என் மலர்

    நீங்கள் தேடியது "Vignesh Shivan"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • நடிகை நயன்தாராவிற்கு இரட்டை குழந்தைகள் உள்ளன.
    • இவர் சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் தனது அதிகாரப்பூர்வ கணக்கை தொடங்கினார்.

    தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையான நயன்தாரா, அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் வெளியாகியுள்ள 'ஜவான்' திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்பம் வெற்றி பெறுவதற்காக நயன்தாரா, ஷாருக்கான் மற்றும் அவர்களது குடும்பத்தினர் திருப்பதிக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர்.


    இவ்வளவு நாட்கள் சமூக வலைதளத்தில் நாட்டம் கொள்ளாத நயன்தாரா சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் தனது அதிகாரப்பூர்வ கணக்கை தொடங்கினார். இதில் முதல் பதிவாக தனது குழந்தைகளுடன் இருக்கும் வீடியோவை பகிர்ந்திருந்தார். இந்த வீடியோவை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் வைரலாக்கினர். இதையடுத்து தன் குழந்தைகளுடன் கொண்டாடும் பண்டிகைகளின் புகைப்படங்களை தொடர்ந்து பதிவிட்டு வருகிறார்.


    இந்நிலையில், தற்போது கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு தனது மகன்கள் உயிர் மற்றும் உலக்கிற்கு பட்டு வேட்டி அணிவித்து குட்டி கிருஷ்ணர்களாக அலங்கரித்து அவர்கள் பூஜை அறைக்கு தவழ்ந்து செல்லும் புகைப்படத்தை இணையத்தில் பதிவிட்டு அனைவருக்கும் கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்த பதிவிற்கு ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர்.


    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • நடிகை நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டார்.
    • இவர்களுக்கு உயிர் ருத்ரோ நீல் - உலக் தெய்வக் என்ற இரட்டை ஆண் குழந்தைகள் உள்ளன.

    தமிழ் திரையுலகின் பிரபல நடிகையான நயன்தாரா, ரஜினி, விஜய், சூர்யா என பல நடிகர்களுடன் நடித்து முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இவர் தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம், இந்தி என பல மொழி திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். இவர் நடிப்பில் உருவாகியுள்ள 'ஜவான்' திரைப்படம் செப்டம்பர் 7-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.


    நயன்தாரா- விக்னேஷ் சிவன் கடந்த ஜூன் மாதம் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு வாடகைத் தாய் மூலம் இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்தன. தொடர்ந்து குழந்தைகளை கவனித்து வரும் நயன்தாரா சமூக வலைதளத்தில் நாட்டம் இல்லாமல் இருந்தார். இவர்களின் மகிழ்ச்சிகரமான தருணங்களை இயக்குனர் விக்னேஷ் சிவன் மட்டுமே தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்து வந்தார்.


    நயன்தாரா பதிவு

    இந்நிலையில், நயன்தாரா தற்போது அதிகாரப்பூர்வமான இன்ஸ்டாகிராம் கணக்கை தொடங்கியுள்ளார். இதில் முதல் பதிவாக தனது குழந்தைகள் உயிர் ருத்ரோ நீல் - உலக் தெய்வக் ஆகியோருடன் இருக்கும் வீடியோவை பதிவிட்டுள்ளார். இந்த வீடியோவை சமூக வலைதளத்தில் ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.


    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • இரட்டைக் குழந்தைகளுடன் ஓணம் பண்டிகையை கொண்டாடும் க்யூட்டான புகைப்படங்களை விக்னேஷ் சிவன் தன் சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
    • நயன் - விக்னேஷ் தம்பதி, தொடர்ந்து குழந்தைகளின் புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

    கடந்த ஆண்டு ஜூன் மாதம் திருமணம் செய்து கொண்ட நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதி, அக்டோபர் மாதம் வாடகைத் தாய் மூலம் இரட்டைக் குழந்தைகளுக்கு பெற்றோர் ஆனர்.

    உயிர் ருத்ரோ நீல் - உலக் தெய்வக் என தங்கள் குழந்தைகளுக்குப் பெயரிட்டுள்ள நயன் - விக்னேஷ் தம்பதி, தொடர்ந்து குழந்தைகளின் புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர்.


     இந்நிலையில், இன்று தங்கள் இரட்டைக் குழந்தைகளுடன் ஓணம் பண்டிகையை கொண்டாடும் க்யூட்டான புகைப்படங்களை விக்னேஷ் சிவன் தன் சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

    தற்போது இந்த புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'ஜெயிலர்'.
    • இப்படம் வருகிற 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் ரஜினி தற்போது 'ஜெயிலர்' திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார் மற்றும் பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.


    'ஜெயிலர்' திரைப்படம் வருகிற 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் இப்படத்தின் அதிரடி ஆக்ஷன் காட்சிகள் நிறைந்த ஷோகேஸ் வீடியோ சமீபத்தில் வெளியாகி கவனம் ஈர்த்தது. இதையடுத்து இப்படத்தின் 'ரத்தமாரே' பாடல் நேற்று வெளியாகி சமூக வலைதளத்தில் 1.5 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது.


    இந்நிலையில், 'ரத்தமாரே' பாடலை எழுதிய இயக்குனர் விக்னேஷ் சிவன் இப்பாடல் குறித்து நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், "தலைவர் சூப்பர் ஸ்டார் ரஜினிக்காக முதல் பாடலை எழுதியுள்ளேன். இதுவே என் குழந்தைகள் உயிர் மற்றும் உலகுக்கான முதல் பாடலாகவும் அமைந்துள்ளது. இது போன்ற தருணங்களுக்காக தான் வாழ்கிறோம். இயக்குனர் நெல்சன் மற்றும் அனிருத்திற்கு நன்றி " என்று குறிப்பிட்டுள்ளார்.


    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • நயன்தாரா- விக்னேஷ் சிவன் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
    • இவர்களுக்கு வாடகைத் தாய் மூலம் இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்தது.

    தென்னிந்திய திரைத்துறையில் தனக்கென்று தனி முத்திரை பதித்தவர் நடிகை நயன்தாரா. தன் நடிப்பு திறமையால் படிப்படியாக முன்னேறி ரசிகர்களின் மனதில் நீங்க இடத்தை பிடித்தவர். விக்கேனஷ் சிவன் இயக்கிய 'நானும் ரவுடி தான்' படத்தில் நடித்தபோது இருவருக்கும் காதல் மலர்ந்தது.


    அதன்பின்னர், நீண்ட ஆண்டுகளாக காதலித்து வந்த இயக்குனர் விக்னேஷ் சிவன் - நயன்தாரா இருவீட்டாரின் சம்மதத்துடன் கடந்த ஆண்டு ஜூன் 9-ம் தேதி திருமணம் செய்துக் கொண்டனர். திருமணம் முடிந்த சில மாதங்களில் இரட்டை குழந்தை பிறந்ததாக சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தினர். இந்த விஷயம் சர்ச்சையாகி பூதாகரமாக வெடித்தது. பிறகு, சட்ட விதிப்படி வாடகைத் தாய் மூலம் தாங்கள் இரட்டை ஆண் குழந்தைகளுக்கு பெற்றோராகி இருப்பதாக தெரிவித்து சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தனர்.


    இந்நிலையில், நடிகை நயன்தாரா தங்கள் இரட்டை குழந்தைகளில் ஒரு குழந்தையை தூக்கிக் கொஞ்சும் புகைப்படத்தை விக்னேஷ் சிவன் தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டு "என் உயிர்கள்... என் அன்பானவர்களுடன் ஞாயிறு சிறப்பாக போனது. எளிமையான தருணங்கள்" என மகிழ்ச்சியாக குறிப்பிட்டுள்ளார்.


    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனராக இருப்பவர் விக்னேஷ் சிவன்.
    • இவர் தற்போது புதிய படம் இயக்கும் பணிகளில் மும்முரம் காட்டி வருகிறார்.

    2012-ம் ஆண்டு சிம்பு நடிப்பில் வெளியான 'போடா போடி' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் விக்னேஷ் சிவன். அதன்பின்னர் விஜய் சேதுபதி மற்றும் நயன்தாரா நடிப்பில் வெளியான 'நானும் ரவுடி தான்' படத்தை இயக்கி தனக்கான ரசிகர்களை பிடித்தார். இதனை தொடர்ந்து தானா சேர்ந்த கூட்டம், காத்துவாக்குல ரெண்டு காதல் படங்களை இயக்கி முன்னணி இயக்குனராக உயர்ந்தார். இவர் தற்போது புதிய படம் இயக்கும் பணியில் தீவிரம் காட்டி வருகிறார்.


    விக்னேஷ் சிவன் பதிவு

    இந்நிலையில், நடிகர் விக்னேஷ் சிவன் கிரிகெட் வீரர் டோனியுடன் இருக்கும் வீடியோவை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் டோனி, விக்னேஷ் சிவன் டீ- சர்ட்டில் கையொப்பமிடுகிறார். இதனால் மகிழ்ச்சியடைந்த விக்னேஷ் சிவன், டோனியின் கைகளை பிடித்து முத்தமிடுகிறார். இந்த வீடியோவிற்கு ரசிகர்கள் லைக்குகளை குவித்து வைரலாக்கி வருகின்றனர். மேலும், பாட்ஷா ஸ்டைலில் டோனிக்கு முத்தம் கொடுப்பதாக கமெண்ட் செய்து வருகின்றனர்.


    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • இயக்குனர் விக்னேஷ் சிவன் கடந்த ஆண்டு நயன்தாராவை திருமணம் செய்து கொண்டார்.
    • இவர்களுக்கு வாடகைத் தாய் மூலம் இரட்டை குழந்தைகள் பிறந்தன.

    2012-ம் ஆண்டு சிம்பு நடிப்பில் வெளியான 'போடா போடி' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் விக்னேஷ் சிவன். அதன்பின்னர் நானும் ரவுடி தான், தானா சேர்ந்த கூட்டம், காத்துவாக்குல ரெண்டு காதல் படங்களை இயக்கி முன்னணி இயக்குனராக உயர்ந்தார்.


    நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் பல ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இதையடுத்து கடந்த ஆண்டு ஜூன் 9-ஆம் தேதி விக்னேஷ் சிவன் -நயன்தாராவிற்கு திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்த சில மாதங்களில் இரட்டை குழந்தை பிறந்ததாக சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தினர். இந்த விஷயம் சர்ச்சையாகி பூதாகரமாக வெடித்தது. பிறகு, சட்ட விதிப்படி வாடகைத் தாய் மூலம் தாங்கள் இரட்டை ஆண் குழந்தைகளுக்கு பெற்றோராகி இருப்பதாக தெரிவித்து சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தனர். இவர்கள் சமீபத்தில் தங்களது இரட்டை குழந்தைகளுடன் முதலாம் ஆண்டு திருமண நாளை கொண்டாடினர்.


    இந்நிலையில், இயக்குனர் விக்னேஷ் சிவன் மீது அவர்களது உறவினர்கள் திருச்சி, லால்குடி டி.எஸ்.பி. அலுவலகத்தில் புகாரளித்துள்ளனர். அதாவது, லால்குடியில் உள்ள விக்னேஷ் சிவனின் பெரியப்பா மாணிக்கம் மற்றும் கோயம்பத்தூரில் வசித்து வரும் குஞ்சிதபாதம் அவரது மனைவி சரோஜா ஆகியோர் புகார் மனு கொடுக்க வந்துள்ளனர்.


    அப்போது குஞ்சிதபாதம் கூறியதாவது, தனக்கு உடல்நிலை சரியில்லை. இதயத்தில் நான்கு அடைப்புகள் உள்ளன. அதற்கு சிகிச்சை பெற வேண்டும். இது குறித்து லால்குடியில் வசித்து வரும் தனது அண்ணன் மாணிக்கத்திடம் உதவி கேட்டேன். தங்களது சொத்தில் வில்லங்கம் உள்ளதால் சொத்தை விற்று கொடுக்க முடியாத நிலையில் உள்ளதாகவும் சொத்தை விற்க வேண்டும் என்றால் விக்னேஷ் சிவன் மற்றும் அவரது தாயார் மீனா குமாரி, சகோதரி ஐஸ்வர்யா ஆகியோர் வந்து வில்லங்கத்தை தீர்க்க வேண்டும் என லால்குடி டி.எஸ்.பி. அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தமிழில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் கமல்ஹாசன்.
    • இவர் இயக்கும் புதிய படத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

    2012-ம் ஆண்டு சிம்பு நடிப்பில் வெளியான 'போடா போடி' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் விக்னேஷ் சிவன். அதன்பின்னர் விஜய் சேதுபதி மற்றும் நயன்தாரா நடிப்பில் வெளியான 'நானும் ரவுடி தான்' படத்தை இயக்கி தனக்கான ரசிகர்களை பிடித்தார். இதனை தொடர்ந்து தானா சேர்ந்த கூட்டம், காத்துவாக்குல ரெண்டு காதல் படங்களை இயக்கி முன்னணி இயக்குனராக உயர்ந்தார்.


    விக்னேஷ் சிவன் இயக்கவுள்ள புதிய படத்தில் லவ் டுடே படத்தின் மூலம் மிகவும் பிரபலமடைந்த இயக்குனரும் நடிகருமான பிரதீப் ரங்கநாதன் நடிக்கவுள்ளதாக கூறப்பட்ட நிலையில், இப்படம் சயின்ஸ் ஃபிக்சன் ரொமாண்டிக் காமெடியாக உருவாகவுள்ளதாக கூறப்பட்டது. மேலும் இந்த படத்தை நடிகர் கமல்ஹாசன் தயாரிக்க அனிருத் இசையில் உருவாகும் எனவும் தன்னுடைய காதலுக்காக மொபைல் ஃபோன் மூலம் டைம் டிராவல் செய்யும் இளைஞனை மைய்யப்படுத்தி இப்படம் உருவாகவுள்ளதாகவும் தகவல் வெளியானது.

    இந்நிலையில், இந்த படத்தில் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூரை நடிக்க வைக்க படக்குழு பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது உறுதியானால் இப்படத்தின் மூலம் ஜான்வி கபூர் தமிழில் அறிமுகமாகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ’மாமன்னன்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.
    • இப்படத்தை பார்த்த திரைப்பிரலங்கள், அரசியல் தலைவர்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

    மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, ஃபகத் பாசில், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த 29-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் 'மாமன்னன்'. இப்படம் பலரின் பாராட்டுக்களை பெற்று விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

    இப்படத்தின் வெற்றிக்காக ரெட் ஜெயிண்ட் மூவிஸ் நிறுவனம் சார்பில் இயக்குனர் மாரி செல்வராஜ்-க்கு மினி கூப்பர் காரை பரிசளித்தனர். இப்படத்தை பார்த்த ரஜினி, தனுஷ், பா.இரஞ்சித், திருமாவளவன் உள்ளிட்ட பல திரைப்பிரலங்கள், அரசியல் தலைவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.


    'மாமன்னன்' படத்தில் தன் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி படத்திற்கு பலம் சேர்த்த நடிகர் வடிவேலுவை படக்குழுவினர் நேரில் சந்தித்து பாராட்டியுள்ளனர். இந்நிலையில், இயக்குனர் விக்னேஷ் சிவன் 'மாமன்னன்' படத்தை புகழ்ந்து சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.

    அதில், "மாரி செல்வராஜின் கலை பயணத்தில் மற்றொரு அற்புதமான படைப்பு மாமன்னன்! வடிவேலு எனும் மகா கலைஞனின் இத்தனை ஆண்டுகால திரை பயணத்துக்கான பரிசாக மாமன்னனுக்காக அவருக்கு தேசிய விருது கொடுப்பதே சிறந்த கெளரவமாக அமையும்.


    முக பாவனையில் மீட்டர் கொஞ்சம் ஏறி இறங்கியிருந்தாலும் அவருடைய காமெடி காட்சிகளை நினைவூட்டிவிடும் அபாயம் இருந்தாலும் தனது அபார நடிப்பால் திரையில் முற்றிலுமாக புது பரிமாணத்தை எட்டியிருக்கும் வடிவேலு சார் இந்த நூற்றாண்டு கண்ட ஆகச் சிறந்த கலைஞர்களில் ஒருவர் என்பதில் துளியும் சந்தேகமில்லை!

    உதய் சார் கேரியரில் இதுவே உச்சம். நிஜ வாழ்வில் ஒரு அரசியல் ஆளுமையாக இருந்தபோதிலும் ஒரு இயக்குனர் தனக்கான அரசியலை பேச முழு சுதந்திரம் கொடுத்ததோடு இந்த மாபெரும் படைப்பு உருவாக பக்க பலமாக துணை நின்றதில் அவரது நேர்மை வெளிப்படுகிறது" என்று பதிவிட்டுள்ளார்.





    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • விக்னேஷ் சிவன்- நயன்தாரா தம்பதி நேற்று தங்களது திருமணநாளை கொண்டாடினர்.
    • இந்த நிகழ்ச்சியில் நெருக்கமானவர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.

    தென்னிந்திய திரைத்துறையில் தனக்கென்று தனி முத்திரை பதித்தவர் நடிகை நயன்தாரா. சொந்த வாழ்க்கையில் அடுக்கடுக்காக சர்ச்சைகளில் சிக்கியபோதிலும் அதை தகர்த்தெரிந்து ரசிகர்களின் மனதில் நீங்க இடத்தை பிடித்தவர். விக்கேனஷ் சிவன் இயக்கிய 'நானும் ரவுடி தான்' படத்தில் நடித்தபோது இருவருக்கும் காதல் மலர்ந்தது.


    விக்னேஷ் சிவன்- நயன்தாரா குழந்தைகள்

    அதன்பின்னர், நீண்ட ஆண்டுகளாக காதலித்து வந்த இயக்குனர் விக்னேஷ் சிவன் - நயன்தாரா இருவீட்டாரின் சம்மதத்துடன் கடந்த ஆண்டு ஜூன் 9-ம் தேதி திருமணம் செய்துக் கொண்டனர். திருமணம் முடிந்த சில மாதங்களில் இரட்டை குழந்தை பிறந்ததாக சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தினர். இந்த விஷயம் சர்ச்சையாகி பூதாகரமாக வெடித்தது. பிறகு, சட்ட விதிப்படி வாடகைத் தாய் மூலம் தாங்கள் இரட்டை ஆண் குழந்தைகளுக்கு பெற்றோராகி இருப்பதாக தெரிவித்து சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தனர்.


    கண்கலங்கிய நயன்தாரா

    இதையடுத்து நயன்தாரா- விக்னேஷ் சிவன் தம்பதியினர் நேற்று தங்களது முதலாம் ஆண்டு திருமண நாளை வீட்டில் கொண்டாடினர். இந்த நிகழ்ச்சியில் நெருக்கமானவர்கள் மட்டும் கலந்து கொண்டனர். அப்போது விக்னேஷ் சிவனின் நண்பர் 'நானும் ரவுடிதான்' திரைப்படத்தில் இருந்து 'ஒரு கணம் ஒரு போதும்' பாடலை புல்லாங்குழலில் வாசித்தார். இதை கண்டு சர்ப்ரைஸான நயன்தாரா ஒரு கட்டத்தில் கண்கலங்கி அழ தொடங்கி விட்டார். இது தொடர்பான வீடியோவை விக்னேஷ் சிவன் தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.