என் மலர்
நீங்கள் தேடியது "நயன்தாரா"
- பேட்ரியாட் படத்தின் படப்பிடிப்பு அண்மையில் நிறைவடைந்தது.
- பேட்ரியாட் படம் ஏப்ரல் 23 ஆம் த்தி வெளியாகவுள்ளது
மலையாள திரையுலகின் 2 பெரும் சூப்பர்ஸ்டார்களான மம்மூட்டி மற்றும் மோகன்லால் ஆகியோர் ஒன்றாக இணைந்து நடிக்கும் படம் பேட்ரியாட்.
அண்மையில் இப்படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தில் ஃபகத் ஃபாசில், ரேவதி, நயன்தாரா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு அண்மையில் நிறைவடைந்தது. இந்நிலையில், மம்மூட்டி, மோகன்லால், நயன்தாரா, ஃபஹத் பாசில், குஞ்சாக்கோ போபன் ஆகியோரின் போஸ்டர்களை படக்குழு வெளியிட்டுள்ளது.
இந்த படம் ஏப்ரல் 23 ஆம் த்தி வெளியாகவுள்ளது. இந்நிலையில், பேட்ரியாட் படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.
மம்மூட்டியும் மோகன்லாலும் ஒன்றாக இணைந்து நடிப்பதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
- நயன்தாரா-விக்னேஷ் சிவன் இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டனர்.
- இந்த தம்பதிக்கு உயிர், உலக் என்று இரட்டை ஆண் குழந்தைகள் உள்ளனர்
பிப்ரவரி 14 ஆம் தேதியான இன்று காதலர் தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.
இந்நிலையில், காதலர் தினத்தை முன்னிட்டு விக்னேஷ் சிவன் - நயன்தாரா தம்பதி புகைப்படங்கள் வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
நயன்தாரா-விக்னேஷ் சிவன் இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டனர். இந்த தம்பதிக்கு உயிர், உலக் என்று இரட்டை ஆண் குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- தற்போது யாஷ் நடிப்பில் உருவாகி வரும் டாக்ஸிக் படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
- இந்திய அளவில் பிரபலமான அனுஷ்கா சொத்து மதிப்பு ரூ.135 கோடியை தாண்டியுள்ளது.
திரை உலகில் ஹீரோக்கள் மட்டுமே அதிக சம்பளம் வாங்கி வந்தனர். சமீபகாலமாக ஹீரோயின்களின் சம்பளமும் அதிகரிக்க தொடங்கி வருகிறது. கதாநாயகர்களை போல கதாநாயகிகளின் சம்பளமும் கோடிகளை தாண்டி உள்ளது.
சினிமா மட்டுமின்றி விளம்பரங்கள் மற்றும் சொந்தமான தொழிலில் ஈடுபடுவது மூலம் கதாநாயகிகளின் வருமானம் உச்சத்தை அடைந்து வருகிறது.
இந்நிலையில் 2026-ம் ஆண்டு தென்னிந்திய திரை உலகில் டாப் 10 கதாநாயகிகளின் பட்டியல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
நயன்தாரா: தென்னிந்திய திரை உலகின் லேடி சூப்பர் ஸ்டார் என ரசிகர்களால் அன்போடு அழைக்கப்பட்டு வரும் நயன்தாரா சினிமா நடிப்பு மட்டுமின்றி தயாரிப்பு, விளம்பர படங்கள், சொந்தமாக அழகு சாதன பொருட்கள் விற்பனை போன்றவை செய்து வருகிறார்.
தற்போது யாஷ் நடிப்பில் உருவாகி வரும் டாக்ஸிக் படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவரது சொத்து மதிப்பு ரூ.200 கோடி என தகவல் வெளியாகி இருக்கிறது.
அனுஷ்கா: பாகுபலி, அருந்ததி போன்ற படங்கள் மூலம் இந்திய அளவில் பிரபலமான அனுஷ்கா சொத்து மதிப்பு ரூ.135 கோடியை தாண்டியுள்ளது.
தமன்னா: தமிழ், தெலுங்கு, இந்தி படங்களில் நடிப்பது, தனி பாடலுக்கு நடனம் ஆடுவது என திரை உலக ரசிகர்களை கவர்ந்து வரும் தமன்னா சொத்து மதிப்பு ரூ.110 முதல் ரூ.120 கோடி என கூறப்பட்டுள்ளது.
சமந்தா: ரூ.110 முதல் ரூ.120 கோடி, திரிஷா-ரூ.85 முதல் ரூ.100 கோடி, காஜல் அகர்வால்-சுமார் ரூ.85 கோடி, ராஷ்மிகா மந்தனா-ரூ.66 கோடி, பூஜா ஹெக்டே-ரூ.50 கோடி, சாய்பல்லவி-ரூ.47 கோடி, சுருதிஹாசன்-ரூ.45 கோடி என தகவல்கள் வெளியாகி உள்ளன.
- சென்னை கலைவாணர் அரங்கத்தில் பிப்ரவரி 13ம் தேதி அன்று விழா நடைபெறுகிறது.
- 2014-2022ம் ஆண்டுகளுக்கான சின்னத்திரை விருதுகளையும் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
2016-2022ம் ஆண்டுகளுக்கான தமிழ்நாடு அரசின் திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், 2014-2022ம் ஆண்டுகளுக்கான சின்னத்திரை விருதுகளையும் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
சென்னை கலைவாணர் அரங்கத்தில் பிப்ரவரி 13ம் தேதி அன்று நடைபெறும் விழாவில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்குகிறார்.
சிறந்த நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்களுக்கு ஒரு சவரன் தங்கப்பதக்கம், சான்றிதழ் வழங்கப்படுகிறது.
சிறந்த நடிகர்களுக்கான விருது சூர்யா, தனுஷ், விஜய்சேதுபதி, கார்த்தி, பார்த்திபன், ஆர்யா, விக்ரம் பிரபுவிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
சிறந்த நடிகைகளுக்கான விருது, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, ஜோதிகா, மஞ்சு வாரியர், அபர்ணா பாலமுரளி உள்ளிட்டோருக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், லியோ மோல் ஜோஸ், சாய் பல்லவிக்கு சிறந்த நடிகைகளுக்கான தமிழக அரசின் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
- Patriot படத்தின் படப்பிடிப்பு அண்மையில் நிறைவடைந்தது.
- Patriot படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
மலையாள திரையுலகின் 2 பெரும் சூப்பர்ஸ்டார்களான மம்மூட்டி மற்றும் மோகன்லால் ஆகியோர் ஒன்றாக இணைந்து நடிக்கும் படம் PATRIOT.
அண்மையில் இப்படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தில் ஃபகத் ஃபாசில், ரேவதி, நயன்தாரா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு அண்மையில் நிறைவடைந்தது. இந்நிலையில், மம்மூட்டி, மோகன்லால், நயன்தாரா, ஃபஹத் பாசில், குஞ்சாக்கோ போபன் ஆகியோரின் போஸ்டர்களை படக்குழு வெளியிட்டுள்ளது.
இந்த போஸ்டர்களில் Morse Code-ல் ஏப்ரல் 23 என குறிப்பு வைத்து வித்தியாசமான முறையில் ரிலீஸ் தேதியை Patriot படக்குழு வெளியிட்டுள்ளனர்
மம்மூட்டியும் மோகன்லாலும் ஒன்றாக இணைந்து நடிப்பதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
- PATRIOT படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
- PATRIOT படத்தில் நயன்தாரா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
மலையாள திரையுலகின் 2 பெரும் சூப்பர்ஸ்டார்களான மம்மூட்டி மற்றும் மோகன்லால் ஆகியோர் ஒன்றாக இணைந்து நடிக்கும் படம் PATRIOT.
அண்மையில் இப்படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தில் ஃபகத் ஃபாசில், ரேவதி, நயன்தாரா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு அண்மையில் நிறைவடைந்தது. இந்நிலையில், பேட்ரியாட்" படத்தின் நயன்தாரா கதாபாத்திர போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.
மம்மூட்டியும் மோகன்லாலும் ஒன்றாக இணைந்து நடிப்பதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
நடிகர் அஜித் குமார் திரைப்படங்களை தாண்டி கார் ரேஸிங் மீது காதல் கொண்டு பல சர்வதேச போட்டிகளில் அண்மைக் காலமாக கலந்துகொண்டு வருகிறார்.
ஸ்பெயின் மற்றும் அபுதாபி ஆகிய இடங்களில் நடைபெற்ற ரேஸிங் போட்டிகளில் அவர் பங்கேற்று கவனம் ஈர்த்து வருகிறார்.
அபுதாபி ரேஸிங் களத்தில் திரைப்பிரபலங்கள் பலரும் அஜித்தை நேரில் சந்தித்து வருகின்றனர்.
அந்த வகையில், சமீபத்தில் இசையமைப்பாளர் அனிருத் அஜித்தை நேரில் சென்று சந்தித்தார். இதேபோல், லீலாவும் அஜித்தை சந்தித்த புகைப்படங்கள் வைரலாகின.
இந்நிலையில், அஜித்தை துபாய் ரேஸிங் களத்தில் விக்னேஷ் சிவன் - நயன்தாரா தம்பதி, ஜி.வி.பிரகாஷ், சிபிராஜ் ஆகியோர் சந்தித்துள்ளனர்.
அஜித்தின் 'ரேஸிங்' பயணத்தை மையமாக வைத்து இயக்குனர் ஏ.எல். விஜய் இயக்கும் ஆவணப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்து வருவது குறிப்பிடத்தக்கது.
நடிகர் சிபிராஜ் அஜித்தை கார் ரேஸ் ட்ராக்கில் சந்தித்து இருந்த வீடியோ வைரல் ஆனது.
- நடிகர் யாஷ் "டாக்சிக்" என்ற படத்தில் நடித்து வருகிறார்
- இப்படத்தில், கியாரா அத்வானி, நயன்தாரா, ருக்மணி வசந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
கன்னட சினிமாவின் முன்னணி நடிகர் யாஷ். ராக்கி என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். அதைத் தொடர்ந்து இவர் பல்வேறு படங்களில் நடித்தார். இவர் நடிப்பில் வெளியான கே.ஜி.எஃப். திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்தப் படத்தில் நடித்து இந்திய சினிமாவை திரும்பி பார்க்க வைத்தார் யாஷ்.
இதைத் தொடர்ந்து நடிகர் யாஷ் "டாக்சிக்" என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை இயக்குனர் கீதா மோகன்தாஸ் இயக்குகிறார். இப்படம் டிரக் மாஃபியா உலகில் நடக்கும் கேங்ஸ்டர் டிராமாவாக இருக்கும் என படக்குழு தெரிவித்து இருந்தது.
இப்படத்தில், கியாரா அத்வானி, நயன்தாரா, உள்ளிட்ட பலர் நடிப்பில் பிரமாண்டமாக இந்த படம் உருவாகி வருகிறது. இப்படம் மார்ச் மாதம் 19-ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
கியாரா அத்வானி, நயன்தாரா, ருக்மணி வசந்த், ஹீமா குரேஷி, தாரா சுதரியா ஆகியோரின் கதாபாத்திர பெயர்களுடன் போஸ்டர்களை படக்குழு வெளியிட்டு அப்டேட் கொடுத்து.
இந்நிலையில், டாக்சிக்' திரைப்பட நாயகன் யாஷ்-ன் கதாபாத்திர பெயர் போஸ்டர் நாளை வெளியிடப்படும் என்று படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.
- நடிகர் யாஷ் "டாக்சிக்" என்ற படத்தில் நடித்து வருகிறார்
- இப்படத்தில், கியாரா அத்வானி, நயன்தாரா, ருக்மணி வசந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
கன்னட சினிமாவின் முன்னணி நடிகர் யாஷ். ராக்கி என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். அதைத் தொடர்ந்து இவர் பல்வேறு படங்களில் நடித்தார். இவர் நடிப்பில் வெளியான கே.ஜி.எஃப். திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்தப் படத்தில் நடித்து இந்திய சினிமாவை திரும்பி பார்க்க வைத்தார் யாஷ்.
இதைத் தொடர்ந்து நடிகர் யாஷ் "டாக்சிக்" என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை இயக்குனர் கீதா மோகன்தாஸ் இயக்குகிறார். இப்படம் டிரக் மாஃபியா உலகில் நடக்கும் கேங்ஸ்டர் டிராமாவாக இருக்கும் என படக்குழு தெரிவித்து இருந்தது.
இப்படத்தில், கியாரா அத்வானி, நயன்தாரா, ருக்மணி வசந்த் உள்ளிட்ட பலர் நடிப்பில் பிரமாண்டமாக இந்த படம் உருவாகி வருகிறது. இப்படம் மார்ச் மாதம் 19-ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
யாஷ் , கியாரா அத்வானி, நயன்தாரா ஆகியோரின் கதாபாத்திர பெயர்களுடன் போஸ்டர்களை படக்குழு வெளியிட்டு அப்டேட் கொடுத்து.
இந்நிலையில், டாக்சிக்' திரைப்படத்தில் 'மெலிசா' என்ற வேடத்தில் ருக்மணி வசந்த் நடித்துள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.
- PATRIOT படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
- PATRIOT படத்தில் ஃபகத் ஃபாசில், நயன்தாரா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
மலையாள திரையுலகின் 2 பெரும் சூப்பர்ஸ்டார்களான மம்மூட்டி மற்றும் மோகன்லால் ஆகியோர் ஒன்றாக இணைந்து நடிக்கும் படம் PATRIOT.
அண்மையில் இப்படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தில் ஃபகத் ஃபாசில், ரேவதி, நயன்தாரா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது. 130 நாட்கள் இப்படத்தில் படப்பிடிப்பு நடந்தது. மம்மூட்டியும் மோகன்லாலும் ஒன்றாக இணைந்து நடிப்பதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
- நயன்தாரா தானாக முன்வந்து, 'என்ன அனில், படத்துக்கு புரோமோஷன் இல்லையா?' எனக் கேட்கிறார்.
- இதைக் கேட்டு அனில் ரவிபுடி மயங்கி விழுவது போன்ற காட்சி காமெடியாக காட்டப்பட்டுள்ளது.
தெலுங்கில் அனில் ரவிபுடி இயக்கத்தில் சிரஞ்சீவி தனது 157 படத்தில் நடித்து முடித்துள்ளார்.
படத்திற்கு 'மன ஷங்கர வரபிரசாத் காரு' என தலைப்பு வைத்துள்ளனர். படத்தின் நாயகியாக நயன்தாரா நடித்துள்ளார். கேத்ரீன் தெரேசா முக்கிய கதாப்பாத்திரம் ஏற்றுள்ளார்.
படத்தை சாகு கரபதி மற்றும் சுஷ்மிதா கொனிடேலா தயாரிக்கின்றனர். இந்த படத்தின் முதல் பாடல் "மீசால பில்லா" பாடல் வைரலானது.
இப்படம் பொங்கலை ஒட்டி வரும் ஜனவரி 12 அன்று திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. படத்தின் பு ரோமோஷன் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. இந்த படத்தின் புரோமோஷனில் நயன்தாரா கலந்துகொண்டுள்ளார்

பொதுவாக நயன்தாரா தான் நடிக்கும் படங்களில் புரோமோஷனில் கலந்துகொள்ளவே மாட்டார். இதை ஒரு ரூல் ஆகவே அவர் கடைபிடித்து வந்தார். இது பலமுறை விமர்சனத்துக்கும் உள்ளானது.
ஒரு படத்திற்கு புரோமோஷன் என்பது இன்றைய காலகட்டத்தில் அத்தியாவசிய தேவகையாகவே மாறிவிட்டது.
ஆனால் கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கினாலும் தான் நடித்த படத்திற்கு நயன்தாரா புரோமோஷன் செய்யாதது தயாரிப்பாளர்களை முகம் சுழிக்க வைத்தது. அவர் சமீபமாக நடித்த எனது தமிழ் படங்களின் புரோமோஷனிலும் கலந்துகொள்ளவில்லை.
ஆனால் தற்போது தெலுங்கு படத்திற்காக நயன்தாரா தனது பிடிவாதத்தை தளர்த்தியுள்ளது மேலும் விமர்சிக்கப்பட்டு வருகிறது. 'மன ஷங்கர வரபிரசாத் காரு' படத்தில் புரோமோஷனில் ஆரம்பம் முதலே நயன்தாரா பங்கேற்று வருகிறார்.
இதற்கிடையே 'மன ஷங்கர வரபிரசாத் காரு' படக்குழு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் நயன்தாரா தானாக முன்வந்து, 'என்ன அனில், படத்துக்கு புரோமோஷன் இல்லையா?' எனக் கேட்கிறார். இதைக் கேட்டு அனில் ரவிபுடி மயங்கி விழுவது போன்ற காட்சி காமெடியாக காட்டப்பட்டுள்ளது.
இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் தமிழ் ரசிகர்கள், விமர்சகர்கள் நயன்தாராவின் பாரபட்சமான செயலுக்கு கண்டனம் தெரிவித்தும் ட்ரோல் செய்தும் வருகின்றனர்.
தமிழ் சினிமா மூலமே லேடி சூப்பர்ஸ்டார் என்ற அளவுக்கு வளர்ந்த நயன்தாரா தமிழ் சினிமா மீது பாரபட்சம் காட்டுவது பலரிடையே ஆத்திரத்தை ஏற்படுத்தி உள்ளது.
- நயன்தாரா அம்மனாக நடிக்க, சுந்தர் சி இயக்கியத்தில் படம் உருவாகியுள்ளது.
ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் 'மூக்குத்தி அம்மன்' படம் கடந்த 2020-ம் ஆண்டு வெளியானது. இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
இதனைத் தொடர்ந்து மூக்குத்தி அம்மன் பாகம் 2-ஐ தயாரிக்க வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் முன்வந்தது. இந்த நிறுவனத்துடன் ரௌடி பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்க முடிவு செய்யப்பட்டது.
நயன்தாரா அம்மனாக நடிக்க, சுந்தர் சி இப்படத்தை இயக்குவார் என அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இப்பட பூஜை கடந்த மார்ச் மாதம் பிரமாண்டாக நடைபெற்றது. கடந்த 6 மாதங்களுக்கு மேலான நடைபெற்ற இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளது. இதை படக்குழு வீடியோ வெளியிட்டு அறிவித்துள்ளது. மூக்குத்தி அம்மன் 2 மிகப்பிரமாண்டாக உருவாகியுள்ளது. இப்படத்தில் ரெஜினா கசான்ட்ரா, யோகி பாபு, ஊர்வசி மற்றும் பலர் நடித்துள்ளனர்.
சுந்தர் சி மற்றும் நயன்தாரா இருவரும் முதல் முறையாக இப்படத்தின் மூலம் இணைந்துள்ளதால் இப்படத்தை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டு உள்ளனர். இப்படத்தை 2026 கோடை விடுமுறையின்போது ரிலீஸ் செய்ய படக்குழு முடிவு செய்துள்ளது.






