என் மலர்
சினிமா செய்திகள்

திருமணத்தை ஆவணப்படமாக தயாரிக்க விஜய் தேவரகொண்டா-ராஷ்மிகா ஜோடி திட்டம்
- வரும் 26-ந் தேதி ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள உதய்பூர் அரண்மனையில் திருமணம் நடக்க இருப்பதாக தகவல்.
- திருமணம் பற்றி இருவருமே அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடாமல் மவுனம் காத்து வருகின்றனர்.
விஜய் தேவரகொண்டா-ராஷ்மிகா திருமண நிச்சயதார்த்தம் ரகசியமாக முடிந்த நிலையில், இருவரது திருமணம் வருகிற 26-ந் தேதி ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள உதய்பூர் அரண்மனையில் நடக்க இருப்பதாக கூறப்படுகிறது.
ஆனால் திருமணம் பற்றி இதுவரை இருவருமே அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடாமல் மவுனம் காத்து வருகிறார்கள்.
இதற்கிடையில் விஜய் தேவரகொண்டா- ராஷ்மிகா ஜோடி தங்களது திருமண நிகழ்வை ஆவணப்படமாக தயாரித்து ஓ.டி.டி. தளத்தில் வெளியிடவும், இதற்காக பெரிய தொகைக்கு ஒப்பந்தம் பேசியிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஏற்கனவே நயன்தாரா-விக்னேஷ் சிவன் தம்பதியும் தங்கள் திருமணத்தை இதேபோல ஆவணப்படமாக தயாரித்து ஓ.டி.டி. தளத்தில் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.
Next Story






