என் மலர்
நீங்கள் தேடியது "காய்கறி கண்காட்சி"
- இந்தாண்டுக்கான கோடை விழா கோத்தகிரி நேரு பூங்காவில் 13-வது காய்கறி கண்காட்சியுடன் தொடங்கியது.
- கோத்தகிரி கண்காட்சியில் இடம் பெற்று உள்ள காய்கறி அலங்காரங்கள் அச்சு அசப்பில் நிஜ விலங்குகள், பறவைகள் போல காட்சி அளித்தன.
கோத்தகிரி:
நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஏப்ரல்- மே ஆகிய 2 மாதங்கள் கோடை சீசன் ஆகும். அப்போது இங்கு நிலவும் இதமான காலநிலையை அனுபவிப்பதற்காகவும், சுற்றுலா தலங்களை கண்டு ரசிக்கவும் லட்சக்கணக்காக சுற்றுலாப் பயணிகள் நீலகிரிக்கு படையெடுத்து வருவது வழக்கம்.
அப்படி வரும் சுற்றுலாப் பயணிகளை மகிழ்விப்பதற்காக மாவட்ட நிர்வாகம் சார்பில் ஆண்டுதோறும் கோடை விழா நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி இந்தாண்டுக்கான கோடை விழா கோத்தகிரி நேரு பூங்காவில் 13-வது காய்கறி கண்காட்சியுடன் தொடங்கியது.
இதனை மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார்.
கோத்தகிரி காய்கறி கண்காட்சியில் தமிழர் பண்பாட்டை போற்றும் விதமாக கத்தரிக்காய், உருளைக்கிழங்கு, முள்ளங்கி, கேரட் உள்பட 2 ½ டன் காய்கறிகளை கொண்டு வாடிவாசலில் இருந்து சீறி பாயும் காளை உள்பட பல்வேறு அலங்காரங்கள் தத்ரூபமாக அமைக்கப்பட்டு உள்ளன.
நேற்று வார விடுமுறை நாள் என்பதால் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் காய்கறி கண்காட்சிக்கு வந்திருந்து அங்கு காட்சிப்படுத்தப்பட்டு உள்ள அலங்கார வடிவமைப்புகளை கண்டு ரசித்தனர்.
இந்த நிலையில் 2-வது நாளாக இன்றும் கோத்தகிரி பூங்காவில் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அலைமோதியது.
இங்கு இடம்பெற்று உள்ள உருளைக்கிழங்கால் ஆன சிலம்பாட்டம், கேரட், பீட்ரூட்டால் ஆன தமிழ் மறவன், பட்காய் மூலம் உருவான மரகத ப்புறா, பச்சை-சிவப்பு மிளகாய்களால் ஆன பச்சைக்கிளி, சுகினி, கோவைக்காய், பச்சை-சிவப்பு மிளகாய், முள்ளங்கி, கேரட்டால் ஆன தஞ்சாவூர் பொம்மை, சேனைக்கிழங்கால் ஆன நீலகிரி வரையாடு போன்ற அலங்காரங்கள் ஆகியவை சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் அமைந்து இருந்தது.
மேலும் கோத்தகிரி கண்காட்சியில் இடம் பெற்று உள்ள காய்கறி அலங்காரங்கள் அச்சு அசப்பில் நிஜ விலங்குகள், பறவைகள் போல காட்சி அளித்தன.
அதுவும்தவிர திருவண்ணாமலை, காஞ்சிபுரம், விழுப்புரம், தேனி, ஈரோடு, திருப்பூர், கோவை உள்பட பல்வேறு மாவட்ட தோட்டக்கலைத்துறை சார்பில் பல்வேறு காய்கறிகளால் ஆன பாண்டா கரடி, இருவாச்சி பறவை, திருவள்ளுவர், பூவில் இருந்து தேன் எடுக்கும் தேனீ, புலி, மாட்டு வண்டி, சிங்கம், கழுகு ஆகிய அலங்காரங்களும் கோத்தகிரி கண்காட்சியில் இடம்பெ ற்று உள்ளன. அவற்றின் முன்பாக சுற்றுலாப் பயணிகள் நின்று செல்பி எடுத்துக் கொண்டனர்.
காய்கறி கண்காட்சி இன்று மாலையுடன் நிறைவு பெறுகிறது. அதைத்தொடர்ந்து பரிசளிப்பு விழா நடக்கிறது.
- கோத்தகிரி நேரு பூங்காவில் இன்றும், நாளையும் என 2 நாட்கள் காய்கறி கண்காட்சி நடக்கிறது.
- நுழைவு வாயில் முழுவதும் பல டன் காய்கறிகளை கொண்டு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.
கோத்திகிரி:
நீலகிரி மாவட்டத்திற்கு தினந்தோறும் பல ஆயிரம் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
குறிப்பாக கோடைகாலமான ஏப்ரல், மே மாதங்களில் நீலகிரிக்கு அதிகளவிலான சுற்றுலா பயணிகள் வருவார்கள்.
அவ்வாறு வரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் நீலகிரியில் கோடைவிழா என்ற பெயரில் மலர் கண்காட்சி, காய்கறி கண்காட்சி, ரோஜா கண்காட்சி உள்ளிட்ட பல்வேறு கண்காட்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில் இந்த ஆண்டுக்கான கோடைவிழா இன்று கோத்தகிரி நேரு பூங்காவில் 13-வது காய்கறி கண்காட்சியுடன் தொடங்கியது.

கோத்தகிரி நேரு பூங்காவில் இன்றும், நாளையும் என 2 நாட்கள் காய்கறி கண்காட்சி நடக்கிறது.
காய்கறி கண்காட்சியை முன்னிட்டு பல ஆயிரம் டன் காய்கறிகளை கொண்டு பல்வேறு அலங்காரங்கள் பூங்காவில் செய்து வைக்கப்பட்டுள்ளது. மேலும் பூங்கா முழுவதும் பல ஆயிரம் மலர் செடிகளில் பல்வேறு வகையான மலர்கள் பூத்து குலுங்குகின்றன.
இந்த கண்காட்சியில் தமிழ் கலாசாரத்தை பறை சாற்றும் வகையில் ஜல்லிக்கட்டு காளை, தமிழரின் வீரத்தை பறைசாற்றும் வகையில் சிலம்பாட்டம் வடிவமைப்பு, மரகதபுறா, மிளகாய், கேரட் உள்ளிட்ட காய்கறிகளை கொண்டு பச்சைக்கிளி, வண்ணத்துப்பூச்சி உள்ளிட்ட உருவங்கள் வடிவமைக்கப்பட்டு பார்வைக்கு வைக்கப்பட்டு இருந்தன.
இதுதவிர தோட்டக்கலைத்துறை மற்றும் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த விளைபொருட்கள் 15 அரங்குகளில் காட்சிப்படுத்தப்பட்டு இருந்தன. குழந்தைகளை கவரும் வகையில் பல வண்ண உருவங்களும் செய்யப்பட்டிருந்தன.
மேலும் நுழைவு வாயில் முழுவதும் பல டன் காய்கறிகளை கொண்டு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.
கண்காட்சி தொடங்கியதை முன்னிட்டு இன்று காலை முதலே கோத்தகிரி நேரு பூங்காவுக்கு சுற்றுலா பயணிகள் அதிகளவில் வந்திருந்தனர்.
அவர்கள் பூங்காவில் வைக்கப்பட்டிருந்த ஜல்லிக்கட்டு காளை, மரகதபுறா, பச்சைக்கிளி உள்ளிட்ட உருவங்களையும் சுற்றுலா பயணிகள் பார்வையிட்டனர். அதன் முன்பு நின்று செல்பி புகைப்படமும் எடுத்து மகிழ்ந்தனர்.
மேலும் அங்கு பூத்து குலுங்கிய மலர்களையும் சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்தனர்.
- கோத்தகிரியில் உள்ள நேரு பூங்காவில் காய்கறி கண்காட்சி தொடக்க விழா நடந்தது.
- பூங்காவில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் இருந்த வண்ண, வண்ண மலர்களையும் கண்டு ரசித்து சென்றனர்.
கோத்தகிரி:
நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் கோடை சீசனையொட்டி பல்வேறு நிகழ்ச்சிகள் மற்றும் கண்காட்சிகள் நடத்தப்படுவது வழக்கம்.
இந்த ஆண்டுக்கான கோடைவிழா காய்கறி கண்காட்சியுடன் தொடங்கியது.
கோத்தகிரியில் உள்ள நேரு பூங்காவில் காய்கறி கண்காட்சி தொடக்க விழா நடந்தது. இதில் அமைச்சர் ராமச்சந்திரன், ஆ.ராசா எம்.பி ஆகியோர் பங்கேற்று கண்காட்சியை தொடங்கி வைத்தனர்.
கண்காட்சியையொட்டி சுற்றுலா பயணிகளை வரவேற்கும் விதமாக பூங்காவின் நுழைவுவாயில், ஆயிரம் கிலோ எடை கொண்ட பல்வேறு காய்கறிகளை கொண்டு அமைக்கப்பட்டுள்ளது.
இந்த கண்காட்சியில் 1,500 கிலோ குடை மிளகாய் மற்றும் உருளைக்கிழங்கு, சோளம், கம்பு ஆகியவற்றை கொண்டு பல்வேறு அலங்காரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் குடை மிளகாய், பஜ்ஜி மிளகாயை கொண்டு மக்கா சோளமும் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
300 கிலோ பாகற்காய் கொண்டு முதலை வடிவம், கத்தரிக்காய், பூசணிக்காய் ஆகியவற்றை கொண்டு டிராகன், ஊதா நிற கத்தரிக்காய் கொண்டு யானை உருவமும் கண்காட்சியில் இடம் பெற்றுள்ளது.
இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கவும், மலைத்தோட்ட காய்கறி விவசாயிகளின் வாழ்வாதரம் மேம்படவும் நடத்தப்படும் இந்த கண்காட்சியில் கோவை, திருவண்ணாமலை, தர்மபுரி, திண்டுக்கல், தேனி, திண்டுக்கல், காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் இருந்தும் தோட்டக்கலைத்துறையினர் பங்கேற்றனர். அவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட அரங்குகளில், கத்தரிக்காய், பூசனிக்காய், கேரட், பீட்ரூட், குடைமிளகாய் போன்ற காய்கறிகளைக் கொண்டு யானை, மயில், கிளி, சேவல், பான்டா கரடி, வரி குதிரை, மீன் போன்றவற்றை உருவாக்கி கண்காட்சியில் வைத்திருந்தனர்.

காய்கறி கண்காட்சியையொட்டி காலையிலேயே கோத்தகிரி நேரு பூங்காவில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது. சுற்றுலா பயணிகள் பூங்காவில் நுழைந்து, அங்கு பல்வேறு வகையான காய்கறிகளால் காட்சிப்படுத்தப்பட்டிருந்த முதலை, டிராகன், யானை, கரடி, சிறுத்தை உள்ளிட்ட பொம்மைகளை கண்டு ரசித்தனர். அதன் முன்பு நின்று புகைப்படமும் எடுத்து கொண்டனர்.
இதேபோன்று அங்கு ஐ லவ் கோத்தகிரி, ஊட்டி 200 லட்சினையைும் சுற்றுலா பயணிகள் பார்வையிட்டதுடன் செல்பி புகைப்படமும் எடுத்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். மேலும் பூங்காவில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் இருந்த வண்ண, வண்ண மலர்களையும் கண்டு ரசித்து சென்றனர்.

தனியார் காய்கறி உற்பத்தியாளர்கள், இயற்கை காய்கறி உற்பத்தியாளர்கள் மற்றும் இதனை சார்ந்துள்ள தனியார் நிறுவனங்களை சேர்ந்தவர்கள் பல்வேறு அரங்குகளில் விவசாய உற்பத்தி பொருட்கள் மற்றும் நவீன தொழில்நுட்பம் குறித்தும் கண்காட்சியும் அமைக்கப்பட்டிருந்தது.
- இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில் இயற்கையான முறையில் விளைவிக்கப்பட்ட காய்கறிகள் கண்காட்சி அரங்குகளில் காட்சிப்படுத்தப்பட்டன.
- தானிய வகைகளின் விளைச்சல்களை அதிகரிக்கும் வகையிலும் ஊக்குவிக்கும் வகையிலும் சிறுதானிய வகைகள் காட்சிப்படுத்தப்பட்டது.
கோத்தகிரி:
நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் கோடை விழாவின் முதல் நிகழ்ச்சியாக கோத்தகிரி நேரு பூங்காவில் 12-வது காய்கறி கண்காட்சி நேற்று முன்தினம் தொடங்கியது.
கண்காட்சியில் நீலகிரி மாவட்டத்தில் ஆங்கிலேயர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட மலை காய்கறிகள், சமவெளி பகுதிகளில் விளையக்கூடிய நாட்டு காய்கறிகளால் செய்யப்பட்ட அலங்காரங்கள் காட்சிப்படுத்தப்பட்டன. கண்காட்சியில் இடம்பெற்ற 1.2 டன் எடையில் 15 அடி உயரத்தில் குடை மிளகாயால் பிரமாண்டமாக வடிவமைக்கப்பட்ட மக்காச்சோளம் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.
1.2 டன்னில் பரங்கிக்காய், கேரட் உள்ளிட்ட காய்கறிகள் வடிவமைக்கப்பட்ட டிராகன் உருவம், 600 கிலோ எடையில் ஊதா நிற கத்திரிக்காயால் உருவாக்கப்பட்ட யானைகள் உருவம் ஆகியவற்றை பார்வையாளர்கள் கண்டு ரசித்தனர்.
முருங்கை காயால் வடிவமைக்கப்பட்ட கம்பு, 200 கிலோ எடையில் கத்தரிக்காய், கேரட், பீட்ரூட், தக்காளி உள்ளிட்ட காய்கறிகளால் வடிவமைக்கப்பட்ட ஊட்டி 200 என்ற அலங்காரம் அற்புதமாக இருந்தது. பஜ்ஜி மிளகாய் உள்ளிட்ட காய்கறிகளை கொண்டு வடிவமைக்கப்பட்ட டெடிபியர் மற்றும் 1.5 டன்னில் அனைத்து வகையான காய்கறிகளை கொண்டு அமைக்கப்பட்ட பிரமாண்ட நுழைவு வாயில் ஆகியவையும் சுற்றுலா பயணிகளை கவர்ந்தது.
இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில் இயற்கையான முறையில் விளைவிக்கப்பட்ட காய்கறிகள் கண்காட்சி அரங்குகளில் காட்சிப்படுத்தப்பட்டன.
மேற்கு தொடர்ச்சி மலை தொடர்களில் வாழக்கூடிய ஹான்பில் பறவைகளின் வடிவங்கள் மற்றும் தானிய வகைகளின் விளைச்சல்களை அதிகரிக்கும் வகையிலும் ஊக்குவிக்கும் வகையிலும் சிறுதானிய வகைகள் காட்சிப்படுத்தப்பட்டது. நேற்று முன்தினம் தொடங்கிய காய்கறி கண்காட்சியை கடந்த 2 நாட்களாக 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர்.
சுற்றுலா பயணிகள் காய்கறி அலங்காரங்கள் முன்பு நின்று போட்டோ, செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.






