என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விஜய் தேவரகொண்டா"

    • தன்னுடைய மகிழ்ச்சிக்கான காரணம் பற்றி வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.
    • விஜய் தேவரகொண்டாவும், ராஷ்மிகா மந்தனாவும் ‘கீதாகோவிந்தம்', ‘டியர் காம்ரேட்' ஆகிய படங்களில் இணைந்து நடித்தனர்.

    தென்னிந்திய மொழி திரைப்படங்கள் மட்டுமின்றி, பாலிவுட் ரசிகர்கள் மனதிலும் தனக்கான இடத்தை தக்கவைத்துக் கொண்டவர், ராஷ்மிகா மந்தனா. இவரது நடிப்பில் வெளியான பல படங்கள் பல கோடி வசூல் சாதனையை நிகழ்த்தி இருக்கின்றன. சமீபத்தில் பாலிவுட்டில் ராஷ்மிகா மந்தனா கதையின் நாயகியாக நடித்த 'தி கேர்ள் பிரண்ட்' படமும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது.

    எப்போதும் சிரித்த முகத்துடன் காணப்படும் ராஷ்மிகா மந்தனா, தன்னுடைய மகிழ்ச்சிக்கான காரணம் பற்றி வெளிப்படையாக தெரிவித்துள்ளார். அதில், ''என் மனதில் இருந்த வலியும், வேதனையும் இப்போது மறைந்துவிட்டன. எனக்குள் இப்போது மகிழ்ச்சியான தருணங்கள் மட்டுமே இருக்கின்றன. அதற்கெல்லாம் காரணம், விஜய் தேவரகொண்டா தான். என்னுடைய எல்லா வலிகளுக்கும் அவர்தான் மருந்தாக இருந்திருக்கிறார்" என்று கூறியுள்ளார்.

    விஜய் தேவரகொண்டாவும், ராஷ்மிகா மந்தனாவும் 'கீதாகோவிந்தம்', 'டியர் காம்ரேட்' ஆகிய படங்களில் இணைந்து நடித்தனர். அப்போதில் இருந்தே இருவரும் காதலித்து வருவதாக பேசப்பட்டது. மேலும் இவர்களுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு வரும் பிப்ரவரி 26-ந்தேதி ஜெய்ப்பூர் அரண்மனையில் நடக்க உள்ளதாக கூறப்படுகிறது.

    • பிப்ரவரி மாதம் 26-ந்தேதி ராஜஸ்தானின் உதய்பூரில் திருமணம் செய்து கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகின.
    • இந்த முழு பயணத்திலும் நீங்கள் தனிப்பட்ட முறையில் ஒரு பகுதியாக இருந்திருக்கிறீர்கள்.

    தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையான ராஷ்மிகாவுக்கும், தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் தேவரகொண்டாவுக்கும் ஐதராபாத்தில் கடந்த மாதம் திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது. ஆனால் காதலை போலவே, இருவரும் இந்த விவகாரம் குறித்து வாயைத் திறக்காமல் ரகசியமாகவே வைத்திருந்தனர். ஆனாலும் ராஷ்மிகா விரலில் இருக்கும் நிச்சயதார்த்த மோதிரம் அதை சொல்லாமல் சொல்லியது.

    இதனிடையே, தெலுங்கில் நடிகர் ஜெகபதி பாபு நடத்திய நிகழ்ச்சியில் ராஷ்மிகா கலந்துகொண்டார். அப்போது அவரது விரலில் அணிந்திருக்கும் மோதிரம் பற்றி பேச்சு எழுந்தது. இதற்கு ராஷ்மிகா, 'இது என் வாழ்நாளில் முக்கியமான ஒன்று' என்று கண்ணடித்து சிரித்தார்.

    இதனை தொடர்ந்து, விஜய் தேவரகொண்டா- ராஷ்மிகா ஜோடி அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 26-ந்தேதி ராஜஸ்தானின் உதய்பூரில் திருமணம் செய்து கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகின. இருப்பினும் இந்த தகவல்கள் குறித்து இருதரப்பினரும் பதிலளிக்காமல் இருந்து வந்தனர்.

    இந்த நிலையில், "ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் ஒரு விஜய் தேவரகொண்டா இருப்பார் என்று நான் நம்புகிறேன், ஏனென்றால் அது ஒரு வரம்" என்று ராஷ்மிகா பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    ராஷ்மிகா நடிப்பில் வெளியான 'தி கேர்ள்பிரண்ட்' படத்தின் வெற்றிவிழா ஐதராபாத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் படத்தில் நடித்த நடிகர்கள், பணியாற்றியவர்கள் என பலரும் கலந்து கொண்டனர். மேலும் இந்நிகழ்ச்சியில் விஜய் தேவரெகொண்டாவும் பங்கேற்று இருந்தார்.

    அப்போது நிகழ்ச்சியில் பேசிய ராஷ்மிகா, நீங்கள் (விஜு) ஆரம்பத்திலிருந்தே இந்தப் படத்தின் ஒரு பகுதியாக இருந்து வருகிறீர்கள், படத்தின் வெற்றியிலும் நீங்கள் ஒரு பகுதியாக இருக்கிறீர்கள். இந்த முழு பயணத்திலும் நீங்கள் தனிப்பட்ட முறையில் ஒரு பகுதியாக இருந்திருக்கிறீர்கள். ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் ஒரு விஜய் தேவரகொண்டா இருப்பார் என்று நான் நம்புகிறேன், ஏனென்றால் அது ஒரு வரம் என்று பேசினார்.


    இவ்வாறு ராஷ்மிகா பேசியதும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் ஆரவாரம் செய்தனர். இதுதொடர்பான வீடியோவும் சமூக வலைத்தளங்களில் வைரலானது.



    முன்னதாக, நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகாவுடன் கைகுலுக்கும் போது அவரது கையை பிடித்து முத்தமிட்டது தொடர்பான வீடியோவும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    இருவரும் முதல் முறையாக பொது நிகழ்வில் தங்களது காதலை வெளிப்படுத்தி உள்ளதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர். 




    இசையமைப்பாளரான ஹேஷம் அப்துல் வஹாப் இப்படத்தின் இசையை மேற்கொண்டுள்ளார்.

    தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவின் முன்னணி கதாநாயகிகளில் ஒருவர் ராஷ்மிகா மந்தனா. சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான குபேரா படத்தை தொடர்ந்து, தி கேர்ள் ஃபிரெண்ட் திரைப்படத்தில் நடித்துள்ளார்.

    இப்படத்தை ராகுல் ரவிந்திரன் இயக்கியுள்ளார். படத்தின் டீசர் சில மாதங்களுக்கு முன் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. படப்பிடிப்பு பணிகள் முழு வேகத்துடன் நடைப்பெற்றது.

    இப்படத்தில் தீக்ஷித் ஷெட்டி கதாநாயகனாக நடித்துள்ளார். பிரபல இசையமைப்பாளரான ஹேஷம் அப்துல் வஹாப் இப்படத்தின் இசையை மேற்கொண்டுள்ளார்.

    அல்லு அரவிந்த் வழங்கும் இப்படத்தை தீரஜ் மற்றும் வித்யா இணைந்து தயாரித்துள்ளனர். இப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் நதியே மியூசிக் வீடியோ கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியானது.

    தி கேர்ள் ஃபிரண்ட் திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில், படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது.

    இந்தநிலையில், தி கேர்ள் பிரண்ட் திரைப்படத்தின் படக்குழுவிற்கு வாழ்த்து தெரிவித்து நடிகர் விஜய் தேவரகொண்டா தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு வெளியிட்டிருந்தார்.

    அதில்," தி கேர்ள் பிரண்ட் படத்தின் மூலம், படக்குழுவினர் சக்திவாய்ந்த ஒன்று.. முக்கியமான ஒன்று உருவாக்கியுள்ளனர் என்பது எனக்குத் தெரியும். ஜீரணிக்க கடினமாக இருக்கும் ஒன்று.

    அனைத்து நடிகர்களின் நடிப்பும் டாப் கிளாஸ் என்பது எனக்குத் தெரியும். குறிப்பாக, ராஷ்மிகா மந்தனா, தீக்ஷித் ஷெட்டி, ராகுலஅ, அனு இமானுவேல் ஆகியோர் ஒரு தாக்கத்தை உருவாக்கப் போகிறார்கள்.

    நாளை நாம் அனைவரும் தி கேர்ள் பிரண்ட் படத்துடன் நடப்பதைப் பார்ப்போம். திரையரங்குகளில் சென்று அதை அனுபவியுங்கள்

    அனைத்து நடிகர்கள் மற்றும் குழுவினருக்கும் நிறைய அன்பும் பெரிய அணைப்புகளும்" என்று குறிப்பிட்டிருந்தார்.

    தேவரகொண்டாவின் இந்த பதிவிற்கு நன்றி தெரிவிக்கும் வகையில், ராஷ்மிகா மந்தனா தனது எக்ஸ் தள பக்கத்தில் பதில் அளித்துள்ளார்.

    அந்த பதிவில்," இது சக்திவாய்ந்த ஒன்று. இது முக்கியமான ஒன்று. இதை ஜீரணிக்க கடினமாக இருக்கும் - நன்றாகச் சொன்னீர்கள். நன்றி..!

    தேவரகொண்டா நீங்கள் ஆரம்பத்திலிருந்தே இந்தப் படத்தின் மறைமுக ஆதரவாளராக இருந்து வருகிறீர்கள். இதற்காக நீங்கள் என்னைப் பற்றி பெருமைப்படுவீர்கள் என்று நான் நம்புகிறேன்!

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதற்கிடையே, விஜய் தேவர்கொண்டா- ராஷ்மிகா ஜோடி அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 26-ந்தேதி திருமணம் செய்து கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது

    • தெலுங்கில் நடிகர் ஜெகபதி பாபு நடத்தும் நிகழ்ச்சியில் ராஷ்மிகா கலந்துகொண்டார்.
    • ராஷ்மிகா, ‘இது என் வாழ்நாளில் முக்கியமான ஒன்று' என்று கண்ணடித்து சிரித்தார்.

    தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையான ராஷ்மிகாவுக்கும், தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் தேவரகொண்டாவுக்கும் ஐதராபாத்தில் கடந்த மாதம் திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது. ஆனால் காதலை போலவே, இருவரும் இந்த விவகாரம் குறித்து வாயைத் திறக்காமல் ரகசியமாகவே வைத்திருந்தனர்.

    ஆனாலும் ராஷ்மிகா விரலில் இருக்கும் நிச்சயதார்த்த மோதிரம் அதை சொல்லாமல் சொல்லி வருகிறது. அந்த மோதிரமும் தற்போது வைரலாகி வருகிறது.

    இதனிடையே, தெலுங்கில் நடிகர் ஜெகபதி பாபு நடத்தும் நிகழ்ச்சியில் ராஷ்மிகா கலந்துகொண்டார். அப்போது அவரது விரலில் அணிந்திருக்கும் மோதிரம் பற்றி பேச்சு எழுந்தது. இதற்கு ராஷ்மிகா, 'இது என் வாழ்நாளில் முக்கியமான ஒன்று' என்று கண்ணடித்து சிரித்தார்.

    இந்த நிலையில், விஜய் தேவர்கொண்டா- ராஷ்மிகா ஜோடி அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 26-ந்தேதி திருமணம் செய்து கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது. மேலும் இவர்களின் திருமணம் ராஜஸ்தானின் உதய்பூரில் நடைபெற உள்ளதாகவும் கூறப்படுகிறது.

    இதனால் ரசிகர்கள் இருவருக்கும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

    • விஜய் தேவரகொண்டா நடிப்பில் கிங்டம் படம் அண்மையில் வெளியானது.
    • கிங்டம் படம் மக்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்றது.

    தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் தேவரகொண்டா நடிப்பில் கிங்டம் படம் அண்மையில் வெளியானது. இப்படத்தில் பாக்யஸ்ரீ போர்ஸ் கதாநாயகியாக நடித்திருந்தார். இப்படம் மக்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்றது.

    இந்நிலையில், விஜய் தேவரகொண்டாவின் புதிய படம் தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்படத்தை ரவி கிரண் கோலா இயக்குகிறார். பிரபல தயாரிப்பாளரான தில் ராஜு தயாரிக்கிறார்.

    இப்படத்தில் விஜய் தேவரகொண்டாவிற்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். இப்படத்தின் பூஜை தற்போது நடைபெற்றது. இதில் விஜய் தேவரகொண்டா, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றனர்.

    • புட்டபர்த்திக்கு சென்றுவிட்டு ஐதராபாத் திரும்பியபோது நடிகர் விஜய் தேவரகொண்டா சென்ற கார் விபத்தில் சிக்கியுள்ளது.
    • செய்திகள் உங்களை மன அழுத்தத்துக்கு உள்ளாக்க விடாதீர்கள்.

    புட்டபர்த்திக்கு சென்றுவிட்டு ஐதராபாத் திரும்பியபோது நடிகர் விஜய் தேவரகொண்டா சென்ற கார் விபத்தில் சிக்கியுள்ளது.

    தெலுங்கானா மாநிலம் கத்வால் பகுதி தேசிய நெடுஞ்சாலையில் கார் சென்றபோது கால்நடைகளை ஏற்றிச் சென்ற வாகனம் மோதி விபத்துக்குள்ளானது.

    கார் சேதமடைந்த நிலையில், விஜய் தேவரகொண்டா காயங்கள் இன்றி உயிர் தப்பியதாக தகவல் வெளியானது.

    இந்நிலையில் தான் நலமாக உள்ளதாக விஜய் தேவரகொண்டா தனது எக்ஸ் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார்.

    அவர் வெளியிட்டுள்ள பதிவில், எல்லாமே நல்லபடியாக இருக்கிறது.

    கார் சேதமடைந்தது, ஆனால் நாங்கள் அனைவரும் நலமாக இருக்கிறோம். ஒரு ஸ்ட்ரென்த் உடற்பயிற்சியும் செய்துவிட்டு இப்பதான் வீட்டிற்குத் திரும்பி வந்தேன்.

    என் தலை வலிக்கிறது, ஆனால் பிரியாணி மற்றும் தூக்கத்தால் சரி செய்ய முடியாதது என்று எதுவும் இல்லை. அதனால் உங்களுக்கெல்லாம் என் பெரிய அணைப்புகளையும் அன்பையும் கொடுக்கிறேன். செய்திகள் உங்களை மன அழுத்தத்துக்கு உள்ளாக்க விடாதீர்கள்." என்று தெரிவித்தார்.  

    விஜய் தேவரகொண்டாவுக்கும் நடிகை ராஷ்மிக்கா மந்தனாவுக்கும் அண்மையில் ஐதராபாத்தில் உள்ள இல்லத்தில் நிச்சயதாரதம் நடந்ததாக தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது. 

    கால்நடைகளை ஏற்றிச்சென்ற வாகனம் மோதி விபத்துக்குள்ளானது.

    நடிகர் விஜய் தேவரகொண்டா சென்ற கார் விபத்தில் சிக்கியது.

    தெலுங்கானா மாநிலம் கத்வால் பகுதி தேசிய நெடுஞ்சாலையில் விஜய் தேவரகொண்டா கார் சென்றபோது கால்நடைகளை ஏற்றிச் சென்ற வாகனம் மோதி விபத்துக்குள்ளானது.

    கார் சேதமடைந்த நிலையில், விஜய் தேவரகொண்டா காயங்கள் இன்றி உயிர் தப்பினார்.

    புட்டபர்த்திக்கு சென்றுவிட்டு ஐதராபாத் திரும்பியபோது விஜய் தேவரகொண்டா சென்ற கார் விபத்தில் சிக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    • இவர்கள் இருவரும் மீண்டும் இணைந்து நடிக்கப்போவதாகவும் கூறப்பட்டது.
    • புகைப்படம் ஒன்றும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர், நடிகையாக வலம் வருபவர்கள் விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா. இவர்கள் இருவரும் இணைந்து நடித்திருந்த 'கீதா கோவிந்தம்', 'டியர் காம்ரேட்' ஆகிய படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இருவரின் காம்போவும், இவர்கள் நடித்த காதல் காட்சிகளும் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது.

    இதனிடையே, இவர்கள் இருவரும் ஒன்றாக வெளியே சென்ற புகைப்படங்களும், இருவரும் திருமணம் செய்து கொள்ளப்போவதாகவும் சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியானது. இதற்கு இருதரப்பில் இருந்து பதில் ஏதும் தெரிவிக்கப்படவில்லை. தொடர்ந்து, இவர்களின் திருமணம் தொடர்பான செய்திகள் வெளியாகியது. மேலும், இவர்கள் இருவரும் மீண்டும் இணைந்து நடிக்கப்போவதாகவும் கூறப்பட்டது.

    இந்த நிலையில், ஐதராபாத்தில் உள்ள விஜய் தேவரகொண்டாவின் இல்லத்தில் விஜய் தேவரகொண்டா- ராஷ்மிகா ஆகிய இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. நேற்று நடைபெற்ற திருமண நிச்சயதார்த்ததில் நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டதாக கூறப்படுகிறது. அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம்  திருமணத்தை நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், இவர்களின் புகைப்படம் ஒன்றும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

    திரைப்படத்தின் வசூல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

    சிறிய பட்ஜெட்டில் உருவான "லிட்டில் ஹார்ட்ஸ்" (Little Hearts), புதுமுகங்களான மௌலி தனுஜ் பிரஷாந்த் மற்றும் சிவானி நாகரம் நடித்திருக்கும் இப்படம், திரையரங்குகளில் செம வெற்றியைப் பதிவு செய்து வருகிறது.

    படத்தின் முதல் நாள் வசூலாக 2 கோடி ரூபாய் வசூலித்தது, அமெரிக்காவில் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் ஷோக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. திரைப்படத்தின் வசூல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

    படத்தில் இடம் பெற்ற நகைச்சுவை காட்சிகள் அதிகமாக வொர்க் அவுட் ஆகியுள்ளதால் இளைஞர்கள் கூட்டம் படத்திற்கு பெரும் ஆதரவு கொடுத்து வருகின்றனர்.

    இந்நிலையில் படத்தை பார்த்த நானி படக்குழுவை பாராட்டி அவரது எக்ஸ் தளத்தில் பதிவிட்டார். அந்த வரிசையில் நடிகர் விஜய் தேவரகொண்டா லிட்டில் ஹார்ட்ஸ் படக்குழுவை நேரில் அழைத்து பாராட்டியுள்ளார். அந்த புகைப்படங்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகிரது.

    • விஜய் தேவரகொண்டா கவுதம் தின்னனுரி இயக்கத்தில் கிங்டம் என்ற படத்தில் நடித்துள்ளார்.
    • இப்படம் மக்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்றது.

    தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் தேவரகொண்டா கவுதம் தின்னனுரி இயக்கத்தில் கிங்டம் என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் பாக்யஸ்ரீ போர்ஸ் கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். ஜூலை 31 அன்று வெளியான இப்படம் மக்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்றது.

    இப்படம் அதிரடி ஆக்சன் என்டர்டெய்னராக உருவாகியுள்ளது. ஒரு அண்டர் கவர் ஸ்பையாக விஜய் தேவரகொண்டா நடித்துள்ளார். திரைப்படம் வெளியான முதல் நாளில் 39 கோடி ரூபாய் வசூலித்தது. திரைப்படம் இதுவரை உலகளவில் 76 கோடி ரூபாய் வசூலித்துள்ளது.

    இந்நிலையில் படத்தின் ஓடிடி ரிலீசை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி திரைப்படம் வரும் 27 ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது. 

    • ஆன்லைன் சூதாட்ட செயலி தொடர்பாக 36 பிரபலங்கள் மீது அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்தது.
    • ராணா டகுபதி, பிரகாஷ்ராஜ் ஆகியோர் ஏற்கனவே அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகினர்.

    சட்டவிரோத சூதாட்ட செயலி வழக்கு தொடர்பாக நடிகர்கள் பிரகாஷ் ராஜ், ராணா டகுபதி, விஜய் தேவரகொண்டா மற்றும் லட்சுமி மஞ்சு ஆகியோருக்கு அமலாக்கதுறை சம்மன் அனுப்பியது.

    ஐதராபாத் காவல்துறை தாக்கல் செய்த முதல் தகவல் அறிக்கையின் அடிப்படையில், விஜய் தேவரகொண்டா, ராணா டகுபதி, லட்சுமி மஞ்சு, பிரகாஷ் ராஜ், நிதி அகர்வால், அனன்யா நாகல்லா மற்றும் தொலைக்காட்சி தொகுப்பாளினி ஸ்ரீமுகி உள்ளிட்ட 36 பிரபலங்கள் மீது அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்தது.

    செயலியை விளம்பரப்படுத்துவதன் மூலம் பெரிய அளவிலான பரிவர்த்தனைகள் செய்யப்பட்டதா மற்றும் அது பணமோசடியுடன் தொடர்புடையதா என்பது விசாரிக்கப்பட்டு வருகிறது.

    இதனைத்தொடர்ந்து ஜூலை 23-ம் தேதி ராணா டகுபதியும் ஜூலை 30-ம் தேதி பிரகாஷ்ராஜும் அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகினர்.

    இந்நிலையில், ஆன்லைன் சூதாட்ட செயலிகளை விளம்பரம் செய்த விவகாரம் தொடர்பாக நடிகர் விஜய் தேவரகொண்டா ஐதராபாத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் இன்று விசாரணைக்கு ஆஜரானார். அவரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கவுதம் தின்னனுரி இயக்கத்தில் கிங்டம் என்ற படத்தில் விஜய் தேவரகொண்டா நடித்துள்ளார்.
    • கிங்டம் திரைப்படம் வெளியான முதல் நாளில் 39 கோடி ரூபாய் வசூலித்தது.

    தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் தேவரகொண்டா கவுதம் தின்னனுரி இயக்கத்தில் கிங்டம் என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் பாக்யஸ்ரீ போர்ஸ் கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். ஜூலை 31 அன்று வெளியான இப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

    இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் வெளியானது. இப்படம் அதிரடி ஆக்சன் என்டர்டெய்னராக உருவாகியுள்ளது. ஒரு அண்டர் கவர் ஸ்பையாக விஜய் தேவரகொண்டா நடித்துள்ளார். திரைப்படம் வெளியான முதல் நாளில் 39 கோடி ரூபாய் வசூலித்தது.

    இந்நிலையில் படத்தின் 3 நாள் வசூல் விவரத்தை படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது. அதன்படி திரைப்படம் உலகளவில் 67 கோடி ரூபாய் வசூலித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இன்னும் வரும் நாட்களில் திரைப்படம் அதிகம் வசூலிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

    ×