என் மலர்
நீங்கள் தேடியது "ரோஜா"
- ஒழுக்கமற்ற நடவடிக்கைகள் திருமலையின் புனிதத்தன்மையை ஆழமாகக் காயப்படுத்தி சிதைத்துள்ளது.
- தர்மத்தைப் பற்றி யாராலும் பெரிய உரைகளை வழங்க முடியும்.
திருமலை திருப்பதியில் லட்டு பிரசாதத்தில் பன்றிக் கொழுப்பு கலக்கப்பட்டதாக எழுந்த சர்ச்சை அம்மாநிலத்தில் இன்னும் ஓய்ந்தபாடில்லை.
இந்த வழக்கின் விசாரணையின் ஒரு பகுதியாக, சிறப்பு புலனாய்வுக் குழு இந்த மாதம் 13 ஆம் தேதி விசாரணைக்காக ஆஜராக ஜகன்மோகனின் ஒய்எஸ்ஆர் கட்சியின் மூத்த தலைவர் சுப்பாரெட்டிக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
சுப்பாரெட்டி தேவஸ்தான தலைவராக இருந்தபோது தான் இந்த கலப்பட நெய் விவகாரம் நடந்து வந்ததாக குற்றச்சாட்டுகள் இருந்த நிலையில் தற்போது அவர் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார். இவர் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சியில் இருந்து ஜகன்மோகனின் ஒய்எஸ்ஆர் கட்சிக்கு தாவியவர் ஆவார்.
இதற்கிடையே சனாதன தர்மம் இழிவுபடுத்தப்பட்டதாக கொந்தளித்த ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண், முந்தைய ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சியின் மீது பழி சுமத்தினார்.
இந்நிலையில், சனாதன தர்ம பரிபாலன வாரியம் என்ற அமைப்பை நிறுவி, திருமலை உள்ளிட்ட கோயில்களில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டு வர பவன் கல்யாண் அழைப்பு விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், "முந்தைய திருமலை தேவஸ்தான வாரியத்தின் மிகப் பெரிய நிர்வாகத் தோல்வி மற்றும் ஒழுக்கமற்ற நடவடிக்கைகள் திருமலையின் புனிதத்தன்மையை ஆழமாகக் காயப்படுத்தி சிதைத்துள்ளது.
இந்த கசப்பான நம்பிக்கை துரோகம், தற்போதைய திருமலை தேவஸ்தான வாரியத்திற்கு ஒரு ஆழமான பாடமாக அமைய வேண்டும். திருமலையின் புனிதத்தன்மையை மீட்டெடுக்கவும், கோடிக்கணக்கான பக்தர்களின் நம்பிக்கையை மீண்டும் பெறவும் தொடர்ச்சியாக உழைக்க வேண்டும்.
திருமலை தேவஸ்தானத்தை நிர்வகிக்கும் மற்றும் நடத்தும் வாரியம், அதிகாரிகள், செயல் அலுவலர், இணைச் செயல் அலுவலர் முதல் ஊழியர்கள், ஒப்பந்தக்காரர்கள் மற்றும் விற்பனையாளர்கள் வரை அனைவருக்கும் கிடைத்துள்ளது வெறும் பதவி அல்ல, மாறாக கோடிக்கணக்கான சனாதனிகளுக்கு தெய்வீக சேவை செய்யக் கிடைத்த ஒரு புனிதமான வாய்ப்பு.
நிதிநிலை அறிக்கைகள், தரக் கட்டுப்பாடு மற்றும் தணிக்கைகள் முதல் சொத்து மற்றும் நன்கொடைகளை நிர்வகிப்பது வரை அனைத்து நடவடிக்கைகளிலும் முழுமையான வெளிப்படைத்தன்மையை உறுதி செய்ய வேண்டும் என்று நான் வலியுறுத்துகிறேன். ஒவ்வொரு விவரத்தையும் பொதுமக்களுக்குக் கிடைக்கச் செய்ய வேண்டும்.
சனாதன தர்ம பரிபாலன வாரியத்தை நிறுவுவது எதிர்காலத்திற்கான ஒரு நடவடிக்கையாக இருந்தாலும், தர்மத்தைக் காக்க வேண்டிய மற்றும் அதற்காக நிற்க வேண்டியது ஒவ்வொரு சனாதனியின் பொறுப்பு. மேலும், என்றாவது ஒரு நாள் நாடு முழுவதும் உள்ள நமது அனைத்துக் கோயில்களும் நமது சமூகத்தால், அதாவது பக்தர்களால் நிர்வகிக்கப்படும் காலம் வரும் என்பதே எனது உண்மையான நம்பிக்கை. இது நமது கடமையாகும்," என்று தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் முந்தைய தேவஸ்தான நிர்வாகம் குறித்து விமர்சித்த பவன் கல்யாணுக்கு, முந்தைய ஆட்சியாளரான ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரசு கட்சியைச் சேர்ந்த ஆந்திர முன்னாள் அமைச்சர், நடிகை ரோஜா கண்டனம் தெரிவித்துள்ளார்.
ரோஜா வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "பவன் கல்யாண் காரு, நீங்கள் புனிதத்தன்மை மற்றும் தர்மத்தைப் பற்றிப் பேசும் ஒவ்வொரு முறையும், அது உங்கள் ஒரு தலைப்பட்சமான அக்கறையை மட்டுமே அம்பலப்படுத்துகிறது.
திருமலையில் பக்தர்கள் இறந்தபோதோ அல்லது கடுமையான தோல்விகள் அமைப்பை உலுக்கியபோதோ நீங்கள் ஒருபோதும் வாய் திறக்கவில்லை. ஆனால், சந்திரபாபுவுக்கு ஒரு பாதுகாப்பு தேவைப்படும் தருணத்தில், நீங்கள் திடீரென்று உபதேசங்களைக் கொடுக்கத் தொடங்குகிறீர்கள். அது பக்தி அல்ல. அது அப்பட்டமான அரசியல் நாடகம்.
நீங்கள் நேர்மையைப் பற்றிப் பேசுகிறீர்கள், ஆனால் நேர்மை என்பது அசௌகரியமாக இருந்தாலும் உண்மைக்காக நிற்பதைக் குறிக்கிறது. நீங்கள் ஒருபோதும் அதைச் செய்ததில்லை.
நீங்கள் எளிதான இலக்குகளைத் தேர்ந்தெடுத்து, உங்கள் பக்கம் இருப்பவர்கள் தவறு செய்யும்போது மௌனமாக இருக்கிறீர்கள். அதனால்தான் உங்கள் பிரசங்கங்கள் வெற்றுத்தனமாக உள்ளன.
தர்மத்தைப் பற்றி யாராலும் பெரிய உரைகளை வழங்க முடியும். உண்மையான கேள்வி என்னவென்றால், தேவைப்படும்போது அதற்காகப் போராடும் தைரியம் யாருக்கு இருக்கிறது என்பதில் தான் உண்மையான தர்மம் உள்ளது. நீங்கள் ஒவ்வொரு முறையும் அந்த சோதனையில் தோல்வியடைந்துள்ளீர்கள்.
ஒரு வாரியமோ அல்லது குழுவோ திருமலையைச் சரிசெய்யாது. அர்ப்பணிப்பும் நேர்மையும் மட்டுமே சரிசெய்யும், மேலும் இவை இரண்டும் உங்கள் அரசியலில் இல்லை.
மற்றவர்களுக்குப் போதிக்கும் முன், முதலில் நீங்கள் நிலையாக இருக்க கற்றுக்கொள்ளுங்கள். திருமலைக்கு நேர்மை தேவை, பொய்யான சீற்றம் அல்ல." என்று தெரிவித்துள்ளார்.
- ஆந்திர அரசியலில் தீவிரமாக இயங்கி வந்த ரோஜா கடந்த ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சியில் அமைச்சராக இருந்தார்.
- கடைசியாக 2015 ஆம் ஆண்டில் ரோஜாவின் கில்லாடி, புலன் விசாரனை 2 ஆகிய படங்கள் வெளியாகின.
90களில் தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையயாக விளங்கிய ரோஜா தற்போது மீண்டும் காம்பேக் கொடுத்துள்ளார். ஆந்திர அரசியலில் தீவிரமாக இயங்கி வந்த ரோஜா கடந்த ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சியில் அமைச்சராக இருந்தார்.
ஆந்திராவில் ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு அரசியலில் இருந்து தற்காலிகமாக ஓய்வு பெற்ற ரோஜா தனது திரைப்பட வாழ்க்கையில் கவனம் செலுத்தி வருகிறார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு தற்போது தமிழ் திரைப்படம் மூலம் அவரின் கம்பேக் நிகழ்கிறது.
கடைசியாக 2015 ஆம் ஆண்டில் ரோஜாவின் கில்லாடி, புலன் விசாரனை 2 ஆகிய படங்கள் வெளியாகின.
இந்நிலையில் டிடி பாலச்சந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் 'லெனின் பாண்டியன்' படத்தில் ரோஜா முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் ரோஜாவின் கதாபாத்திர வீடியோவை நடிகை குஷ்பு வெளியிட்டுள்ளார்.
- விஜய் மிகவும் கூச்ச சுபாவம் உள்ளவராக இருந்தார்.
- யாரிடமும் அதிகம் நெருங்கி பேசமாட்டார்.
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளத்தில் 150-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர், நடிகை ரோஜா. 1990-களில் முன்னணி நடிகையாக வலம் வந்த இவர், ஒரு கட்டத்தில் அரசியலில் ஈடுபட்டதன் காரணமாக, படங்களில் நடிப்பதைக் குறைத்துக் கொண்டார். சமீபத்தில் படங்களில் நடிக்காதது பற்றி நடிகை ரோஜா தெரிவித்துள்ள கருத்து இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
ரோஜா அளித்த பேட்டியில், "நடிகர் விஜய்யுடன் 'நெஞ்சினிலே' படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடினேன். அப்போது விஜய் மிகவும் கூச்ச சுபாவம் உள்ளவராக இருந்தார். யாரிடமும் அதிகம் நெருங்கி பேசமாட்டார். சில வருடங்கள் கழித்து, அவரது நடிப்பில் 'காவலன்' படத்தில் அசின் அம்மாவாக நடித்தேன்.
அந்தப் படப்பிடிப்பில் என்னைப் பார்த்து அதிர்ச்சியடைந்த விஜய், 'மேடம்.. நீங்கள் எனக்கு மாமியாராக நடிக்கிறீர்களா?. படக்குழுவில் சொன்னபோது, அவர்கள் சும்மா சொல்கிறார்கள் என்று நினைத்தேன். நீங்கள் இந்த கதாபாத்திரத்தில் நடிப்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. உங்களை நாங்கள் இன்னும் நாயகியாகவே பார்த்து வருகிறோம்' என்று கூறினார்.
விஜய் மட்டுமல்ல தெலுங்கில் நடிகர் கோபிசந்துக்கு மாமியாராக நடித்தபோது, அவரும் இதே விஷயத்தைக் கூறினார். அதனால் தான் நான் சினிமாவில் அம்மா, மாமியார் கதாபாத்திரங்களில் நடிப்பதில்லை என்று ஒதுங்கினேன். 'பாகுபலி' படத்தில் ரம்யா கிருஷ்ணனுக்கு கிடைத்ததுபோல ஒரு கதாபாத்திரம் கிடைத்தால், மீண்டும் நடிப்பது பற்றி யோசிப்பேன்" என்று கூறியுள்ளார்.
ரோஜா ரோஜா பாடல் மூலம் கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் அனைவரது கவனத்தை ஈர்த்து வருகிறார் பாடகர் சத்யன் மகாலிங்கம். இவர் 26 வருடங்களுக்கு முன் காதலர் தினம் படத்தில் இடம்பெற்ற ரோஜா ரோஜா பாடலை ஒரு நிகழ்ச்சியில் சத்யன் மகாலிங்கம் பாடினார். அப்போது அவர் பாடிய வீடியோ கடந்த சில நாட்களாக வைரலாகி வருகிறது. 20 வயதில் அந்த ப்மெலடி பாடலை மிகவும் அருமையாக பாடியுள்ளார்.ஆனால் இவருக்கு மெலடி பாடல்கள் பாட அதிகம் வாய்ப்பு கிடைக்கவில்லை.
வசூல் ராஜா MBBS படத்தில் 'கலக்கப் போவது யாரு', சரோஜா படத்தில் 'தோஸ்து படா தோஸ்து', பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தில் 'அட பாஸு பாஸு', கழுகு படத்தில் 'ஆம்பளைக்கும் பொம்பளைக்கும்..' உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட ஹிட் பாடல்களை இவர் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மக்களின் ஆதரவிற்கும் அன்பிற்கும் பெரும் நன்றி தெரிவித்து வீடியோவை பகிர்ந்துள்ளார்.
- தமிழிலும், தெலுங்கிலும் முன்னணி நடிகர்கள் பலருடன் ஜோடியாக நடித்தேன்.
- நகரியில் மட்டும்தான் நான் வெற்றி பெற்ற பிறகு சொந்த வீடு கட்டிக்கொண்டேன்.
நகரி:
பிரபல நடிகையும், ஆந்திராவின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி ஆட்சியில் மந்திரியாக இருந்தவருமான ரோஜா, அரசியலில் ஊழல் செய்து ரூ.1,000 கோடி சம்பாதித்ததாக நகரி தொகுதி தெலுங்குதேசம் கட்சி எம்.எல்.ஏ. பானு பிரகாஷ் குற்றம்சாட்டி இருந்தார்.
அவருக்கு பதில் அளிக்கும் வகையில் ரோஜா அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-
எனக்கு பல ஊர்களில் வீடுகள் இருப்பதாக பானு பிரகாஷ் கூறுகிறார். ஐதராபாத், சென்னையில் உள்ள வீடுகள் நான் எம்.எல்.ஏ.வாக வெற்றி பெறுவதற்கு முன் சம்பாதித்த சொத்துகள். 1991-ம் ஆண்டு முதல் சினிமாவில் நடித்துக்கொண்டிருக்கிறேன்.
தமிழிலும், தெலுங்கிலும் முன்னணி நடிகர்கள் பலருடன் ஜோடியாக நடித்தேன். இதுதவிர விளம்பரங்கள், டி.வி. நிகழ்ச்சிகள், கடை திறப்பு விழாக்கள் என்று ஓய்வில்லாமல் உழைத்து சம்பாதித்தேன். ஒரு படத்தில் நடித்தால் ஒரு கோடி ரூபாய் சம்பளம் கொடுப்பார்கள். நகரியில் மட்டும்தான் நான் வெற்றி பெற்ற பிறகு சொந்த வீடு கட்டிக்கொண்டேன். எனது சொத்துகளுக்கும், சம்பளத்துக்கும் கணக்கு இருக்கிறது.
அப்படியிருக்கும்போது அரசியலுக்கு வந்து ஊழல் செய்து 1,000 கோடி ரூபாய் சம்பாதித்தேன் என்று சொல்வது தவறு. உண்மையாக இருந்தால் பானுபிரகாஷ் அதை நிரூபிக்க வேண்டும். நிரூபித்தால் அரசியலில் இருந்து நான் விலகத் தயார். அதேசமயம் நிரூபிக்க தவறினால் பானு பிரகாஷ் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு அரசியலை விட்டு விலக தயாரா?.
இவ்வாறு ரோஜா தெரிவித்தார்.
- பவன் கல்யாண் திசை திருப்பும் அரசியலில் ஈடுபட்டு வருகிறார்.
- கோசாலையில் பசுக்கள் ஏன் இறந்து விடுகிறது என தெளிவுபடுத்த வேண்டும்.
திருப்பதி:
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சொந்தமான கோசாலையில் 100-க்கும் மேற்பட்ட பசுக்கள் இறந்து விட்டதாக முன்னாள் திருப்பதி தேவஸ்தான ஆங்காவல குழு தலைவர் பூமண கருணாகர ரெட்டி குற்றம்சாட்டி இருந்தார். அவரது குற்றச்சாட்டுக்கு திருப்பதி தேவஸ்தானம் மறுப்பு தெரிவித்து இருந்தது.
இந்த நிலையில் கோசாலையில் பசுக்கள் இறப்புக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியினர் நேற்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து முன்னாள் மந்திரி ரோஜா கூறியதாவது:-
எங்காவது ஏதாவது நடந்தால் அதை வெளிப்படையாக பேசி சனாதான தர்மத்தை பாதுகாப்பதாக துணை முதல் மந்திரி பவன் கல்யாண் பேசுகிறார். திருப்பதியில் அநியாயங்கள், தவறான செயல்கள் நடக்கும் போது ஏன் அவர் வாய் திறக்கவில்லை. பவன் கல்யாண் திசை திருப்பும் அரசியலில் ஈடுபட்டு வருகிறார். தவறு செய்தவர்கள் ஏன் தண்டிக்கப்படவில்லை.
இதுதான் பவனின் நேர்மையா? பதவியும், சலுகையும் கொடுத்தால் அவர் வாயை மூடிக் கொண்டு இருப்பாரா?.
கோசாலையில் பசுக்கள் ஏன் இறந்து விடுகிறது என தெளிவுபடுத்த வேண்டும். ஏழுமலையானுக்கு துரோகம் செய்தால் என்ன நடக்கும் என சந்திரபாபு நாயுடு மற்றும் பவன் கல்யாணுக்கு தெரியும். அவர்கள் அதை அனுபவித்து இருக்கிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
- தமிழில் 90களில் பிரபலமான நடிகையாக வலம் வந்த ரோஜா.
- இவர் தற்போது ஒரு ஏழை மாணவியின் கனவை நனவாக்க உதவியுள்ளார்.
சூரியன், உழைப்பாளி, வீரா, மக்கள் ஆட்சி உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்தவர் ரோஜா. இவர் 90களில் தவிர்க்க முடியாத நடிகையாக வலம் வந்தார். தற்போது ஆந்திர மாநிலம், நகரி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராகவும், சுற்றுலாத்துறை அமைச்சராகவும் பொறுப்பு வகித்து வருகிறார். இவர் கொரோனா காலத்தில் தாய், தந்தை என இரண்டு பேரையும் இழந்து வறுமையில் வாடிய தனது தொகுதியை சேர்ந்த புஷ்பா என்ற மாணவியை தத்தெடுத்து கொண்டார். அந்த மாணவியின் கல்வி செலவை முழுவதும் தான் ஏற்றுக்கொள்வதாக தெரிவித்திருந்தார்.

மாணவி புஷ்பா தனது பள்ளி படிப்பை முடித்துவிட்டு நீட் தேர்வில் நல்ல மதிப்பெண் எடுத்து, திருப்பதியில் உள்ள கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். அவர் கூறியதாவது, "மருத்துவ வசதி இல்லாமல் என் தாய், தந்தையர் இறந்ததைப் போன்று எந்தக் குழந்தைக்கும் அது போன்று ஒரு நிகழ்வு ஏற்படாமல், வருங்காலத்தில் என்னால் முடிந்த அனைத்து மருத்துவ உதவிகளையும் என்னைப் போன்ற குழந்தைகளுக்கு இலவசமாக கொடுப்பதே என் லட்சியம்" என்றார்.
- நடிகையும், சட்டமன்ற உறுப்பினராகவும், சுற்றுலாத்துறை அமைச்சராகவும் பொறுப்பு வகித்து வருபவர் ரோஜா.
- மாணவர்கள் படிப்புடன் விளையாட்டிலும் சிறந்து விளங்கி சிகரத்தை தொட வேண்டும் என அமைச்சர் ரோஜா கூறினார்.
சூரியன், உழைப்பாளி, வீரா, மக்கள் ஆட்சி உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்தவர் ரோஜா. இவர் 90களில் தவிர்க்க முடியாத நடிகையாக வலம் வந்தார். தற்போது ஆந்திர மாநிலம், நகரி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராகவும், சுற்றுலாத்துறை அமைச்சராகவும் பொறுப்பு வகித்து வருகிறார்.

குத்துச் சண்டை விளையாடிய ரோஜா
இந்நிலையில் விஜயவாடாவில் உள்ள உடா சிறுவர் பூங்காவில் நடந்த 12-வது தேசிய மினி ரோல் பால் விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது. ஆண்கள் பிரிவில் ராஜஸ்தான் அணியும், பெண்கள் பிரிவில் ஒடிசாவும் முதல் பரிசை வென்றன. விழாவில் சிறப்பு விருந்தினராக அமைச்சர் ரோஜா கலந்து கொண்டு விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கினார்.

குத்துச் சண்டை விளையாடிய ரோஜா
அப்போது ரோஜா பேசியதாவது, ஆந்திராவில் 11 வயதுக்குட்பட்ட சிறுவர், சிறுமிகளை கொண்டு இந்த விளையாட்டு போட்டிகள் நடத்தப்படுவது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த போட்டியில் 19 மாநிலங்களைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் பங்கேற்று உள்ளனர். மாணவர்கள் படிப்புடன் விளையாட்டிலும் சிறந்து விளங்கி சிகரத்தை தொட வேண்டும் என்றார். பின்னர் அமைச்சர் ரோஜா அங்கிருந்த பெண்களுடன் குத்துச்சண்டை விளையாடி மாணவர்களை உற்சாகப்படுத்தினார். இதனை கண்டு ரசிகர்கள் உற்சாக குரல் எழுப்பி ஆரவாரம் செய்தனர்.
கடந்த மாதம் ஜெகன்மோகன் ரெட்டி பிறந்தநாள் விழாவில் அமைச்சர் ரோஜா கலைக்குழு பெண்களுடன் மேடையில் நடனமாடி உற்சாகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
- ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி இன்று தனது 50-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.
- இவருக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
ஆந்திர மாநிலம் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி தலைவரும் முதல்வருமான ஜெகன் மோகன் ரெட்டி இன்று தனது 50-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இவருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முதல் பல்வேறு அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

ஜெகன் மோகன் ரெட்டிக்கு வாழ்த்து தெரிவித்த ரோஜா
இந்நிலையில், நடிகையும் ஆந்திர மாநிலம், நகரி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராகவும் சுற்றுலாத்துறை அமைச்சராகவும் பொறுப்பு வகித்து வரும் ரோஜா முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
- தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக இருந்த ரோஜா, இப்போது ஆந்திர மந்திரியாக பதவி வகிக்கிறார்.
- சமூக வலைத்தளத்தில் பரப்பும் அவதூறு கருத்துக்கள் வேதனை அளிப்பதாக ரோஜா தெரிவித்துள்ளார்.
தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக இருந்த ரோஜா, இப்போது ஆந்திர மந்திரியாக பதவி வகிக்கிறார். இந்த நிலையில் அரசியல் ரீதியாக எதிர்க்க முடியாதவர்கள் தனது குடும்பத்தை குறிவைக்கிறார்கள் என்று வேதனை தெரிவித்து உள்ளார். இதுகுறித்து ரோஜா அளித்துள்ள பேட்டியில். "நான் சினிமாவிலும், அரசியலிலும் எத்தனையோ பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகிறேன். ஆனால் சமூக வலைதளங்களில் சமீபகாலமாக என் மீதும், என் குடும்பத்தினர் மீதும் வரும் அவதூறுகள் வேதனை அளிக்கிறது.

ரோஜா
பிறந்தநாளில் எனது சகோதரர் முத்தமிட்டதை கூட ஆபாசமாக்கி அசிங்கப்படுத்தினர். இப்போது என் மகளின் போட்டோவை மார்பிங் செய்தும், என்னை பற்றியும் ஆபாசமான படங்களை வெளியிடுகிறார்கள். அதை பார்த்த என் மகள் மிகவும் வருத்தப்பட்டாள். இவையெல்லாம் நமக்கு தேவையா என்று என் முகத்தின் மீது நேரடியாக கேட்கிறாள். அவளுக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை. பிரபலங்களுக்கு இவை எல்லாம் சாதாரணமாக நடப்பவைதான். இவற்றை கண்டு கொண்டால் முன்னேற முடியாது என்று என் குழந்தைகளுக்கு நானே புரியும்படி சொல்லி வருகிறேன்'' என்றார்.
- நாளை காதலர் தினம் என்பதால் மதுரை மலர் சந்தையில் ரோஜா பூக்கள் விற்பனைக்கு குவிந்தன.
- ஒரு பாக்கெட் ரூ.200-க்கு விற்பனையாகிறது.
மதுரை
தமிழகம் முழுவதும் காதலர் தினம் நாளை (14-ந்தேதி) கொண்டாடப்படுகிறது. இதை யொட்டி காதலர்கள் ஒருவருக்கொருவர் ரோஜா பூ கொடுத்து தங்களது காதலை வெளிப்படுத்துவது வழக்கம்.
நாளை காதலர் தினம் என்பதால் ரோஜா மலர்கள் அதிகளவில் விற்பனையாகும். இதனை கருத்தில் கொண்டு மதுரை மாட்டுத்தாவணியில் உள்ள மலர் சந்தைக்கு ரோஜா மலர்கள் அதிகளவில் வரவழைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இந்த ரோஜா மலர்கள் ஓசூர், கொடைக்கானல், ஊட்டி, பெங்களூரு ஆகிய இடங்களில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. ஒரு பாக்கெட் ரோஜா பூக்கள் ரூ.200க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு ரோஜா பூ ரூ.30-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனை வாங்க வாலிபர்கள் மற்றும் இளம்பெண்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். காதலர் தினத்தை முன்னிட்டு மதுரையில் உள்ள பூங்காக்கள், சுற்றுலா தலங்கள் மற்றும் பொழுதுபோக்கு இடங்களில் மாநகராட்சி ஊழியர்கள் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மதுரையில் காதலர்கள் எல்லை மீறக்கூடாது என்பதை உறுதிப்படுத்தும் வகையில், மாவட்டம் முழுவதும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மதுரை காந்தி மியூசியம், மாநகராட்சி ராஜாஜி பூங்கா, எக்கோ பார்க், அழகர்கோவில் மலை, திருமலை நாயக்கர் மகால் உள்பட பல்வேறு பகுதிகளில் இன்று முதலே கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மதுரை ராஜாஜி பூங்காவுக்கு காதலர் தினத்தையொட்டி ஜோடியாக வந்திருந்த சில பெண்களிடம் கேட்டபோது அவர்கள் கூறியதாவது:-
தமிழகத்தில் பலருக்கும் பிப்ரவரி 14-ம் தேதி காதலர் தினம் என்பது மட்டும்தான் தெரியும். ஆனால் மதுரைக்காரர்களுக்கு ஏற்கனவே காதலர் வாரம் தொடங்கி விட்டது. காதலர் தினம் என்றால் பலருக்கும் ரோஜா பூக்கள் தான் நினைவுக்கு வரும். அது தவறு. ப்ரவரி 7-ந்தேதி ரோஜா தினம் ஆகும். அன்றுதான் காதலர்கள் ஒருவருக்கொருவர் ரோஜா பூக்களை கொடுத்து அன்பை பரிமாறிக் கொள்வார்கள்.
பிப்ரவரி 8-ந்தேதி முன்மொழிவு நாள். அன்றுதான் நேசிப்பவர்க ளிடம் காதலை வெளிப் படுத்த வேண்டும். பிப்ரவரி 9-ம் தேதி சாக்லேட் தினம். அன்றைய நாளில் காதலர்கள் விரும்பத்தகாத மற்றும் மோசமான நிகழ்வு களை மறந்து, சாக்லேட் பகிர்ந்து காதலை பரிமாறிக் கொள்வார்கள்.
பிப்ரவரி 10-ந்தேதி டெடி டே அன்று அழகான பொம்மையை வழங்கியுள்ளோம். அது எங்களின் மன அழுத்தத்தை குறைக்க, முகத்தில் புன்ன கையை வரவழைக்க உதவியாக இருக்கும். பிப்ரவரி 11-ந்தேதி வாக்குறுதி தினம். அன்றைய நாளில் காதலர்கள் உறவை ஆழப்படுத்திக் கொள்வோம். ஒருவருக்கொருவர் ஆதரவாக இருக்கவும் உறுதியேற்றுக் கொண் டோம்.
பிப்ரவரி 12 - கட்டிப்பிடி நாள். அன்றைய நாளில் அன்புக்குரியவர்களை அரவணைப்பதன் மூலம் பாசத்தை வெளிப்படுத்தி உள்ளோம். அது நிச்சயமற்ற தன்மை அல்லது எதிர்காலம் பற்றிய கவலையை சரிசெய்வதற்கு உதவியாக இருக்கும்.
- ஆந்திராவில் செயல்படுத்தப்படும் சிறப்பு திட்டங்களால் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.1 லட்சம் முதல் ரூ.2 லட்சம் வரையில் நேரடியாக உதவி கிடைத்துள்ளது.
- அனைத்து தரப்பில் இருந்தும் ஆந்திர முதல்வர் ஜெகனுக்கு ஆதரவு பெருகி வருகிறது.
திருவள்ளூர்:
திருவள்ளூரை அடுத்த புட்லூரில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் நடந்த நிகழ்ச்சியில் நடிகையும், ஆந்திர மாநில சுற்றுலா, கலாசாரம் மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சருமான ரோஜா பங்கேற்றார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
ஆந்திராவில் செயல்படுத்தப்படும் சிறப்பு திட்டங்களால் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.1 லட்சம் முதல் ரூ.2 லட்சம் வரையில் நேரடியாக உதவி கிடைத்துள்ளது. இதனால் அனைத்து தரப்பில் இருந்தும் ஆந்திர முதல்வர் ஜெகனுக்கு ஆதரவு பெருகி வருகிறது.
நகரி மற்றும் தமிழக எல்லைப்பகுதியில் உள்ள நெசவாளர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் ஆண்டு தோறும் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் சீருடைகள் தயார் செய்ய அனுமதிக்கப்படுகிறது.
ஜவுளி பூங்கா அமைக்கவும் தொடர்ந்து மத்திய அரசிடம் பேச்சு வார்த்தை நடத்தி வலியுறுத்தி வருகிறோம். தற்போது உயர்ந்துள்ள மின்சார கட்டணம் நெசவாளர்களை பாதிக்காத வகையில் ஆந்திர மாநில அரசு சிறப்பு உத்தரவு வழங்கி உள்ளது.
அந்த உத்தரவு ஏப்ரல் இறுதி வாரத்தில் அமலுக்கு வரும். அப்போது நெசவாளர்கள் மீதான மின்சார கட்டணம் அதிகமின்றி இருக்கும்.
தமிழ் வழிக்கல்வியில் பயிலும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவசமாக புத்தகங்களை வழங்க கோரிக்கை வைத்தேன். அதை விரைவாக வழங்கி முதல்வர் சிறப்பாக செயல்பட்டார். தமிழக அரசியலில் விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் உள்ளார். அதேபோல் நானும் அமைச்சராக உள்ளேன். இரண்டு பேரும் திரைப்படத்துறையில் இருந்து வந்தவர்கள் என்பதோடு ஒரே துறையில் பயணிப்பது மகிழ்ச்சியளிக்கிறது.
தற்போதைய நிலையில் இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் இயக்குநராக உள்ளேன். தமிழகத்திற்கு விளையாட்டு தொடர்பாக எந்த கோரிக்கை வைத்தாலும் நான் உறுதுணையாக இருந்து செய்து கொடுக்க தயாராகவே உள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார்.






