search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Atlee"

    • ஷாருக்கானை வைத்து அவர் இயக்கிய ஜவான் படம் சர்வதேச அளவில் வெளியாகி வரவேற்பை பெற்றது
    • விஜய் நடித்த தெறி படத்தை இந்தி மொழியில் நடிகரான வருண் தவான் வைத்து ரீமேக் செய்துவருகிறார்.

    அட்லி தமிழ் திரை உலகத்தில் ஒலித்துக் கொண்டிருந்த பெயர் இன்று இந்திய திரை உலகமே உச்சரிக்கும் பெயராக உயர்ந்து நிற்கிறது.

    ரஜினி நடித்த எந்திரன், விஜய் நடித்த நண்பன் ஆகிய படங்களில் ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணியாற்றி ராஜாராணி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் அட்லி. தொடர்ந்து விஜய் நடித்த தெறி, மெர்சல், பிகில் ஆகிய படங்களை இயக்கினார்.

    இந்த படங்களுக்கு கிடைத்த வெற்றியை அடுத்து அட்லியின் மார்க்கெட் உச்சத்தை அடைந்தது. இந்த நிலையில் பிரியாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட அட்லி இந்தி திரை உலகில் தடம் பதித்தார்.

    ஷாருக்கானை வைத்து அவர் இயக்கிய ஜவான் படம் சர்வதேச அளவில் வெளியாகி வரவேற்பை பெற்றதுடன் ரூ.1,200 கோடிக்கு மேல் வசூலில் சாதனை படைத்தது. ஜவானுக்காக பல புகழையும் பல விருதுகளையும் அட்லீக்கு பெற்றுக் கொடுத்தது.

    இதைத் தொடர்ந்து அடுத்த கட்டமாக மும்பையில் அலுவலகம் தொடங்கியுள்ளார். விஜய் நடித்த தெறி படத்தை இந்தி மொழியில் நடிகரான வருண் தவான் வைத்து ரீமேக் செய்துவருகிறார். இப்படத்தில் கீர்த்தி சுரேஷ், ராஜ்பால் யாதவ், வமிக்கா கபி போன்ற முக்கிய பிரபலங்கள் நடித்து வருகின்றனர்.

    அடுத்ததாக ஹாலிவுட் படங்களை அட்லி இயக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. என் வெற்றிக்கு முக்கிய காரணமே எனது மனைவி பிரியாதான் என பல மேடைகளில் பேசி வருகிறார். சமூக வலைதளங்களில் ஆர்வம் கொண்ட அட்லியும், பிரியாவும் விதவிதமான ஸ்டைலில் உடைகளில் 'போட்டோ சூட்' எடுத்து சமீப காலமாக வெளியிட்டு வருகின்றனர்.

    அதில் அவரது மனைவியான பிரியா இன்று அவரது குழந்தையை தூக்கி கொஞ்சிய படியே வாரிசு படத்தை பார்ப்பதுப்போல் இருக்கும் வீடியோவை அட்லி அவரது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • சமீபத்தில் கொச்சியில் வனிதா பிலிம் பேர் அவார்ட் வழங்கும் விழா நடைப்பெற்றது.
    • மோகன் லால் அந்த விழாவில் ஷாருக்கான் நடித்து வெளியான ஜவான் திரைப்படத்தின் பாடலான ஜிந்தா பண்டா பாடல் மற்றும் ரஜினிகாந்த நடிப்பில் வெளிவந்த ஜெயிலர் படத்தின் பாடலான ஹுக்கும் பாடலுக்கு நடனமாடினார்.

    மலையாள திரையுலகில் மிகப்பெரிய நடிகர்களாக இருப்பவர் மோகன்லால் மற்றும் மம்மூட்டி. இவர்களுக்கென தனி ரசிகர்கள் பட்டாலமே இருக்கின்றன. எவ்வளவு பெரிய நடிகர்களாக இருந்தாலும் அவர்களுக்குள் என்றுமே போட்டி பொறாமை என்று இருந்ததே இல்லை.

    அவர்கள் இருவரும் இணைந்து பலப் படங்களில் ஒன்றாக நடித்துள்ளனர். திரையிலும் சரி நிஜ வாழ்க்கையிலும் சரி அவர்களுக்குள் இருக்கும் நட்பு பந்தம் மிகவும் அழகானது.

    சமீபத்தில் கொச்சியில் வனிதா பிலிம் பேர் அவார்ட் வழங்கும் விழா நடைப்பெற்றது. அதில் பல திரைப்பிரபலங்கள் கலந்து கொண்டனர். மமூட்டி மற்றும் மோகன்லால் அதில் பங்கேற்றனர். மோகன் லால் அந்த விழாவில் ஷாருக்கான் நடித்து வெளியான ஜவான் திரைப்படத்தின் பாடலான ஜிந்தா பண்டா பாடல் மற்றும் ரஜினிகாந்த நடிப்பில் வெளிவந்த ஜெயிலர் படத்தின் பாடலான ஹுக்கும் பாடலுக்கு நடனமாடினார்.

    மோகன்லால் ஆடிய நடன வீடியோ மோகன்லால் ரசிகர்களின் எக்ஸ் பக்கத்தில் வெளியிடப்பட்டு வைரலாகியது. அதைப் பார்த்த ஷாருக்கான் அவரது எக்ஸ் பக்கத்தில்

    'இந்தப் பாடலை இப்போது எனக்கு மிகவும் ஸ்பெஷலாக மாற்றியதற்கு நன்றி மோகன்லால் சார். நான் உங்களைப்போல் பாதி நன்றாகச் ஆடியிருக்க விரும்புகிறேன். லவ் யூ சார் மற்றும் உங்கள் வீட்டின் இரவு உணவிற்காக காத்திருக்கிறேன். நீங்கள் தான் ஒர்ஜினல் ஜிந்தா பண்டா" என்ற பதிவை பகிர்ந்துள்ளார்.

    அதற்கு மோகன்லால் பதிலளிக்கும் வகையில் அன்புள்ள @iamsrk, உங்களைப் போல் யாரும் நடனமாட முடியாது! நீங்கள் எப்போதும் உங்கள் உன்னதமான, ஒப்பற்ற பாணியில் OG ஜிந்தா பண்டாவாக இருப்பீர்கள். உங்கள் அன்பான வார்த்தைகளுக்கு நன்றி. மேலும், வெறும் இரவு உணவா? காலை உணவுக்கு மேல் ஏன் ஜிந்தா பண்டாவை விரும்பக்கூடாது? என்று பதிலலித்து எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    அந்த விருது வழங்கும் விழாவில் மம்மூடிக்கு சிறந்த நடிகருக்கான விருதை வென்றார் அதை மோகன்லால் அவருக்கு வழங்கினார். விருதை வாங்கி கொண்டு மமூட்டி "நான் இந்த திரையுலகில் 42 வருடங்களாக இருக்கிறேன். என்னோடு இத்தனை காலங்கள் பயணித்து தோளோடு தோள் நின்று இருப்பது மோகன்லால் ஆவார், அவர் திறமையான நடிகர், நல்ல நடனமாட கூடியவர் எல்லாத்தையும் சிறப்பாக செய்பவர்" என்று கூறிய பிறகு மம்மூட்டி மோகன்லால் கன்னத்தில் முத்தம் கொடுத்தார். அதைப் பெற்றுக் கொண்ட மோகன்லால் அதே அன்போடு மம்மூட்டி கன்னத்திலும் முத்தம் கொடுத்தார். இப்புகைப்ப்டம் தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நேற்று ஐஸ்வர்யா ஷங்கர் - தருண் கார்த்திகேயன் திருமணம் காலை இனிதே நடைபெற்றது.
    • பிரபல இயக்குனர் மற்றும் நடிகர்கள் உள்ளிட்ட பலர் இத்திருமணத்திற்கு வருகை தந்து மணமக்களை வாழ்த்தினர்.

    கடந்த பிப்ரவரி மாதம், உதவி இயக்குனர் தருண் கார்த்திகேயனுடன் ஐஸ்வர்யாவுக்கு திருமண நிச்சயதார்த்த ஏற்பாடுகள் நடந்தது. நேற்று ஐஸ்வர்யா ஷங்கர் - தருண் கார்த்திகேயன் திருமணம் காலை இனிதே நடைபெற்றது.

    மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அவரின் மனைவியான துர்கா ஸ்டாலின் மணமக்களை நேரில் சென்று வாழ்த்தினர். பிரபல இயக்குனர் மற்றும் நடிகர்கள் உள்ளிட்ட பலர் இத்திருமணத்திற்கு வருகை தந்து மணமக்களை வாழ்த்தினர்.

    நேற்று இரவு நடந்த கல்யாண ரிசப்ஷனில் மொத்த திரையுலக பிரபலங்களும் கலந்துக் கொண்டு மணமக்களை வாழ்த்தினர். ஷங்கர் படத்தில் பிரமாண்டத்தை காண்பித்து நாம் பார்த்து இருக்கிறோம்,. ஆனால் நிஜத்தில் ஒரு பிரமாண்டமான கல்யாணத்தை தன் மகளுக்காக நடத்தி இருக்கிறார்.

     

    லோகேஷ் கனகராஜ், சிவகார்த்திகேயன், ரன்வீர் சிங், அட்லீ, வெற்றிமாறன், ஏ.ஆர் ரகுமான், மோஹன்லால், நெல்சன் திலிப்குமார், அனிருத், விஜய் சேதுபதி, சிரஞ்சீவி, காஜல் அகர்வால், கீர்த்தி சுரேஷ் மற்றும் பலர் கலந்துக் கொண்டனர்.

    அதைத்தொடர்ந்து  ரன்வீர் சிங் பாட்டு டீ.ஜே கவுதமிடம் வாத்தி கம்மிங் பாடலை ஒலிக்க செய்து , மகிழ்ச்சியாக மணமக்களான ஐஷ்வர்யா ஷங்கர் மற்றும் தருண் கார்த்திகேயனுடன் குத்தாட்டம் ஆடினார். இவர்களுடன் அதிதி ஷங்கர் மற்றும் அட்லீ இணைந்து ஆடினர்.

    • கடந்த பிப்ரவரி மாதம், உதவி இயக்குனர் தருண் கார்த்திகேயனுடன் ஐஸ்வர்யாவுக்கு திருமண நிச்சயதார்த்த ஏற்பாடுகள் நடந்தது.
    • பிரபல இயக்குனர் மற்றும் நடிகர்கள் உள்ளிட்ட பலர் இத்திருமணத்திற்கு வருகை தந்து மணமக்களை வாழ்த்தினர்.

    பிரபல இயக்குநர் ஷங்கருக்கு 2 மகள்கள் உள்ளனர். மூத்த மகள் ஐஸ்வர்யா. இளைய மகள் அதிதி ஷங்கர் மருத்துவம் படித்து விட்டு, சினிமா ஆசையால் 'விருமன்' படத்தின் மூலம் நடிகையானார். தற்பொழுது முன்னணி நடிகர்களுடன் நடித்து வருகிறார்.

    கடந்த பிப்ரவரி மாதம், உதவி இயக்குனர் தருண் கார்த்திகேயனுடன் ஐஸ்வர்யாவுக்கு திருமண நிச்சயதார்த்த ஏற்பாடுகள் நடந்தது. இன்று ஐஸ்வர்யா ஷங்கர் - தருண் கார்த்திகேயன் திருமணம் காலை இனிதே நடைபெற்றது.

    மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அவரின் மனைவியான துர்கா ஸ்டாலின் மணமக்களை நேரில் சென்று வாழ்த்தினர். பிரபல இயக்குனர் மற்றும் நடிகர்கள் உள்ளிட்ட பலர் இத்திருமணத்திற்கு வருகை தந்து மணமக்களை வாழ்த்தினர்.

     

    நடிகர் ரஜினிகாந்த, கமல்ஹாசன், சூர்யா, கார்த்தி, விக்ரம், நயன்தாரா, விக்னேஷ் சிவன், கீர்த்தி சுரேஷ் அர்ஜூன் மற்றும் பலர் நேரில் சென்று மணமக்களை வாழ்த்தினர்.

     

     

     

    இயக்குனர் பாரதிராஜா, மணிரத்னம், பாக்யராஜ், வாசு, கே.எஸ் ரவிக்குமார், ஹரி ஆகியோர் குடும்பத்துடன் நேரில் சென்று வாழ்த்தினர்.

    மணமக்களை வாழ்த்த வந்தவர்களை இயக்குனர் லிங்குசாமி, இயக்குனர் அட்லி, இயக்குனர் வசந்த பாலன், நடிகர் பரத், மேலாளர் தங்கதுரை ஆகியோர் வரவேற்றனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • ஜீவா நடிப்பில் வெளிவந்த ’சங்கிலி புங்கிலி கதவ தொற’ படத்தை இதற்கு முன் அட்லீ தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
    • அட்லீ தனது "ஏ ஃபார் ஆப்பிள்" என்ற நிறுவனம் மூலம் படங்களையும் தயாரித்து வருகிறார்.

    ஆர்யா, சந்தானம் , நசிரியா, நயன்தாரா, ஜெய் நடிப்பில் 2013 வெளிவந்த ராஜா ராணி படத்தை இயக்கி தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமானார் அட்லீ.

    பின்னர், நடிகர் விஜய் நடிப்பில் 2016 ஆம் ஆண்டு தெறி, 2017 ஆம் ஆண்டு மெர்சல் மற்றும் 2019 ஆம் ஆண்டு பிகில் என அடுத்தடுத்து 3 ஹிட் படங்களை இயக்கினார் அட்லீ.

    3 படங்களுமே வசூலை அள்ளியது. இதற்கு அடுத்து 2023 ஆம் ஆண்டில் இந்தியாவின் ஐகானான நடிகர் ஷாருக்கான் நடிப்பில் "ஜவான்" படத்தை இயக்கி பாலிவுட்டில் காலடி எடுத்து வைத்தார்.

    நயன்தாரா, விஜய் சேதுபதி, தீபிகா படுக்கோண் நடித்த இப்படம் இந்தி சினிமாவில் மிகப்பெரிய ப்ளாக்பஸ்டராக அமைந்தது. 1000 கோடி ரூபாய் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷனை குவித்தது ஜவான்.

    இதற்கிடையே, அட்லீ தனது "ஏ ஃபார் ஆப்பிள்" என்ற நிறுவனம் மூலம் படங்களையும் தயாரித்து வருகிறார்.

    அந்த வகையில், "நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்" படத்தின் மூலம் தமிழ்த்திரை துறையில் அறிமுகமானார்.

    இந்நிலையில், பாலாஜி தரணிதரன் அடுத்ததாக இயக்கும் படத்திற்கு இயக்குனர் அட்லீ-யின் "ஏ ஃபார் ஆப்பிள்" என்ற நிறுவனம் தயாரிக்கவுள்ளது.

    இப்படத்தில் விஜய் சேதுபதி கதாநாயகனாக நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து அதிகாரப்பூர்வத் தகவல் விரைவில் எதிர்பார்க்கப்படுகிறது.

    இதைதொடர்ந்து, அட்லீயின் தயாரிப்பு நிறுவனம் அடுத்தடுத்து தமிழ் படங்களை தயாரிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

    ஜீவா நடிப்பில் வெளிவந்த 'சங்கிலி புங்கிலி கதவ தொற' படத்தை இதற்கு முன் அட்லீ தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இது ஒரு மெகா பட்ஜெட் ஆக்‌ஷன், பொழுதுபோக்கு படமாகும்.
    • சமந்தாவுடன் வேறு ஒரு கதாநாயகியும் நடிக்கும் வாய்ப்பு உள்ளது. இதற்கான நடிகர்கள் தேர்வு நடந்து வருகிறது.

    பிரபல இயக்குநர் ஷங்கரிடம் துணை இயக்குனராக இருந்து 'ராஜா ராணி' மூலம் இயக்குனராகி பிரபலமானவர் அட்லி. நடிகர் விஜய்யுடன் இணைந்து தொடர் வெற்றிப் படங்கள் கொடுத்தார்.

    இதையடுத்து பாலிவுட்டில் இந்தி நடிகர் ஷாருக்கானுடன் இணைந்து 'ஜவான்' படத்தை இயக்கினார்.'ஜவான்' திரைப்படம் ரூ.1140 கோடி வசூலித்து சாதனை படைத்தது.

    இந்த நிலையில், நடிகர் அல்லு அர்ஜுன் நடிக்க உள்ள புதிய படத்தை அட்லி இயக்க இயக்குகிறார். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு அல்லு அர்ஜுன் பிறந்த தினமான ஏப்ரல் 8- ந் தேதி வெளியாகுகிறது. இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்க உள்ளார்.

    தற்போது, அல்லு அர்ஜுன் புஷ்பா - 2 படத்தில் நடித்து வருகிறார். பிரம்மாண்ட பொருட்செலவில் இப்படம் உருவாகி வருகிறது. புஷ்பா - 2 வசூல் சாதனை நிகழ்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.




    இந்நிலையில் அட்லீயின் புதிய படத்தில் அல்லு அர்ஜுனுடன் இணைந்து கதாநாயகியாக நடிப்பதற்கான பேச்சுவார்த்தையில் நடிகை சமந்தா ஈடுபட்டு உள்ளார்.அல்லு அர்ஜுன் மற்றும் அட்லீ படம் அக்டோபர் மாதம் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    மேலும் இது ஒரு மெகா பட்ஜெட் ஆக்ஷன், பொழுதுபோக்கு படமாகும்.இப்படத்தில் சமந்தாவுடன் வேறு ஒரு கதாநாயகியும் நடிக்கும் வாய்ப்பு உள்ளது. இதற்கான நடிகர்கள் தேர்வு நடந்து வருகிறது.அட்லீ -அல்லு அர்ஜுன் புதிய படம் வருகிற அக்டோபர் மாதம் வெளியீடு செய்ய திட்டமிட்டு உள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • நான் மதுரை திருப்பரங்குன்றத்தில் இருந்து டெல்லிக்கு வந்து விருதை வென்றுள்ளேன். என்னால் முடியும் என்றால் உங்கள் எல்லாராலும் வெல்ல முடியும்.
    • இந்தி சினிமாவில் மிகப்பெரிய ப்ளாக்பஸ்டராக அமைந்தது. 1000 கோடி ரூபாய் பாக்ஸ் ஆபிஸ் கலெக்‌ஷனை குவித்தது ஜவான்.

     அட்லீ குமார் தனது 19வது வயதில் சங்கரிடம் உதவி இயக்குனராக சேர்ந்தார். எந்திரன் மற்றும் நண்பன் படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றினார்.

    இதைஅடுத்து, ஆர்யா, சந்தானம் , நசிரியா, நயன்தாரா, ஜெய் நடிப்பில் 2013 வெளிவந்த ராஜா ராணி படத்தை இயக்கி தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமாகினார் அட்லீ.

    பின்னர், நடிகர் விஜய் நடிப்பில் 2016 ஆம் ஆண்டு தெறி, 2017 ஆம் ஆண்டு மெர்சல் மற்றும் 2019 ஆம் ஆண்டு பிகில் என அடுத்தடுத்து 3 ஹிட் படங்களை இயக்கினார் அட்லீ.

    3 படங்களுமே வசூலை அள்ளியது. இதற்கு அடுத்து 2023 ஆம் ஆண்டில் இந்தியாவின் ஐகானான நடிகர் ஷாருக்கான் நடிப்பில் "ஜவான்" படத்தை இயக்கி பாலிவுட்டில் காலடி எடுத்து வைத்தார்.

    நயன்தாரா, விஜய் சேதுபதி, தீபிகா படுக்கோண் நடித்த இப்படம் இந்தி சினிமாவில் மிகப்பெரிய ப்ளாக்பஸ்டராக அமைந்தது. 1000 கோடி ரூபாய் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷனை குவித்தது ஜவான்.இந்தி சினிமாவில் மிகப்பெரிய ப்ளாக்பஸ்டராக அமைந்தது. 1000 கோடி ரூபாய் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷனை குவித்தது ஜவான்.

    புதுடெல்லியில் நேற்று 'NDTV-ன் இந்தியன் ஆஃப் தி இயர்' விருது வழங்கும் விழா நடைப்பெற்றது. இந்த விழாவில் ஜவான் படத்திற்கு சிறந்த இயக்குனருக்கான விருதை அட்லீ வென்றார். மத்திய அமைச்சரான ஹர்தீப் புரி அட்லீக்கு விருது வழங்கி கவுரவித்தார்.

    இந்த விழாவில் ஜவான் படம் ஷாருக்கனை வைத்து இயக்க தோன்றியது ஏன் என்ற கேள்விக்கு," ஷாருக்கான் ஒரு மிகப்பெரிய நடிகர். "க்ளோபல் ஐகான்" அவரை வைத்து சமூக கருத்து நிறைந்த ஒரு படத்தை எடுக்க வேண்டும் என நினைத்தேன்" என்றார் அட்லீ.

    பின் அட்லீ 2019 ஆம் ஆண்டில் ஷாருக்கானை சந்தித்த நிகழ்வைப் பற்றி பகிர்ந்துக் கொண்டார்.

    "நானும் ஷாருக்கான் சாரும் 2019 ஆம் ஆண்டு நடந்த ஐ.பி.எல் போட்டிக்கு சென்றோம். சென்னை சூப்பர் கிங்க்ஸ்- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி நடைப்பெற்றது. அப்போது, நானும் ஷாருக்கான் சாரும் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் வைரலானது. அந்த புகைப்படத்தைப் பார்த்து வாழ்த்தியவர்கள் சில பேர் மட்டும்தான்.

    அதை விமர்சித்தவர்கள் தான் நிறைய பேர். ஷாருக்கானுடன் சேர்ந்து எப்படி இவனால் படம் எடுக்க முடியும்? இவன் சரியானவனா, அவர் முன்னாடி நிற்கும் தகுதி இவனுக்கு இருக்கா ? என பலப்பேர் விமர்சித்தனர். அவர்களுக்கான பதில் தான் இந்த விருது. அனைத்து ஹேட்டர்ஸ்க்கும் நன்றி" என தெரிவித்தார்.

    மேலும்," நான் மதுரை திருப்பரங்குன்றத்தில் இருந்து டெல்லிக்கு வந்து விருதை வென்றுள்ளேன். என்னால் முடியும் என்றால் உங்கள் எல்லாராலும் வெல்ல முடியும். யாருக்காகவும் உங்கள் கனவை விட்டு கொடுத்து விடாதீர்கள். உங்களுக்கு எது சரி என்று படுகிறதோ அதை நோக்கி பயணியுங்கள்" என்றார் அட்லீ.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இந்த ஆலோசனையில் அல்லு அர்ஜுனுடன், அட்லீ முக்கிய பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது
    • நடிகர் அல்லு அர்ஜுனை இதுவரை இல்லாத ஒரு புதிய வேடத்தில் நடிக்க வைக்க அட்லீ முடிவு செய்து உள்ளார்

    பிரபல இயக்குனர் அட்லீ பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானை நடிக்க வைத்து வெளியான படம் ஜவான். இந்த படம் பெரும் வெற்றிப் பெற்றதையொட்டி அட்லீ மகிழ்ச்சியில் உள்ளார்.

    இப்படம் உலகம் முழுவதும் ரூ.1000 கோடிக்கு மேல் வசூல் செய்தது. இந்த பட வெற்றியை தொடர்ந்து அட்லீ தற்போது அடுத்த படத்துக்கு தயாராகி உள்ளார். இந்த படத்துக்கு 'A6 'என்று பெயரிடப்பட்டு உள்ளது. இது அட்லீ இயக்கும் 6- வது படம்.

    இந்நிலையில் புதிய படம் இயக்கும் பணி தொடர்பான ஆலோசனையில் அட்லீ ஈடுபட்டார். மேலும் ஆலோசனை குறித்த வீடியோவை

    'இன்ஸ்டாகிராம்' தளத்தில் அட்லீ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் படக்குழு ஆலோசனையில் அட்லீ தனது மனைவியின் மடியில் அமர்ந்திருந்த மகனின் ஒப்புதலைப் பெறுவது போன்ற காட்சி இடம்பெற்றுள்ளது. இந்த வீடியோவை பகிர்ந்த அட்லீ, 'A6' விவாதம் என்றும் அதில் எழுதி இருக்கிறார்.


     



    இந்த ஆலோசனையில் அல்லு அர்ஜுனுடன், அட்லீ முக்கிய பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இந்த புதிய படத்தில் நடிகர் அல்லு அர்ஜுனை இதுவரை இல்லாத ஒரு புதிய வேடத்தில் நடிக்க வைக்க அட்லீ முடிவு செய்து உள்ளார்.

    இதனால் அல்லு அர்ஜுன் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளார். A6 படத்தின் படப்பிடிப்பை அக்டோபரில் தொடங்க அட்லீ திட்டமிட்டுள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சிறந்த நடிகைக்கான விருது ஜவான் படத்தில் நடித்த நயன்தாராவுக்கு வழங்கப்பட்டது.
    • ஜவான் படம் மூலம் இயக்குநர் அட்லி பாலிவுட்டில் அறிமுகமானார்.

    2024 ஆண்டுக்கான தாதா சாகேப் பால்கே சர்வதேச திரைப்பட விருதுகள் நேற்றிரவு வழங்கப்பட்டன. இதில் சிறந்த நடிகை விருதை ஜவான் படத்தில் நடித்ததற்காக நடிகை நயன்தாராவுக்கு வழங்கப்பட்டது.

    இதே போன்று சிறந்த நடிகர் விருது ஜவான் படத்தில் நடித்த ஷாருக் கானுக்கு வழங்கப்பட்டது. இயக்குநர் அட்லி இயக்கத்தில் வெளியான ஜவான் படம் ஆக்ஷன் மற்றும் திரில்லிங் காட்சிகளை கொண்டிருந்தது. 

     


    கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியான ஜவான் படம் ரூ. 1000 கோடி வரை வசூல் செய்து அசத்தியது. இந்த படம் மூலம் இயக்குநர் அட்லி பாலிவுட்டில் அறிமுகமானார்.

    இந்த படத்தில் ஷாருக் கான், நயன்தாரா மட்டுமின்றி விஜய் சேதுபதி, யோகி பாபு, தீபிகா படுகோனே, பிரியாமணி, சான்யா மல்கோத்ரா, ரித்தி தோக்ரா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.



    • இயக்குனர் அட்லீ புதிய படம் ஒன்றை தயாரிக்கிறார்.
    • இப்படத்தின் மூலம் பாலிவுட்டில் தயாரிப்பாளராக அறிமுகமாகிறார்.

    இயக்குனர் ஏ. காளீஸ்வரன் இயக்கத்தில் தயாராகி வரும் 'விடி18' என தற்காலிகமாக பெயரிடப்பட்டிருக்கும் இந்தி திரைப்படத்தில் பாலிவுட் நட்சத்திர நடிகர் வருண் தவான் கதையின் நாயகனாக நடிக்கிறார். இவருடன் சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெற்ற நடிகை கீர்த்தி சுரேஷ் மற்றும் நடிகை வாமிகா கபி, ஜாக்கி ஷெராப், ராஜ்பால் யாதவ், மணிகண்டன், பி. எஸ். அவினாஷ் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.


    கிரண் கவுஷிக் ஒளிப்பதிவு செய்து வரும் இந்த திரைப்படத்திற்கு எஸ். தமன் இசையமைக்கிறார். ஆக்ஷன் எண்டர்டெய்னராக தயாராகும் இந்தத் திரைப்படத்தை ஜியோ ஸ்டுடியோஸ், சினி ஒன் ஸ்டுடியோஸ் மற்றும் ஏ ஃபார் ஆப்பிள் ஆகிய பட நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் முராத் கெடானி, ஜோதி தேஷ்பாண்டே மற்றும் பிரியா அட்லீ ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.


    பேபி ஜான் போஸ்டர்

    இந்நிலையில், இப்படத்தின் தலைப்பு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, 'விடி 18' படத்திற்கு 'பேபி ஜான்' என படக்குழு தலைப்பு வைத்துள்ளது. இது தொடர்பான போஸ்டரை தயாரிப்பாளர் அட்லீ தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். இந்த போஸ்டரை ரசிகர்கள் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.


    • இயக்குனர் ஏ. காளீஸ்வரன் புதிய படம் ஒன்றை இயக்குகிறார்.
    • இந்த திரைப்படத்திற்கு எஸ். தமன் இசையமைக்கிறார்.

    இயக்குனர் ஏ. காளீஸ்வரன் இயக்கத்தில் தயாராகி வரும் 'விடி18' என தற்காலிகமாக பெயரிடப்பட்டிருக்கும் இந்தி திரைப்படத்தில் பாலிவுட் நட்சத்திர நடிகர் வருண் தவான் கதையின் நாயகனாக நடிக்கிறார். இவருடன் சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெற்ற நடிகை கீர்த்தி சுரேஷ் மற்றும் நடிகை வாமிகா கபி, ஜாக்கி ஷெராப், ராஜ்பால் யாதவ், மணிகண்டன், பி. எஸ். அவினாஷ் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.


    கிரண் கவுஷிக் ஒளிப்பதிவு செய்து வரும் இந்த திரைப்படத்திற்கு எஸ். தமன் இசையமைக்கிறார். ஆக்ஷன் எண்டர்டெய்னராக தயாராகும் இந்தத் திரைப்படத்தை ஜியோ ஸ்டுடியோஸ், சினி ஒன் ஸ்டுடியோஸ் மற்றும் ஏ ஃபார் ஆப்பிள் ஆகிய பட நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் முராத் கெடானி, ஜோதி தேஷ்பாண்டே மற்றும் பிரியா அட்லீ ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள்.

    இப்படத்தின் தொடக்க விழா அண்மையில் மும்பையில் பிரமாண்டமாக நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விரைவில் இப்படத்தின் டைட்டில் அறிவிக்கப்படும் என அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.


    'ராஜா ராணி', 'தெறி', 'மெர்சல்', 'பிகில்', 'ஜவான்' என தொடர்ந்து வெற்றி படங்களை இயக்கிய இயக்குனர் அட்லீ.. திரைத்துறையில் தன்னுடைய உதவியாளர்களுக்கு வாய்ப்பு வழங்குவதற்காக ஏ ஃபார் ஆப்பிள் என்ற பட தயாரிப்பு நிறுவனத்தையும் தொடங்கினார். இந்நிறுவனம் சார்பில் 'சங்கிலி புங்கிலி கதவை திற' மற்றும் 'அந்தகாரம்' என இரண்டு திரைப்படங்களை தயாரித்து, விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வெற்றியையும் பெற்றிருக்கிறார்.


    இதனிடையே தமிழில் வெற்றிகரமான இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும் வலம் வந்த அட்லீ.. தற்போது இந்தி திரையுலகில் ஷாருக்கானின் 'ஜவான்' படத்தை இயக்கி, அங்கும் இயக்குனராக தன்னுடைய வெற்றியைத் தொடர்கிறார் என்பதும், தற்போது இந்தி திரைப்படத்தை தயாரிப்பதன் மூலம் பாலிவுட்டில் தயாரிப்பாளராகி, அங்கும் தயாரிப்பாளராகவும் வெற்றி பெறுவார் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.

    • அட்லீ இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘ஜவான்’.
    • இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

    'ராஜா ராணி' படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு இயக்குனராக அறிமுகமான அட்லீ, அதன் பின்னர் விஜய்யை வைத்து தெறி, மெர்சல், பிகில் என அடுத்தடுத்து ஹிட் படங்களை இயக்கினார்.



    இவர் இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் சமீபத்தில் வெளியான 'ஜவான்' திரைப்படம் பாலிவுட் படங்களை பின்னுக்கு தள்ளி பாக்ஸ் ஆபீஸில் ரூ.1000 கோடிக்கு மேல் வசூலை குவித்தது. அனிருத் இசையமைத்திருந்த இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் மிகப்பெரிய ஹிட் அடித்தது. இதையடுத்து அட்லீ அடுத்தது எந்த நடிகருடன் இணையவுள்ளார் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.


    இந்நிலையில், இயக்குனர் அட்லீயின் அடுத்த படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, அட்லீ இயக்கும் அடுத்த படத்தில் நடிகர் அல்லு அர்ஜுன் இணையவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்திற்கும் அனிருத் தான் இசையமைக்கவுள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    அல்லு அர்ஜுன் தற்போது சுகுமார் இயக்கத்தில் 'புஷ்பா 2' திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×