என் மலர்
நீங்கள் தேடியது "ரோஜா"
- பல்வேறு பகுதிகளில் பல ஏக்கர் பரப்பளவில் நர்சரி அமைத்து காரநேசன், கொய்மலர்கள் சாகுபடி செய்யப்படுகிறது.
- தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும், வெளி மாநிலங்களுக்கும் ரோஜா பூக்கள் அனுப்பி வைக்கப்படுகிறது.
கொடைக்கானல்:
உலகம் முழுவதும் இன்று காதலர் தினம் கொண்டாடப்படும் நிலையில் காதல் ஜோடிகள் சுற்றுலா தலங்களை நோக்கி படையெடுத்து வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் சர்வதேச சுற்றுலா தலமாக விளங்கி வரும் நிலையில் காதலர் தினத்தை முன்னிட்டு இன்று காலை முதலே பல்வேறு ஊர்களில் இருந்து காதலர்கள் கொடைக்கானலுக்கு வந்தவண்ணம் உள்ளனர்.
மோட்டார் சைக்கிள், கார் மற்றும் பல்வேறு வாகனங்களில் அவர்கள் கொடைக்கானலுக்கு வந்து இங்குள்ள பிரையண்ட் பூங்கா, ஏரிச்சாலை, கோக்கர்ஸ் வாக், குணாகுகை உள்ளிட்ட பல்வேறு இடங்களை சுற்றி பார்த்தனர். மேலும் ஏரியில் அமர்ந்து படகு சவாரி செய்து செல்பி எடுத்து மகிழ்ந்தனர். பெரும்பாலான சுற்றுலா தலங்களில் காதல் ஜோடிகள் தனித்தனியாக அமர்ந்து காதல் ரசம் சொட்டச்சொட்ட பேசி மகிழ்ந்தனர்.
காதலர் தினம் என்றாலே அன்பை பரிமாறிக்கொள்ள பரிசுப்பொருட்கள் வழங்குவது வழக்கம். அதில் ரோஜாவுக்கு முதலிடம் உண்டு. கொடைக்கானல் மலை கிராமங்களான குண்டுபட்டி, கவுஞ்சி, மன்னவனூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பல ஏக்கர் பரப்பளவில் நர்சரி அமைத்து காரநேசன், கொய்மலர்கள் சாகுபடி செய்யப்படுகிறது. இங்கிருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும், வெளி மாநிலங்களுக்கும் ரோஜா பூக்கள் அனுப்பி வைக்கப்படுகிறது. காதலர் தினத்தை முன்னிட்டு கடந்த சில நாட்களாகவே ரோஜா பூக்கள் அனுப்பி வைக்கும் பணி விறுவிறுப்பாக நடந்தது. 10 பூக்கள் கொண்ட ஒரு பூங்கொத்து ரூ.100க்கு விற்பனையான நிலையில் இன்று காலையில் ரூ.200க்கு விற்கப்பட்டது. நேரம் செல்லச்செல்ல அந்த பூக்களும் விற்று தீர்ந்ததால் ரூ.50 முதல் ரூ.150 வரை விற்கப்பட்டது. இதனால் தாமதமாக வந்த காதலர்கள் தங்களுக்கு ரோஜா கிடைக்க வில்லையே என ஏமாற்றம் அடைந்தனர்.
இதைத்தவிர வேறு சில பரிசு பொருட்களையும் காதல் ஜோடிகள் வாங்கி பரிசளித்து மகிழ்ந்தனர். இதேபோல் மாவட்டத்தில் முக்கிய சுற்றுலா தலமாக விளங்கும் திண்டுக்கல் மலைக்கோட்டை, சிறுமலை உள்ளிட்ட பகுதிகளிலும் காதல் ஜோடிகள் குவிந்து தங்கள் பொழுதை கழித்தனர்.
ஆண்டிபட்டி வைகை அணை பூங்காவில் வழக்கமாக அதிக அளவு சுற்றுலா பயணிகள் வருகை தரும் நிலையில் இன்று காதலர் தினத்தை முன்னிட்டு காலை முதலே பலர் வரத்தொடங்கினர். காதல் ஜோடிகள் பொது இடங்களில் சுற்றினாலோ, பூங்காவில் அமர்ந்து பொழுதை கழித்தாலோ அவர்களுக்கு திருமணம் செய்து வைக்கப்படும் என இந்து அமைப்பினர் தெரிவித்தனர். இதனால் பூங்காவில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. காதலர் தினத்துக்கு ஆதரவாகவும், எதிராகவும் இரு வேறு தரப்பினர் பூங்காவிற்குள் வரத்தொடங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
- எம்.எல்.ஏ. மீது வழக்கு பதிவு செய்யாத உள்துறை மந்திரி அனிதாவை சஸ்பெண்டு செய்ய வேண்டும்.
- துணை முதல்வர் பவன் கல்யாண் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்.
ஆந்திராவில் ஜனசேனா கட்சி எம்.எல்.ஏ. அரவ ஸ்ரீதர் மீது பெண் ஒருவர் பாலியல் புகார் அளித்தார். இது ஆந்திராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
எம்.எல்.ஏ மீது நடவடிக்கை எடுக்க கோரி முன்னாள் மந்திரி நடிகை ரோஜா தலைமையில் நகரியில் கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர்.
ஜனசேனை என்றால் காமக்கொடூரன்களின் சேனை. கேரக்டர் இல்லாதவர்கள் அரசியல் செய்கிறார்கள். இது போன்ற தலைவர்களின் ஆட்சியில் மக்களுக்கு மரியாதை கிடைக்காது.
பெண்களுக்கு அநியாயம் நடந்தால் நீதி கிடைக்காது. ரெயில்வே கோடூரில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி கிடைக்க வேண்டும். இதுவரை அந்த எம்.எல்.ஏ. மீது வழக்கு பதிவு செய்யாத உள்துறை மந்திரி அனிதாவை சஸ்பெண்டு செய்ய வேண்டும்.
துணை முதல்வர் பவன் கல்யாண் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். அந்தப் பெண் அனைத்து ஆதாரங்களையும் வீடியோ, ஆடியோ உடன் காட்டிய பிறகும் கூட விசாரணைக்காக 3 பேருடன் கூடிய ஒரு கமிட்டியை நியமிப்பதாக ஜனசேனா கட்சி அறிவித்துள்ளது வெட்கக்கேடு.
தேர்தலுக்கு முன் ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சியில் 30 ஆயிரம் பெண்கள் நாடு கடத்தப்பட்டு இருக்கிறார்கள். அவர்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்தி இருக்கிறார்கள்.
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அவர்களை மீட்டு கொண்டு வருவோம் என்று சொன்ன பவன் கல்யாண் ஒரு பெண்ணையாவது இதுவரை கொண்டு வந்தாரா. அவரது கட்சி எம்எல்ஏக்கள் தான் பெண்கள் மீது வன்கொடுமை போன்ற அராஜகம் செய்து வருகிறார்கள். அந்தப் பெண்ணுக்கு நியாயம் கிடைக்கும் வரை போராடுவோம்.
இவ்வாறு அவர் பேசினார்.
- இப்படத்தை டி. டி. பாலச்சந்திரன் இயக்கியுள்ளார்.
- இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.
சத்ய ஜோதி பிலிம்ஸ் டி. ஜி. தியாகராஜன் வழங்க, தயாரிப்பாளர்களாக செந்தில் தியாகராஜன், அர்ஜுன் தியாகராஜன் மற்றும் சுப்பு பஞ்சு ஆகியோர் இணைந்து தயாரித்துள்ள படம் 'லெனின் பாண்டியன்'. இப்படத்தை டி. டி. பாலச்சந்திரன் இயக்கியுள்ளார்.
'லெனின் பாண்டியன்' படத்தில் பல முக்கியமான நட்சத்திரங்கள் இணைந்து பணியாற்றுகின்றனர். இதில் தமிழ் திரைப்பட உலகின் பன்முக திறமையாளராக திகழும் கங்கை அமரன் நடித்துள்ளார். மேலும், நடிகை மற்றும் அரசியல்வாதியான ரோஜா நீண்ட இடைவெளிக்குப் பின் மீண்டும் தமிழ் திரையுலகில் திரும்பி வந்துள்ளார். இவர்களுடன் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரன் தர்ஷன் கணேசன், ஷ்ரீதா ராவ், ஆடுகளம் நரேன், யுகேந்திரன், போஸ் வெங்கட், ஜார்ஜ் மரியன், அர்ச்சனா, மற்றும் சுப்பு பஞ்சு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவை ஏ. எம். எட்வின் சக்காய் கவனிக்க, தொகுப்பை நாகூரான் ராமச்சந்திரன் மேற்கொண்டுள்ளார்.
இந்த நிலையில், 'லெனின் பாண்டியன்' படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. கங்கை அமரன், ரோஜா வயதான தோற்றத்திலும், தர்ஷன் கணேஷ் காவல்துறை உடையில் துப்பாக்கியுடன் காணப்படுகிறார்.
கிராமப்புறத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தின் வெளியீட்டு தேதி குறித்த எந்த தகவலும் வெளியாகவில்லை.
- ஒழுக்கமற்ற நடவடிக்கைகள் திருமலையின் புனிதத்தன்மையை ஆழமாகக் காயப்படுத்தி சிதைத்துள்ளது.
- தர்மத்தைப் பற்றி யாராலும் பெரிய உரைகளை வழங்க முடியும்.
திருமலை திருப்பதியில் லட்டு பிரசாதத்தில் பன்றிக் கொழுப்பு கலக்கப்பட்டதாக எழுந்த சர்ச்சை அம்மாநிலத்தில் இன்னும் ஓய்ந்தபாடில்லை.
இந்த வழக்கின் விசாரணையின் ஒரு பகுதியாக, சிறப்பு புலனாய்வுக் குழு இந்த மாதம் 13 ஆம் தேதி விசாரணைக்காக ஆஜராக ஜகன்மோகனின் ஒய்எஸ்ஆர் கட்சியின் மூத்த தலைவர் சுப்பாரெட்டிக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
சுப்பாரெட்டி தேவஸ்தான தலைவராக இருந்தபோது தான் இந்த கலப்பட நெய் விவகாரம் நடந்து வந்ததாக குற்றச்சாட்டுகள் இருந்த நிலையில் தற்போது அவர் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார். இவர் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சியில் இருந்து ஜகன்மோகனின் ஒய்எஸ்ஆர் கட்சிக்கு தாவியவர் ஆவார்.
இதற்கிடையே சனாதன தர்மம் இழிவுபடுத்தப்பட்டதாக கொந்தளித்த ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண், முந்தைய ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சியின் மீது பழி சுமத்தினார்.
இந்நிலையில், சனாதன தர்ம பரிபாலன வாரியம் என்ற அமைப்பை நிறுவி, திருமலை உள்ளிட்ட கோயில்களில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டு வர பவன் கல்யாண் அழைப்பு விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், "முந்தைய திருமலை தேவஸ்தான வாரியத்தின் மிகப் பெரிய நிர்வாகத் தோல்வி மற்றும் ஒழுக்கமற்ற நடவடிக்கைகள் திருமலையின் புனிதத்தன்மையை ஆழமாகக் காயப்படுத்தி சிதைத்துள்ளது.
இந்த கசப்பான நம்பிக்கை துரோகம், தற்போதைய திருமலை தேவஸ்தான வாரியத்திற்கு ஒரு ஆழமான பாடமாக அமைய வேண்டும். திருமலையின் புனிதத்தன்மையை மீட்டெடுக்கவும், கோடிக்கணக்கான பக்தர்களின் நம்பிக்கையை மீண்டும் பெறவும் தொடர்ச்சியாக உழைக்க வேண்டும்.
திருமலை தேவஸ்தானத்தை நிர்வகிக்கும் மற்றும் நடத்தும் வாரியம், அதிகாரிகள், செயல் அலுவலர், இணைச் செயல் அலுவலர் முதல் ஊழியர்கள், ஒப்பந்தக்காரர்கள் மற்றும் விற்பனையாளர்கள் வரை அனைவருக்கும் கிடைத்துள்ளது வெறும் பதவி அல்ல, மாறாக கோடிக்கணக்கான சனாதனிகளுக்கு தெய்வீக சேவை செய்யக் கிடைத்த ஒரு புனிதமான வாய்ப்பு.
நிதிநிலை அறிக்கைகள், தரக் கட்டுப்பாடு மற்றும் தணிக்கைகள் முதல் சொத்து மற்றும் நன்கொடைகளை நிர்வகிப்பது வரை அனைத்து நடவடிக்கைகளிலும் முழுமையான வெளிப்படைத்தன்மையை உறுதி செய்ய வேண்டும் என்று நான் வலியுறுத்துகிறேன். ஒவ்வொரு விவரத்தையும் பொதுமக்களுக்குக் கிடைக்கச் செய்ய வேண்டும்.
சனாதன தர்ம பரிபாலன வாரியத்தை நிறுவுவது எதிர்காலத்திற்கான ஒரு நடவடிக்கையாக இருந்தாலும், தர்மத்தைக் காக்க வேண்டிய மற்றும் அதற்காக நிற்க வேண்டியது ஒவ்வொரு சனாதனியின் பொறுப்பு. மேலும், என்றாவது ஒரு நாள் நாடு முழுவதும் உள்ள நமது அனைத்துக் கோயில்களும் நமது சமூகத்தால், அதாவது பக்தர்களால் நிர்வகிக்கப்படும் காலம் வரும் என்பதே எனது உண்மையான நம்பிக்கை. இது நமது கடமையாகும்," என்று தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் முந்தைய தேவஸ்தான நிர்வாகம் குறித்து விமர்சித்த பவன் கல்யாணுக்கு, முந்தைய ஆட்சியாளரான ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரசு கட்சியைச் சேர்ந்த ஆந்திர முன்னாள் அமைச்சர், நடிகை ரோஜா கண்டனம் தெரிவித்துள்ளார்.
ரோஜா வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "பவன் கல்யாண் காரு, நீங்கள் புனிதத்தன்மை மற்றும் தர்மத்தைப் பற்றிப் பேசும் ஒவ்வொரு முறையும், அது உங்கள் ஒரு தலைப்பட்சமான அக்கறையை மட்டுமே அம்பலப்படுத்துகிறது.
திருமலையில் பக்தர்கள் இறந்தபோதோ அல்லது கடுமையான தோல்விகள் அமைப்பை உலுக்கியபோதோ நீங்கள் ஒருபோதும் வாய் திறக்கவில்லை. ஆனால், சந்திரபாபுவுக்கு ஒரு பாதுகாப்பு தேவைப்படும் தருணத்தில், நீங்கள் திடீரென்று உபதேசங்களைக் கொடுக்கத் தொடங்குகிறீர்கள். அது பக்தி அல்ல. அது அப்பட்டமான அரசியல் நாடகம்.
நீங்கள் நேர்மையைப் பற்றிப் பேசுகிறீர்கள், ஆனால் நேர்மை என்பது அசௌகரியமாக இருந்தாலும் உண்மைக்காக நிற்பதைக் குறிக்கிறது. நீங்கள் ஒருபோதும் அதைச் செய்ததில்லை.
நீங்கள் எளிதான இலக்குகளைத் தேர்ந்தெடுத்து, உங்கள் பக்கம் இருப்பவர்கள் தவறு செய்யும்போது மௌனமாக இருக்கிறீர்கள். அதனால்தான் உங்கள் பிரசங்கங்கள் வெற்றுத்தனமாக உள்ளன.
தர்மத்தைப் பற்றி யாராலும் பெரிய உரைகளை வழங்க முடியும். உண்மையான கேள்வி என்னவென்றால், தேவைப்படும்போது அதற்காகப் போராடும் தைரியம் யாருக்கு இருக்கிறது என்பதில் தான் உண்மையான தர்மம் உள்ளது. நீங்கள் ஒவ்வொரு முறையும் அந்த சோதனையில் தோல்வியடைந்துள்ளீர்கள்.
ஒரு வாரியமோ அல்லது குழுவோ திருமலையைச் சரிசெய்யாது. அர்ப்பணிப்பும் நேர்மையும் மட்டுமே சரிசெய்யும், மேலும் இவை இரண்டும் உங்கள் அரசியலில் இல்லை.
மற்றவர்களுக்குப் போதிக்கும் முன், முதலில் நீங்கள் நிலையாக இருக்க கற்றுக்கொள்ளுங்கள். திருமலைக்கு நேர்மை தேவை, பொய்யான சீற்றம் அல்ல." என்று தெரிவித்துள்ளார்.
- ஆந்திர அரசியலில் தீவிரமாக இயங்கி வந்த ரோஜா கடந்த ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சியில் அமைச்சராக இருந்தார்.
- கடைசியாக 2015 ஆம் ஆண்டில் ரோஜாவின் கில்லாடி, புலன் விசாரனை 2 ஆகிய படங்கள் வெளியாகின.
90களில் தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையயாக விளங்கிய ரோஜா தற்போது மீண்டும் காம்பேக் கொடுத்துள்ளார். ஆந்திர அரசியலில் தீவிரமாக இயங்கி வந்த ரோஜா கடந்த ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சியில் அமைச்சராக இருந்தார்.
ஆந்திராவில் ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு அரசியலில் இருந்து தற்காலிகமாக ஓய்வு பெற்ற ரோஜா தனது திரைப்பட வாழ்க்கையில் கவனம் செலுத்தி வருகிறார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு தற்போது தமிழ் திரைப்படம் மூலம் அவரின் கம்பேக் நிகழ்கிறது.
கடைசியாக 2015 ஆம் ஆண்டில் ரோஜாவின் கில்லாடி, புலன் விசாரனை 2 ஆகிய படங்கள் வெளியாகின.
இந்நிலையில் டிடி பாலச்சந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் 'லெனின் பாண்டியன்' படத்தில் ரோஜா முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் ரோஜாவின் கதாபாத்திர வீடியோவை நடிகை குஷ்பு வெளியிட்டுள்ளார்.
- விஜய் மிகவும் கூச்ச சுபாவம் உள்ளவராக இருந்தார்.
- யாரிடமும் அதிகம் நெருங்கி பேசமாட்டார்.
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளத்தில் 150-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர், நடிகை ரோஜா. 1990-களில் முன்னணி நடிகையாக வலம் வந்த இவர், ஒரு கட்டத்தில் அரசியலில் ஈடுபட்டதன் காரணமாக, படங்களில் நடிப்பதைக் குறைத்துக் கொண்டார். சமீபத்தில் படங்களில் நடிக்காதது பற்றி நடிகை ரோஜா தெரிவித்துள்ள கருத்து இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
ரோஜா அளித்த பேட்டியில், "நடிகர் விஜய்யுடன் 'நெஞ்சினிலே' படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடினேன். அப்போது விஜய் மிகவும் கூச்ச சுபாவம் உள்ளவராக இருந்தார். யாரிடமும் அதிகம் நெருங்கி பேசமாட்டார். சில வருடங்கள் கழித்து, அவரது நடிப்பில் 'காவலன்' படத்தில் அசின் அம்மாவாக நடித்தேன்.
அந்தப் படப்பிடிப்பில் என்னைப் பார்த்து அதிர்ச்சியடைந்த விஜய், 'மேடம்.. நீங்கள் எனக்கு மாமியாராக நடிக்கிறீர்களா?. படக்குழுவில் சொன்னபோது, அவர்கள் சும்மா சொல்கிறார்கள் என்று நினைத்தேன். நீங்கள் இந்த கதாபாத்திரத்தில் நடிப்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. உங்களை நாங்கள் இன்னும் நாயகியாகவே பார்த்து வருகிறோம்' என்று கூறினார்.
விஜய் மட்டுமல்ல தெலுங்கில் நடிகர் கோபிசந்துக்கு மாமியாராக நடித்தபோது, அவரும் இதே விஷயத்தைக் கூறினார். அதனால் தான் நான் சினிமாவில் அம்மா, மாமியார் கதாபாத்திரங்களில் நடிப்பதில்லை என்று ஒதுங்கினேன். 'பாகுபலி' படத்தில் ரம்யா கிருஷ்ணனுக்கு கிடைத்ததுபோல ஒரு கதாபாத்திரம் கிடைத்தால், மீண்டும் நடிப்பது பற்றி யோசிப்பேன்" என்று கூறியுள்ளார்.
ரோஜா ரோஜா பாடல் மூலம் கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் அனைவரது கவனத்தை ஈர்த்து வருகிறார் பாடகர் சத்யன் மகாலிங்கம். இவர் 26 வருடங்களுக்கு முன் காதலர் தினம் படத்தில் இடம்பெற்ற ரோஜா ரோஜா பாடலை ஒரு நிகழ்ச்சியில் சத்யன் மகாலிங்கம் பாடினார். அப்போது அவர் பாடிய வீடியோ கடந்த சில நாட்களாக வைரலாகி வருகிறது. 20 வயதில் அந்த ப்மெலடி பாடலை மிகவும் அருமையாக பாடியுள்ளார்.ஆனால் இவருக்கு மெலடி பாடல்கள் பாட அதிகம் வாய்ப்பு கிடைக்கவில்லை.
வசூல் ராஜா MBBS படத்தில் 'கலக்கப் போவது யாரு', சரோஜா படத்தில் 'தோஸ்து படா தோஸ்து', பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தில் 'அட பாஸு பாஸு', கழுகு படத்தில் 'ஆம்பளைக்கும் பொம்பளைக்கும்..' உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட ஹிட் பாடல்களை இவர் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மக்களின் ஆதரவிற்கும் அன்பிற்கும் பெரும் நன்றி தெரிவித்து வீடியோவை பகிர்ந்துள்ளார்.
- தமிழிலும், தெலுங்கிலும் முன்னணி நடிகர்கள் பலருடன் ஜோடியாக நடித்தேன்.
- நகரியில் மட்டும்தான் நான் வெற்றி பெற்ற பிறகு சொந்த வீடு கட்டிக்கொண்டேன்.
நகரி:
பிரபல நடிகையும், ஆந்திராவின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி ஆட்சியில் மந்திரியாக இருந்தவருமான ரோஜா, அரசியலில் ஊழல் செய்து ரூ.1,000 கோடி சம்பாதித்ததாக நகரி தொகுதி தெலுங்குதேசம் கட்சி எம்.எல்.ஏ. பானு பிரகாஷ் குற்றம்சாட்டி இருந்தார்.
அவருக்கு பதில் அளிக்கும் வகையில் ரோஜா அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-
எனக்கு பல ஊர்களில் வீடுகள் இருப்பதாக பானு பிரகாஷ் கூறுகிறார். ஐதராபாத், சென்னையில் உள்ள வீடுகள் நான் எம்.எல்.ஏ.வாக வெற்றி பெறுவதற்கு முன் சம்பாதித்த சொத்துகள். 1991-ம் ஆண்டு முதல் சினிமாவில் நடித்துக்கொண்டிருக்கிறேன்.
தமிழிலும், தெலுங்கிலும் முன்னணி நடிகர்கள் பலருடன் ஜோடியாக நடித்தேன். இதுதவிர விளம்பரங்கள், டி.வி. நிகழ்ச்சிகள், கடை திறப்பு விழாக்கள் என்று ஓய்வில்லாமல் உழைத்து சம்பாதித்தேன். ஒரு படத்தில் நடித்தால் ஒரு கோடி ரூபாய் சம்பளம் கொடுப்பார்கள். நகரியில் மட்டும்தான் நான் வெற்றி பெற்ற பிறகு சொந்த வீடு கட்டிக்கொண்டேன். எனது சொத்துகளுக்கும், சம்பளத்துக்கும் கணக்கு இருக்கிறது.
அப்படியிருக்கும்போது அரசியலுக்கு வந்து ஊழல் செய்து 1,000 கோடி ரூபாய் சம்பாதித்தேன் என்று சொல்வது தவறு. உண்மையாக இருந்தால் பானுபிரகாஷ் அதை நிரூபிக்க வேண்டும். நிரூபித்தால் அரசியலில் இருந்து நான் விலகத் தயார். அதேசமயம் நிரூபிக்க தவறினால் பானு பிரகாஷ் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு அரசியலை விட்டு விலக தயாரா?.
இவ்வாறு ரோஜா தெரிவித்தார்.
- பவன் கல்யாண் திசை திருப்பும் அரசியலில் ஈடுபட்டு வருகிறார்.
- கோசாலையில் பசுக்கள் ஏன் இறந்து விடுகிறது என தெளிவுபடுத்த வேண்டும்.
திருப்பதி:
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சொந்தமான கோசாலையில் 100-க்கும் மேற்பட்ட பசுக்கள் இறந்து விட்டதாக முன்னாள் திருப்பதி தேவஸ்தான ஆங்காவல குழு தலைவர் பூமண கருணாகர ரெட்டி குற்றம்சாட்டி இருந்தார். அவரது குற்றச்சாட்டுக்கு திருப்பதி தேவஸ்தானம் மறுப்பு தெரிவித்து இருந்தது.
இந்த நிலையில் கோசாலையில் பசுக்கள் இறப்புக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியினர் நேற்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து முன்னாள் மந்திரி ரோஜா கூறியதாவது:-
எங்காவது ஏதாவது நடந்தால் அதை வெளிப்படையாக பேசி சனாதான தர்மத்தை பாதுகாப்பதாக துணை முதல் மந்திரி பவன் கல்யாண் பேசுகிறார். திருப்பதியில் அநியாயங்கள், தவறான செயல்கள் நடக்கும் போது ஏன் அவர் வாய் திறக்கவில்லை. பவன் கல்யாண் திசை திருப்பும் அரசியலில் ஈடுபட்டு வருகிறார். தவறு செய்தவர்கள் ஏன் தண்டிக்கப்படவில்லை.
இதுதான் பவனின் நேர்மையா? பதவியும், சலுகையும் கொடுத்தால் அவர் வாயை மூடிக் கொண்டு இருப்பாரா?.
கோசாலையில் பசுக்கள் ஏன் இறந்து விடுகிறது என தெளிவுபடுத்த வேண்டும். ஏழுமலையானுக்கு துரோகம் செய்தால் என்ன நடக்கும் என சந்திரபாபு நாயுடு மற்றும் பவன் கல்யாணுக்கு தெரியும். அவர்கள் அதை அனுபவித்து இருக்கிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
- தமிழில் 90களில் பிரபலமான நடிகையாக வலம் வந்த ரோஜா.
- இவர் தற்போது ஒரு ஏழை மாணவியின் கனவை நனவாக்க உதவியுள்ளார்.
சூரியன், உழைப்பாளி, வீரா, மக்கள் ஆட்சி உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்தவர் ரோஜா. இவர் 90களில் தவிர்க்க முடியாத நடிகையாக வலம் வந்தார். தற்போது ஆந்திர மாநிலம், நகரி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராகவும், சுற்றுலாத்துறை அமைச்சராகவும் பொறுப்பு வகித்து வருகிறார். இவர் கொரோனா காலத்தில் தாய், தந்தை என இரண்டு பேரையும் இழந்து வறுமையில் வாடிய தனது தொகுதியை சேர்ந்த புஷ்பா என்ற மாணவியை தத்தெடுத்து கொண்டார். அந்த மாணவியின் கல்வி செலவை முழுவதும் தான் ஏற்றுக்கொள்வதாக தெரிவித்திருந்தார்.

மாணவி புஷ்பா தனது பள்ளி படிப்பை முடித்துவிட்டு நீட் தேர்வில் நல்ல மதிப்பெண் எடுத்து, திருப்பதியில் உள்ள கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். அவர் கூறியதாவது, "மருத்துவ வசதி இல்லாமல் என் தாய், தந்தையர் இறந்ததைப் போன்று எந்தக் குழந்தைக்கும் அது போன்று ஒரு நிகழ்வு ஏற்படாமல், வருங்காலத்தில் என்னால் முடிந்த அனைத்து மருத்துவ உதவிகளையும் என்னைப் போன்ற குழந்தைகளுக்கு இலவசமாக கொடுப்பதே என் லட்சியம்" என்றார்.
- நடிகையும், சட்டமன்ற உறுப்பினராகவும், சுற்றுலாத்துறை அமைச்சராகவும் பொறுப்பு வகித்து வருபவர் ரோஜா.
- மாணவர்கள் படிப்புடன் விளையாட்டிலும் சிறந்து விளங்கி சிகரத்தை தொட வேண்டும் என அமைச்சர் ரோஜா கூறினார்.
சூரியன், உழைப்பாளி, வீரா, மக்கள் ஆட்சி உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்தவர் ரோஜா. இவர் 90களில் தவிர்க்க முடியாத நடிகையாக வலம் வந்தார். தற்போது ஆந்திர மாநிலம், நகரி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராகவும், சுற்றுலாத்துறை அமைச்சராகவும் பொறுப்பு வகித்து வருகிறார்.

குத்துச் சண்டை விளையாடிய ரோஜா
இந்நிலையில் விஜயவாடாவில் உள்ள உடா சிறுவர் பூங்காவில் நடந்த 12-வது தேசிய மினி ரோல் பால் விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது. ஆண்கள் பிரிவில் ராஜஸ்தான் அணியும், பெண்கள் பிரிவில் ஒடிசாவும் முதல் பரிசை வென்றன. விழாவில் சிறப்பு விருந்தினராக அமைச்சர் ரோஜா கலந்து கொண்டு விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கினார்.

குத்துச் சண்டை விளையாடிய ரோஜா
அப்போது ரோஜா பேசியதாவது, ஆந்திராவில் 11 வயதுக்குட்பட்ட சிறுவர், சிறுமிகளை கொண்டு இந்த விளையாட்டு போட்டிகள் நடத்தப்படுவது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த போட்டியில் 19 மாநிலங்களைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் பங்கேற்று உள்ளனர். மாணவர்கள் படிப்புடன் விளையாட்டிலும் சிறந்து விளங்கி சிகரத்தை தொட வேண்டும் என்றார். பின்னர் அமைச்சர் ரோஜா அங்கிருந்த பெண்களுடன் குத்துச்சண்டை விளையாடி மாணவர்களை உற்சாகப்படுத்தினார். இதனை கண்டு ரசிகர்கள் உற்சாக குரல் எழுப்பி ஆரவாரம் செய்தனர்.
கடந்த மாதம் ஜெகன்மோகன் ரெட்டி பிறந்தநாள் விழாவில் அமைச்சர் ரோஜா கலைக்குழு பெண்களுடன் மேடையில் நடனமாடி உற்சாகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
- ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி இன்று தனது 50-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.
- இவருக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
ஆந்திர மாநிலம் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி தலைவரும் முதல்வருமான ஜெகன் மோகன் ரெட்டி இன்று தனது 50-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இவருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முதல் பல்வேறு அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

ஜெகன் மோகன் ரெட்டிக்கு வாழ்த்து தெரிவித்த ரோஜா
இந்நிலையில், நடிகையும் ஆந்திர மாநிலம், நகரி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராகவும் சுற்றுலாத்துறை அமைச்சராகவும் பொறுப்பு வகித்து வரும் ரோஜா முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.






