என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விஜய் தேவரகொண்டா"

    • இந்த ஓட்டல் ஆடம்பர நிகழ்ச்சிக்கு பெயர் பெற்றது.
    • திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டங்கள் நேற்று முதல் தொடங்கியது.

    நடிகர் விஜய்தேவரகொண்டா -ராஷ்மிகா காதல் திருமணம் நாளை உதய்ப்பூரில் நடக்கிறது. நெருங்கிய உறவினர்கள் 100 பேர் மட்டும் பங்கேற்கும் இந்த திருமண விழா உதய்ப்பூர் நகரத்தில் இருந்து சுமார் 30 கி.மீட்டர் தொலைவில் ஆரவல்லி மலை உச்சியில் அமைந்துள்ள ஐ.டி.சி. மெமென்டோஸ் ரிசார்ட்டில் நடைபெறுகிறது.

    மலைப் பகுதியில் விரிவான தோட்டங்களுக்கு மத்தியில் உள்ள இந்த ஆடம்பர ரிசார்ட் தனியுரிமைக்கு பெயர் பெற்றது. இதில் 117 அறைகள் உள்ளன. சுமார் 3 ஆயிரம் பேர் தங்கலாம். இந்த ஓட்டல் ஆடம்பர நிகழ்ச்சிக்கு பெயர் பெற்றது.

    திருமணத்திற்காக விஜய் தேவரகொண்டா- ராஷ்மிகா குடும்பத்துடன் சில தினங்களுக்கு முன்பு ஐதராபாத்தில் இருந்து உதய்ப்பூர் புறப்பட்டு சென்றனர். திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டங்கள் நேற்று முதல் தொடங்கியது. இன்று ஹல்டி மற்றும் சங்கீத் விழாக்கள் நடைபெறுகிறது.

    நாளை குடும்பத்தினர், நெருங்கிய உறவினர்கள் முன்னிலையில் இருவரது திருமணமும் நடைபெறுகிறது. ஆண்டுக்கணக்கில் காதலில் ரகசியத்தை காத்தது போல் திருமண விழாவிலும் ரகசியம் காக்கின்றனர் விஜய் தேவரகொண்டா-ராஷ்மிகா.

    நீங்கள் ஏற்கனவே ஒரு முடிவுக்கு வந்துவிட்டீர்கள்.

    தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டாவுக்கும் நேஷனல் கிரஷ் என்று வர்ணிக்கப்படும் ராஷ்மிகா மந்தனாவுக்கும் திருமணம் செய்து கொள்ள உள்ளதை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.

    தங்கள் திருமணத்துக்கு The Wedding of ViRosh என்று பெயரிட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். ViRosh என்பது விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா ஆகிய பெயர்களின் சுருக்கமாக ரசிகர்கள் தங்களுக்கு சூட்டியதால் அதை பயன்படுத்தி உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

    அவர்கள் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், "நாங்கள் எதையும் திட்டமிடுவதற்கு முன்பே, எங்களுக்காக எதையும் தேர்ந்தெடுப்பதற்கு முன்பே.. நீங்கள் ஏற்கனவே ஒரு முடிவுக்கு வந்துவிட்டீர்கள். மிகுந்த அன்புடன் எங்களுக்கு ஒரு பெயரைச் சூட்டினீர்கள்.

    எங்களை 'வி்ரோஷ்' என்று அழைத்தீர்கள். எனவே இன்று முழு மனதுடன், எங்கள் திருமணத்திற்கு உங்கள் நினைவாக 'தி வெடிங் ஆஃப் வி்ரோஷ்' என்று பெயரிடுகிறோம். எங்களை இவ்வளவு நேசித்ததற்கு நன்றி. நீங்கள் எப்போதும் எங்கள் வாழ்வின் ஒரு அங்கமே!" என்று பதிவிட்டுள்ளனர்.

    இருப்பினும் எப்போது திருமணம் என்று அவர்கள் அறிவிக்கவில்லை. ஆனால் தகவலின்படி, பிப்ரவரி 26 அன்று மிக நெருக்கமானவர்கள் முன்னிலையில் எளிமையாக நடைபெற உள்ளதாக தெரிகிறது.

    மேலும் மார்ச் 4 அன்று ஹைதராபாத்தில் பிரம்மாண்டமான வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறவுள்ளது என்றும் கூறப்படுகிறது.

    'கீதா கோவிந்தம்', 'டியர் காம்ரேட்' ஆகிய படங்களில் இணைந்து நடித்த இந்த ஜோடி, நீண்ட நாட்களாகக் காதலித்து வந்ததாக கிசுகிசுக்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.    

    • திருமண அழைப்பிதழும் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது.
    • அமிஷ் ஷர்மா இயக்கத்தில் ஷாகித் கபூர் நடிக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக ராஷ்மிகா நடிப்பதாக இருந்தது.

    விஜய் தேவரகொண்டா- ராஷ்மிகா திருமணம் வருகிற 26-ந்தேதி ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள உதய்பூர் அரண்மனையிலும், அதனைத்தொடர்ந்து திருமண வரவேற்பு மார்ச் 4-ந்தேதி நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது.

    இதுதொடர்பான அழைப்பிதழும் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது. திருமணத்துக்கு சில நாட்களே உள்ள நிலையில், இந்தியில் முன்னணி நடிகரின் படத்தில் இருந்து ராஷ்மிகா விலகியிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

    அதாவது அமிஷ் ஷர்மா இயக்கத்தில் ஷாகித் கபூர் நடிக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக ராஷ்மிகா நடிப்பதாக இருந்தது. இதற்கிடையில் ராஷ்மிகாவின் திடீர் விலகல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருமணத்தையொட்டி, இந்த விலகல் முடிவை அவர் எடுத்திருப்பதாக கூறப்படுகிறது.

    எங்களின் இந்தப் புதிய பயணத்திற்கு உங்கள் ஆசி வேண்டும்.

    தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டாவுக்கும் நேஷனல் கிரஷ் என்று வர்ணிக்கப்படும் ராஷ்மிகா மந்தனாவுக்கும் திருமணம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியது. 

    இந்நிலையில் இருவரின் திருமண பத்திரிகை புகைப்படம் இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது. இதன் உண்மைத் தன்மை தெரியாவிட்டாலும், பலரும் இதை வைரல் செய்து வருகின்றனர்.

    அந்தப் பத்திரிகையின்படி, இவர்களது திருமணம் பிப்ரவரி 26-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

    "எங்கள் குடும்பத்தினரின் ஆசியுடன் பிப்ரவரி 26 அன்று ஒரு சிறிய விழாவில் ராஷ்மிகாவும் நானும் இணைகிறோம். எங்களின் இந்தப் புதிய பயணத்திற்கு உங்கள் ஆசி வேண்டும்" என்று அதில் எழுதப்பட்டுள்ளது.

    குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் முன்னிலையில் இந்தத் திருமணம் எளிமையாக நடைபெறும் என்றும், அதைத் தொடர்ந்து மார்ச் 4-ஆம் தேதி ஐதராபாத்தில் பிரம்மாண்டமான வரவேற்பு நிகழ்ச்சிக்குத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

    'கீதா கோவிந்தம்', 'டியர் காம்ரேட்' ஆகிய படங்களில் இணைந்து நடித்த இந்த ஜோடி, நீண்ட நாட்களாகக் காதலித்து வந்ததாக கிசுகிசுக்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.  

    • வரும் 26-ந் தேதி ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள உதய்பூர் அரண்மனையில் திருமணம் நடக்க இருப்பதாக தகவல்.
    • திருமணம் பற்றி இருவருமே அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடாமல் மவுனம் காத்து வருகின்றனர்.

    விஜய் தேவரகொண்டா-ராஷ்மிகா திருமண நிச்சயதார்த்தம் ரகசியமாக முடிந்த நிலையில், இருவரது திருமணம் வருகிற 26-ந் தேதி ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள உதய்பூர் அரண்மனையில் நடக்க இருப்பதாக கூறப்படுகிறது.

    ஆனால் திருமணம் பற்றி இதுவரை இருவருமே அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடாமல் மவுனம் காத்து வருகிறார்கள்.

    இதற்கிடையில் விஜய் தேவரகொண்டா- ராஷ்மிகா ஜோடி தங்களது திருமண நிகழ்வை ஆவணப்படமாக தயாரித்து ஓ.டி.டி. தளத்தில் வெளியிடவும், இதற்காக பெரிய தொகைக்கு ஒப்பந்தம் பேசியிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

    ஏற்கனவே நயன்தாரா-விக்னேஷ் சிவன் தம்பதியும் தங்கள் திருமணத்தை இதேபோல ஆவணப்படமாக தயாரித்து ஓ.டி.டி. தளத்தில் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

    • காதலை எப்படி சொல்லாமல் மறைத்து வந்தார்களோ, அதேபோல திருமண நிச்சயதார்த்தம் குறித்தும் இதுவரை இருவருமே வெளிப்படையாக சொல்லவில்லை.
    • ராஷ்மிகா கையில் இருக்கும் நிச்சய மோதிரம் இதை உறுதி செய்துள்ளது.

    எப்போது தான் இவர்கள் திருமணம் நடக்கும்? என்று எதிர்பார்த்த நிலையில், கடந்த ஆண்டு ஐதராபாத்தில் விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா திருமண நிச்சயதார்த்தம் ரகசியமாக நடந்து முடிந்தது. காதலை எப்படி சொல்லாமல் மறைத்து வந்தார்களோ, அதேபோல திருமண நிச்சயதார்த்தம் குறித்தும் இதுவரை இருவருமே வெளிப்படையாக சொல்லவில்லை. ஆனாலும் ராஷ்மிகா கையில் இருக்கும் நிச்சய மோதிரம் இதை உறுதி செய்துள்ளது.

    இதற்கிடையில் விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா திருமணம் வருகிற 26-ந்தேதி ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள உதய்பூர் அரண்மனையில் நடக்க இருப்பதாக கூறப்படுகிறது.

    இந்தநிலையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட ராஷ்மிகாவிடம், 'உதய்பூரில் வருகிற 26-ந்தேதி திருமணமா?' என்று கேட்கப்பட்டது. இதற்கு அப்படியெல்லாம் இல்லையே... என்று பதிலளித்துள்ளார் ராஷ்மிகா.

    ராஷ்மிகாவின் இந்த திகைப்பூட்டும் பதிலால் மறுபடியும் ரசிகர்களிடையே குழப்பம் ஏற்பட்டுள்ளது.

    • அக்டோபர் மாதம் திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது.
    • வீடியோவை கண்ட ரசிகர்கள், பயனர்கள் பலரும் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

    தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையான ராஷ்மிகாவுக்கும், தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் தேவரகொண்டாவுக்கும் ஐதராபாத்தில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது. ஆனால் காதலை போலவே, இருவரும் இந்த விவகாரம் குறித்து வாயைத் திறக்காமல் ரகசியமாகவே வைத்திருந்தனர். ஆனாலும் ராஷ்மிகா விரலில் இருந்த நிச்சயதார்த்த மோதிரம் அதை சொல்லாமல் சொல்லியது.

    இதனிடையே, தெலுங்கில் நடிகர் ஜெகபதி பாபு நடத்திய நிகழ்ச்சியில் ராஷ்மிகா கலந்துகொண்டார். அப்போது அவரது விரலில் அணிந்திருக்கும் மோதிரம் பற்றி பேச்சு எழுந்தது. இதற்கு ராஷ்மிகா, 'இது என் வாழ்நாளில் முக்கியமான ஒன்று' என்று கண்ணடித்து சிரித்தார்.

    இதனை தொடர்ந்து, விஜய் தேவரகொண்டா- ராஷ்மிகா ஜோடி பிப்ரவரி மாதம் 26-ந்தேதி ராஜஸ்தானின் உதய்பூரில் திருமணம் செய்து கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகின. இருப்பினும் இந்த தகவல்கள் குறித்து இருதரப்பினரும் பதிலளிக்காமல் இருந்து வந்தனர்.

    இந்த நிலையில், விஜய் தேவரகொண்டா- ராஷ்மிகா ஜோடி ராஜஸ்தானின் உதய்பூரில் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் முன்னிலையில் நாளை திருமணம் செய்து கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள வீடியோவில் திருமணத்திற்காக பிரமாண்டமான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. ஆனால் இதற்கு எப்போதும் போல இருதரப்பினரும் பதிலளிக்காமல் மவுனமாக உள்ளனர்.

    மேலும் வீடியோவை கண்ட ரசிகர்கள், பயனர்கள் பலரும் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். 



    • இப்படம் வருகிற செப்டம்பர் மாதம் 11-ந்தேதி உலகம் முழுவதும் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    • வரலாற்றுப் பின்னணியில் உருவாகும் இப்படத்தின் Title Glimpse வீடியோவை ரசிகர்கள் இணையதளத்தில் வைரலாக்கி வருகின்றனர்.

    தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் தேவரகொண்டா தனது 'Taxiwaala' இயக்குனர் ராகுல் சங்க்ரித்யனுடன் மீண்டும் இணைந்துள்ளார். இது விஜய் தேவரகொண்டாவின் 14-வது படமாகும்.

    இந்த நிலையில் விஜய் தேவரகொண்டாவின் புதிய படத்திற்கான தலைப்பு தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி அப்படத்திற்கு 'ரணபாலி' என்று பெயரிடப்பட்டுள்ளது. தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையான ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்து வருகின்றனர். பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இப்படம் வருகிற செப்டம்பர் மாதம் 11-ந்தேதி உலகம் முழுவதும் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    வரலாற்றுப் பின்னணியில் உருவாகும் இப்படத்தின் Title Glimpse வீடியோவை ரசிகர்கள் இணையதளத்தில் வைரலாக்கி வருகின்றனர்.

    இதனிடையே, விஜய் தேவகொண்டா- ராஷ்மிகா மந்தனா இருவரும் அடுத்த மாதம் திருமணம் செய்து கொள்வதாக தகவல்கள் வெளியான நிலையில், இருவரும் இணைந்து நடித்துள்ள இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 



    விஜய் தேவரகொண்டாவின் 14-வது படம் இதுவாகும். ராஷ்மியாக கதாநாயகியாக நடிக்கிறார்.

    விஜய் தேவரகொண்டா தனது புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் இந்தியாவின் சுதந்திரத்திற்கு முன்னதாக ஆங்கிலேயர் இந்தியர்களை எப்படி கொடுமைப்படுத்தினார்கள். ஆங்கிலேயரிடம் இருந்து தனது மக்களை வீரமிக்க இளைஞன் காப்பாற்றும் வகையில் மறைக்கப்பட்ட வரலாற்றை மையமாக கொண்டு இப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடித்து வருகிறார்.

    இது விஜய் தேவரகொண்டாவின் 14-வது படமாகும். இந்த நிலையில் இந்த படத்திற்கான டைட்டிலை வீடியோ வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது. இப்படம் 5 மொழிகளில் வெளியாக உள்ளது. செப்டம்பர் 11-ம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகியது. ராகுல் சங்கிரித்யான் இயக்க, அஜய்-அதுல் இசையமைக்கிறார். மைத்திரி மூவி மேக்கர் நிறுவனம் படத்தை தயாரித்து வருகிறது.

    • படத்திற்கு ’ரவுடி ஜனார்தனா’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.
    • முதல் முறையாக விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார்.

    தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் தேவரகொண்டா கடைசியாக கவுதம் தின்னனுரி இயக்கத்தில் கிங்டம் என்ற படத்தில் நடித்திருந்தார்.

    இந்நிலையில் விஜய் தேவரகொண்டாவின் 15வது படம் ரவி கிரன் கோலா இயக்கத்தில் உருவாகி வருகிறது. இப்படத்தின் டைட்டில் கிலிம்பஸ் தற்போது வெளியாகி உள்ளது. அதன்படி படத்திற்கு 'ரவுடி ஜனார்தனா' எனப் பெயரிடப்பட்டுள்ளது.

    இப்படத்தில் முதல் முறையாக விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார்.

    கிங்டம் படம் விஜய் தேவரகொண்டாவுக்கு கை கொடுக்காத நிலையில் 'ரவுடி ஜனார்தனா' மீது எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.  

    • தன்னுடைய மகிழ்ச்சிக்கான காரணம் பற்றி வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.
    • விஜய் தேவரகொண்டாவும், ராஷ்மிகா மந்தனாவும் ‘கீதாகோவிந்தம்', ‘டியர் காம்ரேட்' ஆகிய படங்களில் இணைந்து நடித்தனர்.

    தென்னிந்திய மொழி திரைப்படங்கள் மட்டுமின்றி, பாலிவுட் ரசிகர்கள் மனதிலும் தனக்கான இடத்தை தக்கவைத்துக் கொண்டவர், ராஷ்மிகா மந்தனா. இவரது நடிப்பில் வெளியான பல படங்கள் பல கோடி வசூல் சாதனையை நிகழ்த்தி இருக்கின்றன. சமீபத்தில் பாலிவுட்டில் ராஷ்மிகா மந்தனா கதையின் நாயகியாக நடித்த 'தி கேர்ள் பிரண்ட்' படமும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது.

    எப்போதும் சிரித்த முகத்துடன் காணப்படும் ராஷ்மிகா மந்தனா, தன்னுடைய மகிழ்ச்சிக்கான காரணம் பற்றி வெளிப்படையாக தெரிவித்துள்ளார். அதில், ''என் மனதில் இருந்த வலியும், வேதனையும் இப்போது மறைந்துவிட்டன. எனக்குள் இப்போது மகிழ்ச்சியான தருணங்கள் மட்டுமே இருக்கின்றன. அதற்கெல்லாம் காரணம், விஜய் தேவரகொண்டா தான். என்னுடைய எல்லா வலிகளுக்கும் அவர்தான் மருந்தாக இருந்திருக்கிறார்" என்று கூறியுள்ளார்.

    விஜய் தேவரகொண்டாவும், ராஷ்மிகா மந்தனாவும் 'கீதாகோவிந்தம்', 'டியர் காம்ரேட்' ஆகிய படங்களில் இணைந்து நடித்தனர். அப்போதில் இருந்தே இருவரும் காதலித்து வருவதாக பேசப்பட்டது. மேலும் இவர்களுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு வரும் பிப்ரவரி 26-ந்தேதி ஜெய்ப்பூர் அரண்மனையில் நடக்க உள்ளதாக கூறப்படுகிறது.

    • பிப்ரவரி மாதம் 26-ந்தேதி ராஜஸ்தானின் உதய்பூரில் திருமணம் செய்து கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகின.
    • இந்த முழு பயணத்திலும் நீங்கள் தனிப்பட்ட முறையில் ஒரு பகுதியாக இருந்திருக்கிறீர்கள்.

    தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையான ராஷ்மிகாவுக்கும், தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் தேவரகொண்டாவுக்கும் ஐதராபாத்தில் கடந்த மாதம் திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது. ஆனால் காதலை போலவே, இருவரும் இந்த விவகாரம் குறித்து வாயைத் திறக்காமல் ரகசியமாகவே வைத்திருந்தனர். ஆனாலும் ராஷ்மிகா விரலில் இருக்கும் நிச்சயதார்த்த மோதிரம் அதை சொல்லாமல் சொல்லியது.

    இதனிடையே, தெலுங்கில் நடிகர் ஜெகபதி பாபு நடத்திய நிகழ்ச்சியில் ராஷ்மிகா கலந்துகொண்டார். அப்போது அவரது விரலில் அணிந்திருக்கும் மோதிரம் பற்றி பேச்சு எழுந்தது. இதற்கு ராஷ்மிகா, 'இது என் வாழ்நாளில் முக்கியமான ஒன்று' என்று கண்ணடித்து சிரித்தார்.

    இதனை தொடர்ந்து, விஜய் தேவரகொண்டா- ராஷ்மிகா ஜோடி அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 26-ந்தேதி ராஜஸ்தானின் உதய்பூரில் திருமணம் செய்து கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகின. இருப்பினும் இந்த தகவல்கள் குறித்து இருதரப்பினரும் பதிலளிக்காமல் இருந்து வந்தனர்.

    இந்த நிலையில், "ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் ஒரு விஜய் தேவரகொண்டா இருப்பார் என்று நான் நம்புகிறேன், ஏனென்றால் அது ஒரு வரம்" என்று ராஷ்மிகா பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    ராஷ்மிகா நடிப்பில் வெளியான 'தி கேர்ள்பிரண்ட்' படத்தின் வெற்றிவிழா ஐதராபாத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் படத்தில் நடித்த நடிகர்கள், பணியாற்றியவர்கள் என பலரும் கலந்து கொண்டனர். மேலும் இந்நிகழ்ச்சியில் விஜய் தேவரெகொண்டாவும் பங்கேற்று இருந்தார்.

    அப்போது நிகழ்ச்சியில் பேசிய ராஷ்மிகா, நீங்கள் (விஜு) ஆரம்பத்திலிருந்தே இந்தப் படத்தின் ஒரு பகுதியாக இருந்து வருகிறீர்கள், படத்தின் வெற்றியிலும் நீங்கள் ஒரு பகுதியாக இருக்கிறீர்கள். இந்த முழு பயணத்திலும் நீங்கள் தனிப்பட்ட முறையில் ஒரு பகுதியாக இருந்திருக்கிறீர்கள். ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் ஒரு விஜய் தேவரகொண்டா இருப்பார் என்று நான் நம்புகிறேன், ஏனென்றால் அது ஒரு வரம் என்று பேசினார்.


    இவ்வாறு ராஷ்மிகா பேசியதும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் ஆரவாரம் செய்தனர். இதுதொடர்பான வீடியோவும் சமூக வலைத்தளங்களில் வைரலானது.



    முன்னதாக, நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகாவுடன் கைகுலுக்கும் போது அவரது கையை பிடித்து முத்தமிட்டது தொடர்பான வீடியோவும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    இருவரும் முதல் முறையாக பொது நிகழ்வில் தங்களது காதலை வெளிப்படுத்தி உள்ளதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர். 




    ×