என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » tag 102109
நீங்கள் தேடியது "நயன்தாரா"
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக இருக்கும் அஜித், விஜய் இருவரும் நீண்ட இடைவெளிக்குப் பிறகு சந்திக்க இருப்பதால் ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கிறார்கள்.
நடிகை நயன்தாராவும் இயக்குனர் விக்னேஷ் சிவனும் கடந்த ஆறு வருடங்களாக காதலித்து வருகின்றனர். இவர்களின் திருமணம் ஜூன் 9-ஆம் தேதி திருப்பதியில் வைத்து நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்பின்னர், அதிக விருந்தினர்கள் அனுமதியில்லை என்பதால் சென்னையில் உள்ள மகாபலிபுரத்தில் உள்ள பிரபல ரிசார்டில் மாற்றி வைக்கப்பட்டது.
இந்நிலையில், தற்போது மகாபலிபுரத்தில் வைத்து நடைபெறும் திருமணத்தில் பிரபலங்கள் இருபது பேர் மட்டுமே அனுமதிக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது. அந்த இருபது பேரில் ரஜினி , கமல், அஜித், விஜய், விஜய்சேதுபதி உள்ளிட்ட பிரபலங்கள் கலந்து கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
நயன்தாரா - விக்னேஷ் சிவன்
இதில், நீண்ட இடைவெளிக்கு பிறகு அஜித், விஜய் இருவரும் நயன்தாரா திருமணத்தின் மூலம் சந்திக்க இருப்பதால் தல - தளபதி ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
நயன்தாரா - விக்னேஷ் சிவன் இருவருக்கும் விரைவில் திருமணம் நடைபெற இருக்கும் நிலையில், அவர்களின் திருமண அழைப்பிதழ் இணையத்தில் வைரலாகி வருகிறது,.
சிம்புவின் ‘போடா போடி’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் விக்னேஷ் சிவன். இதையடுத்து 2015-ம் ஆண்டு அவர் இயக்கிய ‘நானும் ரவுடி தான்’ படத்தின் போது, நயன்தாராவுக்கும், விக்னேஷ் சிவனுக்கும் இடையே காதல் மலர்ந்தது. இவர்களது காதல் 6 ஆண்டுகளாக நீடித்து வருகிறது.
இதையடுத்து, ரசிகர்கள் நயன்தாரா - விக்னேஷ் சிவனின் திருமணம் குறித்து சமூக வலைதளங்களில் தொடர்ந்து கேள்விகளை எழுப்பி வந்தனர். ரசிகர்களுக்கு பதிலளிக்கும் விதமாக இருவருக்கும் ஜூன் 9-ஆம் தேதி திருப்பதியில் வைத்து திருமணம் நடைபெறும் என்று தகவல் வெளியானது.
நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமண அழைப்பிதழ்
மேலும், சமீபத்தில் விக்னேஷ் சிவனின் குல தெய்வம் கோவிலுக்கு சென்று நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் வழிபாடு நடத்திய புகைப்படங்களும் சமூக வலைதளத்தில் வைரலானதைத் தொடர்ந்து இருவரின் திருமணத்திற்காக தான் இந்த வழிபாடு என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில், தற்போது சென்னை, மகாபலிபுரத்தில் இருவரின் திருமணமும் நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இதன் அழைப்பிதழ் சமூக வலைத்தள பக்கத்தில் வைரலாகி வருகிறது.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X