என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "யாஷ்"

    • தொடர் சிகிச்சையில் இருந்து வந்த ஹரிஷ் ராய் நேற்று காலமானார்.
    • அவரது மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    'கே.ஜி.எப்.' மற்றும் உபேந்திரா இயக்கத்தில் சிவராஜ் குமார் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற 'ஓம்' படங்களில் நடித்து பிரபலமானவர் ஹரிஷ் ராய். இவருக்கு அடிக்கடி மூச்சுத்திணறல் ஏற்பட்டு வந்த நிலையில், அவரை பரிசோதித்த மருத்துவர்கள் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

    பெங்களூருவில் உள்ள அரசு புற்றுநோய் மருத்துவமனையில் ஹரிஷ் ராய்க்கு நுரையீரலில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த நிலையில் தொடர் சிகிச்சையில் இருந்து வந்த ஹரிஷ் ராய் நேற்று காலமானார். அவரது மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    இதனிடையே, நடிகர் யாஷ் மறைந்த ஹரிஷ் ராய் உடலுக்கு நேரில் சென்று இறுதி அஞ்சலி செலுத்தினார். மேலும் அவரது குடும்பத்தினருக்கும் ஆறுதல் கூறினார்.

    கன்னட சினிமாவில் மூத்த நடிகராக இருந்த ஹரிஷ் ராய் தமிழ் மற்றும் தெலுங்கு படங்களிலும் நடித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

    • காசிம் பாய் கதாபாத்திரத்தில் ஹரீஸ் ராய் தோன்றினார்.
    • 1995 இல் வெளியாகி சூப்பர் ஹிட் ஆன சிவராஜ் குமாரின் 'ஓம்' படத்தில் டான் ராய் என்ற கதாபாத்திரம் மூலம் கவனம் பெற்றார்.

    பிரசாந்த் நீல் இயக்கத்தில் யாஷ் நடிப்பில் கடந்த 2018 இல் வெளியான படம் கேஜிஎஃப். இந்திய அளவில் மிகப்பெறிய வெற்றியை இப்படத்தின் 2ஆம் பாகம் 2022 இல் வெளியானது. இந்த 2 படத்திலும் காசிம் பாய் கதாபாத்திரத்தில் தோன்றி கவனம் பெற்றவர் ஹரீஸ் ராய்.

    கேஜிஎஃப் மூலம் பரிட்சயமானவராக இருந்தாலும் கன்னட சினிமாவில் பல படங்களில் தோன்றியிருக்கிறார்.

    குறிப்பாக 1995 இல் வெளியாகி சூப்பர் ஹிட் ஆன சிவராஜ் குமாரின் 'ஓம்' படத்தில் டான் ராய் என்ற கதாபாத்திரம் மூலம் கவனம் பெற்றார். கடந்த மூன்று ஆண்டுகளாக புற்றுநோயுடன் ஹரீஸ் ராய் போராடி வந்தார்.

    இந்நிலையில் தைராய்டு புற்றுநோய் வயிறு வரை பரவியதால் அவர் பெங்களூருவில் உள்ள கித்வாய் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று (நவம்பர் 6) அவர் சிகிச்சை பலனின்றி காலமானார். அவருக்கு வயது 55.

     முன்னதாக ஒரு நேர்காணலில் தனது நோய் குறித்து பேசியிருந்த ஹரிஷ் ராய், கேஜிஎஃப் படத்தில் தாடியுடன் தோன்றியதற்கான காரணத்தை விளக்கினார்.

    "புற்றுநோய் என் தொண்டையில் வீக்கத்தை ஏற்படுத்தியது. அந்த வீக்கத்தை மறைக்க நான் தாடியை வளர்த்தேன். "யாரும் விதியிலிருந்து தப்பிக்க முடியாது" என்று அவர் தெரிவித்திருந்தார். 

    சில ஆண்டுகளுக்கு முன்பு  தனது சிகிச்சை செலவுகள் குறித்து அவர் கூறுகையில், 'ஒரு ஊசியின் விலை 3.55 லட்சம் ரூபாய், மருத்துவர்கள் 63 நாட்களில் 3 ஊசிகள் போட வேண்டும் என அறிவுறுத்தி உள்ளனர், அதன் விலை சுமார் 10.5 லட்சம் ரூபாய்' என்று கூறி நிதி உதவி கோரியிருந்தார்.

    இந்நிலையில் அவரின் மறைவு கன்னட திரையுலகிலும் ரசிகர்கள் மத்தியிலும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.  

    • நடிகர் யாஷ் "டாக்ஸிக்" என்ற படத்தில் நடித்து வருகிறார்.
    • இப்படத்தை இயக்குனர் கீதா மோகன்தாஸ் இயக்குகிறார்.

    கன்னட சினிமாவின் முன்னணி நடிகர் யாஷ். ராக்கி என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். அதைத் தொடர்ந்து இவர் பல்வேறு படங்களில் நடித்தார். இவர் நடிப்பில் வெளியான கே.ஜி.எஃப். திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்தப் படத்தில் நடித்து இந்திய சினிமாவை திரும்பி பார்க்க வைத்தார் யாஷ்.

    இதைத் தொடர்ந்து நடிகர் யாஷ் "டாக்ஸிக்" என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை இயக்குனர் கீதா மோகன்தாஸ் இயக்குகிறார். இப்படம் டிரக் மாஃபியா உலகில் நடக்கும் கேங்ஸ்டர் டிராமாவாக இருக்கும் என படக்குழு தெரிவித்து இருந்தது.

    இப்படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான கே.வி.என் ப்ரோடக்ஷன்ஸ் தயாரிக்கிறது. இத்திரைப்படம் அடுத்தாண்டு மார்ச் மாதம் 19-ந்தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது.

    இந்நிலையில், டாக்ஸிக் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போவதாக இணையத்தில் தகவல் பரவின. ஆனால் திட்டமிட்டபடி டாக்ஸிக் படம் மார்ச் மாதம் 19-ந்தேதி வெளியாகும் என்று படக்குழு உறுதிப்படுத்தியுள்ளது.

    • இப்படத்தை இயக்குனர் கீதா மோகன்தாஸ் இயக்குகிறார்.
    • இத்திரைப்படம் அடுத்தாண்டு மார்ச் மாதம் 19-ந்தேதி வெளியாக இருக்கிறது.

    கன்னட சினிமாவின் முன்னணி நடிகர் யாஷ். ராக்கி என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். அதைத் தொடர்ந்து இவர் பல்வேறு படங்களில் நடித்தார். இவர் நடிப்பில் வெளியான கே.ஜி.எஃப். திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்தப் படத்தில் நடித்து இந்திய சினிமாவை திரும்பி பார்க்க வைத்தார் யாஷ்.

    இதைத் தொடர்ந்து நடிகர் யாஷ் "டாக்ஸிக்" என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை இயக்குனர் கீதா மோகன்தாஸ் இயக்குகிறார். இப்படம் டிரக் மாஃபியா உலகில் நடக்கும் கேங்ஸ்டர் டிராமாவாக இருக்கும் என படக்குழு தெரிவித்து இருந்தது.

    இப்படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான கே.வி.என் ப்ரோடக்ஷன்ஸ் தயாரிக்கிறது. இத்திரைப்படம் அடுத்தாண்டு மார்ச் மாதம் 19-ந்தேதி வெளியாக இருக்கிறது.

    இந்நிலையில், "டாக்ஸிக்" திரைப்படத்தில் யாஷ் நடித்த ஒரு காட்சி தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

    வீடியோவில், மேல் சட்டை இல்லாமல் பால்கனியில் நின்று யாஷ் புகைப்பிடிப்பது போன்று வீடியோ எடுக்கப்பட்டுள்ளது. இந்த வீடியோ ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர். இப்படம் தொடர்பான எந்தவித காட்சிகளும் இணையதளத்தில் வெளியாகாமல் இருந்த நிலையில், தற்போது வெளியாகி உள்ள வீடியோ காட்சி படக்குழுவினரை கவலையடையச் செய்துள்ளது. 

    • ‘பாடிகார்டு'க்கு வழங்கும் மாத சம்பளம் குறித்த தகவல்கள் வெளியாகி ரசிகர்களை வாயடைக்க செய்துள்ளது.
    • ‘பாடிகார்டு’க்கு மட்டுமே அதிக சம்பளம் வழங்கும் நடிகராக மாறி போயிருக்கிறார், யாஷ்.

    'கே.ஜி.எப்.' படத்துக்கு பிறகு, இந்திய அளவில் பேசப்படும் நடிகராக மாறிவிட்டார் யாஷ். யாஷ் தற்போது கீது மோகன்தாஸ் இயக்கத்தில் 'டாக்சிக்' படத்திலும், நிதேஷ் திவாரி இயக்கத்தில் 'ராமாயணா' படத்திலும் (ராவணன் கதாபாத்திரத்தில்) நடித்து வருகிறார்.

    இதற்கிடையில் யாஷ் தனது 'பாடிகார்டு'க்கு வழங்கும் மாத சம்பளம் குறித்த தகவல்கள் வெளியாகி ரசிகர்களை வாயடைக்க செய்துள்ளது.

    யாஷ் 'பாடிகார்டு' ஆன சீனிவாஸ் என்பவருக்கு மாத சம்பளமாக ரூ.10 லட்சத்து 40 ஆயிரம் வழங்கப்படுகிறதாம். இதனால் கார், மோட்டார் சைக்கிள் என பந்தா ஆசாமியாக அவர் வலம் வருகிறார்.

    அந்தவகையில் 'பாடிகார்டு'க்கு மட்டுமே அதிக சம்பளம் வழங்கும் நடிகராக மாறி போயிருக்கிறார், யாஷ். சமூகம் பெரிய இடம் தான் போல...

    • நிதிஷ் திவாரி இயக்கத்தில் ராமாயணா திரைப்படம் மிகப்பெரிய பொருட் செலவில் உருவாகி வருகிறது.
    • படத்தின் டைட்டில் டீசரை படக்குழு சமீபத்தில் வெளியிட்டது.

    இந்திய சினிமாவில் வருடம் வருடம் ராமாயணம் கதையை மையமாக வைத்து திரைப்படங்கள் வெளிவந்து கொண்டு இருக்கிறது. அந்த வரிசையில் அடுத்ததாக நிதிஷ் திவாரி இயக்கத்தில் ராமாயணா திரைப்படம் மிகப்பெரிய பொருட் செலவில் உருவாகி வருகிறது.

    இப்படத்தில் ராம் கதாப்பாத்திரத்தில் ரன்பிர் கபூர், சீதா கதாப்பாத்திரத்தில் சாய் பல்லவி மற்றும் ராவணன் கதாப்பாத்திரத்தில் யாஷ் நடிக்கின்றனர்.

    படத்தின் டைட்டில் டீசரை படக்குழு சமீபத்தில் வெளியிட்டது. திரைப்படம் இரண்டு பாகங்களாக வெளியாக இருக்கிறது. முதல் பாகம் 2026 ஆம் ஆண்டு தீபாவளிக்கும் அதற்கு அடுத்த பாகம் 2027 ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளியாக இருக்கிறது.

    இந்நிலையில் இந்தியாவில் அதிக பொருட் செலவில் உருவாக்கப்படும் திரைப்படம் என்ற சாதனையை படைத்துள்ளது. இரண்டு பாகமும் சேர்ந்து சுமார் 4000 கோடி ரூபாயில் தயாராகி வருகிறது.

    இந்த பட்ஜெட் பிரபல ஹாலிவுட் திரைப்படமான ட்யூன் 1 மற்றும் 2 பாகம் தயாரித்த செலவைவிட அதிகமாகும் என படத்தின் தயாரிப்பாளர் கூறியுள்ளார்.

    திரைப்படம் ஐமேக்ஸ் திரையில் வெளியிட இருக்கின்றனர். படத்தின் VFX காட்சிகளை 8 முறை ஆஸ்கர் விருது வென்ற DNEG நிறுவனம் மேற்கொள்கிறது. இசையை ஏ.ஆர் ரஹ்மான் மற்றும் ஹாலிவுட் பிரபல இசையமைப்பாளர் ஹான்ஸ் ஜிம்மர் மேற்கொள்கின்றனர்.

    • கன்னட சினிமாவின் முன்னணி நடிகர் யாஷ்.
    • நடிகர் யாஷ் "டாக்ஸிக்" என்ற படத்தில் நடித்து வருகிறார்.

    கன்னட சினிமாவின் முன்னணி நடிகர் யாஷ். ராக்கி என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். அதைத் தொடர்ந்து இவர் பல்வேறு படங்களில் நடித்தார். இவர் நடிப்பில் வெளியான கே.ஜி.எஃப். திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்தப் படத்தில் நடித்து இந்திய சினிமாவை திரும்பி பார்க்க வைத்தார் யாஷ்.

    இதைத் தொடர்ந்து நடிகர் யாஷ் "டாக்ஸிக்" என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை இயக்குனர் கீதா மோகன்தாஸ் இயக்குகிறார். இப்படம் டிரக் மாஃபியா உலகில் நடக்கும் கேங்ஸ்டர் டிராமாவாக இருக்கும் என படக்குழு தெரிவித்துள்ளனர்.

    இப்படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான கே.வி.என் ப்ரோடக்ஷன்ஸ் தயாரிக்கிறது திரைப்படம் அடுத்தாண்டு மார்ச் மாதம் 19 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்நிலையில் படத்தின் இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது உண்மையானால் அனிருத் இப்படத்தின் மூலம் கன்னட திரையுலகில் காலடி பதிப்பார்.

    • இப்படத்தை இயக்குனர் கீதா மோகன்தாஸ் இயக்குகிறார்.
    • டிரக் மாஃபியா உலகில் நடக்கும் கேங்ஸ்டர் டிராமாவாக இருக்கும் என படக்குழு தெரிவித்துள்ளனர்.

    கன்னட சினிமாவின் முன்னணி நடிகர் யாஷ். ராக்கி என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். அதைத் தொடர்ந்து இவர் பல்வேறு படங்களில் நடித்தார். இவர் நடிப்பில் வெளியான கே.ஜி.எஃப். திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்தப் படத்தில் நடித்து இந்திய சினிமாவை திரும்பி பார்க்க வைத்தார் யாஷ்.

    இதைத் தொடர்ந்து கே.ஜி.எஃப். சாப்டர் 2 படமும் வசூலில் பட்டையை கிளப்பியது. இதைத் தொடர்ந்து நடிகர் யாஷ் "டாக்ஸிக்" என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை இயக்குனர் கீதா மோகன்தாஸ் இயக்குகிறார். இப்படம் டிரக் மாஃபியா உலகில் நடக்கும் கேங்ஸ்டர் டிராமாவாக இருக்கும் என படக்குழு தெரிவித்துள்ளனர்.

    இந்தப் படத்தின் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன் தொடங்கப்பட்டது. இப்படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான கே.வி.என் ப்ரோடக்ஷன்ஸ் தயாரிக்கிறது. இந்நிலையில் படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. திரைப்படம் அடுத்தாண்டு மார்ச் மாதம் 19 ஆம் தேதி வெளியாகும் என போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது. போஸ்டரின் யாஷ் கையில் gun உடன் நடந்து வருகிறார். அவரை சுற்றி தீ எரிந்துக் கொண்டு இருப்பது போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளது. இப்படம் பான் இந்தியன் திரைப்படமாக வெளியாக இருக்கிறது. படத்தின் கதாநாயகியாக நயன் தாரா நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது.


    • யாஷ் அடுத்ததாக கீது மோஹன் தாஸ் இயக்கத்தில் டாக்சிக் படத்தில் நடித்து வருகிறார்.
    • யாஷ், சாய் பல்லவி, நவாசுதின் சித்திக், சம்யுக்தா மேனன், ஷைன் டாம் சாக்கோ போன்ற பல முன்னணி நடிகர்கள் நடிக்கவுள்ளனர்.

    பிரஷாந்த் நீல் இயக்கத்தில் யாஷ் நடித்து 2018 ஆம் ஆண்டு கே. ஜி. எஃப் சாப்டர் 1 படம் வெளியானது. பான் இந்தியன் படமாக இப்படம் அமைந்தது . கன்னட சினிமாவை அடுத்த கட்டத்திற்கு இப்படம் நகர்த்தி சென்றது. உலகமே திரும்பி பார்க்கும் வகையில் மிக பிரமாண்டமாக எடுக்கப்பட்டது கே.ஜி.எஃப் திரைப்படம். கன்னடா திரைத்துறையில் அதிகம் வசூலித்த படம் இதுவே.

    யாஷ் இப்படத்திற்கு சிறந்த நடிகருக்கான விருதைப் பெற்றார். இதற்கடுத்து கே ஜி எஃப் பகுதி 2 வெளியானது அப்படமும் மிகப்பெரிய வெற்றிப் பெற்றது.

    யாஷ் அடுத்ததாக கீது மோஹன் தாஸ் இயக்கத்தில் டாக்சிக் படத்தில் நடித்து வருகிறார். நிவின் பாலி நடித்து 2019 வெளியான 'மூத்தோன்' படத்தின் இயக்குனர் என்பது குறிப்பிடத்தக்கது. வெங்கட் நாரயணன் மற்றும் யாஷ் இணைந்து கே வி என் மற்றும் மான்ஸ்டர் மைண்ட் கிரியேஷன்ஸ் கீழ் தயாரிக்கவுள்ளனர்.

    யாஷ், சாய் பல்லவி, நவாசுதின் சித்திக், சம்யுக்தா மேனன், ஷைன் டாம் சாக்கோ போன்ற பல முன்னணி நடிகர்கள் நடிக்கவுள்ளனர்.

    இந்நிலையில் கரீனா கப்பூர் நேற்று நடந்த நேர்காணலில் அவர் ஒரு மிக பெரிய சவுத் இந்தியன் படத்தில் நடிக்கவுள்ளார் அப்படம் பான் இந்தியன் படமாக இருக்கப்போகிறது என கூறியுள்ளார்.  கரீனா கபூர்  டாக்சிக் படத்தில் நடிக்க வாய்ப்பு அதிகம் இருக்கிறது என ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்க்கபடுகிறது. ஏப்ரல் 2025 ஆம் ஆண்டு டாக்சிக் படம் வெளியிடப்படும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்

    • அமீர் கான் நடிப்பில் 2016 ஆம் ஆண்டு வெளிவந்த 'தங்கல்' படத்தை இயக்கினார் இயக்குனர் நிதேஷ் திவாரி.
    • இத்திரைப்படத்தை மூன்று பாகங்களாக எடுக்க திட்டமிட்டுள்ளனர்.

    அமீர் கான் நடிப்பில் 2016 ஆம் ஆண்டு வெளிவந்த 'தங்கல்' படத்தை இயக்கினார் இயக்குனர் நிதேஷ் திவாரி. இத்திரைப்படம் வசூலில் சாதனை படைத்துக் காட்டியது. இதுவரை 2000 கோடி ரூபாய் வசூலித்திருப்பது குறிப்பிடத்தக்கது. இதை தொடர்ந்து சுஷாந்த் சிங் நடிப்பில் வெளிவந்த 'சிச்சோரே' திரைப்படத்தை இயக்கினார்.

    தற்பொழுது 'ராமாயணா' திரைப்படத்தை இயக்கவுள்ளார். மிக பிரமாண்டமாக இத்திரைப்படம் உருவாகவுள்ளது. 2022 ஆம் ஆண்டு வெளியான பிரம்மாஸ்திரா படத்தை இயக்கிய நமித் மல்ஹோத்ரா இப்படத்தை தயாரிக்கவுள்ளார். இவருடன் இணைந்து பான் இந்தியன் நடிகரான யாஷ் இப்படத்தை தயாரிக்கிறார்.

    இத்திரைப்ப்டத்தில் சீதை கதாப்பாத்திரத்தில் சாய் பல்லவி நடிக்கிறார், ராம் கதாப்பாத்திரத்தில் ரன்பிர் கப்பூர் நடிக்கிறார், அனுமான் கதாப்பாத்திரத்தில் பாபி டியோல் நடிக்கிறார், ராவணன் கதாப்பாத்திரத்தில் யாஷ் நடிக்கவிருக்கிறார்.

    இத்திரைப்படத்தை மூன்று பாகங்களாக எடுக்க திட்டமிட்டுள்ளனர். சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய யாஷ், ராமாயணம் திரைப்படம் நேர்மையான மற்றும் விசுவாசமான சித்தரிப்பாக இருக்கும் என கூறியுள்ளார். இப்படத்திற்கு ஏ.ஆர் ரகுமான் மற்றும் ஹான்ஸ் சிம்மர் இணைந்து இசையமைக்கவுள்ளனர். இத்திரைப்படம் 2025 ஆம் ஆண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • 2014 ஆம் ஆண்டு வெளியான கன்னட படமான உக்ரம் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகினார் பிரசாந்த் நீல்.
    • சலார் பாகம் ஒன்றை இயக்கி தெலுங்கு சினிமாவில் அறிமுகமாகினார்

    2014 ஆம் ஆண்டு வெளியான கன்னட படமான உக்ரம் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகினார் பிரசாந்த் நீல். அதைத் தொடர்ந்து 2018 ஆம் ஆண்டு யாஷ் நடிப்பில் வெளியான கே.ஜி.எஃப் படத்தை இயக்கினார்.

    இப்படத்தின் மூலம் உலகத்தையே கன்னட சினிமாவை திரும்பி பார்க்க வைத்தார். கே.ஜி.எஃப் பாகம் 1 மக்களிடையே மிகப் பெரிய வரவேற்பை பெற்றது. அதன் வெற்றியைத் தொடர்ந்து 2022 ஆம் ஆண்டு கே.ஜி.எஃப் பாகம் இரண்டை இயக்கினார்.

    கே.ஜி..எஃப் 2 ஒரு பான் இந்திய படமாக அமைந்தது. கே.ஜி.எஃப் திரைப்படம் கன்னட சினிமாவின் அதீக வசூலித்த படங்கள் பட்டியலில் 4-ஆம் இடத்தை பெற்றுள்ளது. 1500 கோடி ரூபாய் வசூலித்தது குறிப்பிடத்தக்கது.

    அடுத்ததாக சலார் பாகம் ஒன்றை இயக்கி தெலுங்கு சினிமாவில்  அறிமுகமாகினார். சலார் வெற்றியைத் தொடர்ந்து சலார் பாகம் இரண்டை நடிகர் பிரபாஸ் வைத்து இயக்கவுள்ளார். படத்தின் படப்பிடிப்பு வேலைகள் ஜூலை மாதம் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப் படுகிறது.

    ஜூனியர் என்.டி.ஆரின் 31 படத்தை இயக்கவுள்ளார் அற்கடுத்து கே.ஜி.எஃப் இன் மூன்றாம் பாகத்தை இயக்கவுள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.


    • சாய் பல்லவியும் ரன்பீர் கப்பூரும் இணைந்து நடிப்பது இதுவே முதல்முறை.
    • ரன்பீர் கப்பூர் அயோத்யாவின் ராஜகுமாரனைப் போல் ஆடையணிந்து மிடுக்குடன் காணப்படுகிறார்.

    நிதேஷ் திவாரி அடுத்ததாக ராமாயணா திரைப்படத்தை மிக பிரமாண்டமான பொருட் செலவில் இயக்கி வருகிறார். இதற்கு முன் அவர் இயக்கிய சிச்சோரே, தங்கல் ஆகிய திரைப்படங்கள் மிகப்பெரிய வெற்றியடைந்தது.

    முன்னதாக சாய் பல்லவி சீதா கதாப்பாத்திரத்திலும், ரன்பீர் கப்பூர் ராமன் கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியது. அதைத் தொடர்ந்து இப்பொழுது படப்பிடிப்பு தளத்தில் இருந்து சாய் பல்லவி மற்றும் ரன்பீர் கப்பூரின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

    அதில் ரன்பீர் கப்பூர் அயோத்யாவின் ராஜகுமாரனைப் போல் ஆடையணிந்து மிடுக்குடன் காணப்படுகிறார். சாய் பல்லவி இராஜகுமாரியை போல் உடையணிந்து இருக்கிறார். சாய் பல்லவியும் ரன்பீர் கப்பூரும் இணைந்து நடிப்பது இதுவே முதல்முறை.

    இதற்கு முன் ரன்பீர் கப்பூர் நடித்து வெளியான அனிமல் படத்தின் கதாப்பாத்திரத்திற்கு முற்றிலும் மாறுபட்டதாக இருக்கிறது என்று நெட்டிசன்கள் கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர்.

    இந்த படத்தில் ரன்பீர் கபூருக்கு ஜோடியாக சீதாதேவி கதாபாத்திரத்தில் நடிகை சாய் பல்லவி நடித்து வருகிறார். அவரது லுக்கை பார்த்த ரசிகர்கள் இவரைப் பார்த்தால் சீதாம்மா போல இல்லை என்றும் சூர்ப்பனகை போல உள்ளார் என்றும் கலாய்த்து வருகின்றனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    ×