என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கோத்தகிரி"

    • வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை யானை கீழ்த்தட்டபள்ளம் நெடுஞ்சாலையில் உலா வந்தது.
    • பஸ் டிரைவர் சாதுரியமாக பஸ்சை வேகமாக பின்னோக்கி இயக்கினார்.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் நெடுஞ்சாலையில் உள்ள கீழ்த்தட்டபள்ளம், குஞ்சபனை உள்ளிட்ட பகுதிகளில் காட்டு யானை நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது.

    அதிலும் குறிப்பாக வனப்பகுதியில் இருந்து வெளியேறும் யானைகள் அருகில் உள்ள குடியிருப்புகள், தேயிலை தோட்டங்களில் உலா வருவதுடன் அவ்வப்போது சாலையில் உலா வருவதும், வாகனங்களை வழிமறிப்பதுமாக உள்ளன.

    இந்த நிலையில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை யானை கீழ்த்தட்டபள்ளம் நெடுஞ்சாலையில் உலா வந்தது.

    அப்போது மேட்டுப்பாளையத்தில் இருந்து பயணிகளுடன் கோத்தகிரி நோக்கி ஒரு அரசு பஸ் வந்தது. அந்த பஸ்சை காட்டு யானை வழிமறித்து வண்டியின் அருகே சென்றது. இதனால் பயணிகள் அச்சம் அடைந்தனர்.

    இந்த நிலையில் பஸ் டிரைவர் சாதுரியமாக பஸ்சை வேகமாக பின்னோக்கி இயக்கினார். இந்த பதைபதைக்க வைக்கும் காட்சிகளை பஸ்சில் இருந்த பயணிகள் அச்சத்துடன் வீடியோ பதிவு செய்து வெளியிட்டு உள்ளனர்.

    கடந்த ஆண்டு இதே பகுதியில் பயணிகளுடன் சென்ற அரசு பேருந்து மற்றும் காரை ஒரு காட்டு யானை மிகுந்த ஆக்ரோஷத்துடன் தாக்கி சேதப்படுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்த நிலையில் காட்டு யானைகள் மீண்டும் இந்த ரோட்டில் வாகனங்களை வழிமறித்து தாக்க முயல்வதால் வனத்துறையினர் யானையின் நடமாட்டத்தை கண்காணித்து அடர்ந்தவனப் பகுதிக்கு விரட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • கடந்த சில மாதங்களுக்கு முன் ஊழியர்களுக்கு வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
    • தமிழக அரசு தமிழ் மொழிக்கு மிகவும் முக்கியத்துவம் வழங்கி வருகிறது.

    கோத்தகிரி:

    கோத்தகிரி அரசு மேல்நிலை பள்ளி அருகே கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு அரசு ஊழியர்கள் குடியிருப்பு கட்டப்பட்டு இருந்தது. மிகவும் பழமையான அந்த குடியிருப்புகளின் மேற்கூரை ஓடுகள் மற்றும் கட்டிடங்களின் சுவர்கள் பழுதடைந்து காணப்பட்டன. எனவே, பழைய குடியிருப்புகளை இடித்து அகற்றி விட்டு, அதே பகுதியில் தலா 4 வீடுகள் கொண்ட 2 கட்டிடங்கள் கட்டப்பட்டன.

    இதேபோல கோத்தகிரி சக்திமலை பகுதியில் ஏற்கனவே பழுதடைந்த தாசில்தார் குடியிருப்பு கட்டிடத்தை இடித்து அகற்றி, தலா 4 வீடுகள் கொண்ட 2 கட்டிடங்கள் (தாசில்தார் குடியிருப்பு உள்பட) என மொத்தம் 16 குடியிருப்புகள் கட்ட அதிகாரிகள் முடிவு செய்தனர். இதையடுத்து பொதுப்பணித்துறை மூலம் ரூ.4 கோடியே 50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, அரசு அலுவலர்கள் குடியிருப்பு கட்டி முடிக்கப்பட்டது.

    இதைத்தொடர்ந்து கடந்த சில மாதங்களுக்கு முன் ஊழியர்களுக்கு வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு அருகே உள்ள அரசு ஊழியர்கள் குடியிருப்பின் பலகையில் குடியிருப்பு பெயர் தமிழில் தவறாக எழுதப்பட்டு உள்ளது. அதாவது அரசு அலுவலர்கள் குடியிருப்பு என எழுதுவதற்கு பதிலாக 'அரசு அலுவலரகள குடியிருப்பு' என புள்ளி வைக்காமல் பிழையாக எழுதப்பட்டு உள்ளது.

    இதுகுறித்து தமிழ் ஆர்வலர்கள் கூறுகையில், தமிழக அரசு தமிழ் மொழிக்கு மிகவும் முக்கியத்துவம் வழங்கி வருகிறது. ஆனால், அரசு குடியிருப்பில் பெயர் பலகை எழுத்து பிழையுடன் எழுதப்பட்டு உள்ளது வருத்தம் அளிக்கிறது. எனவே, பொதுப்பணித்துறை அதிகாரிகள் உடனடியாக அதை திருத்தி, சரியாக எழுத நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    • உணவு மற்றும் தண்ணீர் தேடி வனவிலங்குகள் குடியிருப்பு பகுதியில் உலா வருகின்றன.
    • தேயிலை தோட்டத்திலிருந்து, சாலைக்கு எகிறி குதித்த தாய் புலியும், பின்னால் குட்டிகளும் சென்றன.

    நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் சமீபகாலமாக சிறுத்தைகளின் நடமாட்டம் அதிகமாக காணப்படுகிறது. அவை உணவு மற்றும் தண்ணீர் தேடி குடியிருப்பு பகுதியில் உலாவருவதால் பொதுமக்கள் அச்சம் அடைந்து உள்ளனர்.

    இந்நிலையில் வனத்தில் இருந்து குட்டிகளுடன் வெளியேறிய ஒரு புலி கோத்தகிரி அடுத்த டி.மணிஹட்டி கிராமத்துக்கு வந்தது. பின்னர் அவை அங்குள்ள சாலையில் சர்வ சாதாரணமாக நடந்து சென்றது. சாலையில் சிறிது நேரம் சுற்றி திரிந்த புலி பின்னர் குட்டிகளுடன் தேயிலை தோட்டத்திற்குள் சென்று விட்டது.

    கிராமத்தில் குட்டிகளுடன் புலியின் நடமாட்டம் அங்கு பொருத்தப்பட்டு உள்ள சி.சி.டி.வி. காமிராவில் பதிவாகி பொதுமக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

    தொடர்ந்து குட்டிகளுடன் உலாவரும் புலியை வனத்துறையினர் கண்காணித்து அடர்வனப்பகுதிக்குள் விட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • இந்தாண்டுக்கான கோடை விழா கோத்தகிரி நேரு பூங்காவில் 13-வது காய்கறி கண்காட்சியுடன் தொடங்கியது.
    • கோத்தகிரி கண்காட்சியில் இடம் பெற்று உள்ள காய்கறி அலங்காரங்கள் அச்சு அசப்பில் நிஜ விலங்குகள், பறவைகள் போல காட்சி அளித்தன.

    கோத்தகிரி:

    நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஏப்ரல்- மே ஆகிய 2 மாதங்கள் கோடை சீசன் ஆகும். அப்போது இங்கு நிலவும் இதமான காலநிலையை அனுபவிப்பதற்காகவும், சுற்றுலா தலங்களை கண்டு ரசிக்கவும் லட்சக்கணக்காக சுற்றுலாப் பயணிகள் நீலகிரிக்கு படையெடுத்து வருவது வழக்கம்.

    அப்படி வரும் சுற்றுலாப் பயணிகளை மகிழ்விப்பதற்காக மாவட்ட நிர்வாகம் சார்பில் ஆண்டுதோறும் கோடை விழா நடத்தப்பட்டு வருகிறது.

    அதன்படி இந்தாண்டுக்கான கோடை விழா கோத்தகிரி நேரு பூங்காவில் 13-வது காய்கறி கண்காட்சியுடன் தொடங்கியது.

    இதனை மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார்.

    கோத்தகிரி காய்கறி கண்காட்சியில் தமிழர் பண்பாட்டை போற்றும் விதமாக கத்தரிக்காய், உருளைக்கிழங்கு, முள்ளங்கி, கேரட் உள்பட 2 ½ டன் காய்கறிகளை கொண்டு வாடிவாசலில் இருந்து சீறி பாயும் காளை உள்பட பல்வேறு அலங்காரங்கள் தத்ரூபமாக அமைக்கப்பட்டு உள்ளன.

    நேற்று வார விடுமுறை நாள் என்பதால் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் காய்கறி கண்காட்சிக்கு வந்திருந்து அங்கு காட்சிப்படுத்தப்பட்டு உள்ள அலங்கார வடிவமைப்புகளை கண்டு ரசித்தனர்.

    இந்த நிலையில் 2-வது நாளாக இன்றும் கோத்தகிரி பூங்காவில் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அலைமோதியது.

    இங்கு இடம்பெற்று உள்ள உருளைக்கிழங்கால் ஆன சிலம்பாட்டம், கேரட், பீட்ரூட்டால் ஆன தமிழ் மறவன், பட்காய் மூலம் உருவான மரகத ப்புறா, பச்சை-சிவப்பு மிளகாய்களால் ஆன பச்சைக்கிளி, சுகினி, கோவைக்காய், பச்சை-சிவப்பு மிளகாய், முள்ளங்கி, கேரட்டால் ஆன தஞ்சாவூர் பொம்மை, சேனைக்கிழங்கால் ஆன நீலகிரி வரையாடு போன்ற அலங்காரங்கள் ஆகியவை சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் அமைந்து இருந்தது.

    மேலும் கோத்தகிரி கண்காட்சியில் இடம் பெற்று உள்ள காய்கறி அலங்காரங்கள் அச்சு அசப்பில் நிஜ விலங்குகள், பறவைகள் போல காட்சி அளித்தன.

    அதுவும்தவிர திருவண்ணாமலை, காஞ்சிபுரம், விழுப்புரம், தேனி, ஈரோடு, திருப்பூர், கோவை உள்பட பல்வேறு மாவட்ட தோட்டக்கலைத்துறை சார்பில் பல்வேறு காய்கறிகளால் ஆன பாண்டா கரடி, இருவாச்சி பறவை, திருவள்ளுவர், பூவில் இருந்து தேன் எடுக்கும் தேனீ, புலி, மாட்டு வண்டி, சிங்கம், கழுகு ஆகிய அலங்காரங்களும் கோத்தகிரி கண்காட்சியில் இடம்பெ ற்று உள்ளன. அவற்றின் முன்பாக சுற்றுலாப் பயணிகள் நின்று செல்பி எடுத்துக் கொண்டனர்.

    காய்கறி கண்காட்சி இன்று மாலையுடன் நிறைவு பெறுகிறது. அதைத்தொடர்ந்து பரிசளிப்பு விழா நடக்கிறது.

    • சாய் பல்லவி நடிப்பில் அண்மையில் வெளியான அமரன் மாபெரும் வெற்றியை பெற்றது.
    • கோத்தகிரியில் நடைபெற்ற தனது உறவினரின் திருமண விழாவில் சாய் பல்லவி பங்கேற்றார்.

    மலையாளத்தில் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் 2015-ம் ஆண்டு வெளியான 'பிரேமம்' திரைப்படம் மூலம் மலர் டீச்சர் என்ற கதாபாத்திரத்தில் நடித்து தென்னிந்திய அளவில் பிரபலமானவர் சாய் பல்லவி.

    அண்மையில் இவர் நடிப்பில் வெளியான அமரன், தண்டேல் படங்கள் மாபெரும் வெற்றியை பெற்றன.

    படுகர் இனத்தை சேர்ந்த சாய் பல்லவி, கோத்தகிரியில் நடைபெற்ற தனது உறவினரின் திருமண விழாவில் பங்கேற்றார். அப்போது சாய் பல்லவி படுகர் இன மக்களின் பாரம்பரிய நடனமாடி மகிழ்ந்தார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 

    • நோய் தொற்றா? அல்லது விஷம் வைத்து கொல்லப்படுகிறதா? என்பது புரியாத புதிராக உள்ளது.
    • பொதுமக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

    கோத்தகிரி

    கோத்தகிரி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் வன விலங்குகள் அதிகமாக உள்ளன. இந்த வனவிலங்குகள் அவ்வப்போது தண்ணீர் மற்றும் உணவுக்காக வனத்தை விட்டு வெளியேறி குடியிருப்பு பகுதிகளில் சுற்றி திரிவது வழக்கம்.

    குறிப்பாக காட்டு பன்றிகள், காட்டெருமைகள் நடமாட்டம் கடந்த சில நாட்களாக அதிகமாக உள்ளது. இவை சாலைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் சர்வ சாதாரணமாக நடமாடி வருகிறது.

    இவைகளில் பொதுமக்களுக்கு பெரும் தொந்தரவாக இருந்து வந்தது காட்டுப் பன்றிகள். ஏனெனில் இவைகள் விவசாய நிலங்களில் இருக்கும் பொருட்களை பெரிதும் சேதப்படுத்தி வந்தது. மேலும் காட்டு பன்றிகள் மனிதர்களையும் அவ்வப்போது தாக்கி வந்தது. இவைகளை கட்டுப்படுத்த வேண்டும் என்று பொதுமக்களிடையே கோரிக்கைகள் வந்த வண்ணம் இருந்தது.

    இந்த நிலையில் கடந்த ஒரு மாத காலமாக கோத்தகிரி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் காட்டு பன்றிகள் அதிக அளவு மர்மமான முறையில் இறந்து வருகிறது. இந்த காட்டு பன்றிகள் குடியிருப்பு பகுதிகளிலேயே அதிக அளவு இறந்து வருவதால் அவைகளுக்கு ஏதேனும் நோய் தோற்று ஏற்பட்டு இறந்ததா? அல்லது கொல்லப்படுகிறதா? என்பது புரியாத புதிராக உள்ளது. மனிதர்களுக்கும் இவைகளால் ஏதேனும் பாதிப்பு வந்து விடுமோ என்று பொதுமக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

    • தமிழ்நாடு , பஞ்சாப் அணிகளுக்கு சான்றிதழ் கோப்பைகள் வழங்கப்பட்டது.
    • ஆண்களுக்கான இறுதி போட்டி நடந்தது.

      அரவேணு,

    கோத்தகிரியில் மாநில அளவிலான கைப்பந்து போட்டி அங்குள்ள ஜுட்ஷ் பப்ளிக் பள்ளியில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு, மகாராஷ்டிரா, உத்திரபிரதேசம், பீகார், மேற்கு வங்காளம், கேரளா, குஜராத், பஞ்சாப், ஆந்திரப்பிரதேசம் ஆகிய மாநில அணிகள் பங்கேற்றனர். இதில் ஆண்களுக்கான இறுதி போட்டி நடந்தது. இதனை நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆசிஷ் ராவுத்தர் மற்றும் பள்ளி தாளாளர் தன்ராஜன் தொடங்கி வைத்தனர். இதில் 19 வயதுக்கு உட்பட்ட பிரிவில் பஞ்சாப் அணி 25-23 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றது. 14 வயதுக்கு உட்பட்ட பிரிவில் பஞ்சாப் அணி 25-19 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றது. 17 வயதுக்கு உட்பட்ட இறுதி போட்டியில் தமிழ்நாடு, பீகார் விளையாடியது. இதில் முதல் சுற்றில் தமிழ்நாடு அணி 25-18 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றது. பின்னர் தொடர்ந்து விளையாடிய தமிழ்நாடு அணி 2-வது சுற்றில் 25-20 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் ெவன்றது. வெற்றி பெற்ற தமிழ்நாடு , பஞ்சாப் அணிகளுக்கு சான்றிதழ் கோப்பைகள் வழங்கப்பட்டது.

    • பொதுமக்கள் மற்றும் பள்ளிக்குழந்தைகள் சாலையில் நடந்து செல்வதால் விபத்தில் சிக்கும் அபாயமும் அதிகமாக உள்ளது.
    • நடைபாதையை மீட்டு தர வேண்டும் என்று இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    கோத்தகிரி:

    கோத்தகிரியில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் பிரதான சாலையில் உள்ள டானிங்டன் பகுதியில் மக்கள் அதிகமாக கூடும் முக்கிய பகுதியாகவும், பல ஊர்களுக்கு செல்ல முக்கிய சந்திப்பாகவும் இருந்து வருகிறது.

    இந்த பகுதியில் வானங்கள் அதிகமாக சென்று வருவதால் பொதுமக்கள் செல்ல சாலையின் ஓரத்தில் பல லட்ச மதிப்பீட்டில் நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. இந்த நடைபாதை மக்களுக்கு பயன்பட்டு வருவதை விட இப்பகுதியில் செயல்பட்டு வரும் வாகனங்கள் பழுது பார்க்கும் கடைகளின் உபயோகப்படுத்தப்படாத வாகனங்களை நிறுத்தி வைக்கவே அதிகமாக பயன்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள் மற்றும் பள்ளிக்குழந்தைகள் சாலையில் நடந்து செல்வதால் விபத்தில் சிக்கும் அபாயமும் அதிகமாக உள்ளது.

    வாகனங்களை நிறுத்தி வைத்தது குறித்து அந்த பழுது பார்க்கும் கடைகளின் உரிமையாளர்களிடம் அப்பகுதியினர் போய் கேட்டால் அவர்களை கடை உரிமையாளர்கள் மிரட்டுவதாகவும் குற்றசாட்டு எழுந்துள்ளது. மேலும் நிறுத்திவைக்கப்பட்டுள்ள வாகனங்களின் பின்புறம் அப்பகுதியினரின் கழிப்பிடமாக பயன்படுத்தி வருகிறார்கள். எனவே போக்குவரத்து போலீசார் இந்த பயன்பாடற்ற வாகனங்களை உடனடியாக அப்புறப்படுத்தி நடைபாதையை மீட்டு தர வேண்டும் என்று இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • கலெக்டரிடம், சுற்றுலா வாகன டிரைவர்கள் மனு அளித்தனர்.
    • இதனால் சுற்றுலா வாகன டிரைவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது.

    ஊட்டி,

    ஊட்டியில் அனுமதிக்கப்பட்ட தூரத்திற்கு மேல் விதியை மீறி ஆட்டோக்களை இயக்கக்கூடாது என கலெக்டரிடம், சுற்றுலா வாகன டிரைவர்கள் மனு அளித்தனர். மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நீலகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதற்கு கலெக்டர் அம்ரித் தலைமை தாங்கினார். கூட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை அளித்தனர். ஊட்டி சுற்றுலா மேக்சி கேப் ஓட்டுநர் சங்கம் சார்பில், கலெக்டரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளதாவது:- நீலகிரியில் தொழிற்சாலைகளோ மற்றும் வேறு தொழில்கள் இல்லாத நிலையில், சுற்றுலா பயணிகளை நம்பி ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா வாகன டிரைவர்கள் உள்ளனர். இந்தநிலையில் நீலகிரியில் ஆட்டோக்கள் அனுமதிக்கப்பட்ட தூரத்தை விட அதிக தூரம் சுற்றுலா பயணிகளையும், உள்ளூர் மக்களையும் அனைத்து சுற்றுலா தலங்களுக்கும் அழைத்து சென்று வருகின்றனர். இதனால் சுற்றுலா வாகன டிரைவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது.

    • அஜித் சத்தியமங்கலத்தில் உள்ள தனியார் கல்லூரியில் 3-ம் ஆண்டு டெக்ஸ்டைல் என்ஜினீயரிங் படித்து வந்தார்.
    • மன உளைச்சல் அடைந்த அஜீத் வீட்டில் தனியாக இருந்த போது, தூக்குப்போட்டு தற்கொலை செய்தது தெரியவந்தது.

    கோத்தகிரி,

    கோத்தகிரி அருகே கேர்பெட்டா எஸ்டேட் பகுதியை சேர்ந்த சின்னப்பன் என்பவரது மகன் அஜீத் (21). இவர் சத்தியமங்கலத்தில் உள்ள தனியார் கல்லூரியில் 3-ம் ஆண்டு டெக்ஸ்டைல் என்ஜினீயரிங் படித்து வந்தார்.

    இந்தநிலையில் அவர் கடந்த மாதம் 28-ந் தேதி கோத்தகிரியில் உள்ள தனது வீட்டிற்கு வந்தார். அப்போது தனது தாய் மற்றும் அண்ணன் அகுல், கல்லூரியில் கட்டணம் செலுத்துவதற்காக ஒரு வாரம் விடுமுறை எடுத்து வந்து உள்ளதாக தெரிவித்தார்.

    இந்தநிலையில் நேற்று முன்தினம் அஜீத்தின் தாய், அகுல் 2 பேரும் வேலைக்கு சென்று விட்டனர். பின்னர் அஜீத் வீட்டில் தனியாக இருந்தார். பின்னர் மதிய உணவு சாப்பிடுவதற்காக, அகுல் வீட்டிற்கு வந்தார். அப்போது ஒரு அறையில் அஜீத் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அஜீத்தை மீட்டு கோத்தகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

    அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், அஜீத் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து அகுல் கோத்தகிரி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் தவறான நன்னடத்தை காரணமாக கல்லூரி நிர்வாகம் ஒரு வாரம் அஜீத்தை இடைநீக்கம் செய்தது. இதனால் வீட்டில் விடுமுறை எடுத்து வந்ததாக பொய் கூறி உள்ளார். கல்லூரியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டதால் மன உளைச்சல் அடைந்த அஜீத் வீட்டில் தனியாக இருந்த போது, தூக்குப்போட்டு தற்கொலை செய்தது தெரியவந்தது. கல்லூரி மாணவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • பிளாஸ்டிக் பயன்படுத்தப்படுகிறதா? என அதிகாரிகள் அடிக்கடி சோதனை மேற்கொண்டனர்.
    • கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தியது தெரிய வந்தது.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் பயன்படுத்து வதற்கு தடை விதிக்கப்ப ட்டுள்ளது.

    இதையடுத்து மாவட்டத்தில் யாராவது தடையை மீறி பிளாஸ்டிக் பயன்படுத்தி வருகின்றனரா? என அதிகாரிகள் அடிக்கடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

    அந்த வகையில், நீலகிரி மாவட்ட கலெக்டர் அம்ரித் உத்தரவின்படி, கோத்தகிரி பேரூராட்சி அதிகாரிகள், கோத்தகிரி நகர் பகுதியில் பிளாஸ்டிக் ஒழிப்பு சோதனை மேற்கொண்டனர்.

    கோத்தகிரி பேரூராட்சி செயல் அலுவலர் மணிகண்டன் தலைமையிலான அலுவலர்கள் கோத்தகிரி கடைவீதி, டானிங்டன் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் சோதனை நடத்தினர். அப்போது அங்கு தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்படுகிறதா? அல்லது விற்பனை செய்யப்படுகிறதா? என சோதனை ெசய்தனர்.

    இதில் சில கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தியது தெரிய வந்தது.

    இதையடுத்து பிளாஸ்டிக் பயன்படுத்திய வியாபாரி களுக்கு ரூ.5 ஆயிரத்து 500 அபராதம் விதித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.

    • போலீசார் குஞ்சப்பனை சோதனை சாவடியில் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
    • அரிசி கடத்தப்பட்டு வருவதாக உணவு பாதுகாப்பு கடத்தல் பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

    அரவேணு

    கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சமீப காலமாக ரேஷன் அரிசி கடத்தப்பட்டு வருவதாக உணவு பாதுகாப்பு கடத்தல் பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

    இதன் அடிப்படையில் கோத்தகிரி அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உணவு பாதுகாப்பு கடத்தல் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் மேனகா, ஏட்டு சுமதி, முருகேசன் மற்றும் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    நேற்று போலீசார் குஞ்சப்பனை சோதனை சாவடியில் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வழியாக ஒரு மினிலாரி வந்தது. அதனை போலீசார் மறித்து சோதனை நடத்தினர்.

    அப்போது அதில் மூட்டை, மூட்டையாக ரேஷன் அரிசி அதிகளவில் இருந்தது.

    இதையடுத்து டிரைவர் ஜோசப் என்பவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், கீழ் கோத்தகிரி மற்றும் கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள நியாய விலைக் கடைகளில் இருந்து கூடுதல் விலை கொடுத்து அரிசிகளை வாங்கி, மேட்டுப்பாளையம் பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டது தெரியவந்தது.

    இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை மேற்ெகாண்டு வருகின்றனர்.

    மேலும் கடத்தப்பட்ட 2 டன் அரிசியை பறிமுதல் செய்து, ஊட்டியில் உள்ள அரிசி கிடங்கிற்கு அனுப்பி வைத்தனர்.

    ×