என் மலர்
நீங்கள் தேடியது "Vijay Devarakonda"
- தன்னுடைய மகிழ்ச்சிக்கான காரணம் பற்றி வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.
- விஜய் தேவரகொண்டாவும், ராஷ்மிகா மந்தனாவும் ‘கீதாகோவிந்தம்', ‘டியர் காம்ரேட்' ஆகிய படங்களில் இணைந்து நடித்தனர்.
தென்னிந்திய மொழி திரைப்படங்கள் மட்டுமின்றி, பாலிவுட் ரசிகர்கள் மனதிலும் தனக்கான இடத்தை தக்கவைத்துக் கொண்டவர், ராஷ்மிகா மந்தனா. இவரது நடிப்பில் வெளியான பல படங்கள் பல கோடி வசூல் சாதனையை நிகழ்த்தி இருக்கின்றன. சமீபத்தில் பாலிவுட்டில் ராஷ்மிகா மந்தனா கதையின் நாயகியாக நடித்த 'தி கேர்ள் பிரண்ட்' படமும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது.
எப்போதும் சிரித்த முகத்துடன் காணப்படும் ராஷ்மிகா மந்தனா, தன்னுடைய மகிழ்ச்சிக்கான காரணம் பற்றி வெளிப்படையாக தெரிவித்துள்ளார். அதில், ''என் மனதில் இருந்த வலியும், வேதனையும் இப்போது மறைந்துவிட்டன. எனக்குள் இப்போது மகிழ்ச்சியான தருணங்கள் மட்டுமே இருக்கின்றன. அதற்கெல்லாம் காரணம், விஜய் தேவரகொண்டா தான். என்னுடைய எல்லா வலிகளுக்கும் அவர்தான் மருந்தாக இருந்திருக்கிறார்" என்று கூறியுள்ளார்.
விஜய் தேவரகொண்டாவும், ராஷ்மிகா மந்தனாவும் 'கீதாகோவிந்தம்', 'டியர் காம்ரேட்' ஆகிய படங்களில் இணைந்து நடித்தனர். அப்போதில் இருந்தே இருவரும் காதலித்து வருவதாக பேசப்பட்டது. மேலும் இவர்களுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு வரும் பிப்ரவரி 26-ந்தேதி ஜெய்ப்பூர் அரண்மனையில் நடக்க உள்ளதாக கூறப்படுகிறது.
- புட்டபர்த்திக்கு சென்றுவிட்டு ஐதராபாத் திரும்பியபோது நடிகர் விஜய் தேவரகொண்டா சென்ற கார் விபத்தில் சிக்கியுள்ளது.
- செய்திகள் உங்களை மன அழுத்தத்துக்கு உள்ளாக்க விடாதீர்கள்.
புட்டபர்த்திக்கு சென்றுவிட்டு ஐதராபாத் திரும்பியபோது நடிகர் விஜய் தேவரகொண்டா சென்ற கார் விபத்தில் சிக்கியுள்ளது.
தெலுங்கானா மாநிலம் கத்வால் பகுதி தேசிய நெடுஞ்சாலையில் கார் சென்றபோது கால்நடைகளை ஏற்றிச் சென்ற வாகனம் மோதி விபத்துக்குள்ளானது.
கார் சேதமடைந்த நிலையில், விஜய் தேவரகொண்டா காயங்கள் இன்றி உயிர் தப்பியதாக தகவல் வெளியானது.
இந்நிலையில் தான் நலமாக உள்ளதாக விஜய் தேவரகொண்டா தனது எக்ஸ் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள பதிவில், எல்லாமே நல்லபடியாக இருக்கிறது.
கார் சேதமடைந்தது, ஆனால் நாங்கள் அனைவரும் நலமாக இருக்கிறோம். ஒரு ஸ்ட்ரென்த் உடற்பயிற்சியும் செய்துவிட்டு இப்பதான் வீட்டிற்குத் திரும்பி வந்தேன்.
என் தலை வலிக்கிறது, ஆனால் பிரியாணி மற்றும் தூக்கத்தால் சரி செய்ய முடியாதது என்று எதுவும் இல்லை. அதனால் உங்களுக்கெல்லாம் என் பெரிய அணைப்புகளையும் அன்பையும் கொடுக்கிறேன். செய்திகள் உங்களை மன அழுத்தத்துக்கு உள்ளாக்க விடாதீர்கள்." என்று தெரிவித்தார்.
விஜய் தேவரகொண்டாவுக்கும் நடிகை ராஷ்மிக்கா மந்தனாவுக்கும் அண்மையில் ஐதராபாத்தில் உள்ள இல்லத்தில் நிச்சயதாரதம் நடந்ததாக தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.
நடிகர் விஜய் தேவரகொண்டா சென்ற கார் விபத்தில் சிக்கியது.
தெலுங்கானா மாநிலம் கத்வால் பகுதி தேசிய நெடுஞ்சாலையில் விஜய் தேவரகொண்டா கார் சென்றபோது கால்நடைகளை ஏற்றிச் சென்ற வாகனம் மோதி விபத்துக்குள்ளானது.
கார் சேதமடைந்த நிலையில், விஜய் தேவரகொண்டா காயங்கள் இன்றி உயிர் தப்பினார்.
புட்டபர்த்திக்கு சென்றுவிட்டு ஐதராபாத் திரும்பியபோது விஜய் தேவரகொண்டா சென்ற கார் விபத்தில் சிக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சிறிய பட்ஜெட்டில் உருவான "லிட்டில் ஹார்ட்ஸ்" (Little Hearts), புதுமுகங்களான மௌலி தனுஜ் பிரஷாந்த் மற்றும் சிவானி நாகரம் நடித்திருக்கும் இப்படம், திரையரங்குகளில் செம வெற்றியைப் பதிவு செய்து வருகிறது.
படத்தின் முதல் நாள் வசூலாக 2 கோடி ரூபாய் வசூலித்தது, அமெரிக்காவில் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் ஷோக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. திரைப்படத்தின் வசூல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
படத்தில் இடம் பெற்ற நகைச்சுவை காட்சிகள் அதிகமாக வொர்க் அவுட் ஆகியுள்ளதால் இளைஞர்கள் கூட்டம் படத்திற்கு பெரும் ஆதரவு கொடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் படத்தை பார்த்த நானி படக்குழுவை பாராட்டி அவரது எக்ஸ் தளத்தில் பதிவிட்டார். அந்த வரிசையில் நடிகர் விஜய் தேவரகொண்டா லிட்டில் ஹார்ட்ஸ் படக்குழுவை நேரில் அழைத்து பாராட்டியுள்ளார். அந்த புகைப்படங்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகிரது.
- விஜய் தேவரகொண்டா கவுதம் தின்னனுரி இயக்கத்தில் கிங்டம் என்ற படத்தில் நடித்துள்ளார்.
- இப்படம் மக்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்றது.
தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் தேவரகொண்டா கவுதம் தின்னனுரி இயக்கத்தில் கிங்டம் என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் பாக்யஸ்ரீ போர்ஸ் கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். ஜூலை 31 அன்று வெளியான இப்படம் மக்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்றது.
இப்படம் அதிரடி ஆக்சன் என்டர்டெய்னராக உருவாகியுள்ளது. ஒரு அண்டர் கவர் ஸ்பையாக விஜய் தேவரகொண்டா நடித்துள்ளார். திரைப்படம் வெளியான முதல் நாளில் 39 கோடி ரூபாய் வசூலித்தது. திரைப்படம் இதுவரை உலகளவில் 76 கோடி ரூபாய் வசூலித்துள்ளது.
இந்நிலையில் படத்தின் ஓடிடி ரிலீசை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி திரைப்படம் வரும் 27 ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது.
- கவுதம் தின்னனுரி இயக்கத்தில் கிங்டம் என்ற படத்தில் விஜய் தேவரகொண்டா நடித்துள்ளார்.
- கிங்டம் திரைப்படம் வெளியான முதல் நாளில் 39 கோடி ரூபாய் வசூலித்தது.
தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் தேவரகொண்டா கவுதம் தின்னனுரி இயக்கத்தில் கிங்டம் என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் பாக்யஸ்ரீ போர்ஸ் கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். ஜூலை 31 அன்று வெளியான இப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் வெளியானது. இப்படம் அதிரடி ஆக்சன் என்டர்டெய்னராக உருவாகியுள்ளது. ஒரு அண்டர் கவர் ஸ்பையாக விஜய் தேவரகொண்டா நடித்துள்ளார். திரைப்படம் வெளியான முதல் நாளில் 39 கோடி ரூபாய் வசூலித்தது.
இந்நிலையில் படத்தின் 3 நாள் வசூல் விவரத்தை படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது. அதன்படி திரைப்படம் உலகளவில் 67 கோடி ரூபாய் வசூலித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இன்னும் வரும் நாட்களில் திரைப்படம் அதிகம் வசூலிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
- கவுதம் தின்னனுரி இயக்கத்தில் கிங்டம் என்ற படத்தில் விஜய் தேவரகொண்டா நடித்துள்ளார்.
- திரைப்படம் நேற்று வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் தேவரகொண்டா கவுதம் தின்னனுரி இயக்கத்தில் கிங்டம் என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் பாக்யஸ்ரீ போர்ஸ் கதாநாயகியாக நடித்துள்ளார். அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார். திரைப்படம் நேற்று வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் வெளியானது. இப்படம் அதிரடி ஆக்சன் என்டர்டெய்னராக உருவாகியுள்ளது. ஒரு அண்டர் கவர் ஸ்பையாக விஜய் தேவரகொண்டா நடித்துள்ளார். திரைப்படம் வெளியான முதல் நாளில் 39 கோடி ரூபாய் வசூலித்தது.

இந்நிலையில் படத்தின் இரண்டு நாள் வசூல் விவரத்தை படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது. அதன்படி திரைப்படம் உலகளவில் 53 கோடி ரூபாய் வசூலித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இன்னும் வரும் நாட்களில் திரைப்படம் அதிகம் வசூலிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
- விஜய் தேவரகொண்டா அடுத்ததாக கவுதம் தின்னனுரி இயக்கத்தில் கிங்டம் என்ற படத்தில் நடித்துள்ளார்
- திரைப்படம் நேற்று வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் தேவரகொண்டா கவுதம் தின்னனுரி இயக்கத்தில் கிங்டம் என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் பாக்யஸ்ரீ போர்ஸ் கதாநாயகியாக நடித்துள்ளார். அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார். திரைப்படம் நேற்று வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் வெளியானது. இப்படம் அதிரடி ஆக்சன் என்டர்டெய்னராக உருவாகியுள்ளது. ஒரு அண்டர் கவர் ஸ்பையாக விஜய் தேவரகொண்டா நடித்துள்ளார்.

இந்நிலையில் படத்தின் முதல் நாள் வசூல் விவரத்தை படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது. அதன்படி திரைப்படம் உலகளவில் 39 கோடி ரூபாய் வசூலித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இன்னும் வரும் நாட்களில் திரைப்படம் அதிகம் வசூலிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
- இப்படத்தின் கதை 1991 ஆம் ஆண்டில் நடைப்பெறுகிறது.
- விஜய் தேவரகொண்டா கான்ஸ்டபுளாக வேலை பார்க்கிறார்.
கதைக்களம்
இப்படத்தின் கதை 1991 ஆம் ஆண்டில் நடைப்பெறுகிறது. விஜய் தேவரகொண்டா கான்ஸ்டபுளாக வேலை பார்க்கிறார். சிறு வயதில் இருந்தே அவரது அண்ணனை தேடி வருகிறார் விஜய் தேவரகொண்டா. அப்பொழுது விஜய் தேவரகொண்டாவை ஒரு பெரிய டிரக் மாஃபியா நடத்தும் ஒரு கும்பலில் அண்டர்கவர் ஸ்பையாக செல்ல கூறுகின்றனர். முதலில் இதற்கு விஜய் தேவரகொண்டா மறுக்கிறார். அதன்பின் அந்த கும்பலின் தலைவனாக இருப்பவர் இத்தனை வருடங்கள் இவர் தேடி வரும் அவரது அண்ணன் என தெரிய வருவதால் போலீஸ் கூறும் விஷயங்களுக்கு ஒப்புக்கொள்கிறார்.
இதனால் ஒரு கைதி போல் இலங்கைக்கு சென்று தன் அண்ணனின் கும்பலில் சேர்ந்துக் கொள்கிறார்.இதற்கு அடுத்து என்ன ஆனது இவரது அண்ணனை காப்பாற்றினாரா? இல்லை தன் கடமையை ஆற்றினாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.
நடிகர்கள்
விஜய் தேவரகொண்டா இப்படத்தில் சூரி என்ற கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார் என கூறுவதை விட வாழ்ந்துள்ளார் என்றே கூற வேண்டும்.தன் அண்ணனை தேடி ஒரு ஸ்பை ஆக அவர் கூட்டத்திற்குள் சென்று, அவர் அண்ணனுக்கு தெரியாமல் விஷயத்தை தெரிந்துக்கொள்ள போராடும் தருணம் என அவரது கெரியர் பெஸ்ட் நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.
அண்ணனாக நடித்துள்ள சத்ய தேவ் இவருக்கு இணையாக குறையாத நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். எமோஷனல் காட்சிகளில் நன்றாக ஸ்கோர் செய்துள்ளார்.
பாக்யஸ்ரீ கதாப்பாத்திரம் படத்தில் எதற்காக இருக்கிறது என தெளிவில்லாமல் இருந்தாலும அவரது பங்கை அழகாக வந்து அளவாக நடித்துள்ளார். வில்லன் கதாப்பாத்திரத்தில் முருகன் கவனம் ஈர்த்துள்ளார்.
இயக்கம்
இரண்டு எதிர்மறை துறைகளில் உள்ள அண்ணன் தம்பி கதையை மையமாக வைத்து படத்தை இயக்கியுள்ளார் கவுதம் தின்னனுரி. படத்தின் முதல் பாதி நன்றாக செல்கிறது ஆனால் இரண்டாம் பாதி அப்படி இல்லாதது வருத்தம் அளிக்கிறது . இரண்டாம் பாதி திரைக்கதையில் கூடுதல் கவனம் செலுத்திருக்க வேண்டும். சில இடங்களில் நம் பொறுமையை சோதிக்கிறது.
ஒளிப்பதிவு
கிரிஷ் கங்காதரன் மற்றும் ஜோமோன் டி ஜான் இருவரின் ஒளிப்பதிவும் மிகவும் எதார்த்தமாக படம்பிடித்து காட்டியுள்ளனர். குறிப்பாக ஆக்ஷன் காட்சிகளில் மிரட்டியுள்ளனர்.
இசை
அனிருத் - இன் பின்னணி இசை படத்திற்கு பெரிய பலம்.
தயாரிப்பு
சித்தாரா எண்டெர்டெயின்மண்ட்ஸ் தயாரிப்பு நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.
ரேட்டிங்- 3/5
- இப்படம் அதிரடி ஆக்சன் என்டர்டெய்னராக உருவாகியுள்ளது.
- படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் தேவரகொண்டா கவுதம் தின்னனுரி இயக்கத்தில் கிங்டம் என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் பாக்யஸ்ரீ போர்ஸ் கதாநாயகியாக நடித்துள்ளார். அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார்.
இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது. 'கிங்டம்' திரைப்படம் இரண்டு பாகமாக வெளியாகும் என தயாரிப்பாளர் நாக வம்சி தெரிவித்துள்ளார். இப்படம் அதிரடி ஆக்சன் என்டர்டெய்னராக உருவாகியுள்ளது.
திரைப்படம் வருகிற 31-ம் தேதி வெளியாகிறது. படத்தின் டிரெய்லர் அண்மையில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. ஒரு அண்டர் கவர் ஸ்பையாக விஜய் தேவரகொண்டா நடித்துள்ளார். படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் படத்தின் இசை வெளியீடு விழா நேற்று ஐதராபாத்தில் மிகவும் பிரம்மாண்டமாக நடைப்பெற்றது. அப்போது விஜய் தேவரகொண்டா கூறியதாவது "நான் சென்னையில் இருப்பதால், சூரிய அண்ணாவுக்கு நன்றி தெரிவிக்க இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்கிறேன். நாங்கள் முதலில் டீசரை வெளியிட்டபோது, எனது இயக்குனர் சூரியா அண்ணாவின் குரலை வசனகர்த்தாவாகக் கேட்க விரும்பினார். தாரக் (என்.டி.ஆர் ஜூனியர்) மற்றும் ரன்பீர் கபூர் அவர்கள் தெலுங்கு மற்றும் இந்தியில் டீசருக்கு குரல் கொடுத்தனர்.
மிகவும் சக்திவாய்ந்த குரல் கொண்டவர் என்பதால், தமிழில் சூர்யா அண்ணாவை நாங்கள் விரும்பினோம். உதவி கேட்பது எனக்குப் பிடிக்காததால், நான் அழைக்க விரும்பவில்லை, ஆனால் எனது இயக்குனரின் வேண்டுகோளின் பேரில், நான் விருப்பமின்றி சூர்யா அண்ணாவை அழைத்து, நான் கேட்க போகும் உதவியை மறுக்கச் சொன்னேன். ஆனால் நான் விளக்கியபோது, அவர் உடனடியாக எந்தவித யோசனி இல்லாமல் எனக்கு உதவினார். அதற்காக நான் அவருக்கு மிகவும் நன்றியுள்ளவனாக இருப்பேன்; இட் மீன்ஸ் அ எ லாட், தேங்க் யூ சோ மச் அண்ணா " என கூறினார்.
படத்தின் பாடலான ரகிலே ரகிலே லிரிக் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. படத்திற்கு தணிக்கை குழு யு/ஏ சான்றிதழை வழங்கியுள்ளது. படத்தின் நேரளவு 2 மணி நேரம் 40 நிமிடங்களாக முடிவு செய்யப்பட்டுள்ளது. படத்தின் டிக்கெட் முன்பதிவுகள் தொடங்கி வேகமாக நடைப்பெற்று வருகிறது.
- நடிகரான விஜய் தேவரகொண்டா கவுதம் தின்னனுரி இயக்கத்தில் கிங்டம் என்ற படத்தில் நடித்துள்ளார்.
- அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார்.
தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் தேவரகொண்டா கவுதம் தின்னனுரி இயக்கத்தில் கிங்டம் என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் பாக்யஸ்ரீ போர்ஸ் கதாநாயகியாக நடித்துள்ளார். அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார்.
இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது. 'கிங்டம்' திரைப்படம் இரண்டு பாகமாக வெளியாகும் என தயாரிப்பாளர் நாக வம்சி தெரிவித்துள்ளார். இப்படம் அதிரடி ஆக்சன் என்டர்டெய்னராக உருவாகியுள்ளது.
திரைப்படம் வருகிற 31-ம் தேதி வெளியாகிறது. படத்தின் டிரெய்லர் அண்மையில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. ஒரு அண்டர் கவர் ஸ்பையாக விஜய் தேவரகொண்டா நடித்துள்ளார். படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் படத்தின் இசை வெளியீடு விழா நேற்று ஐதராபாத்தில் மிகவும் பிரம்மாண்டமாக நடைப்பெற்றது. அதில் அனிருத் பாடல் நேரலையாக பாடினார். அதை ரசிகர்கள் மிகவும் சந்தோஷத்தில் கொண்டாடினார்கள். அப்போது அனிருத் கூறியதாவது " நான் இதுவரை இப்படி எந்த திரைப்படத்திற்கும் சொன்னதில்லை. கிங்டம் திரைப்படம் விஜய் தேவரகொண்டா திரைப்பயணத்தில் ஒரு மைல் கல் திரைப்படமாக இருக்கும்"
படத்தின் பாடலான ரகிலே ரகிலே லிரிக் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. படத்திற்கு தணிக்கை குழு யு/ஏ சான்றிதழை வழங்கியுள்ளது. படத்தின் நேரளவு 2 மணி நேரம் 40 நிமிடங்களாக முடிவு செய்யப்பட்டுள்ளது. படத்தின் டிக்கெட் முன்பதிவுகள் தொடங்கி வேகமாக நடைப்பெற்று வருகிறது.
- முன்னணி நடிகரான விஜய் தேவரகொண்டா கவுதம் தின்னனுரி இயக்கத்தில் கிங்டம் என்ற படத்தில் நடித்துள்ளார்.
- திரைப்படம் வருகிற 31-ம் தேதி வெளியாகிறது.
தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் தேவரகொண்டா கவுதம் தின்னனுரி இயக்கத்தில் கிங்டம் என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் பாக்யஸ்ரீ போர்ஸ் கதாநாயகியாக நடித்துள்ளார். அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார்.
இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது. 'கிங்டம்' திரைப்படம் இரண்டு பாகமாக வெளியாகும் என தயாரிப்பாளர் நாக வம்சி தெரிவித்துள்ளார். இப்படம் அதிரடி ஆக்சன் என்டர்டெய்னராக உருவாகியுள்ளது.
திரைப்படம் வருகிற 31-ம் தேதி வெளியாகிறது. படத்தின் டிரெய்லர் அண்மையில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. ஒரு அண்டர் கவர் ஸ்பையாக விஜய் தேவரகொண்டா நடித்துள்ளார். படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் படத்தின் இசை வெளியீடு விழா நேற்று ஐதராபாத்தில் மிகவும் பிரம்மாண்டமாக நடைப்பெற்றது. படத்தின் பாடலான ரகிலே ரகிலே லிரிக் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்பாடலை கிருஷ்ண காந்த் வரிகளில் சித்தார்த் பஸ்ருர் பாடியுள்ளார்.
படத்திற்கு தணிக்கை குழு யு/ஏ சான்றிதழை வழங்கியுள்ளது. படத்தின் நேரளவு 2 மணி நேரம் 40 நிமிடங்களாக முடிவு செய்யப்பட்டுள்ளது. படத்தின் டிக்கெட் முன்பதிவுகள் தொடங்கி வேகமாக நடைப்பெற்று வருகிறது.






