search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "GV PrakashKumar"

    • 2024 ஜேஇஇ தேர்வில் பழங்குடியின மாணவி சுகன்யா தேர்ச்சி பெற்று, சாதனை படைத்துள்ளனர்.
    • “கல்வி ஆகச்சிறந்த செல்வம்” அது தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு தங்கை தம்பிகளுக்கும் கிடைக்கவேண்டும்.

    2024 ஜேஇஇ (JEE) தேர்வில் தமிழ்நாட்டை சேர்ந்த பழங்குடியின மாணவிகள் ரோகிணி, சுகன்யா தேர்ச்சி பெற்று, சாதனை படைத்துள்ளனர். இதன்மூலம் கடந்த 60 ஆண்டுகளில் திருச்சி என்ஐடி-ல் (NIT) சீட் பெற்ற முதல் பழங்குடியின மாணவிகள் என்ற பெருமையை இவர்கள் பெற்றனர்.

    ஜேஇஇ (JEE) தேர்வில் மாணவி ரோகிணி 73.8 சதவீத மதிப்பெண்கள் பெற்று தமிழ்நாட்டில் தேர்வெழுதிய பழங்குடியின மாணவிகளில் முதலிடம் பிடித்துள்ளார். திருச்சி என்ஐடி-ல் (NIT) மாணவி ரோகிணி வேதிப் பொறியியலும், சுகன்யா உற்பத்தி பொறியியலும் படிக்கும் வாய்ப்பை பெற்றுள்ளனர்.

    இந்நிலையில், ஜேஇஇ தேர்வில் வெற்றி பெற்ற சுகன்யாவிற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ்குமார் தனது எக்ஸ் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    அந்த பதிவில், "JEE நுழைவுத்தேர்வில் வென்று திருச்சி NIT யில் பயில போகும் அன்புத்தங்கை சுகன்யா அவர்களுக்கு என் இதயம் கனிந்த நல் வாழ்த்துகள். "கல்வி ஆகச்சிறந்த செல்வம்" அது தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு தங்கை தம்பிகளுக்கும் கிடைக்கவேண்டும்" என்று பதிவிட்டுள்ளார். 

    • சின்ன திரையில் அறிமுகமாகி பின் பல படங்களில் குணசித்திர நடிகராக நடித்து இருக்கிறார் போஸ் வெங்கட்.
    • மா.பொ.சி என தலைப்பிடப்பட்ட படம் தற்பொழுது S.I.R {சார்} என மாற்றப்பட்டு இருக்கிறது.

    சின்ன திரையில் அறிமுகமாகி பின் பல படங்களில் குணசித்திர நடிகராக நடித்து இருக்கிறார் போஸ் வெங்கட். பின் 2020 ஆம் ஆண்டு கன்னி மாடம் படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் இயக்குநராக்க அறிமுகமாகினார்.

    தற்பொழுது அவர் விமல் நடிப்பில் மா.பொ. சி படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் கடந்த மாதம் வெளியான நிலையில். படத்தின் தலைப்பு சில தவிர்க்க முடியாத காரணத்தினால் மாற்றியுள்ளனர். முதலில் மா.பொ.சி என தலைப்பிடப்பட்ட படம் தற்பொழுது S.I.R {சார்} என மாற்றப்பட்டு இருக்கிறது.

    படத்தின் டீசர் சில நாட்களுக்கு முன் வெளியிடப்பட்டது. படத்தின் முதல் பாடலான 'பனங்கருக்கா' பாடல் நாளை [ஜூலை 5] வெளியாகவுள்ளது. இப்படத்திற்கு சித்து குமார் இசையமைத்துள்ளார். இப்பாடலை பிரபல இசையமைப்பாளரான ஜி.வி பிரகாஷ் மற்றும் சைந்தவி இணைந்து பாடியுள்ளனர். சமீபத்தில் இருவருக்கும் விவாகரத்து ஆனது. இதனால் இப்பாடலிற்கு ரசிகர்களிடையே மிகவும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. இந்த பாடலிற்கு விவேகா பாடல் வரிகளை எழுதியுள்ளார்.

    இப்படத்தை வெற்றிமாறனின் கிராஸ் ரூட் பிலிம்ஸ் வழங்குகிறது. திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நீலம் புரொடக்ஷன்ஸ் 'எக்ஸ்' இணையதளத்தில் இந்த படம் தொடங்கியது தொடர்பான பல 'புகைப்படங்களை' வெளியிட்டுள்ளது.
    • நீலம் புரொடக்ஷன் பெயரில் படம் தயாரிக்கும் பா.ரஞ்சித், சில தனித்துவமான மற்றும் வெற்றிகரமான படங்களை தயாரித்துள்ளார்.

    இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி.பிரகாஷ், நடிகை ஷிவானி ராஜசேகர் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படத்தை பா.ரஞ்சித்தின் 'நீலம் புரொடக்ஷன்ஸ்' தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கிறது.

    'புளூஸ்டார்' பட வெற்றிக்குப் பிறகு இந்த படத்திற்கான தயாரிப்பு பணிகள் தொடங்கப்பட்டு உள்ளது. இன்னும் பெயரிடப்படாத இப்படத்தை இயக்குநர் அகிரண்மோசஸ் இயக்குகிறார். பா.ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் படத்திற்கு இசையமைத்த ஜி.வி.பிரகாஷ் இப்படத்திற்கும் இசையமைக்கிறார்.

    படத்தில் மலையாள நடிகர் ஸ்ரீநாத்பாசியும் நடிக்கிறார். நீலம் புரொடக்ஷன்ஸ் 'எக்ஸ்' இணையதளத்தில் இந்த படம் தொடங்கியது தொடர்பான பல 'புகைப்படங்களை' வெளியிட்டுள்ளது.


    'ஒரு புதிய அத்தியாயத்திற்கான ஆரம்பம். எங்கள் அடுத்த தயாரிப்பிற்கான படப்பிடிப்பு இன்று பிரகாசமான புன்னகை மற்றும் இனிமையான நினைவுகளுடன் தொடங்குகிறது என்று தயாரிப்பு குழு தெரிவித்துள்ளது. படத்தின் ரிலீஸ் தேதியை தயாரிப்பு தரப்பு இன்னும் அறிவிக்கவில்லை.

    நீலம் புரொடக்ஷன் பெயரில் படம் தயாரிக்கும் பா.ரஞ்சித், சில தனித்துவமான மற்றும் வெற்றிகரமான படங்களை தயாரித்துள்ளார். சமீபத்தில் வெளியான அசோக் செல்வன், சாந்தனு பாக்யராஜ், பிருத்வி பாண்டியராஜன் நடித்த ப்ளூ ஸ்டார் படம் நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.


    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • வணங்கான் படத்தில் இருந்து சூர்யா திடீரென விலகினார்.
    • இந்தப் படத்தில் சூர்யாவுக்கு பதில் அருண் விஜய் நடித்துள்ளார்.

    இயக்குநர் பாலா, சூர்யா நடிப்பில் 'வணங்கான்' படத்தை இயக்கினார். ஒரு ஷெட்யூல் படப்பிடிப்பு நடந்து முடிந்த நிலையில், திடீரென படம் கைவிடப்பட்டது.

    பின்னர், இந்தப் படத்தில் இருந்து சூர்யா திடீரென விலகினார். இதுபற்றி பாலா வெளியிட்ட அறிக்கையில், "வணங்கான் திரைப்படத்திலிருந்து சூர்யா விலகிக்கொள்வது என நாங்கள் இருவரும் கலந்து பேசி, ஒருமனதாக முடிவெடுத்திருக்கிறோம். அதில் அவருக்கு வருத்தம்தான் என்றாலும் அவரது நலன் கருதி எடுத்த முடிவு இது" என்று கூறியிருந்தார்.

    இதையடுத்து, இந்தப் படத்தில் சூர்யாவுக்கு பதில் அருண் விஜய் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக ரோஷினி பிரகாஷ் நடித்துள்ளார். மிஷ்கின், சமுத்திரக்கனி முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

    ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். படத்தை சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ளார்.

    இந்நிலையில் பாலா ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தின் டீசர் வரும் 19-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.

    அந்த வகையில், வணங்கான் படத்தின் டீஸர் இன்று வெளியாகியுள்ளது.

    • பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடித்துள்ள 'வணங்கான்' படத்தின் டீசர் பிப்ரவரி 19ம் தேதி வெளியாகும் என படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது..
    • இந்தப் படத்தில் சூர்யாவுக்கு பதில் அருண் விஜய் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக ரோஷினி பிரகாஷ் நடித்துள்ளார்.

    பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடித்துள்ள 'வணங்கான்' படத்தின் டீசர் பிப்ரவரி 19ம் தேதி வெளியாகும் என படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது..

    இயக்குநர் பாலா, சூர்யா நடிப்பில் 'வணங்கான்' படத்தை இயக்கினார். ஒரு ஷெட்யூல் படப்பிடிப்பு நடந்து முடிந்த நிலையில், திடீரென படம் கைவிடப்பட்டது. பின்னர், இந்தப் படத்தில் இருந்து சூர்யா திடீரென விலகினார். இதுபற்றி பாலா வெளியிட்ட அறிக்கையில், "வணங்கான் திரைப்படத்திலிருந்து சூர்யா விலகிக்கொள்வது என நாங்கள் இருவரும் கலந்து பேசி, ஒருமனதாக முடிவெடுத்திருக்கிறோம்.அதில் அவருக்கு வருத்தம்தான் என்றாலும் அவரது நலன் கருதி எடுத்த முடிவு இது" என்று கூறியிருந்தார்.

    இதையடுத்து. இந்தப் படத்தில் சூர்யாவுக்கு பதில் அருண் விஜய் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக ரோஷினி பிரகாஷ் நடித்துள்ளார். மிஷ்கின், சமுத்திரக்கனி முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். படத்தை சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ளார். இந்நிலையில் பாலா ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தின் டீசர் வரும் 19-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    படத்தை பாலாவின் தயாரிப்பு நிறுவனமான 'பி ஸ்டூடியோஸ்' நிறுவனம் தயாரித்து வருகிறது. ஏற்கனவே வெளியான வணங்கான் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் படத்தின் மீதான எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது. அதில் அருண்விஜய் ஒரு கையில் பெரியார் சிலையுடனும் மற்றொரு கையில் விநாயகர் சிலையுடனும் உள்ளார். இந்த ஃபர்ஸ்ட் லுக் அப்போது இணையத்தில் வைரலானது.

    • ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் 'எஸ்கே21' படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார்.
    • இதில் ராணுவ வீரராக நடிக்கும் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்து வருகிறார்.

    சிவகார்த்திகேயன் நடிக்கும் 'எஸ்கே21' படத்தின் டைட்டில் டீசர் நாளை (பிப் -16) வெளியாகிறது.

    ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் 'எஸ்கே21' படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். இப்படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் , சோனி பிக்சர்ஸுடன் இணைந்து தயாரிக்கிறது. இதில் ராணுவ வீரராக நடிக்கும் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்து வருகிறார். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார்.

    'எஸ்கே 21' என அழைக்கப்படும் இப்படத்தின் டைட்டில் டீசர் சிவகார்த்திகேயனின் பிறந்த நாளை முன்னிட்டு நாளை மாலை 5 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. சிவகார்த்திகேயனுக்கு 17-ம் தேதி பிறந்த நாள் என்பது குறிப்பிடத்தக்கது.

    எழில் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் - ஈஷா ரெபா நடிப்பில் உருவாகி வரும் புதிய படத்தின் படப்பிடிப்பு நெல்லையில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. #GVPrakashKumar #Ezhil
    ரமேஷ்.பி. பிள்ளை வழங்கும் அபிஷேக் பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் படத்தை எழில் இயக்குகிறார். ஜி.வி பிரகாஷ் நாயகனாக நடிக்கும் இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக ஈஷா ரெபா தமிழில் அறிமுகமாகிறார்.

    காமெடி படமாக உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது திருநெல்வேலியில் நடந்து வருகிறது. நெல்லை குறுக்குத்துறை தாமிரபரணி ஆற்றுப்பகுதியில் நேற்று படத்தின் பாடல் காட்சி ஒன்றை படமாக்கியுள்ளனர். இதில் ஜி.வி.பிரகாஷ், நகைச்சுவை நடிகர்கள் சதிஷ், வையாபுரி, மொட்டை ராஜேந்திரன், கோவை சரளா ஆகியோர் நடனமாடும் காட்சிகள் படமாக்கப்பட்டன. 


    படப்பிடிப்பை பார்ப்பதற்காக ஏராளமான பொதுமக்கள் அந்த பகுதியில் திரண்டனர். இதனால் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. சி.சத்யா இந்த படத்திற்கு இசையமைக்கிறார். #GVPrakashKumar #Ezhil

    சுதா கொங்காரா இயக்கத்தில் சூர்யா - அபர்ணா பாலமுரளி நடிப்பில் உருவாகி வரும் சூரரைப் போற்று படக்குழுவில் இருந்து புதிய தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது. #SooraraiPottru
    `என்ஜிகே', காப்பான் படங்களை தொடர்ந்து சூர்யா தற்போது சுதா கொங்காரா இயக்கத்தில் சூரரைப் போற்று படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சனிக்கிழமை துவங்கிய விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த படத்தில் சூர்யா ஜேடியாக நடித்து வரும் அபர்ணா பாலமுரளி தனது முதற்கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டதாக அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அபர்ணா அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், சூரரைப் போற்று முதற்கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டேன், இந்த செட்டில் உள்ள அனைவருமே அன்பாக உள்ளார்கள். இரும்பு பெண் சுதா மேடம் போன்று யாருமில்லை. மற்றும் அந்த முக்கியமான நபர், அவரை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. அடுத்த கட்ட படப்பிடிப்புக்காக ஆவலோடு காத்திருக்கிறேன்.

    பிரபல தொழில் அதிபரும், முன்னாள் ராணுவ அதிகாரியுமான ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையை மையப்படுத்தி இந்த படம் உருவாகி வருகிறது. இதில் கோபிநாத்தின் மனைவி பார்க்கவியின் கதாபாத்திரத்தில் அபர்ணா நடித்து வருகிறார். பார்ப்பதற்கு பார்கவி போலவே இருப்பதால் அவரை இந்த படத்திற்கு தேர்வு செய்துள்ளார்கள்.


    சாதாரண மனிதர்களும் விமானப் போக்குவரத்தை பயன்படுத்தும் நோக்கில் பட்ஜெட் விமானச் சேவையை அறிமுகப்படுத்தியவர் ‘ஏர் டெக்கான்’ நிறுவனர் ஜி.ஆர்.கோபிநாத் என்பது குறிப்பிடத்தக்கது.

    ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கும் இந்த படத்திற்கு நிக்கேத் பொம்மிரெட்டி ஒளிப்பதிவு செய்கிறார். சதிஷ் சூர்யா படத்தொகுப்பையும், ஜாக்கி கலை பணிகளையும் கவனிக்கின்றனர்.

    2டி என்டர்டெயின்மெண்ட் மற்றும் சீக்யா என்டர்டெயின்மெண்ட் இணைந்து இந்த படத்தை தயாரிக்கிறது. #SooraraiPottru #Suriya38
     #SudhaKongara #AparnaBalamurali

    சுதா கொங்காரா இயக்கத்தில் சூர்யா - அபர்ணா பாலமுரளி நடிப்பில் உருவாகும் சூர்யாவின் 38-வது படத்தின் தலைப்பு அடங்கிய போஸ்டரை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது. #Suriya38 #SooraraiPottru
    செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள `என்ஜிகே' படம் மே 31-ந் தேதி ரிலீசாக இருக்கிறது. கே.வி.ஆனந்த் இயக்கும் காப்பான் படத்தின் படப்பிடிப்பும் இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது. ஒரே ஒரு பாடல் மட்டும் படமாக்கப்பட வேண்டி இருப்பதாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில், சூர்யாவின் 38-வது படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் துவங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த நிலையில், படத்தின் டைட்டில் லுக் போஸ்டரை படக்குழு இன்று வெளியிட்டது. அதன்படி படத்திற்கு சூரரைப் போற்று என்று தலைப்பு வைத்துள்ளார்கள். 

    சுதா கொங்காரா இயக்கும் இந்த படத்தில் நாயகியாக அபர்ணா பாலமுரளி நடிக்கிறார். சூர்யா ராணுவ உயர் அதிகாரியாக நடிக்கும் இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். நிக்கேத் பொம்மிரெட்டி ஒளிப்பதிவு செய்கிறார். சதிஷ் சூர்யா படத்தொகுப்பையும், ஜாக்கி கலை பணிகளையும் கவனிக்கின்றனர்.

    2டி என்டர்டெயின்மெண்ட் மற்றும் சீக்யா என்டர்டெயின்மெண்ட் இணைந்து இந்த படத்தை தயாரிக்கிறது. #SooraraiPottru #Suriya38
     #SudhaKongara

    சுதா கொங்காரா இயக்கத்தில் சூர்யா - அபர்ணா பாலமுரளி நடிப்பில் உருவாகும் சூர்யாவின் 38-வது படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க மோகன்பாபு ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. #Suriya38
    செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள `என்ஜிகே' படம் மே 31-ந் தேதி ரிலீசாக இருக்கிறது. கே.வி.ஆனந்த் இயக்கும் காப்பான் படத்தின் படப்பிடிப்பும் இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது. ஒரே ஒரு பாடல் மட்டும் படமாக்கப்பட வேண்டி இருப்பதாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில், சூர்யாவின் 38-வது படத்தின் பூஜை நேற்று நடந்தது. படப்பிடிப்பு இன்று துவங்குகிறது. சுதா கொங்காரா இயக்கும் இந்த படத்தில் நாயகியாக அபர்ணா பாலமுரளி நடிக்கிறார்.



    இந்த நிலையில், தெலுங்கு நடிகர் மோகன் பாபு ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

    2டி என்டர்டெயின்மெண்ட் மற்றும் சீக்யா என்டர்டெயின்மெண்ட் இணைந்து தயாரிக்கும் இந்த படத்தில் சூர்யா ராணுவ உயர் அதிகாரியாக நடிக்கிறார். இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். நிக்கேத் பொம்மிரெட்டி ஒளிப்பதிவு செய்கிறார். #Suriya38 #SudhaKongara #MohanBabu

    சூர்யா தயாரிப்பில் உருவாகி இருக்கும் உறியடி 2 படத்தை இயக்கி நடித்திருக்கும் விஜய்குமார், சூர்யா - சுதா கொங்காரா இணையும் புதிய படத்திற்கு வசனம் எழுதவிருக்கிறார். #Suriya38 #SudhaKongara #VijayKumar
    அறிமுக இயக்குனர் விஜய் குமார் இயக்கி, நடித்து வெளியான ‘உறியடி’ படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. நடிகர் சூர்யா ‘உறியடி’ இரண்டாம் பாகத்தை தன்னுடைய 2டி என்டெர்டெயின்மென்ட்ஸ் சார்பில் தயாரித்துள்ளார்.

    இந்த படத்தின் டீசர் வெளியிட்டு விழா நேற்று நடைபெற்றது. சூர்யா பேசும்போது ‘படக்குழுவினர் இந்த படம் உங்களுக்கு ஒரு பொழுதுபோக்கு படமாக இருக்காது. உங்களை பாதிக்கும் ஒரு படமாக இருக்கும் என்று தெளிவாக சொன்னார்கள். அது எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. இயக்குனர் விஜயகுமாரை முதன்முறை சந்தித்தபோதே அவரது உண்மைத்தன்மை என்னை ஆச்சர்யப்படுத்தியது.



    என் அப்பா படப்பிடிப்பு தளத்துக்கு வந்ததில்லை. எனக்காக யாரிடமும் வாய்ப்பு கேட்டதும் கிடையாது. ஒரு இயக்குநரைக்கூட சந்தித்தது கிடையாது. கதை கேட்டது கிடையாது. தயாரிப்பாளரை சந்தித்தது கிடையாது. இருந்தாலும், ‘நடிகரின் மகன்’ என்ற அடையாளம் எனக்கு இருக்கிறது. ஆனால், எந்த ஒரு அடையாளமும் இல்லாமல் ‘உறியடி’ என்ற படத்தை எடுத்து விஜய் குமார் அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். அதை நான் பாராட்டுகிறேன்.

    சூர்யா அடுத்து சுதா கொங்கரா இயக்கத்தில் நடிக்கும் படத்துக்கு விஜய்குமார் தான் வசனம் எழுதுகிறார். #Suriya38 #SudhaKongara #VijayKumar

    ‘என்.ஜி.கே.’, ‘காப்பான்’ படங்களை தொடர்ந்து சுதா கொங்காரா இயக்கத்தில் சூர்யா, ராணுவ அதிகாரியாக நடிப்பதாகவும், படப்பிடிப்பு ஏப்ரலில் துவங்கவிருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. #Suriya38 #SudhaKongara
    செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள `என்ஜிகே' படம் விரைவில் ரிலீசாக இருக்கிறது. சூர்யா தற்போது கே.வி.ஆனந்த் இயக்கத்தில் காப்பான் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கும் நிலையில், சூர்யா அடுத்ததாக ‘இறுதிச்சுற்று’ படத்தை இயக்கிய சுதா கொங்காரா இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். 

    2டி எண்டர்டய்ன்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் சூர்யா ராணுவ உயர் அதிகாரியாக நடிக்கிறார். பிரபல தொழில் அதிபரும், முன்னாள் ராணுவ அதிகாரியுமான ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கை வரலாற்று கதை, இது. படப்பிடிப்பு ஏப்ரலில் துவங்க இருக்கிறது.



    சாதாரண மனிதர்களும் விமானப் போக்குவரத்தை பயன்படுத்தும் நோக்கில் பட்ஜெட் விமானச் சேவையை அறிமுகப்படுத்தியவர் ‘ஏர் டெக்கான்’ நிறுவனர் ஜி.ஆர்.கோபிநாத் என்பது குறிப்பிடத்தக்கது.

    இன்னும் தலைப்பு வைக்கப்படாத இந்த படம் சூர்யாவின் 38-வது படமாக உருவாகிறது. இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். விவேக் பாடல்களை எழுதுகிறார். #Suriya38
     #SudhaKongara #GRGopinath

    ×