என் மலர்
நீங்கள் தேடியது "Google Doodle"
- ஜி என்ற எழுத்தில் இன்பம் என்ற வார்த்தை இருக்குமாறும், எல் இருக்க வேண்டிய இடத்தில் திருவள்ளுவரின் உருவத்தை "மினிமலிஸ்டிக் ஆர்ட்" வகையில் அமைத்துள்ளார்.
- இ என்று எழுத்து மற்றும் மற்ற அனைத்து எழுத்துக்களும் கூகுள் லோகோவில் இருக்கும் நிறங்களை கொண்டு அமைத்துள்ளார்.
ஓசூர்:
ஓசூர் பகுதியை சேர்ந்த ஐ.டி. நிறுவன ஊழியர் லூகாஸ் (வயது 33), இவர் திருக்குறள் ஆர்வலர்.
திருவள்ளுவர் தினத்தில் திருவள்ளுவருக்கு கூகுள் டூடுல் வெளியிட வலியுறுத்தி ஒரு கற்பனையான கூகுள் டூடலை "சுகர் ஆர்ட்" ஒன்றை அவர் வடிவமைத்துள்ளார்.
5,000 மேற்பட்ட கூகுள் டூடுலை வரைந்து பார்த்து இதற்கு முன்பு வந்த எந்த டூடுல் மாதிரியும் இல்லாமல் இப்போது உருவாகியிருக்கும் இந்த டூடுல் தனித்தன்மையோடு உள்ளது. மேலும் அதே நேரத்தில் திருக்குறளையும் வெளிப்படுத்துமாறு வடிவமைத்துள்ளார்.
ஜி என்ற எழுத்தில் திருக்குறள் என்ற வார்த்தை இருக்குமாறும், ஓ என்ற எழுத்தில் அறம் என்ற வார்த்தை இருக்குமாறும், ஓ என்ற எழுத்தில் பொருள் என்ற வார்த்தை இருக்குமாறும் வடிவமைத்துள்ளார்.
ஜி என்ற எழுத்தில் இன்பம் என்ற வார்த்தை இருக்குமாறும், எல் இருக்க வேண்டிய இடத்தில் திருவள்ளுவரின் உருவத்தை "மினிமலிஸ்டிக் ஆர்ட்" வகையில் அமைத்துள்ளார். இ என்று எழுத்து மற்றும் மற்ற அனைத்து எழுத்துக்களும் கூகுள் லோகோவில் இருக்கும் நிறங்களை கொண்டு அமைத்துள்ளார்.
கூகுள் நிறுவனம் இதுவரைக்கும் கன்பியூசியஸ், ஷேக்ஸ்பியர், லியோ டோல்ஸ்டோரி என அநேக உலக அறிஞர்களுக்கு டூடுல்ஸ் வெளியிட்டு கவுரவபடுத்தியுள்ளனர்.
மற்ற உலக அறிஞர்களோடு ஒப்பிடும்போது திருவள்ளுவர் யாருக்கும் சளைத்தவரல்ல. அதனால் திருக்குறள் தந்த இந்திய ஞானி திருவள்ளுவருக்கும் ஒரு இன்டர்நேஷனல் அல்லது இந்தியன் டூடுல் வெளியிட வேண்டும் என்று எனது டூடுல் ப்ரோபோஸால்-ளை கூகுள் நிறுவனத்துக்கு அனுப்பியுள்ளார்.
இந்திய விஞ்ஞாஅனி பிரசந்தா சந்திரா மகாலனோபிசு மேற்கு வங்காளம் மாநிலம் கொல்கத்தாவில் பிறந்தவர். கணிதம் மற்ரும் அறிவியியலில் மிகவும் சிறந்து விளங்கிய இவர் கண்டுபிடித்த அளவீடுக்கு இவரின் பெயர் வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மகாலனோபிசு பிறந்த தினமான இன்று அவரை பெருமைப்படுத்தும் விதமாக கூகுள் நிறுவனம் டூடுல் ஒன்றை வெளியிட்டுள்ளது. மகாலனோபிசு தனது 78 வது வயதில் ஜீன் 28-ம் தேதி மரணம் அடைந்தார். #GoogleDoodle #PrasantaChandraMahalanobis

உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாக்களில் ஒன்றான உலக கோப்பை கால்பந்து போட்டி 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படுகிறது. கடைசியாக 2014-ம் ஆண்டு பிரேசிலில் நடந்த உலக கோப்பை போட்டியில் ஜெர்மனி அணி வாகை சூடியது.
இந்த நிலையில் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்க்கும் 21-வது உலக கோப்பை கால்பந்து போட்டி ரஷியாவில் இன்று தொடங்குகிறது. இது மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது.

அதனை கொண்டாடும் வகையில் கூகுள் நிறுவனம் டூடுல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதே போல் ஒடிசா மணற்சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக் உலக கோப்பை கால்பந்து போட்டிக்காக மணற்சிற்பம் ஒன்றை வடித்துள்ளார். இது பார்வையாளர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. #GoogleDoodle #FIFA2018