என் மலர்
நீங்கள் தேடியது "AR Murugadoss"
- ‘சிக்கந்தர்’ தோல்விக்கு சல்மான்கான் தான் காரணம் என ஏ. ஆர் முருகதாஸ் பேசியது பேசுபொருளானது.
- ஏ.ஆர் முருகதாஸ் அடுத்ததாக சிவகார்த்திகேயன் நடிப்பில் மதராஸி திரைப்படத்தை இயக்கினார்.
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான ஏ.ஆர். முருகதாஸ் பாலிவுட்டில் சல்மான்கானை வைத்து 'சிக்கந்தர்' படத்தை இயக்கினார். இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடித்திருந்தார். இப்படம் வெளியாகி மக்களிடையே போதிய வரவேற்பை பெறவில்லை.
இப்படத்தில் காஜல் அகர்வால், சுனில் ஷெட்டி மற்றும் சத்யராஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
சமீபத்தில் நடந்த நேர்காணல் ஒன்றில் சிக்கந்தர் படத்தின் தோல்வியை குறித்து ஏ. ஆர் முருகதாஸ் கூறியபோது "சிக்கந்தர் படத்தின் கதை என் மனதிற்கு மிகவும் நெருக்கமானது. ஆனால் நான் நினைத்த கதையை என்னால் திரையில் கொண்டு வரமுடியவில்லை. அதற்கு நான் மட்டும் பொறுப்பாக முடியாது.
சல்மான் கானுக்கு மிரட்டல் இருந்ததால் அவரை வைத்து பகலில் படப்பிடிப்பு நடத்த முடியாது. இரவில் தான் படப்பிடிப்பு நடத்த முடியும். பகல் காட்சியாக இருந்தாலும், அதனை இரவில் தான் படமாக்க முடியும்.
எல்லாமே கம்ப்யூட்டர் கிராபிக்சிலும், கிரீன் மேட்டிலும் எடுக்க வேண்டியதாக இருந்தது. அவர் படப்பிடிப்புக்கும் தாமதமாக தான் வருவார். என்னால் என்ன செய்ய முடியும்?" என்று வேதனையுடன் தெரிவித்தார்.
'சிக்கந்தர்' தோல்விக்கு சல்மான்கான் தான் காரணம் என ஏ. ஆர் முருகதாஸ் பேசியது பெரும் பேசுபொருளானது.
இதனை தொடர்ந்து ஏ.ஆர் முருகதாஸ் அடுத்ததாக சிவகார்த்திகேயன் நடிப்பில் மதராஸி திரைப்படத்தை இயக்கினார். இப்படம் வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது.
இந்நிலையில், சிக்கந்தர் படம் குறித்த ஏ. ஆர் முருகதாஸ் விமர்சனத்திற்கு சல்மான்கான் பதிலடி கொடுத்துள்ளார்.
இந்தியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பேசிய சல்மான்கான், 'சிக்கந்தர்' படம் குறித்து மக்கள் எதிர்மறையாக கூறுகின்றனர். ஆனால் நான் அதை ஒப்புக்கொள்ளமாட்டேன். சிக்கந்தர் படத்தின் ஒன்லைன் மிகச்சிறப்பானது.
ஆனால் நான் படப்பிடிப்பில் இரவு 9 மணிக்கு தான் கலந்துகொள்வேன். அது பிரச்சினைகளை ஏற்படுத்தியது. இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் அதை தான் சொன்னார். அப்போது எனது விலா எலும்பு உடைந்திருந்தது.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் அண்மையில் 'மதராஸி' என்ற பெரிய படத்தை இயக்கினார். அந்தப் படத்தின் நாயகன் காலை 6 மணிக்கு படப்பிடிப்புக்கு வந்துவிடுவார். ஆனால், அதே சமயம் மதராஸி படம் சிக்கந்தர் படத்தை விட பெரிய ப்ளாக்பஸ்டர் ஆகிவிட்டது" என மதராஸி படத்தின் தோல்வி குறித்து கிண்டலாக தெரிவித்தார்.
பிரபல இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயனின் 'மதராஸி' திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. திரைப்படத்தை பார்த்து ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
இந்த படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து ருக்மிணி வசந்த், விக்ராந்த், வித்யூத் ஜம்வல், பிஜு மேனன், டான்சிங் ரோஸ் சபீர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார்.
திரைப்படம் உலகளவில் வசூலில் 100 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. இதனை படக்குழு அதிகாரப்பூர்வமாக போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது. சிவகார்த்திகேயனின் 4- வது 100 கோடி வசூல் திரைப்படமாக மதராஸி அமைந்துள்ளது.
பிரபல இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயனின் 'மதராஸி' திரைப்படம் உலகம் முழுவதும் வெளியானது. திரைப்படத்தை பார்த்து ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
இந்த படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து ருக்மிணி வசந்த், விக்ராந்த், வித்யூத் ஜம்வல், பிஜு மேனன், டான்சிங் ரோஸ் சபீர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார். படத்தின் டிக்கெட் முன்பதிவுகள் வேகமாக நடைப்பெற்று வருகிறது.
படத்தை பார்த்த பல திரைப்பிரபலங்கள் பாராட்டி சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில் படத்தின் இரண்டு நாள் வசூல் விவரம் வெளியாகியுள்ளது. அதன்படி திரைப்படம் உலகளவில் 50 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.
பிரபல இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயனின் 'மதராஸி' திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் வெளியானது. திரைப்படத்தை பார்த்து ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
இந்த படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து ருக்மிணி வசந்த், விக்ராந்த், வித்யூத் ஜம்வல், பிஜு மேனன், டான்சிங் ரோஸ் சபீர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார். படத்தின் டிக்கெட் முன்பதிவுகள் வேகமாக நடைப்பெற்று வருகிறது.
இந்நிலையில் படத்தின் சண்டை காட்சிக்கு பயிற்சி செய்யும் வீடியோ இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வேகமாக பரவி வருகிறது.
ரமணா, துப்பாக்கி உள்ளிட்ட வெற்றி படங்களை இயக்கிய இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மதராஸி திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியானது. நடிகர் சிவகார்த்திகேயனை முதன் முதலாக வைத்து இயக்கி உள்ள ஏ.ஆர்.முருகதாசுக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வரும் நிலையில் மதராஸி வெற்றி பெற வேண்டி இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இன்று பழனியில் சிறப்பு வழிபாடு செய்தார்.
அடிவாரத்துக்கு அதிகாலையிலேயே வந்த அவர் மொட்டையடித்து பின்னர் மலைக்கோவிலுக்கு சென்று அங்கு தண்டாயுதபாணி சுவாமியை மனமுருக வழிபட்டார். பின்னர் மீண்டும் கீழே வந்த முருகதாஸ் 3-ம் படை வீடான திருஆவினன்குடி கோவிலில் வழிபட்டார்.
அவர் மொட்டை தலையுடன் இருந்ததால் பெரும்பாலான பக்தர்களால் அடையாளம் கண்டுபிடிக்க முடியவில்லை. இருந்தபோதும் ஒருசில பக்தர்கள் அவரை அடையாளம் கண்டு அவருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
பிரபல இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயனின் 'மதராஸி' திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியானது. திரைப்படத்தை பார்த்து ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
இந்த படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து ருக்மிணி வசந்த், விக்ராந்த், வித்யூத் ஜம்வல், பிஜு மேனன், டான்சிங் ரோஸ் சபீர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார்.
திரைப்படம் எப்படி இருக்கு என்பதை ரசிகர்கள் அவர்களது கருத்தை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். படத்தின் டிக்கெட் முன்பதிவுகள் வேகமாக நடைப்பெற்று வருகிறது. இப்படத்திற்காக சிவகார்த்திகேயன் செய்த Body Transformation Workout Video இணையத்தில் வெளியாகியுள்ளது.
அதில் சிவகார்த்திகேயன் மிகவும் உத்வேகத்துடன் உடற்பயிற்சி செய்கிறார். அந்த வீடியோ இடையே அவரது மகன் குகன் சேர்ந்து அவருடன் உடற்பயிற்சி செய்கிறார். அது மிகவும் க்யூட்டாக அமைந்துள்ளது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
பிரபல இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயனின் 'மதராஸி' திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியானது. திரைப்படத்தை பார்த்து ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
இந்த படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து ருக்மிணி வசந்த், விக்ராந்த், வித்யூத் ஜம்வல், பிஜு மேனன், டான்சிங் ரோஸ் சபீர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார்.
திரைப்படம் எப்படி இருக்கு என்பதை ரசிகர்கள் அவர்களது கருத்தை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். அதில் சிவகார்த்திகேயனின் நடிப்பை பலரும் பாராட்டியுள்ளனர். ருக்மிணி - சிவகார்த்திகேயனின் காதல் காட்சிகள் ரசிக்கும்படி அமைந்துள்ளது.
ஆக்ஷன் காட்சிகளை ஏ.ஆர் முருகதாஸ் பிரம்மாதமாக கையாண்டுள்ளார். படத்தின் முதல் பாதி நல்ல காதல் மற்றும் ஆக்ஷன் காட்சிகளால் நிறைந்து பார்வையாளர்களின் மனதில் இடம் பிடிக்கிறது, இடைவேளை பகுதியில் வரும் காட்சி அட்டகாசமாக இருக்கிறது. மேலும் இரண்டாம் பாதி முழுக்க முழுக்க ஆக்ஷன் காட்சிகள் மற்றும் கதை மெதுவாக நகர்கிறது போன்ற கருத்துகளை நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர். மொத்தத்தில் மதராஸி சிவகார்த்திகேயனுக்கு ஒரு அபவ் ஆவரேஜ் திரைப்படமாகவும் ஏ.ஆர் முருகதாஸ்-க்கு ஒரு கம் பேக் திரைப்படமாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
பிரபல இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயனின் 'மதராஸி' திரைப்படம் செப்டம்பர் 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.
இந்த படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து ருக்மிணி வசந்த், விக்ராந்த், வித்யூத் ஜம்வல், பிஜு மேனன், டான்சிங் ரோஸ் சபீர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார்.
அண்மையில் வெளியான மதராஸி படத்தின் டிரெய்லர் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது. படத்தின் டிக்கெட் முன்பதிவு இன்று மாலை முதல் தொடங்க இருக்கிறது.
மதராஸி படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி நேற்று ஐதராபாத்தில் நடைப்பெற்றது. அப்போது சிவகார்த்திகேயன் தெலுங்கு மொழியில் ரசிகர்களிடம் பேசி அசத்தினார் அவர் கூறியதாவது " படத்தின் கதை மற்றும் கண்டண்ட் நன்றாக இருந்தால் தெலுங்கு தயாரிப்பாளர்கள் செலவு செய்வதற்கு யோசிப்பதே இல்லை. அதனால் தான் தெலுங்கு சினிமாவில் அடிக்கடி 1000 கோடி ரூபாய் திரைப்படங்கள் உருவாகிறது" என கூறினார்.
பிரபல இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயனின் 'மதராஸி' திரைப்படம் செப்டம்பர் 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.
இந்த படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து ருக்மிணி வசந்த், விக்ராந்த், வித்யூத் ஜம்வல், பிஜு மேனன், டான்சிங் ரோஸ் சபீர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார்.
அண்மையில் வெளியான மதராஸி படத்தின் டிரெய்லர் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது. சிவகார்த்திகேயன் மற்றும் ருக்மிணி கோயம்பத்தூர், கொச்சி, ஐதராபாத் என பல இடங்களில் ப்ரோமோஷன் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் படத்தின் டிக்கெட் முன்பதிவு இன்று தொடங்க இருக்கிறது.
- 'மதராஸி' திரைப்படம் செப்டம்பர் 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.
- 'மதராஸி' படத்தின் டிரெய்லர் யூடியூபில் பல மொழிகளை சேர்த்து 18 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளை கடந்துள்ளது.
பிரபல இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயனின் 'மதராஸி' திரைப்படம் செப்டம்பர் 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.
இந்த படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து ருக்மிணி வசந்த், விக்ராந்த், வித்யூத் ஜம்வல், பிஜு மேனன், டான்சிங் ரோஸ் சபீர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார்.
அண்மையில் வெளியான மதராஸி படத்தின் டிரெய்லர் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. 'மதராஸி' படத்தின் டிரெய்லர் யூடியூபில் பல மொழிகளை சேர்த்து 18 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளை கடந்துள்ளது.
இதற்கிடையே, மதராஸி படத்தின் பாடல்களும் இசை வெளியீட்டு விழாவில் வெளியிடப்பட்டது.
இந்நிலையில், 'மதராஸி' படத்தின் முழு ஆல்பம் வெளியிடப்பட்டுள்ளது.
- ஒரு படம் நன்றாக இருந்தால், எனக்கு பிடித்திருந்தால் அந்த படக்குழுவை அழைத்து பாராட்டுகிறேன்.
- நல்லது செய்வதற்கு நான் ஏன் யோசிக்க வேண்டும்?
இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள படம் 'மதராஸி'. இப்படத்தில் ருக்மினி வசந்த், விக்ராந்த், வித்யூத் ஜம்வால், பிஜு மேனன், டான்சிங் ரோஸ் சபீர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அனிருத் இப்படத்திற்கு இசை அமைத்துள்ளார். ரசிகர்களால் பெரும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் 'மதராஸி' வருகிற 5-ந்தேதி வெளியாக உள்ளது.
இந்த நிலையில், 'மதராஸி' படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இவ்விழாவில் நடிகர்கள், நடிகைகள் மற்றும் படக்குழுவினர் என பலரும் கலந்து கொண்டனர்.
இவ்விழாவில் நடிகர் சிவகார்த்திகேயன் பேசியதாவது:-
''விஜய் சார் கூட நான் நடித்தது நிறைய பேருக்கு சந்தோஷம். ஆனால் சிலர், இவர் குட்டி தளபதி, திடீர் தளபதி ஆகப் பார்க்கிறார்னு கிண்டல் செய்தார்கள். அவர் அப்படி நினைத்திருந்தால் துப்பாக்கியை என்னிடம் கொடுத்திருக்க மாட்டார், நானும் வாங்கியிருக்க மாட்டேன். நான் அவருடைய ரசிகர்களை பிடிக்கப் பார்க்கிறேன்னு சொன்னாங்க, ரசிகர்களை அப்படி யாராலும் பிடிக்க முடியாது. ரசிகர்கள் என்பது ஒரு பவர். எப்போதும் அண்ணன் அண்ணன்தான்... தம்பி தம்பிதான்.
ஒரு படம் நன்றாக இருந்தால், எனக்கு பிடித்திருந்தால் அந்த படக்குழுவை அழைத்து பாராட்டுகிறேன். ஆனால் இவன் என்ன அவ்ளோ பெரிய ஆளா? என்று கேட்கிறார்கள். நல்லது செய்வதற்கு நான் ஏன் யோசிக்க வேண்டும்? என்றார்.
- மதராஸி படம் வருகிற செப்டம்பர் 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது
- மதராஸி படத்தின் இசை மற்றும் டிரெய்லர் நாளை வெளியாகவுள்ளது.
பிரபல இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயனின் 'மதராஸி' திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து ருக்மிணி வசந்த், விக்ராந்த், வித்யூத் ஜம்வல், பிஜு மேனன், டான்சிங் ரோஸ் சபீர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார். இப்படம் வருகிற செப்டம்பர் 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இசை மற்றும் டிரெய்லர் நாளை வெளியாகவுள்ளது.
இந்நிலையில் படத்தின் செகண்ட் சிங்கிளான வழியிறேன் பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்பாடலின் வரிகளை விக்னேஷ் சிவன் எழுத அனிருத் பாடியுள்ளார்.






