search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Keerthy Suresh"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள திரைப்படம் 'ரகுதாத்தா'.
    • இப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வரும் கீர்த்தி தற்போது இயக்குனர் சுமன் குமார் எழுதி இயக்கியுள்ள 'ரகுதாத்தா' திரைப்படத்தில் நடித்துள்ளார். ஹோம்பலே பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு அண்மையில் நிறைவு பெற்றது.


    சமீபத்தில் இப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ ஒன்றை வெளியிட்ட படக்குழு "ஆத்தி… கிளம்பிட்டாயா கிளம்பிட்டாயா! உங்களை சிரிக்கவும் சிந்திக்க வைக்கவும் வருகிறாள் வள்ளுவன்பேட்டையின் வீர மங்கை கயல்விழி! ரகு தாத்தா, விரைவில் உங்கள் அருகிலுள்ள திரையரங்குகளில்" என்று குறிப்பிட்டிருந்தது.


    இந்நிலையில், தற்போது இப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. காமெடியாகவும் 'இது எல்லாம் மீறி இந்தியை திணித்தே தீருவோம் என்றால்.. இந்தி தெரியாது போயா' போன்ற இந்தி திணிப்புக்கு எதிராக இடம்பெற்று அழுத்தமான வசனங்கள் கொண்ட இந்த டீசரை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் வைரலாக்கி வருகின்றனர்.




    • கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள திரைப்படம் ‘ரகு தாத்தா’.
    • ஹோம்பலே பிலிம்ஸ் இந்த படத்தை தயாரித்துள்ளது.

    தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வரும் கீர்த்தி தற்போது இயக்குனர் சுமன் குமார் எழுதி இயக்கியுள்ள 'ரகு தாத்தா' திரைப்படத்தில் நடித்துள்ளார். ஹோம்பலே பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவு பெற்றது.


    இந்நிலையில், 'ரகு தாத்தா' திரைப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள படக்குழு "ஆத்தி… கிளம்பிட்டாயா கிளம்பிட்டாயா! உங்களை சிரிக்கவும் சிந்திக்க வைக்கவும் வருகிறாள் வள்ளுவன்பேட்டையின் வீர மங்கை கயல்விழி! ரகு தாத்தா, விரைவில் உங்கள் அருகிலுள்ள திரையரங்குகளில்" என்று பதிவிட்டுள்ளனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.



    • கேரளா மகளிர் கிரிக்கெட் அணியின் நல்லெண்ணத் தூதராக கீர்த்தி சுரேஷ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
    • திருவனந்தபுரத்தில் வரும் 26-ஆம் தேதி நடைபெறவுள்ள இந்தியா - ஆஸ்திரேலியா டி20 போட்டிக்கான இணையதள டிக்கெட் விற்பனையையும் கீர்த்தி சுரேஷ் தொடங்கி வைத்தார்.

    திருவனந்தபுரம்:

    தென்னிந்திய திரையுலகின் முன்னணி கதாநாயகியாக வலம் வருகிறார் நடிகை கீர்த்தி சுரேஷ். இந்நிலையில் கேரளா மகளிர் கிரிக்கெட் அணியின் நல்லெண்ணத் தூதராக கீர்த்தி சுரேஷ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    திருவனந்தபுரத்தில் நடைபெற்ற கேரளா கிரிக்கெட் சங்கம்(கேசிஏ) நிகழ்வில், நல்லெண்ண தூதராக கீர்த்தி சுரேஷ் பொறுப்பேற்றுக் கொண்டார். இதனை தொடர்ந்து, திருவனந்தபுரத்தில் வரும் 26-ஆம் தேதி நடைபெறவுள்ள இந்தியா - ஆஸ்திரேலியா டி20 போட்டிக்கான இணையதள டிக்கெட் விற்பனையையும் கீர்த்தி சுரேஷ் தொடங்கி வைத்தார்.


    மேலும், கேரளா மகளிர் கிரிக்கெட் அணியின் ஜெர்சியை அணிந்து வீராங்கனைகளுடன் கீர்த்தி சுரேஷ் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

    • நடிகை கீர்த்தி சுரேஷ் பல மொழி படங்களில் நடித்து வருகிறார்.
    • இந்தியில் ரீமேக்காகும் தெறி படத்தில் கதாநாயகியாக நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

    மலையாள திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக தன் சினிமா பயணத்தை தொடங்கிய கீர்த்தி சுரேஷ் குறிப்பிடத்தக்க கதாநாயகிகளில் ஒருவராக வலம் வருகிறார். தமிழில் 'இது என்ன மாயம்' படத்தின் மூலம் அறிமுகமான இவர் தொடரி, ரெமோ, மாமன்னன் என பல படங்களில் நடித்து கவனத்தை ஈர்த்தார். மேலும் பல மொழி படங்களிலும் நடித்து வருகிறார்.



    நடிகை கீர்த்தி சுரேஷ் மார்க்கெட்டுக்காக மட்டுமல்லாமல் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளையும் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அந்த வகையில் இவர் நடிப்பில் மிகவும் வரவேற்பை பெற்ற படம் நடிகையர் திலகம். இந்த படம் இவரின் திரை வாழ்க்கையில் ஒரு திருப்பு முனையாக அமைந்தது. இப்படத்திற்காக கீர்த்தி சுரேஷ் தேசிய விருதும் பெற்றார்.

    சைரன், ரகு தாதா, ரிவால்வர் ரீட்டா போன்ற பல படங்களை கைவசம் வைத்துள்ள கீர்த்தி சுரேஷ், அட்லீ இயக்கத்தில் இந்தியில் ரீமேக்காகும் தெறி படத்தில் கதாநாயகியாக நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.


    இப்படி பல பரிமாணங்களில் ரசிகர்களை கவர்ந்த கீர்த்தி சுரேஷ் திரையுலகில் அறிமுகமாகி பத்து ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். இதைத்தொடர்ந்து ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக அவர் வீடியோ ஒன்றை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோவை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.


    • விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘தெறி’.
    • இப்படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.

    இயக்குனர் அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் 2016-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் 'தெறி'. இப்படத்தில் சமந்தா, எமி ஜாக்சன், பேபி நைனிகா, மொட்ட ராஜேந்திரன் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று ஹிட் அடித்தது.


    தெறி

    இதையடுத்து இப்படம் இந்தியில் ரீமேக் செய்யப்படவுள்ளதாக கூறப்படுகிறது. அதாவது, 'கீ' படத்தை இயக்கிய இயக்குனர் காளீஸ் இயக்கத்தில் அட்லீ தயாரிக்கும் இப்படத்தில் வருண் தவான் கதாநாயகனாக நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடிக்கவுள்ளதாகவும் இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற ஆகஸ்ட் மாதம் தொடங்கவுள்ளதாகவும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    • நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது ‘மாமன்னன்’ திரைப்படத்தில் நடித்துள்ளார்.
    • இப்படம் வருகிற 29-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    'கண்ணை நம்பாதே' படத்தைத் தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'மாமன்னன்'. இப்படத்தை பரியேறும் பெருமாள், கர்ணன் படங்களை இயக்கிய மாரி செல்வராஜ் இயக்கியுள்ளார். இதில் வடிவேலு, ஃபகத் பாசில், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.


    இப்படம் வருகிற 29-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதைத்தொடர்ந்து 'மாமன்னன்' படக்குழு புரோமோஷன் பணிகளில் ஈடுப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், மாமன்னன் படம் குறித்து நடிகை கீர்த்தி சுரேஷ் பேசியதாவது, மாமன்னன் ஒரு அரசியல் படம். நான் இப்போது படம் நடித்துக் கொண்டிருக்கிறேன். அரசியலுக்கு வருவது பற்றி யோசிக்கலாம். இந்தப் படத்தில் சீரியசான கேரக்டரில் நடித்துள்ளேன். தற்சமயம் அப்படிப்பட்ட கேரக்டர்கள் தான் எனக்கு வருகிறது.


    அடுத்த படம் காமெடி கலந்த கதாபாத்திரத்தில் வருகிறது. ஒவ்வொரு படத்திலும் முழு அர்ப்பணிப்புடன் நடிக்கிறேன். பிரபல டைரக்டர்கள் ராஜமவுலி, சங்கர் ஆகியோர் படங்களில் நடிக்க ஆசை. உதயநிதி நல்ல ஜாலியான மனிதர். படப்பிடிப்பு தளத்தை எப்போதும் மகிழ்ச்சியாக வைத்திருப்பார். கலகலவென்று சிரித்த முகமாகவே இருப்பார். படப்பிடிப்பே ஜாலி பயணமாகவே இருந்தது. நல்ல விஷயங்களை இந்த படத்தில் கூறியுள்ளோம். என்று பேசினார்.

    • நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் நடித்து வருகிறார்.
    • இவர் நடித்துள்ள ‘மாமன்னன்’ திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.

    தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகையான கீர்த்தி சுரேஷ், தமிழில் 'இது என்ன மாயம்' படத்தின் மூலம் அறிமுகமானார். இவர் நடிகையர் திலகம் படத்திற்காக தேசிய விருது பெற்றார். அண்மையில் இவர் நடித்த 'தசரா' திரைப்படம் ரூ.100 கோடிக்கு மேல் வசூல் செய்தது. தற்போது தமிழில் உதயநிதியுடன் மாமன்னன் படத்திலும் நடித்து முடித்துள்ளார்.


    கீர்த்தி சுரேஷ்

    சில தினங்களுக்கு முன்பு கீர்த்தி சுரேஷும் துபாய் தொழில் அதிபர் பர்ஹான் என்பவரும் ஒரே மாதிரி நிறம் மற்றும் டிசைனில் உடை அணிந்து புகைப்படம் எடுத்து வெளியிட்டனர். இதையடுத்து பர்ஹானை கீர்த்தி சுரேஷ் காதலிப்பதாகவும் அவரை திருமணம் செய்ய இருப்பதாகவும் வலைத்தளத்தில் தகவல் பரவி பரபரப்பானது.


    குடும்பத்துடன் கீர்த்தி சுரேஷ்

    இதற்கு கீர்த்தி சுரேசின் தந்தையும் சினிமா தயாரிப்பாளருமான சுரேஷ்குமார் மறுப்பு தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், "கீர்த்தி சுரேஷும் பர்ஹானும் நண்பர்கள். எங்கள் குடும்பத்தில் ஒருவராகவே பர்ஹான் இருக்கிறார். இதுபோன்ற தவறான தகவலை பரப்புவது எங்கள் குடும்பம் மட்டுமன்றி அவரது குடும்பத்தையும் பாதிக்க செய்யும். இதுபோன்ற ஆதாரம் இல்லாத தகவல்களை தயவு செய்து வெளியிட வேண்டாம். கீர்த்திக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டால் கண்டிப்பாக நானே முதலில் அறிவிப்பேன்'' என்று தெரிவித்துள்ளார்.

    • இயக்குனர் சுமன் குமார் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'ரகு தாத்தா'.
    • இந்த படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

    தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வரும் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியான 'தசரா' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று ரூ.100 கோடிக்கு மேல் வசூல் செய்தது. இதைத்தொடர்ந்து இவர் தற்போது ஹோம்பலே பிலிம்ஸ் தயாரிப்பில் 'ரகு தாத்தா' என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். சுமன் குமார் எழுதி இயக்கும் இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைக்கிறார். இப்படத்தின் முதல் தோற்ற போஸ்டர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.


    ரகு தாத்தா படக்குழு

    இந்நிலையில், 'ரகு தாத்தா' திரைப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. இதனை தயாரிப்பு நிறுவனமான ஹோம்பலே பிலிம்ஸ் தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதளத்தில் புகைப்படங்களை பகிர்ந்து அறிவித்துள்ளது. மேலும், அந்த பதிவில், " ரகுதாத்தா படப்பிடிப்பு நிறைவுற்றது. உங்கள் இதயத்தை அதிர வைக்கும் புரட்சிக்காக காத்திருங்கள்" என்று குறிப்பிட்டுள்ளனர்.


    • நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது ‘மாமன்னன்’ திரைப்படத்தில் நடித்துள்ளார்.
    • இவர் தமிழில் மேலும் இரண்டு படங்களில் நடித்து வருகிறார்.

    தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகையான கீர்த்தி சுரேஷ், தமிழில் 'இது என்ன மாயம்' படத்தின் மூலம் அறிமுகமானார். இவர் நடிகையர் திலகம் படத்திற்காக தேசிய விருது பெற்றார். அண்மையில் இவர் நடித்த 'தசரா' திரைப்படம் ரூ.100 கோடிக்கு மேல் வசூல் செய்தது. தற்போது தமிழில் உதயநிதியுடன் மாமன்னன் படத்திலும் நடித்து முடித்துள்ளார்.


    கீர்த்தி சுரேஷ்

    இப்படத்தின் இரண்டு பாடல்கள் சமீபத்தில் வெளியாகி கவனம் ஈர்த்தது. இந்நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷ் இன்று குடும்பத்துடன் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். சுவாமி தரிசனத்திற்கு பின்னர் கோவில் வளாகத்தில் உள்ள ரங்கநாயகர் மண்டபத்தில் நடிகை கீர்த்தி சுரேஷிற்கு தீர்த்தம் மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து கோவில் பிரகாரத்தை விட்டு வெளியே வந்த அவரை ரசிகர்கள் சூழ்ந்து கொண்டு புகைப்படங்கள் எடுத்து மகிழ்ந்தனர்.


    திருப்பதியில் கீர்த்தி சுரேஷ்

    பின்னர் பத்திரிகையாளர்களிடம் பேசிய கீர்த்தி சுரேஷ், மாமன்னன் படத்தைத் தொடர்ந்து தமிழில் இரண்டு படங்கள் நடித்து வருவதாகவும் அது விரைவில் வெளிவரவுள்ளதாகவும் கூறினார். இதைத்தொடர்ந்து கோவிலை விட்டு வெளியேறிய கீர்த்தி சுரேஷை ரசிகர்கள் சூழ்ந்து கொண்டனர். இதனால் கீர்த்தி சுரேஷ் வெளியேற முடியாமல் திணறினார். உடனே தேவஸ்தான பாதுகாப்பு ஊழியர்கள் கீர்த்தி சுரேஷை மீட்டு பேட்டரி கார் மூலம் அவர் கார் இருக்கும் இடத்திற்கு பாதுகாப்பாக அழைத்து சென்றனர்.

    • நடிகை கீர்த்தி சுரேஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ‘தசரா’.
    • இப்படம் ரூ.100 கோடிக்கு மேல் வசூலை குவித்தது.

    தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகையான கீர்த்தி சுரேஷ், தமிழில் 'இது என்ன மாயம்' படத்தின் மூலம் அறிமுகமானார். இவர் நடிகையர் திலகம் படத்திற்காக தேசிய விருது பெற்றார். அண்மையில் இவர் நடித்த 'சாணிக்காயிதம்' படத்தில் இவரது கதாபாத்திரமும் நடிப்பும் பேசப்பட்டது. தற்போது  தமிழில் உதயநிதியுடன் மாமன்னன் படத்தில் நடித்து முடித்துள்ளார்.


    கீர்த்தி சுரேஷ் -சமந்தா பதிவு

    இவர் நடித்த தசரா திரைப்படம் கடந்த 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரூ.100 கோடிக்கு மேல் வசூலை குவித்தது. இந்நிலையில், நடிகை கீர்த்தி சுரேஷ் சமூக வலைதளப் பக்கத்தில் ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்து வந்தார். அப்போது சமந்தா குறித்த கேள்விக்கு, "நான் வியந்து பார்க்கும் ஒரு நபர் சமந்தா. நான் பார்த்ததில் மிகவும் வலிமையான மனம் கொண்டவர். எளிமையாக சொல்ல வேண்டும் என்றால் அவரை யாராலும் தடுக்க முடியாது" என்று பதிவிட்டுள்ளார்.

    இந்த பதிவை பகிர்ந்து கீர்த்தி சுரேஷிற்கு நன்றி தெரிவித்துள்ளார் சமந்தா.

    • ஐபிஎல் தொடரின் 6-வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் லக்னோ சூப்பர் ஜெய்ண்ட்ஸ் அணியும் மோதின.
    • டோனி தலைமையிலான சென்னை அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் முதல் வெற்றியை பதிவு செய்தது.

    சென்னை:

    ஐபிஎல் தொடரின் 6-வது போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் லக்னோ சூப்பர் ஜெய்ண்ட்ஸ் அணியும் மோதின. இந்த ஆட்டத்தில் டோனி தலைமையிலான சென்னை அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் முதல் வெற்றியை பதிவு செய்தது.

    இந்நிலையில் இந்த போட்டியை நடிகர் சிவகா்த்திகேயன், ஹரிஷ் கல்யாண், நகைச்சுவை நடிகர் சதிஷ், நடிகை கீர்த்தி சுரேஷ், நதியா, இவானா உள்ளிட்ட பல திரைப் பிரபலங்கள் நேரில் கண்டு ரசித்தனர். இந்த போட்டியை ஆர்வமாக கண்டு ரசித்த சிவகார்த்திகயனின் வீடியோ இணையத்தில் பலரும் பகிர்ந்து வருகின்றனர்.

    அருண் ராஜா காமராஜ் இயக்கத்தில் வெளியான கனா படத்தில் சிவகா்த்திகேயன் கிரிக்கெட் வீரராக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    • இயக்குனர் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் சமீபத்தில் வெளியான திரைப்படம் 'தசரா'.
    • இப்படத்தில் நானி மற்றும் கீர்த்தி சுரேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

    தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான நானி நடிப்பில் கடந்த 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் 'தசரா'. இப்படத்தை இயக்குனர் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்க கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். மேலும் பிரகாஷ் ராஜ், சமுத்திரக்கனி, சாய் குமார், பூர்ணா மற்றும் ஜரீனா வஹாப் உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். பெரும் எதிர்பார்ப்பில் வெளியான இந்த திரைப்படம் ரசிகர்களின் ஆதரவை பெற்று வசூலை குவித்து வருகிறது.


    கீர்த்தி பதிவு

    இந்நிலையில், 'தசரா' படத்தில் இடம்பெற்ற சில்க் பாரில் நடிகை சில்க் ஸ்மிதா உருவம் வரையப்பட்டு இருக்கும் புகைப்படத்திற்கு கீழே நின்று அவரை போல போஸ் கொடுத்துள்ள புகைப்படத்தை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ள கீர்த்தி சுரேஷ், " செட் அகற்றப்படுவதற்கு முன்பாக ஓடிச் சென்று இந்த ஒரு புகைப்படத்தை எடுத்துக் கொண்டேன். உங்கள் அனைவருக்கும் தெரியும் எனக்கும் சில்க் பாருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை" என்று பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படத்திற்கு ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர்.


    ×