என் மலர்tooltip icon

    இந்தியா

    பெண் பாலியல் புகார்- எம்.எல்.ஏ., மீது நடவடிக்கை கோரி ரோஜா போராட்டம்
    X

    பெண் பாலியல் புகார்- எம்.எல்.ஏ., மீது நடவடிக்கை கோரி ரோஜா போராட்டம்

    • எம்.எல்.ஏ. மீது வழக்கு பதிவு செய்யாத உள்துறை மந்திரி அனிதாவை சஸ்பெண்டு செய்ய வேண்டும்.
    • துணை முதல்வர் பவன் கல்யாண் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்.

    ஆந்திராவில் ஜனசேனா கட்சி எம்.எல்.ஏ. அரவ ஸ்ரீதர் மீது பெண் ஒருவர் பாலியல் புகார் அளித்தார். இது ஆந்திராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    எம்.எல்.ஏ மீது நடவடிக்கை எடுக்க கோரி முன்னாள் மந்திரி நடிகை ரோஜா தலைமையில் நகரியில் கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர்.

    ஜனசேனை என்றால் காமக்கொடூரன்களின் சேனை. கேரக்டர் இல்லாதவர்கள் அரசியல் செய்கிறார்கள். இது போன்ற தலைவர்களின் ஆட்சியில் மக்களுக்கு மரியாதை கிடைக்காது.

    பெண்களுக்கு அநியாயம் நடந்தால் நீதி கிடைக்காது. ரெயில்வே கோடூரில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி கிடைக்க வேண்டும். இதுவரை அந்த எம்.எல்.ஏ. மீது வழக்கு பதிவு செய்யாத உள்துறை மந்திரி அனிதாவை சஸ்பெண்டு செய்ய வேண்டும்.

    துணை முதல்வர் பவன் கல்யாண் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். அந்தப் பெண் அனைத்து ஆதாரங்களையும் வீடியோ, ஆடியோ உடன் காட்டிய பிறகும் கூட விசாரணைக்காக 3 பேருடன் கூடிய ஒரு கமிட்டியை நியமிப்பதாக ஜனசேனா கட்சி அறிவித்துள்ளது வெட்கக்கேடு.

    தேர்தலுக்கு முன் ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சியில் 30 ஆயிரம் பெண்கள் நாடு கடத்தப்பட்டு இருக்கிறார்கள். அவர்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்தி இருக்கிறார்கள்.

    நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அவர்களை மீட்டு கொண்டு வருவோம் என்று சொன்ன பவன் கல்யாண் ஒரு பெண்ணையாவது இதுவரை கொண்டு வந்தாரா. அவரது கட்சி எம்எல்ஏக்கள் தான் பெண்கள் மீது வன்கொடுமை போன்ற அராஜகம் செய்து வருகிறார்கள். அந்தப் பெண்ணுக்கு நியாயம் கிடைக்கும் வரை போராடுவோம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    Next Story
    ×