் ஷெட்டியின் மகளும் நடிகையுமான ஆதியா ஷெட்டியை திருமணம் செய்துக்கொண்டார். இதே போல மற்றொரு ஸ்டார் வீரர் அக்ஷர் பட்டேலும் திருமணத்தை நடந்தி முடித்தார்.

    இந்நிலையில் தான் இந்திய டி20 கேப்டன் ஹர்திக் பாண்ட்யாவும் திருமணம் செய்துக்கொள்ளப் போவதாக அறிவித்துள்ளார். தனது மனைவி நடாஷாவை தான் மீண்டும் திருமணம் செய்துக்கொள்ளப் போகிறாராம்.

    ஹர்திக் பாண்ட்யாவும், செர்பியாவை சேர்ந்த நடிகையுமான நடாஷா ஸ்டான்கோவிக் ஆகியோருக்கும் கடந்த 2020-ம் ஆண்டு ஜனவரியில் நிச்சயதார்த்தம் நடந்து மே மாதத்திலேயே திருமணம் நடைபெற்றது. திருமணத்தின் போதே கர்ப்பமாக இருந்த நடாஷாவுக்கு 2020-ம் ஆண்டு ஜூலையில் ஆண் குழந்தை பிறந்தது. திருமணமாகி 3 ஆண்டுகள் நிறைவடையவுள்ள சூழலில் தற்போது பிரமாண்ட திருமணத்திற்கு ஆசைப்பட்டுள்ளனர். 

    இந்த ஜோடிக்கு திருமணம் நடந்த போது இந்தியாவில் கொரோனா தாக்குதல் உச்சகட்டத்தில் இருந்தது. இதனால் நண்பர்கள், உறவினர்கள் யாரையும் பெரியளவில் அழைக்க முடியாமல் மிகவும் எளிமையாக செய்துவிட்டனர். எனவே காதலர் தினமான இன்று திருமணத்திற்கு ஏற்பாடு செய்துள்ளனர். தற்போது இந்திய வீரர்கள் எவ்வித போட்டியும் இல்லாமல் உள்ளனர் என்பதால் அனைவரும் கலந்துக்கொள்ள வாய்ப்புள்ளது.


    2-வது முறையாக திருமணம் என்றாலும் அது சாதாரணமாக இருக்கக்கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறார் ஹர்திக் பாண்ட்யா. ஏனென்றால் திருமணத்திற்காக ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் உள்ள பிரமாண்ட அரண்மனை ஒன்றை முழுவதுமாக வாடகைக்கு எடுத்துள்ளார். அங்கு திரைப்படங்களில் காட்டப்படுவதை போல பல கோடிகள் செலவில் மிகப்பெரிய வண்ண விளக்குகளால் அலங்கரித்துள்ளனர்.

    பாண்ட்யாவின் திருமண நிகழ்ச்சியில் பாலிவுட் நடிகர், நடிகைகள், கிரிக்கெட் உலகின் நட்சத்திரங்கள் அனைவருக்கும் பலமான விருந்து பரிமாரப்படவுள்ளது. அவர்களுக்காக ராஜஸ்தான் மற்றும் குஜராத் மாநிலத்தின் உயரிய உணவுகள் தயாரிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த புகைப்படங்களும், வீடியோக்களும் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

    • காதலர் தினத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தியது போல், ஆதரவு தெரிவித்து இனிப்பு வழங்கும் நிகழ்ச்சியும் நடந்தது.
    • ராஜாஜி பூங்காவிற்கு வந்த திராவிடர் விடுதலை கழகத்தினர், ஆதித்தமிழர் பேரவையினர் காதலர் தினத்துக்கு ஆதரவு தெரிவித்து கோஷமிட்டனர்.

    மதுரை:

    பிப்ரவரி 14-ந்தேதியான இன்று காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சில அமைப்பினர் வருடந்தோறும் நூதன போராட்டங்களை நடத்தி வருவது வழக்கம். அதன்படி காதலர் தினத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று மதுரையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என சில அமைப்புகள் தெரிவித்து இருந்தது. இதையொட்டி நகரில் உள்ள ராஜாஜி பூங்கா, சுந்தரம் பார்க், நாயக்கர் மஹால், திருப்பரங்குன்றம் பூங்கா உள்ளிட்ட அனைத்து பொழுதுபோக்கு இடங்களிலும் போலீசார் தீவிர பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டனர்.

    இந்த நிலையில் விசுவ இந்து பரிசத், பஜ்ரங் தளம் ஆகிய அமைப்பைச் சேர்ந்த நிர்வாகிகள் இன்று காலை தொண்டர்களுடன் மதுரை ராஜாஜி பூங்காவுக்கு வந்தனர். அவர்கள் காதலர் தினத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்தியாவின் பாரம்பரிய பழக்க வழக்கம்-பண்பாட்டுக்கு காதலர் தினம் எதிரானது. எனவே அதனை இளைஞர்கள் கொண்டாடக்கூடாது. புல்வாமா தாக்குதலை நினைவு கூறும் வகையில் பயங்கரவாத ஒழிப்பு தினமாக அனுசரிக்க வேண்டும்" என்று ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் பேசினர்.

    காதலர் தினத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தியது போல், ஆதரவு தெரிவித்து இனிப்பு வழங்கும் நிகழ்ச்சியும் நடந்தது. அதன்படி இன்று காலை ராஜாஜி பூங்காவிற்கு வந்த திராவிடர் விடுதலை கழகத்தினர், ஆதித்தமிழர் பேரவையினர் காதலர் தினத்துக்கு ஆதரவு தெரிவித்து கோஷமிட்டனர். பின்னர் அங்கு வந்திருந்த புதுமண தம்பதிகளுக்கு இனிப்பு வழங்கி காதலர் தின வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

    ஒரே இடத்தில் எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டமும், ஆதரித்து இனிப்பும் வழங்கிய சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது. 

    ×