என் மலர்
நீங்கள் தேடியது "நயன்தாரா"
- நடிகர் யாஷ் "டாக்சிக்" என்ற படத்தில் நடித்து வருகிறார்
- இப்படத்தில், கியாரா அத்வானி, நயன்தாரா, ருக்மணி வசந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
கன்னட சினிமாவின் முன்னணி நடிகர் யாஷ். ராக்கி என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். அதைத் தொடர்ந்து இவர் பல்வேறு படங்களில் நடித்தார். இவர் நடிப்பில் வெளியான கே.ஜி.எஃப். திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்தப் படத்தில் நடித்து இந்திய சினிமாவை திரும்பி பார்க்க வைத்தார் யாஷ்.
இதைத் தொடர்ந்து நடிகர் யாஷ் "டாக்சிக்" என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை இயக்குனர் கீதா மோகன்தாஸ் இயக்குகிறார். இப்படம் டிரக் மாஃபியா உலகில் நடக்கும் கேங்ஸ்டர் டிராமாவாக இருக்கும் என படக்குழு தெரிவித்து இருந்தது.
இப்படத்தில், கியாரா அத்வானி, நயன்தாரா, உள்ளிட்ட பலர் நடிப்பில் பிரமாண்டமாக இந்த படம் உருவாகி வருகிறது. இப்படம் மார்ச் மாதம் 19-ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
கியாரா அத்வானி, நயன்தாரா, ருக்மணி வசந்த், ஹீமா குரேஷி, தாரா சுதரியா ஆகியோரின் கதாபாத்திர பெயர்களுடன் போஸ்டர்களை படக்குழு வெளியிட்டு அப்டேட் கொடுத்து.
இந்நிலையில், டாக்சிக்' திரைப்பட நாயகன் யாஷ்-ன் கதாபாத்திர பெயர் போஸ்டர் நாளை வெளியிடப்படும் என்று படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.
- நடிகர் யாஷ் "டாக்சிக்" என்ற படத்தில் நடித்து வருகிறார்
- இப்படத்தில், கியாரா அத்வானி, நயன்தாரா, ருக்மணி வசந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
கன்னட சினிமாவின் முன்னணி நடிகர் யாஷ். ராக்கி என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். அதைத் தொடர்ந்து இவர் பல்வேறு படங்களில் நடித்தார். இவர் நடிப்பில் வெளியான கே.ஜி.எஃப். திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்தப் படத்தில் நடித்து இந்திய சினிமாவை திரும்பி பார்க்க வைத்தார் யாஷ்.
இதைத் தொடர்ந்து நடிகர் யாஷ் "டாக்சிக்" என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை இயக்குனர் கீதா மோகன்தாஸ் இயக்குகிறார். இப்படம் டிரக் மாஃபியா உலகில் நடக்கும் கேங்ஸ்டர் டிராமாவாக இருக்கும் என படக்குழு தெரிவித்து இருந்தது.
இப்படத்தில், கியாரா அத்வானி, நயன்தாரா, ருக்மணி வசந்த் உள்ளிட்ட பலர் நடிப்பில் பிரமாண்டமாக இந்த படம் உருவாகி வருகிறது. இப்படம் மார்ச் மாதம் 19-ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
யாஷ் , கியாரா அத்வானி, நயன்தாரா ஆகியோரின் கதாபாத்திர பெயர்களுடன் போஸ்டர்களை படக்குழு வெளியிட்டு அப்டேட் கொடுத்து.
இந்நிலையில், டாக்சிக்' திரைப்படத்தில் 'மெலிசா' என்ற வேடத்தில் ருக்மணி வசந்த் நடித்துள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.
- PATRIOT படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
- PATRIOT படத்தில் ஃபகத் ஃபாசில், நயன்தாரா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
மலையாள திரையுலகின் 2 பெரும் சூப்பர்ஸ்டார்களான மம்மூட்டி மற்றும் மோகன்லால் ஆகியோர் ஒன்றாக இணைந்து நடிக்கும் படம் PATRIOT.
அண்மையில் இப்படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தில் ஃபகத் ஃபாசில், ரேவதி, நயன்தாரா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது. 130 நாட்கள் இப்படத்தில் படப்பிடிப்பு நடந்தது. மம்மூட்டியும் மோகன்லாலும் ஒன்றாக இணைந்து நடிப்பதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
- நயன்தாரா தானாக முன்வந்து, 'என்ன அனில், படத்துக்கு புரோமோஷன் இல்லையா?' எனக் கேட்கிறார்.
- இதைக் கேட்டு அனில் ரவிபுடி மயங்கி விழுவது போன்ற காட்சி காமெடியாக காட்டப்பட்டுள்ளது.
தெலுங்கில் அனில் ரவிபுடி இயக்கத்தில் சிரஞ்சீவி தனது 157 படத்தில் நடித்து முடித்துள்ளார்.
படத்திற்கு 'மன ஷங்கர வரபிரசாத் காரு' என தலைப்பு வைத்துள்ளனர். படத்தின் நாயகியாக நயன்தாரா நடித்துள்ளார். கேத்ரீன் தெரேசா முக்கிய கதாப்பாத்திரம் ஏற்றுள்ளார்.
படத்தை சாகு கரபதி மற்றும் சுஷ்மிதா கொனிடேலா தயாரிக்கின்றனர். இந்த படத்தின் முதல் பாடல் "மீசால பில்லா" பாடல் வைரலானது.
இப்படம் பொங்கலை ஒட்டி வரும் ஜனவரி 12 அன்று திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. படத்தின் பு ரோமோஷன் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. இந்த படத்தின் புரோமோஷனில் நயன்தாரா கலந்துகொண்டுள்ளார்

பொதுவாக நயன்தாரா தான் நடிக்கும் படங்களில் புரோமோஷனில் கலந்துகொள்ளவே மாட்டார். இதை ஒரு ரூல் ஆகவே அவர் கடைபிடித்து வந்தார். இது பலமுறை விமர்சனத்துக்கும் உள்ளானது.
ஒரு படத்திற்கு புரோமோஷன் என்பது இன்றைய காலகட்டத்தில் அத்தியாவசிய தேவகையாகவே மாறிவிட்டது.
ஆனால் கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கினாலும் தான் நடித்த படத்திற்கு நயன்தாரா புரோமோஷன் செய்யாதது தயாரிப்பாளர்களை முகம் சுழிக்க வைத்தது. அவர் சமீபமாக நடித்த எனது தமிழ் படங்களின் புரோமோஷனிலும் கலந்துகொள்ளவில்லை.
ஆனால் தற்போது தெலுங்கு படத்திற்காக நயன்தாரா தனது பிடிவாதத்தை தளர்த்தியுள்ளது மேலும் விமர்சிக்கப்பட்டு வருகிறது. 'மன ஷங்கர வரபிரசாத் காரு' படத்தில் புரோமோஷனில் ஆரம்பம் முதலே நயன்தாரா பங்கேற்று வருகிறார்.
இதற்கிடையே 'மன ஷங்கர வரபிரசாத் காரு' படக்குழு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் நயன்தாரா தானாக முன்வந்து, 'என்ன அனில், படத்துக்கு புரோமோஷன் இல்லையா?' எனக் கேட்கிறார். இதைக் கேட்டு அனில் ரவிபுடி மயங்கி விழுவது போன்ற காட்சி காமெடியாக காட்டப்பட்டுள்ளது.
இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் தமிழ் ரசிகர்கள், விமர்சகர்கள் நயன்தாராவின் பாரபட்சமான செயலுக்கு கண்டனம் தெரிவித்தும் ட்ரோல் செய்தும் வருகின்றனர்.
தமிழ் சினிமா மூலமே லேடி சூப்பர்ஸ்டார் என்ற அளவுக்கு வளர்ந்த நயன்தாரா தமிழ் சினிமா மீது பாரபட்சம் காட்டுவது பலரிடையே ஆத்திரத்தை ஏற்படுத்தி உள்ளது.
- நயன்தாரா அம்மனாக நடிக்க, சுந்தர் சி இயக்கியத்தில் படம் உருவாகியுள்ளது.
ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் 'மூக்குத்தி அம்மன்' படம் கடந்த 2020-ம் ஆண்டு வெளியானது. இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
இதனைத் தொடர்ந்து மூக்குத்தி அம்மன் பாகம் 2-ஐ தயாரிக்க வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் முன்வந்தது. இந்த நிறுவனத்துடன் ரௌடி பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்க முடிவு செய்யப்பட்டது.
நயன்தாரா அம்மனாக நடிக்க, சுந்தர் சி இப்படத்தை இயக்குவார் என அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இப்பட பூஜை கடந்த மார்ச் மாதம் பிரமாண்டாக நடைபெற்றது. கடந்த 6 மாதங்களுக்கு மேலான நடைபெற்ற இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளது. இதை படக்குழு வீடியோ வெளியிட்டு அறிவித்துள்ளது. மூக்குத்தி அம்மன் 2 மிகப்பிரமாண்டாக உருவாகியுள்ளது. இப்படத்தில் ரெஜினா கசான்ட்ரா, யோகி பாபு, ஊர்வசி மற்றும் பலர் நடித்துள்ளனர்.
சுந்தர் சி மற்றும் நயன்தாரா இருவரும் முதல் முறையாக இப்படத்தின் மூலம் இணைந்துள்ளதால் இப்படத்தை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டு உள்ளனர். இப்படத்தை 2026 கோடை விடுமுறையின்போது ரிலீஸ் செய்ய படக்குழு முடிவு செய்துள்ளது.
- அனில் ரவிபுடி அடுத்ததாக சிரஞ்சீவி நடிக்கும் 157 திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
- கேத்ரீன் தெரேசா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்.
கடந்த ஜனவரி மாதம் வெங்கடேஷ், மீனாட்சி சவுத்ரி மற்றும் ஐஷ்வர்யா ராஜேஷ் நடிப்பில் வெளியானது சங்கராந்திகி வஸ்துனம் திரைப்படம். இப்படத்தை அனில் ரவிபுடி இயக்கினார்.
இப்படம் வெளியாகி பிளாக்பஸ்டர் திரைப்படமாக அமைந்தது. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அனில் ரவிபுடி அடுத்ததாக சிரஞ்சீவி நடிக்கும் 157 திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
படத்திற்கு மன ஷங்கர வரபிரசாத் என தலைப்பு வைத்துள்ளனர். படத்தின் நாயகியாக நயன்தாரா நடிக்கிறார். கேத்ரீன் தெரேசா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். படத்தை சாகு கரபதி மற்றும் சுஷ்மிதா கொனிடேலா தயாரிக்கின்றனர்.
இந்த படத்தின் முதல் பாடல் "மீசால பில்லா" அண்மையில் வெளியாகி வைரலானது. இந்நிலையில் 2வது பாடலான
"சசிரேகா" தற்போது வெளியாகி உள்ளது.
இப்பாடலை பீம்ஸ் செசிரோலியொ மற்றும் மது பிரியா ஆகியோர் பாடியுள்ளனர். இப்படம் அடுத்தாண்டு பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் என்று கூறப்படுகிறது.
- நயன்தாராவுக்கு திரையுலகினர், ரசிகர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.
- நயன்தாராவின் பிறந்தநாளையொட்டி 'ஹாய்' படக்குழு சிறப்பு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு வாழ்த்து தெரிவித்தது.
நடிகை நயன்தாரா நேற்று தனது 41-வது பிறந்த நாளை கொண்டாடினார். நள்ளிரவு குடும்பத்தோடு கேக் வெட்டி நயன்தாரா பிறந்தநாளை கொண்டாடினார். அவருக்கு திரையுலகினர், ரசிகர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.
இதற்கிடையே, நடிகை நயன்தாராவின் பிறந்தநாளையொட்டி 'ஹாய்' படக்குழு சிறப்பு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு வாழ்த்து தெரிவித்தது. படக்குழு வெளியிட்ட அந்த போஸ்டரில் ரஜினி, கமல் படங்களுக்கு இடையே நயன்தாரா நிற்பது போன்று உள்ளது. இந்த போஸ்டரை ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கினர்.
இந்த நிலையில், நயன்தாராவுக்கு அவரது கணவரும், இயக்குநருமான விக்னேஷ் சிவன் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். விக்னேஷ் சிவன் வெளியிட்டுள்ள பதிவில், எண்ணம்போல் வாழ்க்கை. இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் உயிர். நீ பிறந்த தினம் வரம். உன்னை உண்மையாக, பைத்தியமாக, ஆழமாக நேசிக்கிறேன் என் அழகி. உன்னை நேசிக்கிறேன். உன் உயிர், உலக், பெரிய உயிர், உன் அன்பான மக்கள் அனைவரிடமிருந்தும் மிகுந்த இதயத்துடனும் அன்பு நிறைந்த வாழ்க்கையுடனும் பிரபஞ்சத்திற்கும் சர்வவல்லமையுள்ள கடவுளுக்கும் நன்றி கூறுகிறேன் என்று பதிவிட்டுள்ளார்.
- நயன்தாரா இன்று 41-வது பிறந்தநாளை கொண்டாடினார்.
- NBK 111 படத்தில் நந்தமுரி பாலகிருஷ்ணா கதாநாயகனாக நடிக்கிறார்.
தமிழ் திரை உலகில் லேடி சூப்பர் ஸ்டார் என ரசிகர்களால் அன்போடு அழைக்கப்பட்டு வருபவர் நயன்தாரா. தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி மொழிகளில் பல படங்களில் நடித்துள்ள நயன்தாரா, விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு இரட்டை ஆண் குழந்தைகள் உள்ளனர்.
நயன்தாரா இன்று 41-வது பிறந்தநாளை கொண்டாடினார். நள்ளிரவு குடும்பத்தோடு கேக் வெட்டி நயன்தாரா பிறந்தநாளை கொண்டாடினார். அவருக்கு திரை உலகினர், ரசிகர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.
இந்த நிலையில், நடிகை நயன்தாராவின் பிறந்தநாளை முன்னிட்டு NBK 111 படக்குழு சிறப்பு வீடியோ வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளது.
நந்தமுரி பாலகிருஷ்ணா நடிக்கும் NBK 111 படத்தை வீர சிம்ஹா ரெட்டி இயக்குனர் கோபிசந்த் மலினேனி இயக்கி வருகிறார். இப்படத்தில் கதாநாயகியாக நயன்தாரா நடித்து வருகிறார்.
- குடும்பத்தோடு கேக் வெட்டி நயன்தாரா பிறந்தநாளை கொண்டாடினார்.
- போஸ்டரை ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.
தமிழ் திரை உலகில் லேடி சூப்பர் ஸ்டார் என ரசிகர்களால் அன்போடு அழைக்கப்பட்டு வருபவர் நயன்தாரா. தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி மொழிகளில் பல படங்களில் நடித்துள்ள நயன்தாரா, விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு இரட்டை ஆண் குழந்தைகள் உள்ளனர்.
சினிமா படப்பிடிப்பு இல்லாத நேரங்களில் குடும்பத்துடன் வெளிநாடுகள் மற்றும் பல்வேறு இடங்களுக்கு சுற்றுப் பயணம் செய்து வரும் நயன்தாரா சமீபத்தில் தமிழ்நாடு வடமாநிலங்கள் மற்றும் கேரளாவில் உள்ள பல கோவில்களுக்கு ஆன்மீக சுற்றுப் பயணம் செய்தார்.
இதனிடையே, நயன்தாரா இன்று 41-வது பிறந்தநாளை கொண்டாடினார். நள்ளிரவு குடும்பத்தோடு கேக் வெட்டி நயன்தாரா பிறந்தநாளை கொண்டாடினார். அவருக்கு திரை உலகினர், ரசிகர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.
இந்த நிலையில், நடிகை நயன்தாராவின் பிறந்தநாளை முன்னிட்டு 'ஹாய்' படக்குழு சிறப்பு போஸ்டர் வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளது. படக்குழு வெளியிட்ட அந்த போஸ்டரில் ரஜினி, கமல் படங்களுக்கு இடையே நயன்தாரா நிற்பது போன்று உள்ளது. இந்த போஸ்டரை ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.
விஷ்ணு எடவன் இயக்கும் இப்படத்தில் கவின் கதாநாயகனாக நடிக்கிறார். இப்படம் தொடர்பாக வெளியான ஃபர்ஸ்ட் லுக் மற்றும் போஸ்டர் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது.
இயக்குனர் விக்னேஷ் சிவன் லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் பிரதீப் ரங்கநாதன், கீர்த்தி ஷெட்டி முன்னணி கதாப்பாத்திரங்களில் நடித்து உள்ளனர்.
இந்தப் படத்தை நயன்தாரா, விக்னேஷ் சிவனின் ரௌடி பிக்சர்ஸ் மற்றும் 7 ஸ்கிரீன் ஸ்டூடியோ நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளன. இந்த படம் தீபாவளிக்கு வெளியாக இருந்த நிலையில், டியூட் படம் ரிலீஸால் தள்ளிப்போனது.
இதற்கிடையே, விஷ்ணு எடவன் இயக்கத்தில் கவின் நடிக்கும் படம் ஹாய். இப்படத்தில் கவினுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார்.
இந்நிலையில், விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா தம்பதி அவ்வபோது கோவில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்வது வழக்கம்.
அந்த வகையில், மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைனில் உள்ள மகா காலேஷ்வர் கோவிலில் இயக்குனர் விக்னேஷ் சிவன் அவரது மனைவியும் நடிகையுமான நயன்தாரா ஆகியோர் சாமி தரிசனம் செய்தனர்.
இவர்களுடன் ஸ்ரீலீலாவும் சாமி தரிசனம் செய்தார். கோவிலில் இருந்த நந்தி சிலைக்கு விக்னேஷ் சிவனும், நயன்தாராவும் தீர்த்தத்தால் அபிஷேகம் செய்தனர்.
பின்னர், இவர்களுக்கு சிறப்பு சால்வை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
- பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா ஆசிய கோப்பையை வென்றது.
- இறுதிப்போட்டியில் சிறப்பாக செயல்பட்ட திலக் வர்மா ஆட்டநாயகன் விருதை வென்றார்.
ஆசிய கோப்பை தொடர் சில நாட்களுக்கு முன்னர் நடந்து முடிந்தது. இதன் இறுதிப்போட்டியில் இந்தியா -பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்த பரபரப்பான ஆட்டத்தில் இந்திய அணி கடைசி ஓவரில் வெற்றி பெற்று ஆசிய கோப்பையை கைப்பற்றியது.
இந்த போட்டியில் இந்திய தடுமாறிய நிலையில் ஒற்றை ஆளாக அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றார். அவருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.
இந்நிலையில் ஆசிய கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்ற திலக் வர்மாவை நடிகர் சிரஞ்சீவி நேரில் அழைத்து பாராட்டியுள்ளார்.
'மன சங்கர வர பிரசாத் காரு' என்ற படப்பிடிப்பில் நடைபெற்ற இந்த நிகழ்வில் நடிகை நயன்தாரா, இயக்குநர் அநில் ரவிபுடி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
- சமீபத்தில் மும்பையிலும் சொந்தமாக வீடு வாங்கி உள்ளார் சமந்தா.
- சினிமாவை தாண்டி ரியல் எஸ்டேட்டின் ‘பேபி குயின்’ என்று அழைக்கப்படுகிறார்.
திரை உலகில் 'ஹிட்' படங்கள் கொடுத்து வருமானத்தை பெருக்கி கொண்டு ரியல் எஸ்டேட் துறையில் பல நடிகைகள் முதலீடு செய்து சூப்பர் ஹிட் கொடுத்து வருகின்றனர். தமிழ் சினிமாவிலும் முன்னணி கதாநாயகிகள் பலர் ரியல் எஸ்டேட் தொழிலில் தடம் பதித்து சாதித்து வருகின்றனர்.
நயன்தாரா: தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்பட்டு வருபவர் நயன்தாரா. சினிமா மட்டுமின்றி ரியல் எஸ்டேட் தொழிலிலும் முதலீடு செய்து சென்னையில் அபார்ட்மென்ட், ஐதராபாத், கொச்சியில் வீடுகள் மற்றும் வணிக வளாகங்கள் வைத்திருப்பதாக கூறப்படுகிறது.
சமந்தா: சினிமா உலகில் உச்சத்தை தொட்டுள்ள சமந்தா ஐதராபாத்தில் பலகோடி மதிப்புள்ள வீடுகளை வாங்கி 'பிராபர்டி குயின்' என்று பெயர் பெற்றுள்ளார். சமீபத்தில் மும்பையிலும் சொந்தமாக வீடு வாங்கி உள்ளார் சமந்தா.
காஜல் அகர்வால்: தமிழ், தெலுங்கு, இந்தி திரை உலகில் பிரபலமான நடிகையான காஜல் அகர்வால் ரியல் எஸ்டேட்டிலும் பேரரசியாக இருக்கிறார். மும்பை, சென்னை ஆகிய நகரங்களில் வணிக வளாகங்களில் பங்குகள் வைத்திருப்பதாக கூறப்படுகிறது.

ஹன்சிகா: தமிழ் சினிமா ரசிகர்களால் 'சின்ன குஷ்பு' என்று வர்ணிக்கப்படுபவர் ஹன்சிகா. சினிமாவில் சம்பாதித்த பணத்தை நிலம், வீடு, அபார்ட்மெண்ட்களில் முதலீடு செய்துள்ளார். இதைத் தொடர்ந்து சினிமாவை தாண்டி ரியல் எஸ்டேட்டின் 'பேபி குயின்' என்று அழைக்கப்படுகிறார்.
ராஷ்மிகா: ராஷ்மிகா ஐதராபாத், பெங்களூரு, மும்பையில் அபார்ட்மென்ட்கள், வீடுகள் வாங்கி இருக்கிறார். 'நேஷனல் கிரஷ்' என்று அழைக்கப்படும் 'பிராபர்டி கிரஷ்' ராஷ்மிகா மந்தனா.
ஷில்பாஷெட்டி: ஷில்பா ஷெட்டி மும்பையில் பலகோடி ரூபாய் மதிப்புள்ள அபார்ட்மெண்ட்கள், பங்களாக்கள் மட்டுமின்றி துபாயிலும் சொத்துக்களில் முதலீடு செய்துள்ளார். கணவர் ராஜ்குந்த்ராவுடன் இணைந்து வணிக வளாகங்களிலும் பங்கு வைத்துள்ளார்.
கியாரா அத்வானி: நடிகை கியாரா அத்வானி மும்பையில் அபார்ட்மெண்ட்களில் முதலீடு செய்து வருகிறார்.
தமன்னா: தமன்னா மும்பை ஐதராபாத்தில் வீடுகள் மட்டுமின்றி சில தொழில் அதிபர்களுடன் இணைந்து பிசினஸ் செய்து வருவதாக தகவல் வெளியாகி வருகிறது.
வித்யாபாலன்: நடிகை வித்யாபாலன் மும்பையில் பல அபார்ட்மெண்ட்கள் வாங்கி 'ஸ்மார்ட் இன்வெஸ்டர்' என புகழ் பெற்று வருகிறார்.






